Wednesday, August 30, 2006

சகோ.ஆனந்த கணேஷ்(மியூஸ்) அவர்களுக்கு....!

இஸ்லாத்திற்கு எதிராக எதையாவது எழுதுவதையே தங்கள் வாழ்வின் இலட்சியங்களாக கொண்டவர்கள் காலம் காலமாக அரபி மொழியில் இருக்கும் குர்ஆனிலிருந்து மெத்தப்படித்த மேதாவிகளைப் போன்று சில அரபுச் சொற்களையோ சில வாசகங்களையோ அல்லது தொடர்பில்லாத இடங்களிலிருந்து சில வசனங்களையோ தொகுத்து அதனை முஸ்லிமல்லாதவர்கள் அத்தனை பேருக்கும் எதிராக இஸ்லாம் கூறுவதாக திரித்து அவதூறு கற்பித்து முஸ்லிமல்லாதவர்களின் மனதில் முஸ்லிம்கள் மீது வெறுப்பு படர்த்த விஷவிதைகளை தூவி வருகின்றனர்.

அதில் மிக முக்கியமான குர்ஆனின் ஓர் சொல்லாடலான "காஃபிர்" என்ற சொல்லை எடுத்து அது முஸ்லிமல்லாத மற்ற அனைவரையும் இகழ்ந்து கேவலப்படுத்துவதற்காகத் தான் இஸ்லாம் அதனை பயன்படுத்த முஸ்லிம்களுக்கு கற்றுத்தருகிறது என்பது போன்ற ஓர் மாயையை சமீபகாலங்களில் ஒரு சிலர் ஏற்படுத்த முனைகின்றனர்.

இதனால் "காஃபிர்" என்ற அரபிச் சொல்லுக்கு தமிழில் "முஸ்லிம் அல்லாதவர்கள்" என்ற பொதுவான பொருள் தான் வரும் என்ற சத்தியம் மறைந்து இச்சொல்லின் மூலமாகவும் முஸ்லிமல்லாதவர்கள் முஸ்லிம்களை ஒரு வித வெறுப்போடு காணும் நிலை இச்சமுதாய புல்லுருவிகளால் தோற்றுவிக்கப்படும் அபாயநிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் "காஃபிர்" என்ற சொல்லின் அர்த்தம் என்ன?, அது குர்ஆனில் எதற்காக கையாளப்படுகிறது?, அச்சொல் மற்றவர்களை இழிவுபடுத்தும் சொல்லா?, முஸ்லிம்கள் மற்றவர்களை கேவலப்படுத்தத்தான் அந்த சொல்லைக் கையாள்கிறார்களா? என்பது போன்ற கேள்விகளுக்கு தெளிவாக ஒரு முஸ்லிம் என்ற நிலையில் சகோ.நல்லடியார் அவர்கள் "காஃபிர் (Kaafir/كَافِر ) என்பது கேவலமான சொல்லா?" என்ற தலைப்பில் அருமையான ஓர் பதிவினை எழுதியுள்ளார்.

அப்பதிவில் அவர் கூறும் விளக்கங்களை நடுநிலையோடு சிந்திப்பவர்கள் ஏற்றுக் கொள்வார்கள்/கொள்கிறார்கள். அங்கு சகோதரர் ஆனந்த கணேஷ் என்ற மியூஸ் அவர்கள் சில கருத்துக்களை கூறியிருந்தார். அதனைக் குறித்து நான் சில கேள்விகளை எழுப்பியிருந்தேன். அவை அப்பதிவுக்கு தொடர்பில்லாதவை என அவர் கருதியதாலோ என்னமோ என் கேள்விகளை தனிப்பதிவாக போட வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அவரின் கோரிக்கைக்கு இணங்க நான் அங்கு வைத்த பின்னூட்டத்தை இங்கு தனி பதிவாக பதிகிறேன்.

//தாழ்த்தப்பட்டவர்கள் மட்டுமல்ல யாரையும் பிறப்பின் அடிப்படையில் உயர்த்துவதோ தாழ்த்துவதோ கூடாது என்பது ஹிந்து மதங்களின் கருத்து.//

சில நேரங்களில் அறிவுப்பூர்வமாக வாதங்களை வைக்கும் சகோதரர் மியூஸ் அவர்கள் ஒரு சில நேரங்களில் இது போன்று காமெடி செய்வதற்கும் தவறுவதில்லை.

ஒரு முன் அனுமதி/கோரிக்கை:

நான் கேட்கப்போவதை இப்பதிவுக்கு தொடர்பில்லை என்றோ அல்லது எங்கள் மதத்தில் தலையிட நீ யார் என்றோ கேள்விகள்/வசைகள் வருமாயின் நான் இங்கு வைக்கும் கேள்வியை திரும்பப்பெற்றுக் கொள்கிறேன்.

சகோதரர் மியூஸ் அவர்கள்,

யாரையும் பிறப்பின் அடிப்படையில் தாழ்த்துவதோ/உயர்த்துவதோ கூடாது என்பது இந்து மதங்களின் கருத்து எனக் கூறியிருக்கிறார்.

அவர் என்னுடைய சில கேள்விகளுக்கு பதிலளிப்பாரா?

1. இந்து "மதங்களின் எனக் கூறியிருக்கிறாரே? அப்படியெனில் எத்தனை இந்து மதங்கள் உள்ளன?

2. யாரையும் உயர்த்துவதோ/தாழ்த்துவதோ கூடாது எனக் கூறியிருக்கிறார் எனில் பார்ப்பன மதம் இந்து மதங்களில் ஒன்று இல்லையா?

3. இல்லை பார்ப்பன மதமும் இந்து மதங்களில் ஒன்று தான் என அவர் கூறினால் பிரம்மா/சிவனின்(என்னடா காக்கும் கடவுளை படைப்பு விஷயத்தில் சேர்க்கிறானே என நினைக்க வேண்டாம். சிலர் சிவனின் தலை,தோள்,தொடை,கால் எனக் கூறுவதால் அவரையும் சேர்த்துக் கொண்டேன்) தலை/முகம், தோள், தொடை, கால் இவற்றிலிருந்து பிறந்தவர்கள் என மனிதனை பாகுபடுத்தி ஒருவனை விட மற்றவன் தாழ்ந்தவன் எனவும் இப்பிறவியில் எப்பிரிவில் ஒருவன் பிறந்தானோ அவன் அப்பிரிவிலேயே தான் மரணிப்பான்; அவன் எவ்வளவு நல்ல காரியங்கள் செய்தாலும் தலை/முகத்திலிருந்து பிறந்தவன் ஆக முடியாது என பாப்பான் மதம் கூறுவதாக பாப்பானின் வேதம் கூறுகிறதே? இதற்கு என்ன பதில் வைத்துள்ளீர்கள்.

4. பாப்பானின் மதத்தில் மனிதர்கள் அனைவரையுமே நான்கு வர்ணத்தில் பிரித்து எழுதி வைத்திருக்கிறானே! எனில் இந்து மதங்களில் உட்படாத மற்ற மத மனிதர்கள் எவ்வர்ணத்தில்/பிரிவில் வருகின்றனர் எனக் கூற முடியுமா?

அதாவது இந்து மதங்களில் படாத மற்ற மதத்தவர்கள் பிரம்மா/சிவனின் தலை/முகத்திலிருந்து பிறந்தவர்களா?, தோளிலிருந்து பிறந்தவர்களா?, தொடையிலிருந்து பிறந்தவர்களா? அல்லது காலிலிருந்து பிறந்தவர்களா?

5. இது தொடர்பில்லாத ஆனால் தொடர்புள்ள கேள்வி: இந்து மதங்களில் ஒன்றான பார்ப்பன மதம் கூறும் தத்துவமே சரி என இந்து மதங்களில் உட்படாத ஒருவன் நம்பி பார்ப்பன மதத்துக்கு மதம் மாறுவதற்கு நினைக்கிறான் என வைத்துக் கொள்ளுங்கள். அவனை அந்த நான்கில் எப்பிரிவில் சேர்ப்பீர்கள்: தலை/முகத்திலிருந்து பிறந்தவன் எனக் கொண்டு ஆடாமல் அசையாமல் வெகுளிகளின் இறைவிசுவாசத்தை கருவியாகக் கொண்டு உண்டு கொழுக்கும் பாப்பான்கள் வர்க்கத்திலா? அல்லது தன் கையில் என்றும் அதிகாரத்தை வைத்திருக்க மக்கள் பணத்தை பாப்பானுக்கு வாரி இறைத்து அந்தபுரத்தில் கூத்தடிக்கும் சத்திரிய வர்க்கத்திலா? அல்லது மேற்கூறிய இரண்டு வர்க்கத்திற்கு நாள் தவறாமல் வாய்க்கரிசி இட ஏழைகளின் இரத்தத்தை உறிஞ்சும் வியாபார ஒட்டுண்ணிகளான வணிக வர்க்கத்திலா? அல்லது தான் என்ன தான் நல்லவனாக இருந்தாலும் நற்கருமங்கள் செய்தாலும் தலையிலிருந்து பிறந்தவனுக்கு இப்பிறவி முழுவதும் ஊழியம் செய்வது தான் பிறவிப்பலன் விதிக்கப்பட்ட சூத்திர வர்க்கத்திலா?

முதலில் இவற்றிற்கு பதில் கூறுங்கள். அதன்பிறகு,

//ஆனால் எல்லாரும் இப்படித்தான் நடைமுறையில் உபயோகிக்கிறார்கள் என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதில்லை.//

முஸ்லிமல்லாதவர்களை அழைக்க முஸ்லிமல்லாதவர்கள் என்ற அர்த்தத்தில் தான் முஸ்லிம்கள் காஃபிர் என்ற சொல்லை பயன்படுத்துகிறார்களா? இல்லையா? என்ற ஆழ்மன ஆராய்ச்சிகளை தேர்ந்த மனோ தத்துவ நிபுணர்களை வைத்தோ அல்லது பொய்யுரைப்பதை கண்டறியும் கருவியை வைத்தோ நாம் ஆராய்ச்சி செய்து முடிவுக்கு வருவோம்.

Tuesday, August 22, 2006

எயிட்ஸ் பரவ இவைகள் தான் காரணம்!

டெலிமார்க்கட்டிங்கும் ஒரு வகையான விபச்சாரம் தான் எனக் கூறியவர்களை ரவுண்டு கட்டி அடித்ததில் இருந்து ஆரம்பித்தது எயிட்ஸ் பரவ காரணம் ஆணா? பெண்ணாவில் வந்து நிற்கிறது.

