Tuesday, September 26, 2006

மானங்கெட்டதுகள்......

முன்னறிவிப்பு: (வலையில் பெரிய மனுசன் வேஷமிடும் சில வெட்கங்கெட்டதுகளின் உள்மன வக்கிரத்தையும் அதற்கு காரணமான அவைகளின் கேடுகெட்ட பாரம்பரியத்தையும் தோலுரித்துக் காட்டுவதே இப்பதிவின் நோக்கம். அல்லாமல் தேவையில்லாமல் யாரையும் வசைபாடுவது இப்பதிவின் நோக்கமல்ல. பதிவின் தலைப்புக்கு உள் செல்லும் பொழுது சில கடினமான வார்த்தைகள் வரலாம். அவை எந்த தனி மனிதரையும் அவசியமின்றி கேவலப்படுத்தும் எண்ணத்தோடு வெளிப்படுபவை அல்ல. உண்மை சில வேளைகளில் சுடவே செய்யும். அது கீழ்த்தரமானவர்களை கேவலப்படுத்தவும் செய்யும். அதற்கு நான் பொறுப்பல்ல.)

நாட்டின் பாதுகாப்புக்கும், சமூக ஒற்றுமைக்கும் ஊறு விளைவிக்கும் மிகப்பெரிய பிரச்சினையாக தற்போது உருவெடுத்திருப்பது முஸ்லிம்களுக்கு வழங்கப்படும் ஹஜ் புனிதப்பயணத்திற்கான மானியம்/தள்ளுபடி/அன்பளிப்பு (ஏதோ ஒரு எழவு) ஆகும் (உண்மை தாங்க. இந்த துலுக்கப்பயலுவளுக்கு அரசாங்கமே பணத்தைக் கொடுத்து புனிதப்பயணம் என்கிற பெயரில் தீவிரவாத நாடு சவூதிக்கு அனுப்பி, அவனுங்க அங்கே இருந்து கர்ப்பிணி பெண்களின் வயிற்றைக் கீறி பச்சைக்குழந்தைகளை எடுத்து நெருப்பில் வீசி கொன்றொழிப்பது எப்படி எனவும், நாட்டின் பெரிய பெரிய முக்கிய பதவிகளில் எப்படியாவது பற்றிப் பிடித்து பின்னர் அரசு முக்கிய ஆவணங்களை அன்னிய நாடுகளுக்கு விற்பது எப்படி எனவும் பயிற்சி எடுத்துக் கொண்டு இங்கு வந்து மற்ற சமூக பெண்களையும் குழந்தைகளையும் கருவறுத்து நாட்டின் ஒற்றுமைக்கும், பாதுகாப்புக்கும் மிகப்பெரிய சவாலாக இருக்க உதவுவது மிகப்பெரிய பிரச்சனை இல்லையா என்ன?)

இதனைக் குறித்து சகோதரர் என்றென்றும் பாலா அவர்கள் ஒரு விவாதத்தைத் தொடங்கி வைத்தார். தங்களின் நிலை நிற்பிற்கு மிகப்பெரிய சவாலான சமத்துவம், சகோதரத்துவத்தை நடைமுறையில் உலகிற்கு படிப்பிற்கும் முஸ்லிம் சமூகத்தின் மீது வசைமாரி பொழிய எங்கு தருணம் கிடைத்தாலும் உடனே அங்கு வந்து தனது உள்மன அழுக்குகளை/வக்கிரங்களை வாரி வீசி விட்டுப் போகும் வந்தேறி அவாள்கள் கூட்டத்திற்கு அல்வா கிடைத்தது போல் ஆனது இப்பதிவு. நேர்மையாக விவாதத்தைக் கொண்டு போக வேண்டும் என முதலில் நினைத்த சகோதரர் பாலாவிற்கு திடீரென எழுந்தது "பின்னூட்ட மோகம்". "வலையுலக தெண்டுல்கர்" மோகம் அவருக்கு மட்டும் இருக்காதா என்ன? நல்ல சிந்தையுடன் ஒரு கருத்துப்பரிமாற்றத்தைத் தொடங்கி வைத்த அவருக்கு அந்த மோகத்தை கொடுத்ததும் துரதிஷ்டவசமாக அதே "வலையுலக தெண்டுல்கர்(!)" தான்.

எலும்புத்துண்டுக்கு காத்திருக்கும் நாய்கூட்டம் கிடைத்த தருணத்தை எப்பொழுதாவது நழுவ விட்டிருக்கிறதா என்ன? பாய்ந்து வந்தன வந்தேறி பார்ப்பன கூட்டம். வசையை ஆரம்பித்தன. அதில் ஹைலைட் திருவாளர் வெட்கம்கெட்ட(இது புதிதாக சேர்த்துக் கொள்ளப்பட்டது. விளக்கம் பின்னர் வரும்) பெண்கற்பு புகழ் சகோதரர் டோண்டு அவர்கள் முஸ்லிம்களை "வெட்கம் கெட்டவர்கள்" என்றது தான். மானம், ரோசம், வெட்கம் கெட்ட தோல் ஆமைத்தோலை விட கட்டியானவர்கள் யார் என்பதை விரிவாக பார்ப்பதற்கு முன் "பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டிய" சகோதரர் பாலா அவர்களின் வினோத செயலை சற்று பார்ப்போம்.

நல்ல நோக்கத்தில் பதிவை ஆரம்பித்த சகோதரர் பாலாவின் மனதில் "பின்னூட்ட போதையை" மனதில் விதைத்தது "வலையுல தெண்டுல்கர்(!)" என்று நான் முதலிலேயே கூறினேன். பாருங்கள் அந்த மனதில் வக்கிரம் நிறைந்த "வலையுலக தெண்டுல்கரின்" முதல் பின்னூட்டத்தை:

"என்ன பாலா இது, இவ்வளவு முக்கியமான விஷயத்துக்கு இவ்வளவு பின்னூட்டங்கள்தானா?

அது சரி இசுலாமியப் பதிவாளர்கள் யாரும் மூச்சு கூட விடவில்லையே? என்ன சமாச்சாரம் ?"


ஒரு பதிவில் பின்னூட்டமிடுபவர்கள் தன் கருத்தைக் கூறி மற்றதை எதிர்ப்பார்ப்பார்கள். மன வக்கிரம் வெளிப்படும் விதம் அருமை. இதில் இரு விஷயங்கள் உள்ளன. முதலில் பாலாவிற்கு பின்னூட்ட போதையை ஊட்டுகிறார். கூடவே இஸ்லாமிய பதிவர்களை கருத்து கூற மிக கண்ணியத்துடன் அழைக்கிறார்.

இப்பின்னூட்டம் பாலாவின் சிந்தனையை மாற்றியதோ என்னமோ பின்னர் வந்த அத்தனை காறித்துப்பல்களையும் வாங்கி பையில் போட்டு தன் பதிவை நாற்றப்பின்னூட்டங்களால் நிரப்பினார். தன்னுடைய சூழ்ச்சிக்கு பாலாவை சரியான இரை ஆக்கிய அதே "வலையுலக தெண்டுல்கர்(!)" மீண்டும் முஸ்லிம்களை வம்புக்கிழுப்பதை பாருங்கள்:

யாரோ ஒருவர் "இது ஒரு பொருக்கிப் பதிவா," எனக் கேட்டு பதில் போட்டிருக்கிறார். அப்பதிலில் உள்ள வாசகம் பதிவைக் குறிக்கிறது. ஆனால் "வலையுலக தெண்டுல்கரின்(!)" உடனடி பதிலப் பாருங்கள்.

"என்னை ஏதோ திட்டி எழுதியிருக்கிறீர்கள் என்று தெரிகிறது. பாலா அதை எடிட் செய்து விட்டார். அந்தத் திட்டுக்களை நான் ஏற்றுக் கொள்ளாததால் உங்களுக்கே அவை உரித்தாகட்டும்.

எதற்கெடுத்தாலும் பார்ப்பனியம் , உயர்சாதியம் என்றெல்லாம் எழுதுவதற்கெல்லாம் பதில் எதிர்ப்பார்க்கப்படுகிறது அல்லவா ? இதற்கும் பதில் கொடுக்கட்டுமே. என்ன, ஏதாவது உருப்படியான பதில் கைவசம் இருக்க வேண்டும். அது இல்லாத போது பதிலையும் எதிர்ப்பார்க்க முடியாதுதான். "


இவரை அப்பின்னூட்டம் திட்டியது என்பது இவருக்கு எப்படி தெரிந்தது? பாலா எடிட் செய்து போட்டது பதிவைக் குறிக்கும் வாசகமே. பின் எப்படி அது இவரைத் திட்டுவது ஆகும். தானே ஒரு பதிலை "பொறுக்கியாக" வந்து போட்டிருந்தால் மட்டுமே அப்பின்னூட்டத்தில் என்ன அடங்கியிருந்தது என்பதை அறிய சாத்தியமிருக்கிறது. இல்லையெனில் பாலா தனியாக இவருக்கு அப்பதில் உங்களை திட்டி வந்தது எனத் தெரிவித்திருக்க வேண்டும். இங்கு என்ன நடந்தது? இறைவனுக்கே வெளிச்சம்.

