Wednesday, August 9, 2006

டோண்டுவுக்கு ஓர் அவசர செய்தி!

சந்தேகம் வேண்டாம். இஸ்லாமிய தீவிரவாதியே தான். அகில உலக அப்பாவிகளான இஸ்ரேலிய படையினரை ஏமாற்றுவதற்காக அவர்கள் தாக்க வரும் பொழுது வாயில் நிப்பிளை வைத்திருந்திருக்கிறான்.

என்ன அப்படி பார்க்கிறீர்கள். இவனும் இஸ்லாமிய தீவிரவாதியே தான். தாடியை வைத்து கண்டுபிடித்து விடக்கூடாது என்பதற்காக தலையை தொங்கப் போட்டிருக்கிறான்.

அட இஸ்லாமிய தீவிரவாதி தாங்க! பாவப்பட்ட இஸ்ரேலை தாக்குவதற்காக பதுங்கு குழி தோண்டிக் கொண்டிருக்கிறான்.

மேலே கண்டவை சும்மா ஒரு சாம்பிளுக்குத் தான். லபனானின் உட்பகுதியில் சும்மானாச்சும் கோலி விளையாட நுழைந்த இஸ்ரேலிய அப்பாவி படையினரை தாக்கி இருவரை கைது செய்த லபனானின் எல்லைப்பகுதியை பாதுகாக்கும் இஸ்லாமிய தீவிரவாதிகளான ஹிஸ்புல்லா படையினரை அழிப்பதற்காக(இவர்களை அழித்து விட்டால் பின்னர் தேவைப்படும் பொழுதெல்லாம் இஸ்ரேலுக்கு லபனானினுள் சுதந்திரமாக கோலி விளையாடலாம் தானே!) லபனான் மீது இஸ்ரேலிய குழந்தைகளின் அன்பான கையெழுத்துக்களுடன் கூடிய அதிநவீன ராக்கட்டுகளைக் கொண்டு தாக்குதல் புரிய ஆரம்பித்த அமைதி நாடான இஸ்ரேல் இதுவரை 400 க்கும் மேற்பட்ட இது போன்ற இஸ்லாமிய தீவிரவாதிகளை மிகுந்த அன்போடு "அனுப்பி" வைத்திருக்கிறது.

முழுமையாக இது போன்ற தீவிரவாதிகளை லபனானில் இருந்து அழிப்பது வரை ராக்கட் விசாரிப்பு தொடரும் எனவும் இஸ்ரேல் அறிவித்துள்ளது. தொடரட்டும் அதன் "நற்பணிகள்".
அதற்கு துணையாக மனம் முழுவதும் அன்பு மட்டுமே நிறைந்து வழியும், எவ்வாறு பலஸ்தீனியர்களின் நிலத்தில் பாதுகாப்புக்காக அபயம் தேடி வந்து பின்னர் அவர்கள் நிலத்திலேயே "இஸ்ரேல்" என்ற நாட்டை யூதர்கள் உருவாக்கினரோ அது போன்று பிழைப்புக்காக கைபர் போலன் கணவாய் வழியாக ஆடு மேய்த்துக் கொண்டு இந்தியாவில் வந்தேறி இந்நாட்டின் பூர்வீக குடிகளையே "சூத்திரன்" என்று கூறி "அசுரர்களாக்கி" அடக்கியாள துடிக்கும் ஆரிய பார்ப்பன வந்தேறி வஜ்ரங்களும் "ஆஹா அப்படித் தான் அப்படித் தான்" எனக் கூறி இஸ்ரேலிய அப்பாவிப் படையினரை உற்சாகப்படுத்துவார்கள். தேவையெனில் "பூர்வ ஜன்ம பந்தமுடையவர்களும்" தங்களுடைய எழுத்துக்களின் மூலம் விரைவில் தங்களது ஆதரவை தெரிவிப்பார்கள்.

ஆகவே தொடரட்டும் இஸ்ரேலின் இத்தகைய "நற்பணிகள்".

