Friday, December 29, 2006

உலக முஸ்லிம்களுக்கு புஷிடமிருந்து நற்செய்தி!

உலக முஸ்லிம்கள் இறைதூதர் இப்ராகீம்(அலை) அவர்களின் தியாகத்தை நினைவு கூர்ந்து மகிழும் தியாகத் திருநாளான இன்று காலை சுமார் 6 6மணியளவில், இறைவனால் வழங்கப்பட்ட அதிகாரத்தை தன் ஆட்சி காலத்தின் போது துர்பிரயோகம் செய்து தன்னை எதிர்த்தவர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய சதாம் ஹுசைன் உலக சட்டாம்பிள்ளை ஜார்ஜ் புஷின் ஈராக் பொம்மை அரசால் தூக்கிலிடப்பட்டார்.

எவ்வித நடுநிலையான விசாரணையும் இன்றி நடைபெற்ற வழக்கில் கூறப்பட்ட அநியாயமான தீர்ப்பை பல்வேறு உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி அவசரகோலத்தில் நிறைவேற்றியிருக்கின்றனர்.

சதாம் செய்த குற்றம் அவரின் ஆட்சி காலத்தில் அவரை வஞ்சகமாக கொலை செய்ய முயன்ற குர்து இன மக்களில் நூற்று சொச்சம் பேரை அநியாயமாக கொலை செய்ததாகும். ஓர் ஆட்சியாளனுக்கு எதிராக அவனை கொலை செய்ய முயல்பவர்களை அந்நாட்டு சட்டம் கடுமையாக தண்டிக்கும். இது அனைவரும் அறிந்ததாகும். எனினும் அவரின் ஆட்சி காலத்தில் நடந்த அந்த சம்பவத்திற்கு, இன்று தன்னை எதிர்க்கும் அனைவரையும் எவ்வித இரக்கமும் இன்றி அநியாயமாக கொன்று குவித்து நரமாமிசம் சாப்பிட்டு வரும் காட்டுமிராண்டி ஜார்ஜ் புஷ் நீதி வழங்குகிறாராம்.

சரி. இவ்விஷயத்தில் நீதி, நியாயம் பற்றி இனி பேசி ஒன்றும் நடக்கப்போவதில்லை. "நடப்பது நடந்தே தீரும்". அது நடந்தாகி விட்டது. இங்கு சதாமுக்கு நிறைவேற்றப்பட்ட தண்டனையை குறித்து கூற ஆயிரம் விஷயங்கள் உள்ளன. இருப்பினும் முடிந்த அந்த காரியத்தைக் குறித்து என்ன கூற?(இதனைத் தானே இருபத்தொன்றாம் நூற்றாண்டின் அடிமட்ட முட்டாள் ஜார்ஜ் புஷ் முஸ்லிம் சமூகத்திடமிருந்து எதிர்பார்த்தான்).

தன்னை உலகிற்கு நீதி வழங்கும் நியாயவானாக நினைத்துக் கொண்டு சதாமை மட்டுமல்ல, அநியாயம் இழைக்கும் எவருக்கும் புஷ் பாடம் புகட்டட்டும். ஆனால் சதாமை தூக்கிலேற்ற வேறு தினங்களே இந்த காட்டுமிராண்டிக்கு கிடைக்கவில்லையா? உலக முஸ்லிம்கள் தங்களின் அனைத்து விதமான கஷ்ட, நஷ்டங்களையும், கவலைகளையும் மறந்து மகிழ்ச்சியுடன் இருக்கும் இன்றைய தினமா அதற்கு கிடைத்தது? அதுவும் இன்றைய தின சிறப்பான தியாகத் திருநாள் தொழுகை நடைபெறும் அச்சமயம்?

இதன் மூலமாக புஷ் முஸ்லிம் உலகிற்கு கூற வரும் செய்தி என்ன? தனது மனதில் எவ்வளவு வக்கிரமும், துவேச எண்ணமும் ஊறிப்போயிருந்தால் இந்த ஜடம் இம்மாபாதகச் செயலுக்கு இத்தினத்தை அதுவும் அத்தொழுகை நேரத்தை தேர்ந்தெடுத்திருக்கும்?

சதாமினால் முஸ்லிம்களிலேயே ஒரு கூட்டம் மக்கள் மிகுந்த கொடுமைகளுக்கு உள்ளானார்கள் எனபது உண்மை தான். அதற்காக சதாமுக்கு இழைக்கப்பட்டிருக்கும் இக்கொடுமையை படைத்த இறைவனுக்கு மட்டுமே பயந்து தலைவணங்கும் எந்த ஒரு முஸ்லிமும் சகித்துக் கொள்ள மாட்டான். மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டிய இந்த தியாகத்திருநாளில் தொழுவதற்கு கூட அனுமதிக்காமல் சதாமை தூக்கிலேற்றி தனது வன்மத்தை தீர்த்துக் கொண்ட பிசாசு(வார்த்தை உபயம்: வெனிசுலா அதிபர் ஹ்யூகோ ஷாவேஸ்), அத்தோடு உலகில் தன் பின்னால் இருந்த கொஞ்ச நஞ்ச மக்களின் மதிப்பையும் குழி தோண்டி புதைத்துக் கொண்டது. இதனைத் தான், தன் தலையில் தானே மண்ணை அள்ளிப்போடுவது என்பர்.

இன்று உலக முஸ்லிம்களின் மகிழ்ச்சியில் மண்ணை அள்ளி வீசிய புஷ் என்றும் தன் கையில் அதிகாரம் இருக்கும் எனக் கனா காண வேண்டாம்.

அன்று அதிகாரத்தில் இருந்த சதாம் தன்னை எதிர்த்தவர்களுக்கு எதிராக அதிகாரத்தை துர்பிரயோகம் செய்ததற்கு தண்டனை இதுவென்றால்.....,

இன்று அதிகாரத்தில் இருந்து கொண்டு, தான் வளர்த்தி விட்ட பின்லாடன் தனக்கு எதிராக மாறிய போது, அந்த தனி மனிதனை பிடிக்கிறேன் என்ற பெயரைக் கூறிக் கொண்டு, ஆப்கானில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களை கொன்று குவித்ததற்கும், அதே போன்று ஒருகாலத்தில் தன் செல்லப்பிள்ளையாக இருந்த சதாம் பின்னர் தனக்கு தலைவலியாக மாறியவுடன், சதாமை ஆட்சியிலிருந்து அகற்றுகிறேன் என்ற பெயரைக் கூறிக்கொண்டு இன்றளவும் லட்சக்கணக்கில் விலை மதிப்பிலா மனித உயிர்களை ஈராக்கில் கொன்றொழித்துக் கொண்டிருப்பதற்கும் நாளை ஒருவன் நியாயம் தீர்க்க நிச்சயம் வருவான். காட்டுமிராண்டி பிசாசு புஷ் தன்னை தயார் படுத்திக் கொள்ளட்டும்.

அன்றைய அந்த நியாயம் தீர்ப்பு மிகக்கடுமையானதாக இருக்கும். இன்று சதாமின் உயிர் அதிக வேதனையின்றி பறிக்கப்பட்டது போல் அன்றைய நீதித் தீர்ப்பு இருக்காது. அந்த தீர்ப்பிற்குரிய தண்டனை முடிவுறாததாக இருக்கும். அப்படிப்பட்ட தனக்கு எதிரான அந்த விசாரணை களத்திற்கு நரமாமிசம் உண்ணும் மனித உருவில் உள்ள காட்டுமிராண்டி கொள்ளிவாய் பிசாசு புஷ் தன்னை தயார்படுத்திக் கொள்ளட்டும்.

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்;

வாளெடுத்தவன் வாளால் மடிவான்;

அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்;

முஸ்லிம்களின் தியாகத் திருநாளில் ஒரு முஸ்லிமை தூக்கிலேற்றி உலக முஸ்லிம்களின் மகிழ்ச்சியில் மண்ணை அள்ளிவீசலாம் எனக் கனாகண்ட, உலகிற்கு மிகப்பெரும் சாபக்கேடாக வந்து வாய்த்திருக்கும் அடிமுட்டாள் புஷிற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

நம்மை பொறுத்தவரை சதாமைப் போன்ற பாவ ஆத்மாக்களையும் தியாகச் சீலர்களாக மக்கள் மனதில் என்றென்றும் இடம்பெற வைக்க புஷை போன்ற நவநாகரீக ஷைத்தான்கள் அவசியமே. நடத்தட்டும் புஷ் தனது கோமாளித்தனங்களை;

Tuesday, December 26, 2006

எது பத்திரிக்கை தர்மம்?

"பத்திரிக்கை தர்மம்" அப்படீன்னு அடிக்கடி ஒரு வார்த்தையை கேள்விப்பட்டிருக்கிறோம். யாருக்காவது அதன் அர்த்தம் என்ன என்று தெரியுமா?

தெரியாதவர்களுக்கு தெரியாததை தெரியாமலே இருக்க தெரியாத்தனமாக தமிழ்நாட்டு மக்களுக்கு மிகப்பெரும் தலைவேதனையாக வந்து வாய்த்த தெரியாத்தனமான வந்தேறி பார்ப்பன தமிழ்நாட்டு பத்திரிக்கைகளே அதனை அடிக்கடி தெரியப்படுத்தி விடுகின்றன.

இனி "பத்திரிக்கை தர்மம்" அப்படீன்னா என்ன? என்று தலையைப் பிய்ப்பவர்களுக்கு வந்தேறி பார்ப்பன ஏடு தினமணியின் இன்றைய நடுநிலையான செய்தியிலிருந்து ஒரு உதாரணம்:

3 ஹிந்து வியாபாரிகள் பாகிஸ்தானில் கடத்தல்

இஸ்லாமாபாத், டிச. 24: பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாநிலத்தில் 3 ஹிந்து வியாபாரிகள் உள்பட 7 பேரை, ஆயுதம் ஏந்தியவர்கள் கடத்திச் சென்றனர்.

பலுசிஸ்தான் மாநிலத்தில் உள்ள அப்துல்காதிர் ஷா என்ற கிராமத்தில் ஆயுதங்களுடன் வந்த கும்பல் ஒன்று காரில் வந்த குர்ரம் ஹயாத், ரியாஸ் அகமது, பப்பு கான், அப்துல் ரஷீத் என்ற 4 பேரை, துப்பாக்கி முனையில் மிரட்டி கடத்திச் சென்றது. ஜபாராபாத் மாவட்டத்தில் இச் சம்பவம் நடந்தது.

பலுசிஸ்தானின் நெüதால் என்ற இடத்தில் ரத்தன் குமார், நரேஷ் குமார், சுநீல் குமார் என்ற வியாபாரிகளை ஆயுதம் ஏந்திய கும்பல் வழிமறித்து கடத்திச் சென்றது. இவர்கள் சிந்து மாநிலத்திலிருந்து வந்து கொண்டிருந்தனர்.


யப்பப்பா இதுவல்லவோ "பத்திரிக்கை தர்மம்"! உடம்பு அப்படியே புல்லரிக்கிறது போங்கள்.

Saturday, December 23, 2006

சரி சரி கொஞ்சம் சிரிச்சுக்கோங்க!

என்ன செய்வது? இதுதான் இன்றைய இந்தியா. அதாவது வந்தேறி ஹிந்துத்துவ பார்ப்பன வெறியர்களுக்கு மட்டும் சொந்தமான இந்தியா.

தேவைக்கு மட்டும் "இந்து"வை துணைக்கழைத்துக் கொள்வார்கள்.

"யார் இந்து?" எனக் கேள்வி எழுப்பினால் ஓடி ஒழிந்தும் கொள்வார்கள்.

வரலாற்றைப் புரட்டி எழுதுவதில் சமர்த்தர்களான இந்த சங்க்பரிவார கில்லாடிகள், டிசம்பர்-6 எங்களுக்கும் வருத்தமளித்த நாள் தான் என்று ஓட்டுக்காக நாளை அடிவருட வருவார்கள். எனவே ஆதாரத்திற்காக நீங்களும் இதனை சேமித்து வைத்துக் கொள்ளுங்கள்.

Tuesday, December 5, 2006

டிச-6 நம்பிக்கையின் தினம்!

"இருக்க இடம் கொடுத்தால் படுக்க இடம் கேட்பார்கள்" என்று கேட்டிருக்கிறோம். "நிற்க இடம் கொடுத்தால் அந்த இடத்தையே சுருட்டிக் கொள்வார்கள்" என்பதை கேள்விப்பட்டுள்ளீர்களா?

அது தான் வந்தாரை வாழ வைக்கும் மண்ணான நம் தாய் நாட்டில் நடந்தது. சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன் கைபர் போலன் கணவாய் வழியாக முதன் முதலாக இந்தியாவுக்குள் ஒதுங்கிக் கொள்ள இடம் தேடி ஆரிய நாடோடிகள் வந்தனர். அவர்களைத் தொடர்ந்து நாடுபிடிக்கும் வெறியுடன் முகலாயர்கள் இந்தியாவிற்குள் வந்தனர். தொடர்ந்து வியாபாரம் செய்ய என்று கூறிக் கொண்டு பரங்கியர்களும், ஆங்கிலேயர்களும் இந்நாட்டிற்குள் வந்தனர்.

இந்த மூன்று கூட்டத்தில் முதலில் வந்த ஆரிய கூட்டம் நம் மூதாதையர்களின் அறியாமையையும் வெகுளித்தனத்தையும் பயன்படுத்திக் கொண்டு அந்நேரம் இந்திய பகுதிகளை அரசாண்டுக் கொண்டிருந்த அரசர்களுக்கு அடிவருடி பின்னர் அவர்களுக்கு மேலும் மேலும் அரச ஆசையை ஊட்டி முழுமையாக இந்தியாவை தங்கள் கீழ் கொண்டு வந்து ஆடாமல் அசையாமல் உண்டு அனுபவித்துக் கொண்டு இருந்தனர்.

அதற்காக அவாள்கள் வடிவமைத்த திட்டம் தான் "மனு தர்மத்தின்படியான வர்ணபாகுபாடு".

மற்றவர்களை ஒடுக்குவதை தட்டிக்கேட்க சக்தியுடைய, கையில் ஆயுதம் எடுத்து அடிக்கத்தெரிந்த அரசபரம்பரையினரை தங்களுக்கு தொட்டு அடுத்துள்ளவர்கள்(சத்தியரியர்கள்) எனக் கூறி லாவகமாக அமுக்கி வைத்துக் (எலும்புத்துண்டை வீசியெறிந்து)கொண்டு அழகாக நிற்க இடம் கொடுத்த இடத்தை முழுமையாக சுருட்டி எடுத்துக் கொண்டனர்.

தட்டிக் கேட்க யாருமின்றி, அரசனே ஆனாலும் பிராமணனுக்கு வணங்கி வழிபட வேண்டும் என வகுத்து தனிக்காட்டு ராஜாவாக, அரசாள்வது வேறு ஒருவனாக இருந்தாலும் முழு அதிகாரமும் தன் கையில் வைத்துக் கொண்டு(நமது முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் முதல்வராக இருந்த காலத்தை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். தன் இனம் முன்னர் செய்து வந்ததை அழகாக செயல் ரீதியில் அப்பொழுது நமது செல்வி காட்டித்தந்தார்.) இறுமாப்புடன் வலம் வந்த ஆரிய வந்தேறிகளின் வாழ்வில் இடி விழுந்தது அடுத்து வந்த முகலாயர்களின் வருகை.

என்ன தான் நாடு பிடிக்கும் வெறியில் இந்தியாவுக்குள் வந்திருந்தாலும் இஸ்லாம் கொடுத்த சில பண்புகள் முகலாயர்களின் செயல்களில் வெளிப்பட்டதால் அதுவரை எவ்வித உடல் உழைப்பும் இன்றி ஆண்டு அனுபவித்துக் கொண்டு இருந்த வந்தேறி ஆரியர்களின் வாழ்வுக்கு அவர்களின் வருகை மிகப்பெரும் இடியாக இறங்கியது.

முகலாயர்களின் சமத்துவம், யாருக்கும் தலை வணங்காமை முக்கியமாக பாப்பானுக்கு கும்புடு போடாமை போன்ற குணங்கள் அதுவரை "அவை புரோகிதர்" என்றிருந்த உடல் உழைப்பில்லா சாப்பாட்டுராமன் பதவியை இல்லாமல் ஆக்கியது. இனி பிழைப்புக்கு என்ன வழி என்று அங்கலாய்ந்து கொண்டிருந்த முதல் வந்தேறிகளுக்கு அதிர்ஷ்டம் ஆங்கிலேயனின் வழி வந்தது.

தங்களது பரம்பரை குணமான அதே காட்டியும் கூட்டியும் கொடுக்கும் குணத்தை முகலாயர்களுக்கு எதிராக ஆங்கிலேயர்களுக்கு செய்து முகலாயர்களை விரட்டி விட்டு வியாபாரத்திற்காக வந்தவனை அரியணையில் ஏற்றினர் இந்த முதல் வந்தேறிகள். அதற்கு விசுவாசமாக இம்மண்ணை விட்டு செல்லும் வரை ஆங்கில ஏகாதிபத்தியவாதிகள் முதல் வந்தேறிகளுக்கு எலும்புத் துண்டுகளை வாரி வீசினர்.

அப்பொழுது கிடைத்த அனைத்து சௌகரியங்களையும் நன்றாக பயன்படுத்தி எல்லா துறைகளிலும் தங்கள் இருப்பை பலப்படுத்திக் கொண்டனர் இந்த வந்தேறி பார்ப்பனர்கள். தாங்கள் பிறந்த இந்த இந்திய மண்ணின் மீது ஆழ்ந்த பற்று கொண்ட இந்நாட்டின் பழங்குடிகள் ஆங்கில ஏகாதிபத்தியவாதிகளுக்கு எதிராக ஆர்த்தெழுந்து அவர்களை வந்த வழியே விரட்டினர்.

எனினும் இந்நாட்டில் வந்தேறிய முதல் வந்தேறிக் கூட்டத்தை மட்டும் ஏனோ அவர்கள் கவனிக்கவே இல்லை. இந்நாட்டின் அனைத்து வளர்ச்சிகளுக்கும் முட்டுக்கட்டையாக இருப்பது இந்த முதல் வந்தேறிகள் தான் என்பதை இன்னும் உணராததாலோ என்னமோ?

ஆங்கிலேயன் இருக்கும் வரை அவனுக்கு அடிவருடி அனைத்து சுகங்களையும் அனுபவித்த இந்த வந்தேறிக் கூட்டம் அவனை இந்நாட்டு மைந்தர்கள் தங்களது இரத்தம் சிந்தி அடித்து விரட்டிய பின் காலியான அந்த இருப்பிடத்தை நிரப்ப - தங்களது பழைய அதே மனுதர்மத்தின் படியான வர்ணபாகுபாட்டின் அடிப்படையிலான ஆட்சியை ஏற்படுத்த அனைத்து விதமான செயல்களையும் செய்ய ஆரம்பித்தனர்.

இந்திய சுதந்திரத்திற்குப் பின் இனி ஒரு அந்நியனையும் இந்நாட்டிற்குள் அனுமதியோம் என்ற ஒருமித்த சிந்தையுடன் தெளிவாக இருந்த இந்நாட்டு மைந்தர்கள், தங்களுக்குள்ளேயே ஏற்கெனவே உள்ளே நிற்க இடம் கொடுத்த ஒரு நரிக் கூட்டம் அப்படியே இருப்பதை மறந்து விட்டனர்.

அதன் பிரதிபலன் 1992 டிசம்பர் 6 முதல் ஆரம்பமானது. வந்தேறிக் கூட்டப்பரம்பரையான இரத்த வெறிப்பிடித்த அத்வானி நடத்திய ரத்த யாத்திரையின் பிரதிபலன் ஏற்கெனவே நாடெங்கும் நிகழ்ந்து கொண்டிருக்கும் தருணத்தில் இந்திய வரலாற்றில் மிகப்பெரும் கறை இந்த வந்தேறிக் கூட்டத்தின் தூண்டுதலால் நிகழ்த்தப்பட்டது.
* 400 ஆண்டுகால பழமை வாய்ந்த இந்தியாவின் வரலாற்றுச் சின்னம்.
* வந்தேறிகளால் அடக்கி ஒடுக்கப்பட்ட நிலையிலிருந்து கரையேற சமத்துவமும் சமூகத்தில் மரியாதையையும் பெற்றுத் தந்த இஸ்லாத்திற்கு மதம் மாறிய இந்நாட்டு மைந்தர்களின் வழிபாட்டு ஆலயம்.
* 400 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த இந்நாட்டு மைந்தர்களின் வியர்வையில் உருவான அரிய பொக்கிஷம்.
இந்நாட்டில் முதலில் வந்தேறிய ஆரிய பார்ப்பன வர்க்கத்தின் அதிகார போதைக்கு பலியானது. வரலாற்றில் அழியாத கறையை ஏற்படுத்திய இச்சம்பவத்திற்குப் பிறகு அதுவரை ஒரு தாய் மக்களாக வாழ்ந்து வந்த இந்நாட்டு மைந்தர்களுக்கிடையில் பிளவு வலுவடைந்தது. அதன் பின் நாட்டில் எங்கு நோக்கிலும் குண்டு வெடிப்புகளும், கலவரங்களும், கொலைகளும், கொள்ளைகளும் பரவலாக தினக்காட்சிகளாக அரங்கேறி வருகின்றன.

இன்றைய இந்தியாவில் பாதுகாப்புக்காக செலவளிக்கப்படும் தொகையில் 100ல் ஒரு 10 சதவீதத்தை நாட்டு வளர்ச்சிக்காக மாற்றி வைத்தாலே போதுமானது. அடுத்த 10 வருடங்களில் நாட்டில் வறுமையையும், இல்லாமையையும் இல்லாமலொழிக்கலாம். நாடு முன்னேற இச்செயலை செயல்படுத்த முடியாமல் இருக்க வேண்டிய இன்றைய நிலைக்கு காரணம் என்ன?

ஒரே காரணம். இந்நாட்டில் வந்தேறிய அந்நியன் தான்.

மூன்று வந்தேறிகளில் இருவர் அடித்து விரட்டப்பட்டாயிற்று. மீதியுள்ள இந்த ஒரு வந்தேறி காலம் காலமாக செய்து வரும் நரித்தனத்தால் தான் நாடு முன்னேறுவதற்கு பதிலாக பின்னேறிக் கொண்டிருக்கிறது.

அன்று ஒரு டிசம்பர் 6 ல் இந்த முதல் வந்தேறி ஆரம்பித்து வைத்த காட்டுமிராண்டித்தனம் இன்றும் இந்நாட்டு மக்களிடையே அழியா நெருப்பாக பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. இந்த நெருப்பு அணையாமல் அப்படியே தொடர வைக்க எண்ணையையும் இந்த வந்தேறிக் கூட்டம் விட்டுக் கொண்டே இருக்கிறது.

