Sunday, June 25, 2006

ஈனப்பிறவிகள் - ஒரு பார்வை.

இப்பதிவினைக் குறித்து இதற்கு முந்தைய பதிவிலேயே(இன்றைய சிறந்த வலைப்பதிவர் ஆவது எப்படி? முன்னறிவிப்பு ஒன்று கொடுத்திருந்தேன். சாதாரணமாக ஓர் பதிவிற்கு பதிவினை பதித்த பின்பே அதனைக் குறித்த வாசகர்களின் மேலான அபிப்பிராயங்கள் பாராட்டாகவோ கண்டனங்களாகவோ வரும்.

ஆனால் இது ஒரு வித்தியாசமான பதிவு. பதிக்கும் முன்பே பின்னூட்டம் பெற்ற முதல் பதிவே சில வேளை இதுவாகத் தான் இருக்கும். எனவே இப்பதிவிற்கு ஏற்கெனவே கிடைத்த "பாராட்டு" பின்னூட்டத்தையும் அதற்கு நான் அளித்த நன்றியையும் முதலில் பதித்து விட்டு பின்னர் விஷயத்துக்கு வருகிறேன்.

இது இப்பதிவினைக் குறித்தும் "ஈனப்பிறவிகளைக்" குறித்தும் கருத்திடுபவர்களுக்கு வெகுவாக உதவலாம். இந்த பாராட்டினைத் தெரிவித்தவர் சகோதரர் ஸ்ரீநிதி அவர்கள். இதே பாராட்டினை இங்கு இடுபவர்கள் சகோதரர் ஸ்ரீநிதி அவர்களுக்கு நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறார்கள்.

இனி சகோதரர் ஸ்ரீநிதி அவர்களின் "பாராட்டு" பின்னூட்டம்:

//இறைவன் நாடினால் நாளை "ஈனப்பிறவிகளைக்" குறித்த மாறுபட்ட கண்ணோட்டத்துடன் கூடிய ஓர் சிறந்த வலைப்பதிவு படம் இங்கு காண்பிக்கப்படும். காணத்தவறாதீர்கள்//

The god of a perveted mind will also be a perverted being.


இதற்கு நான் அளித்த நன்றி பின்னூட்டம்:

நன்றி உங்களின் பாராட்டுக்களுக்கு(!??!). "ஈனப்பிறவி" என்ற வார்த்தை உபயோகத்துக்கு இதனை விட சிறந்த ஒரு பாராட்டு கிடையாது என்பதில் நானும் உங்களுடன் உடன்படுகிறேன்.

நான் இன்னும் "ஈனப்பிறவி" பதிவே தயார் செய்யவில்லை. அதற்குள் என் மனதிலுள்ளதை சரியாக பிடித்து விட்டீர்களே. நீங்கள் கில்லாடி தான் போங்கள்.

விரைவில் "ஈனப்பிறவி" படம் போடுகிறேன்.

அப்பதிவிலும் நீங்கள் கண்டிப்பாக இந்த கமெண்டை வைக்கவேண்டும் என உங்களை கேட்டுக் கொள்கிறேன்.

மீண்டும் என் மன ஓட்டத்தோடு இணைந்து "ஈனப்பிறவி" வார்த்தையை உபயோகித்தவருக்கு மேற்கண்ட அருமையான "பாராட்டை(!!??)" தெரிவித்த உங்களுக்கு நன்றிகள் பல ஆயிரம்.

நன்றியுடன்

இறை நேசன்.


இனி "ஈனப்பிறவிகளைக்" குறித்து:

நேரடியாக விஷயத்துக்கு வருகிறேன்.

"முண்டாசு கவி" பாரதியாரை நான் உங்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டிய அவசியமில்லை. "அச்சமில்லை" வரிகள் மனதில் வருபவர்களுக்கு கண்டிப்பாக இவரின் முறுக்கு மீசையும், தலைப்பாகையும் கூடவே பல புரட்சிப் பாடல்களும் நினைவுக்கு வரும். இவரைக் குறித்து பல விமர்சனங்கள் திண்ணைகளிலும் கூடங்களிலும் பேசப்படுகின்றன.

