Wednesday, January 23, 2008

கொலை வெறிக்கூட்டத்தின் வாக்குமூலம் தமிழில்...17.

பஜ்ரங்கியின் உரிமை கொண்டாடும் புகழ்ச்சிக்கு இன்னும் வேறு காரணங்ளும் உண்டு. பர்ஜானியா என்ற திரைப்படம் அஹ்மதாபாத்தில் திரையிடுவதை தனியொரு மனிதனாக நிறுத்தியவன். இப்படம் திரையிடப்பட இருந்த திரையரங்க உரிமையாளர்களை இவன் வெளிப்படையாகவே மிரட்டியும் கூட, அரசு நிர்வாகம் மெளனம் சாதித்தது. "இப்படம் ஹிந்துக்களுக்கு எதிரானது" என்னும் காரணம் மட்டுமே இவனுக்கு போதுமானதாக இருந்தது.. ஹிந்துக்களை நேசிப்பதான பஜ்ரங்கியின் வரைவிலக்கணம் என்னவென்றால், முஸ்லிம்களையும் இன்னும் அவர்கள் தொடர்புடைய எல்லாவற்றையும் வெறுப்பதுவே ஆகும். "எனக்கு தூக்குத்தண்டனை கொடுக்கபட்டாலும் கவலைபட மாட்டேன்; எனது கடைசி ஆசை என்னவென்று கேட்டால், நான் இறப்பதற்கு முன், முஸ்லிம்கள் வசிக்கும் பகுதியில் வெடிகுண்டுகளை வீசி, ஒரு பத்து பதினைந்தாயிரம் முஸ்லிம்களை கொல்லவே நான் விரும்புவேன்."

அவனுடைய (பஜ்ரங்கி) சொந்த நடவடிக்கைகள் தவிர, முஸ்லிம்கள் (இந்தியாவில்) இருப்பதனால் உள்ள "பிரச்சனைக்கு" "தீர்வு" காண, இவனிடம் ஏராளமான யோசனைகள் உள்ளன. "(முஸ்லிம்களை) கொல்வதற்கு டெல்லி உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்" - மேல்ஜாதிகாரர்களும், பணக்காரர்களும் இதனை செய்ய மாட்டார்கள். ஆனால் குடிசையில் வசிப்பவர்களும் ஏழைகளும் செய்வார்கள். எனவே இவர்களுக்கு (ஏழைகளுக்கு) மட்டுமே உத்தரவிட வேண்டும். இவர்களிடம் கூறவேண்டும், "முஸ்லிம்களிடமிருந்து என்னென்ன வேண்டுமோ, நிலமா?, சொத்துக்களா?, வீடுகளா? எதுவானாலும் அவர்கள் விரும்பியவாறு எடுத்துக் கொள்ளுங்கள் - ஆனால் மூன்று நாட்களுக்குள் இதனை செய்ய வேண்டும்". நாடு முழுவதும் முஸ்லிம்கள் இல்லாது அழித்தொழிக்க மேற் சொன்ன திட்டம் உறுதி செய்யும். முஸ்லிம்கள் ஒரு திருமணம் செய்யவும் இன்னும் ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக் கொள்ளவும் சட்டம் இயற்றப்பட வேண்டும். மேலும், அவர்களுக்கு ஓட்டுரிமையை மறுப்பதுவும் சிறந்த ஒரு கருத்தாகவே தெரிகிறது.

இனப் படுகொலைகளுக்கான முன்னேற்பாடுகள்

சபர்மதி இரயில் தீக்கிரையாக்கப்பட்ட தினமான பிப்ரவரி 27 அன்று பஜ்ரங்கி கோத்ரா செல்கிறான். சபர்மதி இரயில் சம்பவத்தில் இறந்தவர்களின் உடல்களைப் பார்த்த பின்பு , கோத்ராவிற்காக மறுநாளே நரோடா பாட்டியாவிலுள்ள முஸ்லிம்களைப் பழிவாங்க சபதம் எடுத்ததாக தெஹல்காவிடம் அவன் கூறினான். "நான் முஸ்லிம்களுக்கு அறைகூவல் விட்டேன் - கோத்ராவில் இறந்தவர்களின் எண்ணிக்கையை விட நான்கு மடங்கு அதிகமான பயங்கரத்தை பாட்டியாவில் இருக்குமாறு நான் பார்க்கிறேன்" என முதல் சந்திப்பின் போதே தெஹல்காவிடம் பஜ்ரங்கி சொன்னான். அவன் அஹ்மதாபாத்துக்கு திரும்பி சென்று அன்றிரவே படுகொலைகளுக்கான முன்னேற்பாடுகளைச் செய்யத் தொடங்கினான். சிறிய ரக கைத்துப்பாக்கிகளை வைத்திருக்கும் ஹிந்துகளிடமிருந்து 23 கைத்துப்பாக்கிகள் பெறப்பட்டன, எவர்கள் தங்கள் ஆயுதங்களை தரவிரும்பவில்லையோ, அவர்கள் ஹிந்துக்களாக இருப்பினும் கூட மறுநாள் கொல்லப்படுவார்கள் என எச்சரிக்கப்பட்டார்கள். ஏராளமான அளவு எளிதில் தீப்பற்றக் கூடிய திரவங்களும் தேடி பெறப்பட்டது. ஒரு பெட்ரோல் விற்பனை நிலையத்தின் சொந்தக்காரர் இலவசமாக பெட்ரோல் வழங்கினார். முஸ்லிம்களை உயிரோடு எரிப்பதற்குப் பின்னர் இதனைப் பயன்படுத்தியதாகவும், பஜ்ரங்கி தெஹல்காவிடம் கூறினான்