இது மனிதப்பண்பு. மருத்துவர்களுக்கு ஒப்பான மனரீதியான பரிசீலனைகளை முடித்துக் கொண்டு எவ்வளவு கொடுமையான விஷயங்களை காண்பினும் மனம் கலங்கி விக்கித்து நின்று விடாமல் தொடர்ந்து மருத்துவ உதவிகளை செய்து கொண்டிருக்கும் "ரெட் கிரசண்ட்" என்ற அமைப்பைச் சார்ந்த இந்த சகோதரரின் முகத்தில் காணப்படும் இந்த உணர்வு மனித உணர்வு. மனிதர்களுக்கே உரித்தான உயரிய பண்பு.

இது அதி அபூர்வமாக விலங்குகளில் காணப்படும் மனிதனின் தெய்வீகப் பண்பு. தான் தனது உணவுக்காக அடித்துக் கொன்று தின்னும் மான்குட்டி, அது தனது தாயை இழந்து தனியே நிற்கும் பொழுது அது தன்னுடைய உணவாக ஆகக் கூடியது என்ற எண்ணத்தைக் கூட மழுங்கடித்து அன்பு மேலிட கூடி விளையாட அழைப்பு விடும் இப்புலிக்குட்டியின் இப்பண்பு கஷ்டப்படுபவர்கள் அது யாராக இருந்தாலும் உடன் மனதில் இரக்க உணர்வு ஊறி ஏதாவது அவர்களுக்கு செய்ய வேண்டுமே என மனதினுள் துடிதுடிக்கும் மனிதனின் தெய்வீகப்பண்பு.

400க்கும் மேற்பட்ட பச்சைக் குழந்தைகளை ஈவிரக்கமின்றி கொன்று குவித்துக் கொண்டு தொடர்ந்து ஆணவமாக நான் இன்னும் செய்வேன் யாருடா என்னைக் கேட்பதற்கு என அகங்காரத்துடன் லபனான் மற்றும் பலஸ்தீனிய பொதுமக்களின் மீது உலக அதிபயங்கர தீவிரவாதி புஷுடன் இணைந்து கொண்டு அட்டூளியம் புரிந்து கொண்டிருக்கும் இஸ்ரேலை மனிதத்தன்மையுள்ள குறைந்த பட்சம் மிருக குணமுள்ளவர்கள் கூட எதிர்த்து குரல் கொடுக்க முன்வருவார்கள்.

ஆனால் இவ்வளவு அட்டூளியங்கள் இஸ்ரேல் நடத்திய பிறகும், தும்மினாலும் துப்பினாலும் அதற்கொரு பதிவு போட்டு தன்னை விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கும் "சிறந்த முற்போக்கு பெண்ணியவாதி", தமிழ் இணைய உலகம் முழுவதும் சிரிப்பாய் சிரித்த "சுய பின்னூட்ட புகழ்" திருவாளர் டோண்டு அவர்களுக்கு இது ஒரு விஷயமாகவேப் படவில்லை.

வந்தேறிகளாகிய ஆரிய மற்றும் யூத ஃபாஸிஸ வர்க்கத்தினருக்கு இரக்கம் என்றால் என்னவென்றே தெரியாது போலிருக்கிறது. தன் பெயரில் எவனோ ஒருவன்(போலி என்பதே ஒரு போலி தான் என்ற ஒரு சந்தேகம் ஏற்கெனவே தமிழ் இணைய வாசகர்களிடையே நிலுவையில் உள்ளது) மோசமாக பின்னூட்டமிடுகிறான் என்று கூறி அதற்காக எத்தனையோ பதிவுகள் போட்டவருக்கு 400 க்கும் மேற்பட்ட பச்சை குழந்தைகளின் இரத்தத்தை இரத்த வெறி பிடித்த இஸ்ரேல் குடித்தது இவருக்கு ஒரு விஷயமாகவே படாதது ஆச்சரியமாகத் தான் இருக்கிறது.

ஒரு விலங்கு தனது இனத்தில் படாத தனக்கு உணவாக பயன்படும் மற்றொரு பிராணி - அது கஷ்டப்படுகிறது என உணர்ந்தவுடன் அக்கஷ்டத்தை மாற்ற தன்னால் இயன்றதை செய்ய முயற்சிக்கும் பொழுது சிந்திக்கும் உணர்வு பெற்ற இந்த மனிதர்கள் இவ்வாறு ஆகி விட்டனரே! இவர்களை எந்த கூட்டத்தில் சேர்க்க. விடாது கறுப்பு மொழிந்தது போல் மிருக வர்க்கத்தில் சேர்த்தால் அந்த மிருகங்களுக்கே அது இழுக்காகி விடும்.