எனக்குத் தெரிந்து எயிட்ஸ் பரவ காரணமானவர்கள் சிலரை பட்டியலிட்டுருக்கிறேன். சரிதானா என்று பாருங்கள்.

* சாமி உருவத்தில் உலா வரும் காமிகள்
* யோக்கியனாக வலம் வரும் அயோக்கியர்கள்
* புரட்சி சிந்தை வேடம் புனைந்த ஜாதி வெறியர்கள்
* சமூகத்தை சீரழிய தூண்டும், பேராசிரியர் பதவி கிடைத்த முற்போக்கு பெண்ணியவாதிகள்
* பிரம்மச்சரியம் வேஷமிடும் ஹிந்துத்துவவெறி கொண்ட ரோமியோக்களின் கூடாரங்கள்
* அரிப்பைத் தீர்த்துக் கொள்ள வேலிதாண்டும் காமவெறியர்கள்
* வக்கிரங்களை மனதில் கொண்டலையும் போலி பெண்ணியவாதிகள்

சாமி உருவத்தில் உலா வரும் காமிகள் குறித்து எழுதியதில் பல சகோதரர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. அவர்களுக்கு விளக்கமாக புரிவதற்காக உண்மையை இங்கு வெளிச்சம் போட்டு காட்டுகிறேன். மறக்காமல் எப்பொழுதும் போல் வசை பாடிவிட்டு செல்ல வந்தேறி பார்ப்பன அடிவருடிகளிடம் கோருகிறேன்(பயப்பட வேண்டாம், வசை ரொம்ப நாற்றமடித்தால் எப்பொழுதும் போல் மட்டுறுத்தி விடுவேன்.)

அய்யப்பனைப் பற்றிப் பேசும்போது, அடேயப்பா, என்ன பய பக்தி! கன்னத்திலும், காதிலும் போட்டுக் கொள்வார்கள். தீயில் பட்ட வெண்ணெய் போல உருகுவார்கள். அந்த சந்நிதானத்துக்குச் செல்லுவது என்றால் சாதாரணமா? 48 நாள்கள் விரதம் இருக்கவேண்டும்; காலை, மாலை நீராட வேண்டும்; ஒருவேளை உண்ணாவிரதம் இருக்கவேண்டும்; லாகிரி வஸ்துக்களை உபயோகிக்கக் கூடாது; மனைவியிடம் தாம்பத்திய உறவு வைத்துக் கொள்ளக் கூடாது என்று எண்படி எப்படியெல்லாம் பிரச்சாரம் செய்வார்கள். இதற்காகப் பாட்டுகள் என்ன? சி.டி.,க்கள் என்ன? கேசட்டுகள் என்ன... என்ன.. என்ன... என்று கே.பி. சுந்தராம்பாள் பாடுவதுபோல அடுக்குவார்கள்.

அப்படிப்பட்ட சபரிமலை அய்யப்பன் கோயிலின் பிரதம தந்திரி (அர்ச்சகர்)யின் கதை - புழுத்த நாய்க்கூடக் குறுக்கே ஓடாது என்கிற அளவுக்கு நாற்றமெடுக்கும் ஆபாசக் குப்பைகள் லாரி லாரியாக படிப்போர், கேட்போர் குடலைப் புரட்டும் அளவுக்கு நாளும் வந்து குவிந்துகொண்டு இருக்கின்றன.

கண்டரரு மோகனரு என்ற அந்த மூத்த அர்ச்சகப் பார்ப்பான் காவல் துறையில் கொடுத்த இரண்டு புகார்க் கடிதங்களே அந்த ஆசாமியைக் காட்டிக் கொடுத்துவிட்டன; முன்னுக்குப் பின் முரண்பாடாக முகாரிப் பாடுகின்றன.

விபச்சாரிகள் குடியிருக்கும் அந்தப் பகுதிக்குள் யாரும் உள்ளே போக முடியாது. அப்படிப் போவோர் வாயிலில் உள்ள குறிப்புப் புத்தகத்தில் பெயரையும், யாரைப் பார்க்கப் போகிறார் என்கிற முகவரியையும் குறிப்பிட்டாக வேண்டும்.

தன் பெயரையும், தான் பார்க்கப் போகும் விபச்சாரியின் பெயரையும் குறிப்பிட்டு இருக்கிறாரே - இந்த ஆதாரம் ஒன்று போதாதா - இந்த ஆசாமி அயோக்கியப் பதர் என்பதற்கு? இதுகுறித்து 26.7.2006 நாளிட்ட `மாலைமுரசு’ (பக்கம் 2) தரும் விலாவாரியான தகவல்கள் இதோ:-

சபரிமலையின் மூத்த தந்திரியான கண்டரரு மோகனரு விபச்சாரிகளுடன் தொடர்பு வைத்திருப்பது அண்மையில் வெட்ட வெளிச்சமானது. மோகனரு கொடுத்த போலி புகார்களே அவரின் இன்னொரு முகத்தைத் தோலுரித்துக் காட்டிவிட்டது.

தந்திரி இதுவரை இரு புகார்களை போலீசில் கொடுத்துள்ளார். இரண்டு புகார்களுமே ஒன்றுக்கொன்று முரண்பட்டவையாக இருக்கின்றன. கடந்த 23 ஆம் தேதி எர்ணாகுளம் காவல் நிலையத்தில் அவர் கொடுத்த முதல் புகாரில், பாலாரி வட்டம் பகுதியில் நடந்துவரும் வீடு கட்டுமான வேலைகளை தான் பார்க்கச் சென்றதாகவும், கல்லூர் அருகே வந்து கொண்டிருந்தபோது டாடா சுமோ மற்றும் குவாலிஸ் கார்களில் வந்திறங்கிய 9 பேர் தன்னை வழி மறித்ததாகவும் அதில் கூறியிருந்தார். மேலும், அந்த மர்ம நபர்கள், தங்களின் வீட்டிற்கு விளக்கேற்றி வைக்க தந்திரி வரவேண்டும் என கோரிக்கை வைத்ததாகவும், அதற்கிணங்கி தானும் அவர்களுடன் சென்றதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். வாலஞ்சாம்-பலம் என்ற இடத்திற்கு அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு தன்னை கொண்டு சென்றதாக கூறும் அவர், அங்கே இருந்த ஒரு பெண்ணை நிர்வாணப்படுத்தி தன்னுடன் இணைத்து அவர்கள் புகைப்படம் எடுத்துவிட்டதாகக் கூறியிருக்கிறார். அதன்பின்னர், அந்த மர்ம நபர்கள் ரூ.30 லட்சம் கொடுக்குமாறு தந்திரியை கேட்டதாகவும், ஆனால், அவரோ தன்னுடைய 40 சவரன் நகைகள் மற்றும் செல்போனைக் கொடுத்துவிட்டு தப்பி வந்ததாகவும் போலீசில் தெரிவித்திருந்தார்.

ஆனால், புகார் கொடுத்த மறுநாளே, அது போலியானது என்பது தெரிய வந்தது. விபச்சாரிகள் ஷோபா, சாந்தா ஆகிய இருவரும் வாலஞ்சாம்பலம் அருகே உள்ள லிங் லட்சுமண் என்ற அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கும், தந்திரிக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. தந்திரி அடிக்கடி இங்கு வந்து போயுள்ளார். ஆனால், மோகனரு என்ற தனது பெயரை மோகன் என இவர் அங்கிருப்பவர்களிடம் கூறியிருக்கிறார்.

கடந்த ஓர் ஆண்டாக தந்திரி இந்த இடத்திற்கு அடிக்கடி வந்திருக்கிறார். 20 தடவைக்கும் மேலாக அவர் இந்த இடத்திற்குப் பெண்களை நாடி வந்து உல்லாசம் அனுபவித்துச் சென்றது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஆனால், தந்தரிதான் பெண்களுடன் உல்லாசமாக இருந்துவிட்டுச் செல்கிறார் என்ற விசயம் அங்குள்ள இளைஞர்களுக்கு ஆரம்பத்தில் தெரியவில்லை. சம்பவம் நடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அங்கிருந்த இளைஞர்களிடம் தந்திரி கையும், களவுமாகப் பிடிபட்டு விட்டார். விபச்சார அழகி சாந்தாவுடன் அவர் நிர்வாண கோலத்தில் இருந்திருக்கிறார். அதை இளைஞர்கள் புகைப்படமாக எடுத்துவிட்டனர். அவர்களிடம் இந்த விவகாரத்தை மறைக்க தந்திரி பேரம் பேசினார். ரூ.20 ஆயிரத்தில் இருந்து 1 கோடி வரை அவர் பேரம் பேசியதாகத் தெரிகிறது.

பேரம் படியாத ஆத்திரத்தில் இளைஞர்கள் தேவஸ்வம் போர்டுக்குப் புகார் கொடுக்கப் போய்விடுவார்கள் என்ற பயத்தில் தந்தரி தானாக முந்திக் கொண்டு இந்தப் பொய்ப் புகாரை கொடுத்துவிட்டார். தனது முதல் பொய் புகார் போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டதால் தந்திரி தற்போது தனது 2 ஆவது புகாரை போலீசில் அளித்திருக்கிறார். எர்ணாகுளம் டவுனில் உள்ள மத்திய போலீ-சாரிடம் இந்த புதிய புகாரை அவர் கொடுத்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவன்று வேலைக்காரியை அழைத்து வருவதற்காக வாலஞ்சாம்பலம் சென்றேன். அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில்தான் அவள் வசிக்கிறாள். நான் அவளின் அறைக்குச் சென்றபோது 6 பேர் கொண்ட கும்பல் அங்கு வந்தது. அங்கு வேலைக்காரியுடன் இன்னொரு பெண்ணும் இருந்தாள். அவளுடன் என்னையும் நிர்வாணமாக்கி அந்த மர்மக் கும்பல் புகைப்படம் எடுத்துவிட்டது - இவ்வாறு அவர் தன்னுடைய புகாரில் கூறியுள்ளார்.

இதற்கிடையே, தந்திரி கொடுத்த புகாரின் பேரில் அந்த அடுக்குமாடி குடியிருப்பின் காவலாளியை கேரள போலீசார் விசாரித்தனர். விசாரணையில், அந்த 6 இளைஞர்களும் 21 இல் இருந்து 25 வயதிற்குள் இருப்பார்கள் என்று தெரிய வந்துள்ளது. அவர்கள் இந்தியில் பேசினார்கள் என்று தந்திரி போலீசிடம் கூறியுள்ளார்.

