Tuesday, August 22, 2006

எயிட்ஸ் பரவ இவைகள் தான் காரணம்!

டெலிமார்க்கட்டிங்கும் ஒரு வகையான விபச்சாரம் தான் எனக் கூறியவர்களை ரவுண்டு கட்டி அடித்ததில் இருந்து ஆரம்பித்தது எயிட்ஸ் பரவ காரணம் ஆணா? பெண்ணாவில் வந்து நிற்கிறது.

எனக்குத் தெரிந்து எயிட்ஸ் பரவ காரணமானவர்கள் சிலரை பட்டியலிட்டுருக்கிறேன். சரிதானா என்று பாருங்கள்.

* சாமி உருவத்தில் உலா வரும் காமிகள்
* யோக்கியனாக வலம் வரும் அயோக்கியர்கள்
* புரட்சி சிந்தை வேடம் புனைந்த ஜாதி வெறியர்கள்
* சமூகத்தை சீரழிய தூண்டும், பேராசிரியர் பதவி கிடைத்த முற்போக்கு பெண்ணியவாதிகள்
* பிரம்மச்சரியம் வேஷமிடும் ஹிந்துத்துவவெறி கொண்ட ரோமியோக்களின் கூடாரங்கள்
* அரிப்பைத் தீர்த்துக் கொள்ள வேலிதாண்டும் காமவெறியர்கள்
* வக்கிரங்களை மனதில் கொண்டலையும் போலி பெண்ணியவாதிகள்

சாமி உருவத்தில் உலா வரும் காமிகள் குறித்து எழுதியதில் பல சகோதரர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. அவர்களுக்கு விளக்கமாக புரிவதற்காக உண்மையை இங்கு வெளிச்சம் போட்டு காட்டுகிறேன். மறக்காமல் எப்பொழுதும் போல் வசை பாடிவிட்டு செல்ல வந்தேறி பார்ப்பன அடிவருடிகளிடம் கோருகிறேன்(பயப்பட வேண்டாம், வசை ரொம்ப நாற்றமடித்தால் எப்பொழுதும் போல் மட்டுறுத்தி விடுவேன்.)

அய்யப்பனைப் பற்றிப் பேசும்போது, அடேயப்பா, என்ன பய பக்தி! கன்னத்திலும், காதிலும் போட்டுக் கொள்வார்கள். தீயில் பட்ட வெண்ணெய் போல உருகுவார்கள். அந்த சந்நிதானத்துக்குச் செல்லுவது என்றால் சாதாரணமா? 48 நாள்கள் விரதம் இருக்கவேண்டும்; காலை, மாலை நீராட வேண்டும்; ஒருவேளை உண்ணாவிரதம் இருக்கவேண்டும்; லாகிரி வஸ்துக்களை உபயோகிக்கக் கூடாது; மனைவியிடம் தாம்பத்திய உறவு வைத்துக் கொள்ளக் கூடாது என்று எண்படி எப்படியெல்லாம் பிரச்சாரம் செய்வார்கள். இதற்காகப் பாட்டுகள் என்ன? சி.டி.,க்கள் என்ன? கேசட்டுகள் என்ன... என்ன.. என்ன... என்று கே.பி. சுந்தராம்பாள் பாடுவதுபோல அடுக்குவார்கள்.

அப்படிப்பட்ட சபரிமலை அய்யப்பன் கோயிலின் பிரதம தந்திரி (அர்ச்சகர்)யின் கதை - புழுத்த நாய்க்கூடக் குறுக்கே ஓடாது என்கிற அளவுக்கு நாற்றமெடுக்கும் ஆபாசக் குப்பைகள் லாரி லாரியாக படிப்போர், கேட்போர் குடலைப் புரட்டும் அளவுக்கு நாளும் வந்து குவிந்துகொண்டு இருக்கின்றன.