படுகொலைகள்

விஹெச்பி மற்றும் பஜ்ரங்தள் தொ(கு)ண்டர்கள் காலை 10 மணியளவில் நரோடா பாட்டியாவிற்கு வந்து சேர்ந்தனர். இவர்கள் முதல் தாக்குதலை நடத்திய போது முஸ்லிம்களின் கடுமையான எதிர்ப்பால் புறமுதுகிட்டு ஓடிவிட்டதாக, நரோடா பாட்டியா படுகொலைகளில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவனான சுரேஷ் ரிச்சர்ட் என்பவன் கூறினான். இந்த சந்தர்பத்தில் தான், பஜ்ரங்கியின் ஏராளமான ச்சாரா அடிவருடிகள் காவி கும்பலுடன் சேர்ந்து புது தாக்குதலை தொடர்ந்தனர். 10:30 அளவில் நரோடா பாட்டியாவிலுள்ள நூரானி மஸ்ஜிதிலுள்ள மினாராவை அவர்கள் உடைத்தனர். அதைத் தொடர்ந்து எரிபொருள் முழுமையாக நிரப்பப் பட்ட டேங்கரை மஸ்ஜிதின் கட்டிடத்தின் மீது கொண்டு இடிக்கவே, அது வெடித்து சிதறி தீப்பற்றி எரிந்தது. டேங்கரிலிருந்து எடுக்கப்பட்ட எரிபொருள் முஸ்லிம்களையும் இன்னும் அவர்களின் வீடுகளை எரிப்பதற்காகவும் பயன்படுத்தப்பட்டது.

முதல் சுற்று கடுமையான தாக்குதல்களுக்குப் பின், தாக்குதல்கள் தீவிரபடுத்தபட்ட பின்பு மாலை 3 மணி வரை முஸ்லிம்கள் தங்கள் வீடுகளிலேயே ஒழிந்துக் கொண்டனர். அன்று மாலை 5லிருந்து 6 வரை வன்முறை கும்பல்கள் தங்கள் வெறியின் உச்சத்தை அடைந்தனர். அநேக பெண்களும் இன்னும் இளவயது பெண்களும் முதலில் கற்பழிக்கபட்டனர். அதன் பிறகு மண்ணெண்ணை மற்றும் பெட்ரோலால் நன்கு நனைக்கப்பட்டு எரிக்கபட்டார்கள். பக்கத்திலுள்ள மாநில ரிசர்வ் போலீஸ் தங்கியுள்ள முகாமிற்கு, சில டஜன் எண்ணிக்கையிலான முஸ்லிம்கள் புகலிடம் தேடி ஓடினர். அந்த முகாமிலிருந்த ரிசர்வ் போலீஸ் படையின் தலைவரும் ஒரு முஸ்லிமே. அவர் இவர்களுக்குப் புகலிடம் அளித்தார். இல்லையெனில் சாவு எண்ணிக்கை இன்னும் அதிகரித்திருக்கும்.