அவற்றில் முக்கியமானவை, தனது சிறை விடுதலைக்காக "ஆங்கிலேயர்களிடம் இனி சுதந்திரப்போரில் ஈடுபட மாட்டேன் என மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்து சுதந்திரப்போராட்டத்தில் இருந்து ஒதுங்கியவர்" என்பதும், "சாதிவெறிப் பிடித்தவர்" என்பதும்.
இவற்றைக் குறித்து பலர் ஆதாரங்களுடன் "அசுரத்தனமாக" கத்தியாயிற்று. நம் விஷயம் அதுவல்ல.

பாரதியார் மீதான "சாதி வெறிப்பிடித்தவர்" என்ற குற்றச்சாட்டை வைத்தவர்கள் அதற்கு ஆதாரமாக நாராயணப்பிள்ளை என்ற பார்ப்பனர் அல்லாதவர் அவரின் மகனுக்கு பாரதியாரின் மகளை பெண் கேட்டதாகவும் அதனைக் கேட்ட பாரதியார் மிகுந்த கோபத்துடன் அவரிடம் ஆவேசப்பட்டு பெண் தர மறுத்ததையும் குறிப்பிட்டனர். நமது விஷயம் இதுவுமல்ல.

பாரதியாரைக் குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு பதிலெழுதிய "காந்தியை கொன்ற கோட்சேயின் செயலை நியாயபடுத்திய" திரு மலர் மன்னன் அவர்கள் இதற்கும் சில நியாயப்படுத்துதல்களை செய்துள்ளார்.

அதாவது "பாரதியாரிடம் பெண்கேட்ட பிராமணர் அல்லாத நாராயணப்பிள்ளை "இயலாத நிலையிலிருந்த" ஓர் பிராமணரின் மனைவியுடன் "தொடர்பு" வைத்திருந்தார். அதனால் தான் பாரதியார் தனது மகளை அவரின் மகனுக்கு திருமணம் முடித்துக் கொடுக்க சம்மதிக்கவில்லை இல்லாமல் பாரதியாருக்கு பிராமண சாதி வெறி ஒன்றும் இல்லை" என அவரின் நிலைபாட்டினை நியாயப்படுத்துகிறார்.

அவருக்கு சாதி வெறி இருந்ததோ இல்லையோ இங்கு அதுவல்ல முக்கியம். "பிராமணர் அல்லாத நாராயண பிள்ளை இயலாத நிலையிலிருந்த ஓர் பிராமணனின் மனைவியுடன் தொடர்பு வைத்திருந்ததை கூற வந்த திரு. மலர் மன்னன் அந்த பிராமணன் அல்லாத நாராயணபிள்ளைக்கு ஓர் பட்டம் கொடுத்தார். அது தான் இங்கு முக்கியம்.

இனி திரு. மலர் மன்னனின் வார்த்தைகளில் இருந்து......

"ஒரு சக்கிலியக் குடும்பத்திலோ பறையர் குடும்பத்திலோ பெண் எடுக்க மனம் இல்லாத மேல் சாதி பிராமணரல்லாதவருக்கு பிராமணரான பாரதியார் வீட்டுப் பெண் கேட்கிறது! ஆதுதான் அவருக்குத் தெரிந்த சாதியொழிப்பு! அதிலும் இயலாமையிலே இருந்த பிராமணரான பாரதியாரிடம்தான் அவருக்கு அவ்வாறு கேட்கிற துணிவு வந்திருக்கிறது! மேலும் மிகவும் இயாலமையிலிருந்த ஒரு பிராமணர் மனைவியைக் கள்ளத்தனமாக வைத்துக்கொள்கிற கொழுப்பும் அந்த நபருக்கு இருந்திருக்கிறது! அந்தக் கொழுப்புதான் பாரதியாரிடம் அப்படிக் கேட்கிற துணிவையும் கொடுத்திருக்கிறது! இப்படிப்பட்ட ஒரு ஈனப் பிறவி பாரதியாரிடம் தன் மகனுக்குப் பெண் கேட்கிறது தைரியமாக!"