கண்டரரு மோகனரு என்ற அந்த மூத்த அர்ச்சகப் பார்ப்பான் காவல் துறையில் கொடுத்த இரண்டு புகார்க் கடிதங்களே அந்த ஆசாமியைக் காட்டிக் கொடுத்துவிட்டன; முன்னுக்குப் பின் முரண்பாடாக முகாரிப் பாடுகின்றன.

விபச்சாரிகள் குடியிருக்கும் அந்தப் பகுதிக்குள் யாரும் உள்ளே போக முடியாது. அப்படிப் போவோர் வாயிலில் உள்ள குறிப்புப் புத்தகத்தில் பெயரையும், யாரைப் பார்க்கப் போகிறார் என்கிற முகவரியையும் குறிப்பிட்டாக வேண்டும்.

தன் பெயரையும், தான் பார்க்கப் போகும் விபச்சாரியின் பெயரையும் குறிப்பிட்டு இருக்கிறாரே - இந்த ஆதாரம் ஒன்று போதாதா - இந்த ஆசாமி அயோக்கியப் பதர் என்பதற்கு? இதுகுறித்து 26.7.2006 நாளிட்ட `மாலைமுரசு’ (பக்கம் 2) தரும் விலாவாரியான தகவல்கள் இதோ:-

சபரிமலையின் மூத்த தந்திரியான கண்டரரு மோகனரு விபச்சாரிகளுடன் தொடர்பு வைத்திருப்பது அண்மையில் வெட்ட வெளிச்சமானது. மோகனரு கொடுத்த போலி புகார்களே அவரின் இன்னொரு முகத்தைத் தோலுரித்துக் காட்டிவிட்டது.

தந்திரி இதுவரை இரு புகார்களை போலீசில் கொடுத்துள்ளார். இரண்டு புகார்களுமே ஒன்றுக்கொன்று முரண்பட்டவையாக இருக்கின்றன. கடந்த 23 ஆம் தேதி எர்ணாகுளம் காவல் நிலையத்தில் அவர் கொடுத்த முதல் புகாரில், பாலாரி வட்டம் பகுதியில் நடந்துவரும் வீடு கட்டுமான வேலைகளை தான் பார்க்கச் சென்றதாகவும், கல்லூர் அருகே வந்து கொண்டிருந்தபோது டாடா சுமோ மற்றும் குவாலிஸ் கார்களில் வந்திறங்கிய 9 பேர் தன்னை வழி மறித்ததாகவும் அதில் கூறியிருந்தார். மேலும், அந்த மர்ம நபர்கள், தங்களின் வீட்டிற்கு விளக்கேற்றி வைக்க தந்திரி வரவேண்டும் என கோரிக்கை வைத்ததாகவும், அதற்கிணங்கி தானும் அவர்களுடன் சென்றதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். வாலஞ்சாம்-பலம் என்ற இடத்திற்கு அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு தன்னை கொண்டு சென்றதாக கூறும் அவர், அங்கே இருந்த ஒரு பெண்ணை நிர்வாணப்படுத்தி தன்னுடன் இணைத்து அவர்கள் புகைப்படம் எடுத்துவிட்டதாகக் கூறியிருக்கிறார். அதன்பின்னர், அந்த மர்ம நபர்கள் ரூ.30 லட்சம் கொடுக்குமாறு தந்திரியை கேட்டதாகவும், ஆனால், அவரோ தன்னுடைய 40 சவரன் நகைகள் மற்றும் செல்போனைக் கொடுத்துவிட்டு தப்பி வந்ததாகவும் போலீசில் தெரிவித்திருந்தார்.

ஆனால், புகார் கொடுத்த மறுநாளே, அது போலியானது என்பது தெரிய வந்தது. விபச்சாரிகள் ஷோபா, சாந்தா ஆகிய இருவரும் வாலஞ்சாம்பலம் அருகே உள்ள லிங் லட்சுமண் என்ற அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கும், தந்திரிக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. தந்திரி அடிக்கடி இங்கு வந்து போயுள்ளார். ஆனால், மோகனரு என்ற தனது பெயரை மோகன் என இவர் அங்கிருப்பவர்களிடம் கூறியிருக்கிறார்.