உலகம் பல்வேறு பகுதிகளில் ஏகாதிபத்தியவாதிகளின் வெறியில் சிக்கி அப்பாவி மக்கள் கூட்டம் கூட்டமாக கொடூரமாக கொல்லப்பட்டு மனித உயிர்களுக்கு ஒரு கொசுவின் உயிருக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் கூட கொடுக்கப்படாமல் இருக்கும் சூழலில் அவருக்கு "தில்லானா மோகனாம்பாள்" "கே"ன டிவியில் போட்டது பெரிய விஷயமாக படுகிறது. அவருடைய அடக்க முடியாத உற்சாகத்தைப் பங்கு போட இணையத்தில் ஏதோ பாக்கியிருக்கும் கொஞ்ச நஞ்ச மனிதத் தன்மையோடு உலாவரும் மற்றவர்களையும் அழைக்கிறாராம்.
பேராசிரியரின்(!!!??) இஸ்ரேலிய "பூர்வ ஜன்ம பந்தம்" எவ்வளவு உறுதியானது என்பது நன்றாக புரிகிறது. மட்டுமல்ல யூதர்களின் மேலாதிக்க உணர்வு, மற்றவர்களை அடக்கியாள துடிக்கும் வெறி, மற்றவர்களை மனித உயிர்களாகவே கருதாத மனப்பான்மை அனைத்தும் ஆரிய பார்ப்பன வந்தேறி கூட்டத்திடமும் அப்படியே இருப்பதன் அர்த்தமும் "பூர்வ ஜென்ம பந்த" உறுதியின் மூலம் தற்போது நன்றாகவே விளங்குகிறது.

ஆகவே இனி தன் முகமூடியை "சிறந்த முற்போக்கு பெண்ணியவாதி" டோண்டு அவர்கள் தைரியமாக மாற்றலாம். தனது "பூர்வ ஜென்ம பந்த" அப்பாவி இஸ்ரேல் லபனானில் அனாயாசமாக ஆடும் கோலி ஆட்டத்தைக் குறித்து சிலாகித்து ஒரு தொடர் பதிவு போடலாம். யாரும் ஏன் என்று கேட்க மாட்டார்கள். தேவையெனில் சிங்கியடிச்சான் கூட்டங்களை பின்பக்கமாக வந்து வில்லுபாட்டு வேண்டுமானாலும் பாட கூறலாம். அப்படியே அதற்கும் ஒரு 400 பின்னூட்டங்கள் கிடைத்த மாதிரியும் இருக்கும்.

என்ன நான் சொல்வது?

பின் குறிப்பு:

இப்பதிவைப் படித்த பிறகு தமிழர்களுக்கு உரிய தன்மான உணர்வு - இவரும் தமிழ் நாட்டில் வாழ்வதால் - திரும்ப கிடைத்து இஸ்ரேல் புரியும் அநியாயத்தை எதிர்த்து "தனக்கும் இஸ்ரேலுக்கும் எவ்வித பூர்வ ஜென்ம பந்தமும் இல்லை" எனக் கூறி இஸ்ரேலை கண்டித்து ஒரு பதிவிட்டு விட்டால்............... விட்டால் என்ன?

ஹ்ம்.... அப்படி நடக்கும் என்கிறீர்கள்?

நடக்கட்டும். அப்புறம் பார்க்கலாம்.

15 comments:

  1. பார்க்க: http://sankermanicka.blogspot.com/2006/08/blog-post_115504574536038363.html

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  2. உங்களின் இன்றைய பதிவு படித்தும், அதனுடன் உள்ள போட்டோவும் பார்த்து லெபனின் மக்கள் படும் கஷ்டம் உலக மக்கள் எல்லாருக்கும் பெரிய ஒரு மன சஞ்சலம் ஆகிக்கொண்டு இருக்கும் இந்த வேளையில் நாளுக்கு ஒரு அறிக்கை
    (நமது முந்தைய முதல் அமைச்சர் அம்மையார் மாதிரி) விட்டுக்கொண்டு இருக்கிறார் உலக சமாதான தூதன்
    அமெரிக்காவின் அதிபதி புஷ்.

