Monday, March 27, 2006

வந்தேறிக் கூட்டத்தின் புதிய கண்டுபிடிப்பு!

மஹாஜனங்களே...!
சகோதரர் கால்காரி சிவா அவர்கள் அரேபியாவிற்கு போனாராம். இந்தியாவிலிருந்து தினம் தினம் போய்க் கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான இந்தியரைபோல நாலு காசு பார்ப்பதற்காகவும், அங்குள்ள அரபிகள் இவர் செய்யும் வேலைக்கு அதிக கூலி தருவதால் (பாயிண்ட் நம்பர் 1. உழைப்புக்கு ஊதியம் அதிகம்). பெட்டி படுக்கை இத்யாதிகளுடன் போய் இறங்கினாராம். அங்கு போனவுடன் அங்குள்ள அரபிகளில் 99 சதவீதம் பேரும் மஹா அயோக்கியர்கள் என்று கண்டு கொண்டாராம். உடனே என்ன செய்தார் என்று நினைக்கிறீர்கள்? பெட்டி படுக்கையுடன் அடுத்த விமானத்தில் ஊருக்கு வந்து, "ஆஹா.... இங்கு பொறியாளராய் வேலை செய்வதை விட இந்தியப்பெரு நகரங்களில் போய் பிச்சை எடுக்கப் போகிறேன்" என்று ஊருக்கு போய் விட்டார் என்று தானே ?.

இல்லை ஐயா இல்லவே இல்லை!.

முடிந்த மட்டும் இந்த சுதந்திரமில்லா சொர்க்கத்து வசதியையும் பணத்தையும் வருடங்களாக அறுவடை செய்துகொண்டார். அப்புறம் வசதியாக ஒரு மூலையில் போய் உட்கார்ந்து கொண்டு ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்கிறார்.

சின்ன வயதில் படித்த ஒரு கதைதான் ஞாபகம் வருகிறது. ஒரு திருடன் தேங்காய் திருட தென்னை மரத்தில் ஏறினானாம். பகுதி இறங்கும்போது வீட்டுக்காரன் பார்த்துவிட்டானாம்.

"டேய் திருடா, எங்கேடா ஏறுகிறாய்?."

"ஐயா புல்லு பறிக்க ஏறினேன் ஐயா ..! "

"மடையா தென்னை மரத்தில் ஏதடா புல்லு?"

"யோவ், அதனாலதானே இறங்கறேன் ..!" என்றானாம் திருடன்.

ஆரம்பிக்கும் பொழுது "இஸ்லாமிய வெறுப்பு" காரணமில்லை என்று விட்டு, ஹிந்துத்துவ பார்ப்பன வெறி மலர் மன்னன், நேச குமார், டோண்டு போன்ற இஸ்லாத்தின் மீது காறித்துப்ப வேண்டும் என்பதை மட்டுமே நோக்கமாக கோண்ட பார்ப்பன அடிவருடி சங்க்பரிவார கும்பலை பின்னூட்டத்தில் அனுமதித்து அதற்கு ஏற்றாற் போல் ஜல்லி அடித்துக் கொண்டிருப்பதிலிருந்தே தெரிகிறது - "இஸ்லாமிய வெறுப்பு காரணமில்லை" என்ற இவருடைய வாக்கியத்தின் நம்பகத்தன்மை.

சில நேரங்களில் இவர்களுக்கெல்லாம் "விடாது கருப்பு" பாணியில் பதிலிட்டால் தான் மண்டையில் ஏறும் போல் தெரிகிறது!.

சரி போகட்டும்....!

நம்முடைய "பெண்கற்பு புகழ்" சகோதரர் டோண்டு அவர்கள் சொன்னது போல சில அரேபியர்களுக்குத் திமிர் கொஞ்சம் அதிகம்தான். திமிர் என்பது ஐயங்கார் வாளுக்கு மட்டுமே சொந்தமா என்ன?

என்ன ஒரு வித்தியாசம் பாருங்கள். அவன் திமிர் செல்வத்தால் ஆனது. மதத்தினால் அல்ல. இந்த டோண்டு அய்யங்கார் வகையறாத்திமிரோ......? நான் மட்டும் என்னுடைய மதத்திலேயே உள்ளவனை மலம் சுமக்கவும் எனக்குத் தலைமுறை தலைமுறையாய் அடிமை செய்யவும், பெண்டாளவும், பெண்கள் மார்பு மறைத்தால் தண்டனை கொடுத்து மறைக்க விடாமல் செய்து ஜொள்ளுவிடவும் வகைச் செய்யும் மதத்திமிர். இப்பொழுதுதான் சகோதரர் தங்கமணி போன்றோர்கள் சிந்திக்க தொடங்கியுள்ளார்கள். இருக்கட்டும்.

அரேபியாவில் எல்லா நாடுகளையும் போல் எல்லாவித மனிதர்களும் உள்ளனர் என்ற சாதாரண உண்மை மெத்த படித்த மேதாவிகளுக்கே கூட தெரியவில்லை. சிவாவுடன் வேலைசெய்யும் அறபி சென்னையில் கால்காரி சிவா வீட்டில் தங்க மறுத்து ஸ்டார் ஒட்டலில் தங்கிவிட்டானாம். அது அவருக்கு அவமானமாகப் போயிற்றாம். அடா! அடா! அடா! ஒரு தடவை அறபி இவர் வீட்டில் தங்க மறுத்த அவமானத்தை பொறுக்க முடியவில்லை இந்த மானஸ்த்தனால். ஆனால் காலம் காலமாக தலைமுறை தலைமுறையாக வீட்டு முற்றத்தையே மிதித்தால் தீட்டு பட்டுவிடும் என்று ஒரு சமூகத்தையே அடக்கி ஆர்ப்பரித்த இந்த கைபர் போலன் கணவாய் வழி ஆடு மேய்த்து வந்த வந்தேறி கூட்டத்திற்கு – வாழ்க்கை முழுவதும் அவமானமே ஆகிப்போன எளியோர்களின் மனக்காயம் எப்படி இருக்கும் என்று உணர கிடைத்த அடியாகவோ அல்லது வாய்ப்பாகவோ தானே இந்த டோண்டு வகையறாக்கள் இந்த நிகழ்வை எடுத்துக்கொள்ள வேண்டும்?. அப்படி ஒரு அடி கொடுத்து இந்த பார்ப்பன கூட்டத்தை சிந்திக்க வைத்த அந்த அறபிக்கு ஒடுக்கப்பட்ட மக்களே நன்றி சொல்லுங்கள். (உண்மையிலேயே மதத்தின் பெயரால் மற்றவர்களை அடக்கி ஒதுக்கிய இந்த பார்ப்பன கூட்டத்தைச் சேர்ந்த டோண்டு & கோவிற்கு ஒதுக்கப் படுவதால் மனதில் ஏற்படும் காயத்தின் வலியினை உணர்ந்திருந்தால்)