கடந்த ஓர் ஆண்டாக தந்திரி இந்த இடத்திற்கு அடிக்கடி வந்திருக்கிறார். 20 தடவைக்கும் மேலாக அவர் இந்த இடத்திற்குப் பெண்களை நாடி வந்து உல்லாசம் அனுபவித்துச் சென்றது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஆனால், தந்தரிதான் பெண்களுடன் உல்லாசமாக இருந்துவிட்டுச் செல்கிறார் என்ற விசயம் அங்குள்ள இளைஞர்களுக்கு ஆரம்பத்தில் தெரியவில்லை. சம்பவம் நடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அங்கிருந்த இளைஞர்களிடம் தந்திரி கையும், களவுமாகப் பிடிபட்டு விட்டார். விபச்சார அழகி சாந்தாவுடன் அவர் நிர்வாண கோலத்தில் இருந்திருக்கிறார். அதை இளைஞர்கள் புகைப்படமாக எடுத்துவிட்டனர். அவர்களிடம் இந்த விவகாரத்தை மறைக்க தந்திரி பேரம் பேசினார். ரூ.20 ஆயிரத்தில் இருந்து 1 கோடி வரை அவர் பேரம் பேசியதாகத் தெரிகிறது.

பேரம் படியாத ஆத்திரத்தில் இளைஞர்கள் தேவஸ்வம் போர்டுக்குப் புகார் கொடுக்கப் போய்விடுவார்கள் என்ற பயத்தில் தந்தரி தானாக முந்திக் கொண்டு இந்தப் பொய்ப் புகாரை கொடுத்துவிட்டார். தனது முதல் பொய் புகார் போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டதால் தந்திரி தற்போது தனது 2 ஆவது புகாரை போலீசில் அளித்திருக்கிறார். எர்ணாகுளம் டவுனில் உள்ள மத்திய போலீ-சாரிடம் இந்த புதிய புகாரை அவர் கொடுத்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவன்று வேலைக்காரியை அழைத்து வருவதற்காக வாலஞ்சாம்பலம் சென்றேன். அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில்தான் அவள் வசிக்கிறாள். நான் அவளின் அறைக்குச் சென்றபோது 6 பேர் கொண்ட கும்பல் அங்கு வந்தது. அங்கு வேலைக்காரியுடன் இன்னொரு பெண்ணும் இருந்தாள். அவளுடன் என்னையும் நிர்வாணமாக்கி அந்த மர்மக் கும்பல் புகைப்படம் எடுத்துவிட்டது - இவ்வாறு அவர் தன்னுடைய புகாரில் கூறியுள்ளார்.

இதற்கிடையே, தந்திரி கொடுத்த புகாரின் பேரில் அந்த அடுக்குமாடி குடியிருப்பின் காவலாளியை கேரள போலீசார் விசாரித்தனர். விசாரணையில், அந்த 6 இளைஞர்களும் 21 இல் இருந்து 25 வயதிற்குள் இருப்பார்கள் என்று தெரிய வந்துள்ளது. அவர்கள் இந்தியில் பேசினார்கள் என்று தந்திரி போலீசிடம் கூறியுள்ளார்.

அழகிகள் ஷோபா, சாந்தாவிடம் முதற்கட்ட விசாரணை முடிந்துவிட்டது. தந்திரி விசயத்தில், தேவஸ்வம் போர்டு முறையான விசாரணை நடத்தவேண்டும் எனவும், அவரை சிறையில் தள்ள வேண்டும் என்றும் அமைச்சர் சுதாகரன் தெரிவித்துள்ளார்.