நரோடா தாக்குதல்களில் பங்குபெற்ற சிலர் காக்கி கால்சட்டை அணிந்திருந்ததோடு, தங்கள் நெற்றியில் காவி கயிற்றையும் கட்டியிருந்தனர். அரசு போக்குவரத்து கழகத்தினுடைய பணிமனையிலிருந்து மண்ணெண்ணை, டீசல் மற்றும் எண்ணெய் ஆகியவை கேன்களில் நிரப்பப்பட்டு அநேகர் தூக்கிச் செல்வதைப் பார்த்தாகச் சாட்சிகள் கூறுகிறனர். (முஸ்லிம்களில்) எவர்கள் இவர்களது (காவி வெறியர்களின்) அருகாமையில் வருகிறாரோ அவர்கள் மீது இந்த திரவ எரிபொருள்களை ஊற்றி, பின்னர் தீ வைத்து கொளுத்தினார்கள். இன்னும் எவர்களை(முஸ்லிம்களை) நெருங்க முடியவில்லையோ அத்தகையோர்கள் மீது எரிபொருளால் நன்கு தோயக்கப்பட்ட துணியைப் பந்து போல் சுற்றி அதில் நெருப்பு வைக்கப்பட்டு அவைகள் வீசப்பட்டன. நரோடாவிலுள்ள ஒரு திறந்த வெளியில் மிகப் பெரிய குழி ஒன்று உள்ளது. அதன் ஒரு புறத்தில் சாய்வான ஒரு தளம் அக்குழிக்குள் கொண்டு செல்லும். மறுபுறமோ மிகச் செங்குத்தானது. இந்தக் குழிக்குள் ஏராளமான முஸ்லிம்கள் பதுங்கியிருந்த போது வன்முறை வெறி கும்பல் அக்குழியை சூழ்ந்துக் கொண்டு, எரிபொருள்களை அதனுள் கொட்டி தீ வைத்தது.

நரோடா பாட்டியாவில் அன்றைய ஒரே நாளில் 97 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கபட்டாலும், உயிர் தப்பியவர்கள் கூறும் காணாமல் போன மற்றும் தங்கள் கண்ணெதிரே சாகடிக்கபட்ட உற்றார் உறவினர்களை குறித்து தரும் விளக்கமான பட்டியல்களைக் கவனமாக ஆராய்ந்து பார்க்கும் போது இறந்தவர்களின் தொகை இதனை விட மிக மிக அதிகமான எண்ணிக்கையாகும் என்பதே உண்மை என்பது புலனாகிறது.

கொல்லப்பட்வர்களில் பெரும்பாலானோர் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு எரிந்து கருகி போய் இருந்தார்கள் அல்லது உடல் பகுதிகள் சிதைத்து சின்னா பின்னமாக்கபட்டிருந்தனர். "நாங்கள் கண்டம் துண்டமாக வெட்டினோம், எரித்தோம். இது போல ஏராளாமானவர்களை செய்தோம்" என பஜ்ரங்கி கூறினான். "நாங்கள் அவர்களை தீயிட்டு கொளுத்துவதையே சரி என்று கருதினோம். ஏனென்றால், ---மகன்கள் சொல்லுகிறார்கள், இவர்கள் இறந்தவர்களை தகனம் செய்ய மாட்டார்களாம், இவனுங்க பயப்படுறானுங்க; எனவே அது தான் அவனுங்களுக்கு நேர்ந்தது”. உயிர் தப்பியவர்களில் பெரும்பாலானோர் இறந்தவர்களின் உடலை பெறுவதற்காக உரிமை கோரமுடியாத அவலநிலைக்கு தள்ளப்பட்டனர். பதவியிலிருந்து நீக்கப்பட்ட டஜன் எண்ணிக்கையிலான சாட்சிகள், நானாவதி-ஷா ஆணையத்தின் முன்பாக குழந்தைகள் எரிக்கப்பட்டது, இன்னும் பெண்கள் கற்பழிக்கப்பட்டது போன்ற எக்கச்சக்கமான கோர வன்முறை சம்பவங்களை நினைவு கூர்ந்தனர். "நாங்கள் அவர்களில் எவரையும் விட்டு வைக்கவில்லை" என பஜ்ரங்கி கூறினான். இவர்களின் (முஸ்லிம்கள்) ஜனத் தொகை பெருகுவதற்கு நாம் அனுமதிக்க கூடாது. அவர்கள் யாராக இருந்தாலும் சரி, பெண்கள் அல்லது குழந்தைகள் இருப்பினும் கூட ஒன்றும் கவலையில்லை, அவர்களை வெட்டி தள்ளனும், நையப்புடைக்கனும், கண்டம் துண்டமாக வெட்டி சாய்க்கனும், பின் ......மகன்களை எரிக்கனும்" என்று பஜ்ரங்கி கூறினான்.

கவுஸர் பானு என்ற பெண்மணி அன்றைய தினத்தில் 9 மாத நிறைமாத கர்ப்பிணியாக இருந்தாள். அவளுடைய வயிறு கிழித்து எறியப்பட்டது. இன்னும் பிரசவிக்கும் நிலையில் முழு வளர்ச்சியடைந்த நிலையில் இருந்த அவளுடைய கருசிசுவானது வெளியே இழுத்தெடுக்கப்பட்டு, பின் வாளின் நுனியில் வைத்து தூக்கப்பட்டு, பின் தரையில் வீசி எறிந்து, இறுதியில் தீயில் வீசப்பட்டது. தான் கவுசர் பானுவின் வயிற்றை கிழித்து வேறாக்கிய விதத்தை பஜ்ரங்கி சிலாகித்து நினைவு கூறினான், "ஒரு கர்ப்பிணி......................."(எழுதக் கைநடுங்குவதால் தவிர்க்கப்படுகிறது). வெறி கொண்ட பகைமையின் அர்த்தத்தை அவன் எவ்விதம் முஸ்லிம்களுக்குக் காட்டியுள்ளான்! "நீங்கள் எங்களுக்கு தீங்கிழைத்தால், எங்களால் தகுந்த பதிலடி தரமுடியும்".