"பொறுக்கிக்கு" உடனடியாக இவர் கொடுத்த பதில் "எங்கப்பன் குதிருக்குள் இல்லை" என்பது போல் அவரை காட்டிக் கொடுத்து விட்டது. தானே ஒரு பின்னூட்டம் போடுவது பின்னர் அதற்கு பதிலாக மீண்டும் முஸ்லிம்களை வம்புக்கிழுப்பது. வலையில் சாதாரணமாக நடக்கும் விஷயம் தானே இது. போகட்டும் "பொறுக்கிகளுக்குரிய" வேலையை சரியாகத் தான் செய்திருக்கிறார்.

இவ்வளவு தரக்குறைவாக நடந்தபின்னும் சகோதரர்கள் நல்லடியார் மற்றும் சலாஹுத்தீன் போன்றவர்கள் அழகான விளக்கம் இப்பதிவிற்கு கொடுத்தனர். அதற்கு சகோதரர் பாலா அவர்கள்:

" நல்லடியார், சலாவுதின் ,

விரிவாக விளக்கம் தந்ததற்கும், கருத்துக்களை பகிர்ந்தமைக்கும் என் நன்றிகள். நீங்கள் கூறியிருப்பவை , பெரும்பாலும் நியாயமானவையே.

//7. முஸ்லிம்கள் 'மானியம் வேண்டும்' என்று டிமாண்ட் செய்யவில்லை. அதே நேரத்தில், அரசே மானியம் அளிக்க முன்வரும்போது அதை வேண்டாம் என மறுக்க வேண்டிய அவசியமும் இல்லை.
//
முழுதும் உடன்படுகிறேன்."


இதன் பிறகு தான் ஹைலட்டே. ஒருபக்கம் நல்ல முறையில் சகோதரர்கள் பதிலளிக்க அதை பிரசுரித்து அதற்கு உடன்படுவதாக கூறிய அதே பாலா மறுபக்கம் வந்தேறிகளின் மனவக்கிரங்களை ஏந்திவரும் பின்னூட்டங்களையும் அப்படியே அனுமதித்துக் கொண்டிருந்தார். (முதலில் முழுவதும் அனுமதித்து பின்னர் அதனை நீக்கி/எடிட் செய்த பாலாவின் செயல்பாடு என்ன விதத்தில் சரியானது என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்)

அதில் மிக மோசமான வந்தேறி பார்ப்பனர்களின் ஆழ்மன வெளிப்பாடை திருவாளர் மானங்கெட்ட பெண்கற்பு புகழ் டோண்டு அவர்கள் வெளிப்படுத்தியிருந்தார். அவரின் பின்னூட்டங்களை வரிசையாக காண்பவர்களுக்கு இந்த காறி துப்பலை உமிழ்வதற்காக அவர் தருணத்தை எதிர்பார்த்திருந்ததையும் அதற்கு அவருக்கு சிங்கியடிக்கும் மற்ற வந்தேறி ஜால்ரா கூட்டங்கள் தருணத்தை ஏற்படுத்திக் கொடுத்ததையும் காணலாம்.

அவரின் பின்னூட்டம் இதுதான்:

"வெட்கமே இல்லாத போது வெட்கம் கெட்டு என்று ஏன் அவதூறாகக் கூறுகிறீர்கள் ? இருந்தால்தானே கெடுவதற்கு ?"

அதாவது முஸ்லிம்களுக்கு வெட்கமே இல்லையாம். "வெட்கம் நம்பிக்கையில் பாதியாகும்" என அறிவுரைப்பகரும் இஸ்லாமிய சமூகத்தைச் சார்ந்தவர்களுக்கு "வெட்கமே கிடையாதாம்".

கெட்ட வீச்சத்துடன் முழு அம்மணமாக சாலையில் திரியும் பைத்தியம், மணம் கமழும் ஆடை அணிந்து செல்பவனைப் பார்த்து எள்ளி நகையாடுவது போல் உள்ளது.

வெட்கத்தைக் குறித்து பேச ஒரு தராதரம் வேண்டாமா?. யார் யாரைப் பார்த்து வெட்கமில்லாதவர்கள் எனக்கூறுவது? முதலில் வெட்கம் என்றால் என்ன என்று இந்த கேடுகெட்ட ஜென்மங்களுக்கு தெரியுமா? மானம் சூடு சொரணை இல்லாத கேடுகெட்ட வர்க்கம் வெட்கத்தைக் குறித்து பேசுகிறதா? ஆச்சரியத்திலும் ஆச்சரியம் தான்.

எதை எதையெல்லாமோ குறித்து விவாதம் நடந்து கொண்டிருக்கும் சூழலில் வெட்கத்தைக் குறித்தும் ஒரு விவாதம் நடத்தினால் என்ன எனத் தோன்றுகிறது. வெட்கத்தைக் குறித்து மானங்கெட்ட கூட்டத்தைச் சார்ந்தவரே முதலில் ஆரம்பித்து வைத்ததால், அவரையே அழைக்கிறேன்.

"யாருக்கு வெட்கம், மானம், சூடு, சொரணை இல்லை" என்பதை குறித்து விவாதிக்க தயாரா? நான் தயார். உண்மையிலேயே வெட்கம், மானம், சூடு, சுரணை என்றால் என்ன என்று இந்தியாவைக் காட்டிக் கொடுத்து இன்று அதே இந்தியாவில் எவ்வித கூச்ச நாச்சமும் இன்றி தலையை நிமிர்த்திக் கொண்டு சுகமாக வலம் வந்து கொண்டிருக்கும் வந்தேறி பார்ப்பன சங்க் கூட்டத்திற்கு தெரியுமா?

மன்னர்களுக்கு மணியாட்டி வயிறு வளர்த்த வந்தேறி பார்ப்பன கூட்டம் காலம் இவ்வளவு முன்னேறியும் உடல் ஆடாமல் உழைப்பாளிகளின் இரத்தத்தை உறிஞ்சி பிழைக்கும் எளிய வழியான அந்த மணியாட்டலை யாருடனும் பகிர்ந்து கொள்ளமாட்டோம் என தமிழக அரசு அதற்கு எதிராக சட்டம் கொண்டு வந்தும் அடம்பிடித்துக் கொண்டு இன்றும் கோயில்களில் மணியாட்டி வயிறு பிழைத்துக் கொண்டிருக்கிறதே. பிச்சைக்காரனின் தட்டில் கையிட்டு அள்ளும் தரத்தில் உள்ள மானங்கெட்ட பிழைப்பு நடத்தும் வந்தேறிக் கூட்டமா "தாழ்ந்திருக்கும் கையை விட உயர்ந்திருக்கும் கை மேலானது" என்ற நபிகளின் பொன்மொழிக்கேற்ப வாழ்க்கை நடத்தும் முஸ்லிம்களை வெட்கம் கெட்டவர்கள் என்கிறது? காதே இல்லாதவன் இரு காதும் உள்ளவனைப் பார்த்து கேனத்தனமாக சிரிப்பது போல் உள்ளது.

இந்திய சுதந்திரப்போராட்ட நேரத்தின் பொழுது வெட்கம், மானம், ரோசம் எதுவுமின்றி முடிந்த அளவு ஆங்கிலேயனுக்கு காட்டியும் கூட்டியும் கொடுத்து பெரிய பதவிகளில் ஒட்டிக் கொண்டு சுதந்திரத்திற்காக ஒரு எள் முனை அளவு ஒரு சிறு துரும்பைக் கூட நீக்கிப் போட்டிராத தேச துரோக வந்தேறி கூட்டம் இன்று சுதந்திர இந்தியாவில் அனைத்து உயர் பதவிகளையும் பிடித்துக் கொண்டு எவ்வித கூச்சமும் இன்றி சுகம் அனுபவித்துக் கொண்டிருக்கும் வேளையில், பிறந்த நாட்டுக்காக ஆங்கிலேயனை இந்நாட்டை விட்டு அடித்து விரட்ட அந்நியனின் மொழியான ஆங்கிலத்தை படிப்பது ஹராம் என மார்க்க தீர்ப்பு வழங்கி எதிர்கால சமுதாயத்தின் முன்னேற்றத்தையே படுகுழியில் தள்ளினாலும் பரவாயில்லை அன்னியனுக்கு என் நாட்டை விட்டுக் கொடுக்க மாட்டேன் என ஒட்டு மொத்த சமுதாயமும் ஆங்கிலேயனுக்கு எதிராக திரண்டெழுந்து அனைத்து பதவிகளையும் உதறி எறிந்து தங்களது விகிதாச்சாரத்தை விட அதிக அளவில் நாட்டுக்காக வீர தியாகம் புரிந்த இந்த முஸ்லிம் சமுதாயத்தையா வெட்கமற்றவர்கள் என்கிறது? வேடிக்கையிலும் மிகப்பெரிய வேடிக்கை தான்.