சரி, அப்படியே 99 சதவீதம் அறபிகளும் கொடுமையானவர்களாக இருக்கட்டுமே. (இதில் எந்த அளவு உண்மை என்பது தினமும் ஆயிரக்கணக்கில் இந்த சுதந்திரமில்லா சொர்க்கபூமியில் வந்து இறங்கும், இறங்க காத்துக்கொண்டிருக்கும் இந்திய - சகோதரர் டோண்டு அவர்களின் மொழியில் சொன்னால் துரதிஷ்டசாலிகள் - குடிமகன்கள் சாட்சி). அது நியாயவான்களுக்கு மட்டுமே சொல்லத்தகுதி உடையதல்லவா? நான் என் சகோதரனை அன்னியப்படுத்துவேன். அவனை மலம் சுமக்கச் சொல்வேன். அவன் வைக்கும் சாப்பாட்டை உதறித்தள்ளுவேன். அவன் என் மதத்தவனாயினும் நான் வழிபடும் தெய்வத்தின் அடுத்துச் சென்றால் தீட்டுக்குப் பரிகாரம் செய்வேன். தேவைப்பட்டால் ஈயத்தை காய்ச்சி காதில் ஊற்றுவேன். அவன் தோலையும் பசுத்தோல் போல் உரிப்பேன். என்னுடைய ரேஞ்சுக்கு உயர ஏதாவது குறுக்கு வழிகள் மூலம் அவன் முயற்சி செய்தால் ராம ராஜ்ஜியத்தினை கொண்டு வந்து அந்த ராமரைக் கொண்டே அவன் தலையையும் வெட்டுவேன். உயிரோடு அப்பாவிகளை தீயிலிட்டுக்கொளுத்துவேன். பாவமறியா பிஞ்சு மதலைகள்(அது கர்ப்பத்தில் இருந்தாலும்) உட்பட. இவை எல்லாம் என் வேதத்திலுமிருக்கிறது. (கவனிக்க இப்படிப்பட்ட எந்த நல்ல(!) காரியங்களும் இந்த சு.சொ. பூமியின் அறபிகளுக்கிடையில் மதத்தின் பெயரால் நடைபெறுவதில்லை.) அப்படிப்பட்ட பார்ப்பன் நான். என்னையும் என் அடிமையையும் இந்த அறபிகள் எப்படி ஒன்றாக நடத்தலாம்?. இந்த வயித்தெரிச்சலில் தானே அந்த ஒப்பாரி. எனக்கு இரண்டு காலிலும் யானைக்கால். நான் ஒருவிரலில் வீக்கமுள்ளவனை குறை கூறுவது முட்டைக்கு மயிர் பிடுங்கும் மூடத்தனமல்லவா?

அந்த கேடுகெட்ட(இவர் சொல்வது உண்மையெனில், அவனுக்கு இதை விட மோசமான வார்த்தைகள் தான் பயன்படுத்த வேண்டும்) அறபிக்கு துணை நடிகையின் கற்பு மலிவாக கிடைத்ததாம். அதாவது அவன், அவன் நாட்டில் இப்படி செய்தால் சவுக்கடி(திருமணம் புரிந்தவன் எனில் சாவு)க்கு பயந்து இங்கு வந்து விபசரித்திக்கிறான். இவர் கூற்று உண்மையாயிருக்கும் பட்சத்தில், அவன் குற்றம் செய்திருக்கிறான். அல்லது நாம் அவனை குற்றம் செய்ய அனுமதித்திருக்கிறோம். அதற்கு அவனுக்கு இங்கு வாய்ப்பு இருந்திருக்கிறது. நம்முடைய இந்திய சகோதரியின் கற்பு அவனுக்கு மலிவாக கிடைத்திருக்கிறது வாங்கிகொண்டான். ஏன் பிரேமானந்தாவிற்கு இதைவிட மலிவாக கிடைத்ததே அவர் வாங்கவில்லையா?. டாக்டர் பிரகாஷுக்கு குடும்ப கற்பெல்லாம் கூட கிடைத்ததே? என்ன கொஞ்சம் காஸ்ட்லி. ஏன் பெரியவாளின் காஞ்சி மடத்திலும் அவாள் கற்பெல்லாம் நர்த்தனம் புரிந்ததாமே? எனக்கு தெரியாதையா நக்கீரனார் சொன்னார். ஆக இங்கு கற்பு கத்தரிக்காயைவிட மலிவு, அதனால் வாங்கிகொண்டான். அவன் நாட்டில் நினைத்தாலே சவுக்கடி. இங்கு நினைக்கும் முன்னே அவனைப் போன்றவர்களின் முன் பிச்சைக் காசிற்கு ஆசைபட்டு, நம் சகோதரிகளின் கற்பினை கடை விரிக்க பெண் வயிற்றில் பிறக்காத காவேலிகள் ஏராளம். இப்பொழுது கூறுங்கள். நீங்கள் உண்மையிலேயே அந்த சகோதரிக்கு அனுதாபப்படுவதாயிருந்தால்...! அன்பரே வாருங்கள்...! வந்து (தேசியவாதத்தைக் குறித்து வாய் கிழிய பேசி அப்பாவிகளை ஏமாற்றும் பாகிஸ்தானில் பிறந்த ர(த்)த யாத்திரைப் புகழ் அத்வானிஜியும் கூறுவது போல்) நமது நாட்டுச் சட்டத்தை மாற்றச் சொல்லுங்கள். இந்த ஆயிரமாயிரம் சகோதரிகளும் அவர் குழந்தைகளும் ஜன்மத்துக்கும் நன்றியுடையவர்களாய் இருப்பார்களையா...இருப்பார்கள்.