மிகப் பெரிய அளவில் (காவி வெறியர்களால் நிழ்த்தபட்ட) தாக்குதல்களும் இன்னும் அதன் கொடூரங்களும், உயிர் தப்பிய அனைவர்களையும் தங்கள் வசிப்பிடங்களிலிருந்து ஓடிப் போகச் செய்தது. ஒவ்வொரு வீடும் கொள்ளையடிக்கப்பட்டது. சில வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. உயிர் தப்பியவர்களில் அநேகமானவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர், இன்னும் ஏராளமானவர்கள் தங்கள் குடும்பத்தினரை விட்டும் பிரிந்து ஒரு வாரம் 10 நாட்கள் வரை ஒன்றிணைய முடியவில்லை .மேலும் சிலருக்கு இன்னும் அதிக நாட்கள் ஆகியது. ஏராளமான பெண்கள் தங்களது மானத்தை மறைப்பதற்கு கூட துணி எதையும் பெற்றுக் கொள்ள முடியவில்லை. இதனால் நிவாரண முகாம் வரையிலும் நிர்வாணமாக அழைத்துச் செல்லப்பட்டனர். ஏராளமான கற்பழிப்பு நிகழ்வுகள் நடைபெற்றதாகவும், அவற்றில் ஒன்றில் தானும் ஈடுபட்டதாகவும் சுரேஷ் ரிச்சர்ட் தெஹல்காவிடம் கூறினான்.

தெஹல்கா: ச்சாராக்களும் கற்பழிப்புகளைச் செய்ததாக கூறப்படுகிறது........

ரிச்சர்ட்: இங்கே பார்..... ஒன்று மட்டும் உண்மை..... ஆயிரக்கணக்கான பசியுடையவர்கள்(காமம்) போகும் போது, சிலர் பழங்களைச்(பெண்களை) சாப்பிடத் தான் செய்வார்கள், மற்றவர்கள் மாட்டார்கள்... எப்படியிருந்தாலும் பழங்கள் கசக்கப்பட்டு வீசி எறியபடப் போகிறது.... பார்! நான் பொய் சொல்லவில்லை... மாதா என் முன்னே இருக்கிறது ( ஒரு சிலையை நோக்கி சைகை காட்டுகிறான்)..... ஏராளமான இளம் வயது முஸ்லிம் பெண்கள் கொல்லப்பட்டு இன்னும் தீயிட்டு சாகடிக்கப்பட்டார்கள், சிலபேர் பழங்களை எடுத்துக் கொண்டு தங்களுக்கே உதவி செய்து கொண்டனர்....

தெஹல்கா: கண்டிப்பாக சில கற்பழிப்புகள் நடந்திருக்க வேண்டும்....

ரிச்சர்ட்: அதிகமாகவே (கற்பழிப்புகள்) இருந்திருக்க வேண்டும்.... எங்களுடைய சகோதரர்களும், எங்களுடைய ஹிந்து சகோதரர்களும், விஹெச்பியை சார்ந்தவர்கள் மற்றும் RSS யை சார்ந்தவர்களும் இருந்தனர்...... யாரும் தனக்கு தேவையானதை (பெண்களை) எடுத்திருப்பார்கள்....பழங்கள் இருக்கும் போது எடுக்காமல் யார் தான் இருப்பார்கள்?..... அவர்களை(முஸ்லிம்களை) எவ்வளவு அதிகம் துன்பப்படுத்தினாலும் அது குறைவானதே... நான் உண்மையிலேயே அவர்களை வெறுக்கிறேன்.... அவர்களை விட்டு வைக்க விரும்பவில்லை ... பார் என் மனைவி இங்கே தான் அமர்ந்து இருக்கிறாள். ஆனால் நான் ஒன்றை சொல்கிறேன்..... பழம் இருந்தது எனவே அது சாப்பிடப் படவேண்டும்... நான் கூட சாப்பிட்டேன்... ஒரு தடவை சாப்பிட்டேன். (அடத்தூ! மானங்கெட்டக் காட்டுமிராண்டிகளை விடக்கேவலமானவர்களே. உங்களுக்கெல்லாம் சிறிது கூட வெட்கம் என்பது இல்லையா? நிச்சயம் ஒருநாள் வந்தே தீரும். அந்நாள் இதற்கெல்லாம்..... - இறை நேசன்)

தெஹல்கா: ஒரு தடவை தானா?