நாம் இங்கு ஜாதியைக் குறித்தோ பார்ப்பன ஜாதிவெறியைக் குறித்தோ கேள்வி எழுப்ப விரும்பவில்லை. பார்ப்பன ஜாதிவெறி திரு. மலர் மன்னனுக்கா அல்லது "ஜாதிகள் இல்லையடி பாப்பா" எனப்பாடிய பாரதியாருக்கா என்றும் பட்டிமன்றம் நடத்த விரும்பவில்லை.

நாம் கேட்க விரும்புவதெல்லாம்,

"விரும்பும் ஆடவரோடு உறவு கொள்வது பெண்களின் உரிமை என்றும் அவ்வாறு செய்யும் பொழுது கர்ப்பமடையாமல் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அவ்வாறு கர்ப்பமடையாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்" என்பதைக் குறித்து ஆலோசனைகள் கூறுவதை "முற்போக்கான பெண்ணியவாதியின் பண்பு என சிறப்பித்துக் கூறும் இன்றைய தமிழ் சமூகத்தில் வாழும் திரு. மலர்மன்னன் அவர்கள், அவ்வாறு தான் விரும்பும் ஆடவனோடு தொடர்பு வைத்திருந்த இயலாமையிலிருந்த ஓர் பிராமணரின் மனைவியின் உரிமையை நிலைநாட்ட உதவும் விதத்தில் அந்த பெண்ணோடு தொடர்பு வைத்திருந்த பிராமணரல்லாத அந்த "பெண்விடுதலைவாதிக்கு" "ஈனப்பிறவி" என பட்டம் கொடுத்தது என்ன விதத்தில் நியாயம்?

சரி அவ்வாறு வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைப்பவர் "ஈனப்பிறவி" எனில், அவரே அவருடைய பதிவில் "பாரதியாருக்கு கண்ணம்மா என்ற பெண்ணோடு தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது" எனக் கூறுகிறாரே. அவ்வாறெனில் திரு. மலர்மன்னனின் பார்வையில் பாரதியாரும் "ஈனப்பிறவி" தானா? இதற்கு திரு. மலர்மன்னன் என்ன விளக்கம் வைத்திருக்கிறார்?

"கருவுராமல் தப்பித்துக் கொள்ளலாம் என்ற நிலை வந்ததும் பெண்கள் பொங்கி எழுந்தனர். அமெரிக்க ஆண்களே அஞ்சும் அளவில் உடல் உறவில் ஈடுபட்டனர். செயல்பட இயலாத ஆண்துணையை விடுத்து வேறு துணை தேடினர்."

மேற்கண்ட கருத்து "முற்போக்கு பெண்ணியவாதி" திரு. டோண்டு அவர்களுடையது. இதன் அடிப்படையில் இப்பெண்களுடன் தொடர்பு கொண்ட ஆண்கள் அனைவரும் "ஈனப்பிறவிகளா"? இவ்வாறு மற்ற பெண்களுடன் தொடர்பு வைத்திருக்கும் ஆண்கள் அனைவரையும் "ஈனப்பிறவிகள்" எனக் கூறிவிட்டால் "ரோசமுள்ள" எந்த ஆணாவது "பெண்களின் உரிமையை" நிலை நாட்ட முன்வருவார்களா?

திரு. மலர் மன்னன் அவர்கள் இவ்வாறு கூறுவது பெண் விடுதலைக்கு எதிரான பிற்போக்கான கருத்துக்களாகும் என்பதை மட்டுமே "முற்போக்கான பெண்ணியவாதிகளின்" சார்பாக கூற வேண்டியுள்ளது.