பெண்களை எவனுடனும் எப்படி வேண்டுமானாலும் பாதுகாப்பாக செல்வதற்கு அரிய ஆலோசனைகள் வழங்கி அப்படி யாருக்கும் தெரியாமல் செய்ய முடியவில்லை எனில் ஒரே வழி மற்றொரு பெண்ணிடமே தீர்த்துக் கொள்வது(Fire) என தனக்கும் மனைவி, சகோதரி, மகள் என பெண்கள் இருக்கிறார்களே, அவர்கள் இதைப் படித்தால் தன்னை என்ன நினைப்பார்கள் என எவ்வித உடல் கூச்சமும் இன்றி(இதிலென்ன கூச்சம் என அதுவே கேட்கமும் செய்கிறது. இதிலிருந்து வெட்கம் என்றால் என்ன என்பதே இதற்கு தெரியவில்லை எனத் தெரிகிறது) அரிய(!) ஆலோசனைகள் வழங்கி அதனைப் படித்தவர்கள் காறி காறி மீண்டும் மீண்டும் காறி முகத்தில் உமிழ்ந்த பின்னரும் எவ்வித சூடு சொரணையும் இன்றி தன்னுடைய முகத்தை மற்றவர்களுக்கு காட்டிக் கொண்டு இருக்கும் வந்தேறி பார்ப்பன பரம்பரையில் வந்த "சிறந்த முற்போக்கு பெண்ணியவாதிகள்", அன்னிய பரங்கியன் எம்நாட்டு உடன்பிறவா சகோதரிகளை தூக்கிக் கொண்டு சென்று விட்டான் என செய்தி அறிந்த உடன் தன் உயிருக்கு உயிரான மகனை அவனுடைய திருமண நிச்சய நிகழ்ச்சியிலிருந்து வெளியே இழுத்து, "எம் பெண்டிருக்கு அவமானம் நிகழ இருக்க உனக்கு திருமண வைபவமா? செல் முதலில் எம்பெண்டிரின் மானம் காத்து வந்து உன் மண வாழ்வை தொடங்கு" என பரங்கியனிடமிருந்து எம்சகோதரிகளை மீட்க தன் ஒரே மகனை விரட்டி விட்டு அதில் தன் இன்னுயுரை இழக்கவைத்த வீரத் தாய்களின் பரம்பரையான முஸ்லிம்களை பார்த்து வெட்கம் கெட்டவர்கள் என்கிறதா?
இன்னும் இன்னும் அவாள்களின் மான, வெட்க, சூடு, சொரணைகளை அடுக்க வரலாற்றில் எத்தனையோ பரந்து விரிந்து கிடக்கின்றன. அவற்றை ஒவ்வொன்றையும் இங்கு புட்டு புட்டு வைத்து யாருக்கு வெட்கம் இல்லை என்பதை நிரூபிக்க நான் தயார்.

அவசரப்பட்டு கண்ணியமாக வாழும் ஒரு ஒட்டு மொத்த சமூகத்தின் மீது எவ்வித நாக்கூசலும் இன்றி உமிழ்ந்த வார்த்தையை வைத்து தான் கூறியது சரிதான் என நிரூபிக்க வலையுலகின் "பெரிய மனுசன்" திருவாளர் மானங்கெட்ட(இப்பொழுது இப்பட்டம் ஏன் என்பது புரிந்திருக்கும் என நினைக்கிறேன்) திருவாளர் பெண்கற்பு புகழ், "சிறந்த முற்போக்கு பெண்ணியவாதி" டோண்டு அவர்கள் தயாரா?

இல்லை அய்யோ அய்யோ இங்கே பாருங்கப்பா எப்படிப்பட்ட தனிமனித தாக்குதல் என தன்னுடைய ஜிங்கிகளை வைத்து ஒப்பாரி வைத்து ஓடி ஒழியப்போகிறாரா?

Friday, September 22, 2006

ஸ்பெஷல் சமையல்!

காலையில் மடல்களை பிரித்து மேய்ந்து கொண்டிருந்த போது இடையில் வித்தியாசமான சில மடல்கள் கண்ணில் பட்டன. அனைத்திலும் நல்ல காரத்துடன் கூடிய சமையல் வாசனை. என்னடா இது மடல்களிலேயே சமையல் வாசனை வர ஆரம்பித்து விட்டதே? என்னவாக இருக்கும் எனப்பிரித்து ருசித்தால் யப்பா யப்பப்பா, காரம் அத்தனை காரம். கண்ணைக் கட்டிய காரத்துடன் இருந்தாலும் சமையல் வித்தியாசமாக வெகு ருசியுடன் இருந்தது.

அதனை இங்கு பரிமாறுகிறேன். ரசித்து, ருசித்து கருத்து கூறுங்கள்.


@ ************************** @

முன் குறிப்பு:

இவ்வாக்கம், நேசகுமார் என்பவர், திண்ணையில் உளறியதற்கான எதிர்வினையாகும். இதைத் திண்ணை பிரசுரிக்கவில்லை. தனிமனித எள்ளல் என்பதாகத் திண்ணை காரணம் வைத்திருக்கலாம். வலைப் பதிவர்களுள் பத்தோடு பதினொன்றான, அந்தப் பதினொன்றிலும் மனநோயாளியான நேசகுமாரை எள்ளுவது திண்ணையின் பாலிஸிக்கு எதிரானதாக இருக்கலாம். கோடானுகோடி முஸ்லிம்களின் உயிரினும் மேலான தலைவர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை மனம்போனவாறு திட்டித் தீர்ப்பது தனிமனிதத் தாக்குதலில்லையா? அதைப்பிரசுரிப்பது எழுத்து வக்கிரமில்லையா? நல்ல பாலிஸிதான் போங்க!
___________________________________________________

ஜன்னல் ஜர்னலிஸம் கேள்விப் பட்டிருப்பீர்கள். கிச்சன் ஜர்னலிஸம்? அதுதான் கமலா சுரைய்யா விஷயத்தில் நடந்தது. சமையலறையைச் சுத்தம் செய்து விட்டு, கழிவுகளைத் தெருவிலுள்ளக் குப்பைத் தொட்டியில் கொட்ட வந்த சுரைய்யாவின் வீட்டு வேலைக்காரியை இடைமறித்தது ஒரு பரிதாபக் குரல்: "அம்மோய்! இந்தப் பக்கமா போடுங்கம்மோய்" என்று கெஞ்சிக் கூத்தாடிக் கமலா சுரைய்யா வீட்டுக் கழிவுகளை வாங்கிப் போய், அந்தக் கொஞ்சக் கழிவுகளோடு, தன்னிடம் மிகுதியாய் மிஞ்சியிருந்தவற்றைப் போட்டுக் கலக்கி, தானே சமைத்ததுபோல் 'மடுத்த' தட்டில் வைத்து 'மாத்ருபூமி'யில் பரிமாறினார் அதன் ஃபோட்டோகிராஃபர்.

"ஆஹா எவ்வளவு அற்புதமான உணவு! என்னே மணம், என்னே ருசி! மலையாளிகள் மட்டும் இதை உண்பதா? தனியொரு தமிழனுக்கு இவ்வுணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்" என்ற சூளுரையோடு அதற்கு உள்ளூர் மசாலா தூவி, திண்ணைத் தட்டில் வைத்துச் சுடச்சுடப் பரிமாறினார் இரா.முருகன்.

இதெல்லாம் இருபது மாதங்களுக்கு முன்னர் பரிமாறப் பட்டு ஆறிப்போன அவியல்.

உடனடியாக தேஜஸிலும் அண்மையில் விகடனிலும் வெளிவந்த கமலா சுரைய்யாவின் உண்மையான பேட்டிகளையும் இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டதிலிருந்து இன்றுவரை மாறாத கமலா சுரைய்யாவின் நிலையையும் அறியாமல் திண்ணையில் உளறி [சுட்டி-1], அபூசுமைய்யா [சுட்டி-2] மற்றும் இப்னு பஷீர் [சுட்டி-3] ஆகியோரின் உறுதியான சான்றுகளுடன் கூடிய, நிதானமான எதிர் வினைகளால் முகமிழந்து நிற்கும் நேசகுமார் என்பவரைப் பற்றி அறிய முற்பட்டபோது சில திடுக்கிடும் உண்மைகள் வெளியாகின!

இவருடைய அகநோயின் வீரியம் புரியாமல், 'நட்புக்கான வழியும் மொழியும்' என்று நாகூர் ரூமி, இவருக்கு அமிர்தாஞ்சன் தடவி [சுட்டி-4] குணப் படுத்த வீண் முயற்சி செய்துள்ளார்.

இஸ்லாமோஃபோபியா என்ற மன நோயினால் மிகக் கடுமையாகப் பீடிக்கப் பட்டுள்ள இவருக்கு அனுபவமுள்ள சிறந்த மருத்துவர்களான அபூஆதில், அபூமுஹை, அப்துல்லாஹ், சுட்டு விரல், ஸலாஹுத்தீன், அக்பர் பாஷா, நல்லடியார், சுவனப் பிரியன், இப்னு பஷீர் போன்றோரால் தொடர் சிகிச்சை அளிக்கப் பட்டுள்ளது.

மருத்துவர்கள் எழுதிக் கொடுக்கும் மருந்துகளை இவர் 'உள்வாங்க' மறுப்பதால் உளறல் நோய் நீங்கிய பாடில்லை. அதனால்தான் ஜிஹாதைப் பற்றி முன்னர் உளறியதையே மீண்டும் மீண்டும் உளறிக் கொட்டுகிறார் [சுட்டி-5].