இடிக்கப்பட்ட தங்கள் வழிபாட்டு தலம் திரும்ப கட்டித் தரப்பட வேண்டும் என விரும்பும் இந்நாட்டு மைந்தர்களின் கனவையும், 400 ஆண்டு பழமையான வரலாற்றுச் சின்னத்தை திரும்ப எழுப்பி வரலாற்றில் படிந்த கறையை அகற்ற விரும்பும் சமூக ஆர்வலர்களுக்கும், தங்கள் சகோதரர்களின் இறையாலயத்தை திரும்பக் கொடுத்து பழைய இணக்கத்தை தங்களிடையே கொண்டு வரத்துடிக்கும் இந்நாட்டு மைந்தர்களின் விருப்பத்தையும் நிறைவேற விடாமல் அப்பிரச்சினையை அப்படியே வைத்து அரசியல் ஆதாயம் அடையத்துடிக்கும் இந்த வந்தேறிக் கூட்டத்தின் நரிக்குணத்திற்கு முடிவெப்போது?

ஒரு கவிதை நினைவிற்கு வருகிறது.

பாபர் மசூதியும்,

நாங்களும் ஒன்றுதான்!

இடிக்க மட்டுமே வருகிறார்கள்!!

கட்டுவதற்குக்குத்தான் யாருமில்லை!!!

நன்றி: முதிர்கன்னி.


இந்நாட்டு மைந்தர்களின் மனதில் வடியும் இரத்தத்தை அழகாக வார்த்தைகளில் தோய்த்தெடுத்திருக்கும் இவ்வரிகள் பொய்க்க வேண்டும். திரும்பவும் தரைமட்டமாக்கப்பட்ட இறையாலயம் திரும்ப எழுப்பப்பட வேண்டும்.

அதன் மூலம் இந்நாட்டு மக்களிடையே பிளவு ஏற்படுத்தி அதில் குளிர்காய நினைக்கும் வந்தேறி பார்ப்பனர்களின் கனவில் மண் விழ வேண்டும். நிச்சயம் மண் விழும். அந்நாளுக்காக காத்திருப்போம்.

Monday, December 4, 2006

தலித்கள் இந்துக்கள் அல்ல - தினமலர் அறிவிப்பு!

கைபர் போலன் கணவாய் வழி ஆரிய பார்ப்பனஜீவிகள் என்று இந்திய திருநாட்டில் நுழைந்தனரோ? அன்று தொட்டு இந்திய ஒருமைப்பாட்டுக்கு தீராத தலைவலியாக இருக்கும் ஒரே விஷயம் தீண்டாமையாகும். தங்களுடைய நிலை நிற்பிற்காக ஒரே மனித குலத்தில் பிறந்த இந்நாட்டின் மைந்தர்களை சத்திரியன், வைணவன், சூத்திரன் என பாகுபடுத்தி தன்னை பிரம்மனின்/சிவனின் தலையில் இருந்து பிறந்தவனாக கூறி, வர்ண பாகுபாட்டை விதைத்தான் இந்த வந்தேறி.

மக்கள் தொடர்பு சாதனங்கள் பிரபலமடைந்திராத அக்காலகட்டத்தில் மத்திய ஆசியாவிலிருந்து ஏன் இவர்களை விரட்டியடித்தனர் என்பதை முழுமையாக அறிந்து கொள்ளாமல் ஏதோ தங்களுக்கும் சில அனுகூலங்கள் கிடைக்கிறது என்பதற்காக கிடைத்ததை அனுபவித்துக் கொண்டு சிலர் இந்த வந்தேறி ஜென்மங்களுக்கு காவடி தூக்கினர்.

அதன் பலன் இன்று இந்திய நாட்டின் சொந்தக்காரர்களான இந்நாட்டு குடிமகன்கள் அனுபவிக்கின்றனர். குடியிருக்க ஒரு இருப்பிடம் கட்டுவதிலிருந்து மன அமைதிக்கு கண்மூடி சற்று நேரம் நிம்மதியாக தியானிக்கும் ஆலயங்கள் வரை இந்த வந்தேறி காட்டுமிராண்டிகளின் அநியாயங்கள் சொல்லி மாளாது.
அன்று இந்த அடித்து விரட்டப்பட்ட நாடோடிகளுக்கு இந்தியாவில் காவடி தூக்கிய சில துரோகிகள் இன்றும் சமூகத்தில் பரவலாக காணப்படுகின்றனர். இவர்களின் ஒரே பணி வந்தேறி பார்ப்பனர்களுக்கு ஆதரவாக செயல்படுவது மட்டுமே.

அவைகள் வீசி எறியும் சில எலும்புத்துண்டுகளுக்கு நாக்கை தொங்கவிட்டு அலையும் இந்த இழிப்பிறவிகள், வந்தேறிய இந்த பார்ப்பன வர்க்கத்திற்கு ஆதரவாக செயல்படுவது தனது சொந்தம் சகோதரனுக்கு மிகப்பெரும் கேடு விளைவிக்கும் என்பதை ஏனோ சிந்தித்துப் பார்ப்பதே இல்லை.

உலகம் எவ்வளவு தான் வளர்ச்சியை எட்டிப் பிடித்தாலும் இந்தியா மட்டும் அத்திசை நோக்கிப்பயணிப்பதை ஒருக்காலும் நாங்கள் அனுமதிக்கவே மாட்டோம் என கங்கணம் கட்டியே இக்கூட்டம் செயல்படுகிறது.
அன்று மக்கள் தொடர்பு சாதனம் இன்று போல் இல்லாததால் இந்த வந்தேறிகளின் அழுகிப்போன பின்புலங்கள் இந்நாட்டு மைந்தர்களுக்கு தெரிந்திருக்கவில்லை. மக்களை மடையர்களாக வைத்திருப்பதில் மக்கள் தொடர்பு சாதனங்கள் பெரும்பங்காற்றும் என்பதை புரிந்து கொண்ட இந்த வந்தேறி நரிக்கூட்டம் மக்கள் தொடர்பு சாதனங்களின் யுகமான இவ்விஞ்ஞான யுகத்தில் ஆங்காங்கே தங்களுக்கு சிந்து பாட இவற்றில் சிலவற்றையும் உருவாக்கி வைத்துள்ளது.

அவ்வாறான, இந்த வந்தேறி பார்ப்பன ஜென்மங்களுக்கு காவடி தூக்கும் மக்கள் தொடர்பு சாதனங்களில் தமிழக அளவில் முதல் வரிசையில் வருவது தினமலர் பத்திரிக்கையாகும். தமிழக அளவில் மக்களை பிரித்து வைப்பதிலும், சமூகத்தில் குழப்பதை உருவாக்குவதிலும் முன்பந்தியில் நிற்கும் இப்பத்திரிக்கை, வந்தேறி பார்ப்பனர்களுக்கு ஆதரவாக எல்லா விதமான வழிகளிலும் உதவி வருகிறது.
ஒரு காலத்தில் இந்நாட்டு மக்களை பிரித்தாண்டு(இவைகளின் இந்த பிரித்தாழும் சூழ்ச்சியை பின்பற்றியே ஆங்கிலேய வந்தேறிகளும் இந்நாட்டு மைந்தர்களை பிரித்தாண்டார்கள் என நினைக்கிறேன்) எவ்வித உடலுழைப்பும் இன்றி தங்கள் உடல்களை வளர்த்து வந்த இந்த பார்ப்பன வந்தேறிகளின் வாழ்க்கையில் அதே மத்திய ஆசியாவில் இருந்து வந்த இஸ்லாம், கிறிஸ்தவம், கம்யூனிஸ கொள்கைகள் சாவு மணியடித்தன.

கூட்டம் கூட்டமாக இக்கொள்கைகளுக்குத் தாவிய, அடக்கி ஒடுக்கப்பட்ட இந்நாட்டு மைந்தர்கள் அதன் பின்னர் இந்த வந்தேறிகளின் முன் தலை நிமிர்ந்து வாழத்தொடங்கினர். சமத்துவத்தைக் கொண்டு தனது தலையில் உள்ள கிரீடத்தை இக்கொள்கைகள் எடுத்து மாற்றும் என்பதை நன்றாக உணர்ந்து கொண்ட இந்த நரிக்கூட்டம் தங்கள் தலை மீதுள்ள கிரீடத்தை தக்கவைக்க நவீன யுகத்தில் "இந்து" என்ற அஸ்திரத்தைக் கொண்டு காலியாகும் கூடாரத்தை திரும்ப நிறைக்க முயன்றனர்.

அதன் பின் இந்தியாவில் எங்கு நோக்கினும் "நாம் இந்துக்கள்" என்ற கூக்குரல் ஓங்கி ஒலிக்கத்தொடங்கியது. இந்து ஒருங்கிணைப்புக்கு எதிர்பார்த்த பிரதிபலனை "பாபர் மசூதி", "குஜராத்", "கோயம்புத்தூர்" என அமோக விளைச்சலையும் இப்பார்ப்பன வந்தேறிக் கூட்டம் கொய்யத் தொடங்கியது.

இதற்காக இதே பார்ப்பன அடிவருடி பத்திரிக்கையும் பலவாறாக செய்திகளை திரித்தும், தேய்த்தும் கொடுத்தன. தேவைக்கு வந்தேறி கொள்கைகளான இஸ்லாம், கிறிஸ்தவத்தை பின்பற்றுபவர்கள் அல்லாத மற்ற எல்லோரும் "இந்துக்களே" என கூக்குரலிடவும் தயங்கவில்லை.

எத்தனை நாள் தான் உண்மை மறைந்திருக்கும்? நிச்சயமாக சத்தியம் ஒரு நாள் வெளிப்பட்டே தீரும்.

மிகவும் கஷ்டப்பட்டு இந்நாட்டின் சொந்தக்காரர்களான ஒடுக்கப்பட்ட எம்சகோதரர்கள் தலித்களை "இந்துக்கள்" என்ற வரம்பிற்குள் கொண்டு வர முயன்றாலும், "எங்கள் மனதில் நிச்சயமாக அவ்வாறு ஒன்றும் இல்லை" என்று அழுத்தம் திருத்தமாக பார்ப்பன அடிவருடி குப்பை தினமலர் வெளிப்படுத்திவிட்டது.

சத்தியம் வந்தது; அசத்தியம் அழிந்தது; நிச்சயமாக அசத்தியம் அழிந்தே தீரும்.

புவனேஸ்வர்: மேல் சாதி இந்துக்கள் தடை விதித்ததால், சொந்தமாக கோவிலை கட்டினர் தலித்துகள். அதில் பிராமண பூசாரியை அர்ச்சகராக நியமித்துள்ளனர். இந்துக்கள் எல்லாரையும் அனுமதித்து வருகின்றனர்.

மற்ற மாநிலங்களை விட ஒரிசா மாநிலத்தில் தலித்துகளை மேல் சாதி இந்துக்கள், கோவில்களில் நுழைய விடாமல் தடுப்பது அதிகமாக உள்ளது. பல ஆண்டு வழக்கமாகவே, ஒரிசா மாநிலத்தில் மட்டும் எந்த மேல் சாதி இந்துக்கள் கோவில்களிலும், தலித் மக்கள் அனுமதிக்கப்பட்டதே இல்லை.

புவனேஸ்வரில் இருந்து 90 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கேந்த்ரபாடா பகுதியில் உள்ள பிரபல கோவில் ஜகந்நாதர் கோவில். அங்கு தலித்துகள் "நாங்கள் நுழைந்தே தீருவோம்' என்று சபதம் எடுத்துள்ளனர். ஆனால், அவர்களை அனுமதிக்க இந்துக்கள் மறுத்துவிட்டனர்.

இதை எதிர்த்து தலித்துகள் சார்பில் கோர்ட்டில் மனு செய்யப்பட்டது. அதற்கு "நாங்கள் 18ம் நூற்றாண்டில் இருந்து இந்த நடைமுறையை கடைபிடித்து வருகிறோம். அதை தகர்க்கக் கூடாது' என்று இந்துக்கள் பதில் அளித்தனர். இந்நிலையில், கோவிலில் நுழைந்தே தீருவோம் என்று தயாராகிவிட்டனர் தலித் மக்கள். விரைவில் கோவிலில் நுழையத்தான் போகிறோம் என்று அவர்கள் அறிவித்ததால், கோவிலில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஏற்கனவே இது தொடர்பாக தொடர்ந்து பிரச்னைகள் இருந்து வந்ததால், மேல் சாதி இந்துக்களுக்கு பதிலடி தர, கேந்த்ரபாடா பகுதிக்கு வெளியே, சவுரிபெர்காம்பூர் என்ற பகுதியில் தலித்துகள் ஒன்று சேர்ந்து ஒரு கோவிலை கட்டினர். அந்த ஜகந்நாதர் கோவிலில், அர்ச்சகராக பிராமண சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை அமர்த்தினர். இப்போது அந்த கோவிலில் மேல் ஜாதி இந்துக்களையும் வழிபட அனுமதித்து வருகின்றனர் தலித்துகள். அந்த கோவிலில் தலித்துகள் அதிகம் வருவதில்லை என்பதும் அவர்கள் ஆதங்கம்.

மேற்கண்ட தினமலரின் செய்தியில் காணப்படும் வரிகளை ஆழ்ந்து படித்துப்பாருங்கள். தலித்களை இந்துக்கள் என்ற சொல்லிலிருந்து தனிமைப்படுத்தி கூறும் பார்ப்பன பத்திரிக்கை தினமலர் என்ன கூற வருகிறது என்பது தெளிவாக தெரிகிறதா?


பார்ப்பன அடிவருடி தினமலர், "பார்ப்பன வந்தேறி நரிக்கூட்டத்தால் அடக்கி ஒடுக்கப்பட்ட இந்நாட்டு மைந்தர்களான தலித்கள் இந்துக்கள் அல்ல" என்பதை ஒத்துக்கொண்டமைக்கு நன்றி.

இதற்கு மேலும், தங்கள் நிலைநிற்பிற்காக பார்ப்பனர் அல்லாத மற்ற அனைத்து பழங்குடி, தலித், அரிஜன மக்களுக்கு சூலாயுதம் வினியோகித்து அவர்களை "அசுரர்களாக" என்றென்றும் நிலைநிறுத்தவும், அவர்களை அறியாமலேயே தங்களின் எண்ணங்களை நிறைவேற்றும் அவர்களின் மனம் குளிர(மட்டும்) நாங்கள் அனைவரும் "இந்துக்கள்" தான் என கேனத்தனமாக புலம்பவும் செய்யும் வந்தேறி பார்ப்பன தொகாடியா, அத்வானி, சொக்கர்கள் இனிமேலும் "இந்து ஐக்கியம்", "தலித்களும் இந்துக்கள் தான்", "இந்து மதம் பார்ப்பனமதம் அல்ல" என்பன போன்ற உளுத்துபோன ஜல்லிகளை அடிப்பார்கள் என்று நினைக்கிறீர்கள்?.

Tuesday, November 21, 2006

பார்ப்பன சூத்திரரின் பல்லிளிக்கும் பொய்முகம் - 1

ஒரு முன் குறிப்பு:

//மற்றவற்றை இங்கே பிரசுரிப்பதும் பிரசுரிக்காததும், இறைநேசனின் எதிர்வினையைப் பொறுத்தது//

உலகின் மூன்றில் ஒரு பகுதி மக்களால் தங்களது உயிரினும் மேலாக மதிக்கப்படும் நபி முஹம்மது(ஸல்) அவர்களை அவமதிப்பதாக நினைத்துக் கொண்டு வெளியிடப்பட்ட கார்ட்டூன்களில் சிலவற்றை வெளியிட்டு, தனது குரூர மனவக்கிரத்தை வெளிப்படுத்தி தன் அரிப்பை சொறிந்து கொண்ட சூத்திரனாக வேஷமிடும் வந்தேறி பார்ப்பன பரம்பரையின் அடிவருடி நேசகுமார் தனது சமீபத்திய காறலில் வெளிப்படுத்திய வீச்சம் மிகுந்த வார்த்தைகள் தான் இவை.

வேலியில் போகும் ஓணானை.......... கதையை கேள்விப்பட்டிருப்பீர்கள். வேஷமிடும் நேசகுமார் அக்கதைக்கு மிகுந்த பொருந்தமானவர். சொறிந்து சொறிந்து கடைசியில் நேரடியாகவே இறை நேசனிடம் சொறிய வந்து விட்டார். அவரின் ஆசையை கெடுப்பானேன்.

ஆரம்பத்திலேயே சொறி மன்னர் நேசகுமாருக்கு வேண்டுகோள்:

"மற்றவற்றையும் உடனே வெளியிட்டு அரிப்பை தீர்த்துக் கொள்ளவும்."

இதன் அர்த்தம், உன்னால் முடிந்ததை நீ கவனி; என்னால் முடிந்ததை நான் கவனிக்கிறேன் என்று அர்த்தம்.

இந்திய வரலாற்றில் ஒரு பெரிய அழுக்குக் கறையை ஏற்படுத்திய வந்தேறி பார்ப்பன இரத்தவெறிப்பிடித்த கூட்டமான ஆர் எஸ் எஸின் வண்டவாளங்களையும் அதன் தேசவிரோத செயல்களையும் அறியாதார் எவருமிலர். அதனைக் குறித்து விரிவாக எழுத வேண்டும் எனப்பல நாட்களாக நினைத்திருந்தேன். சரி, இந்த கோர ஜென்மங்களைக் குறித்து எழுதுவதை விட வேறு நல்ல வேலை செய்யலாம் என பேசாமல் இருந்தேன்.

தூங்கிக் கொண்டிருந்த சிங்கத்தை தட்டி எழுப்பியது போல, மனதில் தூங்கிக் கொண்டிருந்த எண்ணத்தை அழகாக தட்டி எழுப்பி, "வாடா ராசா வா வந்து எங்களின் குரூர கோரமுகங்களை உலகிற்கு தெளிவாக வெளிச்சமிட்டு காண்பி" என நமது பார்ப்பன சூத்திரர் இறை நேசனை மாலையிட்டு ஆரத்தி எடுத்து அழைத்துள்ளார். இனியும் பேசாமல் இருந்தால் எப்படி? ஸோ(இது அந்த சோ அல்ல) இறை நேசன் ஆட்டத்திற்கு தயார்.


வந்தேறி ஆரிய பார்ப்பன அடிவருடிக் கூட்டத்தால் உருவாக்கப்பட்டு வழிநடத்தப்படும் ஆர் எஸ் எஸ் என்ற ஹிந்துத்துவ காட்டுமிராண்டி கூட்டத்தின் முதல் இலக்கு இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள். இந்த இரத்த வெறிப்பிடித்த கூட்டத்தை உருவாக்கியதே இந்தியாவில் மீண்டும் ஆரிய அடிவருடும் ஆட்சியை நிறுவத்தான். அதற்கு மிகப்பெரும் முட்டுக்கட்டையாக நிற்கும் பார்ப்பன ஜந்துக்களால் தீண்டத்தகாதவர்களாக அடக்கி ஒடுக்கப்பட்ட இந்நாட்டு மைந்தர்களான இந்தியாவின் பூர்வீகக்குடிகளுக்கு சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் கற்பித்து அவர்களை கட்டியிருந்த அடிமைத்தளைகளை உடைத்தெறிந்த இஸ்லாத்தை இந்தியாவை விட்டு அகற்ற எல்லாவிதமான உத்திகளையும் பிரயோகிக்க வேண்டும் என்பது ஆர் எஸ் எஸின் வகுக்கப்பட்ட கொள்கைகளில் ஒன்றாகும்.

இந்தியாவை விட்டு இஸ்லாத்தை அகற்ற வேண்டும் எனில்,

1. முதலில் இஸ்லாத்தின் வளர்ச்சியை கட்டுப்படுத்த வேண்டும்.
2. வளரும் இஸ்லாமியர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த வேண்டும்.
3. இஸ்லாமியர்களாக இருப்பவர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும்.

இதில் மூன்றாவது திட்டத்தை நடைமுறைப்படுத்த ஏற்படுத்தப்பட்ட ஆர் எஸ் எஸின் துணை அமைப்புக்கள்: பஜ்ரங்தள், வி எச் பி, துர்காவாஹினி போன்றவை.

இவை நாட்டில் கலவரத்தை தோற்றுவிக்க எல்லாவிதமான ஏற்பாடுகளையும் செய்யும். தேவையெனில் தன் சமூகத்தைச் சார்ந்தவர்களையே கொன்று அதனை முஸ்லிம் சமூகம் செய்ததாக திருப்பி அதன் மூலம் இன அழிப்புகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உதாரணங்கள்: சூரத், மீரட், பாகல்பூர், குஜராத், பம்பாய், கோயம்புத்தூர் போன்றவை.

இதன் மூலம் அவர்கள் எதிர்பார்க்கும் முஸ்லிம்களாக இருப்பவர்களின் எண்ணிக்கையை வெகுவாக குறைக்க முடிகிறது.
இதற்காக கலவர நேரங்களில் கிடைக்கும் சந்தர்பத்தை பயன்படுத்தி முஸ்லிம்களின் எண்ணிக்கையை குறைக்க நன்கு பயிற்றுவிக்கப்பட்ட இராணுவத்துக்கு ஒப்பான இலட்சக்கணக்கான நபர்கள் இந்த இரத்த வெறிப்பிடித்த காட்டுமிராண்டி கூட்டத்தால் உருவாக்கி விடப்பட்டுள்ளது.

ஒருபக்கம் முஸ்லிம்களின் எண்ணிக்கையை இவ்வாறு குறைக்கும் அதே நேரத்தில், முஸ்லிம் சமூகத்தில் இக்கொடுமைகளுக்கு எதிராக பொங்கி எழும் வேகம் மிகுந்த இளைஞர்களை, அவர்களை சரியாக வழிநடத்தும் தலைமையின்மையை பயன்படுத்திக் கொண்டு அவர்களிடம் இருக்கும் அநியாயத்தை தட்டிக்கேட்க வேண்டும் என்ற ஆவேசத்தை தூண்டி விட்டு இஸ்லாம் அனுமதிக்காத செயல்களை செய்யவைத்து "தீவிரவாதி" முத்திரைக் குத்த வைத்து லட்சக்கணக்கில் இளைஞர்களை சிறையிலடைத்து இஸ்லாமிய சமூகத்தின் வளர்ச்சியை தடுக்கின்றனர்.

என்னதான் ஆயுதம் மூலமாக அடக்கி ஒதுக்கி இன அழிப்பை நடத்தினாலும் ஒரு பக்கம் குறையும் இஸ்லாமிய சமூகத்தின் வளர்ச்சி மறுபக்கம் புதிதாக இஸ்லாத்தில் இணைபவர்களின் எண்ணிக்கையைக் கொண்டு சமன் ஆனது.

புதிதாக இஸ்லாத்தில் இணைபவர்களை தடுத்தால் அன்றி இஸ்லாத்தை இந்தியாவை விட்டு அகற்ற முடியாது என்பதை நன்குணர்ந்து கொண்ட இந்த ஃபாசிச இரத்த வெறிப்பிடித்த கும்பல் இஸ்லாத்தில் இணைபவர்களை குறைப்பதற்கும் தடுப்பதற்குமான எல்லா விதமான திட்டங்களையும் வகுக்க ஆரம்பித்தது.

