Saturday, December 29, 2007

வந்தேறி கிரிமினல்கள்!

வர்ணாசிரம கிரிமினல் இராமன்!
ஹவாலா கிரிமினல் ராம்விலாஸ் வேதாந்தி!

"இராமனை இழிவுபடுத்தி இந்துக்களைப் புண்படுத்திய கருணாநிதியின் தலையை வெட்ட வேண்டும், நாக்கை அறுக்க வேண்டும். அப்படிச் செய்பவருக்கு எடைக்கு எடை தங்கம் தரப்படும்'' என்று பார்ப்பனத் தினவெடுத்துப் பேசிய வேதாந்தி என்ற சாமியார் யார்? "

"அவர் யாரென்றே எங்களுக்குத் தெரியாது. யாரோ ஒருவர் பேசியதற்காக எங்களைத் தாக்குவது என்ன நியாயம்?'' என்று இராம.கோபாலன், இல.கணேசன், ராஜா என்று ஆர்.எஸ்.எஸ். கும்பல் முழுவதும் ஒரே குரலில் புளுகுகிறது. வேதாந்தி பேசியதை விட இந்தப் பித்தலாட்டம்தான் மிகப்பெரிய அயோக்கியத்தனம். இதற்காக இன்னொருமுறை இந்தக் கும்பல் முழுவதையும் நிற்க வைத்து உரிக்கவேண்டும்.

ராம் விலாஸ் வேதாந்தி. 1984 முதல் விசுவ இந்து பரிசத்தின் தலைமைக்குழுவான மார்க்க தர்ஷக் மண்டலின் (இந்துக்களுக்கு நன்னெறி காட்டும் குழு) உறுப்பினர்; 1990 முதல் ராம ஜன்மபூமி டிரஸ்ட் உறுப்பினர்; 1996, 98இல் உ.பி. மாநிலம் பிரதாப்கர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பா.ஜ.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர். மத்திய அரசின் ரயில்வே குழு, நகர்ப்புற வளர்ச்சிக் குழு, சுற்றுச்சூழல் ஆலோசனைக் குழு ஆகியவற்றின் உறுப்பினர். இவை அனைத்துக்கும் மேலாக, முஸ்லிம்களுக்கு எதிராக நஞ்சைக் கக்கும் உமாபாரதி, ரிதம்பரா வகையைச் சேர்ந்த நட்சத்திரப் பேச்சாளர். சமீபத்திய உ.பி. சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க.விற்காகப் பிரச்சாரம் செய்த முன்னணிப் பேச்சாளர். எல்லாவற்றுக்கும் மேலாக, பாபர் மசூதி இடிப்பையும் மதக்கலவரத்தையும் தூண்டிய வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அத்வானி, ஜோஷி உள்ளிட்ட 11 பேரில் ஒருவர். இந்த வேதாந்தியைத்தான் "யாரோ, எவரோ; எங்களுக்குத் தெரியவே தெரியாது'' என்கிறார்கள், இந்தப் பார்ப்பன யோக்கிய சிகாமணிகள்.

"இராமன் ஒரு கற்பனைப் பாத்திரம்" என்று கருணாநிதி சொன்னவுடனே குமுறி எழுந்த இந்த சாமியார், "உண்மையிலேயே ஆழ்ந்த மத நம்பிக்கை கொண்ட பக்தனாக இருக்கலாமோ, அதன் காரணமாகக் கோபத்தில் வரம்பு மீறிப் பேசியிருக்கக் கூடுமோ" என்று வாசகர்கள் யாரேனும் நினைத்துக் கொண்டிருந்தால், அது மடமை. இந்த வேதாந்தி ஒரு தொழில்முறைக் கிரிமினல்.

"பிள்ளைவரம் தருகிறேன், புதையல் எடுத்துத் தருகிறேன்'' என்று கூறி பாமர மக்களையும் பெண்களையும் நாசமாக்கி, பிறகு மாட்டிக்கொண்டு தரும அடி வாங்கி உள்ளே போகும் "கீழ்சாதி" லோக்கல் சாமியார் அல்ல இந்த வேதாந்தி. மக்களின் மத நம்பிக்கையை மதவெறியாக மாற்றி, அந்த மதவெறியை டாலராக மாற்றிக் குவித்து வைத்திருக்கும் ஒரு சர்வதேசக் கிரிமினல். கையும் மெய்யுமாகப் பிடிபட்ட பிறகும், இன்னமும் கம்பி எண்ணாமல் வெளியில் இருந்து ஆசி வழங்கிக் கொண்டிருக்கும் அரசியல் செல்வாக்குள்ள கிரிமினல்.

மதத்தை வைத்து "பிசினெஸ்" நடத்தும் சாமியார்களை அம்பலப்படுத்துவதற்காக "கோப்ரா போஸ்ட்'' என்ற இணையதளம் புலனாய்வு நடவடிக்கை ஒன்றில் இறங்கியது. அதில் சிக்கிய மூன்று சிகாமணிகளில் வேதாந்தியும் ஒருவன். முதலாளிகள் போல நடித்து வேதாந்தியை சந்தித்த இந்தச் செய்தியாளர்கள், கறுப்புப் பணத்தை வெள்ளையாக்க வேதாந்தியிடம் பேரம் பேசுகிறார்கள். ரகசியக் கேமராவில் பதிவு செய்யப்பட்ட இந்த பேரத்தை கடந்த மே 4ஆம் தேதியன்று ஒளிபரப்பியது, "ஐ.பி.என்7'' தொலைக்காட்சி. ஒளிபரப்பான அந்த உரையாடலைக் கீழே தருகிறோம்.

வேதாந்தி: எனக்கு எவ்வளவு கமிஷன் கிடைக்கும்?

நிருபர்கள்: நீங்கள் விரும்பியபடி...

வேதாந்தி: இல்லை, எனக்கு எவ்வளவு தருவீர்கள் என்பதைச் சொல்ல வேண்டும்; ஒருவேளை 5 கோடி ரூபாய் கருப்புப் பணத்தை நீங்கள் மாற்றுவதாக இருந்தால் எனக்கு எவ்வளவு கிடைக்கும்?

நிருபர்கள்: உங்களுக்கு 1.5 கோடி...

வேதாந்தி: இல்லை; 3 கோடியை வாங்கிக் கொண்டு எனக்கு 2 கோடியைக் கொடுங்கள்!

நிருபர்கள்: எங்களுக்கும் இலாபம் வேண்டாமா?

வேதாந்தி: சரி,சரி; எனக்கும் கமிஷன் வேண்டாமா? இப்படிக் கருப்புப் பணத்தை மாற்றுவதற்கு எனது ட்ரஸ்ட் பணத்தை பயன்படுத்துவதற்கு நான் யாரிடமும் அனுமதி பெறவேண்டியதில்லை. இருப்பினும் எனது ஆடிட்டரிடம் கலந்தாலோசிக்கிறேன். அயோத்தி வாருங்கள், எல்லாவற்றையும் முடித்து விடலாம்.

நிருபர்கள்: ராமஜன்மபூமி டிரஸ்ட்டுக்கு நீங்கள்தானே தலைவர்?

வேதாந்தி: ஆமாம், ஆனால் உங்கள் பணத்தை அதில் போட்டால் மீள எடுப்பது சிரமம். ஏனெனில் அது ஒரு சர்வதேச ட்ரஸ்ட். சி.பி.ஐ.யும், ஐ.பி.யும் (உளவுத் துறைகள்) அதன் மீது எப்போதும் ஒரு கண் வைத்திருக்கிறார்கள்.