விபச்சாரிகளுடன் பழகி வந்த தந்திரி, சபரிமலை பிரசாதங்களை அடிக்கடி அவர்களின் இருப்பிடங்களுக்கே எடுத்துச் சென்று கொடுத்து வந்திருக்கிறார். தந்திரியின் இத்தகைய செயல்-பாடுகளால் கோயிலின் புனிதம் கெட்டுப் போயிருப்பதாக தேவஸ்வம் போர்டு கருதுகிறது. இந்தக் களங்கத்தைப் போக்க சிறப்பு பூஜைகள் செய்யப்படும் என நிருவாகி ராமன் நாயர் தெரிவித்துள்ளார்.

ஷோபா, சாந்தா என்கிற விபச்சாரிகள் மட்டுமல்ல; மேலும் ஏராளமான விலை மாதர்களுடன் சபரிமலை அய்யப்பன் கோயிலின் முதன்மை அர்ச்சகனான இந்த ஆசாமிக்குத் தொடர்பு இருக்கிறது என்று காவல் துறை விசாரணையில் எடுக்க எடுக்கப் புதையல் போல வந்து கொண்டிருக்கிறது. பூஜா என்ற இன்னொரு பெண்ணுடன் இவருக்குத் தொடர்பு உண்டாம். இந்தப் பூஜா கடந்த ஆறு மாதங்களுக்கு முன் விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டவர் என்று காவல் துறை கூறுகிறது. இப்பொழுது இன்னொரு செய்தி: தமிழ்நாட்டில் அய்யப்பன் கோயில் அர்ச்சகராக இதே ஆசாமி இருந்தபோது இரண்டு எழுத்து கொண்ட ஒரு நடிகையுடன் நெருக்கமாம்!

இதைவிட இன்னொரு தகவல் கேட்டால் தலையே கிறு-கிறு என்று சுற்ற ஆரம்பிக்கும். மாது போய் மது வருகிறது - மது என்றாலே கிறுகிறுப்புதானே! சபரி மலையில் 18 ஆம் படிக்கு மேல் உள்ள மூலஸ்தானத்தில் இருந்து 10 அடி தூரத்தில் மோகனரு ஓய்வு எடுக்கும் அறை உள்ளது.
அந்த அறைக்குள் "ஹனி-பீ" என்ற மது பாட்டில் சிதறிக் கிடந்தது போலீஸ் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. சீரகத் தண்ணீரில் இந்த ஹனி-பீ மதுவை கலந்து குடிப்பது அவரது வழக்கமாம்.

இந்தச் செய்தியை "மாலைமலர்" (26.7.2006, பக்கம் 6) வெளியிட்டுள்ளது.
இதைவிட கேவலத்தின் எல்லையை - முடியை யார் தான் தொட முடியும்? கேட்டால் அந்த ஆசாமி எர்ணாகுளத்தில் செய்தியாளர்களிடம் "அது என் சொந்த விசயம் யாரும் அதில் தலையிட முடியாது" என்று தலையில் கொழுப்பு வழிக் கூறி இருக்கிறார்.

இதில் இன்னொன்றையும் கவனிக்கத் தவறக் கூடாது. தன்னைப் பிடித்து வைத்த இளைஞர்களிடம் தன்னிடம் இருந்த 40 பவுன் நகைகளைக் கொடுத்துத் தப்பித்து வந்ததாகக் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் கூறியுள்ளார். பெண்கள் கூட ஒரே நேரத்தில் இவ்வளவுப் பவுனுக்கு நகைகளைப் போட்டுக் கொண்டு இருக்க மாட்டார்கள். பகவானுக்குச் சேவை செய்து பரலோகத்துக்கு வழிகாட்டும் ஒரு அர்ச்சகப் பார்ப்பான் 40 பவுன் நகைகளை அணிந்துகொண்டு இருந்தான் என்றால், அவன் பார்த்த அந்த அர்ச்சகத் தொழில் எந்த அளவு பணம் கொட்டும் - கொழிக்கும் சுரண்டல் தொழிலாக இருக்கிறது என்பதை எளிதில் உணர்ந்து கொள்ளலாமே!