இஸ்லாத்தில் புதிதாக இணைபவர்கள் - எதனால் இவ்வாறு கூட்டம் கூட்டமாக பார்ப்பனர்களால் அடக்கி ஒடுக்கப்பட்ட மக்கள் இஸ்லாத்தில் இணைகின்றனர் என்பதை ஆராய்ந்த இந்த இரத்த வெறிப்பிடித்த பார்ப்பன கூட்டத்திற்கு கடைசியில் கிடைத்த பதில் தான் இஸ்லாத்தின் அடித்தூணான இவ்வுலகை படைத்து பரிபாலித்து வரும் இறைவனின் வார்த்தைகளான "திருக்குர்ஆன்".
மேற்கண்ட பத்தியில் வரும் அந்த வாசகத்தில் உறுதியாக நம்பிக்கைக் கொண்ட முஸ்லிம்களால் தான் கூட்டம் கூட்டமாக மற்ற மக்கள் இஸ்லாத்தினுள் நுழைகின்றனர் என்பதை நன்றாக கண்டு கொண்ட இந்த வந்தேறி பார்ப்பன கூட்டம், ஆர் எஸ் எஸின் இஸ்லாமிய எதிர்ப்பு/அழிப்பு கொள்கையை நடைமுறைப்படுத்த பல்வேறு சிறப்புத் திட்டங்களை வகுக்க ஆரம்பித்தது.

அதில் முக்கியமான திட்டங்களில் ஒன்று, முஸ்லிம்களின் "திருக்குர்ஆன் இறைவனின் வார்த்தை" என்ற எண்ணத்தில் சந்தேகத்தை தோற்றுவிப்பது. சமூகத்தில் பரவலாக திருக்குர்ஆன் இறை வேதம் தானா என்ற ஓர் சந்தேகம் எழுந்து விட்டால் பின்னர் இஸ்லாத்தின் மீதான பற்று, உறுதி முஸ்லிம்களுக்கு குறையும். முஸ்லிம்களுக்கு தங்கள் வேதத்தின் மீதான உறுதி குறையும் பொழுது முஸ்லிமல்லாத மற்ற மக்களுக்கு இஸ்லாத்தின் மீதான ஈர்ப்பு குறையும் என வந்தேறி பார்ப்பனர்கள் தங்களுக்கே உரிய அந்த நரிக் குணத்துடன் திட்டமிட்டு, திருக்குர்ஆனின் மீது சந்தேகத்தை தோற்றுவிப்பதற்காகவே ஒரு பெரிய குழுவை ஆர் எஸ் எஸில் நன்கு பயிற்றுவித்து முழு நேர ஊழியர்களாக பணியில் அமர்த்தியுள்ளது.

இவர்களின் முழு முதல் கடமை, பணி எடுத்ததற்கெல்லாம் குர்ஆனை குறை கூறுவது மட்டுமே. அதனை நபி முஹம்மது(ஸல்) அவர்களின் வார்த்தைகள், மனதில் எழுந்த எண்ணங்கள் என திரும்பத்திரும்ப கூறிக் கொண்டிருப்பது மட்டுமே இவர்களின் பணி.
இஸ்லாம் தன் மீதான விமர்சனத்தை வரவேற்கிறது. திருக்குர்ஆனே "இவ்வசனத்தை நீங்கள் ஆராய்ந்து பார்க்காமல் பின்பற்ற வேண்டாம்" என, மக்களை கண்மூடித்தனமாக பின்பற்றுவதை விட்டும் தவிர்த்து ஆராய்ந்து உண்மையை மட்டும் பின்பற்ற அழைக்கிறது.

அந்த அடிப்படையில் "அமைதியான, நளினமான, ஆரோக்கியமான விவாதத்தையும்" செய்ய குர்ஆன் முஸ்லிம்களுக்கு போதிக்கிறது. இஸ்லாத்தை தெளிவாக விளங்கிய முஸ்லிம்கள் பலர் அம்முறையிலான விவாத களங்களையும் அமைத்துக் கொண்டு நல்ல முறையில் இஸ்லாத்திற்கெதிரான விமர்சனங்களை எதிர் கொண்டும் வருகின்றனர்.

உண்மை எது என ஆராய்பவர்களுக்கு நிச்சயம் உண்மை புலப்படும். சத்தியத்தை தேடுபவர்கள் சத்தியத்தை கண்டடைவார்கள். தேடுபவனுக்கு மட்டுமே கிடைக்கும். தேடுவது மட்டுமே கிடைக்கும்.

சரி இனி விஷயத்திற்கு வருவோம்.

வந்தேறி பார்ப்பவர்கள் தங்களது நிலைநிற்பிற்கு பெரும்சவாலாக விளங்கும் சமத்துவம், சகோதரத்துவத்தை இந்தியாவிலிருந்து ஒழிக்க, தங்களது வர்ணாசிரம அடிப்படையிலான மனுவின் ஆட்சியை இந்தியாவில் நிறுவ தடைகற்களாக விளங்குபவற்றை எடுத்து மாற்றுவதற்காக உருவாக்கப்பட்ட ஆர் எஸ் எஸ்ஸால் ஊக்குவிக்கப்படும், இஸ்லாத்தின் அடிப்படையின் மீது சந்தேகத்தை விளைவிப்பதையே முழுநேரப்பணியாக கொண்ட இக்குழு இஸ்லாத்தின் மீது சேறு வாரிப் பூசுவதை எல்லா இடங்களிலும் முழு வீச்சில் நடைமுறைப்படுத்தி வருகிறது.

எதிர்காலத்தில் அனைத்துவித ஆராய்ச்சிக்கும் ஆவணங்களை தொகுப்பதில் முழுமுதல் பங்காற்றப்போகும் இணையத்திலும் தங்கள் பணியை செவ்வனே செய்வதற்காக ஒரு குழுவை முழுநேர கண்காணிப்பளர்களாக நியமித்து தங்கள் பிரச்சாரத்தை ஆவணப்படுத்தியும் வருகிறது.

இவர்களின் இப்பிரச்சராம் பொய்யானது என்பதை தகுந்த முறையில் ஆதாரங்களுடன் விவாதித்து நிரூபிக்க விரும்பும் முஸ்லிம்களை எல்லாம் அவர்கள் கண்டு கொள்வதே இல்லை. தாங்கள் குறித்த இலக்கை அடையும் ஒரே உத்வேகத்தோடு சேறு வாரி இறைப்பது மட்டுமே தற்போது தம்பணி, அதனை மட்டுமே தாம் தற்போது செய்வோம் என தொடர்ந்து தங்களின் பணி இலக்கை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது.

இதனை எவ்வாறு நேரிடுவது? விவாதிக்க தயார் இல்லாத, அல்லது இவர்கள் கூறுவது பொய் என ஆதாரத்துடன் கூறுவதை கண்டுகொள்ளாமல் தொடர்ந்து அதனை செய்து கொண்டிருப்பவர்களை எதனை வைத்து நேரிடுவது?

இதன் ஒரே வழி, இப்பொய் பிரச்சாரத்தில் ஈடுபடும் இக்குழுக்களை அவர்களின் பொய்களையும், கற்பனைகளையும், அவதூறுகளையும் கொண்டு சமூகத்தில் அடையாளப்படுத்துவது மட்டுமே. ஒரு பொய்யனிடமிருந்து வரும் வார்த்தைகளில் எவ்வளவு உண்மை இருக்கும்? பொய்யன் கூறுவதை எப்படி உண்மை என ஏற்றுக் கொள்ள இயலும் என்ற எண்ணத்தை சமூகத்தில் தோற்றுவித்தாலே போதுமானது. இதுவல்லாமல் விவாதத்திற்கு வராமல் பொய்களை அவிழ்த்து விடுவதை தொடர்பணியாகக் கொண்டு எப்படியாவது தங்கள் இலட்சியத்தை நிறைவேற்ற துடிக்கும் இந்த வந்தேறி பார்ப்பனர்களை எதிர்கொள்ள வேறு வழியேதும் இல்லை.

அந்த வகையில் தற்போது இணையத்தில் தனக்கு/தங்களுக்கு கொடுக்கப்பட்ட மேற்கண்ட பணியை செவ்வனே நிறைவேற்றுவது மட்டுமே நோக்கமாக கொண்டு தொடர்ந்து இஸ்லாத்தின் மீது அவதூறுகளை அள்ளி வீசியும், தனக்கு/தங்களுக்கு எதிராக எதிர்கணை அதே வேகத்தில் வரும் பொழுது இரத்த வெறிப்பிடித்த தங்கள் தலைவர்கள் கற்றுத்தந்து நடைமுறையில் கையாளும், "சினமூட்டி கலவரத்தை ஏற்படுத்தி அதில் குளிர் காயும்" தந்திரத்தை இணையத்திலும் நடைமுறைப் படுத்த தயாரான நேசகுமார் குழுமத்தை எதிர்கொள்ள, அதன் பொய் மூட்டைகளை கட்டவிழ்ப்பது மட்டுமே எம்முன் காணும் ஒரே வழியாகும்.

"கார்ட்டூன்களை" வெளியிட்டுவிட்டால் சினம் கொண்டு இணையத்தில் முஸ்லிம்களால் ஒரு கலவரம் நிகழும். அதனை வைத்து தங்கள் வாதத்தை - இஸ்லாமியர்கள் தீவிரவாதிகள் என்று - நிலைநிறுத்தி விடலாம் என கனாக்கண்ட இந்த நாசத்தின் எண்ணத்தில் அதன் மூலமாக மண்ணையும் அள்ளிப்போட்டு விடலாம்.

பதிலுக்குப் பதில் இந்து கடவுளர்களை அவமதிக்கும் சித்திரங்களை போட்டு விடலாம் தான். அதற்கு இறை நேசனுக்கு அதிக நேரமும் வேண்டியதில்லை. எல்லா அசிங்கங்களும் இணையத்தில் இலவசமாக தாராளமாக கிடைக்கின்றது. நேசகுமார் கும்பலுக்கு இஸ்லாத்தின் மீது அவதூறை அள்ளி வீச அசிங்கங்களை இலவசமாக கொடுக்க ஒரு இணையதளம் கிடைக்கும் பொழுது இறை நேசனுக்கும் ஒன்று கிடைக்காதா என்ன? தாராளமாக கிடைக்கும்.

ஆனால் அவ்வாறு பொடுவதனால் இந்த கைக்கூலி கும்பலுக்கு என்ன நஷ்டம் விளைந்து விடப்போகிறது. இந்து மதத்திற்கும் வந்தேறி பார்ப்பன வர்க்கத்தால் உருவாக்கப்பட்ட ஆர் எஸ் எஸின் கைக்கூலி நேசகுமாருக்கும் என்ன சம்பந்தம். இராமனுக்கு கோயில் கட்டப் போகிறோம் எனக்கூறி இரத்தயாத்திரை நடத்திய போது இராமபக்தர்களால் தனக்கு அளிக்கப்பட்ட வெள்ளி மற்றும் தங்கத்தில் வடிக்கப்பட்ட இராமர் சிலைகளை வீட்டில் வந்தவுடன் உருக்கி பாத்திரங்களாகவும் ஆபரணங்களாகவும் மாற்றிய பொய் இராம பக்தன் அத்வானி வகையறா தானே இந்த நேசகுமார். நான் அவ்வாறு இந்து கடவுளர்களை அவமதித்து சித்திரங்களை போடுவதால் இந்தப்போலி சூத்திரன் நேசகுமாருக்கு ஒன்றும் ஆகப்போவதில்லை. அது எனக்கு நன்றாகவே தெரியும்.

எனவே இவ்விஷயத்தில் தூண்டிவிட்டு கெக்கலிக்க நினைக்கும் வக்கிரம் பிடித்த கும்பலுக்கு இறை நேசனிடமிருந்து கிடைப்பது ஒரு பெப்பப்பே மட்டும் தான். அய்யோ பாவம்!

இவ்வாறு இரத்த வெறிப்பிடித்து அலையும் இந்த வக்கிர மிருகங்களுக்கு பதிலுக்கு பதில் கொடுத்து எனக்கு கிடைக்கும் சொற்ப நேரத்தை வீணாக்குவதை விட இவர்களின் பொய் முகத்தை கட்டுடைப்பது தான் சரி எனத் தோன்றுகிறது.

வந்தேறி பார்ப்பன ஜென்மங்களின் அட்டூழியங்களால் மனம்வெறுத்து விடுதலைக்காக 30 லட்சம் தலித் சகோதரர்கள் புத்த மதம் தழுவியதை மனப்பூர்வமாக வரவேற்று என் இரத்த பந்த சகோதரர்கள் "எங்கிருந்தாலும் வாழ்க" என்று அவர்களின் விடுதலையை வாழ்த்தி இந்த மனமாற்றத்திற்கான காரணம் என்ன? எனக் கேட்டதற்கு சம்பந்தமே இல்லாமல் அதற்கும் இஸ்லாத்தை வம்பிற்கிழுத்து இஸ்லாமியர்களை அவமதிக்கிறேன் என கார்ட்டூனை வெளியிட்டு தன் மனவக்கிரத்தை தீர்த்துக் கொண்ட நேசகுமாரின் வக்கிர லீலைகளை ஒவ்வொன்றாக வரும் பதிவுகளில் கட்டுடைக்கிறேன்.

பொய்யர்கள் என்றுமே தங்கள் வாதங்களில் வெற்றிபெறுவதில்லை. அவர்களின் பொய்மூட்டைகள் அவிழ்க்கப்படும் பொழுது அவர்கள் சமூகத்தில் அசிங்கப்பட்டு நிற்பார்கள். அவ்வாறான ஒரு பொய்யனின் அழுக்கு மூட்டைகள் அனைத்தையும் ஆதாரத்துடன் வரும் பதிவுகளில் காணலாம்.

Friday, November 17, 2006

பொது இடத்தில் மலம் கழிக்கும் நேசகுமார்!

சமீபத்தில் முப்பது இலட்சம் இந்துக்கள், பவுத்த மதத்தைத் தழுவியதை தி ஹிந்துவில் படித்து, வந்தேறி பார்ப்பனர்களின் சாதீயத் தீண்டாமைக் கொடுமைகளிலிருந்து விடுதலை பெற்றவர்களை "எங்கிருந்தாலும் வாழ்க!" என்று வாழ்த்தி இருந்தேன். இந்தியாவில் எது நடந்தாலும் அதற்கு இஸ்லாம் தான் காரணம் என்று மனம் பிறழ்ந்து உளறிக்கொட்டி வரும் நேசகுமார் வகையறாவிடம் சில கேள்விகளையும் வைத்திருந்தேன். அதற்குப் பதில் சொல்ல வக்கில்லாமல் வழக்கம் போல் அவதூறு கலந்து மனம் பிறழ்ந்து உளறோ உளறு என்று உளறிக் கொட்டியுள்ளார்.

இஸ்லாத்தைக் கேட்விப்பட்ட நாள் முதல் அல்லது இஸ்லாத்தை எதிர்த்து அவதூறு பரப்புவதையே முழுநேரத் தொழிலாக ஆக்கிக் கொண்ட நாள் முதல் சும்மா கிடைக்கிறதே என்பதற்காக (போலி)வழி(லை)யில் கிடைக்கும் அசிங்கங்களையெல்லாம் வாயில் வாரிப் போட்டு மென்று துப்பிக் கொண்டும், "யப்பா அந்த இடத்தில் இருந்து நீ எடுத்து வாயில் போட்டு துப்பியது அசிங்கம்; இனிமேல் அதை வாயில் போடாதே, வாய் நாறும்; இதோ இதனை வாயில் போட்டுப்பார்; வாய் மணக்கும்" என யாராவது சரியானதை எடுத்துக் காட்டினால், "இல்லை, இல்லை; நான் அதைத்தான் வாயில் போடுவேன்; அந்த போலி தளத்தில் கிடைக்கும் அசிங்கங்கள் தான் எனக்கு ரொம்ப ருசியாக இருக்கின்றது" என நாற்றத்தை விட்டு வெளியேற அடம்பிடித்துக் கொண்டு தொடர்ந்து புழுத்து நாறிய வாயால் நாற்றத்தைப் பரப்பிக் கொண்டும், மத்திய ஆசியாவிலிருந்து தொந்தரவு தாள முடியாமல் அடித்து விரட்டப்பட்டு கைபர் போலன் கணவாய் வழியாக பிழைப்புக்காக ஆடுமாடுகளை மேய்த்தபடி வந்தேறிய ஆரிய பார்ப்பன மனித விரோதக் கூட்டத்தால் மனிதனாகவே மதிக்கப்படாமல் அடக்கி ஒடுக்கப்பட்ட சூத்திரர்களில் பட்ட ஒருவனாகத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு அதே பார்ப்பன வந்தேறிக் கூட்டத்திற்கு அடிவருடிக் கொண்டிருக்கும் பீ.மு.க தலைவர் நேசகுமாரிடம் நேர்மையான பதிலை எதிர்பார்த்தது என் தவறு தான்.

பார்ப்பன வந்தேறிகளின் கொடுமையையும் அடக்குமுறையையும் இந்த இருபத்தொன்றாம் நூற்றாண்டிலும் சகிக்க முடியாமல், தங்களைத் தற்காத்துக் கொள்ள வந்தேறி பார்ப்பனர்களால் உருவாக்கப்பட்ட அல்லது உள்ளது போல் வடிவமைக்கப்பட்ட பீ.மு.க தலைவர் நேசகுமாரின் பார்வையில் நிறுவனப்படுத்தப்படாத இந்து மதத்திலிருந்து 30 லட்சம் தலித்கள் புத்த மதத்திற்கு மாறி விட்ட சம்பவத்தைக் கூறி இதற்குக் காரணம் என்ன? எனக் கேட்டால் "மலம் அள்ளுகின்ற முறையே இஸ்லாத்தினால் தான் இந்தியாவிற்கு வந்ததாம்." ஆகா அருமையான பதில் போங்கள். உடம்பு அப்படியே புல்லரிக்கிறது. இது போன்ற அதிஅற்புதமான கண்டுபிடிப்புகளை அகழ்வாராய்ச்சி வல்லுனர்களையும் மிஞ்சி ஆதாரத்துடன் நிரூபிப்பதாக நினைத்துக் கிறுக்குத் தனமாக உளற அரையறிவு வெத்துவேட்டு பீ.மு.க தலைவர் நேசகுமாரால் மட்டுமே முடியும். அவருக்குப் பின்னால் வந்து ஆகா ஓஹோ பேஷ் பேஷ் ரொம்ப நன்னாயிருக்கு என பின்பாட்டு பாடும் 'மட'க்'கரி'களின் கும்மியடிகளோ காமெடியோ காமெடி.

இனி இதற்கு "அவ்வாறெனில் 30 லட்சம் முஸ்லிம்கள் அல்லவா புத்த மதத்திற்கு மாறியிருக்க வேண்டும்" என விவரம் கெட்ட மடத்தனமான கேள்விகளை வேறு யாரும் கேட்டு விடவேண்டாம். அதற்கும் அரையறிவு பீ.மு.க தலைவரிடம் ரெடிமேட் பதில் உடனே உண்டு. உலக அளவில் பிரபலமான வந்தேறிப் பார்ப்பன குடும்பத்தில் பிறந்த கேரள எழுத்தாளர் கமலா சுரய்யாவின் மனமாற்றத்தால் பொறுக்க முடியாமல் பாதிவிலைக்கு அசிங்கத்தை கூவி விற்கும் சங்க அடிவருடிப் பத்திரிக்கையான மாத்ருபூமி கமலாவுக்கு "மதம் மடுத்து" என விளம்பரம் செய்து தனது அரிப்பை தீர்த்துக் கொண்டபோது அந்த அசிங்கத்தை அப்படியே வாரி தனது தளத்தில் போட்டு தனது மனவக்கிரத்துக்கு வடிகால் தேடிய இந்த அரையறிவு வெத்துவேட்டு பீ.மு.க தலைவரின் முகமூடியை அதே கமலா சுரய்யாவின் "பத்திரிக்கையாளர்கள் சதிகாரர்கள்" என்ற பேட்டி குத்திக் கிழித்து, சே! இவ்வளவு தானா? என முழுநேர ஊழியத்துக்கு சம்பளம் தருபவர்கள் முன் அசிங்கப்பட்டு நின்ற தனது முகத்தைக் காப்பாற்ற அவரின் இந்த ரெடிமேட் பதில் மிகுந்த பயன் தந்ததை அவ்வளவு எளிதில் யாரும் மறந்து விட முடியாது.

இதே போன்று "30 லட்சம் தலித்கள் மதம் மாறியதற்கு" உலக மக்களின் மூன்றில் ஒரு பாக மனிதர்களுக்குத் தலைவரான முஹம்மது(ஸல்) அவர்கள் தனது மகளை பிலாலுக்கு மணம்முடித்துக் கொடுக்காததும், டில்லி ஜும்மா மசூதியின் இமாமாக ஒரு தாழ்ந்த ஜாதிக்காரனை நியமிக்காததும், காபாவிற்கு ஒரு தலித்தை நியமிக்காததும், அரபு நாட்டு உயர்குல பெண்டிருக்கு தலித்களை மணம் முடித்துக் கொடுக்காததும், சவூதி மன்னனாக ஒரு தலித் தேர்ந்தெடுக்கப்படாததும், ஏன் பாகிஸ்தான் பங்க்ளாதேஷ் முஸ்லிம்கள் பொது இடத்தில் அசிங்கப்படுத்தாமல் தங்கள் வீட்டு கழிவறையில் மலம் கழிப்பதும் கூட உளறல் மன்னன் அரையறிவு வெத்துவேட்டு பீ.மு.க தலைவர் நேசகுமாருக்கும் அதன் பின்பாட்டு மானங்கெட்ட 'மட'க்'கரி'களுக்கும் அட்டகாசமான திமிரான பதில்களாகத் தோன்றலாம். அது தான் நடந்தும் இருக்கின்றது. வீட்டில் கழிவறை இல்லாமல் ஊருக்கு ஒதுக்குப்புறமாக கண்ணில் தென்படும் இடங்களில் எல்லாம் மலம் கழிக்கச் செல்லும் மானங்கெட்ட வெத்துவேட்டு அரைவேக்காடு பீ.மு.க தலைவர் நேசகுமாருக்கு பொது இடங்களில் "மலம்" கழிப்பது ஒன்றும் புதிய ஆச்சரியமான விஷயம் அல்ல என்பது இங்கு அனைவருக்கும் நன்றாக தெரியும்.

புத்தக வியாபாரிகளின் கூட்டுக் குழுவிற்கு தலைமை வகித்து நல்லபிள்ளை வேடம் போடும் நபர் தான் இந்த மனம் பிறழ்ந்த அரையறிவு வெத்துவேட்டு பீ.மு.க தலைவர் என அடையாளம்காட்டப்பட்டு ஆப்படிக்கப்பட்ட பிறகு மனுசன் கதிகலங்கித் தான் போய் உள்ளார். ஆனால் அதற்காக இப்படியா முன்பின் பார்க்காமலே உளறிக் கொட்டுவது. எதை எடுத்து எதை விடுத்து சுட்டிக் காட்டுவது என்றே தெரியவில்லை. அந்த அளவிற்கு உளறல்களின் கூட்டு அவியலாகத்தான் இந்த அரையறிவு வெத்துவேட்டு பீ.மு.க.தலைவரின் "30 லட்ச தலித்களின் புத்த மதமாற்றத்திற்கான" பதில் அமைந்துள்ளது.

இந்த அரையறிவு வெத்துவேட்டு பீ.மு.க தலைவர் தலையில் ஒன்றும் இல்லாத வெறும் மண்ணுருண்டை(நம்புங்க அந்த மண்ணாந்தையை கூறவில்லை) தான் என்பதற்கு அந்த பதில் பதிவின் உள்ளடக்கத்திற்குப் போக வேண்டிய அவசியமே இல்லை. ஒரே ஒரு உதாரணத்தைக் காட்டி நிறுவி விடலாம். அதிலிருந்தே இதன் வியாபார எழுத்துக்கள் அனைத்தும் விவரம் கெட்டவை என்பதையும் அறிந்து கொள்ளலாம்.