இவரது தொடர் உளறல்களுக்கு, குறிப்பாக "முஹம்மது விஷம் வைத்துக் கொல்லப் பட்டார்" என்ற உளறலுக்கு, திண்ணை மருத்துவர் ஒருவரும் தம்மால் முடிந்தவரை சிகிச்சை அளித்திருக்கிறார்; [சுட்டி-6] ம்ஹூம், பயனில்லை.

இவருக்கு அளிக்கப் பட்டத் தொடர் சிகிச்சையையும் இவருடைய அத்து மீறிய உளறல்களையும் தொடர்ந்து கவனித்துக் கொண்டிருந்த கம்பவுண்டர் இறை நேசன் என்பவர் இவரை 'மறை கழண்ட கேஸு' என்று [சுட்டி-7] முடிவுக்கு வந்திருக்கிறார்.

இறை நேசனின் முடிவில் எனக்கு உடன்பாடில்லை. இவர் மறை கழண்ட கேஸல்ல; மாறாக, தேறாத கேஸ் என்பது என் கணிப்பு.

மன நோயாளி என்பதால் இவர் மீது பரிவும் இவருடைய உளறல்களால் சில முஸ்லிம்கள் மருத்துப் படிப்பைப் படித்து முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள் என்ற நன்றியுணர்வும் ஒருபுறமிருந்தாலும் இவர் மேலும் மேலும் உளறிக் கொட்டுவதைப் பார்க்கும்போது - அதுவும் திண்ணை என்ற திறந்த வெளியில் - இவர் மீது பரிதாமே எஞ்சி நிற்கிறது!

@ ******************* @

சுட்டிகள்:

1- http://www.thinnai.com/?module=displaystory&story_id=80609081&format=html

2- http://www.thinnai.com/?module=displaystory&story_id=20609081&edition_id=20060908&format=html

3- http://www.thinnai.com/?module=displaystory&story_id=20609158&format=html

4- http://www.tamiloviam.com/unicode/11030512.asp

5- http://www.thinnai.com/?module=displaystory&story_id=20609155&format=html

6- http://www.thinnai.com/?module=displaystory&story_id=80501205&format=html

7- http://copymannan.blogspot.com/2006/09/blog-post_05.html
@ ********************* @

நன்றி : கிச்சன் ஜர்னலிஸம் - வஹ்ஹாபி.

Tuesday, September 19, 2006

இது (குள்ள) நரிகளுக்கான அழைப்பிதழ்!

சகோதரர் ஜோ அவர்களின் போப்பாண்டவரும் இஸ்லாமும் -சர்ச்சை என்ற பதிவில் சில கருத்துக்களை கூறியிருந்தேன். எப்பொழுதும் போல் சந்தில் சிந்து பாடும் சிலர் அங்கும் வந்து என்னுடைய கருத்துக்களை திசை திருப்பி தங்களது மனவக்கிரத்தை தீர்த்துக் கொண்டிருக்கின்றனர்.

அங்கு அவர்களுக்கு கொடுத்த பதிலை இங்கு வைக்கிறேன். அவர்களுக்கான திறந்த அழைப்பிதழே இப்பதிவு. தொடர்ந்து அங்கு இதனைக் குறித்து விவாதித்தால் பதிவின் நோக்கம் திசைதிரும்பும் வாய்ப்பிருப்பதால் அவர்களுக்காக மலர்களில் ஒரு களம் ஒதுக்கும் ஏற்பாடே இது.


எதிர்பார்த்தது போல் திசைதிருப்பல் அருமையாக நடந்துள்ளது.

ஒரு உதாரணம்:

//போர் நடக்கப்போவது இஸ்லாமியர்களுக்கும் இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கும்(அமெரிக்கர்,அய்ரோப்பியர் எல்லாம் வேறு யாராம்)//

அமெரிக்கர் ஐரோப்பியர் எல்லாம் முஸ்லிம் அல்லாதவர்களாம்.
நான் ஏற்கெனவே போட்ட பின்னூட்ட வாசகத்தை திரும்பவும் ஒருமுறை படித்துக் கொள்ளுங்கள்.

//இரு சகோதரர்களுக்கிடையில் மூட்டிவிட்டு குளிர்காய நினைத்து ஏமாந்த குள்ளநரிகள்//

மூட்டி விட்டு குளிர்காய நினைக்கும் இரத்த வெறிபிடித்த அசோக் சிங்கால், தொகாடியா, மோடி கூட்டங்களுக்கு ஒரு வேண்டுகோள். உங்களின் கோணபுத்தியையும், வக்கிர எண்ணங்களையும் இங்கு வந்து கொட்ட வேண்டாம்.

நல்ல எண்ணத்தில் கருத்து வேறுபாடு கொண்ட இரு சமூகங்களின் செயல்பாடுகளை குறிப்பிட்டு மனங்களுக்கிடையில் இணக்கத்தை ஏற்படுத்தும் முகமாக சகோதரர் ஜோ அவர்கள் போட்ட இப்பதிவிலும் வந்து உங்களின் கயமைத்தனத்தை காட்டுவது சரிதானா என யோசித்துப் பாருங்கள்.

//நேர்மையாக பதில் சொல்வார் யாருமிலர்...//

உங்களின் நேர்மையான கேள்வி என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது.
எனினும் பதிலளிக்க நான் தயாரே. ஆனால் இவ்விடம் அதற்கு உகந்ததாக படவில்லை. உங்களின் "நேர்மையான" கேள்விகளுக்கு பதிலளிக்கவும் விவாதிக்கவும் "மலர்கள்" எப்பொழுதும் தயாராகவே உள்ளது. உங்கள் கேள்வியில் நேர்மையிருப்பின் வாருங்கள். விவாதிப்போம்.

அன்பு சகோதரர் ஜோ அவர்களுக்கு,

நான் இவ்வாறு கூறுவதற்காக என்னை நீங்கள் தவறாக எடுத்துக் கொள்ள மாட்டீர்கள் என நினைக்கிறேன். நீங்கள் தயவு செய்து இப்பதிவுக்கு தொடர்புள்ள பின்னூட்டங்களை மட்டும் அனுமதிக்க கோருகிறேன். தேவையற்ற திசைதிருப்பல்கள், முடிந்த அளவு மூட்டி விட்டு குளிர்காய நினைப்பவர்களின் பின்னூட்டங்களை தவிருங்கள். அது தான் இப்பதிவினை எழுத தூண்டிய உங்கள் நோக்கத்திற்கு நல்லது.

மோடி, அசோக் சிங்கால் கூட்டத்தினரின் மொள்ளமாரித்தனத்தை தோலுரிக்கும் ஒரு சுட்டியை இதற்கு முன்னே நான் தந்திருக்கிறேன். அதனை ஒரு முறை கூட இங்கு தருகிறேன். அப்பதிவினை நன்றாக படிக்கவும். அசோக் சிங்கால் நரிக் கூட்டத்தின் செயல்பாட்டின் தொடர்ச்சியை தான் இங்கும் நீங்கள் காண்கிறீர்கள்.

அவர்களுக்குத் தேவை எப்படியாவது மற்றவர்கள் அடித்துக் கொண்டு சாக வேண்டும். அதற்கு நீங்களும் ஒரு தளத்தினை தயவு செய்து அமைத்துக் கொடுக்க வேண்டாம்.

//உலகப்போர் எல்லாம் வந்தால் ஒரு நாளைக்கு மேல் போர் நடக்காது.//

இது எப்படி சாத்தியம் என்பதை மட்டும் நன்றாக புரிந்து கொண்டால் இந்த மோடி, தொகாடியா கூட்டங்களின் திசைதிருப்பல்கள் அர்த்தமற்று போகும்.

அமெரிக்க அண்ணனின் கையில் இருக்கும் அணுகுண்டுகளில் ஒன்று போதும் இது நடைபெறுவதற்கு. அமெரிக்க அண்ணன் இன்று யாரை நோக்கி தீவிரவாதி என கைநீட்டுகிறானோ அவனுக்கு எதிராக ஒன்றும் யோசிக்காமல் களமிறங்க வளர்ப்பு நாய்கள் இன்று ஆலாய் பறப்பதைப் பார்த்தால் அது நடப்பது வெகு தொலைவில் இல்லை எனத் தெரிகிறது.

இதனைக் குறித்து நான் கூறியதை தான் அழகாக திசைதிருப்பியுள்ளனர்.

எப்படியாவது இறை நேசன்களை தீவிரவாதிகளாக்கி விடவேண்டும் "அவாள்"களுக்கு. இறை நேசன்கள் மீது "அவாள்"களுக்கு அவ்வளவு அன்பு.

இன்றைய தீவிரவாதத்திற்கு ஊற்று கோலாக இருக்கும் இந்த அமெரிக்க அராஜக போக்கிற்கு எதிராக உண்மை, நீதியின் பக்கம் நிற்கும் ஒரு கூட்டம் இங்கு தயாராகி இருக்கிறது பாருங்கள். இதனைக் குறித்து தொகாடியா கூட்டங்கள் என்ன நினைக்கின்றன. நீதியின் பக்கம் நிற்பதால் இவர்கள் எல்லாம் முஸ்லிம்கள் என்றா?