திரு. மலர்மன்னன் அவர்களுக்கு:

மிகவும் இயலாமையிலிருந்த ஒரு பிராமணர் மனைவியை கள்ளத்தனமாக வைத்துக் கொண்ட பிராமணரல்லாத அந்த நபருக்குப் பட்டம் "ஈனப்பிறவி" எனில், 'இயலாமையிலிருந்த' தன்னுடைய பிராமண கணவரை விட்டு கள்ளத்தனமாக அந்த பிராமணரல்லாத "ஈனப்பிறவி" நபரிடம் போன அந்த பிராமண பெண்மணிக்கும், இது போன்று தான் விரும்பும் ஆடவனுடன் உறவு வைத்துக் கொள்வதை "முற்போக்கு பெண்ணுரிமை" எனக் கொண்டு நடக்கும் பெண்களுக்கும், இதனை நியாயப்படுத்தி இளைய சமுதாயத்துக்கு அரிய மிகச் சிறந்த "ஆலோசனைகள்" வழங்கும் "முற்போக்கு பெண்ணியவாதிகளுக்கும்" என்ன பட்ட,ம் கொடுக்கவேண்டும் என்பதை உணர்வுள்ள, தன்மானமுள்ள, தமிழ்பண்பாட்டை இன்னமும் மனதில் கொண்டு நடக்கும் "பிற்போக்குவாதி" திரு. மலர்மன்னன் அவர்களிடமே விட்டு விடுவிடுகிறேன்.

முக்கிய பின் குறிப்பு:


சகோ. ஸ்ரீநிதி அவர்களிடமிருந்து "ஈனப்பிறவிக்கான", "பாராட்டு" பின்னூட்டத்தை எதிர்பார்க்கிறேன்.

Tuesday, June 20, 2006

இன்றைய சிறந்த வலைப்பதிவர் ஆவது எப்படி?

உலக அளவில் ஒருவர் பேசப்பட என்ன செய்ய வேண்டும்?

இதற்கு பல வழிகள் உள்ளன. அவற்றில் இன்றைய காலகட்டத்தில் மிக எளிதான வழி கின்னஸில் இடம் பெறுவது, நோபல் பரிசுக்குரியவராக தேர்ந்தெடுக்கப்படுவது போன்றவை.

இதிலும் நோபல் பரிசுக்குரியவராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கான விதிமுறைகள் மிக எளிதானவை. அதற்கு மிகவும் சிரமப்பட வேண்டிய அவசியம் ஒன்றும் இல்லை.

இதற்கு மிகச் சிறந்த உதாரணமாக, அமைதிக்கான நோபல் பரிசினை அமெரிக்க அதிபர், இஸ்ரேலிய அதிபர், ஃபலஸ்தீன அதிபர்(!?!) மூவரும் பகிர்ந்து கொண்ட சம்பவத்தினைக் கூறலாம். விரைவில் இதே போல் உலக அமைதிக்கான நோபல் பரிசு ஜார்ஜ் புஷ் மற்றும் டோனி பிளேருக்கு கூட கிடைக்கலாம். அதற்கான தகுதி அனைத்தும் இவர்களுக்கு உள்ளது.

சரி இதற்கும் நமக்கும் என்ன தொடர்பு என அவசரப்பட வேண்டாம். நான் கூற வந்த விஷயம் வேறு.

இன்றைய தமிழ்வலையுலகில் அதுவும் ப்ளாக் நண்பன் வந்த பிறகு தமிழ் சிந்தனையாளர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் பஞ்சம் இல்லாமல் போய் விட்டது. வெறும் புத்தப் புழுக்களாக இருந்து என்றாவது இது போல் நாமும் எழுத மாட்டோமா என்று ஏங்கி கிடந்தவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம் என்றால் அது மிகையல்ல.