நிருபர்கள்: ஆனால் உங்கள் ட்ரஸ்ட்டுக்கு எதுவும் பிரச்சினைகள் இருப்பதாகத் தெரியவில்லையே?

வேதாந்தி: இல்லை, இந்த வேலைக்காகவே "மாத்ரி சேவா ட்ரஸ்ட்' என்று ஒன்றைத் தனியாக உருவாக்கி வைத்திருக்கிறேன்.

(ஆதாரம்: watch the video: http://www.ibnlive.com/videos/39845/money-launderer-leads-ram-temple-trust.html)

இந்த உரையாடலை ஒளிபரப்பிய ஐ.பி.என். தொலைக்காட்சி, அதன் பிறகு இதே வேதாந்தியிடம் நேர்காணல் எடுக்கச் சென்றது. உடனே, "தேசவிரோத முசுலீம் தே..... மகன்கள்தான் எனக்கெதிராக இந்தச் சதியை நடத்தியிருக்கிறார்கள்'' என்று வெறி கொண்டு கத்தினான், இந்தக் களவாணி. அதிர்ச்சியடைந்த அந்தச் செய்தியாளர், "நீங்கள் இவ்வளவு தரம் தாழ்ந்து பேசுவதால் மேற்கொண்டு நேர்காணல் நடத்த முடியாது'' என்று கூறி பேட்டியை நிறுத்திக் கொண்டார். இந்த விவகாரமும் அம்பலத்துக்கு வந்து சந்தி சிரித்தது. உ.பி சட்டமன்றத் தேர்தல் நடக்க இருந்த தருணத்தில் இந்த விவகாரம் சந்தி சிரித்த போதிலும், இந்தக் காவி உடைக் கிரிமினலைச் சங்கப் பரிவாரங்கள் கைவிடவில்லை என்பதுதான் மிகவும் முக்கியமானது.

இது குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் மத்திய அமைச்சரும் தற்போது ராமர் சேது விவகாரத்தில் கருணாநிதிக்கு எதிராகக் கொட்டி முழக்கி வருபவருமான ரவிசங்கர் பிரசாத், " உங்கள் தொலைக்காட்சியில் அடிபடும் பெயர்களுக்குச் சொந்தக்காரர்கள் அனைவரும் மிகவும் மதிப்பிற்குரியவர்கள். எனவே இந்த இரகசிய காமரா ஒளிபரப்பின் நம்பகத்தன்மை குறித்து எனக்கு ஐயமாக இருக்கிறது'' என்றார். விசுவ இந்து பரிஷத்தின் துணைத் தலைவர் கிரிராஜ் கிஷோரோ, "இந்த இரகசிய கேமரா நிகழ்ச்சியின் நோக்கம் என்ன? இதில் ஏன் இந்துக்கள் மட்டும் குறி வைக்கப்படுகிறார்கள்?'' என்று மடக்கினார். "கருணாநிதி இராமனை மட்டும் விமரிசிக்கிறாரே, மற்ற மதத்தினரை விமரிசிக்காதது ஏன்?'' என்று இப்போது கேட்கிறார்கள் அல்லவா, அதே கேள்விதான் கிரிராஜ் கிஷோரின் கேள்வியும்.

"கேமரா ஒளிபரப்பு மேல் சந்தேகமாக இருக்கிறது; எங்களை மட்டும் ஏன் குறி வைக்கிறாய்? இந்துக்களின் மனம் புண்பட்டுவிட்டது'' என்று கலர் கலராகக் கூச்சலிட்டது ஆர்.எஸ்.எஸ். பரிவாரம். "எங்கள் வேதாந்தி சொக்கத் தங்கம். அவர் முற்றும் துறந்த முனிவர். வேண்டுமானால் அவருடைய டிரஸ்டுகளையும் எங்களுடைய டிரஸ்டுகளையும் வருமான வரித்துறை ஆய்வு செய்து பார்க்கட்டும்'' என்று ஒரு யோக்கியன் பேசவேண்டிய பேச்சை மட்டும் "அவாள்'' பேசவே இல்லை.

"இராமன் எந்தப் பொறியியல் கல்லூரியில் படித்தான்?'' என்ற கேள்வியைப் போலவே, "உங்கள் டிரஸ்டில் இத்தனை பணம் எப்படி வந்தது?'' என்ற கேள்வியும் கூட இவர்களுடைய மத உணர்வைப் புண்படுத்துகிறது போலும்! ராம ஜன்ம பூமி, ராமர் பாலம் மட்டுமல்ல; ராம ஜன்ம பூமி டிரஸ்டில் உள்ள கறுப்புப் பணமும் கூட இந்துக்களின் மத நம்பிக்கை சார்ந்த விசயம் போலும்! இந்த நம்பிக்கையைக் கேள்விக்குள்ளாக்கினால், தலையை வெட்டுவார்கள், நாக்கை அறுப்பார்கள், அதை செய்து முடிப்பதற்கு எடைக்கு எடை தங்கமும் கொடுப்பார்கள் இந்தத் "துறவி"கள்!

வருமான வரித் துறையின் முன்னாள் ஆணையர் விஸ்வபந்து குப்தா இந்த உத்தம புத்திரர்களைப் பற்றிப் பின்வருமாறு குறிப்பிடுகிறார். "இந்த வேதாந்தி விவகாரத்தில் உடனே கிரிமினல் குற்ற வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கலாம். ராம ஜன்ம பூமி நிவாஸ், விசுவ இந்து பரிஷத் இரண்டும் மதரீதியான மாஃபியாக் குழுக்களாகும். அவர்கள் ஒரே முகவரியிலிருந்து சுமார் பத்து போலியான ட்ரஸ்ட்டுகளை நடத்துகிறார்கள். இவர்களுக்கு ஐம்பது வெளிநாடுகளிலிருந்து பணம் வருகிறது. இதற்கு வரி விலக்கும் பெறுகிறார்கள். ஆனால், எதற்கும் முறையான கணக்கு வழக்கு கிடையாது. இவர்களுக்கு ஆண்டொன்றுக்கு 10,000 முதல் 15,000 கோடி ரூபாய் வருகிறது என்று நாங்கள் கணக்கிட்டிருக்கிறோம்... மதவெறியைப் பரப்புவதற்கு இந்தப் பணத்தைப் பயன்படுத்துகிறார்கள்.''

வேதாந்தி ஒரு விதிவிலக்கல்ல. வேதத்துக்கு அந்தமில்லை என்று "அவாள்'' சொல்வதைப்போல, சங்க பரிவாரம் முழுவதும் முடிவில்லாமல் நிறைந்திருக்கிறார்கள் வேதாந்திகள். இந்தக் காவி உடை மாஃபியா கும்பல் தன்னை ஒரு கட்சி என்று சொல்லிக் கொள்கிறது. கடத்தல், கஞ்சா, ஆயுதம் என்ற சரக்குகளைப் போல, இந்த மாஃபியா கும்பல் கையாளும் விற்பனைச் சரக்கு மதம்.

இந்த பேட்டியை வைத்தே வேதாந்தியைக் கைது செய்யலாம் என்கிறார், குப்தா. பொதுத்தொலைபேசியிலிருந்தும், மின்னஞ்சல் மூலமும் கொலை மிரட்டல் விடும் கிறுக்குப் பயல்களையெல்லாம் சிறப்புப் படை அமைத்துத் தேடிப் பிடிக்கிறது போலீசு. ஆனால், ஒரு முதலமைச்சரைக் "கொலை செய்" என்று பகிரங்கமாக அறைகூவல் விடுக்கும் வேதாந்தி மீது வழக்குப் பதிவு செய்யக்கூட அஞ்சுகிறது. குப்தா கூறுவது போல வேதாந்தியை உள்ளே தள்ளுவது இருக்கட்டும், மாத்ரி டிரஸ்ட்டில் ஒரு சோதனை நடத்துவதற்குக் கூட நிதியமைச்சகம் உத்தரவிடவில்லை என்பதே உண்மை.