ரிச்சர்ட்: ஒரு தடவை தான்.... பிறகு மீண்டும் கொல்வதற்குப் போகணும்.... (உறவினர் பிரகாஷ் ரத்தோடிடம் திரும்பி அவன் கற்பழித்துக் கொலை செய்த பெண்ணைப் பற்றி சொல்கிறான்).... உபயோகமில்லாதப் பொருட்களை வாங்கும் வியாபாரியின் மகளான நசீமா.... நசீமா குண்டான ஒருத்தி... நான் மேலே......

தெஹல்கா: நீ அவள் மேலே ஏறினாயா?

ரிச்சர்ட்: ஆம், உண்மையாகவே.....

தெஹல்கா: அவள் பிழைத்திருக்கவே மாட்டாள், பிழைத்தாளா?

ரிச்சர்ட்: இல்லை, பிறகு அவளை நான் கூழாக்கினேன்... அவளை ஊறுகாயாய் ஆக்கிவிட்டேன்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்...

Saturday, January 19, 2008

நாய் வாலும் பன்னாடைகள் புத்தியும்!

நாய் வாலை நிமிர்த்த முடியாது என்பது பழமொழி!

பார்ப்பனப் பன்னாடைகளின் புத்தியைத் திருத்த முடியாது என்பது புதுமொழி!

திடீரென இறை நேசனுக்கு ஏன் இந்தக் கொலைவெறி என ஆச்சரியம் எழுகின்றதா?. விஷயம் இல்லாமல் இல்லை.

பொய் பிரச்சாரம், போலி பெயர்களில் ஆபாச அரங்கேற்றம், மாற்றார் பெயர்களில் விஷமம், மதவெறி பரப்பல், காமவியாபாரம் போன்றவைச் செய்து மாட்டிக் கொண்டக் காரணங்களுக்காக அறிவுரை வழங்கப்பட்டுத் திருந்தாதக் காரணத்தினால் தமிழ்மணத்தை விட்டு ஓரங்கட்டப்பட்ட வந்தேறி ஈனக்கூட்டத்தைச் சேர்ந்த மதவெறி ஆபாச மன்னன்களின் கொசுத் தொல்லைகள் மறைந்து சற்று நிம்மதி பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கும் இவ்வேளையில் சில தினங்களுக்கு முன்னர் சாட்டில் பேசிக் கொண்டிருந்தச் சகோதரர் ஒருவர் அந்த ஓரங்கட்டப்பட்டத் தெருப்பொறுக்கிகள் தற்பொழுது என்ன செய்கிறார்கள் தெரியுமா எனக் கேட்டார்.

தொடர்ந்து எழுத முடியாதச் சூழலாலும் வேலைப்பழுவினாலும் வலையில் தொடர இயலாமல் நேரம் கிடைக்கும் பொழுது மட்டும் வருவதால் முழுமையான அப்டேட் என்னிடம் இல்லை எனக்கூறினேன்.

திடீரென நேற்றுத் தொலைபேசியில் தொடர்பு கொண்ட அதே சகோதரர் ஓரங்கட்டப்பட்ட இழிபிறவிகள் மீண்டும் தமிழ்மணத்தில் தலைகாட்ட ஆரம்பித்துள்ளதாகவும் முன்னர் சல்மா அய்யூப் என்ற முஸ்லிம் பெயரில் தனது மனவக்கிரங்களைக் கொட்டி முஸ்லிம் சமூகத்தை இழிவுபடுத்துவதாக நினைத்து மலத்தை வாரி தன் உடம்பில் பூசித் தீராக் களங்கத்தை ஏற்படுத்திக் கொண்ட
அதே மடப் பன்னாடைகள் கூட்டணி சேர்ந்துத் தற்பொழுது மீண்டும் முஸ்லிம் பெயரில் அதுவும் எனது பெயரிலேயே மாற்று வழியில் சிண்டு முடிய ஆரம்பித்துள்ளதாகவும் அதன் சுட்டியை எனது மடலுக்கு அனுப்பி வைப்பதாகவும் உடன் ஏதாவது செய்யுங்கள் என்றும் கேட்டுக் கொண்டார்.

உடனே வந்து மடல் பெட்டியைத் திறந்தால் திறக்கப்படாத மடல்களில் கிட்டத்தட்ட 95 சதவீத மடல்களும் அந்த இழிபிறவியின் பதிவு குறித்து எனக்கு தகவல் தந்து ஏதாவது செய்யுங்கள் எனக் கோருவதாகவே இருந்தது.