இதற்கும் ஒருபடி மேலே போய் தமிழ் மணம், தேன்கூடு போன்ற வலை திரட்டிகள் வந்து இவ்வாறு நேரம்போக்கிற்கு எழுத வருபவர்களைக் கூட அவர்களுக்கென ஒரு வாசகர் வட்டத்தை உருவாக்கிக் கொடுத்து நம்மாலும் நன்றாக எழுத முடியும் என அவர்கள் மனதில் உற்சாகத்தை ஊட்டி தமிழ் உலகத்திற்கு நல்ல பல சிந்தனையாளர்களை உருவாக்கிக் கொடுத்துள்ளது. இதற்கு கண்டிப்பாக தமிழ்மண காசி அவர்களுக்கும் தேன்கூடு நிர்வாகிகளுக்கும் தமிழ் உலகம் நன்றி கடன் பட்டுள்ளது.

இவர்கள் இதிலும் ஒரு படி மேலே போய் இவ்வார நட்சத்திரம், இன்றைய வலைப்பதிவர் போன்ற நட்சத்திரப் பதிவாளர்களை தேர்ந்தெடுக்கும் ஓர் முறையினை அறிமுகப்படுத்தி தமிழ் வலைப்பதிவர்கள் மேலும் வளர ஊக்குவித்து வருகின்றனர். இதில் நட்சத்திரமாக தேர்ந்தெடுக்கப்படுவது தமிழ் வலையுலகில் ஓர் பெருமையான விஷயமாக இன்று ஆகிவிட்டது. மட்டுமல்ல தமிழ் வலைச் சமுதாயத்தில் அனைவராலும் பேசப்படுவதற்கு இது ஒரு மிகச் சிறந்த வழியாகவும் ஆகி விட்டது.

அந்த வகையில் நேற்றைய(19/06/2006) தேன்கூடு தளத்தில் சிறந்த வலைப்பதிவாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது நம் அனைவருக்கும் மிகவும் அறிமுகமான சிறந்த மொழிபெயர்ப்பாளரான பெரியவர் திருவாளர் டோண்டு அவர்கள். அவர் இதற்கு மிகவும் தகுதியானவரே. மிகச்சிறந்த எழுத்தாளரான அவர் முற்போக்கான மெச்சத்தக்க எண்ணங்கள் கொண்டவர். அவருக்கு வாழ்த்துக்கள்.

தமிழ் வலையில் தற்போது எழுதிக்கொண்டிருக்கும் ஒவ்வொருவருக்கும் இது போல் நட்சத்திரமாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற ஆவல் உண்டு. உலக அளவில் இலகுவாக பேசப்படுவோம் என்பது கசக்கக் கூடிய விஷயமா என்ன? நோபல் பரிசு பெறுவது எவ்வளவு எளிதோ அது போலவே இவ்விதம் நட்சத்திரமாக தேர்ந்தெடுக்கப்படுவதும் மிக எளிதானதே.

தேன்கூட்டில் இவ்விதம் தானும் நட்சத்திரமாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என ஆவல் கொண்டவர்களுக்கு சில உபயோகமான ஆலோசனைகளை இங்கு வைக்கிறேன்.

ஒவ்வொருவரும் எழுதும் எழுத்துக்களில் உள்ள கருத்துக்கள் கீழ்கண்ட முற்போக்கு சிந்தனையை கொண்டிருத்தல் வேண்டும்.

· வரதட்சணைக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும். இது தங்களை ஓர் பெண்ணியவாதியாக காண்பிக்க உதவும். அப்படியே அதற்கு தீர்வாக, "திருமணம் இல்லாமலே ஆண் தன் காம இச்சையை தணித்துக் கொள்ளலாம். அது வெளியே தெரிய வந்தாலும் ஆம்பிள்ளைனா இப்படி அப்படித்தான் இருப்பான் என்று கூறி விடுவார்கள். கால்கட்டு போட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்றும் கூறுவார்கள். ஆனால் பெண் என்ன செய்வாள்? அவள் உடல் உறவை திருமணம் என்ற போர்வையின் கீழ்தான் பெற முடியும். ஆகவே பெண்ணுக்கு திருமணம் அதிக அவசியம் ஆகிறது. கேட்க கசப்பாயிருந்தாலும் இதுதான் உண்மை நிலை. வரதட்சணைக்கு இதுவே முக்கியக் காரணம்." என்று முற்போக்கு சிந்தனையுடன் வரதட்சணையை இல்லாமலாக்க, "ஆண்கள் உடலுறவு விஷயத்தில் முற்போக்குடன் நடந்து கொள்வது போல்" பெண்களும், "திருமணம் செய்யாமலே உடலுறவை அனுபவிக்க முன் வர வேண்டும்" என எழுத வேண்டும். இவ்வாறு வரதட்சணை கொடுமைக்கு நீங்கள் தீர்வெழுதி விட்டால் நீங்கள் தேன்கூட்டின் பார்வையில் "முற்போக்கு கருத்துக்களை கொண்ட சிறந்த பெண்ணியவாதி" என்ற அந்தஸ்தை அடைந்து விட்டீர்கள்.