எவ்வளவு சீக்கிரம் இதனை நாம் செய்கிறோமோ அவ்வளவுக்கு நமது சகோதரிகளின் கற்புக்கு பாதுகாப்பு கிடைக்கும். இல்லையெனில், அடுத்த முறை அறபி அல்ல அமெரிக்கன் வந்தாலும் கத்தரிக்காய்க்குப் பதில் கற்பைத்தான் வெகு இலகுவாக வாங்குவான்.

அரேபியாவில் கோயில் கட்டக் கேட்டிருக்கிறீர். ஒரு வாததிற்காக சரி என்று வைத்துக் கொண்டாலும், யாருக்கு கோயில்? எத்தனைக் கோயில்கள்? எப்படி நியாயப்படுத்துவது ?.

இது பார்ப்பானின் கோயில். இது தலித்தின் கோயில். தலித் பார்ப்பானின் கோயிலின் அருகிலேயே வரக்கூடாது. அவன் நான் ஓதும் வேதத்தை கேட்கக்கூடாது. கேட்டால் ஈயம் தான். ஆனாலும் இரண்டு பேரும் ஒரே மதம். நானும் இந்து, அவனும் இந்து(நிலை நிற்க முடியாத தருணங்களில் என் உடம்பில் காற்றுப் பட்டாலே தீட்டு என்று ஒதுக்கி வக்கப்பட்டவர்களையும் சேர்த்துக் கொண்டு தாங்கள் 2% என்பதை இந்து என்ற போர்வையில் எப்படி 85% ஆக மாற்றிக் காட்ட முயற்சிக்கிறார்கள் என்பதை சகோதரர் திருவாளர் டோண்டு அவர்களின் இப்பதிவிற்கான பின்னூட்டம் சென்று கவனியுங்கள்). இந்த லாஜிக்கை அறபிக்கு புரியவைக்க ஆண்டுகள் பல ஆகும். அதற்கிடையில் முதலில் வெளிப்படையாக பூணூலை அறுத்தெறியுங்கள். தலித் மக்களை ஆரத் தழுவிக்கொள்ளுங்கள்(உண்மையாக மாரோடு மார் சேர்த்து கூடப் பிறந்த சகோதரனைத் தழுவது போன்று). சிவனின் கோயில் சிலையை ஒரு மலம் சுமப்பவனை கொண்டு பிரதிர்ஷ்டை செய்யுங்கள். முடிந்தால் ஒருமுறையாவது என் தாழ்த்தப் பட்ட சகோதரனின் வீட்டு மலத்தினை அவாள்களைக் கொண்டு அள்ள வையுங்கள்.அப்போது ஒரு வேளை அரேபியாவில் கோயில் வேண்டும் என்றால் அதை அறபிக்கு இலகுவாக புரிய வைக்கமுடியும்.

இவர்கள் வயிற்றெரிச்சல் வேறொன்றுமில்லை. எனக்கு அடிமையாகப்பிறந்தவன் எப்படி அறேபியாவுக்குப் போய் சம்பாதிக்கலாம். மலம் சுமக்கப் பிறந்தவன் எப்படி மணம் கமழ நடமடாலாம். இந்த ஜன்மங்கள் பணம் பண்ணினாலும் பரவாயில்லை ஐயா. இங்கு வந்து
சரிசமமாக நடக்கிறான்கள். மதம் மாறிவிட்டு குல்லாவும் லுங்கியும் அணிந்து இந்தத் துலுக்கனோடு சரி சமமாக பள்ளிக்கு போகிறான்கள். அட தேவுடா...இனி நாம மடிசார அவுத்து முக்காடு போட்டு மூலையில் உக்காரவேண்டுமே என்ற பயம்.

அப்புறம், இங்கு(சு.சொர்க்கத்தில்) எல்லோரும் உத்தமர்களா? இல்லை. உலகில் எப்படி எந்த நாட்டிலும் எந்த சமூகத்திலும் எப்படி எல்லோரும் உத்தமர்களில்லையோ அப்படி இங்கும் இல்லை. எல்லா வித மனிதர்களும் மனித இயல்புகளும் இங்கும் உண்டு. அனால் இங்கு சமூக அவலங்கள் இல்லை. மலம் சுமக்க தனிப்பிரிவு இல்லை. இந்தியனும் - அதில் பார்ப்பானாக இருந்தால் கூட – எகிப்தியனும் வங்காளியும் அமெரிக்கனும் ஐரோப்பாக்காரனும் கூட - அவன் தொழில் பாத்ரூம் சுத்தம் செய்வது என்றால் செய்துதான் ஆக வேண்டும். எந்த அரபியும் எந்த தலித்தையும் வீட்டுக்குள் விட மறுக்கவோ, கூட இருந்து உணவருந்தவோ தயக்கப்படமாட்டான். தீட்டு என்பது அவன் அகராதியிலேயே இல்லை.

அதனால் கனவான்களே...ஒரு வாய்ப்பு இந்த சு.சொ வர உங்களுக்குவர உங்களுக்கு கிடைத்தால் வாருங்கள். வந்து திரவியம் தேடுங்கள். இந்தப் பூச்சாண்டி காட்டுபவர் எல்லோருக்கும் கவலைப் படாதீர்கள். இவர்கள் அப்படித்தான் சொல்வார்கள். சொல்ல பணிக்கப் பட்டிருக்கிறர்கள். இது இந்த வகையறாக்களுக்கு இடப்பட்ட அஜெண்டா.

ஒரு விடயம் சரியா தவறா என்று இங்கு வரும் ஜனத்திரள்களைப் பார்த்து நீங்களே முடிவெடுத்துக்கொள்ளுங்கள். இவர்கள் கத்துவார்கள், கதறுவார்கள், மலர் மன்னன் போன்ற மானிடப்புழுக்களை துணைக்கழைப்பார்கள்.(மஹாத்மாவை சுட்டவனை பரிசுத்தமாக்கும் இந்தப் பதரை புழு என்றால் புழுக்களுக்கல்லவா அவமானம். அதனால் தான் மானிடப்புழு என்கிறேன்.) இல்லாவிடில் தங்கமணி போன்ற அப்பாவிகளை நிலை நிறுத்துவது கடினமாகிவிடும்.

