Wednesday, October 5, 2005

முஸ்லிம் மதமும் ஆணாதிக்கமும்

முஸ்லிம் மதமும் ஆணாதிக்கமும்

அத் 4.34,35 இல், "ஆண்கள் பெண்களை நிர்வகிப்போர் ஆவர். இதற்கு காரணம் அல்லாஹ் அவர்களின் சிலருக்குச், சிலரைவிட உயர்வை அளித்திருக்கிறான் என்பதும், ஆண்கள் தங்களுடைய செல்வத்திலிருந்து செலவு செய்கிறார்கள் என்பதுமாகும்.

பெண் விடுதலை, பெண் விடுதலை என்று கூக்குரலிடும் சில பெண்ணியவாதிகளின் கண்களை உறுத்தும் குரான் வசனம் இது.இவ்வசனத்தைக் குறித்து ஆராய்வதற்கு முன்னால் முதலில் பெண் விடுதலையை குறித்து சிறிது பார்ப்போம்.

பெண் விடுதலை என்றால் என்ன? இக்கேள்விக்கு அறுதியிட்டு யாராலும் ஒரு பதிலை சொல்ல முடியாது. தஸ்லீமா, குஷ்புவைப் போன்றவர்களுக்கு கர்ப்பப்பையின் சுதந்திரமும், திருமணத்திற்கு முன்னால் பல ஆண்களிடம் தொடர்புகொள்வதும் தான் பெண் சுதந்திரம். இதைத் தான் பெண்ணியவாதி என்று தன்னை அடையாளம் காட்டிக்கொண்டிருப்பவர்கள் பெண் விடுதலை என்று கருதுகிறார்களா?

படித்த மேற்கத்திய சிந்தனையுள்ள பெண்களுக்கு தான் விரும்பும் அரைகுறை ஆடையுடன் 24 மணி நேரமும் தான் விரும்பும் இடங்களுக்கெல்லாம் யாருடைய கட்டுப்பாடும் இல்லமல் நினைத்த நேரத்தில் சென்று வருவது தான் பெண் சுதந்திரம்.

சிலருக்கு தான் விரும்பும் என்ன வேலை(பாலிய தொழில் உள்பட)யும் செய்யும் சுதந்திரம் தான் பெண் சுதந்திரம்.

இவைகளில் இந்த பெண்ணியவாதிகள் எதை பெண் சுதந்திரம் என்று நினைக்கிறார்கள் என்பதை முதலில் தெளிவுபடுத்தவேண்டும்.

இவற்றிற்கெல்லாம் காரணம் மேற்குலக மோகம் கொண்டு நம்மவர்கள் மேற்குலகில் காலூன்ற ஆரம்பித்ததே. என்று அந்த அரைகுறை ஆடை கலாச்சாரத்தை ஏற்க துணிந்தார்களோ அன்றிலிருந்து வந்த வினை தான் இது.

இல்லையெனில் அன்பான கணவனையும் குழந்தைகளையும் அரவணைத்து வாளும் எந்த பெண் தான் இது போன்ற கேடுகெட்ட சிந்தனைகளை மனதில் ஏந்தி தங்களுக்கு சுதந்திரம் வேண்டும் என்று கேட்டிருக்கின்றாள்.

இன்று சமுதாயம் இந்த அளவிற்கு ஆபாசத்தில் முங்கி இருப்பதற்கு இது போன்ற தத்துவம் கொண்ட ஆண்களும் அல்லவோ காரணம். இன்றைய மேற்குலகின் கதி நமக்கும் வேண்டும் என்பது தான் பெண்ணியவாதிகளின் எண்ணமா?

மேற்குலகில் குடும்பத்தை (குடும்பம் என்ற ஒன்று அங்கே இருக்கிறதா?) கவனிக்க ஆள் இலாமல் 7 வதிலும் 8 வயதிலும் பெண் குழந்தைகள் வயிற்றில் குழந்தைகளை சுமக்கும் நிலை நமக்கும் வேண்டுமா?

பள்ளி செல்லும் சிறுவர் சிறுமியரின் புத்தகப் பையில் ஆணுறைகளை வைத்து அனுப்பும் கேடுகெட்ட நிலை நமக்கும் வேண்டுமா? இன்று அன்னியோன்னியமான குடும்ப வாழ்விற்கு ஏங்கும் மேற்கத்தியரின் நிலை நமக்கும் வேண்டுமா? இதில் எதைத் தான் இந்த பெண்ணியவாதிகள் விரும்புகிறார்கள்.

இயற்கையாகவே நிச்சயமாக ஆணும் பெண்ணும் சமமில்லை. இதை இந்த பெண்ணியவாதிகள் ஒத்துக் கொள்வார்களா? ஒத்துக் கொள்ளவில்லையெனில்,

1. பல ஆண்கள் மேல் சட்டை இல்லாமல் சுற்றுகின்றனர், அது போல் பெண்களும் சுற்ற இந்த பெண்ணியவாதிகள் முதலில் குரல் கொடுக்க வேண்டும்.