    தற்போழுது உலக மக்களுக்கு சரியாக புரிந்து கொண்டு இருக்கிறது. ஆனால்
    உலக நாடுகள் இதுவரை வேடிக்கை பார்த்து கொண்டு இருக்கிறது. சனியன் ஐக்கிய நாட்டு சபையும் வேடிக்கை
    தான் பார்த்துக்கொண்டு இருக்கிறது.
    எதற்கும் ஒரு முடிவு உண்டு. அது நிச்சயமாய் உண்டு.

    அன்புடன்
    அசலம் ஒன்

    ReplyDelete
  3. அன்பு இறை நேசன்,
    தாங்கள் இஸ்லாமியர் எனக் கருதப் படும் தீவிரவாதிகள் இஸ்லாத்தின் பெயரில் செய்யும் தீவிர வாத செயல்களுக்கெதிராய் பதிவு போட்டிருப்பேர்கள் என நம்புகிறேன். முடிந்தல் அதன் சுட்டியை அளிக்கவும்.

    இஸ்ரேயலின் அத்துமீறலும் அமெரிக்காவின் செலக்டிவ் அம்னீசியாவும் சந்தி சிரிக்கும் விஷ்யங்களே என்பதில் சந்தேகமில்லை இருப்பினும் உலகை கொழுந்துவிட்டெரியச் செய்யும் இன்னுமொரு நிஜம் உலகளாவிய தீவிரவாதம்.

    தமிழகத்தில் பயிற்சி அளிக்கப்படுவது வற்றியெல்லாம் என்ன நினைக்கிறீர்கள். இதையெல்லாம் நீங்கள் கண்டிக்கவேண்டாமா? இல்லை பார்ப்பன ஊடகங்கள் தவறான செய்தியைத் தருகின்றன என்பதையாவது ஆதாரத்துடன் நிருபிக்க முனையலாமே.

    ReplyDelete
  4. //எதற்கும் ஒரு முடிவு உண்டு. அது நிச்சயமாய் உண்டு.//
    ஆம்! அதற்காக அந்த வல்லோனிடம் இருகரமேந்தி இறைஞ்சுவோம். அவனுடைய தீர்ப்பு வரும்போது அநியாயத்துக்கு துணைபோகின்றவர்களும் பதில் சொல்ல வேண்டி வரும்.

    ReplyDelete
  5. இதயம் பிழியும் சோகம். எதுவும் செய்யத் திரணியற்ற உலகம். என்ன கொடுமையிது...

    ReplyDelete
  6. கருப்புAugust 9, 2006 at 6:58 PM

    //விடாது கறுப்பு மொழிந்தது போல் மிருக வர்க்கத்தில் சேர்த்தால் அந்த மிருகங்களுக்கே அது இழுக்காகி விடும்.//

    அந்த மிருகங்களைவிடவும் கீழானவர்களை நான் ஜோக்கர்கள் என்ற லிஸ்டில் சேர்த்ததும் தவறோ என்று எண்ணுகிறேன். குழந்தைக்கு தெரியுமாங்க ஜாதியும் மதமும்? அவர்களையே கொல்லும் இஸ்ரேல் ஒரு நாடு? அதற்கு துணைபோகும் கால்கரி, வக்ரா, தோண்டு இதெல்லாம் ஒரு பொழப்பு! த்த்தூ!!!

    ReplyDelete
  7. கருப்புAugust 9, 2006 at 6:59 PM

    //விடாது கறுப்பு மொழிந்தது போல் மிருக வர்க்கத்தில் சேர்த்தால் அந்த மிருகங்களுக்கே அது இழுக்காகி விடும்.//

    அந்த மிருகங்களைவிடவும் கீழானவர்களை நான் ஜோக்கர்கள் என்ற லிஸ்டில் சேர்த்ததும் தவறோ என்று எண்ணுகிறேன். குழந்தைக்கு தெரியுமாங்க ஜாதியும் மதமும்? அவர்களையே கொல்லும் இஸ்ரேல் ஒரு நாடு? அதற்கு துணைபோகும் கால்கரி, வக்ரா, தோண்டு இதெல்லாம் ஒரு பொழப்பு! த்த்தூ!!!