சரி அதெல்லாம் இருக்கட்டும். எனக்கு ஏன் அரேபியா மேல் இவ்வளவு பாசம் என்கிறீர்களா?

அட போப்பா! கைபர் போலன் வழி வந்தேறிய ஆரிய பார்ப்பனக் கூட்டத்தைச் சேர்ந்த சகோதரர் "பெண் கற்பு புகழ்" டோண்டு அவர்களுக்கே ஒரு காரணமும் இன்றி உலகின் இன்றைய பிரச்சனைகளுக்கெல்லாம் ஆதிமூலம் இஸ்ரேல் மீது அளவில்லா பாசம் இருக்கும்போது(ஒரு வேளை இவர்கள் உலக நாச காரணி யூதப் பரம்பரையினராக இருக்குமோ?), எனக்கு கீழ்க்கண்ட காரணிகளுக்காக அரேபியா மீது பாசம் இருக்கக் கூடாதா என்ன?

எத்தனையோ ஏழை எளிய மக்களை செல்வந்தராக்கியிருக்கிறது இந்த மண். எத்துணையோ தாழ்த்தப் பட்டவருக்கு சுதந்திரம் கொடுத்திருக்கிறது இந்த மண். சுதந்திரம் என்றால் கல்காரியின் சுதந்திரம் அல்ல. அடிமைத்தளைக்கு சுதந்திரம். ஜன்மத்திற்கு சுதந்திரம். பிறவிக்கு சுதந்திரம். எத்தனையோ காட்டுமிராண்டித்தனதிற்கு ஆப்பு வைத்திருக்கிறது இந்த மண். எத்தனையோ குடும்பத்திற்கு விளக்கேத்தியிருக்கிறது இந்த மண். என் தாய் நாட்டிற்கு பெரிய அளவில் அந்நியச்செலவாணியை கொடுத்திருக்கிறது இந்த மண். உங்கள் ஊரில் கொஞ்சம் காலாற நடந்து போய் பாருங்கள். வளை குடாவில் சம்பாதித்த/சம்பாதிக்கும் எளியோரை கணிசமாக காணலாம்.

எல்லாவற்றிற்கும் மேலாக ஐந்தாறு தலை முறைகளுக்கு முன்னால் பறையனாகவோ , பள்ளனாகவோ, புலையனாகவோ, சூத்திரனாகவோ இருந்த என் முப்பாட்டனை மனம் மாற்றி தன்னகத்தே கொண்டு வந்து இன்று என்னை எந்தக்கொம்பனுக்கும் எந்தவித அந்தஸ்திலும் குறைந்தவனில்லை என்று மார் தட்டி, தோளுயர்த்தி, முரசு கொட்டி(ச்சே! கொஞ்சம் உணர்ச்சி கூடுதலாய் போயிற்றோ... ? சரி பரவாயில்லை விடுங்கள்..!)மனிதனாக வாழவைத்த வாழவைக்கும் என் இனிய இஸ்லாம் தோன்றிய இடம். எனது தாய் நாட்டிற்கு அடுத்து நான் மிகவும் நேசிக்கும் நாடு.

இது போதாது - எந்த கேடுகெட்ட அறபியாவது என்ன ஈனத்தனமான செயல்கள் செய்திருந்தாலும் அம்மண்ணை நேசிக்க!

Wednesday, March 22, 2006

சாதிப் பிரிவினைக்கு யார் காரணம்?

சகோதரர் மகேஸ் அவர்கள் சகோதரர் குலசை அவர்களின் தேவை மனமாற்றமா? மதமாற்றமா? என்ற பதிவில் சில கருத்துக்களை வைத்திருந்தார். வந்தேறி பிராமணர்களை அப்பாவிகள் போன்றும், இந்நாட்டின் பூர்வீக மக்களை(தலித்) கூத்தடிப்பவர்கள் போன்றும் அவர் பதில் சித்தரித்ததால் அவருக்காக இப்பதிவு.


சகோதரர் மகேஸ் அவர்களே!

நீங்கள் வந்தேறி ஆரிய பார்ப்பன ஆதிக்க கூட்டத்தைச் சேர்ந்தவர் இல்லை எனில் எதற்காக அவாள்களை குறித்து எழுதியவுடன் உங்கள் மனம் பதறுகிறது எனத் தெரிந்து கொள்ளலாமா? நடுநிலை எனில் சாதியை தோற்றுவித்து அதன் விளைச்சலில் குளிர்காயும் அவாள்களுக்காக இரங்கும் உங்கள் மனம், அதே போன்று அவாள்கள் தான் அச்சாதியை தோற்றுவித்தனர் என்பதையும் கூறி சாடாதது ஏன்?

//ஆனால் பார்ப்பணன் தான் சாதி வெறிக்குக் காரணமா? இல்லை.வேறு சில சாதியினர் தான் இப்படிச் செய்கின்றனர். பாப்பாப்பட்டி,கீரிப்பட்டி அவலங்களுக்கு பார்ப்பணன் தான் காரணமா? இல்லை.//

இந்த வாக்கியங்களில் உங்கள் மனநிலை தெளிவாக தெரிகிறது. பார்ப்பனன் தான் சாதி வெறிக்கு காரணமா? பாப்பாப்பட்டி, கீரிப்பட்டிக்கு பார்ப்பனன் காரணமா எனில் நிச்சயமாக ஆம் என்று தான் கூற வேன்டும். வேறு சில சாதியினர் தான் இதனைச் செய்கின்றனர் என்கிறீர்களே, அந்த வேறு சில சாதியினரை நீ இன்ன சாதி, நீ இன்ன சாதி என்று சகோதரர்களாக வாழவேண்டிய இந்நாட்டு மக்களைப் பிரித்து அதில் தன்னை மட்டும் உயர்ந்தவனாக, மற்றவர்களிலிருந்து மேன்மையானவனாக வைத்து அந்த சாதியையே தோற்றுவித்தவன் இந்த வந்தேறி பார்ப்பனன் அல்லாமல் வேறு யார்?