அந்த உளறலின் முதல் மற்றும் கடைசி பத்தியின் சில வாசகங்களை இங்கு எடுத்து எழுதுகின்றேன். கவனியுங்கள்:

// இறைநேசன் ஒரு பதிவெழுதியிருக்கிறார், தலித்துக்கள் பவுத்தத்துக்கு மதம் மாறுவது குறித்து. அதில் என் பெயரில் அவரே பல பின்னூட்டங்களையும் எழுதிக் கொண்டு அவரே அனானியாகவும் பதிலெழுதிக்கொண்டுள்ளதை நண்பர்கள் சொல்லிய பிறகு பார்த்தேன் , படித்தேன். இதை எதற்காக செய்துள்ளார் என்பது தெரியவில்லை.//

இது முதல் பத்தி. கடைசி பத்தி:

// இறை நேசன் அவர்கள் எனது பெயரில் தமக்குத்தாமே பின்னூட்டம் இட்டு என்னை, இங் கே, இவற்றை எழுத வைத்ததற்க்கு மிக நன்றி.//

நான் எழுதிய பதிவில் அவர் பெயரில் நானே பின்னூட்டம் இட்டேனாம். பின்னர் அதற்கு பதில் எழுதும் முகமாக அனானியாக நானே பதில் எழுதினேனாம். ஏன் இதனை செய்தேன் என்பது அவருக்கு தெரியவில்லையாம். கடைசியில் முடிக்கும் போது அவ்வாறு நான் செய்ததற்கு நன்றியாம். அதாவது அந்த பின்னூட்டங்கள் இட்டது அனைத்துமே நான் தான் என்று ஏதோ பக்கத்தில் இருந்து பார்த்தது போல் கூறி முடித்துள்ளார். விட்டால் தற்போது அவர் போட்டிருக்கும் பதில் பதிவையும் நான் தான் போட்டேன் என்று கூறிவிடுவார் போலிருக்கிறது. கேட்பவன் கேனயனாக இருந்தால்.................. கதை தான் நினைவிற்கு வருகிறது.

இதிலிருந்து என்ன விளங்குகின்றது?

'திருடனுக்கு தேள் கொட்டியது மாதிரி' என்று கூறுவதை கேள்விப்பட்டுள்ளீர்களா? எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல் 'தானே ஒரு போலி தான்' என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதுவரை தான் செய்து வந்த மொள்ளமாரித்தனத்தை இங்கே வெளிச்சம் போட்டு காட்டுகிறார் இந்த அரையறிவு வெத்துவேட்டு பீ.மு.க தலைவர். இதைத்தான் தன் தலையில் தானே மண்ணை அள்ளிப்போடுவது என்பது. பல நாள் கள்வன் ஒரு நாள் பிடிபடுவான் என்பது உண்மையே. ஆனால் அந்த கள்வனே நான் தான் கள்வன் நான் தான் கள்வன் என தானே முன்வந்து நடுரோட்டில் நின்று கூவியும் பிடிபடுவான் என்பதை இப்பொழுது தான் முதன் முதலாக அறிகிறேன். இல்லை இல்லை பார்க்கிறேன்.

பாவம் ஆப்பில் கலங்கிய அறிவில் என்ன பிதற்றுகிறோம் என்ற உணர்வே இல்லாமல் உண்மையை போட்டு உடைத்து விட்டார்.

வலைப்பதிவில் யார் பெயரில் யார் வேண்டுமானாலும் நடமாட முடியும் என்பது உண்மையே. ஆனால் ஒருவரை அபாண்டமாக பழிக்க வேண்டும் என்பதற்காக ஒரு பதிவை எழுதுவது, அதற்கு பின்னூட்டமும் தானே இடுவது, பின்னர் அதற்கு பதிலும் மற்றொரு பெயரில் தானே போடுவது. இந்த அளவிற்கு படு கீழ்தரமாக சிந்தித்துச் செயல்பட அரையறிவு வெத்துவேட்டு பீ.மு.க தலைவர் நேசகுமாருக்கும் அவர் தூக்கிப்பிடிக்கும் வந்தேறிக்கூட்டத்திற்கும் மட்டுமே முடியும் அல்லது அவர்களுக்கு மட்டுமே அது தேவை. அதைத்தான் அவர் செய்து வந்துள்ளார் என்பதை அவர் வாயாலேயே ஏதோ நான் அவ்வாறு செய்ததை பக்கத்தில் இருந்து பார்த்தது போல் கூறி நிரூபித்து விட்டார். ஏனெனில் இதுபோன்ற கேடுகெட்ட, ஒரு நேர்மையான மனிதன் செய்ய வெட்கப்படும் மொள்ளமாரித்தனம் செய்து பின்னூட்டத்தை அதிகரிக்க வேண்டிய அளவிற்கு "வலையுலக தெண்டுல்கரைப்" போல பின்னூட்டபோதைக்கு இறை நேசன் அடிமையாகவில்லை.

செய்து பழக்கமுள்ளவர்களுக்குத் தான் அதெல்லாம் பார்த்தவுடன் புரியவும் செய்யும். அது மட்டுமல்ல இது போன்று நான்கு பின்னூட்டங்களைப் போட எனக்கு நேரமும் இணைய இணைப்பும் கிடைக்குமாயின் பிரயோஜனமாக ஒரு பதிவை போட்டுக் கொண்டு சென்று விடுவேன். அதுவல்லாமல் வேலை மெனக்கெட்டு இருந்து "அனாயாசமாக 100களை அடிக்க" ஒன்றும் விவரம் கெட்டத்தனமாக முயற்சி செய்து கொண்டிருக்க மாட்டேன்.

ஏன் நான் கேட்கிறேன், ஒரு அனானிமஸ் மற்றும் அதர் ஆப்சன்கள் உள்ள பதிவில் நேசகுமாருக்கும் பல்வேறு பெயர்களில் பின்னூட்டம் போட இயலாதா? என்னுடைய அதே பதிவில் அனைத்து பின்னூட்டங்களும் இந்த அரையறிவு வெத்துவேட்டு பீ.மு.க தலைவர் நேசகுமார் அவர்கள் தான் போட்டார் என நான் கூறினால் அவரால் அதை ஆட்சேபித்து இல்லை என நிறுவ முடியுமா? முடியாது. ஆனால் அந்த அளவிற்கு கேனத்தனமாக ஒருவரின் மீது ஆதாரமில்லாமல் கண்ணைமூடிக்கொண்டு அரையறிவு வெத்துவேட்டு பீ.மு.க தலைவர் நேசகுமார் போல் நான் பழிபோட மாட்டேன். அதற்கான அவசியமும் இறை நேசனுக்கு இல்லை.

அபாண்டப்பழி மற்றும் விவரம் கெட்ட உளறல் இதோடு முடியவில்லை. மற்றுமொரு உதாரணத்தை பாருங்கள்:

// இறைநேசன் எனது பெயரில் இருந்த போலிப்பின்னூட்டங்களையும், அதற்கு பதிலளிக்கிறேன் பேர்வழி என்று எழுதியிருந்த பின்னூட்டங்களையும் நீக்கியுள்ளார். அதற்கு அவருக்கு நன்றி.//

எங்கே அய்யா நான் நீக்கினேன்? எப்பா உலகத்தில் இது போன்ற ஒரு பொய்யனை, புளுகு மூட்டைகளை அவிழ்த்து விடுபவனை நான் பார்த்ததே இல்லையப்பா. எல்லோரின் முன் ஆதாரம் இவ்வளவு வெட்ட வெளிச்சமாக இருக்கும் பொழுதே அதாவது ஒரு பொருள் ஒரு இடத்தில் எல்லோரும் பார்க்கும் படி இருக்கும் பொழுதே அப்படி ஒரு பொருள் அவ்விடத்தில் இல்லவே இல்லை என சாதிக்க நம் அரையறிவு வெத்துவேட்டு பீ.மு.க தலைவர் நேசகுமாரால் மட்டுமே முடியும். இல்லாததை ஆதாரம் காட்டுவது, பொய்யான தகவல்களை தருவது, தான் செய்யும் மொள்ளமாரித்தனங்களை மனதில் வைத்து மற்றவர்களும் அதுபோல் தான் இருப்பர் என நினைத்து அபாண்டபழி சுமத்துவது என்று எல்லாவிதமான கீழ்தரமான செயல்பாடுகளின் மொத்த உருவமாக நமது அரையறிவு வெத்துவேட்டு பீ.மு.க தலைவர் வந்தேறி ஆரிய பார்ப்பனர்களின் அடிவருடி நேசகுமார் ஜெகஜோதியாக தலைநிமிர்ந்து நிற்கின்றார். நிற்கட்டும், தாரளமாக நிற்கட்டும். இதுதான் நேசகுமாரின் வேசம் தரித்த மோசமுகம் என்பதை அனைவரும் புரிந்து கொள்ளும் வரை தாராளமாக நிற்கட்டும்.(ஆமாம் இதுவரை அதையாரும் புரிந்து கொள்ளவில்லையாக்கும் என்கின்றீர்களா? அதுவும் சரிதான்)

"மலர்களில்" சம்பந்தப்பட்டவர் மாற்றக்கோராத எந்தப்பின்னூட்டத்தையும் இதுவரை இறை நேசன் நீக்கியதில்லை. சம்பந்தப்பட்டவர் அது தன்னுடைய பின்னூட்டம் இல்லை எனக்கூறும் வரை அப்பின்னூட்டம் அப்பெயருக்குரியவருடையதே என்று தான் இறை நேசனால் கருதப்படும். நேசகுமார் பெயரில் எழுதப்பட்ட பின்னூட்டமும் அதற்கு பதிலாக வந்த அனானிகளின் பின்னூட்டமும் தற்போதும் அவ்வாறே அவ்விடத்திலேயே உள்ளது. இதுவரை அப்பின்னூட்டங்களைக் குறித்து எனக்கு எவ்வித ஆட்சேபணையோ நீக்கக்கோரிய மடல்/பின்னூட்டங்களோ வரவில்லை. அவ்வாறு வரும் வரை நிச்சயம் அவை அவ்விடத்திலேயே வீற்றிருக்கும். நேசகுமார் பொய்யைக்கரைத்து எழுதிப்பரப்பிக் கொண்டு நடப்பவர் என்பதற்கு இது சிறந்த ஆதாரமாக நேசகுமார் அவற்றை மாற்றக்கோரும் வரை "மலர்களில்" என்றென்றும் வீற்றிருக்கும்.

பதில் கூற முடியாத போது எதிர்திசை நோக்கி அபாண்டங்களை அள்ளி வீசும் கேனத்தனமான செயல்பாடுகள் இறை நேசனுக்கு பழக்கமானவை அல்ல. அதற்கான தேவையும் நமக்கு இல்லை. நிறுவனப்படுத்தப்படாத வந்தேறி ஆரிய பார்ப்பன கூட்டத்தால் அடக்கியாளப்படும் மோசமான கட்டுக்கதைகளை இதிகாசங்களாகவும் திருவிளையாடல்களாகவும் கொண்ட சனாதன இந்துத்துவ மதத்தின் மீது (ஜல்லியடிக்கும் கூட்டத்திற்கு இறை நேசன் இந்து மதத்தின் மீது சாடிவிட்டான் என சந்தில் சிந்துபாட விஷயம் தயார்) வரும் விமர்சனங்களுக்கு பதில் சொல்ல வக்கில்லை என வரும் பொழுது, வந்தேறி பார்ப்பனர்களின் அடக்கியாளும் கனவிற்கு சிம்ம சொப்பனமாகத் திகழும் இஸ்லாத்தின் மீது இல்லாத அபாண்டங்களை அள்ளி வீசி தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டிய அவசியம் வந்தேறி ஆரிய பார்ப்பன கூட்டத்திற்கும் அதற்காக முழுநேரமாக உழைக்கும் நேசகுமார் போன்ற காசுக்கு விலை போன கைக்கூலி அரையறிவு வெத்துவேட்டுகளுக்குமே அது அவசியமாகிறது. அதைத் தான் இங்கு தொடர்ச்சியாக நேசகுமார் செய்து வருகிறார்.

நேசகுமார் எதையுமே ஆராய்ந்துப் பார்க்காமல் அவதூறுகளை வாரிவீசுபவர் என்பதற்கு அவர் பதிவிலிருந்தே இன்னும் ஆதாரங்களை ஏராளமாக அடுக்க முடியும். தேவையில்லை. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல் அவரின் கீழ்தரமான வக்கிர அரையறிவிற்கு ஆதாரம் இது மட்டுமே போதும். இல்லையில்லை இன்னும் வேண்டும் எனில் பட்டியலிடவும் நான் தயார்.

· என்ன "அவ்வாறு ஒன்றும் இல்லை; நான் என் பதிவில் கூறியது அனைத்துமே உண்மை தான்" எனக் கூறி என்னுடன் விவாதித்து நிரூபிக்க நேசகுமார் தயாரா?
· அவ்வாறு தயார் எனில் கூறட்டும். அவரின் அப்பதிவில் உள்ள அனைத்து அபத்தம் மற்றும் உளறல்களை பட்டியலிட்டு தொடர் பதிவு போட நான் தயார். நான் கூறியது அனைத்துமே உண்மைகள் தான்; சரியானவை தான்; உளறல்கள் இல்லை என்று கூறி அதனை நிரூபிக்க நான் தயார் என நேசகுமார் அறிவிக்கட்டும்.

இல்லை அவ்வாறு ஆண்மையுடன் களமிறங்க தான் தயார் இல்லை எனில் முதலில் தங்களிடம் இருக்கும் முடநாற்றத்தை பொது இடத்தில் வைத்து அவ்விடத்தை அசிங்கப்படுத்தாமல் உடனடியாக தன் வீட்டில் கழிவறையை கட்டி அதனை அகற்றுவதற்கு முயற்சி செய்யட்டும். இல்லையெனில் 30 லட்சம் என்ன 30 கோடி ஒரே நாளில் குறைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

கடைசியாக,

1. நேச குமாருக்கு:

நீங்கள் சொல்லாத ஒன்றை இன்னொருவர் போலியாக பின்னூட்டம் எழுதியிருக்கிறார் என்பதற்காக கோபம் கொண்டு அபாண்டமாக என் மீது புழுதிவாரித் தூற்றுகிறீர்கள். அது தான் உங்களின் முழுநேரத் தொழிலாக இருப்பினும், நீங்கள் சொல்ல வரும் கருத்துக்களும், அந்தப் போலி பின்னூட்டக்காரர் சொன்ன கருத்துக்களும் கிட்டத்தட்ட ஒன்றுதான் என்றாலும் கூட (அந்த ஒரு காரணத்தினால் தான் அது உங்களுடைய பின்னூட்டம் எனக்கருதி அனுமதிக்கப்பட்டது) உங்கள் பெயரில் மற்றொருவர் கருத்துக் கூறி அதனை வைத்து உங்களுக்கு எதிர்கருத்துக்கள் பதியப்பட்ட போது உங்களுக்கு அது எவ்வளவு வலிக்கிறது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பற்றி அவர்கள் சொல்லாத போலி ஹதீஸ்களை இஸ்லாமிய எதிர் பிரச்சார தளங்களிலிருந்து எடுத்து நபியவர்கள் மீதும் இஸ்லாம் மீதும் நீங்கள் களங்கம் சுமத்தும்போது முஸ்லிம்களுக்கு எவ்வளவு வலித்திருக்கும்/வலித்துக் கொண்டிருக்கும் என்பது இப்போதாவது உங்களுக்கு புரிந்திருக்கும் என நினைக்கின்றேன்.

இல்லை இப்பொழுதும் அதனை நீங்கள் புரிந்து ஏற்றுக் கொள்ள அடம்பிடிப்பீர்கள் எனில் ஒரு சமுதாயத்தையே தன் அபாண்ட எழுத்தால் களங்கப்படுத்தி வரும் நீங்கள் காசுக்காக எதை வேண்டுமானாலும் செய்யத் துணிந்தவர்தான் என்பதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்.

2. ஜயராமனுக்கு( அதே மடராமனுக்கு) :

//இறைநேசன் அவர்கள் பல சமயங்களில் அவருடன் இணைந்து கருத்தாற்றியவர்களை தரம் தாழ்த்தி தூற்றுகிறார். ஒரு சாதாரண லாஜிக் கூட இல்லாமல் படு தீவீரமாக எழுதுகிறார் (அவருடைய வடமொழி பார்ப்பானுக்கு மட்டும் என்ற கருத்தும் , அதற்கு என் பதிலும் , அதற்கு அவரின் எதிர்கேள்வியும் பார்த்தால் உங்களுக்கு அவரின் லாஜிக் புரியும்) வலியப்போய் சில கருத்துப்பரிமாற்றங்களை வைத்தாலும் அவர் அதற்கு பிரதியாக "வாந்தி" "பீ" என்று என்னை ஏசினார்.//

தரமான வார்த்தைகளுடன் கருத்துப் பரிமாற்றம் செய்ய முன்வந்த உங்களை நான் தரம் தாழ்த்தி எழுதியதைப் போல தரையில் விழுந்து அழுது புரண்டு நீலிக்கண்ணீர் வடித்திருக்கிறீர்கள். உங்களின் 'தரமான' வார்த்தைகளை மறந்து விட்டீர்கள் போலிருக்கிறது. உதாரணத்திற்காக சில வார்த்தைகளை எடுத்துக் காட்டவா ? ஏன் " மடராமனுக்கு ஜே!" பதிவு போடப்பட்டது என்பதை மறந்து பேசுகின்றீர்கள். பதிவு போட்டு வெகுநாட்கள் ஒன்றும் சென்றுவிடவில்லை. நீங்கள் விரும்பினால் "தரமான" வார்த்தைகள் கூறி தரம் தாழ்த்துவது யார் என்பதை அப்பதிவுகளில் சென்று அலசலாம். தயாரா?

3. சிவாவிற்கு:

குஜராத்திலிருந்து மன்னர்களால் "ஏதோ" ஒரு அவசியத்திற்காக மதுரைக்கு இறக்குமதி செய்யப்பட்ட சௌராஷ்டிரர்கள் லாஜிக் படி மதுரையில் "வந்தேறினார்கள்" என்ற வாசகத்தை மட்டும் காரணம் வைத்துக் கொண்டு நிஜமான ஆரிய பார்ப்பன வந்தேறிகளுக்கு ஆங்காங்கே சொறிந்து விட்டுக் கொண்டிருப்பது சரியல்ல. அந்த மனித வர்க்கத்தில் சேர்க்க தகுதியில்லாத வந்தேறிகளைப் பொறுத்தவரையில் முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும், புத்தர்களும், சௌராஷ்டிரர்களும் என அவாள்களைத் தவிர அனைவருமே கையால் தொட தகுதியில்லாத தாழ்த்தப்பட்டவர்களே. இதனை நான் என் அனுபவத்திலேயே கண்டுள்ளேன்.

நான் கல்லூரியில் படிக்கும் வேளையில் இறுதி வருடம் இறுதித் தேர்வில் கூட்டு ஸ்டடி செய்து கொண்டிருந்த வேளை, ஒரு நாள் என்னுடன் படிக்கும் பிராமண நண்பன் (எங்கள் வீட்டில் வந்து என் குடும்பத்தோடு அமர்ந்து பிரியாணியை மிகவும் விரும்பிச் சாப்பிடும் அளவிற்கு நெருக்கமானவன். அவனிடம் வந்தேறிகளின் பரம்பரை இயல்பை நான் காணவில்லை) வீட்டில் கம்பைன்டு-ஸ்டடியை வைத்திருந்தோம். நாங்கள் மொத்தம் நால்வரில் ஒருவர் மதுரையைச் சேர்ந்த சௌராஷ்டிர குலத்தைச் சேர்ந்தவர். எங்கள் வகுப்பிலேயே எங்களோடு மட்டுமே அதிக நெருக்கத்தை வைத்திருந்தவர். ஏதோ ஒரு காரணத்தினால் மற்ற அனைவரிடமிருந்தும் ஒதுங்கியே இருப்பார். ஏன் என்பதற்கான காரணம் கடைசிவரை எங்களால் புரிந்து கொள்ள இயலவில்லை. ஆனால் மனதில் எதனாலோ பாதிக்கப்பட்டிருந்தார் என்பது மட்டும் எங்களுக்குப் புரிந்திருந்தது. அதனாலேயே அதிகம் அவரை நாங்கள் எவ்விஷயத்திலும் வற்புறுத்துவதில்லை.
கம்பைன்டு ஸ்டடிக்கு அன்று பிராமண நண்பன் வீட்டிற்கு செல்கிறோம் என்று கூறிய பொழுது எவ்வித எதிர்ப்பும் கூறாமல் சாதாரண நாட்களை விட சற்று ஆர்வத்துடனே வந்தார். அன்று பகல் முழுவதும் அந்த பிராமண நண்பன் வீட்டிலேயே இருந்தோம். மாலை நேரம் நல்ல சூடாக எங்களுக்கு காப்பி வந்தது. நல்ல சுவையுடன் இன்றும் நினைத்தால் நாவில் நீர் ஊறும்-அவ்வளவு சுவையாக இருந்தது. நேரம் இருட்டிக் கொண்டு வந்ததால் ஹாஸ்டலுக்கு திரும்ப ஆயத்தமானோம். எங்களை வெளியில் வந்து வழியனுப்பி விட்டு எங்கள் நண்பன் வீட்டிற்கு சென்று விட்டான். நாங்களும் வண்டி இருந்த இடம் வரை வந்து விட்டோம். வண்டியை எடுக்கப் பையில் கைவிடும் பொழுது தான் சாவி பையில் இல்லாதது உறைத்தது. படித்துக் கொண்டிருந்த இடத்தில் விட்டு வந்திருக்கலாம் எனக்கருதி நண்பன் வீட்டிற்கு திரும்பி வீட்டிற்குள் நுழைய எத்தனிக்கும் பொழுது வீட்டினுள் என் நண்பனின் வித்தியாசமான கோபக்குரல். பேச்சு எங்களைக் குறித்து இருந்ததால் உள்ளே நுழைய மனம் இடம் தரவில்லை. அப்பொழுது உள்ளே நடந்த உரையாடலைக் கேட்டு ஸ்தம்பித்து நின்று விட்டோம்.

சாதாரணமாக நான் வெளியில் எங்கு சென்றாலும் நீர் ஆகாரம் சாப்பிடும் பொழுது குவளையில் வாய் வைத்து குடிப்பதில்லை. அன்று அவரின் அம்மா தந்த காப்பியை எங்களில் அந்த சௌராஷ்டிர நண்பனும் மற்றொரு நண்பனும் வாய் வைத்துக் குடித்திருந்தனர். அது எங்களுக்கு அப்பொழுது பெரிய வித்தியாசமாக தெரியவில்லை.