"தேவதூஷணம் செய்பவனின் நாக்கை அறுக்க வேண்டுமென்று" பகவத் கீதை சொல்கிறதாம். நோட்டு மாற்றுபவனுக்கு கிருஷ்ண பரமாத்மா என்ன தண்டனை தரச் சொல்கிறார்? தெகல்காவின் கேமரா முன் லஞ்சம் வாங்கிப் பிடிபட்ட பங்காரு லட்சுமணனைக் கட்சித் தலைவர் பதவியிலிருந்து இறக்கியது பாரதிய ஜனதா. ஆனால், வேதாந்தி மீது எந்த நடவடிக்கையும் கிடையாது. அவர் விசுவ இந்து பரிசத்திலேயே இல்லையென்று கூசாமல் புளுகுகிறது. "சூத்திரன் திருடினால் சிரச்சேதம், பார்ப்பான் திருடினால் சிகைச் சேதம்" என்பதல்லவோ மனுநீதி!

செப்30 தேதியிட்ட ஜூனியர் விகடனுக்கு அளித்துள்ள பேட்டியில் "நான் கருணாநிதிக்கெதிராகச் சொன்ன கருத்தில் எந்த மாற்றமும் இல்லை'' என்று திமிராகப் பதிலளித்திருக்கிறான் வேதாந்தி. பா.ஜ.க.வினரோ, "அதான் வாபஸ் வாங்கிவிட்டாரே, அப்புறம் ஏன் அடிக்கிறீர்கள்?'' என்று நியாயம் பேசுகிறார்கள்.
எந்தக் காலத்திலும் நல்ல பாம்பு நஞ்சை வாபஸ் வாங்கியதில்லை; வாங்கவும் முடியாது. அதை அரைகுறையாக அடித்துத் தப்ப விடுவதுதான் ஆபத்து!

நன்றி: புதிய ஜனநாயகம், அக்டோபர் 2007

Wednesday, December 26, 2007

கொலை வெறிக்கூட்டத்தின் வாக்குமூலம் தமிழில்...14.

"KG ஷா எங்களுடைய ஆள். நானாவதிக்கு பணத்தின் மீது தான் ஆசை" "(குஜராத் வன்முறை) குற்றவாளிகள் நானாவதி-ஷா ஆணையம் குறித்து பயப்பட வேண்டிய தேவையில்லை" என குஜராத் அரசு சட்ட ஆலோசகரான அரவிந்த் பாண்ட்யா தெரிவித்தான்.

தெஹல்கா:
வன்முறை கலவரங்களின் போது யார் முன்னின்று நடத்தினார்?

பாண்ட்யா: சிலர் இருந்தார்கள் இன்னும் சிலர் இல்லை என்று சொல்லுவதே தவறாகும்.... சம்பவ இடங்களுக்குச் சென்ற ஒவ்வொருவர்களும் பஜ்ரங்தளிலிருந்தும் விஹெச்பியிலிருந்தும் போனார்கள்....

தெஹல்கா: ஜெய்தீப்பாய் சம்பவ இடத்திற்குப் போனாரா?

பாண்ட்யா: ஜெய்தீப்பாய் கூட போனார்... எந்தெந்த தலைவர்கள் எங்கெங்கே போனார்கள், யாருக்கு நேரடியான பங்கு (தொடர்பு) இருந்தது, யாருக்கு சந்தேகபடும் படியாக பங்கு (தொடர்பு) இருந்தது - ஆணையத்திறகு முன்பால் இந்த விளக்கங்கள் எல்லாமே இருக்கிறது, எல்லா கைதொலைபேசி எண்களும், யாரெல்லாம் எங்கே சென்றார்கள்..... இடங்கள் கூட எங்களிடம் உள்ளன......

தெஹல்கா: ஆம் சில சர்ச்சைகள் கூட நடந்தனவே.....

பாண்ட்யா: அது இப்போதும் உள்ளது.... இன்னும் யாருடைய கைதொலைபேசி எண்கள் அங்கே இருந்தது என்பதும் எனக்குத் தெரியும்..யார் யார் எவர்களிடம் எங்கிருந்து பேசினார்கள்.... என்னிடம் பேப்பர்கள் உள்ளது....

தெஹல்கா: எனவே இதனால் ஹிந்துக்களுக்கு ஏதேனும் சில பிரச்சனைகள் இருக்குமா?.... ஜெய்தீப்பாய்க்கு இன்னும்.......

பாண்ட்யா: ஐயா, நான் தான் வழக்குகளை எதிர்கொள்கிறவன்..... கவலைபடாதே.... இதுபற்றி கவலைபடாதே!, பிரச்சனைகள் ஏதும் இங்கே ஏற்பட போவதில்லை. ஒருகால் பிரச்சனை ஏதும் ஏற்பட்டாலும் நான் அதை தீர்தது விடுவேன்.......... நான் யாருக்காக இத்தனை ஆண்டுகளையும் செலவழித்துள்ளேன்?... எனது சொந்த இரத்தத்திற்காக.

தெஹல்கா: ஆணையத்தின் தீர்ப்பு ஹிந்துக்களுக்கு எதிராக போக வாய்ப்பு இருக்கிறதா?

பாண்ட்யா: இல்லை, இல்லை.... காவல்துறையினருக்கு சில பிரச்சனைகளை இது உருவாக்கலாம்.... அது அவர்களுக்கு எதிராக போகலாம்... பாருங்கள், நீதிபதிகள் காங்கிரஸால் தேர்வு செய்யபட்டவர்கள்.

தெஹல்கா: ஆம்...நானாவதி... இன்னும் ஷா.

பாண்ட்யா: அது மட்டுமே பிரச்சனை.... அந்த நேரத்தில் நம்முடைய தலைவர்கள் அவசரத்தால் சர்ச்சைக்குள் மாட்டிக் கொண்டனர்....... அவர்கள் என்ன நினைத்தார்கள் என்றால், நானாவதி சீக்கியர் கலவரம் தொடர்பான விசாரணையில் ஈடுபட்டுள்ளதால்..... காங்கிரஸ் நீதிபதியை அவர்கள் பயன்படுத்தினால் சர்ச்சைகள் வராது.....

தெஹல்கா: நானாவதி முழுமையாக உங்களுக்கு எதிராகவே உள்ளாரா?

பாண்ட்யா: நானாவதி சாமர்த்தியமான ஆள்... அவருக்கு பணம் வேண்டும்.... KG ஷா புத்தி கூர்மையுடையவர்... அவர் எங்களுடைய ஆள்... அவர் எங்களிடத்தில் அனுதாபம் உடையவர்....... நானாவதி பணத்திற்கு பின்னால் இருப்பவர்.....

தெஹல்கா: அவர் பணம் பெற விரும்புகிறார் என்று நீங்கள் சொல்லுகிறீர்கள்......

பாண்ட்யா: அது உள்விவகாரம்......

தெஹல்கா: நானாவதி-ஷா ஆணையம் ஹிந்துக்களுக்கு எதிராகப் போகலாம்....

பாண்ட்யா: அவர்கள் ஆணையத்தை ஆண்டுகள் கணக்கில் நடத்துகிறார்கள்... அவருக்குப் பணம் வேண்டும், வேறு ஒன்றும் இல்லை... அவர் காங்கிரஸ்காரர்.....

தெஹல்கா: ஷா?