நேற்றைய விதையில் இன்று அவன் சுகிக்கும் விளைச்சல்கள் தான் பாப்பாப்பட்டிகளும் கீரிப்பட்டிகளும். இல்லை நான் தெரியாமல் தான் கேட்கிறேன் - எந்த பார்ப்பனன் தான் அரங்கேற்ற நினைக்கும் அநியாயங்களில் நேரடியாக கலந்து கொண்டான். அன்று ஓர் சம்புகன், சூத்திரன் என்பதால் அவன் செய்யும் தவத்தின் பலனால் அவனுக்கு கிடைத்தற்கரிய மோட்சம் கிடைத்து விடக் கூடாது என்பதற்காக அவனை கொலை செய்ய திட்டமிட்ட பார்ப்பன வெறிக் கூட்டம் அந்த அனியாயத்தை அவர்கள் கை கொண்டா செய்தார்கள்(எதற்காக ராம ராச்சியம் என்று ஓலமிடுகிறார்கள் என்பது புரிகிறதா?). இல்லையே. இன்றும், மாறி வரும் உலகில் - இந்தியாவில் தாங்கள் ஒதுக்கப் பட்டு விடுவோம் என்று அறிந்தவுடன் எப்படியாவது தங்களுடைய திட்டத்துக்கு அன்று ஒத்துழைத்த அதே ராமனின் ஆட்சியை இங்கு கொண்டு வர அதே ராமனின் பெயர் கூறிக் கொண்டு திட்டமிட்டு பாபர் மசூதியை இடித்தார்களே. இதையும் அவாள்களா அவாள் கைக் கொண்டு செய்தார்கள். இல்லையே. காலம் காலமாக நாட்டில் இவர்கள் அரங்கேற்றும் எந்த அட்டூளியங்களில் தான் அவாள்கள் நேரடியாக ஈடு பட்டார்கள். எல்லாம் மற்றவர்களை தூண்டி விட்டு செய்தது தானே. இது தான் அவாள்களின் சாமர்த்தியம். செய்ய வேண்டியதை செய்து விட்டு அமைதியாக ஒன்றும் தெரியாமல் அக்ரகாரத்தில் புகுந்து கொள்வது. பின் அறுவடை தானே கிடைக்கும். அந்த வகை தான் இந்த சாதி பிரிவினையும்.

//இட ஒதுக்கீட்டால் தகுதியான ஏழைப் பிராமணர்கள் பாதிக்கப்பட்டார்கள் //

வெறும் இரண்டு சதவீதம் இருக்கும் இவர்கள் நாட்டின் ஐம்பது சதவீதத்திற்கும் அதிகமான உயர் பதவிகளில் ஒட்டிக் கொண்டிருப்பது போதாதா? உங்களின் கரிசனை ஆகா பிரமாதம். இருக்கும் இரண்டு சதவீத கூட்டம் முழுமையும் தகுதியானது தான். இல்லையென்று யார் சொன்னது. அப்படியே நாட்டை அவாள்களுக்கு எழுதி கொடுத்து விட வேண்டியது தானே! உங்களின் பரிதாபத்தை அப்படியே பாக்கி உள்ள 98 சதவீத மக்களின் மேலும் சற்று திருப்புங்கள்(பாவம் இதில் நீங்களும் உட்படுகிறீர்கள் என்பது கூட உங்களுக்கு புரியாத அளவிற்கு அவாள் பக்தி உங்கள் கண்ணை மறைத்து விட்டதா?)

//இட ஒதுக்கீட்டால் வேலைக்குத் தகுதியில்லாத தலித் மக்கள் கூத்தடிக்கிறார்கள் என்பதும் எனக்குத் தெரியும்//

சிறிது இந்நாட்டு மைந்தர்களும் கூத்தடிக்கட்டுமே மகேஸ் அவர்களே! நேற்று வரை பீ அள்ள மட்டுமே லாயக்குள்ளவன் என்று ஒதுக்கி வைக்கப்பட்டவனுக்கு எடுத்த எடுப்பில் தகுதி எங்கிருந்து வரும். ஆரம்ப தகுதி "பீ அள்ளல்" மட்டுமாகத் தான் இருக்கும். அதற்காக மீண்டும் அவனுக்கு பீ அள்ளல் வேலையையா கொடுக்கச் சொல்கிறீர்கள். சரி தகுதியைப் பற்றி பேசுகிறீர்களே இன்றைய இந்திய உயர் மட்ட பதவிகளை ஆக்ரமித்திருக்கும் வந்தேறி அன்னிய ஆரிய வர்க்கத்தில் எத்தனை பேருக்கு அப்பதவிகளுக்கான தகுதி இருக்கிறது என்பதை உங்களால் கூற முடியுமா? மிகுந்த கரிசனத்துடன் நடுநிலையாக(!) பேசும் நீங்கள் தகுதியில்லாமல் அப்பதவிகளில் அமர்ந்து கூத்தடிக்கும் பிராமணர்களை அதற்குண்டான தகுதி வரும் வரைக்கும் சிறிது காலத்துக்கு பீ அள்ளும் வேலைப் பார்க்க சொல்லுங்களேன். இட ஒதுக்கீடு என்பதே ஒதுக்கப் பட்டிருக்கும், தாங்கள் ஒன்றுக்கும் லாயக்கிலை, பீ அள்ள மட்டுமே லாயக்கு என்று மனதளவில் தன்னைத் தானே தாழ்த்திக் கொண்டிருக்கும் இந்நாட்டின் பூர்வீகக் குடிகளை மேலே கொண்டு வர, அவர்களும் மனிதர்களுக்கிடையில் மதிக்கப்பட்டு அவர்களின் தன்மானம் காக்கப்பட அரசாங்கத்தால் காட்டப்பட்டிருக்கும் ஒரு சிறந்த மாற்று வழி. அதனை மாற்றி விட்டு இந்நாட்டின் பூர்வீகக் குடிகளை எக்காலத்துக்கும் அடக்கி ஒதுக்கியே வைக்கவா நீங்கள் கூறுகிறீர்கள். சிறிது காலத்துக்கு அவர்களும் கூத்தடிக்கட்டும் சகோதரே! அவர்களுக்கு சொந்தமானதைத் தானே அனுபவிக்கிறார்கள். அனுபவிக்கட்டும் சற்று காலத்துக்கு. ஒரு தலை முறை கழியும் போது அவர்களுக்கும் வரும், நீங்கள் எதிர்பார்க்கும் தகுதி. அது வரைக்கும் அவர்களை கூத்தடிக்க விட்டு தான் தீர வேண்டும்.