    ReplyDelete
  8. கருப்புAugust 9, 2006 at 6:59 PM

    //விடாது கறுப்பு மொழிந்தது போல் மிருக வர்க்கத்தில் சேர்த்தால் அந்த மிருகங்களுக்கே அது இழுக்காகி விடும்.//

    அந்த மிருகங்களைவிடவும் கீழானவர்களை நான் ஜோக்கர்கள் என்ற லிஸ்டில் சேர்த்ததும் தவறோ என்று எண்ணுகிறேன். குழந்தைக்கு தெரியுமாங்க ஜாதியும் மதமும்? அவர்களையே கொல்லும் இஸ்ரேல் ஒரு நாடு? அதற்கு துணைபோகும் கால்கரி, வக்ரா, தோண்டு இதெல்லாம் ஒரு பொழப்பு! த்த்தூ!!!

    ReplyDelete
  9. கருப்புAugust 9, 2006 at 7:00 PM

    //விடாது கறுப்பு மொழிந்தது போல் மிருக வர்க்கத்தில் சேர்த்தால் அந்த மிருகங்களுக்கே அது இழுக்காகி விடும்.//

    அந்த மிருகங்களைவிடவும் கீழானவர்களை நான் ஜோக்கர்கள் என்ற லிஸ்டில் சேர்த்ததும் தவறோ என்று எண்ணுகிறேன். குழந்தைக்கு தெரியுமாங்க ஜாதியும் மதமும்? அவர்களையே கொல்லும் இஸ்ரேல் ஒரு நாடு? அதற்கு துணைபோகும் கால்கரி, வக்ரா, தோண்டு இதெல்லாம் ஒரு பொழப்பு! த்த்தூ!!!

    ReplyDelete
  10. கருப்புAugust 9, 2006 at 7:00 PM

    //விடாது கறுப்பு மொழிந்தது போல் மிருக வர்க்கத்தில் சேர்த்தால் அந்த மிருகங்களுக்கே அது இழுக்காகி விடும்.//

    அந்த மிருகங்களைவிடவும் கீழானவர்களை நான் ஜோக்கர்கள் என்ற லிஸ்டில் சேர்த்ததும் தவறோ என்று எண்ணுகிறேன். குழந்தைக்கு தெரியுமாங்க ஜாதியும் மதமும்? அவர்களையே கொல்லும் இஸ்ரேல் ஒரு நாடு? அதற்கு துணைபோகும் கால்கரி, வக்ரா, தோண்டு இதெல்லாம் ஒரு பொழப்பு! த்த்தூ!!!

    ReplyDelete
  11. Please visit the following as well:

    http://sankermanicka.blogspot.com/

    ReplyDelete
  12. இறைநேசன்,

    உங்களது பதிவின் மனிதநேயமும், படங்களுமாக இதயத்தை பிழிகிறது. மனிதநேயத்துடன் சிந்திக்க, செயல்பட மதங்களை கடந்த பார்வை அவசியம் என எண்ண வைக்கிறது. கொடுமையான யுத்தத்தில் அன்றாடம் செத்தும், பிழைத்துமாக வாழ்கிற இந்த அபலைகளின் வாழ்வில் விடியலுக்காக குரல் கொடுக்காமல் மனிதநேயம் சுருங்கிப்போனதா இவ்வுலகில்? வருந்துகிறேன், வேதனையடைகிறேன்.

    இஸ்ரேல், லெபனான் பற்றி ஒரு பதிவு சில நாட்களாக எழுதிவருவதை வெகுவிரைவில் உங்களது குரலுடன் இணைத்துக்கொள்கிறேன். நீதிக்காக குரெலெழுப்ப எந்த அடையாளமும் தேவையில்லை. Neo-Natioalism, Neo-conservative கொள்கைகளில் ஊறிய மனிதர்களின் ஆதிக்கம் உலகை ஆட்டிப் படைப்பது கண்கூடாக தெரிகிறது. மனித உயிர்களுக்கு ஈடாக எதை தர முடியும்?