பாண்ட்யா: இல்லை. ஷா, அவர் எங்களுடைய ஆள்...... நானாவதி உச்ச நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் இன்னும் ஷா உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்...

• ••

பாண்ட்யா: கலவரம் தொடர்பான வழக்குகளின் அரசு சிறப்பு சட்ட ஆலோசகராக நான் இருக்கிறேன்... நான் இரண்டு விஷயங்களை மட்டுமே குறித்து வைத்துக் கொண்டேன்.... விஹெச்பியில் எவரும் ஆணையத்திடம் ஒருபோதும் வரகூடாது என நான் சொன்னேன்.... நீங்கள் என்னுடன் தொடர்பில் இருந்து கொள்ளுங்கள் அவ்வளவு தான்.... நான பாஜகவிடமும், "நீங்கள் என்னுடன் தொடர்பில் இருந்து கொள்ளுங்கள் அவ்வளவு தான்" என்றே கூறினேன்.... எங்கெல்லாம் நான் முகாம் நடத்துகிறேனோ அங்கு வரும்போது பெரும் பலத்துடன் வரவேண்டாம் இன்னும் மிக அறிந்த முகமுடையவர்களும் வர வேண்டாம் என சங்பரிவாரிடம் கூறினேன். நீங்கள் என்னுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளுங்கள்.... எனக்கு ஏதேனும் தேவைபட்டால், உங்களுக்கு தொலைபேசி அழைப்பு வரும் அதற்கு மேல் எதுவும் இல்லை......... முகாம்கள் நடத்தப்பட்ட எல்லா இடங்களுக்கும் நான் சென்றேன். நானும் சொந்தமாக முகாம்கள் நடத்தினேன். உள்ளுர்வாசிகளின் ஆதரவை வென்றெடுப்பதற்காகவே நான் முகாம்களுக்குச் சென்றேன்... இது எப்படி நடக்க வேண்டும், என்ன நடக்க வேண்டும்.....

தெஹல்கா: வேறுவகையான பிரச்சனைகளை அது உருவாக்கியதா.....

பாண்ட்யா: வேலைபார்க்கும் பாணியே வித்தியாசமானது..... ஆணையம் என்னும் மனோநிலையை முழுமையாக உருவாக்கியவனே நான் தான்... அதனால் தான் முஸ்லிம்கள் தங்கள் களப்பணியாளர்களிடம் இந்த விவரத்தைக் கொடுத்தார்கள்.... பல்வேறு பேச்சுகளிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவற்றில் சில நுண்ணறிவு குழுவாலும் (Intelligence Bureau) பதிவு செய்யபட்டுள்ளது. அதாவது ஹிந்துவோ அல்லது ஹிந்து தலைவரோ சம்பந்தபட்டிருந்தால் அது ஆபத்தானது, ஆனால் அரவிந்த் பாண்ட்யா சம்பந்தபட்டிருந்தால் 2000 மடங்கு ஆபத்தானது.

தெஹல்கா: உங்களுக்கு எதிராக ஏதேனும் விசாரணை உள்ளதா?

பாண்ட்யா: ஒன்று தெஹல்கா சம்பந்தபட்டது.... நான் காவல்துறை அதிகாரி RB ஸ்ரீகுமாரை மிரட்டினேன்.... அந்தத் தகவல் வெளியே கசிந்து தொலைகாட்சிகளில் நாள் முழுவதும் ஓடி கொண்டிருந்தது.... ஆனால் முந்தைய தெஹல்கா.....

பகுதி 5 நிறைவுற்றது. இன்ஷா அல்லாஹ் பகுதி 6 விரைவில்..

Tuesday, December 25, 2007

கொலை வெறிக்கூட்டத்தின் வாக்குமூலம் தமிழில்...13.

வன்முறை வெறியனுடைய வழக்கறிஞர்

நானாவதி-ஷா ஆணையத்தின் முன்பு குஜராத் மாநில அரசாங்கத்தின் சட்ட ஆலோசகராக ஆஜராகும் அரவிந்த் பாண்ட்யா, "முஸ்லிம்களை முடமாக்குவது தான் அவர்களைக் கொல்வதை விட சிறந்தது" என தான் நம்புவதாகக் கூறினான்.

கோத்ரா சம்பவத்திறகுப் பின் குஜராத்தில் நிகழ்ந்த மனித இன படுகொலைகளில், குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி தான் கொலைகார கும்பலின் காவல் தெய்வமாக இருந்து அவர்கள் தண்டனைகளிலிருந்து தப்பி செல்ல உதவினான் என்பதை நாடு உறுதியாகவே நம்பியது. இந்நம்பிக்கையானது உறுதியான வலுவான உண்மையாக மாறுவதற்குக் காரணம், மோடியும் மற்றும் அவனுடைய கட்சியைச் சார்ந்தவர்களும் வெளிட்ட தெளிவான பேச்சுகள் மற்றும் அல்ல, மீடியாக்கள், மனித உரிமை குழுக்கள் மற்றும் தனியார் உண்மை கண்டறியும் அணிகள் என பல்வேறு தரப்பினர்கள் மோடி ஆட்சியின் மீது வைத்த பல்வேறு குற்றசாட்டுகளும் முக்கிய காரணமாகும்.

இம்மனித இனபடுகொலைகளைப் பற்றி அதிகாரபூர்வமாக விசாரணை நடத்தும் நானாவதி-ஷா ஆணையம், இப்போது சில ஆண்டுகளாக வாக்குமூலங்களை பதிவு செய்து வருகிறது. நானாவதி-ஷா ஆணையம் முன்பாக அரசாங்கத்தின் செயல்பாடுகளை நியாயபடுத்துவதற்காக நியமனம் செய்யப்படடுள்ள விஷேட அரசு தரப்பு வழக்கறிஞரான பாண்ட்யாவும் மற்ற அனைவரும் (சங்பரிவார சண்டாளர்கள்) நம்புவதைப் போன்றே, "மோடி இல்லாது இருந்திருந்தால் கோத்ரா சம்பவத்திற்காக ஹிந்துக்களால் பழிவாங்கி இருக்கமுடியாது" என்று கூறினான். பாண்ட்யா அரசு தகவல்களை இரகசியமாக பகிர்ந்து கொள்ளும் விஷயங்களில் பங்கெடுப்பதில் மட்டுமல்லாது, இந்த விஷயத்தில் (கோத்ரா சம்பவம்) மோடியின் சொந்த அபிப்பிராயத்தையும் அறியக் கூடியவனாக இருந்தான். "மோடியும் அவனது அரசாங்கமும் 2002ல் நடைபெற்ற இனபடுகொலையை ஆதரித்ததோடு அப்பாதகர்களுக்கு பின்னணியில் இருந்து முழுஉதவியும் செய்தது" என்ற குற்றசாட்டுகளிலிருந்து அவர்களை விடுவிப்பதற்காக உருவாக்கப்பட்ட வழக்கறிஞர்களின் படையை வழிநடத்தி செல்லும் பாண்ட்யா தெஹல்காவிடம் கூறியதாவது, "கலவரத்தின் போது மோடி காவல்துறையினர் ஹிந்துக்களுடன் இருக்க வேண்டும் (உதவியாக) என வாய் மொழியாக உத்தரவிட்டான்."

பாண்ட்யா கூறினான், "(கோத்ரா) சம்பவம் நடைபெறும் போது ஹிந்து அடிப்படையிலான அரசு இருந்தது. எனவே மக்களும் (காவி வெறியர்கள்) தயாராக இருந்தனர். இன்னும் மாநில(அரசு)மும் தயாராக இருந்தது... இது ஒரு மகிழச்சியான ஒருமித்த நிகழ்வாக அமைந்தது."