· அநியாயமாக அடுத்தவரின் சொத்துக்களை ஆக்ரமித்து அதனை திரும்ப பெற முயல்பவர்களை, "பயங்கரவாதி", "தீவிரவாதி" போன்ற அடைமொழிகளுடன் உலகின் முன் அக்கிரமக்காரர்களாக சித்தரித்து விட்டு தன்னை உலகிலேயே மிகப் பெரிய சமாதானவாதியாகக் காட்டிக் கொண்டிருப்பவர்களை, அவர்களின் இந்த ஏகாதிபத்திய ஆக்ரமிப்பு குணத்திற்காகவும் அவர்கள் ஆக்ரமித்து பிடித்து வைத்திருக்கும் சொத்துக்குரியவர்கள் தங்களது மனு தர்ம வளர்ச்சிக்கு எதிரானவர்களனதால் கண்ணை மூடிக்கொண்டு அவர்கள் எந்நாட்டைச் சார்ந்தவர்களானாலும் அவர்களை எனக்கு மிகவும் பிடிக்கும் என எழுத வேண்டும். காரணம் கேட்டால் "பூர்வ ஜென்ம பந்தம்" எனக் கூறிவிட்டால் போதும் நீங்கள் "தம் கருத்தை துணிந்து வல்லமையோடும்,நெஞ்சு துணிவோடும் உரத்து சொல்பவர்" என்ற அந்தஸ்துக்கு உரியவராகி விட்டீர்கள்.

· அடிக்கடி தன்னுடைய பெயர் எல்லா இடங்களிலும் பேசப்பட வேண்டும் என்ற கொள்கையில் உறுதியுடன் இருக்க வேண்டும். எழுதும் பதிவிற்கு யாராவது ஒரு வார்த்தை பின்னூட்டி விட்டால் விடக்கூடாது. அதற்கு மறு மொழி என்ற பெயரிலும், சோதனை என்ற பெயரிலும் தொடர்ந்து நாலைந்து பின்னூட்டமாவது போட்டுவிட வேண்டும். இதன் மூலம் எப்பொழுதும் வலைப்பதிவில் பெயர் அடிபட்டுக்கொண்டே இருக்கும். யாரும் சீந்தவில்லை எனில் ஏதாவது டுபாக்கூர் செய்தாவது பின்னூட்டத்தை அதிகரித்துக் கொண்டே இருக்கவேண்டும். ஒன்றும் வேலைக்காகவில்லை எனில் போலியாக ஒருவரை உருவாக்கி அவரை எதிராக களமிறக்கி பின்னர் குய்யோ முறையோ என்று விளித்து அந்த பெயரை கூறியே ஒரு பதிவைப்போட்டு எங்கெல்லாம் பின்னூட்டுகிறோமோ அதையெல்லாம் அங்கு தொகுக்கலாம். இந்த முறை வெகுவாக பயனளிக்கும். எவ்வாறாயினும் ஒரு 400 500 பின்னூட்டம் வாங்கிவிட்டீர்கள் எனில், "பின்னூட்ட சூப்பர்ஸ்டார்" என்ற பெறர்கரிய பட்டத்துடன் "வலையுலக தெண்டுல்கர்" என்ற புகழும் உங்களை வந்தடையும்.