வீட்டினுள் என் பிராமண நண்பனின் தாய் நண்பனிடம் பயங்கரக் கோபமாக ஏண்டா உன்னோட ஃப்ரண்ட்ஷிப்பை காலேஜோடு நிறுத்தினால் போதாதா? எப்படி பரிமாற வேண்டும் என்ற சம்ஸ்காரம் இல்லாத அபிஷ்டுக்களையெல்லாம் ஆத்துக்கு ஏண்டா கொண்டு வரே? இப்ப பாரு. ஆத்த சுத்தம் செய்ய வேண்டிய நிலை. அந்த ரண்டு கப்பயும் எடுத்து தூர வீசி எறி. என்று தொடர்ந்து ஏதேதோ கூறிக் கொண்டிருக்க என் நண்பன் அதை எதிர்த்து என்னம்மா இப்படி எல்லாம் பேசுற. அவாளும் மனுசங்க தானே. அவங்க எல்லாம் என்னோட ஃப்ரண்டுங்கம்மா, என்ற ரீதியில் தொடர்ந்து வாதாடிக் கொண்டிருந்தார்.

எங்கள் வாழ்க்கையில் நடந்த இந்த அனுபவத்தை என்னால் என்றுமே மறக்க இயலாது. இதனை நான் ஏன் இங்கு கூற வருகிறேன் என்பது சகோ. சிவா அவர்களுக்குப் புரிந்திருக்கும் என நினைக்கின்றேன். நீங்கள் என்ன தான் உங்களை மற்றவர்களிலிருந்து உயர்ந்தவர்களாகக் காண்பிக்க வந்தேறிய ஆரியக்கூட்டத்தோடு ஒட்டி உரசினாலும் அது எல்லாம் அவர்கள் உடலில் உங்கள் உடல் தொடாத வரை மட்டுமே. அவாள்களுக்கு அவாள்களைத் தவிர எல்லோருமே தீண்டத்தகாதவர்கள் தான்.

எனவே இனி மேலாவது நம்மைப் போன்ற வந்தேறி பார்ப்பனர்களால் அடக்கி ஒடுக்கப்பட்ட தீண்டத்தகாதவர்களைக் குறித்துப் பேசும்பொழுது தயவு செய்து வந்தேறி ஆரிய பார்ப்பன கூட்டத்திற்கு காவடித்தூக்குபவர்களின் பின் சென்று ஜல்லியடிக்காதீர்கள். அது தாழ்த்தப்பட்டவர்களான நமக்குத் தான் நாற்றம்.

Sunday, November 12, 2006

தவிக்கும் இளம்தளிர்!


வலையுலக சகோதரர்களே!

இயன்றவர்கள் இந்த இளம்தளிருக்கு உதவுங்கள்.

Friday, November 10, 2006

எங்கிருந்தாலும் வாழ்க!

நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 30 லட்சம் தலித் மக்கள் ஒரே சமயத்தில் புத்த மதத்திற்கு மாறியுள்ளனர். இவர்களில் நாக்பூரில் மட்டும் 20 லட்சம் பேர் புத்த மதத்திற்கு மாறியுள்ளனர்.

உலகிலேயே இந்தியாவில்தான் மதமாற்றம் அதிக அளவில் நிகழ்ந்து வருகிறது. மதம் விட்டு மதம் மாறுபவர்களில் பெரும்பாலானவர்கள் தலித்துகள்தான். இந்து மதத்திலிருந்து பிற மதங்களுக்கு மாறுபவர்கள்தான் அதிகம் உள்ளனர்.
சமீபத்தில் லட்சக்கணக்கான தலித் மக்கள் பௌத்த மதத்திற்கு மாறிய நிகழ்ச்சி நடந்துள்ளது. மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் மாவட்டத்தில் 20 லட்சம் பேர் புத்த மதத்திற்கு மாறியுள்ளனர்.

இதுதவிர சந்திராபூரில் 6 லட்சம் தலித்துகள் புத்த மதத்திற்கு மாறினர். இதேபோல ஆந்திரா, பஞ்சாப், மத்திய பிரதேசம், உத்தரப் பிரதேசம், சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களிலும் பெருமளவிலான தலித்துகள் புத்த மதத்திற்கு மாறியுள்ளனர்.

கடந்த சில மாதங்களில் மட்டும் லட்சக்கணக்கில் தலித்துகள் மதம் மாறியுள்ளதாக தலித் மற்றும் சிறுபான்மை அமைப்பின் நிர்வாகியான சின்னா ராவ் தெரிவித்துள்ளார். இந்த மதமாற்றம் போகப் போக அதிகரிக்கவே செய்யும் என்றும் அவர் கூறினார்.
============

(1) ஜாதியக் கொடுமைகளிலிருந்து விடுதலைபெற தலித் சகோதர/சகோதரிகள் இஸ்லாத்துக்கு மாறினால் குதியாட்டம் போடும் பரிவாரங்கள், தற்போது எங்கே சென்றார்கள்?

(2)இந்தியாவில் எது நடந்தாலும் பாகிஸ்தானைக் காரணம் சொல்லி அந்நாட்டின்மீது போரெடுத்துச் செல்ல வேண்டுமென்று உளரும் தொக்காடியா கும்பல், சீனா மீதோ அல்லது இலங்கை மீதோ போரெடுத்ததுச் செல்ல தயாரா?

(3)இப்படி இலட்சக்கணக்கில் இந்து மதத்திலிருந்து விடுதலை பெறும் சகோதரர்கள் பற்றி நேசகுமார்,சிவா,ஜடாயு,எழில்,ஜயராமன் மதிப்பிற்குறிய டோண்டு சார் மற்றும் அடிவருடிகள் என்ன சப்பைக்கட்டப் போகிறீர்கள் என்பதை தமிழ் கூறும் நல்லுலகம் அறிந்து கொள்ள ஆவலாக இருக்கிறோம்.

http://www.thehindu.com/2006/10/15/stories/2006101502721000.htm

எங்கிருந்தாலும் வாழ்க!

நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 30 லட்சம் தலித் மக்கள் ஒரே சமயத்தில் புத்த மதத்திற்கு மாறியுள்ளனர். இவர்களில் நாக்பூரில் மட்டும் 20 லட்சம் பேர் புத்த மதத்திற்கு மாறியுள்ளனர்.

உலகிலேயே இந்தியாவில்தான் மதமாற்றம் அதிக அளவில் நிகழ்ந்து வருகிறது. மதம் விட்டு மதம் மாறுபவர்களில் பெரும்பாலானவர்கள் தலித்துகள்தான். இந்து மதத்திலிருந்து பிற மதங்களுக்கு மாறுபவர்கள்தான் அதிகம் உள்ளனர்.
சமீபத்தில் லட்சக்கணக்கான தலித் மக்கள் பௌத்த மதத்திற்கு மாறிய நிகழ்ச்சி நடந்துள்ளது. மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் மாவட்டத்தில் 20 லட்சம் பேர் புத்த மதத்திற்கு மாறியுள்ளனர்.

இதுதவிர சந்திராபூரில் 6 லட்சம் தலித்துகள் புத்த மதத்திற்கு மாறினர். இதேபோல ஆந்திரா, பஞ்சாப், மத்திய பிரதேசம், உத்தரப் பிரதேசம், சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களிலும் பெருமளவிலான தலித்துகள் புத்த மதத்திற்கு மாறியுள்ளனர்.

கடந்த சில மாதங்களில் மட்டும் லட்சக்கணக்கில் தலித்துகள் மதம் மாறியுள்ளதாக தலித் மற்றும் சிறுபான்மை அமைப்பின் நிர்வாகியான சின்னா ராவ் தெரிவித்துள்ளார். இந்த மதமாற்றம் போகப் போக அதிகரிக்கவே செய்யும் என்றும் அவர் கூறினார்.
============

(1) ஜாதியக் கொடுமைகளிலிருந்து விடுதலைபெற தலித் சகோதர/சகோதரிகள் இஸ்லாத்துக்கு மாறினால் குதியாட்டம் போடும் பரிவாரங்கள், தற்போது எங்கே சென்றார்கள்?

(2)இந்தியாவில் எது நடந்தாலும் பாகிஸ்தானைக் காரணம் சொல்லி அந்நாட்டின்மீது போரெடுத்துச் செல்ல வேண்டுமென்று உளரும் தொக்காடியா கும்பல், சீனா மீதோ அல்லது இலங்கை மீதோ போரெடுத்ததுச் செல்ல தயாரா?

(3)இப்படி இலட்சக்கணக்கில் இந்து மதத்திலிருந்து விடுதலை பெறும் சகோதரர்கள் பற்றி நேசகுமார்,சிவா,ஜடாயு,எழில்,மதிப்பிற்குறிய டோண்டு சார் ஆகியோர் என்ன சப்பைக்கட்டப் போகிறீர்கள் என்பதை தமிழ் கூறும் நல்லுலகம் அறிந்து கொள்ள ஆவலாக இருக்கிறோம்.

Sunday, October 1, 2006

மடராமனுக்கு ஜே!

//துலுக்கர்கள் என்ற சொல் அவர்கள் இந்த தேசத்தில் ஊடுருவியவர்கள் என்பதால் ஆரம்பமானது. அந்த சரித்திர உண்மை அந்த இன மக்களுக்கு அவமானமாக தோன்றுவது நியாயமே. ஆனால், அதற்காக அந்த தூய தமிழ்வார்த்தையில் ஏதும் குறை இல்லை.//

சொன்னவர் யார் தெரியுமா? சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் மத்திய ஆசியாவிலிருந்து மொள்ளமாரித்தனம் சகிக்க முடியாமல் அடித்து விரட்டப்பட்டு போக போக்கிடம் இன்றி, நிரந்தரமாக வாழ வழியின்றி, வாழ்வாதாரம் தேடி கைபர் போலன் கணவாய் வழியாக ஆடுமாடுகளை மேய்த்தவாறு வடமேற்கு இந்தியாவில் ஊடுறுவிய வந்தேறி பார்ப்பனர்களின் பரம்பரையில்(சற்று அழுத்தி படியுங்கள் காரணம் இருக்கிறது) வந்த நம் உளறுவாய் சகோதரர் ஜயராமன் தான்.

அவ்வாறு கால்நடைகளுடன் கால்நடையாக வந்தேறியவர்கள், இந்தியாவின் பூர்வீக குடிகளான திராவிடர்களின் தெய்வங்களை இழிவுபடுத்தியதோடு, மநுவின் வர்ண அடிப்படையிலான சட்டங்களை நடைமுறைப்படுத்தி சகோதரர்களாய் இருந்தவர்களை பிறப்பின் அடிப்படையில் பிளவுபடுத்தியதால், கோவில், கடைத்தெரு, குளம் என அனைத்து பொது இடங்களிலும் ஒதுக்கி வைக்கப்பட்டு, இடுப்புக்கு மேல் ஆடை அணிய உரிமை மறுக்கப்பட்டு, தலை நிமிர்ந்து நடக்க கூட அனுமதியின்றி சுடுகாட்டில் கூட இருப்பிடம் மறுக்கப்பட்டவர்களாய் சூத்திரனாக அடக்கி ஒடுக்கப்பட்டு அடிமைகளை விடக்கேவலமாக இருந்த காலகட்டத்தில், சமத்துவம், சகோதரத்துவம் என்ற முழக்கத்தை வாழ்வில் நடைமுறைபடுத்திக் காட்டும், அரேபியாவிலிருந்து சில அரபி வியாபாரிகளுடன் கப்பலேறி வந்த இஸ்லாத்தை ஏற்று வந்தேறி பார்ப்பனர்களின் அடக்கு முறைகளிலிருந்து விடுதலை பெற்று உத்வேகத்துடன் இந்தியாவை ஒருங்கிணைத்து, ஆங்கிலேயர்களுக்கு எதிராக இந்திய சுதந்திரப்போரில் சொத்துக்களையும் சுகங்களையும் இழந்து, வந்தேறி பார்ப்பன சங்க் கூட்டம் வெள்ளையர்களுக்கு அடிவருடிகளாக இருந்து அவர்கள் வீசும் எச்சில் எலும்புத்துண்டுகளுக்காக அவர்களுக்கு இந்தியாவை காட்டியும் கூட்டியும் கொடுத்து ஆக்ரமித்தவை போக எஞ்சியுள்ள கல்வி, வேலை வாய்ப்புகளில் உரிமை கேட்டு கெஞ்சிக் கொண்டிருக்கும் இந்நாட்டின் மைந்தர்களான திராவிட பழங்குடிகளான முஸ்லிம்களை ஊடுருவியவர்கள் என்று உளறியதோடு நில்லாமல், அதுவே வரலாற்று உண்மை எனப்பிதற்றுகிறது இந்த வந்தேறி பரம்பரை!.

ஜயராமன் மடராமன் ஆன கதையை ஆரம்பிப்பதற்கு முன், வந்தேறி பார்ப்பன ஜயராமன் கும்பல் முதல் முறையாக வந்தேறி என்பதை அவமானமாகக் கருதுவதாக ஒப்புதல் வாக்கு மூலம் தந்ததற்கும், தன்னை மீண்டும் மீண்டும் மடராமன் என்று நிரூபிப்பதற்கும் முதலில் வாழ்த்துக்களை கூறிக் கொள்கிறேன்.

சிறிது நாட்களுக்கு முன்பு வரை நன்றாக இருந்த சகோதரர் வந்தேறி ஜயராமன் சமீபத்தில் சில நாட்களாக எதையும் முழுமையாக அறியாமலும் அரைகுறையாக தெரிந்ததை வைத்து முன்னுக்குப்பின் முரணாகவும் உளறி வருகிறது. அந்த வகையைச் சார்ந்தது தான் மேற்கண்ட உளறலும்.

இதனை அப்பட்டமான உளறல் என நிரூபிப்பதற்கு முன் வந்தேறி ஜயராமனின் கண்டுபிடிப்புகளும் கிடைக்கும் ஒரு செய்தியை கவனமாக ஆராயும் அறிவும் எவ்வளவு ஆழமானது என்பதற்கான ஒரு ஆதாரத்தை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

இணையக்குரல் என்ற வலைப்பூவில் "DYFI தொண்டரை ஆர்.எஸ்.எஸினர் வெட்டிக் கொன்றனர்." என்ற பதிவிற்கு நம் வந்தேறி ஜயராமன் அவர்கள் போட்ட ஓர் பின்னூட்டத்தை(அதன் பிறகு அத்திசையிலேயே போகவில்லை) பாருங்கள்:

"சசிகுமாரை எதற்காக தாக்கினார்கள் என்று சொல்லவில்லையே? என்னவோ அறைகுறையாக எழுதினதாக படுகிறது."

இப்பொழுது அப்பதிவில் இது தொடர்பாக வரும் வாசகத்தை கவனியுங்கள்:

"கொடுங்கல்லூர்: பொழங்காவ் செம்பனேழத்து(செம்பநாடன்) ராஜு(35) என்ற DYFI தொண்டரை இரவு 2 மணிக்கு வீடுபுகுந்து வெட்டிக் கொன்றனர். இவர் தனது மனைவியின் சகோதரி வீட்டுக்கு விருந்துக்கு வந்திருந்த பொழுது இந்த அசம்பாவிதம் நடந்தது. மேற்கு வெம்பல்லூர் அம்பலத்திற்கு சமீபமுள்ள இவரின் மனைவியின் சகோதரி வீட்டுக்கு வந்திருந்த பொழுது இச்சம்பவத்தை திட்டமிட்டு ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் செய்ததாக இருங்காலக்குட DSP சசிக்குமார் கூறினார்."

இதில் சசிக்குமார் யார் எனத்தெரிகிறதா? சசிக்குமார் காவல்துறை அதிகாரி என்பது தமிழ் படிக்கத் தெரிந்த, கண்பார்வை சரியாக உள்ள அனைவருக்கும் நன்றாகத் தெரியும். இப்பொழுது நம் ஜெயராமன் அவர்களின் பின்னூட்டத்தில் இரண்டாவது வரியை கவனியுங்கள். எழுதியவரை அரைகுறையாக எழுதி இருக்கிறார் என சந்தேகப்படுகிறார். யார் அரைகுறை? இதைத் தான் இரு காதும் இல்லாதவள் ஒரு காது இல்லாதவளைப் பார்த்து குறை கூறினாளாம் என்பார்களோ?
வந்தேறி ஜயராமனின் அறிவோ அறிவு. மெய்சிலிர்க்கிறது போங்கள். இந்த லட்சணத்தில் உள்ளவர் தான் துருக்கியர் விஷயத்தில் திடீரென மொழி-வரலாற்றாசிரியர் ஆகியிருக்கிறார். ஆய்வின் முடிவு எப்படியிருக்கும் என்பதை இதிலிருந்தே விளங்கிக் கொள்ளலாம். சரி இனி விஷயத்திற்கு வருவோம்.

வந்தேறி ஜயராமனின் புதிய வரலாற்றாய்வில் அவர் இரு விஷயங்களை கண்டுபிடித்திருக்கிறார்.

1. துலுக்கர்கள் இந்நாட்டில் ஊடுருவியவர்களாம்.
2. அது வரலாற்று உண்மையாம்.

அவரின் மொழி ஆய்வில் ஒரு முடிவினைக் கூறியிருக்கிறார். அது,

"துலுக்கன் என்பது தூயத் தமிழ் சொல்லாம்".

இதில் இரண்டாவது மொழி ஆய்வு முடிவை எடுத்துக் கொள்வோம். முதல் விஷயத்திற்கு பின்னர் வருகிறேன்.

துலுக்கன் என்றச் சொல் துருக்கன் என்பதன் மருவி என்பதை அனைவரும் அறிவர். இதையே பாரதி என்ற ஜாதிவெறி பிடித்த முண்டாசு பார்ப்பனன், "திக்கை வணங்கும் துருக்கரும்" என்று இஸ்லாத்தை விளங்காமல் அல்லது அரைகுறையாக விளங்கி முஸ்லிம்களின் வழிபாட்டைப் பற்றி சரியாக அறியாமல் கிறுக்குத்தனமாகப் பாடினான். ஒரு முட்டாள் மற்றொரு முட்டாளுடன் தான் சேரும். அது போன்றே ஒரு பார்ப்பன உளறல் பேர்வழி அப்பரம்பரையில் வந்த மற்றொரு பார்ப்பன உளறல் பேர்வழி கூறியதை பெரிய வரலாற்று ஆதாரமாக கூறுகிறது.

துருக்கி என்பது ஒரு நாட்டின் பெயராக இருக்கலாம். அதனாலென்ன? இறுதியில் தமிழ் எழுத்து 'ன்'ஐ இணைத்து விட்டால் முழுதுமே தூய தமிழ்ச் சொல்லான 'துருக்கன்' என்றாகி விடும்.

அதுபோலவே சிரியா என்பது எந்தமொழிச் சொல்லாக இருந்தாலும் 'சிரியன்' என்பது தூய தமிழ்ச் சொல்லே! அவ்வாறே அமெரிக்கா, ஆஸ்த்ரேலியா, ஆப்பிரிக்கா என்ற சொல்லுக்கு இறுதியில் ஒரு 'ன்' மட்டும் சேர்த்து விட்டால் அது தமிழாகி விடும்.

இதைத் தான் நவீன மொழி-வரலாற்றுப் பேராசிரியரான வந்தேறி பார்ப்பன மடராமன் “துலுக்கன் என்பது தூயத் தமிழ் சொல்” என்கிறது. இதை மறுப்பவர் அனைவரும் அதன் அகராதியில் திம்மிகள்.

என்னே கண்டுபிடிப்பு. இதனால் தான் இதை உளறல் என்றேன். இந்த உளறலுக்கு வந்தேறி ஜயராமனுக்கு கிடைத்த வரலாற்று ஆதாரம் தான் அதன் பரம்பரையில் வந்த ஜாதிவெறிப்பிடித்த முண்டாசு கவியின் "திக்கை வணங்கும் துருக்கரும்" வாசகம்.

மூன்று சொற்கள் கொண்ட வாசகத்தில் இரு சொற்கள் பிழைகள். இங்கு வந்தேறி முண்டாசு துருக்கர் எனக்கூற வருவது முஸ்லிம்களை எனில் ஒரு முஸ்லிமாகிய நான் கூறுகிறேன்: "முஸ்லிம்கள் திக்கை வணங்கவில்லை".

இந்த உளறலை ஆதாரமாக காட்டிய வந்தேறி ஜயராமன் நான் கூறிய "முஸ்லிம்கள் திக்கை வணங்கவில்லை" என்ற கூற்றை மறுத்து அதனை நிரூபிக்க தயாரா?

தயார் இல்லை எனில் வந்தேறி பார்ப்பன முண்டாசு கவி கூறிய கூற்று சுத்த உளறல் என வந்தேறி ஜயராமன் ஒத்துக் கொள்ளவேண்டும்.

ஒரு உளறலை மற்றொரு உளறல் பேர்வழி உளறிக் கொண்டு நடக்கிறது என்பதற்கு இதனை விட அதிகம் விளக்கம் தேவையா என்ன?

குறிப்பு: வந்தேறி ஜயராமனின் வரலாற்று ஆய்வில் கிடைத்த இரு முடிவுகளை குறித்து இறைவன் நாடினால் விரைவில் காண்போம். மேலும் யார் இந்நாட்டின் வந்தேறிகள்? எதனால் திரும்பத்திரும்ப வந்தேறிகள் என்ற வாசகம் பயன்படுத்தப்படுகிறது? இன்றைய நிலையில் யாரை வந்தேறிகள் எனக் கூறலாம் என்பவற்றைக் குறித்து ஆதாரத்துடன் காணலாம்.

Tuesday, September 26, 2006

மானங்கெட்டதுகள்......

முன்னறிவிப்பு: (வலையில் பெரிய மனுசன் வேஷமிடும் சில வெட்கங்கெட்டதுகளின் உள்மன வக்கிரத்தையும் அதற்கு காரணமான அவைகளின் கேடுகெட்ட பாரம்பரியத்தையும் தோலுரித்துக் காட்டுவதே இப்பதிவின் நோக்கம். அல்லாமல் தேவையில்லாமல் யாரையும் வசைபாடுவது இப்பதிவின் நோக்கமல்ல. பதிவின் தலைப்புக்கு உள் செல்லும் பொழுது சில கடினமான வார்த்தைகள் வரலாம். அவை எந்த தனி மனிதரையும் அவசியமின்றி கேவலப்படுத்தும் எண்ணத்தோடு வெளிப்படுபவை அல்ல. உண்மை சில வேளைகளில் சுடவே செய்யும். அது கீழ்த்தரமானவர்களை கேவலப்படுத்தவும் செய்யும். அதற்கு நான் பொறுப்பல்ல.)

நாட்டின் பாதுகாப்புக்கும், சமூக ஒற்றுமைக்கும் ஊறு விளைவிக்கும் மிகப்பெரிய பிரச்சினையாக தற்போது உருவெடுத்திருப்பது முஸ்லிம்களுக்கு வழங்கப்படும் ஹஜ் புனிதப்பயணத்திற்கான மானியம்/தள்ளுபடி/அன்பளிப்பு (ஏதோ ஒரு எழவு) ஆகும் (உண்மை தாங்க. இந்த துலுக்கப்பயலுவளுக்கு அரசாங்கமே பணத்தைக் கொடுத்து புனிதப்பயணம் என்கிற பெயரில் தீவிரவாத நாடு சவூதிக்கு அனுப்பி, அவனுங்க அங்கே இருந்து கர்ப்பிணி பெண்களின் வயிற்றைக் கீறி பச்சைக்குழந்தைகளை எடுத்து நெருப்பில் வீசி கொன்றொழிப்பது எப்படி எனவும், நாட்டின் பெரிய பெரிய முக்கிய பதவிகளில் எப்படியாவது பற்றிப் பிடித்து பின்னர் அரசு முக்கிய ஆவணங்களை அன்னிய நாடுகளுக்கு விற்பது எப்படி எனவும் பயிற்சி எடுத்துக் கொண்டு இங்கு வந்து மற்ற சமூக பெண்களையும் குழந்தைகளையும் கருவறுத்து நாட்டின் ஒற்றுமைக்கும், பாதுகாப்புக்கும் மிகப்பெரிய சவாலாக இருக்க உதவுவது மிகப்பெரிய பிரச்சனை இல்லையா என்ன?)