//சாதியை ஒழிக்க வேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை.//

எனில் எப்படியென்று சற்று கூறி விட்டு, அதனை ஒழித்த பிறகு மேலே கூறியவைகளை நீங்கள் கூறியிருந்தால் நான் ஏற்றுக் கொண்டிருப்பேன். முதலில் அதனை எப்படி ஒழிப்பது என்பதற்கு ஒரு வழியைக் கூறுங்கள். அதன் பிறகு இட ஒதுக்கீடைக் குறித்தும் தலித் மக்களின் கூத்தடிப்புகளைக் குறித்தும் சர்ச்சை செய்வோம். உங்களுக்கு உண்மையில் சாதி ஒழிப்பினைக் குறித்து மாற்றுக் கருத்து இல்லாமல், ஆனால் எப்படி ஒழிப்பது என்று ஒரு வழியும் புலப் படவில்லையெனில் சகோதரர் தங்க மணி அவர்களின் இந்த பதிவினை பார்வையிடுங்கள். உங்களுக்கு ஏதாவது வழி புலப்படலாம்.

அன்புடன்
இறை நேசன்

Tuesday, March 7, 2006

இஸ்லாத்தில் பிரிவுகளா?

தன்னை யாரென்று வெளிப்படுத்திக் கொள்ள விரும்பாத (அனானி) சகோதரர் ஒருவர், சகோதரர் ஸாலிஹ் குலசை அவர்கள் இந்து மதத்திலிருந்து விடுபட்டு இஸ்லாமை வாழ்க்கை நெறியாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டதை அறிந்து, "சாக்கடைனு சொல்லி காலை எடுத்து ஆசிட்ல வெச்சிட்டிங்களே என்னத்த சொல்ல..." என்று மிகுந்த பரிவோடு(!) ஆதங்கப் பட்டிருந்தார்.

அதாவது, சகோதரர் ஸாலிஹ் அவர்களின் பரம்பரை மதமான இந்து மதத்தைச் "சாக்கடை" என்றும் அவர் தேர்ந்தெடுத்துக் கொண்ட இஸ்லாமை "ஆசிட்" என்றும் உவமித்திருந்தார்.
அனானி சகோதரர் அறிந்தோ அறியாமலோ இஸ்லாத்தினை "ஆசிட்" உடன் உவமை படுத்தியிருக்கிறார். என்னைப் பொறுத்தவரை அதனை மிகச் சரியான உவமைப் படுத்துதலாக கருதுகிறேன். அவரின் பின்னூட்டம் இஸ்லாமிய காழ்ப்புணர்வினைக் காட்டினாலும் அவரை அறியாமலேயே இஸ்லாத்தினை புகழ்ந்து கூறியிருக்கிறார்.

சகோதரரின் உவமை மிகவும் ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய ஒன்றாகும். தனி மனிதனுக்கும் முழுமனித சமுதாயத்திற்கும் அபாயம் + கேடு எதில் அதிகமாக உள்ளது? "சாக்கடையிலா?" அல்லது "ஆசிட்டிலா?" என்பதை ஆராய்ந்தால்,

ஆசிட்டை விட சாக்கடையில் தான் தனி மனிதனுக்கும் முழுமனித சமுதாயத்திற்கும் அபாயமும் பெருங்கேடும் மிக அதிகமாக உள்ளது. காரணம், ஆசிட்டைத் தவறான வழியில் தனக்கு உபயோகித்துக் கொண்ட ஒருவருக்கு மட்டுமே அபாயமும் கேடும் உள்ளன. ஆனால் சாக்கடை என்பது, அது பெருக்கெடுத்து ஓடுகின்ற பகுதியின் சுற்றுப்புற சூழல் முழுவதையும் மாசுபடுத்துவது மட்டுமல்லாது அந்தப் பகுதியில் வசிக்கும் மனிதர்களையும் மற்ற உயிரினங்களையும் பல்வகை நோய் கொண்டு தாக்குகின்றது. இதனால் மனித சமுதாயம் உடல் நலத்தையும் பொருளாதாரத்தையும் இழப்பதோடு பல நோய்களையும் விலையில்லாமல் வாங்கிக் கட்டிக் கொண்டு, தன்னைத் தானே மாய்த்துக் கொள்கின்றது. எனவே, பிறருக்கு எந்த நன்மையுமில்லாத தீமை மட்டுமே தரக்கூடிய சாக்கடையிலிருந்து தன்னையும் சுற்றுப்புறத்தையும் காப்பாற்றுவது தூய்மையை விரும்புவோரின் தலையாய கடமையாகும்.

இஸ்லாம் தூய்மையை விரும்புகிறது என்றும் சாக்கடையை அது சுத்தம் செய்ய முனைகிறது என்றும் சகோதரர் அனானி அவர்கள் மறைமுகமாக கூறியிருக்கிறார். அவருக்கு என் நன்றிகள். ஏனெனில் இஸ்லாம் தூய்மையை விரும்பும் மார்க்கமே( நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: தூய்மை ஈமானில்(நம்பிக்கையில்) பாதியாகும்).
நிச்சயமாக அது ஜாதி ஏற்றத் தாழ்வு என்னும் சாக்கடை முழுமையாக தூய்மையாகும் வரை அதனை தூய்மைப் படுத்திக் கொண்டே இருக்கும். அவ்வாறு சாக்கடை தூய்மையாவதின் அறிகுறிகள் தான் இன்றைய ஸாலிஹ் குலசைகள்.