தன்னை விடுவித்துக் கொள்ள ஒரு கோடி ரூபாய் வரை அந்த இளைஞர்களிடம் பேரம் பேசினார் என்கிற தகவலும் வெளிவந்துள்ளது. அடேயப்பா! ஒரு கோடி என்று எண்ணால் எழுதச் சொன்னால் கூட படித்தவர்களுக்குக் கூட எழுத வராது! ஒரு பேரத்துக்கு ஒரு அர்ச்சகப் பார்ப்பானால் ஒரு கோடி ரூபாய் கொடுக்க முடியும் என்றால், அந்த அர்ச்சனைத் தொழிலில் எத்தனை ஆயிரம் கோடி கொள்ளை அடிக்க வைத்திருக்கவேண்டும்?

அன்றாடம் கூலி வேலை செய்யும் தொழிலாளிகள் கூட புத்தியைப் பக்திக்குப் பறி கொடுத்து, பல நாள் விரதம் இருந்து, கடன் வாங்கி சபரிமலைக்குச் சென்று பதினெட்டுப் படிகள் ஏறி உண்டியலில் கொட்டிய பணம் அர்ச்சகப் பார்ப்பானின் சல்லாபத்திற்கும், உல்லாசத்துக்குமா பயன்படவேண்டும்? நினைத்தால் வயிறு எரியவில்லையா?

இன்னொரு வெட்கக்கேடும் உண்டு. அய்யப்பன் கோயில் பிரசாதங்களை இந்த ஆசாமி இந்த விபச்சாரிகளுக்கும் கொண்டு போய்க் கொடுப்பாராம்! ("தினகரன்" 28.6.2006, பக்கம் 10).
பலே, பலே! பிரசாதத்தின் அருமையே அருமை! அதன் மகிமையே மகிமை! புண்ணியத்தனமான விஷயங்கள் இப்படி இன்னும் வண்டி வண்டியாக இருக்கும்போலும் - நாம் என்ன கண்டோம்!

காஞ்சிபுரம் சங்கராச்சாரியார்களிலிருந்து, சபரிமலை கண்டரரு மோகனரு வரை மோட்சம் போகும் சுலபமான மார்க்கங்களைக் கண்டுபிடித்து வைத்திருக்கிறார்களே - அர்த்தமுள்ள இந்து மதத்தின் இரகசியப் பாதை இதுதான் என்று இப்பொழுது அல்லவா மிக நன்னா புரியுது! காஞ்சி ஜெயேந்திரரும் சரி, தந்திரி கண்டரரு மோகனரும் சரி தாங்கள் தப்பித்துக் கொள்ள அர்த்தம் உள்ள இந்து மதத்தில் ஒரு "ராஜ பாட்டையே" அகலமாகத் திறந்து இருக்கிறது.

வேஸ்யா தர்சனப் புண்யம்
ஸ்பர்சிவனம் பாப நாஸம்
சம்பனம் சர்வ தீர்த்தானாம்
மைதுனம் மோக்ஷ சாதனம்


புரியவில்லையா? இதோ விளக்கம்:

வேசிகளைப் பார்த்தால் புண்ணியம்; அவர்களைத் தொட்டால் பாவங்கள் நாசம்; முத்தம் கொடுத்தால் சகல புண்ணிய தீர்த்தங்களிலும் நீராடியதற்குச் சமம்; உடலுறவு கொண்டால் மோட்சத்தை அடையும் வழி!

இந்த வழிகளைத் தானே ஜெகத் குருக்களும், அர்ச்சகர்களும் பின்பற்றி வருகிறார்கள் - இதில் என்ன குற்றம் என்று 'சோ' ராமசாமிகளும், "கல்கி"களும், "காமகோடிகளும்", "விஜய-பாரதங்களும்", "ஹிந்து மித்திரன்களும்"(இடையில் சிறந்த முற்போக்கு பெண்ணியவாதிகளையும், சேர்த்துக் கொள்ளுங்கள்) எழுதினால் ஆச்சரியப்படுவதற்கில்லை. இன்னும் சொல்லப் போனால், ஹிந்து மதக் கடவுள்கள் செய்யாததையா இவர்கள் செய்துவிட்டார்கள்?