இதனைக் குறித்து சகோதரர் என்றென்றும் பாலா அவர்கள் ஒரு விவாதத்தைத் தொடங்கி வைத்தார். தங்களின் நிலை நிற்பிற்கு மிகப்பெரிய சவாலான சமத்துவம், சகோதரத்துவத்தை நடைமுறையில் உலகிற்கு படிப்பிற்கும் முஸ்லிம் சமூகத்தின் மீது வசைமாரி பொழிய எங்கு தருணம் கிடைத்தாலும் உடனே அங்கு வந்து தனது உள்மன அழுக்குகளை/வக்கிரங்களை வாரி வீசி விட்டுப் போகும் வந்தேறி அவாள்கள் கூட்டத்திற்கு அல்வா கிடைத்தது போல் ஆனது இப்பதிவு. நேர்மையாக விவாதத்தைக் கொண்டு போக வேண்டும் என முதலில் நினைத்த சகோதரர் பாலாவிற்கு திடீரென எழுந்தது "பின்னூட்ட மோகம்". "வலையுலக தெண்டுல்கர்" மோகம் அவருக்கு மட்டும் இருக்காதா என்ன? நல்ல சிந்தையுடன் ஒரு கருத்துப்பரிமாற்றத்தைத் தொடங்கி வைத்த அவருக்கு அந்த மோகத்தை கொடுத்ததும் துரதிஷ்டவசமாக அதே "வலையுலக தெண்டுல்கர்(!)" தான்.

எலும்புத்துண்டுக்கு காத்திருக்கும் நாய்கூட்டம் கிடைத்த தருணத்தை எப்பொழுதாவது நழுவ விட்டிருக்கிறதா என்ன? பாய்ந்து வந்தன வந்தேறி பார்ப்பன கூட்டம். வசையை ஆரம்பித்தன. அதில் ஹைலைட் திருவாளர் வெட்கம்கெட்ட(இது புதிதாக சேர்த்துக் கொள்ளப்பட்டது. விளக்கம் பின்னர் வரும்) பெண்கற்பு புகழ் சகோதரர் டோண்டு அவர்கள் முஸ்லிம்களை "வெட்கம் கெட்டவர்கள்" என்றது தான். மானம், ரோசம், வெட்கம் கெட்ட தோல் ஆமைத்தோலை விட கட்டியானவர்கள் யார் என்பதை விரிவாக பார்ப்பதற்கு முன் "பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டிய" சகோதரர் பாலா அவர்களின் வினோத செயலை சற்று பார்ப்போம்.

நல்ல நோக்கத்தில் பதிவை ஆரம்பித்த சகோதரர் பாலாவின் மனதில் "பின்னூட்ட போதையை" மனதில் விதைத்தது "வலையுல தெண்டுல்கர்(!)" என்று நான் முதலிலேயே கூறினேன். பாருங்கள் அந்த மனதில் வக்கிரம் நிறைந்த "வலையுலக தெண்டுல்கரின்" முதல் பின்னூட்டத்தை:

"என்ன பாலா இது, இவ்வளவு முக்கியமான விஷயத்துக்கு இவ்வளவு பின்னூட்டங்கள்தானா?

அது சரி இசுலாமியப் பதிவாளர்கள் யாரும் மூச்சு கூட விடவில்லையே? என்ன சமாச்சாரம் ?"


ஒரு பதிவில் பின்னூட்டமிடுபவர்கள் தன் கருத்தைக் கூறி மற்றதை எதிர்ப்பார்ப்பார்கள். மன வக்கிரம் வெளிப்படும் விதம் அருமை. இதில் இரு விஷயங்கள் உள்ளன. முதலில் பாலாவிற்கு பின்னூட்ட போதையை ஊட்டுகிறார். கூடவே இஸ்லாமிய பதிவர்களை கருத்து கூற மிக கண்ணியத்துடன் அழைக்கிறார்.

இப்பின்னூட்டம் பாலாவின் சிந்தனையை மாற்றியதோ என்னமோ பின்னர் வந்த அத்தனை காறித்துப்பல்களையும் வாங்கி பையில் போட்டு தன் பதிவை நாற்றப்பின்னூட்டங்களால் நிரப்பினார். தன்னுடைய சூழ்ச்சிக்கு பாலாவை சரியான இரை ஆக்கிய அதே "வலையுலக தெண்டுல்கர்(!)" மீண்டும் முஸ்லிம்களை வம்புக்கிழுப்பதை பாருங்கள்:

யாரோ ஒருவர் "இது ஒரு பொருக்கிப் பதிவா," எனக் கேட்டு பதில் போட்டிருக்கிறார். அப்பதிலில் உள்ள வாசகம் பதிவைக் குறிக்கிறது. ஆனால் "வலையுலக தெண்டுல்கரின்(!)" உடனடி பதிலப் பாருங்கள்.

"என்னை ஏதோ திட்டி எழுதியிருக்கிறீர்கள் என்று தெரிகிறது. பாலா அதை எடிட் செய்து விட்டார். அந்தத் திட்டுக்களை நான் ஏற்றுக் கொள்ளாததால் உங்களுக்கே அவை உரித்தாகட்டும்.

எதற்கெடுத்தாலும் பார்ப்பனியம் , உயர்சாதியம் என்றெல்லாம் எழுதுவதற்கெல்லாம் பதில் எதிர்ப்பார்க்கப்படுகிறது அல்லவா ? இதற்கும் பதில் கொடுக்கட்டுமே. என்ன, ஏதாவது உருப்படியான பதில் கைவசம் இருக்க வேண்டும். அது இல்லாத போது பதிலையும் எதிர்ப்பார்க்க முடியாதுதான். "


இவரை அப்பின்னூட்டம் திட்டியது என்பது இவருக்கு எப்படி தெரிந்தது? பாலா எடிட் செய்து போட்டது பதிவைக் குறிக்கும் வாசகமே. பின் எப்படி அது இவரைத் திட்டுவது ஆகும். தானே ஒரு பதிலை "பொறுக்கியாக" வந்து போட்டிருந்தால் மட்டுமே அப்பின்னூட்டத்தில் என்ன அடங்கியிருந்தது என்பதை அறிய சாத்தியமிருக்கிறது. இல்லையெனில் பாலா தனியாக இவருக்கு அப்பதில் உங்களை திட்டி வந்தது எனத் தெரிவித்திருக்க வேண்டும். இங்கு என்ன நடந்தது? இறைவனுக்கே வெளிச்சம்.

"பொறுக்கிக்கு" உடனடியாக இவர் கொடுத்த பதில் "எங்கப்பன் குதிருக்குள் இல்லை" என்பது போல் அவரை காட்டிக் கொடுத்து விட்டது. தானே ஒரு பின்னூட்டம் போடுவது பின்னர் அதற்கு பதிலாக மீண்டும் முஸ்லிம்களை வம்புக்கிழுப்பது. வலையில் சாதாரணமாக நடக்கும் விஷயம் தானே இது. போகட்டும் "பொறுக்கிகளுக்குரிய" வேலையை சரியாகத் தான் செய்திருக்கிறார்.

இவ்வளவு தரக்குறைவாக நடந்தபின்னும் சகோதரர்கள் நல்லடியார் மற்றும் சலாஹுத்தீன் போன்றவர்கள் அழகான விளக்கம் இப்பதிவிற்கு கொடுத்தனர். அதற்கு சகோதரர் பாலா அவர்கள்:

" நல்லடியார், சலாவுதின் ,

விரிவாக விளக்கம் தந்ததற்கும், கருத்துக்களை பகிர்ந்தமைக்கும் என் நன்றிகள். நீங்கள் கூறியிருப்பவை , பெரும்பாலும் நியாயமானவையே.

//7. முஸ்லிம்கள் 'மானியம் வேண்டும்' என்று டிமாண்ட் செய்யவில்லை. அதே நேரத்தில், அரசே மானியம் அளிக்க முன்வரும்போது அதை வேண்டாம் என மறுக்க வேண்டிய அவசியமும் இல்லை.
//
முழுதும் உடன்படுகிறேன்."


இதன் பிறகு தான் ஹைலட்டே. ஒருபக்கம் நல்ல முறையில் சகோதரர்கள் பதிலளிக்க அதை பிரசுரித்து அதற்கு உடன்படுவதாக கூறிய அதே பாலா மறுபக்கம் வந்தேறிகளின் மனவக்கிரங்களை ஏந்திவரும் பின்னூட்டங்களையும் அப்படியே அனுமதித்துக் கொண்டிருந்தார். (முதலில் முழுவதும் அனுமதித்து பின்னர் அதனை நீக்கி/எடிட் செய்த பாலாவின் செயல்பாடு என்ன விதத்தில் சரியானது என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்)

அதில் மிக மோசமான வந்தேறி பார்ப்பனர்களின் ஆழ்மன வெளிப்பாடை திருவாளர் மானங்கெட்ட பெண்கற்பு புகழ் டோண்டு அவர்கள் வெளிப்படுத்தியிருந்தார். அவரின் பின்னூட்டங்களை வரிசையாக காண்பவர்களுக்கு இந்த காறி துப்பலை உமிழ்வதற்காக அவர் தருணத்தை எதிர்பார்த்திருந்ததையும் அதற்கு அவருக்கு சிங்கியடிக்கும் மற்ற வந்தேறி ஜால்ரா கூட்டங்கள் தருணத்தை ஏற்படுத்திக் கொடுத்ததையும் காணலாம்.

அவரின் பின்னூட்டம் இதுதான்:

"வெட்கமே இல்லாத போது வெட்கம் கெட்டு என்று ஏன் அவதூறாகக் கூறுகிறீர்கள் ? இருந்தால்தானே கெடுவதற்கு ?"

அதாவது முஸ்லிம்களுக்கு வெட்கமே இல்லையாம். "வெட்கம் நம்பிக்கையில் பாதியாகும்" என அறிவுரைப்பகரும் இஸ்லாமிய சமூகத்தைச் சார்ந்தவர்களுக்கு "வெட்கமே கிடையாதாம்".

கெட்ட வீச்சத்துடன் முழு அம்மணமாக சாலையில் திரியும் பைத்தியம், மணம் கமழும் ஆடை அணிந்து செல்பவனைப் பார்த்து எள்ளி நகையாடுவது போல் உள்ளது.

வெட்கத்தைக் குறித்து பேச ஒரு தராதரம் வேண்டாமா?. யார் யாரைப் பார்த்து வெட்கமில்லாதவர்கள் எனக்கூறுவது? முதலில் வெட்கம் என்றால் என்ன என்று இந்த கேடுகெட்ட ஜென்மங்களுக்கு தெரியுமா? மானம் சூடு சொரணை இல்லாத கேடுகெட்ட வர்க்கம் வெட்கத்தைக் குறித்து பேசுகிறதா? ஆச்சரியத்திலும் ஆச்சரியம் தான்.

எதை எதையெல்லாமோ குறித்து விவாதம் நடந்து கொண்டிருக்கும் சூழலில் வெட்கத்தைக் குறித்தும் ஒரு விவாதம் நடத்தினால் என்ன எனத் தோன்றுகிறது. வெட்கத்தைக் குறித்து மானங்கெட்ட கூட்டத்தைச் சார்ந்தவரே முதலில் ஆரம்பித்து வைத்ததால், அவரையே அழைக்கிறேன்.

"யாருக்கு வெட்கம், மானம், சூடு, சொரணை இல்லை" என்பதை குறித்து விவாதிக்க தயாரா? நான் தயார். உண்மையிலேயே வெட்கம், மானம், சூடு, சுரணை என்றால் என்ன என்று இந்தியாவைக் காட்டிக் கொடுத்து இன்று அதே இந்தியாவில் எவ்வித கூச்ச நாச்சமும் இன்றி தலையை நிமிர்த்திக் கொண்டு சுகமாக வலம் வந்து கொண்டிருக்கும் வந்தேறி பார்ப்பன சங்க் கூட்டத்திற்கு தெரியுமா?

மன்னர்களுக்கு மணியாட்டி வயிறு வளர்த்த வந்தேறி பார்ப்பன கூட்டம் காலம் இவ்வளவு முன்னேறியும் உடல் ஆடாமல் உழைப்பாளிகளின் இரத்தத்தை உறிஞ்சி பிழைக்கும் எளிய வழியான அந்த மணியாட்டலை யாருடனும் பகிர்ந்து கொள்ளமாட்டோம் என தமிழக அரசு அதற்கு எதிராக சட்டம் கொண்டு வந்தும் அடம்பிடித்துக் கொண்டு இன்றும் கோயில்களில் மணியாட்டி வயிறு பிழைத்துக் கொண்டிருக்கிறதே. பிச்சைக்காரனின் தட்டில் கையிட்டு அள்ளும் தரத்தில் உள்ள மானங்கெட்ட பிழைப்பு நடத்தும் வந்தேறிக் கூட்டமா "தாழ்ந்திருக்கும் கையை விட உயர்ந்திருக்கும் கை மேலானது" என்ற நபிகளின் பொன்மொழிக்கேற்ப வாழ்க்கை நடத்தும் முஸ்லிம்களை வெட்கம் கெட்டவர்கள் என்கிறது? காதே இல்லாதவன் இரு காதும் உள்ளவனைப் பார்த்து கேனத்தனமாக சிரிப்பது போல் உள்ளது.

இந்திய சுதந்திரப்போராட்ட நேரத்தின் பொழுது வெட்கம், மானம், ரோசம் எதுவுமின்றி முடிந்த அளவு ஆங்கிலேயனுக்கு காட்டியும் கூட்டியும் கொடுத்து பெரிய பதவிகளில் ஒட்டிக் கொண்டு சுதந்திரத்திற்காக ஒரு எள் முனை அளவு ஒரு சிறு துரும்பைக் கூட நீக்கிப் போட்டிராத தேச துரோக வந்தேறி கூட்டம் இன்று சுதந்திர இந்தியாவில் அனைத்து உயர் பதவிகளையும் பிடித்துக் கொண்டு எவ்வித கூச்சமும் இன்றி சுகம் அனுபவித்துக் கொண்டிருக்கும் வேளையில், பிறந்த நாட்டுக்காக ஆங்கிலேயனை இந்நாட்டை விட்டு அடித்து விரட்ட அந்நியனின் மொழியான ஆங்கிலத்தை படிப்பது ஹராம் என மார்க்க தீர்ப்பு வழங்கி எதிர்கால சமுதாயத்தின் முன்னேற்றத்தையே படுகுழியில் தள்ளினாலும் பரவாயில்லை அன்னியனுக்கு என் நாட்டை விட்டுக் கொடுக்க மாட்டேன் என ஒட்டு மொத்த சமுதாயமும் ஆங்கிலேயனுக்கு எதிராக திரண்டெழுந்து அனைத்து பதவிகளையும் உதறி எறிந்து தங்களது விகிதாச்சாரத்தை விட அதிக அளவில் நாட்டுக்காக வீர தியாகம் புரிந்த இந்த முஸ்லிம் சமுதாயத்தையா வெட்கமற்றவர்கள் என்கிறது? வேடிக்கையிலும் மிகப்பெரிய வேடிக்கை தான்.

பெண்களை எவனுடனும் எப்படி வேண்டுமானாலும் பாதுகாப்பாக செல்வதற்கு அரிய ஆலோசனைகள் வழங்கி அப்படி யாருக்கும் தெரியாமல் செய்ய முடியவில்லை எனில் ஒரே வழி மற்றொரு பெண்ணிடமே தீர்த்துக் கொள்வது(Fire) என தனக்கும் மனைவி, சகோதரி, மகள் என பெண்கள் இருக்கிறார்களே, அவர்கள் இதைப் படித்தால் தன்னை என்ன நினைப்பார்கள் என எவ்வித உடல் கூச்சமும் இன்றி(இதிலென்ன கூச்சம் என அதுவே கேட்கமும் செய்கிறது. இதிலிருந்து வெட்கம் என்றால் என்ன என்பதே இதற்கு தெரியவில்லை எனத் தெரிகிறது) அரிய(!) ஆலோசனைகள் வழங்கி அதனைப் படித்தவர்கள் காறி காறி மீண்டும் மீண்டும் காறி முகத்தில் உமிழ்ந்த பின்னரும் எவ்வித சூடு சொரணையும் இன்றி தன்னுடைய முகத்தை மற்றவர்களுக்கு காட்டிக் கொண்டு இருக்கும் வந்தேறி பார்ப்பன பரம்பரையில் வந்த "சிறந்த முற்போக்கு பெண்ணியவாதிகள்", அன்னிய பரங்கியன் எம்நாட்டு உடன்பிறவா சகோதரிகளை தூக்கிக் கொண்டு சென்று விட்டான் என செய்தி அறிந்த உடன் தன் உயிருக்கு உயிரான மகனை அவனுடைய திருமண நிச்சய நிகழ்ச்சியிலிருந்து வெளியே இழுத்து, "எம் பெண்டிருக்கு அவமானம் நிகழ இருக்க உனக்கு திருமண வைபவமா? செல் முதலில் எம்பெண்டிரின் மானம் காத்து வந்து உன் மண வாழ்வை தொடங்கு" என பரங்கியனிடமிருந்து எம்சகோதரிகளை மீட்க தன் ஒரே மகனை விரட்டி விட்டு அதில் தன் இன்னுயுரை இழக்கவைத்த வீரத் தாய்களின் பரம்பரையான முஸ்லிம்களை பார்த்து வெட்கம் கெட்டவர்கள் என்கிறதா?
இன்னும் இன்னும் அவாள்களின் மான, வெட்க, சூடு, சொரணைகளை அடுக்க வரலாற்றில் எத்தனையோ பரந்து விரிந்து கிடக்கின்றன. அவற்றை ஒவ்வொன்றையும் இங்கு புட்டு புட்டு வைத்து யாருக்கு வெட்கம் இல்லை என்பதை நிரூபிக்க நான் தயார்.

அவசரப்பட்டு கண்ணியமாக வாழும் ஒரு ஒட்டு மொத்த சமூகத்தின் மீது எவ்வித நாக்கூசலும் இன்றி உமிழ்ந்த வார்த்தையை வைத்து தான் கூறியது சரிதான் என நிரூபிக்க வலையுலகின் "பெரிய மனுசன்" திருவாளர் மானங்கெட்ட(இப்பொழுது இப்பட்டம் ஏன் என்பது புரிந்திருக்கும் என நினைக்கிறேன்) திருவாளர் பெண்கற்பு புகழ், "சிறந்த முற்போக்கு பெண்ணியவாதி" டோண்டு அவர்கள் தயாரா?

இல்லை அய்யோ அய்யோ இங்கே பாருங்கப்பா எப்படிப்பட்ட தனிமனித தாக்குதல் என தன்னுடைய ஜிங்கிகளை வைத்து ஒப்பாரி வைத்து ஓடி ஒழியப்போகிறாரா?

Friday, September 22, 2006

ஸ்பெஷல் சமையல்!

காலையில் மடல்களை பிரித்து மேய்ந்து கொண்டிருந்த போது இடையில் வித்தியாசமான சில மடல்கள் கண்ணில் பட்டன. அனைத்திலும் நல்ல காரத்துடன் கூடிய சமையல் வாசனை. என்னடா இது மடல்களிலேயே சமையல் வாசனை வர ஆரம்பித்து விட்டதே? என்னவாக இருக்கும் எனப்பிரித்து ருசித்தால் யப்பா யப்பப்பா, காரம் அத்தனை காரம். கண்ணைக் கட்டிய காரத்துடன் இருந்தாலும் சமையல் வித்தியாசமாக வெகு ருசியுடன் இருந்தது.

அதனை இங்கு பரிமாறுகிறேன். ரசித்து, ருசித்து கருத்து கூறுங்கள்.


@ ************************** @

முன் குறிப்பு:

இவ்வாக்கம், நேசகுமார் என்பவர், திண்ணையில் உளறியதற்கான எதிர்வினையாகும். இதைத் திண்ணை பிரசுரிக்கவில்லை. தனிமனித எள்ளல் என்பதாகத் திண்ணை காரணம் வைத்திருக்கலாம். வலைப் பதிவர்களுள் பத்தோடு பதினொன்றான, அந்தப் பதினொன்றிலும் மனநோயாளியான நேசகுமாரை எள்ளுவது திண்ணையின் பாலிஸிக்கு எதிரானதாக இருக்கலாம். கோடானுகோடி முஸ்லிம்களின் உயிரினும் மேலான தலைவர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை மனம்போனவாறு திட்டித் தீர்ப்பது தனிமனிதத் தாக்குதலில்லையா? அதைப்பிரசுரிப்பது எழுத்து வக்கிரமில்லையா? நல்ல பாலிஸிதான் போங்க!
___________________________________________________

ஜன்னல் ஜர்னலிஸம் கேள்விப் பட்டிருப்பீர்கள். கிச்சன் ஜர்னலிஸம்? அதுதான் கமலா சுரைய்யா விஷயத்தில் நடந்தது. சமையலறையைச் சுத்தம் செய்து விட்டு, கழிவுகளைத் தெருவிலுள்ளக் குப்பைத் தொட்டியில் கொட்ட வந்த சுரைய்யாவின் வீட்டு வேலைக்காரியை இடைமறித்தது ஒரு பரிதாபக் குரல்: "அம்மோய்! இந்தப் பக்கமா போடுங்கம்மோய்" என்று கெஞ்சிக் கூத்தாடிக் கமலா சுரைய்யா வீட்டுக் கழிவுகளை வாங்கிப் போய், அந்தக் கொஞ்சக் கழிவுகளோடு, தன்னிடம் மிகுதியாய் மிஞ்சியிருந்தவற்றைப் போட்டுக் கலக்கி, தானே சமைத்ததுபோல் 'மடுத்த' தட்டில் வைத்து 'மாத்ருபூமி'யில் பரிமாறினார் அதன் ஃபோட்டோகிராஃபர்.

"ஆஹா எவ்வளவு அற்புதமான உணவு! என்னே மணம், என்னே ருசி! மலையாளிகள் மட்டும் இதை உண்பதா? தனியொரு தமிழனுக்கு இவ்வுணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்" என்ற சூளுரையோடு அதற்கு உள்ளூர் மசாலா தூவி, திண்ணைத் தட்டில் வைத்துச் சுடச்சுடப் பரிமாறினார் இரா.முருகன்.

இதெல்லாம் இருபது மாதங்களுக்கு முன்னர் பரிமாறப் பட்டு ஆறிப்போன அவியல்.

உடனடியாக தேஜஸிலும் அண்மையில் விகடனிலும் வெளிவந்த கமலா சுரைய்யாவின் உண்மையான பேட்டிகளையும் இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டதிலிருந்து இன்றுவரை மாறாத கமலா சுரைய்யாவின் நிலையையும் அறியாமல் திண்ணையில் உளறி [சுட்டி-1], அபூசுமைய்யா [சுட்டி-2] மற்றும் இப்னு பஷீர் [சுட்டி-3] ஆகியோரின் உறுதியான சான்றுகளுடன் கூடிய, நிதானமான எதிர் வினைகளால் முகமிழந்து நிற்கும் நேசகுமார் என்பவரைப் பற்றி அறிய முற்பட்டபோது சில திடுக்கிடும் உண்மைகள் வெளியாகின!