2. பெண்கள் குழந்தை பெறுவது போல் ஆண்களும் குழந்தை பெற சம்மதிக்க வேண்டும். அது வரை எந்த பெண்களும் குழந்தை பெற சம்மதிக்கக் கூடாது என்று பெண்ணியவாதிகள் அறிக்கை வெளியிட வேண்டும்.
என்றாலே இவர்கள் தான் உண்மையான பெண்ணியவாதிகள், முற்போக்கு வாதிகள், சிந்தனாவாதிகள் என்ற பெயர் கிடைக்கும்.

5 comments:

  1. "பல ஆண்கள் மேல் சட்டை இல்லாமல் சுற்றுகின்றனர், அது போல் பெண்களும் சுற்ற இந்த பெண்ணியவாதிகள் முதலில் குரல் கொடுக்க வேண்டும். "
    ஆப்பிரிக்க பழங்குடி பெண்கள் இப்படிதான் சுற்றுகின்றனர்.

    ReplyDelete
  2. //மேற்குலகில் குடும்பத்தை (குடும்பம் என்ற ஒன்று அங்கே இருக்கிறதா?) கவனிக்க ஆள் இலாமல் 7 வதிலும் 8 வயதிலும் பெண் குழந்தைகள் வயிற்றில் குழந்தைகளை சுமக்கும் நிலை நமக்கும் வேண்டுமா?//

    இது உங்களின் மேற்கு நாடுகளைப் பற்றிய அறியாமையைக் காட்டுகிறது.அவர்களின் குடும்பத்தில் நம்மைவிட ஆரோக்கியம் உள்ளதாகவே உள்ளது. அதற்கு சிறந்த உதாரணம் மேற்கு நாடுகளுக்கு வந்து குவியும் immigration விண்ணப்பங்கள்.அவரவர் கலாச்சாரம் அவரவர்க்கு பெரியது .நீஙகள் உங்கள் கலாச்சாரத்தை உயர்த்திச் சொல்லுங்கள்,அது தவறில்லை.அதற்காக மற்றவற்றை பற்றி அவதூறு செய்ய வேண்டாம் .
    உங்கள் பதிவின் தலைப்புக்கு

    //இயற்கையாகவே நிச்சயமாக ஆணும் பெண்ணும் சமமில்லை. இதை இந்த பெண்ணியவாதிகள் ஒத்துக் கொள்வார்களா? ஒத்துக் கொள்ளவில்லையெனில//

    இதன் மூலம் பதில் அளிப்பதாகவே தெரிகிறது . ஆணாதிக்கம் முஸ்லீம் மதத்திற்கு மட்டும் உரியதல்ல.எல்லா மதமும் ஆணாதிக்க உணர்வுடையதே.
    உங்கள் வாதத்தை ஆணாதிக்கம் என்பது எது என்று திருப்பினால் உதவியாருக்கும்.

    ReplyDelete
  3. பெண்கள் குழந்தை பெறுவது போல் ஆண்களும் குழந்தை பெற சம்மதிக்க வேண்டும். அது வரை எந்த பெண்களும் குழந்தை பெற சம்மதிக்கக் கூடாது என்று பெண்ணியவாதிகள் அறிக்கை வெளியிட வேண்டும்.



    நல்ல யோசனை.

    ஒரு நாள் பெண்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து உலகம் அழிந்தால் அழியட்டும்,
    ஆண்களை திருமணம் செய்ய மாட்டோ ம் என்று சொன்னால்
    என்ன செய்வீர்கள்?

    ReplyDelete
  4. //அவர்களின் குடும்பத்தில் நம்மைவிட ஆரோக்கியம் உள்ளதாகவே உள்ளது. அதற்கு சிறந்த உதாரணம் மேற்கு நாடுகளுக்கு வந்து குவியும் immigration விண்ணப்பங்கள்//

    ஐய்யோ....என்னா மேற்கத்திய சிந்தனை இது!!!

    என் குழந்தையும் உன் குழந்தையும் நம்ம குழந்தையோடு விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். இதுதான் சார் மேற்குலக குடும்பம்.

    குடிபெயர்வு விண்ணப்பத்தில் யாரு சார் "நல்ல குடும்ப வாழ்கை வாழ உங்க நாட்டுக்கு வர விரும்புகிறேன்" என்று பூர்த்தி செய்கிறார்கள்?

    அக்கம் பக்கம் பாராடா சின்ன ராசா...

    ReplyDelete
  5. //ஒரு நாள் பெண்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து உலகம் அழிந்தால் அழியட்டும்,ஆண்களை திருமணம் செய்ய மாட்டோம் என்று சொன்னால்
    என்ன செய்வீர்கள்?//

    யப்பா "பொழுது" கொஞ்சம் ஊர் சுத்திப்பாரு ராசா.

    பெண்ணும் பெண்ணும் திருமணம் செய்து உங்க யோசனையை எப்பவோ செயல் படுத்த ஆரம்பிச்சுட்டாங்க.

    ReplyDelete