இங்கே உள்ள பகுதி சென்சார் செய்யப்படுகிறது. "அதை" வெளியிட்டால் உடனே இறை நேசனுக்கு "அர்ச்சனையுடன்" கூடிய உபதேசங்களும், பதிவுகளும் வர சாத்தியம் உள்ளதால், இப்பகுதியில் உள்ள "ரோமியோக்களின்" வெவகாரமான செய்கைகளை அறிய விரும்புபவர்கள் இங்கே சென்று அறிந்து கொள்ளுங்கள்!

........தான் பெற்ற மகளையே (?!@#%$@#@##@@???) பெண்டாண்டு சுகம் அனுபவித்திருக்கிறான் என்றால், அந்த வழியை இவாள் பின்பற்றினால் என்ன தவறு என்று கூட அக்கிரகாரவாசிகள் வக்கிரம் பேசினால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

"..................................@@#########">>>>@>@>>@>>@@@!!!!!&&*$%%#....................................................@@#########>>>>@>@>>@>>@@@!!!!!&&*$%%#.................."(இந்த இடத்துல என்ன எழுதியிருக்கிறதென்றே புரியலப்பா!) இன்னும் சொல்லப்போனால் பகவான் காட்டிய வழியைத்தான் பக்தாள் செய்திருக்காள் என்று மயிலாப்பூரும், மாம்பலமும் திருவாய் மலர்ந்தாலும் மலர்வாள்.

யதாராஜா ததா பிரஜா என்பது ஸமஸ்கிருத மொழி. இதன் பொருள் அரசன் எப்படியோ அப்படிதான் குடிகள் என்பதாகும்.

ஸ்ரீதந்திரியும் அந்தப் பெண்ணும் நிர்வாணமாக இருந்த கோலத்தில் படம் எடுத்துட்டாள் என்று செய்தி வந்துள்ளது. "நிர்வாணம்" என்றால் என்ன தெரியுமோ - அதற்குப் பெரிய சாங்கித்தியம் எல்லாம் இருக்கிறது. அதைப் பற்றியெல்லாம் சொன்னால் உங்களவாளுக்கெல்லாம் புரியாது - அது பெரிய பெரிய விஷயம் - அந்த நிர்வாணத் தத்துவத்தைத்தான் ஸ்பஷ்டமாக அவாள் காட்டியிருக்காள் என்று காஞ்சீபுரத்தின் சிஷ்யாக்கள் "காமகோடி"யில் எழுதினாலும் எழுதுவார்கள்! சிலருக்கு மறந்து போயிருக்கலாம் - கருஞ்சட்டைகளுக்கு மட்டும் மறதி என்பது கிடையவே கிடையாது.

2005 பிப்ரவரியில் ஒரு செய்தி வெளிவந்து நாற்றமெடுத்ததே நினைவிருக்கிறதா? குஜராத் மாநிலம் விளம்பரம் பெற்ற சுவாமி நாராயன் கோயில் அர்ச்சகர்களின் "கொக்கோக" லீலைகள் வட நாட்டுப் பத்திரிகையில் "வண்ணமயமாக" பல கோணங்களில் வெளிவந்ததே நினைவிருக்கிறதா? கோயிலில் உள்ள அர்ச்சகர்ப் பார்ப்பனர்களின் குடியிருப்புகள் பள்ளியறையாக மாற்றப்பட்டது எல்லாம் மறக்கக் கூடியதுதானா?