மேலும், அனானி சகோதரர் தன் பின்னூட்டத்தில், "மற்ற மதங்களைப்போல் இஸ்லாமிலும் பல ஜாதி பிரிவுகள் உள்ளன" எனக் குறிப்பிட்டிருந்தார்.
ஒரு காலத்தில் இதுபோன்ற ஐயம் கலந்த நினைப்பு, பெரும்பாலோர் மனங்களிலும் இருந்தது. ஆனால் அந்த நினைப்பு தற்போது மலையேறிவிட்டது. மேலும் இந்த ஐயத்திற்கு, ஜாதி ஏற்றத் தாழ்வுகளை கண்டு மனம் பொறுக்காமல் கடவுளே இல்லை என்ற கருத்துடன் ஜாதியை எதிர்த்துப் போராடிய பெரியார் கூட அப்பொழுதே, "இன இழிவு நீங்க இஸ்லாமே நன்மருந்து" என விளக்கம் சொல்லிவிட்டார். அந்தத் தீர்வு, தொடர் அறுபடாமல் இன்றும் பலருடைய வாக்காலும் வாழ்க்கையாலும் உரத்துச் சொல்லப் பட்டுக்கொண்டே இருக்கும் பொழுது, அனானி சகோதரருக்கு மட்டும் காதிலும் கண்ணிலும் விழாதது விந்தையாக உள்ளது!. "நாங்கள் கேள்வி மட்டும் தான் கேட்போம்; அதற்கு யார்-என்ன பதில் சொன்னாலும் அதை நாங்கள் கண்டு கொள்ளவே மாட்டோம்; காது கொடுத்துக் கேட்கவே மாட்டோம்" என்ற சிந்தனையில் கண்ணை மூடிக் கொண்டு காறித் துப்புபவர்களின் காதுகளில் உண்மையை ஏற்றுவது கடினம் தான். என்றாலும் அந்தக் காறித் துப்பல்களை காண்பவர்கள் அதனை நியாயமானது தான் என தவறாக விளங்கிக் கொள்ளக் கூடாது என்பதற்காக ஒரு சிறு விளக்கம் மட்டும் இங்கு வைக்கின்றேன்:

ஒரு சரியான கொள்கை வகுக்கப் பட்டு இருக்கின்றது; அந்தக் கொள்கையை நடைமுறைப் படுத்துபவர், அதைப் பிழையாகவோ அல்லது அதற்கு எதிராகவோ நடைமுறைப் படுத்துகிறார் என்று வைத்துக் கொள்வோம். இப்போது, நடைமுறைப் படுத்தியவரைக் குறை சொல்வோமா? அல்லது கொள்கையைக் குறை சொல்வோமா? ஒரு உதாரணத்திற்கு அண்மையில் நமது பிரதமர் திரு. மன்மோகன் சிங் அவர்கள் செய்த ஒரு வரலாற்றுத் தவறை எடுத்துக் கொள்ளலாம்.

நமக்கு நட்பும் ஆதரவும் அளிக்கக் கூடிய ஒரு நாட்டுக்கு நாமும் நட்போடு நடந்து கொள்ள வேண்டும்; அந்நாட்டுக்கு ஆதரவு நல்க வேண்டும் என்பதே (நமது நாட்டின்) சரியான வெளிநாட்டுக் கொள்கை. ஆனால் நடந்தது என்ன? இந்திய சட்ட திட்டத்தின் படி ஆட்சி செலுத்துவதாக உறுதி மொழி அளித்து ஆட்சியேறிய திரு. மன்மோகன் சிங், நமது சரியான அயல் நாட்டுக் கொள்கைக்கு எதிராக முடிவெடுத்தார். இந்தியா ஐ.நா சபையில் ஈரானுக்கு எதிராக வாக்களித்தது. உலகில் உள்ள அத்தனை நல்ல உள்ளங்களும் இந்திய அரசின் இந்தச் செயலை எதிர்த்தன. ஆட்சேபணை செய்தன. இங்கு யாரும் இந்திய அரசின் அயல் நாட்டுக் கொள்கையை விமர்சிக்கவில்லை. திரு. மன்மோகன் சிங்கின் அரசைத் தான் விமர்சித்தன. காரணம் என்ன? வெளிநாடுகளோடு இந்தியா எப்படி உறவு வைத்துக் கொள்ளவேண்டும் என்று சட்டமும் கொள்கையும் தனியாக உள்ளது. அது விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட சரியான கொள்கை. பதவிக்கு வரும் கட்சிகள் அதனடிப்படையில்தான் நடந்து கொள்ள வேண்டும். ஆனால் அதற்கு மாற்றமாக டாக்டர் மன்மோகன் சிங் அவர்களின் அரசு செய்ததால் தான் மக்களால் அவருடைய அரசு விமர்சிக்கப்படுகின்றது.

அதுபோலவே இஸ்லாமிய மார்க்கத்திற்கு என்று சட்டமும் அதை நடைமுறைப்படுத்திய தூதரின் சரித்திரமும் தனியாக இருக்கிறது. அதனை பின்பற்றுவதாக கூறுபவர் அக்கொள்கையின் படி தான் நடக்க வேண்டும். அவற்றுக்கு மாற்றமாக யாராவது செயல் பட்டால் தவறு யார் மீது? இஸ்லாத்தின் மீதா? அல்லது அதனைப் பின்பற்றுவதாகக் கூறி உறுதி மொழி கொடுத்துவிட்டு அதற்கு மாற்றமாக செயல் படுவோர் மீதா? தவறாக செயல் படுவோரை விமர்சிக்காமல் இஸ்லாமை விமர்சிப்பது எவ்வகையில் நியாயம்.

சரி இனி ஜாதிகள்-பிரிவுகள் பற்றி இஸ்லாத்தின் கொள்கை என்ன என்பதைச் சிறிது பார்ப்போம்:

மனிதர்களே! உங்கள் இறைவனை அஞ்சி வாழுங்கள். அவன் தான் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான் . அவரிலிருந்தே அவருடைய துணையையும் படைத்தான்;. பின்னர் அவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்;. ஆகவே, அல்லாஹ்வை அஞ்சி வாழுங்கள் ……." (அல்குர்ஆன் 4:1) (இக்கொள்கையின் அடிப்படையில் உலகமே ஒரு குடும்பம் ஆகிறது. இஸ்லாம் எனக்கு இவ்வாறு போதித்ததால் தான் முகமறியாத உங்களைப் போன்றவர்களையும் கூட நான் சகோதரன் என்று அழைக்கிறேன்.)