. இனி முக்கிய கட்டம்: தற்போதைய உலகில் சிறந்த சிந்தனையாளர், பெண்ணியவாதி போன்ற பட்டங்கள் கிடைக்க செய்ய வேண்டியவை:

"தற்சமயம் பெண்கள் தங்கள் இச்சைகளை வெளிப்படுத்துவதில் அதிகம் தயங்குவதில்லை. உடல் இச்சையை அபாயமின்றி எவ்வாறு பெண்கள் பூர்த்தி செய்து கொள்வது?" என்று கூறி பெண்களுக்கு சிறந்த ஆலோசனைகளாக,

1. பெண்கள் தங்கள் உடல் இச்சையை தணித்துக்கொள்ளட்டும். ஆனால் மிகுந்த தற்பாதுகாப்புடன் செயல்படவேண்டும்.. கருவுறக் கூடாது.

2. கருகலைப்பு உடலுக்கு கெடுதல். பால்வினை நோய்கள் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆணுறை உபயோகத்தை வலியுறுத்த வேண்டும்.

3. ரொம்ப முக்கியம், பரம ரகசியமாகச் செயல்படவேண்டும். மாட்டிக் கொள்ளக் கூடாது.

4. என்னதான் இருந்தாலும் இப்போது இருக்கும் சமூகக் கட்டுப்பாடுகள் கடுமையானவை. ஆகவே மாட்டிக் கொள்ளக் கூடாது.

5. ஒரு மாதவிடாய் வந்தால் அதற்கு முன் எவ்வளவு உடலுறவு கொண்டாலும் கணக்கில் வராது. ஆகவே தேவையில்லாது குற்ற உணர்ச்சி கொள்ள வேண்டாம்.

6. துணிந்தவர்கள்தான் இதையெல்லாம் செய்ய வேண்டும். மற்றவர்களுக்கு? fire-தான்.


என்று கூற வேண்டும். அதாவது சுருக்கமாக கூறவேண்டுமெனில், "ஒரு பெண் தன் இச்சையை தணித்துக்கொள்ள முயல்வது(திருமணத்திற்கு முன்னும் பின்னும்) அவர்களின் உரிமை. அதற்கு அவர்கள் யாரை வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். தவறில்லை." இதனை மட்டும் எழுதி விட்டால் போதும். சிறந்த பேராசிரியர், இளைய சமுதாயத்துக்கு அருமையான ஆலோசனைகளைக் கூறுபவர் போன்ற பட்டங்கள் தேடி வரும்.

இதற்குப் பின்னும் நீங்கள் தான் தேன்கூட்டின் இன்றைய சிறந்த வலைப்பதிவர் என்று கூறவும் வேண்டுமோ? போங்க ஜமாய்ங்க! வலைப்பதிவு உலகம் அறிந்த சூப்பர் வலைப்பதிவர் ஆகுங்க. தேன்கூட்டின் சிறந்த வலைப்பதிவர் ஆக முன்வாழ்த்துக்கள்.

குறிப்பு : இறைவன் நாடினால் நாளை "ஈனப்பிறவிகளைக்" குறித்த மாறுபட்ட கண்ணோட்டத்துடன் கூடிய ஓர் சிறந்த வலைப்பதிவு படம் இங்கு காண்பிக்கப்படும். காணத்தவறாதீர்கள்.

Tuesday, June 13, 2006

ஒரு லேப்டாப்புக்கு இரண்டு குண்டு இலவசம்!

என்னப்பா விவகாரமா இருக்கும் போல இருக்கிறதே என்று நினைக்க வேண்டாம். நிஜமாகவே "இந்த" லேப்டாப் வாங்குபவர்களுக்கு இரண்டு குண்டுகள் இலவசமாக கிடைக்கும். முதலில் லேப்டாப்பும் அதன் உரிமையாளரையும் குறித்த ஒரு அறிமுகம்.