நிச்சயம் இக்கூட்டம் வளரும். இதன் செயல்பாடுகள் எல்லாவகையிலான மக்கள் விரோத தீவிரவாதங்களுக்கு சாவு மணி அடிக்கும். இச்செயல்பாட்டிற்கு எதிராக அமெரிக்க தீவிரவாதம் வலுக்கும் எனில் அது கடைசியில் ஒரு யுத்தத்தில் தான் போய் நிற்கும். அந்த யுத்தம் நீதிக்கும் அநீதிக்கும் இடையிலான யுத்தமாக இருக்கும். அப்பொழுதும் அமெரிக்கா தாங்கள் தீவிரவாதிகளுக்கு ஆதரவு தெரிவிப்பவர்களுக்கு எதிராக நிற்பதாக கூவிக் கொள்ளும். அந்த யுத்தத்தில் அமெரிக்க, இஸ்ரேலிய அராஜகங்களுக்கு எதிரான இந்திய அரசின் நிலைபாட்டிற்கு எதிராக இந்தியாவிலிருந்து ஒரு பெருங் கூட்டம் அமெரிக்காவிற்கு வாலாட்டும். அது நிச்சயமாக இந்திய சுதந்திரத்திற்காக தங்கள் விகிதாச்சாரத்தை விட அதிகமாக தங்கள் இரத்தத்தால் வீரகாவியம் எழுதிய முஸ்லிம்களாக இருக்க மாட்டார்கள் என என்னால் உத்தரவாதம் தர இயலும். அப்படியெனில் "அவாள்"கள் யாராக இருக்கும்?

Tuesday, September 12, 2006

மாணவியை ஆபாச படமெடுத்த இந்து ஆபாச தீவிரவாதி கைது!

துரைப்பாக்கம், செப். 12: மருத்துவமனையில் மயங்கிக் கிடந்த மாணவியை ஆபாச படம் எடுத்த வார்டுபாய் கைது செய்யப்பட்டார்.

புதுச்சேரியில் உள்ள ஆரோவில் பள்ளி மாணவிகள் சென்னைக்கு சுற்றுலா வந்தனர். நேற்று முன்தினம் பெசன்ட் நகர் வந்தனர். அப்போது பூங்கோதை (18) என்ற பிளஸ் 2 மாணவிக்கு திடீர் வயிற்று வலி ஏற்பட்டது. பூங்கோதையை 2வது அவென்யூவில் உள்ள நியூ ஏசியன் மருத்துவமனையில் சேர்த்தனர்.

பூங்கோதைக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும், இல்லாவிட்டால் உயிருக்கு ஆபத்து என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

பூங்கோதை பள்ளி விடுதியில் தங்கி படிப்பதால், உடனடி அறுவை சிகிச்சை செய்யும்படி ஆசிரியர்களே கேட்டுக் கொண்டனர். அதன்படி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மாலை 3 மணிக்கு, பூங்கோதையை வார்டுக்கு கொண்டு சென்றனர்.

அங்கு சென்றதும் பூங்கோதை லேசான மயக்கத்தில் இருந்தார். அதை பயன்படுத்தி வார்டுபாய் மல்லிகா ர்ஜுனன், பூங்கோதையின் ஆடைகளை களைந்து, கேமரா செல்போனில் ஆபாச படம் எடுத்துள்ளார். அப்போது மயக்கம் தெளிந்த பூங்கோதை, வார்டுபாய் ஆபாச படம் எடுப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து கத்தினார்.

ஆசிரியைகளும், மாணவிகளும் ஓடி வந்தனர். மற்ற ஊழியர்களும் அங்கு வந்தனர். மல்லிகார்ஜுனனை சரமாரியாக அடித்து உதைத்தனர். கேமரா செல்போனையும் பறித்தனர். சாஸ்திரி நகர் போலீசில் ஒப்படைத்தனர்.

நன்றி : தினகரன்(மற்றும் செய்தியை மலர்களுக்கு பரிமாறிய சகோதரர்களுக்கும்)

செய்தியை செய்தியாக பார்க்கமுடியாத காழ்ப்புணர்வை மனதில் தேக்கி அதனை தீர்க்க என்ன அக்கிரமம் நாட்டில் நடந்தாலும் அதில் ஒரு முஸ்லிம் பெயர் அடிபட்டால் உடன் அச்செய்தியுடன் "இஸ்லாத்தை" தொடர்பு படுத்தி குளிர்காயும் மனவக்கிரம் பிடித்த ஹிந்துத்துவ தீவிரவாதிகளுக்கு இப்பதிவு அர்ப்பணம்.

ஒரு செய்தியை எப்படி ஒரு சமூகத்துக்கு எதிராக திருப்ப முடியும் என்பதற்கு இப்பதிவு ஓர் உதாரணமாக இருக்கட்டும்.

இனிமேலாவது பொது மக்களுக்கு அநியாயம் இழைக்கும் முகமாக ஒருவன் மானபங்கம், திருட்டு, கொலை, கொள்ளை, குண்டு வெடிப்பு என எவ்வகையிலாவது செயல்படுவானாகில் அவன் எச்சமூகத்தை சார்ந்தவனாக இருந்தாலும் உடன் ஒட்டு மொத்தமாக அச்சமூகத்தின் மீது விரலை சுட்டாமல் அச்சமூக விரோதியை பொதுவாக சமூக துரோகியாக, தீவிரவாதியாக, பயங்கரவாதியாக, அக்கிரமக்காரனாக இந்த வந்தேறி பார்ப்பன கூட்டத்தால் வடிவமைக்கப்பட்ட சங்க்பரிவார கூட்டம் பார்க்க முன்வரட்டும்.

இல்லையேல் எதிர்பக்கமிருந்தும் அது போன்று எல்லோராலும் செய்தியை ஒரு சமூகத்தின் மீது எப்படி வேண்டுமெனிலும் திசை திருப்ப இயலும் என்பதை தெரிந்து கொள்ளட்டும்.

நாட்டில் குண்டுகள் வெடிக்கும் பொழுது முந்திக் கொண்டு "இஸ்லாத்தை" தொடர்பு படுத்தும் மனவக்கிரம் பிடித்த ஜென்மங்களே! மசூதியில் குண்டு வெடித்து 39 பேர் பலியான பொழுது எங்கே போய் ஓடி ஒழிந்து கொண்டீர்கள்? ஏன் "ஹிந்துத்துவ தீவிரவாதிகள் வெறிச்செயல்" என தலைப்பு செய்தி வாசிக்க வேண்டியது தானே? எது உங்களை இதற்கு தடுத்தது?

ஆங்கிலேயனுக்கு ஜால்ரா தட்ட ஒரு ஹிந்துத்துவ வெறியனால் எழுதப்பட்ட பாடலின் இரு வரிகளை பாட சுதந்திரத்திற்கு தங்களது விகிதாச்சாரத்தை விட அதிகமாக தங்கள் இரத்தத்தால் வீர காவியம் படைத்த முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிவித்த போது இந்தியாவை காட்டிக் கொடுத்தவர்களையும் மகாத்மாவை கொன்றவர்களையும் வார்த்தெடுத்த ஹிந்துத்துவ கூட்டம் "தேசவிரோதிகள்" என கூக்குரலிட்டு கத்திக் கொண்டிருந்தீர்களே? நாட்டின் இறையாண்மைக்கும், பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் தரும் விதத்தில் வண்டி வண்டியாக ராக்கட் லாஞ்சர்கள் போன்ற ஆய்தங்களை உருவாக்கி மறைத்து வைத்த குடோன்களையும் அதனைக் கடத்த உதவிய "சீனிவாசன்களையும்" காவல்துறை கைது செய்த போது எங்கே போயிற்று உங்கள் "தேசவிரோதிகள்" எனற கத்தல்?

ஏன் இது உங்கள் பார்வையில் தீவிரவாத, தேசவிரோத செயல் இல்லையா?. நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உருவாகியிருக்கும் "ஹிந்துத்துவ தேசவிரோதிகள் கைது" என முழங்க வேண்டியது தானே?

ஏ! இந்தியாவை காட்டிக்கொடுத்த "தேசவிரோதிகளின்" குஞ்சுகளே! வாருங்கள். வந்து உங்கள் தேசப்பற்றை இவற்றில் காட்டுங்கள் பார்ப்போம்!

அடங்குங்கள். பயங்கரவாதத்தை பயங்கரவாதமாக மட்டும் பாருங்கள். அதனை அவசியமில்லாமல் ஒரு சமூகத்தோடு தொடர்பு படுத்தாதீர்கள்.

தீவிரவாதத்தை தீவிரவாதமாக மட்டும் பாருங்கள். அதனை தொடர்ந்து ஒரே சமூகத்தோடு ஒட்டி குளிர்காயாதீர்கள்!

அநியாய சமூக விரோத செயல்களை சமூக விரோத செயல்களாக மட்டும் பார்த்து அவர்களை சமூகத்திலிருந்து அந்நியப்படுத்த முயலுங்கள். அதைவிடுத்து அநியாயமாக ஒரு சமூகத்தையே அந்நியப்படுத்த முயலாதீர்கள்.