ஆம், இறை நேசன் பெயரிலேயே ஓர் போலி. யாராக இருக்கும் எனத் தலையைப் பிய்க்க வேண்டிய அவசியமில்லாமல் சல்மா அய்யூப், முரளி மனோகர் போன்றவற்றைப் போன்று, தான் யார் என்பதற்கான குடுமியை மிகத் தெளிவாகவே இந்த இழிபிறவி தனது பதிவில் தன்னை அறியாமல் வெளிப்படுத்தியுள்ளது. காமவியாபாரம் செய்து மாட்டிக் கொண்ட கோட்டு சூட்டு போட்டுக் கொண்டு எவ்வித வெட்கம், மானம், ரோசம், சூடு, சுரணை இன்றி மற்றவர்களுக்கு முகத்தை க் காட்டிக் கொள்ளும் இந்த வெட்கம் கெட்டப் பன்னாடைகளைக் கண்டு கொள்வது அவ்வளவு சிரமமான காரியமா என்ன?

இழிபிறவிகளின் புத்தியை ஒருக்காலும் திருத்த முடியாது என்பதை நிரூபிக்கும் வகையில் இம்முறை தனது பெயரை இறை நேசன் என வைத்துக் கொண்டு தன்னை ஒரு கிறிஸ்தவராகக் காட்டியுள்ளது இந்த தெருப்பொறுக்கிப் பன்னாடை!

கிறிஸ்தவராகக் காட்டிக் கொண்டு எழுதினால் முஸ்லிம்கள் உடனடியாக கிறிஸ்தவர்களுக்கு எதிராகக் களமிறங்குவார்கள் என்ற நப்பாசை. எந்தப் பிரச்சனையும் இன்றி இருக்கும் முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையில் மூட்டி விட்டு குளிர்காய நினைக்கின்றது இந்தப் பன்னாடைப் பொறுக்கி ஜென்மம்!

முஸ்லிம்களோ கிறிஸ்தவர்களோ தங்களதுக் கொள்கைகளை, மதத்தைப் பரப்ப எப்பொழுதும் நேரடியாகத் தங்களது வேதங்களில் இருந்து ஆதாரங்களை வைத்தே பிரச்சாரம் செய்வர். இந்தச் சாதாரண விஷயத்தைக் கூடப் புரிந்துக் கொள்ள இயலாத அளவிற்கு நாம் விவரம் கெட்டப் பன்னாடை ஜாட்டான்களைச் சேர்ந்த அறிவிலி அல்ல.

தங்களது மனுவின் கொள்கைகளை நேரடியாக, வெளிப்படையாக வைத்துப் பிரச்சாரம் செய்ய வக்கற்றப் பார்ப்பனப் பன்னாடைகள் தங்களின் அரிப்பைச் சொறிந்துக் கொள்வதற்கு இறை நேசன் தான் கிடைத்தானா?

விவரம் அறிந்த உடனேயே தமிழ்மண நிர்வாகத்திற்குப் போலியினைக் குறித்த விவரம் கூறி நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளேன். நிச்சயம் அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகின்றேன்.

இனி என்ன?

சும்மா இருந்தச் சங்கை ஊதிக் கெடுத்தக் கதை தான்.

கிறிஸ்தவர்களுக்கு எதிராக இறை நேசன் எழுதுவான் என நினைத்து மீண்டும் தங்கள் இனத்தின் இழிபுத்தியைக் காட்ட வந்திருக்கும் ''முரளி மனோகர் & கில்மா'' பன்னாடைக் கும்பலின் எண்ணத்தில் இடிவிழ, மீண்டும் பன்னாடைகளுக்கு எதிராக அவைகளின் ஈன இழி செயல்களுக்கு எதிராக நேரம் உருவாக்கிக் கொண்டு எழுத வருகிறேன்.

விரைவில் எதிர்பாருங்கள் - ''பிரேமானந்தாவுக்கும் பாரத ரத்னா வேண்டும்'' பதிவு.

Sunday, January 13, 2008

கொலை வெறிக்கூட்டத்தின் வாக்குமூலம் தமிழில்...16.

"குஜராத் வன்முறைகள் சம்பந்தபட்ட வழக்குகள் மீண்டும் விசாரிக்கப்பட வேண்டும். அதுவும் குஜராத்திற்கு வெளியே விசாரிக்கக் கொண்டுச் செல்லபட வேண்டும்" என்று தேசிய மனித உரிமைகள் ஆணையமும் இன்னும் சில அரசு சாரா தொண்டு நிறுவனங்களும் தாக்கல் செய்த மனு கடந்த 3 ஆண்டுகளாக உச்ச நீதிமன்றத்தின் விசாரணையில் உள்ளது. குற்றவாளிகள் பிணையில் வெளியே இருக்கிறார்கள். நரேந்திர மோடி மிகப் பெரும்பான்மையாக தேர்தலில் வெற்றி பெற்றான். இன்னொரு தேர்தலுக்கு தயாராகியும் வருகிறான்(அதிலும் தற்பொழுது வெற்றி பெற்றுள்ளான்). கலவரத்தின் போது உயிர் தப்பியவர்களில் அதிகமானோர் அஹ்மதாபாத்திற்கு வெளியே உள்ள சேரி பகுதிகளுக்கு அனுப்பப்பட்டனர். தங்களது சொந்த இடங்களுக்கு திரும்பிய சிலரோ, ஒடுக்கப்பட்ட வாழ்க்கை வாழ்வதோடு, பொருளாதரத்தில் கீழ்நிலையிலும் பக்கத்தில் வாழும் ஹிந்துக்களால் சமூக புறக்கணிப்பும் செய்யப்படுகின்றனர்.