இவருடைய அகநோயின் வீரியம் புரியாமல், 'நட்புக்கான வழியும் மொழியும்' என்று நாகூர் ரூமி, இவருக்கு அமிர்தாஞ்சன் தடவி [சுட்டி-4] குணப் படுத்த வீண் முயற்சி செய்துள்ளார்.

இஸ்லாமோஃபோபியா என்ற மன நோயினால் மிகக் கடுமையாகப் பீடிக்கப் பட்டுள்ள இவருக்கு அனுபவமுள்ள சிறந்த மருத்துவர்களான அபூஆதில், அபூமுஹை, அப்துல்லாஹ், சுட்டு விரல், ஸலாஹுத்தீன், அக்பர் பாஷா, நல்லடியார், சுவனப் பிரியன், இப்னு பஷீர் போன்றோரால் தொடர் சிகிச்சை அளிக்கப் பட்டுள்ளது.

மருத்துவர்கள் எழுதிக் கொடுக்கும் மருந்துகளை இவர் 'உள்வாங்க' மறுப்பதால் உளறல் நோய் நீங்கிய பாடில்லை. அதனால்தான் ஜிஹாதைப் பற்றி முன்னர் உளறியதையே மீண்டும் மீண்டும் உளறிக் கொட்டுகிறார் [சுட்டி-5].

இவரது தொடர் உளறல்களுக்கு, குறிப்பாக "முஹம்மது விஷம் வைத்துக் கொல்லப் பட்டார்" என்ற உளறலுக்கு, திண்ணை மருத்துவர் ஒருவரும் தம்மால் முடிந்தவரை சிகிச்சை அளித்திருக்கிறார்; [சுட்டி-6] ம்ஹூம், பயனில்லை.

இவருக்கு அளிக்கப் பட்டத் தொடர் சிகிச்சையையும் இவருடைய அத்து மீறிய உளறல்களையும் தொடர்ந்து கவனித்துக் கொண்டிருந்த கம்பவுண்டர் இறை நேசன் என்பவர் இவரை 'மறை கழண்ட கேஸு' என்று [சுட்டி-7] முடிவுக்கு வந்திருக்கிறார்.

இறை நேசனின் முடிவில் எனக்கு உடன்பாடில்லை. இவர் மறை கழண்ட கேஸல்ல; மாறாக, தேறாத கேஸ் என்பது என் கணிப்பு.

மன நோயாளி என்பதால் இவர் மீது பரிவும் இவருடைய உளறல்களால் சில முஸ்லிம்கள் மருத்துப் படிப்பைப் படித்து முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள் என்ற நன்றியுணர்வும் ஒருபுறமிருந்தாலும் இவர் மேலும் மேலும் உளறிக் கொட்டுவதைப் பார்க்கும்போது - அதுவும் திண்ணை என்ற திறந்த வெளியில் - இவர் மீது பரிதாமே எஞ்சி நிற்கிறது!

@ ******************* @

சுட்டிகள்:

1- http://www.thinnai.com/?module=displaystory&story_id=80609081&format=html

2- http://www.thinnai.com/?module=displaystory&story_id=20609081&edition_id=20060908&format=html

3- http://www.thinnai.com/?module=displaystory&story_id=20609158&format=html

4- http://www.tamiloviam.com/unicode/11030512.asp

5- http://www.thinnai.com/?module=displaystory&story_id=20609155&format=html

6- http://www.thinnai.com/?module=displaystory&story_id=80501205&format=html

7- http://copymannan.blogspot.com/2006/09/blog-post_05.html
@ ********************* @

நன்றி : கிச்சன் ஜர்னலிஸம் - வஹ்ஹாபி.

Tuesday, September 19, 2006

இது (குள்ள) நரிகளுக்கான அழைப்பிதழ்!

சகோதரர் ஜோ அவர்களின் போப்பாண்டவரும் இஸ்லாமும் -சர்ச்சை என்ற பதிவில் சில கருத்துக்களை கூறியிருந்தேன். எப்பொழுதும் போல் சந்தில் சிந்து பாடும் சிலர் அங்கும் வந்து என்னுடைய கருத்துக்களை திசை திருப்பி தங்களது மனவக்கிரத்தை தீர்த்துக் கொண்டிருக்கின்றனர்.

அங்கு அவர்களுக்கு கொடுத்த பதிலை இங்கு வைக்கிறேன். அவர்களுக்கான திறந்த அழைப்பிதழே இப்பதிவு. தொடர்ந்து அங்கு இதனைக் குறித்து விவாதித்தால் பதிவின் நோக்கம் திசைதிரும்பும் வாய்ப்பிருப்பதால் அவர்களுக்காக மலர்களில் ஒரு களம் ஒதுக்கும் ஏற்பாடே இது.


எதிர்பார்த்தது போல் திசைதிருப்பல் அருமையாக நடந்துள்ளது.

ஒரு உதாரணம்:

//போர் நடக்கப்போவது இஸ்லாமியர்களுக்கும் இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கும்(அமெரிக்கர்,அய்ரோப்பியர் எல்லாம் வேறு யாராம்)//

அமெரிக்கர் ஐரோப்பியர் எல்லாம் முஸ்லிம் அல்லாதவர்களாம்.
நான் ஏற்கெனவே போட்ட பின்னூட்ட வாசகத்தை திரும்பவும் ஒருமுறை படித்துக் கொள்ளுங்கள்.

//இரு சகோதரர்களுக்கிடையில் மூட்டிவிட்டு குளிர்காய நினைத்து ஏமாந்த குள்ளநரிகள்//

மூட்டி விட்டு குளிர்காய நினைக்கும் இரத்த வெறிபிடித்த அசோக் சிங்கால், தொகாடியா, மோடி கூட்டங்களுக்கு ஒரு வேண்டுகோள். உங்களின் கோணபுத்தியையும், வக்கிர எண்ணங்களையும் இங்கு வந்து கொட்ட வேண்டாம்.

நல்ல எண்ணத்தில் கருத்து வேறுபாடு கொண்ட இரு சமூகங்களின் செயல்பாடுகளை குறிப்பிட்டு மனங்களுக்கிடையில் இணக்கத்தை ஏற்படுத்தும் முகமாக சகோதரர் ஜோ அவர்கள் போட்ட இப்பதிவிலும் வந்து உங்களின் கயமைத்தனத்தை காட்டுவது சரிதானா என யோசித்துப் பாருங்கள்.

//நேர்மையாக பதில் சொல்வார் யாருமிலர்...//

உங்களின் நேர்மையான கேள்வி என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது.
எனினும் பதிலளிக்க நான் தயாரே. ஆனால் இவ்விடம் அதற்கு உகந்ததாக படவில்லை. உங்களின் "நேர்மையான" கேள்விகளுக்கு பதிலளிக்கவும் விவாதிக்கவும் "மலர்கள்" எப்பொழுதும் தயாராகவே உள்ளது. உங்கள் கேள்வியில் நேர்மையிருப்பின் வாருங்கள். விவாதிப்போம்.

அன்பு சகோதரர் ஜோ அவர்களுக்கு,

நான் இவ்வாறு கூறுவதற்காக என்னை நீங்கள் தவறாக எடுத்துக் கொள்ள மாட்டீர்கள் என நினைக்கிறேன். நீங்கள் தயவு செய்து இப்பதிவுக்கு தொடர்புள்ள பின்னூட்டங்களை மட்டும் அனுமதிக்க கோருகிறேன். தேவையற்ற திசைதிருப்பல்கள், முடிந்த அளவு மூட்டி விட்டு குளிர்காய நினைப்பவர்களின் பின்னூட்டங்களை தவிருங்கள். அது தான் இப்பதிவினை எழுத தூண்டிய உங்கள் நோக்கத்திற்கு நல்லது.

மோடி, அசோக் சிங்கால் கூட்டத்தினரின் மொள்ளமாரித்தனத்தை தோலுரிக்கும் ஒரு சுட்டியை இதற்கு முன்னே நான் தந்திருக்கிறேன். அதனை ஒரு முறை கூட இங்கு தருகிறேன். அப்பதிவினை நன்றாக படிக்கவும். அசோக் சிங்கால் நரிக் கூட்டத்தின் செயல்பாட்டின் தொடர்ச்சியை தான் இங்கும் நீங்கள் காண்கிறீர்கள்.

அவர்களுக்குத் தேவை எப்படியாவது மற்றவர்கள் அடித்துக் கொண்டு சாக வேண்டும். அதற்கு நீங்களும் ஒரு தளத்தினை தயவு செய்து அமைத்துக் கொடுக்க வேண்டாம்.

//உலகப்போர் எல்லாம் வந்தால் ஒரு நாளைக்கு மேல் போர் நடக்காது.//

இது எப்படி சாத்தியம் என்பதை மட்டும் நன்றாக புரிந்து கொண்டால் இந்த மோடி, தொகாடியா கூட்டங்களின் திசைதிருப்பல்கள் அர்த்தமற்று போகும்.

அமெரிக்க அண்ணனின் கையில் இருக்கும் அணுகுண்டுகளில் ஒன்று போதும் இது நடைபெறுவதற்கு. அமெரிக்க அண்ணன் இன்று யாரை நோக்கி தீவிரவாதி என கைநீட்டுகிறானோ அவனுக்கு எதிராக ஒன்றும் யோசிக்காமல் களமிறங்க வளர்ப்பு நாய்கள் இன்று ஆலாய் பறப்பதைப் பார்த்தால் அது நடப்பது வெகு தொலைவில் இல்லை எனத் தெரிகிறது.

இதனைக் குறித்து நான் கூறியதை தான் அழகாக திசைதிருப்பியுள்ளனர்.

எப்படியாவது இறை நேசன்களை தீவிரவாதிகளாக்கி விடவேண்டும் "அவாள்"களுக்கு. இறை நேசன்கள் மீது "அவாள்"களுக்கு அவ்வளவு அன்பு.

இன்றைய தீவிரவாதத்திற்கு ஊற்று கோலாக இருக்கும் இந்த அமெரிக்க அராஜக போக்கிற்கு எதிராக உண்மை, நீதியின் பக்கம் நிற்கும் ஒரு கூட்டம் இங்கு தயாராகி இருக்கிறது பாருங்கள். இதனைக் குறித்து தொகாடியா கூட்டங்கள் என்ன நினைக்கின்றன. நீதியின் பக்கம் நிற்பதால் இவர்கள் எல்லாம் முஸ்லிம்கள் என்றா?

நிச்சயம் இக்கூட்டம் வளரும். இதன் செயல்பாடுகள் எல்லாவகையிலான மக்கள் விரோத தீவிரவாதங்களுக்கு சாவு மணி அடிக்கும். இச்செயல்பாட்டிற்கு எதிராக அமெரிக்க தீவிரவாதம் வலுக்கும் எனில் அது கடைசியில் ஒரு யுத்தத்தில் தான் போய் நிற்கும். அந்த யுத்தம் நீதிக்கும் அநீதிக்கும் இடையிலான யுத்தமாக இருக்கும். அப்பொழுதும் அமெரிக்கா தாங்கள் தீவிரவாதிகளுக்கு ஆதரவு தெரிவிப்பவர்களுக்கு எதிராக நிற்பதாக கூவிக் கொள்ளும். அந்த யுத்தத்தில் அமெரிக்க, இஸ்ரேலிய அராஜகங்களுக்கு எதிரான இந்திய அரசின் நிலைபாட்டிற்கு எதிராக இந்தியாவிலிருந்து ஒரு பெருங் கூட்டம் அமெரிக்காவிற்கு வாலாட்டும். அது நிச்சயமாக இந்திய சுதந்திரத்திற்காக தங்கள் விகிதாச்சாரத்தை விட அதிகமாக தங்கள் இரத்தத்தால் வீரகாவியம் எழுதிய முஸ்லிம்களாக இருக்க மாட்டார்கள் என என்னால் உத்தரவாதம் தர இயலும். அப்படியெனில் "அவாள்"கள் யாராக இருக்கும்?

Tuesday, September 12, 2006

மாணவியை ஆபாச படமெடுத்த இந்து ஆபாச தீவிரவாதி கைது!

துரைப்பாக்கம், செப். 12: மருத்துவமனையில் மயங்கிக் கிடந்த மாணவியை ஆபாச படம் எடுத்த வார்டுபாய் கைது செய்யப்பட்டார்.

புதுச்சேரியில் உள்ள ஆரோவில் பள்ளி மாணவிகள் சென்னைக்கு சுற்றுலா வந்தனர். நேற்று முன்தினம் பெசன்ட் நகர் வந்தனர். அப்போது பூங்கோதை (18) என்ற பிளஸ் 2 மாணவிக்கு திடீர் வயிற்று வலி ஏற்பட்டது. பூங்கோதையை 2வது அவென்யூவில் உள்ள நியூ ஏசியன் மருத்துவமனையில் சேர்த்தனர்.

பூங்கோதைக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும், இல்லாவிட்டால் உயிருக்கு ஆபத்து என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

பூங்கோதை பள்ளி விடுதியில் தங்கி படிப்பதால், உடனடி அறுவை சிகிச்சை செய்யும்படி ஆசிரியர்களே கேட்டுக் கொண்டனர். அதன்படி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மாலை 3 மணிக்கு, பூங்கோதையை வார்டுக்கு கொண்டு சென்றனர்.

அங்கு சென்றதும் பூங்கோதை லேசான மயக்கத்தில் இருந்தார். அதை பயன்படுத்தி வார்டுபாய் மல்லிகா ர்ஜுனன், பூங்கோதையின் ஆடைகளை களைந்து, கேமரா செல்போனில் ஆபாச படம் எடுத்துள்ளார். அப்போது மயக்கம் தெளிந்த பூங்கோதை, வார்டுபாய் ஆபாச படம் எடுப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து கத்தினார்.

ஆசிரியைகளும், மாணவிகளும் ஓடி வந்தனர். மற்ற ஊழியர்களும் அங்கு வந்தனர். மல்லிகார்ஜுனனை சரமாரியாக அடித்து உதைத்தனர். கேமரா செல்போனையும் பறித்தனர். சாஸ்திரி நகர் போலீசில் ஒப்படைத்தனர்.

நன்றி : தினகரன்(மற்றும் செய்தியை மலர்களுக்கு பரிமாறிய சகோதரர்களுக்கும்)

செய்தியை செய்தியாக பார்க்கமுடியாத காழ்ப்புணர்வை மனதில் தேக்கி அதனை தீர்க்க என்ன அக்கிரமம் நாட்டில் நடந்தாலும் அதில் ஒரு முஸ்லிம் பெயர் அடிபட்டால் உடன் அச்செய்தியுடன் "இஸ்லாத்தை" தொடர்பு படுத்தி குளிர்காயும் மனவக்கிரம் பிடித்த ஹிந்துத்துவ தீவிரவாதிகளுக்கு இப்பதிவு அர்ப்பணம்.

ஒரு செய்தியை எப்படி ஒரு சமூகத்துக்கு எதிராக திருப்ப முடியும் என்பதற்கு இப்பதிவு ஓர் உதாரணமாக இருக்கட்டும்.

இனிமேலாவது பொது மக்களுக்கு அநியாயம் இழைக்கும் முகமாக ஒருவன் மானபங்கம், திருட்டு, கொலை, கொள்ளை, குண்டு வெடிப்பு என எவ்வகையிலாவது செயல்படுவானாகில் அவன் எச்சமூகத்தை சார்ந்தவனாக இருந்தாலும் உடன் ஒட்டு மொத்தமாக அச்சமூகத்தின் மீது விரலை சுட்டாமல் அச்சமூக விரோதியை பொதுவாக சமூக துரோகியாக, தீவிரவாதியாக, பயங்கரவாதியாக, அக்கிரமக்காரனாக இந்த வந்தேறி பார்ப்பன கூட்டத்தால் வடிவமைக்கப்பட்ட சங்க்பரிவார கூட்டம் பார்க்க முன்வரட்டும்.

இல்லையேல் எதிர்பக்கமிருந்தும் அது போன்று எல்லோராலும் செய்தியை ஒரு சமூகத்தின் மீது எப்படி வேண்டுமெனிலும் திசை திருப்ப இயலும் என்பதை தெரிந்து கொள்ளட்டும்.

நாட்டில் குண்டுகள் வெடிக்கும் பொழுது முந்திக் கொண்டு "இஸ்லாத்தை" தொடர்பு படுத்தும் மனவக்கிரம் பிடித்த ஜென்மங்களே! மசூதியில் குண்டு வெடித்து 39 பேர் பலியான பொழுது எங்கே போய் ஓடி ஒழிந்து கொண்டீர்கள்? ஏன் "ஹிந்துத்துவ தீவிரவாதிகள் வெறிச்செயல்" என தலைப்பு செய்தி வாசிக்க வேண்டியது தானே? எது உங்களை இதற்கு தடுத்தது?

ஆங்கிலேயனுக்கு ஜால்ரா தட்ட ஒரு ஹிந்துத்துவ வெறியனால் எழுதப்பட்ட பாடலின் இரு வரிகளை பாட சுதந்திரத்திற்கு தங்களது விகிதாச்சாரத்தை விட அதிகமாக தங்கள் இரத்தத்தால் வீர காவியம் படைத்த முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிவித்த போது இந்தியாவை காட்டிக் கொடுத்தவர்களையும் மகாத்மாவை கொன்றவர்களையும் வார்த்தெடுத்த ஹிந்துத்துவ கூட்டம் "தேசவிரோதிகள்" என கூக்குரலிட்டு கத்திக் கொண்டிருந்தீர்களே? நாட்டின் இறையாண்மைக்கும், பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் தரும் விதத்தில் வண்டி வண்டியாக ராக்கட் லாஞ்சர்கள் போன்ற ஆய்தங்களை உருவாக்கி மறைத்து வைத்த குடோன்களையும் அதனைக் கடத்த உதவிய "சீனிவாசன்களையும்" காவல்துறை கைது செய்த போது எங்கே போயிற்று உங்கள் "தேசவிரோதிகள்" எனற கத்தல்?

ஏன் இது உங்கள் பார்வையில் தீவிரவாத, தேசவிரோத செயல் இல்லையா?. நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உருவாகியிருக்கும் "ஹிந்துத்துவ தேசவிரோதிகள் கைது" என முழங்க வேண்டியது தானே?

ஏ! இந்தியாவை காட்டிக்கொடுத்த "தேசவிரோதிகளின்" குஞ்சுகளே! வாருங்கள். வந்து உங்கள் தேசப்பற்றை இவற்றில் காட்டுங்கள் பார்ப்போம்!

அடங்குங்கள். பயங்கரவாதத்தை பயங்கரவாதமாக மட்டும் பாருங்கள். அதனை அவசியமில்லாமல் ஒரு சமூகத்தோடு தொடர்பு படுத்தாதீர்கள்.

தீவிரவாதத்தை தீவிரவாதமாக மட்டும் பாருங்கள். அதனை தொடர்ந்து ஒரே சமூகத்தோடு ஒட்டி குளிர்காயாதீர்கள்!

அநியாய சமூக விரோத செயல்களை சமூக விரோத செயல்களாக மட்டும் பார்த்து அவர்களை சமூகத்திலிருந்து அந்நியப்படுத்த முயலுங்கள். அதைவிடுத்து அநியாயமாக ஒரு சமூகத்தையே அந்நியப்படுத்த முயலாதீர்கள்.

இப்பதிவின் தலைப்பு போன்று மேலே தொடர்வதும் தொடராததும் உங்களின் சமூக விரோத செயல்பாடுகளை இனிமேலாவது நிறுத்துவதிலும் தொடர்வதிலும் தான் இருக்கிறது.

Monday, September 11, 2006

பெட்ரோ டாலருக்கு விலை போன எம் பி?

இஸ்லாமிய மதத்தை பின்பற்றுபவர்கள் அனைவரையும் தீவிரவாதிகளாக சித்தரிக்க அமெரிக்காவும் ஒத்த ஏகாதிபத்திய நாடுகளும் சதியாலோசனை செய்கின்றன. இதனை இந்தியாவிலும் பல வழிகளினூடாக அரங்கேற்ற முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன.
மலேகாவில் 37 பேர் கொல்லப்படுவதற்கு காரணமான தொடர் குண்டு வெடிப்புகளின் பின்னணியில் இந்து தீவிரவாதிகள் என்று ஒரு பத்திரிக்கை கூட செய்தி வெளியிட்டதாக நான் காணவில்லை. ஆனால் அதே சமயம் மும்பை மற்றும் அக்ஷர்டாமில் குண்டு வெடிப்புகளை நடத்தியது இஸ்லாமிய தீவிரவாதிகள் என இந்திய அனைத்து முக்கிய பத்திரிக்கைகளும் முன்விதி எழுதின.

காஷ்மீர் குண்டுவெடிப்புகளில் மரணமடைபவர்கள் யார் என பாராளுமன்றத்தில் பலமுறை கோரிக்கை வைத்த பிறகும் இது வரை அதற்கான பதில் கிடைக்கவில்லை. உண்மையில் அங்கு கொல்லப்படுபவர்களில் 94 சதவீதமும் முஸ்லிம் சமூகத்தில் உள்ளவர்களே. இந்த விவரங்கள் வெளிவராமல் இருப்பதனாலேயே கஷ்மீரில் நடக்கும் எல்லா குண்டுவெடிப்புகளோடும் இஸ்லாமிய சமூகம் எளிதில் பிணைக்கப்பட்டு செய்தியாக்க இலகுவாக்கப்படுகிறது.

எங்கு எவ்வித அக்கிரமம் நடந்தாலும் அதில் ஒரு முஸ்லிமின் பெயர் உட்பட்டிருந்தால் உடன் அதற்கு மதத்தை காரணமாக்குவதன் பின்னணியில் கூட்டுசதி உள்ளது. இது போன்ற தருணங்களில் வெளியிடப்படும் எதிர் அறிக்கைகளை கொண்டே அரசியல்வாதிகளின் உண்மையான முகங்களை அடையாளம் கண்டு கொள்ளலாம்.


நன்றி : சத்தியமார்க்கம்

இவ்வாறு கூறியிருப்பது பின்லாடனோ, முல்லா உமரோ, சதாம் ஹுஸைனோ அல்லது இந்தியாவில் உள்ள ஏதாவது முல்லாவோ அல்ல.

இந்திய பாராளுமன்றத்தில் அங்கமாக உள்ள திரு. வீரேந்திர குமார் எம் பி அவர்கள் தான் இவ்வாறு கூறியிருக்கிறார். இவரின் இதே கருத்தை சமீபத்தில் மசூதிக்கு அருகில் நிகழ்ந்த குண்டுவெடிப்புக்குப் பின் பல அரசியல்வாதிகளும் கூற ஆரம்பித்திருக்கின்றனர்.