இப்பதிவின் தலைப்பு போன்று மேலே தொடர்வதும் தொடராததும் உங்களின் சமூக விரோத செயல்பாடுகளை இனிமேலாவது நிறுத்துவதிலும் தொடர்வதிலும் தான் இருக்கிறது.

Monday, September 11, 2006

பெட்ரோ டாலருக்கு விலை போன எம் பி?

இஸ்லாமிய மதத்தை பின்பற்றுபவர்கள் அனைவரையும் தீவிரவாதிகளாக சித்தரிக்க அமெரிக்காவும் ஒத்த ஏகாதிபத்திய நாடுகளும் சதியாலோசனை செய்கின்றன. இதனை இந்தியாவிலும் பல வழிகளினூடாக அரங்கேற்ற முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன.
மலேகாவில் 37 பேர் கொல்லப்படுவதற்கு காரணமான தொடர் குண்டு வெடிப்புகளின் பின்னணியில் இந்து தீவிரவாதிகள் என்று ஒரு பத்திரிக்கை கூட செய்தி வெளியிட்டதாக நான் காணவில்லை. ஆனால் அதே சமயம் மும்பை மற்றும் அக்ஷர்டாமில் குண்டு வெடிப்புகளை நடத்தியது இஸ்லாமிய தீவிரவாதிகள் என இந்திய அனைத்து முக்கிய பத்திரிக்கைகளும் முன்விதி எழுதின.

காஷ்மீர் குண்டுவெடிப்புகளில் மரணமடைபவர்கள் யார் என பாராளுமன்றத்தில் பலமுறை கோரிக்கை வைத்த பிறகும் இது வரை அதற்கான பதில் கிடைக்கவில்லை. உண்மையில் அங்கு கொல்லப்படுபவர்களில் 94 சதவீதமும் முஸ்லிம் சமூகத்தில் உள்ளவர்களே. இந்த விவரங்கள் வெளிவராமல் இருப்பதனாலேயே கஷ்மீரில் நடக்கும் எல்லா குண்டுவெடிப்புகளோடும் இஸ்லாமிய சமூகம் எளிதில் பிணைக்கப்பட்டு செய்தியாக்க இலகுவாக்கப்படுகிறது.

எங்கு எவ்வித அக்கிரமம் நடந்தாலும் அதில் ஒரு முஸ்லிமின் பெயர் உட்பட்டிருந்தால் உடன் அதற்கு மதத்தை காரணமாக்குவதன் பின்னணியில் கூட்டுசதி உள்ளது. இது போன்ற தருணங்களில் வெளியிடப்படும் எதிர் அறிக்கைகளை கொண்டே அரசியல்வாதிகளின் உண்மையான முகங்களை அடையாளம் கண்டு கொள்ளலாம்.


நன்றி : சத்தியமார்க்கம்

இவ்வாறு கூறியிருப்பது பின்லாடனோ, முல்லா உமரோ, சதாம் ஹுஸைனோ அல்லது இந்தியாவில் உள்ள ஏதாவது முல்லாவோ அல்ல.

இந்திய பாராளுமன்றத்தில் அங்கமாக உள்ள திரு. வீரேந்திர குமார் எம் பி அவர்கள் தான் இவ்வாறு கூறியிருக்கிறார். இவரின் இதே கருத்தை சமீபத்தில் மசூதிக்கு அருகில் நிகழ்ந்த குண்டுவெடிப்புக்குப் பின் பல அரசியல்வாதிகளும் கூற ஆரம்பித்திருக்கின்றனர்.

ஒருவேளை "பெட்ரோ டாலர்" கைமாறி இருக்குமோ? இதனைக் குறித்து "தேசப்பற்றை குத்தகைக்கு" எடுத்திருப்பதாக பகல் வேடமிடும் இந்திய சுதந்திரப்போரில் சுதந்திரப்போராளிகளை காட்டிக்கொடுப்பவர்களின் கூடாரமாகவும் மகாத்மா காந்தியை கொலை செய்ய திட்டம் வகுத்து கொடுத்தவர்களுமான ஆர் எஸ் எஸ் க்கு அடிவருடும் நீலகண்டன், நேசகுமார், மலர்மன்னன், ஜெயராமன் போன்ற இணைய முழுநேர ஊழியர்கள் கருத்து கூறினால் நன்றாக இருக்கும்.

Thursday, September 7, 2006

வந்தே(றிகளின்) 'மா'தரம்.

உணவகங்களின் எச்சில் இலை போடும் பகுதியிலோ அல்லது சில திருமண மண்டபங்களின் எச்சில் போடும் பகுதிகளிலோ முன்னங்காலை நட்டு வைத்து பின்னங்கால்களில் தனது பிட்டத்தை வைத்துக் கொண்டு ஏதாவது எச்சில் இலை வந்து விழாதா என ஆவலோடு வாயிலிருந்து நீர் சொட்டச் சொட்ட நாக்கைத் தொங்கப் போட்டு அமர்ந்திருக்கும் நாயை பார்த்திருப்பீர்கள்(இதுவரை இப்படி ஒரு காட்சியை காணாதவர்கள் மேற்கொண்டு படிக்கும் முன் ஏதாவது உணவகத்திற்கோ அல்லது திருமண மண்டபத்திற்கோ சென்று உணவருந்தி கண்டு வரவும்).

ஏதாவது எச்சில் இலை வந்து விழும் நேரம் அதுவரை இருக்கும் இடம் வெளியில் தெரியாமல் இருக்கும் இந்த நாய் அரக்க பரக்க விழுந்தடித்துக் கொண்டு ஓடி அந்த இலைப்பக்கம் வரும். அதில் ஒன்றும் இல்லை எனினும் அவ்விலையை அது விடாது. பறந்தடித்து ஓடி வந்ததற்காக ஒன்றுமில்லை எனினும் கொஞ்ச நேரம் அவ்விலையை போட்டு அங்குமிங்கும் இழுத்துப்போட்டு தனது வெறியை தீர்த்துக் கொண்டு போகும்.

சரி இனி விஷயத்திற்கு வருவோம். செப்டம்பர் 7 ஆன இன்று இந்திய மக்கள் தங்களின் தேசப்பற்றை மற்றவர்களுக்கு வெளிப்படுத்தும் நாள். எப்படி? இந்திய எல்லையில் ஊடுருவும் அந்நிய சக்திகளுக்கு எதிராக இந்திய இராணுவத்துடன் சேர்ந்து களமிறங்கியா? இந்தியாவை அடக்கியாண்ட ஆங்கில அரசின் உற்பத்திகளை புறக்கணித்தா? இந்திய உயர்பதவிகளில் அமர்ந்து கொண்டு அந்நிய நாட்டுக்கு உளவு வேலைப்பார்க்கும் பிச்சைக்காசுக்கு விலைப்போன தூத்தேறிகளை அரசாங்கத்துக்கு பிடித்துக் கொடுப்பதன் மூலமாகவா? சுதந்திரப்போரில் உயிர்தியாகம் செய்த போராளிகளின் ஏழைக் குடும்ப அங்கங்களை தத்தெடுப்பதன் மூலமாகவா? இந்திய நாட்டின் இறையாண்மைக்கு களங்கம் கற்பித்துக் கொண்டிருக்கும் ஜாதி/மத வெறியர்களையும், மத/மொழி/இனத்தின் பெயரால் பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விடும் தீவிரவாதிகளுக்கு எதிராக களமிறங்குவதன் மூலமாகவா? என்பது போன்று ஏதாவது கிறுக்குத்தனமாக மட்டும் கேட்டு விடாதீர்கள்.

தேசப்பற்றாளன் என நிரூபிக்க இவ்வளவு சிரமப்பட வேண்டிய அவசியம் ஒன்றும் இல்லை. வந்தேறிகள் கொண்டு வந்த துர்கா மாதாவை வணங்கும் இரு வரிகள் மட்டும் பாடினால் போதும். காட்டிக் கொடுத்த/கொடுக்கும் ஹிந்துத்துவ தேசப்பற்றாளார்களுக்கு இது ஒன்றும் பெரிய காரியமில்லை தான். இரு வரிகளைப் பாடி துர்கையை ஆலாபித்து விட்டு அவர்களுக்கு தேசப்பற்றாளன் என்ற பெயரில் என்ன வேண்டுமானாலும் செய்யவும் செய்யலாம். யாருக்கு கணக்கு கொடுக்க வேண்டும்?. ஆனால் படைத்த ஒரே இறைவனையே வணங்குவோம்; அவனைத் தவிர வேறு எவருக்கும் சிரம் பணியவோ, துதிக்கவோ மாட்டோம் என உள்ளத்தால் உறுதி பூண்டு முஸ்லிமாக வாழும் இந்திய சுதந்திரப்போராட்டத்தில் வீர காவியம் படைத்த இஸ்லாமியர்களைப் பொறுத்தவரை இது ஒருபோதும் கனவிலும் நினைக்க முடியாத காரியமாகும்.
எனினும் இவ்விஷயத்தை வைத்து அரசியல் இலாபம் தேட துடிக்கும் வந்தேறிகளின் அமைப்புகளுக்கு அதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்காதிருக்கவும், பக்கிம் சந்திர சட்டர்ஜியின் இந்தியாவை அடிமைப்படுத்திய ஆங்கிலேயர்களுக்காக துர்கா தேவியிடம் பிரார்த்தனை புரியும் பாடல் வரிகள் இஸ்லாமிய அடிப்படைக் கோட்பாட்டுக்கு எதிரான கருத்துக்களைக் கொண்டிருப்பதால், அதனைத் தவிர்க்கும் பொருட்டும், செப்டம்பர்-7 ஆன, இன்று இந்திய முஸ்லிம் குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டாம் என்று அகில இந்திய முஸ்லிம் அரசியல் இயக்கங்களின் தலைவர்களும் மற்றும் மார்க்க அறிஞர்களும் கேட்டுக் கொண்டுள்ளார்கள்.