அழகிகள் ஷோபா, சாந்தாவிடம் முதற்கட்ட விசாரணை முடிந்துவிட்டது. தந்திரி விசயத்தில், தேவஸ்வம் போர்டு முறையான விசாரணை நடத்தவேண்டும் எனவும், அவரை சிறையில் தள்ள வேண்டும் என்றும் அமைச்சர் சுதாகரன் தெரிவித்துள்ளார்.

விபச்சாரிகளுடன் பழகி வந்த தந்திரி, சபரிமலை பிரசாதங்களை அடிக்கடி அவர்களின் இருப்பிடங்களுக்கே எடுத்துச் சென்று கொடுத்து வந்திருக்கிறார். தந்திரியின் இத்தகைய செயல்-பாடுகளால் கோயிலின் புனிதம் கெட்டுப் போயிருப்பதாக தேவஸ்வம் போர்டு கருதுகிறது. இந்தக் களங்கத்தைப் போக்க சிறப்பு பூஜைகள் செய்யப்படும் என நிருவாகி ராமன் நாயர் தெரிவித்துள்ளார்.

ஷோபா, சாந்தா என்கிற விபச்சாரிகள் மட்டுமல்ல; மேலும் ஏராளமான விலை மாதர்களுடன் சபரிமலை அய்யப்பன் கோயிலின் முதன்மை அர்ச்சகனான இந்த ஆசாமிக்குத் தொடர்பு இருக்கிறது என்று காவல் துறை விசாரணையில் எடுக்க எடுக்கப் புதையல் போல வந்து கொண்டிருக்கிறது. பூஜா என்ற இன்னொரு பெண்ணுடன் இவருக்குத் தொடர்பு உண்டாம். இந்தப் பூஜா கடந்த ஆறு மாதங்களுக்கு முன் விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டவர் என்று காவல் துறை கூறுகிறது. இப்பொழுது இன்னொரு செய்தி: தமிழ்நாட்டில் அய்யப்பன் கோயில் அர்ச்சகராக இதே ஆசாமி இருந்தபோது இரண்டு எழுத்து கொண்ட ஒரு நடிகையுடன் நெருக்கமாம்!

இதைவிட இன்னொரு தகவல் கேட்டால் தலையே கிறு-கிறு என்று சுற்ற ஆரம்பிக்கும். மாது போய் மது வருகிறது - மது என்றாலே கிறுகிறுப்புதானே! சபரி மலையில் 18 ஆம் படிக்கு மேல் உள்ள மூலஸ்தானத்தில் இருந்து 10 அடி தூரத்தில் மோகனரு ஓய்வு எடுக்கும் அறை உள்ளது.
அந்த அறைக்குள் "ஹனி-பீ" என்ற மது பாட்டில் சிதறிக் கிடந்தது போலீஸ் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. சீரகத் தண்ணீரில் இந்த ஹனி-பீ மதுவை கலந்து குடிப்பது அவரது வழக்கமாம்.

இந்தச் செய்தியை "மாலைமலர்" (26.7.2006, பக்கம் 6) வெளியிட்டுள்ளது.
இதைவிட கேவலத்தின் எல்லையை - முடியை யார் தான் தொட முடியும்? கேட்டால் அந்த ஆசாமி எர்ணாகுளத்தில் செய்தியாளர்களிடம் "அது என் சொந்த விசயம் யாரும் அதில் தலையிட முடியாது" என்று தலையில் கொழுப்பு வழிக் கூறி இருக்கிறார்.

இதில் இன்னொன்றையும் கவனிக்கத் தவறக் கூடாது. தன்னைப் பிடித்து வைத்த இளைஞர்களிடம் தன்னிடம் இருந்த 40 பவுன் நகைகளைக் கொடுத்துத் தப்பித்து வந்ததாகக் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் கூறியுள்ளார். பெண்கள் கூட ஒரே நேரத்தில் இவ்வளவுப் பவுனுக்கு நகைகளைப் போட்டுக் கொண்டு இருக்க மாட்டார்கள். பகவானுக்குச் சேவை செய்து பரலோகத்துக்கு வழிகாட்டும் ஒரு அர்ச்சகப் பார்ப்பான் 40 பவுன் நகைகளை அணிந்துகொண்டு இருந்தான் என்றால், அவன் பார்த்த அந்த அர்ச்சகத் தொழில் எந்த அளவு பணம் கொட்டும் - கொழிக்கும் சுரண்டல் தொழிலாக இருக்கிறது என்பதை எளிதில் உணர்ந்து கொள்ளலாமே!

தன்னை விடுவித்துக் கொள்ள ஒரு கோடி ரூபாய் வரை அந்த இளைஞர்களிடம் பேரம் பேசினார் என்கிற தகவலும் வெளிவந்துள்ளது. அடேயப்பா! ஒரு கோடி என்று எண்ணால் எழுதச் சொன்னால் கூட படித்தவர்களுக்குக் கூட எழுத வராது! ஒரு பேரத்துக்கு ஒரு அர்ச்சகப் பார்ப்பானால் ஒரு கோடி ரூபாய் கொடுக்க முடியும் என்றால், அந்த அர்ச்சனைத் தொழிலில் எத்தனை ஆயிரம் கோடி கொள்ளை அடிக்க வைத்திருக்கவேண்டும்?

அன்றாடம் கூலி வேலை செய்யும் தொழிலாளிகள் கூட புத்தியைப் பக்திக்குப் பறி கொடுத்து, பல நாள் விரதம் இருந்து, கடன் வாங்கி சபரிமலைக்குச் சென்று பதினெட்டுப் படிகள் ஏறி உண்டியலில் கொட்டிய பணம் அர்ச்சகப் பார்ப்பானின் சல்லாபத்திற்கும், உல்லாசத்துக்குமா பயன்படவேண்டும்? நினைத்தால் வயிறு எரியவில்லையா?

இன்னொரு வெட்கக்கேடும் உண்டு. அய்யப்பன் கோயில் பிரசாதங்களை இந்த ஆசாமி இந்த விபச்சாரிகளுக்கும் கொண்டு போய்க் கொடுப்பாராம்! ("தினகரன்" 28.6.2006, பக்கம் 10).
பலே, பலே! பிரசாதத்தின் அருமையே அருமை! அதன் மகிமையே மகிமை! புண்ணியத்தனமான விஷயங்கள் இப்படி இன்னும் வண்டி வண்டியாக இருக்கும்போலும் - நாம் என்ன கண்டோம்!

காஞ்சிபுரம் சங்கராச்சாரியார்களிலிருந்து, சபரிமலை கண்டரரு மோகனரு வரை மோட்சம் போகும் சுலபமான மார்க்கங்களைக் கண்டுபிடித்து வைத்திருக்கிறார்களே - அர்த்தமுள்ள இந்து மதத்தின் இரகசியப் பாதை இதுதான் என்று இப்பொழுது அல்லவா மிக நன்னா புரியுது! காஞ்சி ஜெயேந்திரரும் சரி, தந்திரி கண்டரரு மோகனரும் சரி தாங்கள் தப்பித்துக் கொள்ள அர்த்தம் உள்ள இந்து மதத்தில் ஒரு "ராஜ பாட்டையே" அகலமாகத் திறந்து இருக்கிறது.

வேஸ்யா தர்சனப் புண்யம்
ஸ்பர்சிவனம் பாப நாஸம்
சம்பனம் சர்வ தீர்த்தானாம்
மைதுனம் மோக்ஷ சாதனம்


புரியவில்லையா? இதோ விளக்கம்:

வேசிகளைப் பார்த்தால் புண்ணியம்; அவர்களைத் தொட்டால் பாவங்கள் நாசம்; முத்தம் கொடுத்தால் சகல புண்ணிய தீர்த்தங்களிலும் நீராடியதற்குச் சமம்; உடலுறவு கொண்டால் மோட்சத்தை அடையும் வழி!

இந்த வழிகளைத் தானே ஜெகத் குருக்களும், அர்ச்சகர்களும் பின்பற்றி வருகிறார்கள் - இதில் என்ன குற்றம் என்று 'சோ' ராமசாமிகளும், "கல்கி"களும், "காமகோடிகளும்", "விஜய-பாரதங்களும்", "ஹிந்து மித்திரன்களும்"(இடையில் சிறந்த முற்போக்கு பெண்ணியவாதிகளையும், சேர்த்துக் கொள்ளுங்கள்) எழுதினால் ஆச்சரியப்படுவதற்கில்லை. இன்னும் சொல்லப் போனால், ஹிந்து மதக் கடவுள்கள் செய்யாததையா இவர்கள் செய்துவிட்டார்கள்?

இங்கே உள்ள பகுதி சென்சார் செய்யப்படுகிறது. "அதை" வெளியிட்டால் உடனே இறை நேசனுக்கு "அர்ச்சனையுடன்" கூடிய உபதேசங்களும், பதிவுகளும் வர சாத்தியம் உள்ளதால், இப்பகுதியில் உள்ள "ரோமியோக்களின்" வெவகாரமான செய்கைகளை அறிய விரும்புபவர்கள் இங்கே சென்று அறிந்து கொள்ளுங்கள்!

........தான் பெற்ற மகளையே (?!@#%$@#@##@@???) பெண்டாண்டு சுகம் அனுபவித்திருக்கிறான் என்றால், அந்த வழியை இவாள் பின்பற்றினால் என்ன தவறு என்று கூட அக்கிரகாரவாசிகள் வக்கிரம் பேசினால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

"..................................@@#########">>>>@>@>>@>>@@@!!!!!&&*$%%#....................................................@@#########>>>>@>@>>@>>@@@!!!!!&&*$%%#.................."(இந்த இடத்துல என்ன எழுதியிருக்கிறதென்றே புரியலப்பா!) இன்னும் சொல்லப்போனால் பகவான் காட்டிய வழியைத்தான் பக்தாள் செய்திருக்காள் என்று மயிலாப்பூரும், மாம்பலமும் திருவாய் மலர்ந்தாலும் மலர்வாள்.

யதாராஜா ததா பிரஜா என்பது ஸமஸ்கிருத மொழி. இதன் பொருள் அரசன் எப்படியோ அப்படிதான் குடிகள் என்பதாகும்.