    ReplyDelete
  13. கருத்து கூறிய அனைவருக்கும் மிக்க நன்றி.

    முக்கியமாக சகோதரர் டோண்டு அவர்களுக்கும், சகோ. மியூஸ் அவர்களுக்கும்.

    அநியாய அக்கிரமங்களுக்கு எதிரான தங்களுடைய நிலைபாடுகளை தெளிவாக வெளிக்காட்டியமைக்கு.

    குறிப்பாக சகோ. டோண்டு ஆகா மிக அருமையான தன்னிலை விளக்கமும் கருத்தும் அளித்தமைக்கு.

    ஆரியம் என்பது எவ்வளவு கீழ்தர,வக்கிர மனப்பான்மையுடையது என்பதையும் அது யூத இரத்தத்தில் வந்தது தான் என்பதையும் தெளிவாக புரிய வைத்தமைக்கு நன்றிகள்.

    இறை நேசன்

    ReplyDelete
  14. ஹிஸ்புல்லாவின் 420 வேலைகளுக்கு நன்றாக காவடி தூக்கிவிட்டீர்கள் இறைநேசன்.

    அது எப்படி செத்த குழந்தைகளை வைத்து கதை,வசனம்,திரைகதை எல்லாம் எழுதி ஒரு propaganda படம் எடுக்க "முஸ்லிம்" என்று அழைத்துகொள்ளும் ஹிஸ்புல்லா மிருங்களுக்கு மனசு வருகிறது!

    ராக்கெட்டு ஏவுவதற்க்கு கூட ஆஸ்பத்திர் மாடிகளையும், பள்ளிகூட மைதானங்களையும் தேடிசெல்லும் ஹிஸ்புல்லாவுக்கு காவடி தூக்கி என்ன நடந்தவிட போகிறது இறைநேசன்?

    உங்கள் புரட்டை உலகம் அறியவில்லை என்று நினைத்துகொண்டு இருக்கிறீர்கள்?

    ReplyDelete
  15. //ராக்கெட்டு ஏவுவதற்க்கு கூட ஆஸ்பத்திர் மாடிகளையும், பள்ளிகூட மைதானங்களையும் தேடிசெல்லும் ஹிஸ்புல்லாவுக்கு காவடி தூக்கி என்ன நடந்தவிட போகிறது இறைநேசன்?//

    விமானத்தில் வந்து குடியிருப்பு, சாலை, பாலங்கள், குடிநீர் சேகரிப்பு நிலையங்கள், மின்வசதி என அனைத்து பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளின் மீது சரமாரியாக குண்டு மழை பொழியும் இஸ்ரேலின் அக்கிரமத்தை நேரிட ஒரு விமானம் கூட கையில் இல்லாத ஹிஸ்புல்லாவினர் உயரமான கட்டடங்களை கூட நாடக் கூடாதாம்.

    அவ்வளவு தைரியசாலிகள் விமானம் கைவசமில்லாத எதிராளியை வீழ்த்த தமிழ் பட சூப்பர் ஹீரோக்களைப் போல் நேருக்கு நேர் தரை மார்க்கமாக போரிட வேண்டியது தானே.

    இது தான் இந்த சியோனிச அக்கிரமக்காரர்களின் சாமர்த்தியம். அதற்கு வக்காலத்து வாங்க இங்கே ஒரு கூட்டமும்.

    இந்த பதிவின் நோக்கம் ஹிஸ்புல்லாவிற்கு வக்காலத்து வாங்குவதல்ல. கடித்து குதறப்பட்ட இளம் பிஞ்சுகளின் முகத்தை கண்ட பின்னரும் கூட இஸ்ரேலின் கொடூர முகத்துக்கு காவடி தூக்கும் கும்பலை என்ன சொல்ல.

    உங்கள் புரட்டை உலகம் அறியவில்லை என்று நினைத்துகொண்டு இருக்கிறீர்கள்?

    நன்றாகவே தற்போது அறிந்து கொண்டு தான் இருக்கிறது - யார் அக்கிரமக்கார மிருகங்கள் என்பதை.

    இறை நேசன்

    ReplyDelete