இந்த நிருபர் ஜுன் 6 மற்றும் 8 தேதிகளில் இருமுறை பாண்ட்யாவை சந்தித்தார். "பாஜக அல்லாத அரசாங்கம் 2002ல் இருந்திருக்குமானால், கலவரங்கள் ஒருபோதும் நடந்திருக்கவே முடியாது" என்று இவ்விரு சந்திப்பின் போதும் பாண்ட்யா மிகவும் வலியுறுத்தி கூறினான். கோத்ரா சம்பவத்திறகுப் பின் மோடி மிகவும் மனஉளைச்சல் அடைந்திருந்தான், அவனே அஹ்மதாபாத்தில் உள்ள முஸ்லிம்கள் வசிக்கும் பகுதியான ஜேத்புராவில் வெடிகுண்டுகளை வீசியிருக்க வேண்டும் என்னும் அளவுக்கு மனம்பாதித்தது - ஆனால் முதலமைச்சர் என்னும் அவனுடைய பதவியே அவ்வாறு செய்யவிடாமல் கட்டுபடுத்தியதாகவும் அவன் (பாண்ட்யா) கூறினான். குஜராத்தில் முஸ்லிம்கள் மொத்தமாக படுகொலை செய்யப்பட்டது "வெற்றி நாள்" என ஒவ்வொரு வருடமும் கொண்டாடப் படவேண்டும் என அவன் எண்ணியதாக பாண்ட்யா கூறினான். இன்னும் அவன் கூறியது என்னவென்றால், முஸ்லிம்களை முடமாக்குவது அவர்களை கொல்வதை விடவும் சிறந்ததாக இருந்திருக்கும். இன்னும் இது குறைந்த அளவுக்கு தண்டனையை (காவி வெறியர்களுக்கு) கொடுக்கக் கூடியது என்பதோடு மட்டுமல்லாமல், ஹிந்துக்களுக்கு எவ்வளவு வலிமையுள்ளது என்பதனை தெரியபடுத்தும் வாழும் விளம்பரமாக ஒவ்வொரு முடமான முஸ்லிமும் சேவையாற்றுவான். முஸ்லிம்களுக்கு பொருளாதாரத்தில் இழப்புகளை ஏற்படுத்தி கொடுமை செய்வதும் அவர்களை கொலை செய்வது போன்று முக்கியமானதே என்று கூறி முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட பேரழிவுகளை பாண்ட்யா நியாயபடுத்தினான்.

இவை எல்லாம் மட்டுமல்ல, ஆணையம் முன்பு அரசாங்கத்தின் செயல்படுகளை நியாயபடுத்த முயற்சிப்பதோடு, வன்முறை குற்றவாளிகளுக்காக வழக்குகளையும் பாண்ட்யா வாதாடி வருகிறான். அநேகமான வழக்குகளில் நீதிபதிகள் அவர்களுடைய முழு ஒத்துழைப்பையும் இன்னும் வழிகாட்டுதல்களையும் தருவதாகவும் அவன் (பாண்ட்யா) தெஹல்காவிடம் கூறினான்.

"எல்லா நீதிபதிகளும் என்னை அவர்களுடைய ஆலோசனை மண்டபத்திற்கு அழைக்கிறார்கள். இன்னும் எனக்காக முழு அனுதாபம் காட்டுகிறார்கள்....... முழு ஒத்துழைப்பை எனக்கு தருகிறார்கள். ஆனால் சிறிது தூரத்தை என்னிடத்தில் கடைபிடிக்கிறார்கள்.... அவ்வப்போது தேவைபடும் வழிகாட்டுதல்களையும் நீதிபதிகள் தருகிறார்கள்..... எப்படி வழக்கை போடுவது; இன்னும் எந்த தேதியில்.... ஏனென்றால் அவர்கள் எல்லாம் அடிப்படையில் ஹிந்துக்கள்...... எனவே எல்லா தரப்பு மக்களிடம் இருந்தும் உதவிகள் முன்வந்து கிடைத்தது. .... மக்கள் (காவி வெறியர்கள்) ஒற்றுமையுடன் இருந்தார்கள். இன்னும் அவர்களின் ஒரே குறிகோள் ஹிந்து மதத்தை வாழ (?) வைக்க வேண்டும் என்பதாக இருந்தது" என வழக்கறிஞர் (பாண்ட்யா) கூறினான்.

குஜராத்தில் முஸ்லிம்களின் பாதிப்புகளுக்கும் தொடச்சியான துன்புறுத்தல்களுக்கும் அங்குள்ள நீதிதுறை மட்டும் தான் குற்றத்தில் கூட்டு வைத்தது என்றல்லாமல், நானாவதி-ஷா ஆணையம் கூட விட்டு கொடுத்தது. ஆணைத்திற்கு தலைமை தாங்கிய KG ஷாவும், நானாவதியுடன் சேர்ந்து பாஜக-விற்கு அனுதாபம் காட்டினார்கள். நானாவதி பணத்தின் மீது மடடுமே ஆர்வம் கொண்டிருந்ததாக கூறி பாண்ட்யா அவரை ஏளனம் செய்தான். ஜுன் 8 2007 அன்று பாண்ட்யா அஹ்மதாபாத்தில் உள்ள அவனது இல்லத்தில் வைத்து தெஹல்காவுடன் நடத்திய உரையாடலின் ஒரு பகுதி இதோ வருகிறது..

இன்ஷா அல்லாஹ் தொடரும்..

Saturday, December 8, 2007

கொலை வெறிக்கூட்டத்தின் வாக்குமூலம் தமிழில்...12.

மேஃஸானா மாவட்டத்தில் குஜராத் மாநில விஹெச்பி பொது செயலாளரான திலீப் திரிவேதி, கிட்டத்தட்ட 1 டஜன் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் கொண்ட அவனுக்குக் கீழே வேலை செய்யும் ஒரு வழக்கறிஞர் அணியை வழிநடத்தக் கூடிய மூத்த வழக்கறிஞனாக நியமிக்கப்பட்டான். மேஃஸானா, கலவரங்களின் போது மிக மோசமாகப் பாதிக்கப்பட்டப் பகுதிகளுள் ஒன்றாகும்.

மேஃஸானாவில் குறிப்பாக இரண்டு வழக்குகள், விஸ்நகரில் நடந்த
தீப்தா தர்வாஜா சம்பவமும் இன்னும் சர்தார்புரா சம்பவமும் - இங்கு மக்கள் படுகொலை செய்யப்பட்ட எண்ணிக்கையாலும் மேலும் காட்டுமிராண்டித்தனமாக ஈவு இரக்கமில்லாமல் கொடூரமாகக் கொலைகள் செய்யப்பட்ட முறையால் - மனித சமுதாயத்தின் நெஞ்சத்தை உலுக்கியது. இந்த இரண்டு வழக்குகளிலும் குற்றவாளிகள் ஜாமீனில் வெளிவர மனு தாக்கல் செய்யும் போது அதை எதிர்க்க வேண்டியது தான் இவரது(அரசு தரப்பு வழக்கறிஞர்) கடமையாக இருந்திருக்க வேண்டும். ஆனால் அதற்கு மாற்றமாக குற்றவாளி ஜாமீனில் வெளிவர உதவியதற்காக சமுதாயத்தால் குற்றம் சாட்டப்பட்டு, கண்டிக்கப்பட்டான். இதனால், பாதிக்கப்பட்டவர்கள் பலமுறை குஜராத் உயர்நீதி மன்றத்திலும் இன்னும் உச்சநீதி மன்றத்திலும் முறையிட்டப் பின், கலவர வழக்குகளுக்காக ஆஜர் ஆவதிலிருந்தும் திரிவேதி நீக்கப்பட்டான். ஜுன் 15ம் தேதி 2007ல் திரிவேதியை மேஃஸானா நீதிமன்ற வளாகத்திலிருக்கும் அவனது அலுவலகத்தில் வைத்து பார்க்க தெஹல்கா சென்றது.