நரோடா: அமைப்பும் மக்கள் தொகை புள்ளிவிபரமும்

அஹ்மதாபாத் நகர மையத்திலிருந்து 15 கிமீ தொலைவில் அமைந்துள்ள நரோடா காவ்ன் மற்றும் நரோடா பாட்டியா, பெரும்பாலும் கர்நாடகா மற்றும் மஹாராஷ்டிரா ஆகிய இடங்களிலிருந்து வந்து குடியேறியக் கிட்டத்தட்ட 2000 தினக்கூலிகளான முஸ்லிம்களுடைய வசிப்பிடமாக இருந்தது. இந்த பகுதியானது நகரத்திற்கு வெளியே நெடுஞ்சாலையின் ஓரமாக அமையப்பட்ட இடமாகும். இந்த இடத்திலிருந்து சாலையின் மறுபக்கத்தில் அரசு போக்குவரத்து கழகத்தின் பண்டகசாலையும், பக்கத்திலேயே ஹிந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் கோபினாத் மற்றும் கங்கோத்ரி சமூக குடியிருப்புகளும் உள்ளன.

70 வருடங்களுக்கு மேலாக இருக்கும் நரோடா காவ்ன் மற்றும் நரோடா பாட்டியா நகர்புறத்தில் இருக்கும் சேரிகளாகும். இவ்விரண்டும் அஹ்மதாபாத் மாநாகராட்சியின் கீழ் உள்ளன. நரோடா காவ்ன் மற்றும் நரோடா பாட்டியாவுக்கு இடைபட்ட தூரம் 1 கிமீ கூட இருக்காது. நரோடா காவ்ன் சற்றே சிறியதாகும். குறுகலான சந்துகள் அமைந்த சிக்கலான நெருக்கடியான, அசுத்தமான கட்டிடங்கள்; அவைகளில் சில கட்டிடங்கள் தான் இரண்டடுக்கு மாடிகளை விட சற்று உயரமானவைகள். இத்தகைய அமைப்பிலுள்ள முஸ்லிமகள் வசிக்கும் பகுதி தான் நரோடா பாட்டியாவாகும்.

நரோடா பாட்டியாவோவிலிருந்து சாலையின் மறுபக்கத்தில் ச்சாரா இனத்தவர்கள் வசிக்கும் மிகப் பெரிய ச்சாராநகர் உள்ளது. வெளியில் அதிகமாக அறியப்படாதது இந்த ச்சாரா இனம்; இம்மக்களோ பொதுவாக குற்றம் செய்கின்றவர்களாகக் கருதபடுகிறவர்கள்; அதிலும் முக்கியமாக கள்ளச் சாராயம் காய்ச்சி விற்பது, சூதாடுவது போன்ற குற்றங்களில் அதிக அளவில் ஈடுபடுகிறவர்களாவர். இவர்கள் ஹிந்துக்களாக இருந்தாலும், ஹிந்து மதத்திலுள்ள ஜாதிகள் அடிப்படையில், இம் மக்கள் மிக தாழ்த்தப்பட்ட இனத்தவராகவே கருதபடுகிறார்கள்.

குற்றவாளிகள் யார்?

நரோடா காவ்ன் மற்றும் நரோடா பாட்டியா சம்பவங்கள் தொடர்பாக 2 முதல் தகவல் அறிக்கைகள் (FIR) பதிவு செய்யப்பட்டது. நரோடா காவ்னில் 8 பேர் மட்டுமே கொல்லப்பட்டதாக பதிவு செய்யபட்டுள்ளது. நரோடா பாட்டியாவில் நேரில் பார்த்த சாட்சிகள், சில நூறுகளாவது இருக்கும் என்று ஊர்ஜிதப்படுத்துகிறது. இருப்பினும், சரியாக எத்தனை முஸ்லிம்கள் அன்றைய தினம் நரோடாவில் கொல்லப்பட்டனர் என்பதை ஒருவரும் அறிந்திருக்கவில்லை. கொலைகும்பல் மட்டுமே ஒரு வேளை அறிந்திருக்கக் கூடும்.