உரிமையாளர் பெயர் : சீனிவாசன் (ஓய்வு பெற்ற ஓர் நீதிபதியின் மகன்)
இடம் : நெசப்பாக்கம், கேகே நகர், சென்னை.
தொழில் : கணினி பொறியாளர்
பணியிடம் : அமெரிக்கா


சம்பந்தப்பட்ட அதி நவீன ஏகே 47 இயந்திர துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் இரண்டு தோட்டாக்களைக் கொண்ட லேப்டாப்பின் சொந்தக்காரர் இவரே.

கணினி வல்லுனரான இவரின் அதி நவீன குண்டுகளுடன் கூடிய இந்த புதிய அரிய கண்டுபிடிப்பான "ஏகே 47 குண்டு லேப்டாப்பை", இவர் இதுவரை வெளியுலகத்துக்குத் தெரிவிக்காமல் இருந்தார்(தற்பெருமை இல்லாதவர்). இவரின் இந்த அரிய கண்டுபிடிப்பை வெளிக்கொணர்ந்தவர்கள் சென்னை விமான நிலையத்தைச் சேர்ந்த பணியாளர்கள்.

இதனை வெளியுலகத்துக்கு மிக மகிழ்ச்சியுடன் தெரிவித்தவர்களில் முதலிடம் தினத்தந்தி தினப்பத்திரிக்கையை சாரும்.

இந்த அரிய சீனிவாசன் கம்ப்யூட்டர் எஞ்சினியரின் கண்டுபிடிப்பையும் அதனை கண்டுபிடித்த சென்னை விமான நிலையத்தினரின் செயலையும் அதனை வெளியிட்ட தினத்தந்தி பத்திரிக்கையின் செய்தியையும் இங்கு காணலாம்.

இந்த "ஏகே 47 குண்டு லேப்டாப்" தேவையுடையோர் கண்டிப்பாக ஒருமுறையேனும் மேற்கண்ட தினத்தந்தி செய்தியை முழுமையாக பார்வையிட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இனியும் அந்த அரிய லேப்டாப் தேவை எனக்கருதுவோர் அமெரிக்க கம்ப்யூட்டர் எஞ்சினியரான சீனிவாசன் அவர்களை தொடர்பு கொள்ளவும்.

முக்கியமான எச்சரிக்கை:

இந்த லேப்டாப்பை வாங்க முயற்சிக்கும் "முஸ்லிம்"களுக்கு ஒரு முன்னெச்சரிக்கை. என்ன காரணம் கொண்டும் இதனை எடுத்துக் கொண்டு வெளிநாடு போக முயற்சிக்க வேண்டாம். அதனை உங்கள் வீடுகளிலோ, அலுவலகங்களிலோ, நீங்கள் புழங்கும் எந்த இடத்திலும் அதனை கருதி வைக்க வேண்டாம்.

அப்படி யாராவது இந்த எச்சரிக்கையை மீறி வைத்திருந்து அதனை இது போல் ஏதாவது கடமை உணர்வுள்ள அதிகாரிகள் கண்டுபிடிக்க நேர்ந்தால்,


"நீங்கள் துப்பாக்கி உபயோகிக்கும் பழக்கம் இல்லாதவர் என்றோ அல்லது கடந்த சில நாட்களாக அந்த கம்பூட்டரை நீங்கள் உபயோகப்படுத்தவில்லை" என்றோ வாக்குமூலம் கொடுத்தாலும், உங்களுக்கு இதே பத்திரிக்கைகள் "முஸ்லிம் தீவிரவாதி அதி நவீன ஆயுதங்களுடன் பிடிபட்டான், பாகிஸ்தான் உளவாளியா?" என்ற நேர்மையான விளம்பரம் (நீங்கள் கம்ப்யூட்டர் எஞ்சினியராக இருந்தாலும் சரி அல்லது பள்ளிக்கூடமே காணாத பாமரனாக இருந்தாலும் சரி) தந்தால் அதற்கு "கம்பூட்டர் எஞ்சினியர் சீனிவாசன்" பொறுப்பேற்க மாட்டார் என்பது அறிவுறுத்தப்படுகிறது.