விஹெச்பியின் பொது செயலாளர் என்ற அந்தஸ்தின் காரணத்தால், குஜராத் வன்முறை கலவரங்கள் சம்பந்தப்பட்ட வழக்குகள் அனைத்தையும் இவன் தான் ஒருங்கிணைத்துள்ளான். தெஹல்கா பத்திரிக்கையாளர், திரிவேதியின் அலுவலகத்தில் உட்கார்ந்திருக்கும் போதே கலவரம் தொடர்பான வழக்குக் குறித்துக் கலந்து ஆலோசிப்பதற்காக, குற்றம்சாட்டப்பட்டுள்ள ஹிந்துக்களில் இரண்டு பேர் உள்ளே வந்தனர். குற்றவாளிக்காக வாதாடுவதற்கு வழக்கறிஞர் ஒருவரை அமர்துவது தொடர்பாக திரிவேதியின் உதவியை இவ்விருவரும் நாடினார்கள்.

தன்னைக் காண வந்தவர்களுக்குச் சரியான வழக்கறிஞரை பிடிக்க முயற்சி செய்யும் பொருட்டு சில வழக்கறிஞர்களை தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டான். அவர்களுடைய வழக்கிற்காக ஏற்கனவே வாதாடி வந்த ஒரு வழக்கறிஞர் நோயுற்று விட்டதால், வேறொரு புது வழக்கறிஞரை மீண்டும் கண்டுபிடித்து கொடுப்பது இவனது பொறுப்பாகி விட்டதாக அவ்விருவரும் அவனது அலுவலகத்தை விட்டுச் சென்றப் பிறகு திரிவேதி கூறினான்.

அரசு வழக்கறிஞர்களையும் எதிர்தரப்பு வழக்கறிஞர்களையும் ஒருங்கிணைப்பதிலிருந்து கலவரம் தொடர்பான வழக்குகளை மறுவிசாரணை செய்யும் காவல்துறையினருடன் பேசுவது வரை அனைத்தையும் இவன் ஒருவனே நிர்வகிக்க வேண்டியதிருப்பது குறித்து முணுமுணுத்துக் கொண்டான். அவன் மேலும் கூறும் போது, கலவரம் தொடர்புடைய மொத்தம் 74 வழக்குகளில் இரண்டில் மட்டுமே குற்றாவாளி எனத் தீர்ப்பு வந்துள்ளதாகவும் தெரிவித்தான்.

"ஒரு வழக்கில், செஷன்ஸ் நீதிமன்றத்தில் நான் மேல்மூறையீடு செய்து நிரபராதி எனத் தீர்ப்பைப் பெற்றுக் கொடுத்தேன்.....இரண்டாவது வழக்கில் மேல்மூறையீடு உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் எல்லோரும் பிணையில் வெளியே வந்துவிட்டனர். .. குற்றவாளி என்று கொடுக்கப்பட்ட தீர்ப்பு தவறானது."

கோத்ரா சம்பவத்திற்குப் பிறகு மேஃஸானாவில் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட படுபயங்கரமான கொள்ளைகள் மற்றும் கொலைகளைப் பற்றியத் தகவல்களை விவரிக்க ஆரம்பித்து விட்டான். சர்தார்புரா வழக்கு பற்றி இவன் (திலீப் திரிவேதி) கூறும் போது, இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் தடை உத்தரவு வாங்கப்பட்டுள்ளது. ஆனால் குற்றவாளிகள் பிணையில் ஏற்கனவே வெளியே வந்து விட்டதால் இந்தத் தடையைப் பற்றித் தான் கவலை படவில்லை என்பதாகக் கூறினான். இதன்பிறகு மேஃஸானா நீதிமன்றத்தில் சர்தார்புரா கலவரம் தொடர்பான வழக்கில் இவன் குற்றவாளிகளைப் பிணையில் விடுதலை செய்ய வைத்த போது, பாதிக்கப்பட்டவர்கள் எத்தகையக் கூக்குரல்கள் எழுப்பினார்கள் என்பது பற்றியும், டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கை முதல் பக்கத்தில் இவ்வாறு பிணையில் விடுதலை செய்ததைப் பற்றி எழுதி தான் கலவரம் தொடர்பான வழக்குகளில் குற்றாவாளிக்கு ஆதரவாக நடக்கிறவன் என்று குற்றம் சாட்டியதை எல்லாம் விவரித்துக் கூறினான்.


தனக்கு எதிரான குற்றசாட்டுகள் உண்மையாக இருந்தும் கூட இதனை நிரூபிக்க எந்த ஒரு ஆதாரமும் கிடையாது என்று சந்தோசத்துடன் திரிவேதி கூறி பெருமைபட்டுக் கொண்டான். கலவரத்திற்குப் பின்பு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று அங்கு முகாமிட்டு தங்கி அரசு வழக்கறிஞர்கள், (சங்பரிவார) தொண்டர்கள் மற்றும் காவல் துறை அதிகரிகளுடன் சந்தித்து, கூட்டங்கள் நடத்தியதை அனைவரும் அறிவார்கள் என்றும் கூறினான்.

சபர்கந்தாவில் அரசு வழக்கறிஞரான பாரத் பட் என்பவனை தெஹல்கா சந்தித்தது. அவனும் விஹெச்பியின் மாவட்டத் தலைவராக உள்ளான். அவனால் முடிந்த அளவுக்குச் சிறந்த உதவிகளைக் குற்றவாளிகளுக்குச் செய்வதாகவும் பட் கூறினான். இந்த அரசு வழக்கறிஞர் சரியாக சொல்லப் போனால் தரகராக மாறிவிட்டான் என்று கூறவேண்டும். ஏனென்றால் நீதிக்குப் போராடுவதை விட்டு விட்டு நீதிமன்றத்திறக்கு வெளியே பாதிக்கபட்டவர்களுக்கும் குற்றவாளிகளுக்கும் இடையே சமரசம் செய்து தீர்த்து வைக்க முயற்சி செய்கிறான்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்..

Monday, December 3, 2007

கொலை வெறிக்கூட்டத்தின் வாக்குமூலம் தமிழில்...11.

சட்டம் செய்த சதி

முயல்களோடு ஓடிக்கொண்டே, அதை வேட்டை நாயைக் கொண்டு வேட்டையாடுவதுப் போலப், பாதிக்கபட்டவர்களுக்காக வாதிடுகிற அரசு தரப்பு வழக்கறிஞர்கள், அவர்களுடைய அனுதாபங்கள் எல்லாம் குற்றவாளிகளின் மீதே திட்டமாக இருக்கிறது. அரசாங்கச் சட்ட ஆலோசகரான அரவிந்த் பாண்ட்யா, உண்மையைக் கண்டுபிடிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட நானாவதி-ஷா ஆணையத்தையே சரிகட்டி நீதியை அழிக்க எத்தகைய நம்பிக்கையோடு இருந்தார்!.

மேலோட்டம்

சபர்மதி விரைவு இரயில் 'தீ'க்கு இரையாக்கப்பட்ட அந்த இரவிலேயே கலவரக்காரர்களைப் பாதுகாப்பதற்காக, வழக்கறிஞர்களைக் கொண்ட கமிட்டி ஒன்று சங்பரிவார முக்கியஸ்தர்களால் நியமிக்கப்பட்டது.