செப்டம்பர்-7, அன்று வந்தேறிகளின் பாடலை கட்டாயமாக்கலாமா என்று பரிசீலிப்பதாகச் சொன்ன மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்,பாடல்வரிகள் முஸ்லிம்களின் மத உணர்வுகளுக்கு எதிரானது என்பதால் அதனைப் பாடியே ஆகவேண்டும் என்பது கட்டாயமில்லை என்று அறிவித்தது. அவ்வளவுதான்! முஸ்லிம்களை தேச விரோதிகளாக்க ஏதாவது கிடைக்காதா? என நாக்கைத் தொங்கப்போட்டு காத்திருந்த சங்பரிவாரங்களின் எச்சில்வடியும் வாய்க்குக் கிடைத்த அவலாக, இப்பிரச்சினையை கையிலெடுத்துக் கொண்டு இந்திய முஸ்லிம்களின் தேசப்பற்றை, மத நம்பிக்கையுடன் மோதவிட்டு குளிர்காய முனைகின்றனர்.

இந்தியாவை 'காளி'யாகவும் துர்க்கையாகவும் உருவகப்படுத்தி ஆங்கிலேயர்களுக்காக பிரார்த்தனை புரிவதாக வரும் மதத்துவேச வரிகளைக் கொண்ட வந்தேறிகளின் பாடலை 'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை' என்ற கொள்கையுடைய முஸ்லிம்கள் கட்டாயம் பாடியே ஆக வேண்டுமாம்! அப்படிப் பாட விரும்பாதவர்கள் பாகிஸ்தானுக்குப் போக வேண்டுமாம்! அல்லது ஓட்டுரிமை பறிக்கப்பட வேண்டுமாம்! ஆனால் இந்தியாவைக் காட்டிக் கொடுத்த ஹிந்துத்துவ ஆசாமிகளையும் தேசவிடுதலைக்கு தன் வாழ்க்கையை அர்ப்பணித்த மஹாத்மா காந்தியை வதித்த ஆர் எஸ் எஸ் பரிவாரங்களும் தேசப்பற்றாளார்களாம்.

சுதந்திர இந்தியாவின் அரசியல் சாசனம் இந்திய மக்கள் எல்லோருக்கும் மதச் சுதந்திரத்தை வழங்கியுள்ளது. இந்திய அரசியல் சாசனத்தை என்றுமே மதிக்காத சங்க்பரிவாரங்கள் மற்றும் இந்தியாவின் தேசியக் கொடிக்கு மரியாதை செய்ய அரை நூற்றாண்டுகள் எடுத்துக் கொண்ட RSS கும்பலுக்கும் அதன் அரசியல் முகம் பிஜேபிக்கும் இதைச் சொல்ல என்ன தகுதி இருக்கிறது.
கடவுள் நம்பிக்கையற்ற கம்யூனிஸ்டுகளும் கூட 'காளியை' வணங்குவதாகப் பாடப்பட்ட வந்தேறிகளின் பாடலின் முதல் இரண்டு அந்தாதிகளை (Stanzas) பாடச்சொல்வது வியப்பாக இருக்கிறது! பாபர் மசூதியைத் தகர்த்தவர்கள் சங்பரிவாரக் கும்பல் என்றால் அதற்கு வழி ஏற்படுத்திக் கொடுத்ததோடு, தற்போது கட்டப்பட்டுள்ள கோவில் பீடத்திற்கு எஃகுச் சுவர் பாதுகாப்பு கொடுத்துக் கொண்டிருப்பது காங்கிரஸ். ஆக, இந்திய முஸ்லிம்களின் நலனை யார் அதிகம் சிதைப்பது என்ற விஷயத்தில் தான் இந்திய அரசியல் கட்சிகள் முனைப்புடன் செயல்படுகின்றன.

சமஸ்தானங்களாகப் பிரிந்து கிடந்த இந்தியாவிற்கு ஒரு பூவரைபடத்தை ஏற்படுத்தி ஓர் அகண்ட பாரதத்தை உருவாக்கிக் கொடுத்தவர்கள் முகலாய மன்னர்கள் - முஸ்லிம்கள் என்பதைச் சகிக்க முடியாமல் எழுதப் பட்டதுதான், 'ஆனந்த மடம்' என்ற நாவலில் வரும் "வந்தே(றிகளின்) மாதரம்" பாடல். இது தேசியப் பாடலுக்கு துளியும் தகுதியானது இல்லை என்பதற்கு, அப்பாடலில் வரும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை வரிகளே சான்று. முகலாயர்களை விரட்டிய ஆங்கிலேயரைக் கடவுள் ஆசீர்வதிக்க வேண்டும். இப்படிப்பட்ட வரிகள் அடங்கிய இப்பாடலை தேசப்பற்றுள்ள எவரும் நாட்டுப் பண்ணாக ஏற்க முடியாது.அது முழுப்பாடலாக இருந்தாலும் அல்லது இரண்டு அந்தாதிகளாக இருந்தாலும் சரியே. ஒருவேளை இதனைப் பாடுவது தேசப்பற்றின் அடையாளம் எனபது அந்த ஆங்கிலேயர்களை விரட்டியடிக்க தன் வாழ்நாளை செலவழித்த காந்தியை சுட்டுக் கொன்ற சங்க்பரிவார ஆர் எஸ் எஸ் வன்முறை கும்பலுக்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாம்.

முகலாயர் ஆட்சியில் ஒரே வங்காளமாக இருந்ததை, இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு கிழக்கு மேற்கு எனத் துண்டாடியது ஆங்கிலேயர்கள் என்றால், அதனை பங்களாதேஷ் என்ற தனிநாடாக்கிப் பாகிஸ்தானை இந்தியாவின் நிரந்தரப் பகைவர்களாக்கும் அவர்களின் கனவை நனவாக்கியது காங்கிரஸ் கட்சி. ஆக, வந்தேறிகளின் பாடலை அவமதித்தவர்கள் காங்கிரஸ்காரர்களே! இன்னொரு பக்கம் மோகன்தாஸ் காந்தியை தேசப்பிதா என்றால் நாக்கைப் பிடுங்கி கொள்ளும் சங்க்பரிவாரங்கள், காளியை 'தேசமாதா' என்பது உள்நோக்கம் கொண்டதாகும்.

ஆங்கிலேயருக்கு ஆதரவாக சாமரம் வீசியதோடு, சுதந்திரப்போராட்ட வீரர்களைக் காட்டிக் கொடுத்து உயர் பதவிகளை ஆக்கிரமித்ததோடு இன்றும் அதன் பலனை அறுவடை செய்து வரும் வந்தேறி கூட்ட சங்பரிவாரங்கள், நாட்டுச் சுதந்திரத்திற்காக கல்வி வாய்ப்புகளை இழந்து தியாகம் செய்த இந்திய முஸ்லிம்களின் தேசப்பற்றைக் குறைகூற கொஞ்சமும் தகுதியற்றவர்கள்.

குறிப்பு:
நாக்கைத் தொங்கப் போட்டு காத்திருக்கும் நாய் எது என்பதற்கும் அதன் செய்கைகள் யாது என்பதற்கும் தனி விளக்கம் அவசியமில்லை என நினைக்கிறேன். எப்பொழுதும் போல் இன்னும் புரியாதவர்கள் தொடர்பு கொள்ளவும். என்ன வழியில் தொடர்பு கொள்கிறார்களோ அவ்வழியில் பதில் தரப்படும்.

Tuesday, September 5, 2006

''மறை'' கழண்ட கேசு

உங்களைப் பார்த்து யாராவது 'மறை கழண்ட கேசு' என்று சொன்னால் என்ன நினைப்பீர்கள்? எனக்கு கோபம் வரும்! ஆனால் 'நேசமான' ஒரு ஆசாமிக்கு கோபம் வராது. ஏனென்றால், 'மறை' என்பதை அவர் வேறு விதமாகப் புரிந்து வைத்திருக்கிறார். எப்படின்னு கொஞ்சம் படிச்சுத்தான் பாருங்களேன்.