ஸ்ரீதந்திரியும் அந்தப் பெண்ணும் நிர்வாணமாக இருந்த கோலத்தில் படம் எடுத்துட்டாள் என்று செய்தி வந்துள்ளது. "நிர்வாணம்" என்றால் என்ன தெரியுமோ - அதற்குப் பெரிய சாங்கித்தியம் எல்லாம் இருக்கிறது. அதைப் பற்றியெல்லாம் சொன்னால் உங்களவாளுக்கெல்லாம் புரியாது - அது பெரிய பெரிய விஷயம் - அந்த நிர்வாணத் தத்துவத்தைத்தான் ஸ்பஷ்டமாக அவாள் காட்டியிருக்காள் என்று காஞ்சீபுரத்தின் சிஷ்யாக்கள் "காமகோடி"யில் எழுதினாலும் எழுதுவார்கள்! சிலருக்கு மறந்து போயிருக்கலாம் - கருஞ்சட்டைகளுக்கு மட்டும் மறதி என்பது கிடையவே கிடையாது.

2005 பிப்ரவரியில் ஒரு செய்தி வெளிவந்து நாற்றமெடுத்ததே நினைவிருக்கிறதா? குஜராத் மாநிலம் விளம்பரம் பெற்ற சுவாமி நாராயன் கோயில் அர்ச்சகர்களின் "கொக்கோக" லீலைகள் வட நாட்டுப் பத்திரிகையில் "வண்ணமயமாக" பல கோணங்களில் வெளிவந்ததே நினைவிருக்கிறதா? கோயிலில் உள்ள அர்ச்சகர்ப் பார்ப்பனர்களின் குடியிருப்புகள் பள்ளியறையாக மாற்றப்பட்டது எல்லாம் மறக்கக் கூடியதுதானா?

சந்த், தேவ் வல்லப் என்ற அர்ச்சகப் பார்ப்பனர்கள் கோயிலுக்கு வரும் பக்தைகளை வேட்டையாடிய சங்கதிகள் எல்லாம் கப்பலேறினவே! அர்ச்சகப் பார்ப்பனர்களின் கிருஷ்ண லீலைகள் வீடியோக்களாக்கப்பட்டுப் பரப்பப்பட்டனவே! கோயிலை ஒட்டியிருந்த அவர்களின் குடியிருப்பில் கைப்பற்றப்பட்ட பொருள்கள் என்னென்ன தெரியுமா? ஆபாச சி.டி.,க்கள், காமசூத்ரா புத்தகங்கள், நிர்வாண புகைப்படங்கள், நிரோத்துகள் (ஆணுறைகள்)!

"சந்தோஷ்" ஏடு மட்டுமல்ல; அதற்கென்று உள்ள இணைய தளத்திலும் பார்ப்பனக் கயவர்களின் வண்டவாளங்கள் தண்டவாளத்தில் ஏற்றப்பட்டன. கோயில்கள் விபச்சார விடுதிகள் என்று காந்தியார் சொன்னதை இவர்கள் நிரூபித்துக் காட்டினார்கள். 1960 இல் சர்.சி.பி. இராமசாமி அய்யர் தலைமையில் அமைக்கப்பட்ட கமிஷன் கோயில்களில் எந்தெந்த வகைகளில் எல்லாம் ஒழுக்கக் கேடுகள் தலைவிரித்தாடுகின்றன என்பதை பட்டியல் போட்டுக் காட்டினார்.

ஒரு காலத்தில் கோயில்கள் என்பவை அரசனுக்கு வருவாய்ச் சேர்க்க; (சாணக்கியனின் அர்த்தசாஸ்திரம் அதைத்தான் கூறுகிறது) பிற்காலத்தில் அர்ச்சகன் சுரண்ட என்பதல்லாமல் வேறு என்ன? இல்லாத கடவுளுக்கு கோயில் கட்டி பொல்லாத பார்ப்பனச் சுரண்டலுக்கும், சுகபோகத்துக்கும் பலியாகும் ஆடுகள் தான் இந்தப் பரிதாபத்துக்குரிய பக்தர்கள் என்பதை தந்திரிகளின் சமாச்சாரத்துக்குப் பிறகாவது உணர வேண்டாமா?

- நன்றி: கவிஞர் கலி.பூங்குன்றன்(உண்மை)

Saturday, August 19, 2006

விடாது கருப்புவிற்கு நன்றி!

தாய்நாடு 59 வது சுதந்திர தினத்தை நினைவுபடுத்தும் நாட்களில் சகோதரர் விடாது கருப்பு அவர்கள் சிந்திக்கத் தகுந்த வரிகளோடு ஒரு பதிவு போட்டிருந்தார். அவருக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக இப்பதிவு.

//நாடு நமக்கு என்ன செய்தது என்று நினைக்கக்கூடாது. நாம் நாட்டுக்கு என்ன செய்தோம் என்று நமக்கு நாமே கேட்டுக் கொள்ள வேண்டும். ஐந்து பைசா மிட்டாயில் முடிந்து போவதா சுதந்திர தினம்? யோசிக்க வேண்டாமா நாம்? இதற்காகவா சுதந்திர போராட்டா தியாகிகள் அடியும் உதையும் மிதியும் பட்டு நமக்காக வாங்கித் தந்தனர் சுதந்திரம்? சும்மா இருந்துவிட்டு கிடைத்த சுதந்திரத்தை அனுபவிக்கிறோமே வெட்கமாக இல்லையா நமக்கு? கிடைத்த அந்த சுதந்திரத்தை நாம் பேணிக் காக்கிறோமா? இந்து என்றும் இஸ்லாம் என்றும் கிறிஸ்தவன் என்றும் நமக்கு நாமே அடித்துக் கொண்டு சாகிறோமே? காந்தியார் ஜாதிபேதம் பார்த்திருந்தால் நமக்கு கிடைத்திருக்குமா இந்த இனிய சுதந்திரம்//

சத்தியமான வார்த்தைகள்.

ஆடாமல் அசையாமல் இருந்து அனுபவிப்பவனுக்கு ஆட்டத்தின் கஷ்டம் புரியப்போவதில்லை.

(சுதந்திரத்தை)அனுபவிக்கப் பிறந்த நமக்கு அதற்காகப் பாடுபட்டவர்களின் கஷ்டங்கள் ஒரு பொருட்டே அல்ல.

நாடு நமக்கு என்ன செய்தது என்று கேட்பவர்கள் இச்சுதந்திரக்காற்று எங்கு கிடைக்கும் என தன் மனதில் கை வைத்து கேட்டுக் கொள்ளட்டும்.

(பிறப்பிலேயே)கிடைத்த சுதந்திரத்தை பேணி காப்பது ஆடாமல் அனுபவித்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு இந்திய குடிமகனும் கட்டாயம் நாட்டுக்குச் செய்ய வேண்டிய பிரதிபலனாகும்.

அந்த சுதந்திரத்தை குழி தோண்டி புதைத்து நாட்டை இரத்தக் களரியாக்க காத்திருக்கும் வந்தேறி இந்துத்துவ பார்ப்பன கூட்டங்களுக்கு எதிராக போராடுவதும் பெற்ற சுதந்திரத்தை காப்பதன் பாற்பட்டதாகும்.

வந்தேறி ஆரிய பார்ப்பன வர்க்கம் செய்யும் அட்டூளியங்களை எதிர்க்க வேண்டிய முறைப்படி எதிர்க்காமல் வன்முறையை கையில் எடுக்கும் மூளைச்சலவை செய்யப்பட்ட மத தீவிரவாதிகளுக்கு எதிராக போராடுவதும் பெற்ற சுதந்திரத்தைப் பேணி காப்பதன் பாற்பட்டதாகும்.

நாட்டை துண்டாட நினைக்கும் இந்த இரு வன்சக்திகளுக்கு எதிராக போராட நாட்டுப்பற்றுள்ள ஒவ்வொரு இந்திய குடிமகனும் முன்வரவேண்டும்.

நாடு சுதந்திரம் அடைந்து 59 வருடங்களை கடந்து விட்ட பின்பும் நாட்டு சுதந்திரத்தை கொண்டாட இந்நாட்டின் முதல் குடிமகன் குண்டு துளைக்காத வாகனத்தில் வலம் வர வேண்டிய துர்பாக்கிய நிலையில் தான் சுதந்திர இந்தியா உள்ளது.

தாய்நாட்டின் சுதந்திரதினத்தில் "சுதந்திரமாக" சுதந்திரதினத்தை கொண்டாடும் நாளுக்காக ஒவ்வொரு தேசப்பற்றுள்ள குடிமகனும் போராட முன்வர வேண்டும்.

தாய்நாட்டின் சுதந்திரத்தை சுதந்திரமாக கொண்டாட முடியாத துர்பாக்கிய நிலை மிகவும் இகழ்ச்சிக்குரியதாகும். வெளிநாடுகளில் தாய்நாட்டின் சுதந்திரத்தை "சுதந்திரமாக" கொண்டாடும் அளவிற்கு கூட தாய் நாட்டில் சுதந்திரமாக சுதந்திரதினத்தை கொண்டாட முடியாத அளவிற்கு தீவிரவாதமும் பயங்கரவாதமும் தலைதூக்கியிருப்பது நாட்டின் அழிவிற்கே வழிவகுக்கும்.

நாட்டு முன்னேற்றத்திற்கு மிகப்பெரும் இடையூறாக விளங்கும் இந்த தீவிரவாத செயல்களை ஒழிக்க என்னென்ன வழிகள் உள்ளன என்று இனிமேலாவது ஆக்கப்பூர்வமான வழிகளில் ஒவ்வொருவரும் சிந்திக்க முயல வேண்டும்.

அதுவே நாட்டு முன்னேற்றத்திற்கு தூண்டு கோலாக அமையும். எந்நேரம் என்ன நடக்குமோ என பயந்து உயிரை கையில் பிடித்துக் கொண்டு வாழும் அமைதியற்ற வாழ்வு சுதந்திரகாற்றை சுவாசிக்கும் நாட்டு மக்களுக்கு உகந்ததல்ல.

நாடு கடந்த 59 வருட காலயளவில் சந்தித்திருக்கும் கலவரம், குண்டுவெடிப்பு, இன சுத்தீகரிப்பு போன்ற பயங்கரவாத தீவிரவாத செயல்களால் அடைந்திருக்கும் பின்னடைவை கருத்தில் கொள்வோமானால் இந்தியாவின் முன்னேற்றம் எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளது என்பதை உணரமுடியும்.