விஹெச்பி உறுப்பினரும், அஹ்மதாபாத்தில் முக்கியமான வழக்கறிஞருமாகிய சேத்தன் ஷா என்பவனே நரோடா பாட்டியா படுகொலைகள் வழக்கில் குற்றவாளிகளுக்காக வாதாட வந்த முதல் வழக்கறிஞர் ஆவான். மிக முக்கியமான, சிக்கலான வழக்குகளில் அரசு தரப்பு சார்பாக சங்பரிவார அபிமானிகள் ஆஜராவது வழக்கப்படுத்தப்பட்டதால், பின்னர் இவன் (சேத்தன் ஷா)குல்பர்க் சமூக படுகொலைகள் வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டான்.

கலவரங்களின் போது மிக மோசமாகப் பாதிக்கபட்டப் பகுதிகளுள் ஒன்றான மேஃஸானா மாவட்டத்தின் மூத்த வழக்கறிஞராக, குஜராத் மாநில விஹெச்பி பொதுச் செயலாளரான திலீப் திரிவேதி நியமிக்கபட்டிருக்கிறான். குஜராத் முழுவதும் கலவரம் சம்பந்தப்பட்ட வழக்குகளை ஒழுங்குபடுத்தி நடத்துகிறவனும் இவனே.

சபர்கந்தாவில் அரசு தரப்பு வழக்கறிஞராக விஹெச்பி மாவட்டத் தலைவனான பாரத் பட் என்பவன் நியமிக்கபட்டிருக்கிறான். இவனால் முடிந்த அளவு குற்றவாளிகளுக்கு சிறந்த உதவிகளை செய்வதாக இவன் கூறுகிறான்.

நானாவதி-ஷா ஆணையத்தில் மாநில அரசு சட்ட ஆலோசகரான அரவிந்த் பாண்ட்யா நீதிபதிகள் மேல் அவதூறான மதிப்பீடு செய்கிறான். அவனது அபிப்பிராயத்தின் படி, நானாவதி பணத்தாசையுடைவர் என்றும், ஷா அவர்கள்(சங்பரிவாரம்) மீது அநுதாபமுடையவர் என்பதாகும்.

நீதி - வஞ்சிக்கபட்டவர்களுக்கு மறைக்க(மறுக்க)ப்பட்டது

கலவரங்கள் நடப்பதற்கு முன்பே, வழக்கறிஞர்கள் மிக அதிகமான கவனத்துடன் தேர்வு செய்யப்பட்டு வழக்குகளைச் சந்திப்பதற்கான முன்னேற்பாடுகளை சங்பரிவாரம் செய்ய ஆரம்பித்துவிட்டது.

நன்கு சோதித்து அறியப்பட்ட ஒரு திட்டத்தை வைத்து நடத்தபட்ட மனித வர்க்கத்தின் படுகொலை மட்டுமல்ல, இது ஒரு துயரமான முடிவுமாகும். ஹிந்துக்களில் எவர்கள் கலவரத்தினாலும், கொலைகளினாலும் குற்றம்சாட்டப் படுவார்களோ அவர்களுக்குச் சட்ட உதவிகள் அளிப்பதற்கான திட்டங்களையும் சூழ்ச்சிகளையும், கலவரங்கள் நடப்பதற்கு முன்பே விஹெச்பி வகுக்க ஆரம்பித்துவிட்டது.

தீமந்த் பட் மற்றும் தீபக் ஷா, இவ்விருவரும் வதோதரா பகுதி பாஜக உறுப்பினர்கள். பட் என்பவன் மஹாராஜா சயோஜிராவ் பல்கலைகழகத்தில் தலைமை கணக்காளனாக பணி செய்கிறான். ஷா என்பவன் பல்கலைகழகத்தின் நிர்வாக குழு உறுப்பினராக இருக்கிறான். இவ்விருவரும் தெஹல்காவிடம் சொல்லும் போது, சபர்மதி விரைவு இரயில் சம்பவம் நடந்த இரவில் சங்பரிவார் முக்கிய நபர்கள் ஒன்று கூடி கலவரக்காரர்களுக்கு எதிராக பதியப்படும் வழக்குகளைச் சந்திக்க வழக்கறிஞர்களின் கமிட்டி ஒன்றை நியமித்தார்கள். உண்மை நிலை என்னவென்றால், விஹெச்பியில் பதவியில் இருக்கக் கூடியவர்களே தனியாக பணியாற்றக் கூடிய வழக்கறிஞர்களாகவும் இன்னும் அரசு வழக்கறிஞர்களாவும் என அதிக எண்ணிக்கையிலான வழக்கறிஞர்கள் இருந்தது அவர்களுடைய வேலையைச் சுலபமாக்கித் தந்தது. வதோதராவில் வழக்கறிஞர்களாக இருக்கும் ராஜேந்திர திரிவேதி, நீரஜ் ஜெயின் மற்றும் துஸார் வியாஸ் போன்ற அதிகமான வழக்கறிஞர்கள் பெயர்களை தீபக் ஷா கூறி, இவர்கள் எல்லோரும் முன்னேற்பாடுகளைக் குறித்து நடத்தபட்டச் சந்திப்பில் கலந்துக் கொண்டதாக கூறினான்.

RSS உறுப்பினாகளான நரேந்திர பட்டேல் மற்றும் மோகன் பட்டேல் ஆகியோர் தெஹல்காவிடம் சொல்லும் போது, கலவரத்திற்குப் பின் ஹிந்து கலவரக்காரர்களுக்கு சட்ட உதவிகள் செய்வதற்காக சபர்கந்தா மாவட்டத்தில் சங்கலன் என்ற பெயரில் ஒரு அமைப்பை RSS உருவாக்கியதாகச் சொன்னார்கள். தனியாகப் பணியாற்றிய விஹெச்பியை சார்ந்த அநேகமான வழக்கறிஞர்களே குற்றவாளிகளுக்காக வாதாடுகிறவர்கள் ஆனார்கள். இன்னும் அரசு தரப்பு வழக்கறிஞர்களோ விஹெச்பி உறுப்பினர்களாகவோ அல்லது சங்பரிவார அபிமானிகளாகவோ இருப்பதனால் கலவரக்கார வன்முறை குற்றவாளிகளுக்கு மறைமுகமான உதவிகளைச் செய்தனர்.

அரசு தரப்பு வழக்கறிஞர்கள் குற்றவாளிகளுக்கு எதிரான குற்றங்களை முன்னெடுத்து வைத்து வழக்கைக் கொண்டுச் செல்வதற்குப் பதிலாக அவர்களுக்கு உள்ளபடியே உதவிகளைச் செய்தார்கள். எனவே, அநேகமான இடங்களில், வழக்கைத் தொடர்ந்தவருக்காக (பாதிக்கப்படவருக்காக) வாதிடும் வழக்கறிஞரும், எதிர் தரப்புக்கு (குற்றவாளிக்காக)வாதிடும் வழக்கறிஞரும் ஒரே பக்கத்திற்குச் சார்புடையவர்களாக, அதாவது கொலை, கொள்ளை, கற்பழிப்புகள் செய்தக் குற்றவாளிகளின் தரப்புக்கு ஆதரவாக இருந்தார்கள். அப்படியானால் முஸ்லிம் சமுதாயம் என்ன நம்பிக்கையோடு தங்களை வதைத்தக் கொடுமைபடுத்தியக் குற்றவாளிகள் தண்டனை அளிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்க முடியும்? முதலில் காவல்துறை தங்களது போலியான கண்துடைப்பு விசாரணைகள் மூலம் கலவரக்காரர்களின் பக்கம் சாய்ந்திருந்தார்கள். இப்பொழுது பாதிக்கபட்டவர்களுக்காக வாதாட வேண்டிய அரசு தரப்பு வழக்கறிஞர்களும் கூட பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிராக அணி திரண்டு விட்டனர்.