இந்து மதம் என்றால் என்ன? பொதுவாக நம் அனைவருக்கும் உடனே தோன்றும் பதில், அது வேதங்களின் அடிப்படையில் அமைந்த ஒரு மதம் என்பதே. இந்த விளக்கமானது, ஆபிரகாமிய மதங்கள் என்று நாம் இன்றழைக்கும் யூத,கிறித்துவ,இஸ்லாமிய மதங்களின் பார்வையை இரவல் பெற்று நாம் அமைத்துக்கொண்டது. நமக்கு அன்னியமான கோட்பாடு.... .....சுருங்கக் கூறின், இந்து மதம் என்பது ஒரு வரையறைக்கு உட்படா மனிதக் கூட்டம். இதற்கு வேதம் தேவையில்லை, சடங்கு தேவையில்லை, நம்பிக்கை தேவையில்லை, ஏன் கடவுளே கூடத் தேவையில்லை. ஆம், கடவுளைப் பற்றியே பேசாத மகான்கள் இங்கே வாழ்ந்து உபதேசித்து சென்றுள்ளனர்.



வலைப்பூக்களில் இஸ்லாத்தைப் பற்றிய அரைகுறை புரிந்து கொள்ளல்களுடன் Islaamic Info என்ற பெயரில் தன்னிச்சையாகவும் தவறாகவும் எழுதி வரும் நேசகுமார், அவர் சார்ந்திருக்கும் இந்து மதம் பற்றிய புரிந்து கொள்ளலிலும் தன் அறியாமையை வெளிப்படுத்தியுள்ளார்.



சமீபத்தில் அங்கயர்கன்னி என்ற தலித் பெண், கோவிலில் ஓதுவாராக நியமிக்கப் பட்டிருப்பதை சிலாகித்து SIFI யில் எழுதி இருந்தார். வாங்கும் கூலிக்கேற்ப மாரடிப்பதிலோ அல்லது தன் மதத்தையும் இன்றைய பிரேமானந்தா,காஞ்சி சுப்பிரமணியன் போன்ற பண்டைய இந்துமத ஞானிகளையும் சிலாகித்து எழுதுவதிலோ யாருக்கும் ஆட்சேபனை இல்லை.

இஸ்லாம் என்றால் ஏதோ ஆயிரத்தி நானூற்று சொச்ச வருட பாரம்பரியம் கொண்ட மதம் என்ற எடுகோலில் முஸ்லிமல்லாத எவரும் இந்து என்று இந்து மதத்துக்கும் அத்னைப் பின்பற்றும் இந்துக்கும் புதிய (?!) விளக்கம் கொடுப்பதற்காக இஸ்லாத்தின் மீது கல்லெறிய வேண்டிய அவசியம் ஏனோ?

முதல் மனிதன் ஆதம் (அலைஹி...) அவர்களிலிருந்து தொடங்கி சுமார் ஒரு இலட்சத்து இருபத்து நான்காயிரம் மனிதர்களை தன் தூதுவர்களாகத் தேர்ந்தெடுத்து இறுதியாக முஹம்மது (ஸல்...) அவர்களால் முழுமை படுத்தப்பட்டதே இஸ்லாம்.

"ஆதமையும், நூஹையும், இப்ராஹீமின் சந்ததியரையும் நிச்சயமாக அல்லாஹ் அகிலத்தாரைவிட மேலாக தேர்ந்தெடுத்தான். (திருக்குர்ஆன் 003:033). மேலும்,

(நபியே) உமக்கு முன்னர் (பற்பல சமூகங்களுக்கும்) நாம் அனுப்பிய தூதர்கள் (அந்தந்த சமூகங்களின்) ஊர்களிலிருந்த மனிதர்களேயன்றி வேறில்லை; அவர்களுக்கு நாம் வஹீ மூலம் (நம் கட்டளைகளை) அறிவித்தோம். என்று குர்ஆன் பல இடங்களில் அழகாகத் தெளிவு படுத்துகிறது.

பின் யார்தான் இந்து? ஆபிரகாமிய மதங்கள் தலையெடுத்து என் வழி தனி வழி, பிற வழியெல்லாம் தீய வழி, என் கடவுள் மட்டுமே கடவுள் மற்றதெல்லாம் ஷைத்தான்.என் நபி (ஆபிரகாமிய மதங்களில் இப்படிக் கடவுளிடம் தொடர்புகொள்பவர் நபி கடவுளின் தூதர் என்றழைக்கப்படுகிறார்) மட்டுமே நபி (அல்லது கடைசி நபி தூதர்) என்று மூளைச் சலவை செய்யப்பட்டு இயல்பான மனிதத்தன்மையிருந்து மாறுபாடு அடையாமல் இருந்தால் அவர்களெல்லாம் இந்துக்களே.



குர்ஆனை, இறை வேதம் என்று நம்புவது எப்படி முஸ்லிம்களின் மீதான கடமையோ அதேபோல்தான் முந்தைய நபிமார்களுக்கு வழங்கப்பட்ட வேதங்களையும் நம்ப வேண்டும். அப்படி நம்பிக்கை கொண்டு இஸ்லாத்தை தங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டவர்கள்,நேசகுமாரின்பார்வையில் மூளைச் சலவை செய்யப்பட்டவர்களாம். (மூளைச் சலவை என்ற வார்த்தையை அவர் ஏலனமாக உபயோகித்திருந்தாலும்,ஆழ்ந்து நோக்கினால் அழுக்கடைந்த மூளையை இறைவேதம் கொண்டு சுத்தப் படுத்திக் கொண்டவர்கள் என்றும் எடுத்துக் கொள்ளலாம்!)

//உலகின் எந்த மூலையில் ஒருவன் இருந்தாலும், மதமாச்சர்ய ஒரே வழி வன்மதக் கோட்பாடுகளுக்குள் அகப்பட்டுக் கொள்ளாமல் இருந்தால் அவன் இந்துவே. இந்து என்கிற வார்த்தை பிராமணர்களையும், சடங்குகளையும் உங்களது கற்பனையில் கொண்டுவந்தால் இந்து என்பதற்குப் பதில் பாகன் என்றழையுங்கள்.//

முஹம்மது நபி இஸ்லாத்தை முதன் முதலில் எடுத்துச் சென்ற பாகன் அரபிகளையும் இந்து என்பதில் பெருமிதப் படுகிறார். இஸ்லாத்தைப் பின்பற்றாதவர்கள் என்ற தகுதியில் பாகன்களையும் இந்து மதத்திற்குள்ளடக்க விரும்பும் இவர், அன்றைய பாகன்களின் பழக்க வழக்கங்களையும் பண்பாடுகளையும் அறிந்து கொள்வது அவசியமாகும்.

1) கடவுளை நிர்வாணமாக வழிபடுதல் 2) தந்தையின் மனைவியை மறுமணம் செய்தல், பெண் குழந்தைகளை உயிரோடு கொல்லுதல், போன்ற கொடுங்குணங்களின் சொந்தக் காரர்கள்தான் இவர் விரும்பும் பாகன்கள். நிர்வாண சாதுக்களும் உசிலம்பட்டி, தர்மபுரி போன்ற பாகன் வழி சிசுக் கொலைகளைப் பேணுபவர்களும் இருப்பதால் ஒரு சமயம் பாகன்களை இந்துக்கள் என்கிறாரோ என்னவோ?

//ஆபிரகாமிய மதங்கள் செய்ததைப் போன்ற இனச் சுத்திகரிப்புகளை இந்தப் பாகன் மரபுகள் செய்யவில்லை. சடங்குகள் இங்கிருந்தன,//

பெளத்த மதத்தை தோன்றிய இந்தியாவிலிருந்து விரட்டியவர்களும், குஜராத்திலும் இன்னும் பல வடஇந்திய மாநிலங்களிலும் முஸ்லிம்களை இனச்சுத்திகரிப்பு செய்தவர்கள் ஆபிரஹாமிய மதங்களா?என்பதைத் தெளிவுபடுத்த நேசகுமார் கடமைப் பட்டுள்ளார்.

//வேதத்தையே நாம் மறை என்றுதானே அழைக்கின்றோம். நமது வேதங்களின் மறைபொருள் கோட்பாட்டைக் காப்பியடித்து இஸ்லாத்தில் சூஃபியிஸம், குரானுக்கு மறைபொருள் உண்டு என்றது.அப்படி குரானுக்கு மறைபொருள் உண்டு என்றால், இஸ்லாம் முழுவதுமே தகர்ந்து விழுந்துவிடும். ஏனெனில் முழு இஸ்லாமுமே குரானின் வெளிப்படையான அர்த்தப்படுத்துதலை அடிப்படையாக வைத்தே அமைந்துள்ளது.//

வேதம் (Scripture) என்பதற்கு தமிழில் மறை என்ற பொருளுண்டு. திருக்குறளை சிலர் உலகப் பொதுமறை என்பார்கள். மறை என்றால் புனிதப் புத்தகம் என்ற அர்த்தத்திலேயே அறியப்படுகிறது. நேசகுமார், மறை என்றால் மறைபொருள் கொண்டது என்று புரிந்து கொண்டிருப்பதிலிருந்து இவருக்கு தமிழும் சரியாகத் தெரியாது என்பதை வெளிப்படுத்தியுள்ளார். இவரெல்லாம் இந்து மதத்திற்கு புதிய புதிய வியாக்கியானம் கொடுக்கும் நிலைக்கு வந்துள்ளதைப் பார்த்தால், கொஞ்ச நஞ்சம் இருக்கும் இந்துக்களையும் குழப்பாமல் விடமாட்டார் போலிருக்கிறது. ஐயோ தேவுடா!