ஒருவேளை "பெட்ரோ டாலர்" கைமாறி இருக்குமோ? இதனைக் குறித்து "தேசப்பற்றை குத்தகைக்கு" எடுத்திருப்பதாக பகல் வேடமிடும் இந்திய சுதந்திரப்போரில் சுதந்திரப்போராளிகளை காட்டிக்கொடுப்பவர்களின் கூடாரமாகவும் மகாத்மா காந்தியை கொலை செய்ய திட்டம் வகுத்து கொடுத்தவர்களுமான ஆர் எஸ் எஸ் க்கு அடிவருடும் நீலகண்டன், நேசகுமார், மலர்மன்னன், ஜெயராமன் போன்ற இணைய முழுநேர ஊழியர்கள் கருத்து கூறினால் நன்றாக இருக்கும்.

Thursday, September 7, 2006

வந்தே(றிகளின்) 'மா'தரம்.

உணவகங்களின் எச்சில் இலை போடும் பகுதியிலோ அல்லது சில திருமண மண்டபங்களின் எச்சில் போடும் பகுதிகளிலோ முன்னங்காலை நட்டு வைத்து பின்னங்கால்களில் தனது பிட்டத்தை வைத்துக் கொண்டு ஏதாவது எச்சில் இலை வந்து விழாதா என ஆவலோடு வாயிலிருந்து நீர் சொட்டச் சொட்ட நாக்கைத் தொங்கப் போட்டு அமர்ந்திருக்கும் நாயை பார்த்திருப்பீர்கள்(இதுவரை இப்படி ஒரு காட்சியை காணாதவர்கள் மேற்கொண்டு படிக்கும் முன் ஏதாவது உணவகத்திற்கோ அல்லது திருமண மண்டபத்திற்கோ சென்று உணவருந்தி கண்டு வரவும்).

ஏதாவது எச்சில் இலை வந்து விழும் நேரம் அதுவரை இருக்கும் இடம் வெளியில் தெரியாமல் இருக்கும் இந்த நாய் அரக்க பரக்க விழுந்தடித்துக் கொண்டு ஓடி அந்த இலைப்பக்கம் வரும். அதில் ஒன்றும் இல்லை எனினும் அவ்விலையை அது விடாது. பறந்தடித்து ஓடி வந்ததற்காக ஒன்றுமில்லை எனினும் கொஞ்ச நேரம் அவ்விலையை போட்டு அங்குமிங்கும் இழுத்துப்போட்டு தனது வெறியை தீர்த்துக் கொண்டு போகும்.

சரி இனி விஷயத்திற்கு வருவோம். செப்டம்பர் 7 ஆன இன்று இந்திய மக்கள் தங்களின் தேசப்பற்றை மற்றவர்களுக்கு வெளிப்படுத்தும் நாள். எப்படி? இந்திய எல்லையில் ஊடுருவும் அந்நிய சக்திகளுக்கு எதிராக இந்திய இராணுவத்துடன் சேர்ந்து களமிறங்கியா? இந்தியாவை அடக்கியாண்ட ஆங்கில அரசின் உற்பத்திகளை புறக்கணித்தா? இந்திய உயர்பதவிகளில் அமர்ந்து கொண்டு அந்நிய நாட்டுக்கு உளவு வேலைப்பார்க்கும் பிச்சைக்காசுக்கு விலைப்போன தூத்தேறிகளை அரசாங்கத்துக்கு பிடித்துக் கொடுப்பதன் மூலமாகவா? சுதந்திரப்போரில் உயிர்தியாகம் செய்த போராளிகளின் ஏழைக் குடும்ப அங்கங்களை தத்தெடுப்பதன் மூலமாகவா? இந்திய நாட்டின் இறையாண்மைக்கு களங்கம் கற்பித்துக் கொண்டிருக்கும் ஜாதி/மத வெறியர்களையும், மத/மொழி/இனத்தின் பெயரால் பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விடும் தீவிரவாதிகளுக்கு எதிராக களமிறங்குவதன் மூலமாகவா? என்பது போன்று ஏதாவது கிறுக்குத்தனமாக மட்டும் கேட்டு விடாதீர்கள்.

தேசப்பற்றாளன் என நிரூபிக்க இவ்வளவு சிரமப்பட வேண்டிய அவசியம் ஒன்றும் இல்லை. வந்தேறிகள் கொண்டு வந்த துர்கா மாதாவை வணங்கும் இரு வரிகள் மட்டும் பாடினால் போதும். காட்டிக் கொடுத்த/கொடுக்கும் ஹிந்துத்துவ தேசப்பற்றாளார்களுக்கு இது ஒன்றும் பெரிய காரியமில்லை தான். இரு வரிகளைப் பாடி துர்கையை ஆலாபித்து விட்டு அவர்களுக்கு தேசப்பற்றாளன் என்ற பெயரில் என்ன வேண்டுமானாலும் செய்யவும் செய்யலாம். யாருக்கு கணக்கு கொடுக்க வேண்டும்?. ஆனால் படைத்த ஒரே இறைவனையே வணங்குவோம்; அவனைத் தவிர வேறு எவருக்கும் சிரம் பணியவோ, துதிக்கவோ மாட்டோம் என உள்ளத்தால் உறுதி பூண்டு முஸ்லிமாக வாழும் இந்திய சுதந்திரப்போராட்டத்தில் வீர காவியம் படைத்த இஸ்லாமியர்களைப் பொறுத்தவரை இது ஒருபோதும் கனவிலும் நினைக்க முடியாத காரியமாகும்.
எனினும் இவ்விஷயத்தை வைத்து அரசியல் இலாபம் தேட துடிக்கும் வந்தேறிகளின் அமைப்புகளுக்கு அதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்காதிருக்கவும், பக்கிம் சந்திர சட்டர்ஜியின் இந்தியாவை அடிமைப்படுத்திய ஆங்கிலேயர்களுக்காக துர்கா தேவியிடம் பிரார்த்தனை புரியும் பாடல் வரிகள் இஸ்லாமிய அடிப்படைக் கோட்பாட்டுக்கு எதிரான கருத்துக்களைக் கொண்டிருப்பதால், அதனைத் தவிர்க்கும் பொருட்டும், செப்டம்பர்-7 ஆன, இன்று இந்திய முஸ்லிம் குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டாம் என்று அகில இந்திய முஸ்லிம் அரசியல் இயக்கங்களின் தலைவர்களும் மற்றும் மார்க்க அறிஞர்களும் கேட்டுக் கொண்டுள்ளார்கள்.

செப்டம்பர்-7, அன்று வந்தேறிகளின் பாடலை கட்டாயமாக்கலாமா என்று பரிசீலிப்பதாகச் சொன்ன மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்,பாடல்வரிகள் முஸ்லிம்களின் மத உணர்வுகளுக்கு எதிரானது என்பதால் அதனைப் பாடியே ஆகவேண்டும் என்பது கட்டாயமில்லை என்று அறிவித்தது. அவ்வளவுதான்! முஸ்லிம்களை தேச விரோதிகளாக்க ஏதாவது கிடைக்காதா? என நாக்கைத் தொங்கப்போட்டு காத்திருந்த சங்பரிவாரங்களின் எச்சில்வடியும் வாய்க்குக் கிடைத்த அவலாக, இப்பிரச்சினையை கையிலெடுத்துக் கொண்டு இந்திய முஸ்லிம்களின் தேசப்பற்றை, மத நம்பிக்கையுடன் மோதவிட்டு குளிர்காய முனைகின்றனர்.

இந்தியாவை 'காளி'யாகவும் துர்க்கையாகவும் உருவகப்படுத்தி ஆங்கிலேயர்களுக்காக பிரார்த்தனை புரிவதாக வரும் மதத்துவேச வரிகளைக் கொண்ட வந்தேறிகளின் பாடலை 'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை' என்ற கொள்கையுடைய முஸ்லிம்கள் கட்டாயம் பாடியே ஆக வேண்டுமாம்! அப்படிப் பாட விரும்பாதவர்கள் பாகிஸ்தானுக்குப் போக வேண்டுமாம்! அல்லது ஓட்டுரிமை பறிக்கப்பட வேண்டுமாம்! ஆனால் இந்தியாவைக் காட்டிக் கொடுத்த ஹிந்துத்துவ ஆசாமிகளையும் தேசவிடுதலைக்கு தன் வாழ்க்கையை அர்ப்பணித்த மஹாத்மா காந்தியை வதித்த ஆர் எஸ் எஸ் பரிவாரங்களும் தேசப்பற்றாளார்களாம்.

சுதந்திர இந்தியாவின் அரசியல் சாசனம் இந்திய மக்கள் எல்லோருக்கும் மதச் சுதந்திரத்தை வழங்கியுள்ளது. இந்திய அரசியல் சாசனத்தை என்றுமே மதிக்காத சங்க்பரிவாரங்கள் மற்றும் இந்தியாவின் தேசியக் கொடிக்கு மரியாதை செய்ய அரை நூற்றாண்டுகள் எடுத்துக் கொண்ட RSS கும்பலுக்கும் அதன் அரசியல் முகம் பிஜேபிக்கும் இதைச் சொல்ல என்ன தகுதி இருக்கிறது.
கடவுள் நம்பிக்கையற்ற கம்யூனிஸ்டுகளும் கூட 'காளியை' வணங்குவதாகப் பாடப்பட்ட வந்தேறிகளின் பாடலின் முதல் இரண்டு அந்தாதிகளை (Stanzas) பாடச்சொல்வது வியப்பாக இருக்கிறது! பாபர் மசூதியைத் தகர்த்தவர்கள் சங்பரிவாரக் கும்பல் என்றால் அதற்கு வழி ஏற்படுத்திக் கொடுத்ததோடு, தற்போது கட்டப்பட்டுள்ள கோவில் பீடத்திற்கு எஃகுச் சுவர் பாதுகாப்பு கொடுத்துக் கொண்டிருப்பது காங்கிரஸ். ஆக, இந்திய முஸ்லிம்களின் நலனை யார் அதிகம் சிதைப்பது என்ற விஷயத்தில் தான் இந்திய அரசியல் கட்சிகள் முனைப்புடன் செயல்படுகின்றன.

சமஸ்தானங்களாகப் பிரிந்து கிடந்த இந்தியாவிற்கு ஒரு பூவரைபடத்தை ஏற்படுத்தி ஓர் அகண்ட பாரதத்தை உருவாக்கிக் கொடுத்தவர்கள் முகலாய மன்னர்கள் - முஸ்லிம்கள் என்பதைச் சகிக்க முடியாமல் எழுதப் பட்டதுதான், 'ஆனந்த மடம்' என்ற நாவலில் வரும் "வந்தே(றிகளின்) மாதரம்" பாடல். இது தேசியப் பாடலுக்கு துளியும் தகுதியானது இல்லை என்பதற்கு, அப்பாடலில் வரும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை வரிகளே சான்று. முகலாயர்களை விரட்டிய ஆங்கிலேயரைக் கடவுள் ஆசீர்வதிக்க வேண்டும். இப்படிப்பட்ட வரிகள் அடங்கிய இப்பாடலை தேசப்பற்றுள்ள எவரும் நாட்டுப் பண்ணாக ஏற்க முடியாது.அது முழுப்பாடலாக இருந்தாலும் அல்லது இரண்டு அந்தாதிகளாக இருந்தாலும் சரியே. ஒருவேளை இதனைப் பாடுவது தேசப்பற்றின் அடையாளம் எனபது அந்த ஆங்கிலேயர்களை விரட்டியடிக்க தன் வாழ்நாளை செலவழித்த காந்தியை சுட்டுக் கொன்ற சங்க்பரிவார ஆர் எஸ் எஸ் வன்முறை கும்பலுக்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாம்.

முகலாயர் ஆட்சியில் ஒரே வங்காளமாக இருந்ததை, இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு கிழக்கு மேற்கு எனத் துண்டாடியது ஆங்கிலேயர்கள் என்றால், அதனை பங்களாதேஷ் என்ற தனிநாடாக்கிப் பாகிஸ்தானை இந்தியாவின் நிரந்தரப் பகைவர்களாக்கும் அவர்களின் கனவை நனவாக்கியது காங்கிரஸ் கட்சி. ஆக, வந்தேறிகளின் பாடலை அவமதித்தவர்கள் காங்கிரஸ்காரர்களே! இன்னொரு பக்கம் மோகன்தாஸ் காந்தியை தேசப்பிதா என்றால் நாக்கைப் பிடுங்கி கொள்ளும் சங்க்பரிவாரங்கள், காளியை 'தேசமாதா' என்பது உள்நோக்கம் கொண்டதாகும்.

ஆங்கிலேயருக்கு ஆதரவாக சாமரம் வீசியதோடு, சுதந்திரப்போராட்ட வீரர்களைக் காட்டிக் கொடுத்து உயர் பதவிகளை ஆக்கிரமித்ததோடு இன்றும் அதன் பலனை அறுவடை செய்து வரும் வந்தேறி கூட்ட சங்பரிவாரங்கள், நாட்டுச் சுதந்திரத்திற்காக கல்வி வாய்ப்புகளை இழந்து தியாகம் செய்த இந்திய முஸ்லிம்களின் தேசப்பற்றைக் குறைகூற கொஞ்சமும் தகுதியற்றவர்கள்.

குறிப்பு:
நாக்கைத் தொங்கப் போட்டு காத்திருக்கும் நாய் எது என்பதற்கும் அதன் செய்கைகள் யாது என்பதற்கும் தனி விளக்கம் அவசியமில்லை என நினைக்கிறேன். எப்பொழுதும் போல் இன்னும் புரியாதவர்கள் தொடர்பு கொள்ளவும். என்ன வழியில் தொடர்பு கொள்கிறார்களோ அவ்வழியில் பதில் தரப்படும்.

Tuesday, September 5, 2006

''மறை'' கழண்ட கேசு

உங்களைப் பார்த்து யாராவது 'மறை கழண்ட கேசு' என்று சொன்னால் என்ன நினைப்பீர்கள்? எனக்கு கோபம் வரும்! ஆனால் 'நேசமான' ஒரு ஆசாமிக்கு கோபம் வராது. ஏனென்றால், 'மறை' என்பதை அவர் வேறு விதமாகப் புரிந்து வைத்திருக்கிறார். எப்படின்னு கொஞ்சம் படிச்சுத்தான் பாருங்களேன்.

இந்து மதம் என்றால் என்ன? பொதுவாக நம் அனைவருக்கும் உடனே தோன்றும் பதில், அது வேதங்களின் அடிப்படையில் அமைந்த ஒரு மதம் என்பதே. இந்த விளக்கமானது, ஆபிரகாமிய மதங்கள் என்று நாம் இன்றழைக்கும் யூத,கிறித்துவ,இஸ்லாமிய மதங்களின் பார்வையை இரவல் பெற்று நாம் அமைத்துக்கொண்டது. நமக்கு அன்னியமான கோட்பாடு.... .....சுருங்கக் கூறின், இந்து மதம் என்பது ஒரு வரையறைக்கு உட்படா மனிதக் கூட்டம். இதற்கு வேதம் தேவையில்லை, சடங்கு தேவையில்லை, நம்பிக்கை தேவையில்லை, ஏன் கடவுளே கூடத் தேவையில்லை. ஆம், கடவுளைப் பற்றியே பேசாத மகான்கள் இங்கே வாழ்ந்து உபதேசித்து சென்றுள்ளனர்.



வலைப்பூக்களில் இஸ்லாத்தைப் பற்றிய அரைகுறை புரிந்து கொள்ளல்களுடன் Islaamic Info என்ற பெயரில் தன்னிச்சையாகவும் தவறாகவும் எழுதி வரும் நேசகுமார், அவர் சார்ந்திருக்கும் இந்து மதம் பற்றிய புரிந்து கொள்ளலிலும் தன் அறியாமையை வெளிப்படுத்தியுள்ளார்.



சமீபத்தில் அங்கயர்கன்னி என்ற தலித் பெண், கோவிலில் ஓதுவாராக நியமிக்கப் பட்டிருப்பதை சிலாகித்து SIFI யில் எழுதி இருந்தார். வாங்கும் கூலிக்கேற்ப மாரடிப்பதிலோ அல்லது தன் மதத்தையும் இன்றைய பிரேமானந்தா,காஞ்சி சுப்பிரமணியன் போன்ற பண்டைய இந்துமத ஞானிகளையும் சிலாகித்து எழுதுவதிலோ யாருக்கும் ஆட்சேபனை இல்லை.

இஸ்லாம் என்றால் ஏதோ ஆயிரத்தி நானூற்று சொச்ச வருட பாரம்பரியம் கொண்ட மதம் என்ற எடுகோலில் முஸ்லிமல்லாத எவரும் இந்து என்று இந்து மதத்துக்கும் அத்னைப் பின்பற்றும் இந்துக்கும் புதிய (?!) விளக்கம் கொடுப்பதற்காக இஸ்லாத்தின் மீது கல்லெறிய வேண்டிய அவசியம் ஏனோ?

முதல் மனிதன் ஆதம் (அலைஹி...) அவர்களிலிருந்து தொடங்கி சுமார் ஒரு இலட்சத்து இருபத்து நான்காயிரம் மனிதர்களை தன் தூதுவர்களாகத் தேர்ந்தெடுத்து இறுதியாக முஹம்மது (ஸல்...) அவர்களால் முழுமை படுத்தப்பட்டதே இஸ்லாம்.

"ஆதமையும், நூஹையும், இப்ராஹீமின் சந்ததியரையும் நிச்சயமாக அல்லாஹ் அகிலத்தாரைவிட மேலாக தேர்ந்தெடுத்தான். (திருக்குர்ஆன் 003:033). மேலும்,

(நபியே) உமக்கு முன்னர் (பற்பல சமூகங்களுக்கும்) நாம் அனுப்பிய தூதர்கள் (அந்தந்த சமூகங்களின்) ஊர்களிலிருந்த மனிதர்களேயன்றி வேறில்லை; அவர்களுக்கு நாம் வஹீ மூலம் (நம் கட்டளைகளை) அறிவித்தோம். என்று குர்ஆன் பல இடங்களில் அழகாகத் தெளிவு படுத்துகிறது.

பின் யார்தான் இந்து? ஆபிரகாமிய மதங்கள் தலையெடுத்து என் வழி தனி வழி, பிற வழியெல்லாம் தீய வழி, என் கடவுள் மட்டுமே கடவுள் மற்றதெல்லாம் ஷைத்தான்.என் நபி (ஆபிரகாமிய மதங்களில் இப்படிக் கடவுளிடம் தொடர்புகொள்பவர் நபி கடவுளின் தூதர் என்றழைக்கப்படுகிறார்) மட்டுமே நபி (அல்லது கடைசி நபி தூதர்) என்று மூளைச் சலவை செய்யப்பட்டு இயல்பான மனிதத்தன்மையிருந்து மாறுபாடு அடையாமல் இருந்தால் அவர்களெல்லாம் இந்துக்களே.



குர்ஆனை, இறை வேதம் என்று நம்புவது எப்படி முஸ்லிம்களின் மீதான கடமையோ அதேபோல்தான் முந்தைய நபிமார்களுக்கு வழங்கப்பட்ட வேதங்களையும் நம்ப வேண்டும். அப்படி நம்பிக்கை கொண்டு இஸ்லாத்தை தங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டவர்கள்,நேசகுமாரின்பார்வையில் மூளைச் சலவை செய்யப்பட்டவர்களாம். (மூளைச் சலவை என்ற வார்த்தையை அவர் ஏலனமாக உபயோகித்திருந்தாலும்,ஆழ்ந்து நோக்கினால் அழுக்கடைந்த மூளையை இறைவேதம் கொண்டு சுத்தப் படுத்திக் கொண்டவர்கள் என்றும் எடுத்துக் கொள்ளலாம்!)

//உலகின் எந்த மூலையில் ஒருவன் இருந்தாலும், மதமாச்சர்ய ஒரே வழி வன்மதக் கோட்பாடுகளுக்குள் அகப்பட்டுக் கொள்ளாமல் இருந்தால் அவன் இந்துவே. இந்து என்கிற வார்த்தை பிராமணர்களையும், சடங்குகளையும் உங்களது கற்பனையில் கொண்டுவந்தால் இந்து என்பதற்குப் பதில் பாகன் என்றழையுங்கள்.//

முஹம்மது நபி இஸ்லாத்தை முதன் முதலில் எடுத்துச் சென்ற பாகன் அரபிகளையும் இந்து என்பதில் பெருமிதப் படுகிறார். இஸ்லாத்தைப் பின்பற்றாதவர்கள் என்ற தகுதியில் பாகன்களையும் இந்து மதத்திற்குள்ளடக்க விரும்பும் இவர், அன்றைய பாகன்களின் பழக்க வழக்கங்களையும் பண்பாடுகளையும் அறிந்து கொள்வது அவசியமாகும்.

1) கடவுளை நிர்வாணமாக வழிபடுதல் 2) தந்தையின் மனைவியை மறுமணம் செய்தல், பெண் குழந்தைகளை உயிரோடு கொல்லுதல், போன்ற கொடுங்குணங்களின் சொந்தக் காரர்கள்தான் இவர் விரும்பும் பாகன்கள். நிர்வாண சாதுக்களும் உசிலம்பட்டி, தர்மபுரி போன்ற பாகன் வழி சிசுக் கொலைகளைப் பேணுபவர்களும் இருப்பதால் ஒரு சமயம் பாகன்களை இந்துக்கள் என்கிறாரோ என்னவோ?

//ஆபிரகாமிய மதங்கள் செய்ததைப் போன்ற இனச் சுத்திகரிப்புகளை இந்தப் பாகன் மரபுகள் செய்யவில்லை. சடங்குகள் இங்கிருந்தன,//

பெளத்த மதத்தை தோன்றிய இந்தியாவிலிருந்து விரட்டியவர்களும், குஜராத்திலும் இன்னும் பல வடஇந்திய மாநிலங்களிலும் முஸ்லிம்களை இனச்சுத்திகரிப்பு செய்தவர்கள் ஆபிரஹாமிய மதங்களா?என்பதைத் தெளிவுபடுத்த நேசகுமார் கடமைப் பட்டுள்ளார்.

//வேதத்தையே நாம் மறை என்றுதானே அழைக்கின்றோம். நமது வேதங்களின் மறைபொருள் கோட்பாட்டைக் காப்பியடித்து இஸ்லாத்தில் சூஃபியிஸம், குரானுக்கு மறைபொருள் உண்டு என்றது.அப்படி குரானுக்கு மறைபொருள் உண்டு என்றால், இஸ்லாம் முழுவதுமே தகர்ந்து விழுந்துவிடும். ஏனெனில் முழு இஸ்லாமுமே குரானின் வெளிப்படையான அர்த்தப்படுத்துதலை அடிப்படையாக வைத்தே அமைந்துள்ளது.//

வேதம் (Scripture) என்பதற்கு தமிழில் மறை என்ற பொருளுண்டு. திருக்குறளை சிலர் உலகப் பொதுமறை என்பார்கள். மறை என்றால் புனிதப் புத்தகம் என்ற அர்த்தத்திலேயே அறியப்படுகிறது. நேசகுமார், மறை என்றால் மறைபொருள் கொண்டது என்று புரிந்து கொண்டிருப்பதிலிருந்து இவருக்கு தமிழும் சரியாகத் தெரியாது என்பதை வெளிப்படுத்தியுள்ளார். இவரெல்லாம் இந்து மதத்திற்கு புதிய புதிய வியாக்கியானம் கொடுக்கும் நிலைக்கு வந்துள்ளதைப் பார்த்தால், கொஞ்ச நஞ்சம் இருக்கும் இந்துக்களையும் குழப்பாமல் விடமாட்டார் போலிருக்கிறது. ஐயோ தேவுடா!