விஹெச்பியின் செயல்பாடுகளில் தீவிர ஈடுபாடுடைய உறுப்பினரும், அஹ்மதாபாத்தில் முன்னனி வழக்கறிஞருமான சேட்டன் ஷா, முதலில் நரோடா பட்டியா படுகொலைகளில் குற்றம்சாட்டப்பட்ட குற்றவாளிகளுக்காகத் தான் ஆஜரானார். அரசாங்கம் பின்னர் அவரை, குல்பர்க் சமூக குடியிருப்பு படுகொலைகளுக்கான வழக்கில் அரசு தரப்பு (பாதிக்கப்பட்டவர்களுக்காக வாதாடும்) வழக்கறிஞராக நியமித்தது. குல்பர்க் வழக்கில் குற்றம் சாட்டபட்டுள்ளவர்களில் ஒருவனான பிரஹ்லட் ராஜு என்பவனை தெஹல்கா சந்தித்த போது கூறினான், அவன் கைது செய்வதிலிருந்து தப்பிக்க ஓடிக் கொண்டிருந்தப் போது, எப்பொழுது காவலதுறையிடம் சரணடைய வேண்டும் என்பது பற்றிய ஆலோசனையை சேட்டன் ஷா அளித்ததாகக் கூறினான்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்...

Sunday, December 2, 2007

டிச. 6 - இந்திய இறையாண்மை தகர்ந்த நாள்!




பாபரி மஸ்ஜித் - இடிந்து போன
15 ஆண்டுகள்





1992 டிசம்பர் 6, இந்தியாவின் வரலாற்றில் அழிக்க இயலாக் கறையாக இன்றும் என்றும் நிலைத்திருக்கிறது. அல்லாஹ்வின் ஆலயமாம் பாபரி மஸ்ஜித் தகர்க்கப்பட்ட தினம். இந்தியாவில் முஸ்லிம்களை இல்லாமலாக்கி பூரண இந்துத்துவ ஆட்சியை நிலைநிறுத்த வேண்டி செயல்பட்டு வரும் பாசிச இந்துத்துவ பயங்கரவாதிகளின்நேரடி களம் தான் பாபரி மஸ்ஜித் இடிப்பு.

ஆம்!!!

அன்றைய தினம் நாம் இழந்தது நமது பள்ளிவாசலை மட்டுமல்ல. மாறாக, ஒட்டுமொத்த முஸ்லிம்களின் தன்மானத்தையும், எதிர்கால வாழ்வுரிமையையும் தான். இன்று 15 ஆண்டுகளை நிறைவு செய்யும் போது இந்திய முஸ்லிம்கள் தங்களது நிலைபாட்டை மீண்டும் ஒருமுறை மீள்ஆய்வு செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

எத்தனையோ கலவரங்களும், இனப்படுகொலைகளும் நடந்ததைப் போலல்லாமல் தெளிவாக தியதி குறிப்பிட்டு, அரசு செலவின் மூலம் பிரயாண ஏற்பாடுகள் செய்யப்பட்டு கலவரக்காரர்கள் ஒன்று கூட்டப்பட்ட இந்த சம்பவம் இந்திய இறையாண்மையையே அவமானப்படுத்தியதாகும்.

இந்திய சுதந்திரத்திற்காய் தன்னலம் பேணாமல், நாட்டை முன்னிறுத்தி தங்களது உடமைகளையும், பொருளாதாரத்தையும், உயிர்களையும் வாரிவாரித் தந்த இஸ்லாமியச் சமுதாயத்திற்கு இந்திய அரசாங்கமும், அரசுத்துறைகளும் தந்த விலைமதிக்க முடியாத பரிசுதான் நமது பாபரி பள்ளி இடிப்புச் சம்பவம்.

பள்ளிவாசல் இடிப்பைத் தொடர்ந்து டிசம்பர் 1992 - ஜனவரி 1993-ல் பம்பாயில் காவல்துறையும், இந்துத்துவப் பாசிஸ்டுகளும் சேர்ந்து முஸ்லிம்களுக்கெதிராக இனப்படுகொலைகளை நடத்தினர். முஸ்லிம்களின் இரத்தம் வழிந்தோடுவதைத் தடுக்கத் திராணியற்ற அரசாங்கமாகவே மத்திய மாநிலங்களின் அரசுகள் நடந்தன. இன்று வரை அந்த கலவரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு எவ்வித நீதியோ, இழப்பீடோ வழங்கப்படவில்லை. குற்ற பரம்பரையாகவே முஸ்லிம் சமுதாயம் இன்னும் காட்சியளிக்கிறது.

பம்பாய் படுகொலைகள் நடந்த 10 வருடங்களுக்குப் பிறகு 2002-ல் குஜராத்தில் மீண்டும் ஒரு பயங்கர முஸ்லிம் இனப்படுகொலை அந்த மாநிலத்தை ஆட்சி செய்யும் நரேந்திரமோடியின் நேரடித் தலைமையின் கீழ் நடந்தேறியது.

பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்களின் உயிர்களும், முஸ்லிம் பெண்களின் கற்பும் சூறையாடப்பட்டது. இன்றுவரை யாருமே தண்டிக்கப் படவில்லை. இதற்கு ஒட்டுமொத்த இந்திய அரசியலமைப்பும், எல்லா அரசியல் கட்சிகளும்,
கட்சித் தலைவர்கள் அனைவருமே பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்.

பாபரி பள்ளி இடிக்கப்பட்ட 15 ஆண்டுகள் ஆனபின்பு பள்ளிவாசலை மறந்துவிடும்படி முஸ்லிம் சமுதாயம் நெருக்கடிக்குள்ளாக்கப்படுகிறது. ஆனால், மீண்டும் அதே இடத்தில் பள்ளிவாசலைக் கட்டி தருவதன் மூலம் மட்டுமே இந்தியாவின் இறையாண்மை பாதுகாக்கப்படும்.

மட்டுமல்லாமல், த்ற்போது மத்திய அரசுக்கு நடுநிலைபேணும் அனைத்து சமுதாயத்ததினரின் கோரிக்கைகள் இதுதான்.

1. 1961-ல் பாபரி மஸ்ஜிதும் அதைச்சுற்றியுள்ள இடங்களையும் முஸ்லிம்களிடம் ஒப்படைப்பது தொடர்பான வழக்கு.

2. 1992-ல் பள்ளிவாசல் இடிப்பைத் தொடர்ந்துப் போடப்பட்ட வழக்கு.

3. பள்ளிவாசல் இடிப்பு மற்றும் அதைத்தொடர்ந்து நடைபெற்றச் சம்பவங்களை விசாரிக்கப் போடப்பட்ட லிபரான் கமிஷன்.


மேற்சொன்ன வழக்குகளும், கமிஷனும் இன்று செயலற்றுப்போய் கிடக்கின்றன.

மத்திய அரசு உடனடியாக இந்த வழக்குகளை தீரவிசாரித்து உடனடி தீர்வு வழங்கவேண்டும். இந்தத் தீர்ப்பின் மூலம் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநியாயங்கள் தீர்க்கப்படவேண்டும். இல்லையென்றால், இந்திய ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட அனைத்து தரப்பு மக்களிடமிருந்தும் நியாயவான்கள் ஒன்று திரட்டப்பட்டு மீண்டும் அதே இடத்தில் பாபரி பள்ளியை
நிர்மாணிக்கப் படுவது தவிர்க்க இயலாததாகும்.

நன்றி: South India Friends Association (SIFA) - Dammam.