இந்தியாவின் முன்னேற்றத்தைக் கண்டு பொறுக்க இயலாத அன்னிய சக்திகள், நாடு வல்லரசாவதை காணச்சகிக்காத வல்லரசுகள் இப்பயங்கரவாத தீவிரவாத செயல்களுக்கு ஊக்கம் கொடுக்கும் சக்திகள் என்பதை மறுக்கவியலாது. இத்தகைய தீயசக்திகளை வேரோடு களை எடுத்தாலே இந்தியா முழு சுதந்திரக்காற்றை சுதந்திரமாக சுவாசிக்க இயலும்.

எனவே நாட்டு முன்னேற்றத்திற்கு மிகப்பெரும் சவாலாக விளங்கும் இந்த பயங்கரவாத தீவிரவாத செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க, கிடைத்த சுதந்திரத்தை, எவ்வித உடல் உழைப்புமின்றி ஆடாமல் அசையாமல் நமக்குக் கிடைத்த பெறர்கரிய இப்பேற்றை பேணிக்காக்க நாம் இந்தியன் என்னும் ஓரணியில் ஒன்றிணைவோம்.

போராடுவோம்; பெற்ற சுதந்திரத்தைப் பேணிக்காப்போம்.

சுதந்திரதின கொண்டாட்டத்தில் இருக்கும் நேரத்தில் அருமையான ஓர் சிந்தனையை நினைவுபடுத்திய சகோதரர் விடாது கருப்பு அவர்களுக்கு நன்றிகள்.


பின் குறிப்பு:

தங்களின் பதிவில் சகோதரி சுமா போடும் பதில்கள் அது சும்மாவாக இருந்தாலும் அவை அனைத்தும் கருத்துச் செறிவுள்ளவை. எனவே சகோதரி சுமா பெயரில் வரும் பின்னூட்டம் வெறும் சும்மா தான் என கத்திக் கொண்டிருக்கும் அனானிமஸ்களை தாங்கள் கண்டு கொள்ள வேண்டாம்.

கருத்துக்களை கூறுவது யார் என்பது முக்கியமல்ல. கருத்துக்களாக கூறுபவை பரிசீலனையில் எடுக்கத்தக்க கருத்துக்கள் தானா என்பது தான் முக்கியம்.

சிறந்த கருத்துக்கள் சகோதரி சுமா பெயரில் வந்தாலும் சரி தான்; சும்மா பெயரில் வந்தாலும் சரி தான். நமக்குத் தேவை சிந்தனைக்கு விருந்தாகும் கருத்துக்களே.

எனவே அந்த சகோதரி சு(ம்)மாவின் வேண்டு கோளுக்கு இணங்க "மாட்டிக் கொள்ளாமல் உடலுறவு கொள்ள" ஆலோசனை வழங்கும் "சிறந்த முற்போக்கு பெண்ணியவாதிகளைக்" குறித்தும் அதற்கு பின்பாட்டு பாடுபவர்களைக் குறித்தும் தாங்கள் எழுத நினைத்திருப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டாம்.

எழுதுங்கள். பார்ப்பன வந்தேறி ஈனப்பிறவி, "மோக"நர் காம வெறிமிருகங்களின் உடல் வெறியை தணிப்பதற்காக, சூழ்நிலைகைதியாக்கப்பட்டு தங்களின் வயிற்றுப்பாட்டுக்கு வேறுவழியின்றி உடலை விற்கும் பெண்களுக்கு மாற்று வழியை உருவாக்கி அவர்களை நல்வழிக்கு கொண்டு வர முயற்சிப்பதை விடுத்து அவர்களை தொடர்ந்து அந்த சாக்கடையிலேயே இருக்க வைத்து தங்கள் வெறிக்கு வடிகால் காணத் துடிப்பவர்களின் முகமூடியை கிழிக்கும் உங்கள் பதிவை எதிர்ப்பார்த்திருக்கிறேன்.

Monday, August 14, 2006

விடுதலைப் போராட்ட வீரர் - மௌலானா முஹம்மது அலி.

நாங்கள் இரவு 11 மணிக்கு வழக்கம்போல் தூங்கச் சென்றோம். இரவு 2 அல்லது 2.30 மணிக்கு நோன்பிற்காக சஹர் (நோன்புக்கால காலை உணவு) செய்தோம். சுமார் 4 மணிக்கு பங்களாவின் வாசலில் காலடிச் சத்தங்கள் கேட்டு விழித்துக்கொண்டேன். "யார் அது?" என்று வினவியதற்கு 'தாங்கள்தானா மிஸ்டர் ஷவ்கத் அலி?' என டிப்டி கமிஷனரான மிஸ்டர் புலூட்டன் கேட்டார். இவர்கள் கைது செய்ய வந்திருக்கிறார்கள் என உணர்ந்துக்கொண்டேன்.

புலூட்டன் கைது செய்ய வந்திருப்பதாக அறிந்ததும் முஹம்மது அலி, தயாராக இருக்கிறேன் என கூறினார். இதற்குள்ளாக தாயாரும் புர்கா அணிந்துக்கொண்டு வந்து எங்களுடன் வருவதாகக் கூறினார். அதற்கு புலூட்டன், 'இவ்விருவரையும் அழைத்துச் செல்லத்தான் எங்களுக்கு உத்தரவு' எனக் கூறிவிட்டார்.

முஹம்மது ஹ¤ஸைன் (குடும்ப உறுப்பினர்) என்னுடன் கட்டித் தழுவும்போது அழுது விட்டான். நான் பலமாக கன்னத்தில் ஓர் அறை கொடுத்து, 'ஜாக்கிறதை வெள்ளையன் முன் அழக்கூடாது' என கத்தி எச்சரித்தேன்.

ஆங்கிலேயருக்கு சிம்ம சொப்பனமாக இருந்துவந்த அலி சகோதரர்களில் ஒருவரான மௌலானா ஷவ்கத் அலியின் டைரி குறிப்பு ஒன்றே மேலே காணப்படுவது.

இந்திய விடுதலைப் போரில் அலி சகோதரர்கள் என்று சிறப்பு பட்டம் பெற்ற சகோதரர்களில் மூத்தவர் ஷவ்கத் அலி, இளையவர் முஹம்மது அலி.

முஹம்மது அலி தமது 18 வயதில் பி. ஏ முதல் வகுப்பில் தேறி சாதனைப் படைத்தார். அதன்பின் ஆக்ஸ்போர்டிலுள்ள லின்கன் கல்லூரியில் 1898 முதல் 1902 வரை கல்வி கற்றார். மேலைக் கல்வி கற்ற அதேசமயம் சிறந்த சமயப் பற்றாளாராகத் திகழ்ந்தார். அங்கு பி. ஏ ஆனர்ஸ் படித்துத் தேறினார்.

1902-ல் முஹம்மதலி இங்கிலாந்திலிருந்து இந்தியா திரும்பினார். சிறிது காலம் ராம்பூர் சமஸ்தானத்தில் கல்வி அதிகாரியாகப் பணியாற்றினார். அதன்பின் இரண்டு வருட நீண்ட விடுப்பில் கல்கத்தா சென்று “காம்ரேட்” பத்திரிக்கையைத் தொடங்கினார். 1911 ஜனவரி 11-ம் நாள் வெளியான காம்ரேட் வெறும் இருநூற்றைம்பது ரூபாய் கைமாற்றில் ஆரம்பிக்கப்பட்டு இந்திய பத்திரிக்கை வானில் தாரகையாய் மிளிர்ந்தது. அரசியல் பிரமுகர்கள் எல்லாம் அதன் வாசகர்கள்.

ஒத்துழையாமை இயக்க நாட்களில் மௌலானா அவர்களின் பேச்சினால் ஏற்பட்ட உத்வேகத்தில் முப்பது நாட்களில் முப்பாதியிரம் ஆண்களும் பெண்களும் சிறை நிறப்பும் போராட்டங்களில் பங்கு கொண்டனர்.

பகலில் அரசியல் பணிகளும் இரவில் எழுத்துப் பணிகளுமாய் மூழ்கி இருக்கும் மௌலானா முஹம்மதலி “நான் பகலில் வரலாற்றை உருவாக்குகிறேன், இரவிலோ வரலாற்றை எழுதுகிறேன்” என்பார்.

வெள்ளையர் ஏகாதிபத்தியத்தின் கொடுமையான துன்பங்களுக்கும் வெஞ்சிறைச் சாலை களுக்கும் அலி சகோதரர்கள் அஞ்சியதில்லை. 1915 மே 15-ம் தேதி இந்திய பாதுகாப்புச் சட்டத்தை முன்னிறுத்தி ஷவ்கத் அலியும் முஹம்மதலியும் கைது செய்யப்பட்டு சிந்துவாரா சிறையில் அடைக்கப்பட்டனர்.

25-11-1919 அரசாங்கக் கட்டளையின்படி அலி சகோதரர்கள் விடுதலை அடைந்து நேராக அமிர்தரஸில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் கலந்துக்கொள்ளச் சென்றார்கள். அங்கு ஒருவர் முஹம்மதலியைப் பார்த்து, “தாங்கள் வெளிவந்து விட்டீர்களா?'' என்று கேட்க, அவர் “ரிட்டர்ன் டிக்கட் வாங்கிக்கொண்டு வந்திருக்கிறோம்” என்றார் புன்னகையுடன்.

1923 ஆகஸ்ட் கடைசி வாரத்தில் ஜான்சியில் முஹம்மது அலி விடுதலை செய்யப்பட்டார். விடுதலைக்குப்பின் அவர் பேசிய முதல் கூட்டத்தில், “நான் விடுதலையானது எனக்கு மிகுந்த மன வருத்தத்தைத் தருகிறது, ஏனென்றால் நாட்டினுடைய பெரும் சுமை என் மீது சுமத்தப் பட்டுவிட்டது. என் அண்ணன் ஷவ்கத் அலியைவிட நான் அதிகமாக நேசிக்கும் அந்த பெருந்தலைவர் காந்திஜி இங்கு இல்லாத நிலையில் நான் சிறிய சிறையிலிருந்து பெரிய சிறைக்கு வந்திருப்பதாக உணர்கிறேன். இனி என் முதல் கடமை விடுதலையின் (சுயராஜ்யம்) திறவுகோலைத் தேடி எடுத்து இந்தியாவின் ஆத்மா (காந்திஜி) அடைப்பட்டுக் கிடக்கும் எரவாடா சிறையைத் திறப்பதுவேயாகும்!” என்றார்.