மனிதர்களே! உங்கள் அனைவரையும் நிச்சயமாக நாம் ஓர் ஆண்-ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம். நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்வதற்காகவே கிளைகளாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம் (அவற்றால் ஏற்றத் தாழ்வு கற்பித்துக் கொள்வதற்கன்று). ஆகவே, உங்களில் இறைபக்தி மிகுந்தவர் தாம் அல்லாஹ்வின் பார்வையில் மிக்க கண்ணியமானவர் . (அல்குர்ஆன் 49:13)

உங்கள் அனைவரின் மூலக்கூறும் ஒன்றே. ஒரே ஆண் ஒரே பெண்ணிலிருந்து தான் உங்கள் இனம் முழுவதும் தோன்றியுள்ளது என்கிறன மேற்காணும் இறைவசனங்கள். மனித இனம் ஒரே இனமாக இருந்த போதிலும் மனிதர்கள் பல கிளைகளாகவும் கோத்திரங்களாகவும் பிரிந்து கிடப்பது, வாழும் வழி மற்றும் பேசும் மொழி போன்ற இயற்கையைச் சார்ந்த ஒன்றாகும். மனித இனம் பெருகப்பெருக எண்ணற்ற குடும்பங்கள் தோன்றுவதும் பிறகு பல பாகங்களுக்கு அவை குடிபெயரும்போது பல கிளைகளும் பல கோத்திரங்களும் உருவாவதும் தவிர்க்க முடியாத நிகழ்வுகளாகும். மனிதன் பூமியின் பல பகுதிகளில் வசிக்கத் துவங்கிய பின்னர் உடல் அமைப்பு, நிறம், மொழி, நடை-உடை பாவனைகள், வாழ்க்கை முறைகள் ஆகியன ஒன்றுக்கொன்று மாறுபட்டேயாக வேண்டியிருந்தது. ஒரே பகுதியில் வசிப்போர் ஒருவருக்கொருவர் நடை-உடை பாவனை உறவுகளில் நெருங்கியவர்களாகவும் வெகுதொலைவில் வசிப்போர் நெருக்கமற்றவர்களாகவும் இருக்க வேண்டிய நிலை இயல்பானதாகும்.

ஆனால் இந்த இயல்பான வேற்றுமை நம்மிடம் இருப்பதால் இவ்வேற்றுமையின் அடிப்படையில் உயர்ந்தவன்-தாழ்ந்தவன் , ஆண்டான்-அடிமை, மேலோன்-கீழோன் எனும் பாகுபாடுகள் தோற்றுவிக்கப்பட வேண்டும் என்பது அறிவீனர்களின் கருத்தாகும்.

இறைத்தூதர் அவர்கள் நிகழ்த்திய உரைகளில், சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தனது இறுதி உரையில் கூறினார்கள்: "மானிடரே! நிச்சயமாக உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்துதான் இறைவன் படைத்தான். மனித சமுதாயம் அனைத்தும் ஆதமுடைய சந்ததிகளே! ஆதமோ மண்ணிலிருந்து படைக்கப்பட்டவர். எனவே பிறப்பு, சொத்து ஆகியவற்றால் எவரும் உயர்ந்தவரோ தாழ்ந்தவரோ அல்லர். ஓர் அரபி, அரபி அல்லாத ஒருவனை விட உயர்ந்தவன் அல்லன். அவ்வாறே அரபி அல்லாத ஒருவன், ஓர் அரபியை விட உயர்ந்தவன் அல்லன்.

ஒரு வெள்ளையன், ஒரு கருப்பனை விட உயர்ந்தவன் அல்லன். அதேபோல் ஒரு கருப்பன் ஒரு வெள்ளையனை விட உயர்ந்தவன் அல்லன். மனிதர்களுக்குள்ள உயர்வெல்லாம் அவரவர்களின் இறை அச்சத்தைப் பொறுத்தே அமைந்திருக்கிறது''.


மக்காவை வெற்றி கொண்டபோது நபி(ஸல்) ஆற்றிய சொற்பொழிவில் கூறினார்கள்:
"அறியாமைக் காலத்தின் குறைகளையும் அதன் வீண் பெருமைகளையும் உங்களிடமிருந்து போக்கிவிட்ட இறைவனைத் துதித்து நன்றி செலுத்துகிறேன் . மக்களே! எல்லா மனிதர்களும் இரண்டே பிரிவினராக பிரிகின்றார்கள். ஒருவர் நல்லவர்; இறையச்சம் உள்ளவர் . அவரே இறைவனின் பார்வையில் கண்ணியம் மிக்கவர் . மற்றொருவன் தீயவன்; பேறிழந்தவன். அவன் அல்லாஹ்வின் பார்வையில் இழிவுக்குரியவன். மனிதர் அனைவரும் ஆதமின் மக்களே ஆவர். அல்லாஹ் ஆதம் ( அலை) அவர்களை மண்ணிலிருந்து படைத்தான்." (நூல் : பைஹகீ மற்றும் திர்மிதி).

(நம் தாய் மொழியிலும் மனிதர்கள் இரண்டு பிரிவினராக மட்டுமே பிரித்துப் பார்க்கப் பட்டனர்:

"சாதி இரண்டொழிய வேறில்லை - சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் மேதினியில்
இட்டார் பெரியோர்; இடாதார் இழிகுலத்தோர்
பட்டாங்கில் உள்ளபடி"

பின்னால் வந்தவர்கள் பட்டாங்கைப் பரலோகம் அனுப்பியது தனிக்கதை)


திருக்குர்ஆனின் பிரகடனமும் திருத்தூதரின் போதனையும் வெறும் ஏட்டுச் சுரைக்காய்த் தத்துவங்களாக இருந்துவிட்டு மாய்ந்து போகவில்லை. அன்றைய அரபுச் சமுதாயத்தில் தலைவிரித்தாடிய குலபேதம், நிறபேதம், வர்க்க பேதம் முதலான பீடைகளை வேரோடு பிடுங்கி வீசியெறிந்து, தீயபண்புகளை விட்டு விலக்கி, மிகவும் தூய்மையான பண்பட்ட ஒரே சமுதாயத்தை இம்மண்ணுலகில் உருவாக்கிக் காட்டியது இஸ்லாம். ஆகவே அனானி சகோதரர் கூறக்கூடிய பிரிவினைகள் என்பவை, கொள்கை அறியாத மனிதர்கள் உருவாக்கியவையேயல்லாது இஸ்லாமிய மார்க்கத்தில் உள்ளவையல்ல என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.