சந்த், தேவ் வல்லப் என்ற அர்ச்சகப் பார்ப்பனர்கள் கோயிலுக்கு வரும் பக்தைகளை வேட்டையாடிய சங்கதிகள் எல்லாம் கப்பலேறினவே! அர்ச்சகப் பார்ப்பனர்களின் கிருஷ்ண லீலைகள் வீடியோக்களாக்கப்பட்டுப் பரப்பப்பட்டனவே! கோயிலை ஒட்டியிருந்த அவர்களின் குடியிருப்பில் கைப்பற்றப்பட்ட பொருள்கள் என்னென்ன தெரியுமா? ஆபாச சி.டி.,க்கள், காமசூத்ரா புத்தகங்கள், நிர்வாண புகைப்படங்கள், நிரோத்துகள் (ஆணுறைகள்)!

"சந்தோஷ்" ஏடு மட்டுமல்ல; அதற்கென்று உள்ள இணைய தளத்திலும் பார்ப்பனக் கயவர்களின் வண்டவாளங்கள் தண்டவாளத்தில் ஏற்றப்பட்டன. கோயில்கள் விபச்சார விடுதிகள் என்று காந்தியார் சொன்னதை இவர்கள் நிரூபித்துக் காட்டினார்கள். 1960 இல் சர்.சி.பி. இராமசாமி அய்யர் தலைமையில் அமைக்கப்பட்ட கமிஷன் கோயில்களில் எந்தெந்த வகைகளில் எல்லாம் ஒழுக்கக் கேடுகள் தலைவிரித்தாடுகின்றன என்பதை பட்டியல் போட்டுக் காட்டினார்.

ஒரு காலத்தில் கோயில்கள் என்பவை அரசனுக்கு வருவாய்ச் சேர்க்க; (சாணக்கியனின் அர்த்தசாஸ்திரம் அதைத்தான் கூறுகிறது) பிற்காலத்தில் அர்ச்சகன் சுரண்ட என்பதல்லாமல் வேறு என்ன? இல்லாத கடவுளுக்கு கோயில் கட்டி பொல்லாத பார்ப்பனச் சுரண்டலுக்கும், சுகபோகத்துக்கும் பலியாகும் ஆடுகள் தான் இந்தப் பரிதாபத்துக்குரிய பக்தர்கள் என்பதை தந்திரிகளின் சமாச்சாரத்துக்குப் பிறகாவது உணர வேண்டாமா?

- நன்றி: கவிஞர் கலி.பூங்குன்றன்(உண்மை)

1 comment:

  1. ஹிந்து மதத்தில் தவறு செய்பவர்களை, அவர்கள் எப்படிப்பட்ட உயர்நிலையில் இருந்தாலும், இப்படியெல்லாம் வெளிப்படுத்தி அவர்கள் தண்டனைக்குரியவர்கள் என்று சொல்லுகின்ற உயர்குணம் ஹிந்துக்களுக்கு உண்டு என்பது தங்கள் பதிவிலிருந்து தெரியவந்தது.

    தங்களுடைய இந்த பதிவை படித்த என் நண்பர் இதுவரை ஹிந்து மதத்தின்மீது கொண்டிருந்த தாழ்வான அபிப்பிராயத்தை மாற்றிக்கொண்டார். உங்களுக்கு நன்றிகள் தெரிவிக்கச்சொன்னார். சொல்லிவிட்டேன்.

    கீழே இருப்பது என் கருத்து/கேள்வி:

    ஹிந்து மதத்தில் தவறு செய்பவர்களையெல்லாம் வெளிச்சம்போட்டுக்காட்ட ஹிந்துக்கள் தயங்குவதில்லை. ஆனால், இஸ்லாமில் தவறு செய்பவர்கள் பற்றி எதுவும் இல்லையா? ஒருவேளை இவர்களுக்கு இமாம் பதவி கொடுத்துவிடுகிறீர்களா?

    நேர்மையான, கடவுளுக்கும் அவர் படைப்பான மற்ற மதத்தினருக்கும் மரியாதை கொடுக்கும் இஸ்லாமியர்களை எல்லாம் அழுத்திவைப்பது ஏன்?

    ReplyDelete