நாட்டு விடுதலைக்காக முதன் முதலில் சிறை புகுந்த பெருமை மௌலானா முஹம்மது அலியையே சாரும். அரசியல் போர்க்களங்களில் பல்லாண்டுக்கால தொடர் சிறைவாசத்தை அலி சகோதரர்கள் அனுபவித்தார்கள். அவர்களின் விடுதலையின்போது வறுமையின் கோரம் தாண்டவமாடியது. உண்ண உணவின்றி இருந்த இடத்திற்கு வாடகை கொடுக்கப் பணமின்றி சிரமப்பட்டனர். அந்த நிலையிலும் மக்கள் திரட்டிக் கொடுத்த ரூபாய் 12 ஆயிரம் பண முடிப்பையும், அவர்களை கௌரவித்து அணிவித்த ஆயிரம் பவுன் மதிப்புள்ள தங்கச் சரிகை மாலையையும் 'கிலாபத்' நிதியில் சேர்த்துவிட்டனர்.

லண்டன் வட்டமேஜை மாநாட்டுக்கு வைஸ்ராய் லார்டு இர்வின் கொடுத்த அழைப்பை ஏற்று மௌலானா புறப்பட்டபோது அவரது உடல்நிலை கடுமையாய் பாதிக்கப்பட்டிருந்தது. கட்டிலில் படுக்கவைத்தவாறு பம்பாய் துறைமுகத்தில் கப்பலில் ஏற்றிய காட்சி கண்ணீர் வரவழைப்பதாகும். கடுமையான நோய்களால் அவதிப்பட்ட அப்பெரியார் தம் நாடு சுதந்திரம் பெற்றேயாக வேண்டுமென்று முனைப்புடன் பயணம் செய்தார்.

லண்டன் மாநாட்டில் “சமாதானத்திற்காகவும், நேசத்திற்காகவும், சுதந்திரத்திற்காகவும் நாங்கள் இங்கு வந்தோம். இவற்றையெல்லாம் பெற்றே திரும்புவோம் என நம்புகிறேன். இல்லை என்றால் போராட்டக் குழுக்களுடன் இணைந்து விடுவோம். தேசத்துரோகிகள், கலகக்காரர்கள், வரம்பு மீறியவர்கள் என்று நீங்கள் எங்களை அழைத்தாலும் கவலையில்லை! சுதந்திரத் தாயகத்துக்கே நான் திரும்ப விரும்புகிறேன். இல்லாவிட்டால் அந்நிய நாடாக இருந்தாலும் உங்கள் நாடு சுதந்திர நாடாக இருப்பதால் எனக்கு இங்கேயே ஒரு சவக் குழி தந்துவிடுங்கள்” என்று மௌலானா வீர முழக்கமிட்டார்.

இந்த வரலாற்றுப் புகழ்மிக்க பேருரைக்குப்பின் அவரது உடல் நிலை மிகவும் சீர்குலைந்தது. 03-01-1931 ல் அவரது ஆவி பிரிந்தது.

மௌலானாவின் அடக்கம் சம்பந்தமாக பிரச்சினை எழுந்தது. உடலை இந்தியாவுக்கு அனுப்பினால் பெரும் எழுச்சி ஏற்படும் என்ற பயந்த வெள்ளையர் அரசு, பாலஸ்தீனத்திலுள்ள மஸ்ஜிதே அக்ஸாவிற்கு (ஜெருஸலம்) அருகில் நல்லடக்கம் செய்ய ஏற்பாடு செய்தது.

கடைசிவரை இந்திய விடுதலைக்காப் போராடிய மௌலானா முஹம்மது அலி ஜவஹர் உயிரைத் தன் நாட்டுக்காக ஈந்தாரே தவிர உடலைத் தரவில்லை. ஏனென்றால் அடிமை மண்ணில் சிறைப்பட அவரது உடல்கூடத் தயாராக இல்லை.

நன்றி : இக்வான் அமீர் திண்ணை.

Wednesday, August 9, 2006

டோண்டுவுக்கு ஓர் அவசர செய்தி!

சந்தேகம் வேண்டாம். இஸ்லாமிய தீவிரவாதியே தான். அகில உலக அப்பாவிகளான இஸ்ரேலிய படையினரை ஏமாற்றுவதற்காக அவர்கள் தாக்க வரும் பொழுது வாயில் நிப்பிளை வைத்திருந்திருக்கிறான்.

என்ன அப்படி பார்க்கிறீர்கள். இவனும் இஸ்லாமிய தீவிரவாதியே தான். தாடியை வைத்து கண்டுபிடித்து விடக்கூடாது என்பதற்காக தலையை தொங்கப் போட்டிருக்கிறான்.

அட இஸ்லாமிய தீவிரவாதி தாங்க! பாவப்பட்ட இஸ்ரேலை தாக்குவதற்காக பதுங்கு குழி தோண்டிக் கொண்டிருக்கிறான்.

மேலே கண்டவை சும்மா ஒரு சாம்பிளுக்குத் தான். லபனானின் உட்பகுதியில் சும்மானாச்சும் கோலி விளையாட நுழைந்த இஸ்ரேலிய அப்பாவி படையினரை தாக்கி இருவரை கைது செய்த லபனானின் எல்லைப்பகுதியை பாதுகாக்கும் இஸ்லாமிய தீவிரவாதிகளான ஹிஸ்புல்லா படையினரை அழிப்பதற்காக(இவர்களை அழித்து விட்டால் பின்னர் தேவைப்படும் பொழுதெல்லாம் இஸ்ரேலுக்கு லபனானினுள் சுதந்திரமாக கோலி விளையாடலாம் தானே!) லபனான் மீது இஸ்ரேலிய குழந்தைகளின் அன்பான கையெழுத்துக்களுடன் கூடிய அதிநவீன ராக்கட்டுகளைக் கொண்டு தாக்குதல் புரிய ஆரம்பித்த அமைதி நாடான இஸ்ரேல் இதுவரை 400 க்கும் மேற்பட்ட இது போன்ற இஸ்லாமிய தீவிரவாதிகளை மிகுந்த அன்போடு "அனுப்பி" வைத்திருக்கிறது.

முழுமையாக இது போன்ற தீவிரவாதிகளை லபனானில் இருந்து அழிப்பது வரை ராக்கட் விசாரிப்பு தொடரும் எனவும் இஸ்ரேல் அறிவித்துள்ளது. தொடரட்டும் அதன் "நற்பணிகள்".
அதற்கு துணையாக மனம் முழுவதும் அன்பு மட்டுமே நிறைந்து வழியும், எவ்வாறு பலஸ்தீனியர்களின் நிலத்தில் பாதுகாப்புக்காக அபயம் தேடி வந்து பின்னர் அவர்கள் நிலத்திலேயே "இஸ்ரேல்" என்ற நாட்டை யூதர்கள் உருவாக்கினரோ அது போன்று பிழைப்புக்காக கைபர் போலன் கணவாய் வழியாக ஆடு மேய்த்துக் கொண்டு இந்தியாவில் வந்தேறி இந்நாட்டின் பூர்வீக குடிகளையே "சூத்திரன்" என்று கூறி "அசுரர்களாக்கி" அடக்கியாள துடிக்கும் ஆரிய பார்ப்பன வந்தேறி வஜ்ரங்களும் "ஆஹா அப்படித் தான் அப்படித் தான்" எனக் கூறி இஸ்ரேலிய அப்பாவிப் படையினரை உற்சாகப்படுத்துவார்கள். தேவையெனில் "பூர்வ ஜன்ம பந்தமுடையவர்களும்" தங்களுடைய எழுத்துக்களின் மூலம் விரைவில் தங்களது ஆதரவை தெரிவிப்பார்கள்.

ஆகவே தொடரட்டும் இஸ்ரேலின் இத்தகைய "நற்பணிகள்".

இது மனிதப்பண்பு. மருத்துவர்களுக்கு ஒப்பான மனரீதியான பரிசீலனைகளை முடித்துக் கொண்டு எவ்வளவு கொடுமையான விஷயங்களை காண்பினும் மனம் கலங்கி விக்கித்து நின்று விடாமல் தொடர்ந்து மருத்துவ உதவிகளை செய்து கொண்டிருக்கும் "ரெட் கிரசண்ட்" என்ற அமைப்பைச் சார்ந்த இந்த சகோதரரின் முகத்தில் காணப்படும் இந்த உணர்வு மனித உணர்வு. மனிதர்களுக்கே உரித்தான உயரிய பண்பு.

இது அதி அபூர்வமாக விலங்குகளில் காணப்படும் மனிதனின் தெய்வீகப் பண்பு. தான் தனது உணவுக்காக அடித்துக் கொன்று தின்னும் மான்குட்டி, அது தனது தாயை இழந்து தனியே நிற்கும் பொழுது அது தன்னுடைய உணவாக ஆகக் கூடியது என்ற எண்ணத்தைக் கூட மழுங்கடித்து அன்பு மேலிட கூடி விளையாட அழைப்பு விடும் இப்புலிக்குட்டியின் இப்பண்பு கஷ்டப்படுபவர்கள் அது யாராக இருந்தாலும் உடன் மனதில் இரக்க உணர்வு ஊறி ஏதாவது அவர்களுக்கு செய்ய வேண்டுமே என மனதினுள் துடிதுடிக்கும் மனிதனின் தெய்வீகப்பண்பு.

400க்கும் மேற்பட்ட பச்சைக் குழந்தைகளை ஈவிரக்கமின்றி கொன்று குவித்துக் கொண்டு தொடர்ந்து ஆணவமாக நான் இன்னும் செய்வேன் யாருடா என்னைக் கேட்பதற்கு என அகங்காரத்துடன் லபனான் மற்றும் பலஸ்தீனிய பொதுமக்களின் மீது உலக அதிபயங்கர தீவிரவாதி புஷுடன் இணைந்து கொண்டு அட்டூளியம் புரிந்து கொண்டிருக்கும் இஸ்ரேலை மனிதத்தன்மையுள்ள குறைந்த பட்சம் மிருக குணமுள்ளவர்கள் கூட எதிர்த்து குரல் கொடுக்க முன்வருவார்கள்.

ஆனால் இவ்வளவு அட்டூளியங்கள் இஸ்ரேல் நடத்திய பிறகும், தும்மினாலும் துப்பினாலும் அதற்கொரு பதிவு போட்டு தன்னை விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கும் "சிறந்த முற்போக்கு பெண்ணியவாதி", தமிழ் இணைய உலகம் முழுவதும் சிரிப்பாய் சிரித்த "சுய பின்னூட்ட புகழ்" திருவாளர் டோண்டு அவர்களுக்கு இது ஒரு விஷயமாகவேப் படவில்லை.

வந்தேறிகளாகிய ஆரிய மற்றும் யூத ஃபாஸிஸ வர்க்கத்தினருக்கு இரக்கம் என்றால் என்னவென்றே தெரியாது போலிருக்கிறது. தன் பெயரில் எவனோ ஒருவன்(போலி என்பதே ஒரு போலி தான் என்ற ஒரு சந்தேகம் ஏற்கெனவே தமிழ் இணைய வாசகர்களிடையே நிலுவையில் உள்ளது) மோசமாக பின்னூட்டமிடுகிறான் என்று கூறி அதற்காக எத்தனையோ பதிவுகள் போட்டவருக்கு 400 க்கும் மேற்பட்ட பச்சை குழந்தைகளின் இரத்தத்தை இரத்த வெறி பிடித்த இஸ்ரேல் குடித்தது இவருக்கு ஒரு விஷயமாகவே படாதது ஆச்சரியமாகத் தான் இருக்கிறது.

ஒரு விலங்கு தனது இனத்தில் படாத தனக்கு உணவாக பயன்படும் மற்றொரு பிராணி - அது கஷ்டப்படுகிறது என உணர்ந்தவுடன் அக்கஷ்டத்தை மாற்ற தன்னால் இயன்றதை செய்ய முயற்சிக்கும் பொழுது சிந்திக்கும் உணர்வு பெற்ற இந்த மனிதர்கள் இவ்வாறு ஆகி விட்டனரே! இவர்களை எந்த கூட்டத்தில் சேர்க்க. விடாது கறுப்பு மொழிந்தது போல் மிருக வர்க்கத்தில் சேர்த்தால் அந்த மிருகங்களுக்கே அது இழுக்காகி விடும்.

உலகம் பல்வேறு பகுதிகளில் ஏகாதிபத்தியவாதிகளின் வெறியில் சிக்கி அப்பாவி மக்கள் கூட்டம் கூட்டமாக கொடூரமாக கொல்லப்பட்டு மனித உயிர்களுக்கு ஒரு கொசுவின் உயிருக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் கூட கொடுக்கப்படாமல் இருக்கும் சூழலில் அவருக்கு "தில்லானா மோகனாம்பாள்" "கே"ன டிவியில் போட்டது பெரிய விஷயமாக படுகிறது. அவருடைய அடக்க முடியாத உற்சாகத்தைப் பங்கு போட இணையத்தில் ஏதோ பாக்கியிருக்கும் கொஞ்ச நஞ்ச மனிதத் தன்மையோடு உலாவரும் மற்றவர்களையும் அழைக்கிறாராம்.
பேராசிரியரின்(!!!??) இஸ்ரேலிய "பூர்வ ஜன்ம பந்தம்" எவ்வளவு உறுதியானது என்பது நன்றாக புரிகிறது. மட்டுமல்ல யூதர்களின் மேலாதிக்க உணர்வு, மற்றவர்களை அடக்கியாள துடிக்கும் வெறி, மற்றவர்களை மனித உயிர்களாகவே கருதாத மனப்பான்மை அனைத்தும் ஆரிய பார்ப்பன வந்தேறி கூட்டத்திடமும் அப்படியே இருப்பதன் அர்த்தமும் "பூர்வ ஜென்ம பந்த" உறுதியின் மூலம் தற்போது நன்றாகவே விளங்குகிறது.

ஆகவே இனி தன் முகமூடியை "சிறந்த முற்போக்கு பெண்ணியவாதி" டோண்டு அவர்கள் தைரியமாக மாற்றலாம். தனது "பூர்வ ஜென்ம பந்த" அப்பாவி இஸ்ரேல் லபனானில் அனாயாசமாக ஆடும் கோலி ஆட்டத்தைக் குறித்து சிலாகித்து ஒரு தொடர் பதிவு போடலாம். யாரும் ஏன் என்று கேட்க மாட்டார்கள். தேவையெனில் சிங்கியடிச்சான் கூட்டங்களை பின்பக்கமாக வந்து வில்லுபாட்டு வேண்டுமானாலும் பாட கூறலாம். அப்படியே அதற்கும் ஒரு 400 பின்னூட்டங்கள் கிடைத்த மாதிரியும் இருக்கும்.

என்ன நான் சொல்வது?

பின் குறிப்பு:

இப்பதிவைப் படித்த பிறகு தமிழர்களுக்கு உரிய தன்மான உணர்வு - இவரும் தமிழ் நாட்டில் வாழ்வதால் - திரும்ப கிடைத்து இஸ்ரேல் புரியும் அநியாயத்தை எதிர்த்து "தனக்கும் இஸ்ரேலுக்கும் எவ்வித பூர்வ ஜென்ம பந்தமும் இல்லை" எனக் கூறி இஸ்ரேலை கண்டித்து ஒரு பதிவிட்டு விட்டால்............... விட்டால் என்ன?

ஹ்ம்.... அப்படி நடக்கும் என்கிறீர்கள்?

நடக்கட்டும். அப்புறம் பார்க்கலாம்.

Sunday, August 6, 2006

அத்வானிக்கு ஒரு கோரிக்கை.

இந்தியா ஆங்கிலேய ஆதிக்கத்திலிருந்து 1947 - ல் விடுதலை அடைந்த பிறகு தன்னை ஒர் ஜனநாயக நாடாக அறிவித்துக் கொண்டு அணி சேரா நாடுகளுடன் நடுநிலையோடு உலக அரங்கில் தலை நிமிர ஆரம்பித்தது.

அதன் பிறகு உலக நாடுகளுடன் எவ்வளவு வேகத்தில் போட்டியிட்டு இந்தியா முன்னேறியதோ அவ்வளவு வேகத்தில் இந்தியாவினுள் இனங்களுக்கிடையே பிளவுகள் வளர்ந்தன. இதற்கு இனக்கலவரங்களும், குண்டு வெடிப்புகளும் நன்றாக உரமிட்டன.

இந்தியாவின் வளர்ச்சிக்கு இந்திய குடி மக்களிடையே நிகழும் கலவரங்களும், அநியாய குண்டு வெடிப்புகளும் பெரும் தடையாக விளங்குகின்றன. ஒவ்வொரு குண்டு வெடிப்பு நிகழும் பொழுதும், ஒவ்வொரு இனக் கலவரம் நிகழும் பொழுதும் அவற்றின் தாக்கங்களுக்கேற்ப பொருளாதாரத்திலும், நாட்டு முன்னேற்றத்திலும் மிகப்பெரிய அளவில் விள்ளல் விழுந்து நாடு பின்னோக்கி செலுத்தப்படுகிறது.

நாட்டு முன்னேற்றத்திற்கு மிகப்பெரும் சவாலாக விளங்கும் இத்தகைய இனக்கலவரங்கள் குறித்தும், குண்டு வெடிப்புகள் குறித்தும் ஆட்சிக்கு வரும் அரசுகளுக்கு எவ்வித கவலையும் இருப்பதாக தெரியவில்லை. உலக வல்லரசுகளில் ஒன்றாக வருவதற்கான எல்லாவித அடிப்படை சாத்தியக் கூறுகளும் உள்ள நம் தாய்நாட்டில் நடக்கும் இத்தகைய சம்பவங்கள் அதன் அதிவேக வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை இடுவதை நாட்டுப் பற்றுள்ள ஒவ்வொருவரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

நாட்டின் ஒற்றுமைக்கும், வளர்ச்சிக்கும் மிகப்பெரும் சவாலாக விளங்கும் இத்தகைய பிரச்சனைகளில் ஒன்றான குண்டு வெடிப்புகளில் ஒன்று சமீபத்தில் மும்பையில் நடந்தது நாம் அனைவரும் அறிந்ததே. தேசப்பற்றுள்ள எந்த ஒரு குடிமகனும் இவ்விஷயத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ள மாட்டான். அந்த வகையில் அக்குண்டு வெடிப்பைக் குறித்து மிகுந்த கவலை தெரிவித்த மதச்சார்பற்ற(!!??), தேசப்பற்றை இரத்தக்கறைகளைக் கொண்டு நிரூபிக்கும் "இரத்த யாத்திரை" புகழ் திருவாளர் அத்வானி அவர்கள் இக்குண்டு வெடிப்பில் தொடர்புடையவர்களாக உளவுத்துறையால் கருதப்படும் SIMI என்ற இந்திய இஸ்லாமிய மாணவர்கள் இயக்கத்தைக் குறித்து தனது திருவாய் மலர்ந்து ஒரு அருமையான(இதில் உள், வெளி, நடு குத்து ஒன்றும் இல்லீங்கோ) ஆலோசனையை வழங்கியுள்ளார்.

இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கெதிரான ஃபாஸிச அத்வானி வகையறாக்களின் இந்துத்துவ சூழ்ச்சிகளை பட்டியலிட்ட சகோ. (வாயில் நுழையாத பெயர் கொண்ட) இப்னு பஷீர் அவர்களின் பதிவில் அத்வானி வகையறாக்களிடம் நான் வைத்த ஒரு கோரிக்கையை இங்கு பதிக்கிறேன்.

//காந்தியைப் படுகொலை செய்ததன் மூலம் இந்திய வரலாற்றில் முதன் முறையாக பயங்கரவாதத்தை வெற்றிகரமாக அரங்கேற்றிய இயக்கம் ஆர்.எஸ்.எஸ். 1948-ல் காந்தி கொலைக்கு பிறகு, 1975-ல் இந்திரா காந்தியின் ஆட்சிக் காலத்தில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டபோதும், பிறகு 1992-ல் பாபரி மஸ்ஜித் இடிப்புக்கு பிறகும், இந்தியாவில் மூன்று முறை தடை செய்யப்பட்ட மதவெறி இயக்கம்தான் இது. இந்த இயக்கத்தில் பயிற்சி பெற்று வந்த அத்வானி, ‘சிமி (SIMI) போன்ற இஸ்லாமிய அமைப்புகள் தடயமே இல்லாத அளவிற்கு இந்திய மண்ணிலிருந்து துடைத்தெறியப்பட வேண்டும்’ என்று சொல்கிறார்.//

SIMI மட்டுமல்ல முஸ்லிம் லீக்கிலிருந்து ஆரம்பித்து ஜமா அத்தே இஸ்லாமி, தௌஹீத் ஜமா அத், JAQH, தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், மனித நீதி பாசறை என அனைத்து இஸ்லாமிய இயக்கங்களும் இந்திய மண்ணிலிருந்து துடைத்தெறியப் பட வேண்டும்.

அதற்கு தாய் மண்ணை உயிராக நேசித்து ஆங்கிலேயனிடமிருந்து அதனை மீட்க தங்களது இரத்தத்தால் வீர காவியம் எழுதிய தியாக செம்மல்களின் பரம்பரையில் வந்த இந்திய முஸ்லிம்களாகிய நாங்கள் தயார்.

அதற்கு முன் ஒரு முக்கிய கேள்வி:

இந்த இஸ்லாமிய இயக்கங்கள் அவை தீவிரவாத இயக்கங்களோ அல்லது மிதவாத இயக்கங்களோ இவை தோன்றுவதற்கு காரணம் என்ன? இவற்றின் தோற்றக்காலம் என்ன என்பதைக் குறித்து சற்று எண்ணிப் பார்க்க கோருகிறேன்.

இந்திய சரித்திரத்தில் இந்திய ஒருமைப்பாட்டுக்கு சவாலாக இன அடிப்படையில் இயக்கத்தை தோற்றுவித்தது யார்?

இந்திய மக்கள் ஒற்றுமையோடு தங்களது மண்ணின் விடுதலையை கனவு கண்டு கொண்டு ஆங்கில அரசுக்கு எதிராக போராடிக் கொண்டிருந்த போது அப்போராட்டத்தின் தாக்கத்தால் விரைவில் சுதந்திரம் கிடைத்து விடும் என கணக்கு கூட்டிய சில ஆரிய பார்ப்பன வந்தேறிகள் சுதந்திர இந்தியாவை தங்கள் பிடியில் கொண்டு வர, சுதந்திரத்திற்காக தங்கள் எண்ணிக்கையை விட அதிக அளவில் உயிர் தியாகம் செய்து கொண்டிருந்த முஸ்லிம் சமுதாயத்தை கருவறுக்க திட்டமிட்டு ஒரு அட்டூளிய அராஜக மனிதத்தன்மையற்ற ஆயுதபடையை பயிற்சியளித்து ஆர் எஸ் எஸ் என்ற பெயரில் தயார் செய்து இந்திய சரித்திரத்தில் இன அடிப்படையில் ஓர் வன்முறை இயக்கத்தைத் தோற்றுவித்தனர்.

ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஆயுதமேந்தி போராடுவதற்காகவா இவர்கள் இந்த அராஜக இயக்கத்தைத் தோற்றுவித்தனர். இல்லை. பின் எதற்காக?

ஆரிய வந்தேறி பார்ப்பனர்களின் மனு அரசுக்கு எதிராக இவர்களால் கணிக்கப்பட்ட முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், கம்யூனிஸ்டுகள் இவர்களை பூண்டோடு அழிப்பதற்காகத் தான் இக்கூட்டம் மூளைச் சலவை செய்யப்பட்ட அப்பாவிகளை கொண்டு ஓர் அக்கிரம இயக்கத்தைத் தோற்றுவித்தனர்.

இல்லை என்று ஆர் எஸ் எஸ்ஸால் மறுக்க இயலுமா? இல்லையெனில்,

இராணுவத்துக்கு நிகரான பயிற்சி பெற்ற ஆர் எஸ் எஸ் கர்ம "வெறி" வீரர்களை எத்தனை முறை இந்திய எல்லையில் இந்தியாவிற்காக களமிறங்கியிருக்கின்றனர் கூற முடியுமா? எத்தனை பேரை இந்திய சுதந்திரப் போராட்டத்திற்காக போராட முக்கியமாக சுபாஸ் சந்திர போஸின் இந்திய தேசிய இராணுவத்திற்கு அனுப்பி வைத்தனர் என்று கூற இயலுமா?

இல்லை இவர்களால் கூற இயலாது? ஒருவரைக் கூட காட்ட இயலாது. அதற்கு பதிலாக,
இந்திய சுதந்திரப்போருக்கு எதிராக ஆங்கிலேயர்களுக்கு சாதமாக ஆர் எஸ் எஸ் செயல் பட்டதை ஆதாரத்துடன் குறிப்பிட இயலும். காட்டிக் கொடுத்த செயல் வீரர்கள் வாஜ்பேயியிலிருந்து ஆங்கில அரசுக்கு விசுவாசமாக செயல்பட்ட வந்தேறி ஆரிய பார்ப்பன வர்க்கங்களை லிஸ்ட் போட்டு காண்பிக்க இயலும்.

இன்னும் கூற வேண்டுமெனில், இந்திய சுதந்திரப் போரில் தேசப்பற்று மிக்க சிலர் ஈடுபட்டதை தடுக்கும் முகமாக, "நம் சக்தியை தற்போது செலவளித்து விடக் கூடாது. அதனை சேமித்து வைக்க வேண்டும். நமது சக்தியை காட்ட வேண்டியது முஸ்லிம்களுக்கும் கம்யூனிஸ்டுகளுக்கும் எதிராகத் தான்" என ஆர் எஸ் எஸ்ஸின் தலைவர்கள் பேசி சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு சிலரையும் கூட தடுத்ததை காண இயலும்.

இவ்வாறு லட்சக்கணக்கான அப்பாவிகளை மூளைச் சலவைச் செய்து ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கு எதிராக திருப்பும் பொழுது அச்சமூகம் என்ன செய்ய வேண்டும்: "வாருங்கள் சகோதரர்களே! நாம் அனைவரும் ஒரு தாய் தந்தையிலிருந்து பிறந்தவர்கள் தான். எனவே நீங்கள் என் சகோதரர்கள் ஆகிறீர்கள். எனவே வந்து என் தலையை வெட்டி எடுத்துப் போங்கள்" என தலையை நீட்டி வைத்துக் கொண்டா நிற்க வேண்டும்.

இந்த அராஜக இயக்கத்தின் தோன்றுதலால் தான் அதிலிருந்து தங்களை பாதுகாப்பதற்கும், எவ்வித பிரக்ஞையுமற்று இருக்கும் அப்பாவி சமுதாயத்தை உணர்வூட்டுவதற்கும், அவர்களின் சமூக அரசியல் நிலை நிற்பிற்காக போராடுவதற்கும் தான் மேற் குறிப்பிட இஸ்லாமிய இயக்கங்கள் தோன்றின.

இதன் பயனாக, உறங்கிக் கொண்டிருந்த முஸ்லிம் சமுதாயம் தாங்கள் அழிக்கப்படுவதன் காரணம் சமூக, அரசியல், வேலை வாய்ப்பில் தன் சமுகத்திற்கு சரியான விகிதாச்சாரம் கிடைக்கவில்லை என்பதை சற்று காலம் தாழ்ந்தெனினும் இன்று தான் சற்று உணர்ந்து அதற்காக போராட களமிறங்கியுள்ளது.

இந்த விழிப்புணர்வை கண்டு எங்கே நாளை ஆட்சியிலும் ஒரு பகுதியை பிடித்து விடுவார்களோ என்று பொறுக்க இயலாத சங்க் கூட்டம் சமயம் கிடைக்கும் பொழுதெல்லாம் குய்யோ குய்யொ என்று கத்தத் தொடங்கி விட்டது.

இந்தியாவில் இன ரீதியாக மற்ற சமூகத்தை அழிப்பதற்காகவே ஒரு இயக்கத்தை முதன் முதலாக தோற்றுவித்த இந்த இரத்தவெறி பிடித்த மதவெறி கூட்டம் ஏதோ இஸ்லாமிய இயக்கங்கள் இருப்பதனாலேயே இந்தியாவில் ஒற்றுமை சிதைகிறது என்பது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்த முயல்கிறது. இந்த இரத்த வெறி பிடித்த கூட்டத்திடமிருந்து தங்களை பாதுகாக்கவே மற்ற இயக்கங்கள் தோன்றின என்பதை வகையாக இந்த வந்தேறி பார்ப்பன கூட்டம் மறைக்கப் பார்க்கின்றன. இதனை இவ்வியக்கங்களின் தோற்ற காலத்தையும் ஆர் எஸ் எஸின் தோற்ற காலத்தையும் ஒப்பிட்டு நோக்கினாலே புரிந்து கொள்ள இயலும்.

எனவே இப்பொழுதும் ஒரு தேசப்பற்று மிக்க, தாய் மண்ணை உயிராக நேசித்து ஆங்கிலேயனிடமிருந்து அதனை மீட்க தங்களது இரத்தத்தால் வீர காவியம் எழுதிய தியாக செம்மல்களின் பரம்பரையில் வந்த இந்திய முஸ்லிம்களாகிய நாங்கள் SIMI மட்டுமல்ல முஸ்லிம் லீக்கிலிருந்து ஆரம்பித்து ஜமா அத்தே இஸ்லாமி, தௌஹீத் ஜமா அத், JAQH, தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், மனித நீதி பாசறை என அனைத்து இஸ்லாமிய இயக்கங்களையும் இந்திய மண்ணிலிருந்து துடைத்தெறிய போராடுவதற்கு தயார்.

அதற்கு முன் இதற்கான காரணத்தை ஏற்படுத்திய அக்கிரம, அராஜக, வெறிப்பிடித்த ஆர் எஸ் எஸ்ஸையும் அதன் பரிவார இயக்கங்களையும் அடியோடு இந்திய மண்ணிலிருந்து துடைத்தெறிய தேசப்பற்று மிக்க இந்திய முஸ்லிம்களாகிய எங்களோடு கைகோர்த்து போராட அத்வானியிருந்து தேசத்தந்தை காந்தியடிகளை கொலை செய்ய தூண்டிய ஆர் எஸ் எஸ்ஸிற்கு காவடி தூக்கும் ஜெயராமன் வரை அனைவரும் தயாரா?

Saturday, August 5, 2006

என்னமோஓஓஓஓஓஓஓஓஓஓஓ போஓஓஓஓ!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

:-)


















































































கண்'


டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரர்


மோக'(ம்)



நர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்