கலவரத்தின் போது உயிர்ழைத்தவர்கள் தங்களைத் தாக்கியக் கும்பல்களில் பல டஜன் எண்ணிக்கையில் சங்பரிவாரகாரர்களை அடையாளம் காட்டியதோடு, பாஜக சட்டமன்ற உறுப்பினரான மாயபென் கோட்னானி மற்றும் பஜரங்தள் தலைவனான பாபு பஜ்ரங்கி ஆகியோரே வன்முறை கும்பலை முன்னின்று வழிநடத்திய மாபாதகர்கள் என திரும்பத் திரும்ப பலமுறை கூறினார்கள். இருப்பினும் குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யபடும் போது, கோட்னானி மீது போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி சட்ட நடவடிக்கை எடுக்க காவல்துறை மறுத்துவிட்டது. மிகக் குறைவான எண்ணிக்கையில் சில பாஜக மற்றும் விஹெச்பி ஆட்களுடன், சில டஜன்கள் எண்ணிக்கையிலான ச்சாரா இனத்தவரையும் சேர்த்து பாபு பஜ்ரங்கி மட்டுமே குற்றம் சாட்டப்பட்டான்.

மொத்தத்தில் 49 பேர் குற்றவாளிகளாக நரோடா பாட்டியா சம்பவங்களிலும், அதே எண்ணிக்கையிலான பேர் குற்றவாளிகளாக நரோடா பாட்டியா சம்பவங்களிலும் காவல்துறையால் அறிவிக்கப்பட்டனர். இவ்விரண்டு பட்டியல்களிலுமே வரக்கூடிய ஒரே நபர்கள் என பஜ்ரங்கி உள்பட பலர் இருந்தனர். மூன்று மாதங்களுக்கு மேலாக தலைமறைவாக இருந்த பஜ்ரங்கி, மிகப் பெரும் நாடகமாடபட்ட நிலையில் கைது செய்யப்பட்டான். கைது செய்யப்பட்ட 5 மாதங்கள் கழித்து, குஜராத் உயர் நீதிமன்றம் அவனை பிணையில் விடுதலை செய்ய அனுமதித்தது.(திட்டமிட்டு நடத்தப்பட்ட இந்த இன அழிப்பு படுகொலையில் தலைமறைவாக இருந்து கைது செய்யப்பட்டவனுக்கு 5 மாதங்களிலேயே ஜாமீன்; தமிழக கோயம்புத்தூர் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளிகள் அல்ல என விடுதலை செய்யப்பட்ட மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் அப்துல் நாசர் மஹ்தனி உட்பட 150க்கும் மேற்பட்ட முஸ்லிம்களுக்கு வழக்கு முடிவடையும் வரை சுமார் 9 வருடங்களாக ஜாமீன் மறுப்பு. இந்திய நீதிபுருஷர்கள் மனுநீதியின் மறுபக்கத்தை வாழவைக்கின்றனரோ? - இறை நேசன்).

பாபு பஜ்ரங்கி

5அடி 3 அங்குலத்திற்கும் சற்றே குறைவான உயரம் கொண்ட பாபு பஜ்ரங்கி, இவனுடைய குடும்ப பெயர் பட்டேல், நரோடாவில் மிகப் பெரிய நபராக விளங்குபவன். விஹெச்பி மற்றும் அதன் இளைஞர் பிரிவான பஜ்ரங்தள் உடன் 22 வருட தொடர்புகளினால் பலரும் பயந்து நடுங்குகிற உள்ளூர் தாதாவாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டான். அதன் பயனால் இன்று நரோடாவிலும் இன்னும் குறிப்பாக ச்சாராநகரிலும் தன்னை ஒரு தலைவனாக பஜ்ரங்கி உருவாக்கிக் கொண்டான். ச்சாராநகரில் இவனது கட்டளைகளைப் பின்பற்றும் கணிசமான எண்ணிக்கையிலானோர் இருக்கின்றனர். ச்சாராக்களில் அதிகமானோர் இவனிடத்தில் பெரும் பக்தியுடனான மரியாதை வைத்திருப்பதைப் பார்க்கலாம். ஆனால் இவனோ குற்றம் புரிவதில் அவாகளிடத்திலே (ச்சாரா மக்கள்) இருக்கும் திறமைகளை வெகுவாக புகழ்ந்துரைத்ததோடு, அவர்கள் தான் இவனுடைய "ஆயுதங்கள்" எனவும் உரிமை கொண்டாடினான். இன்னும் சம்பவங்களின் போது அவர்களிடம் இவன் கூறியதெல்லாம், "கொல்லுங்கள் அதைத் தவிர வேறு தேவையில்லை".

நெடுஞ்சாலைக்குச் சற்று அப்பாலுள்ள நரோடா புறநகர் பகுதியில் அமைந்துள்ள அஜந்தா எல்லோரா என்னும் வணிக வளாகத்தில் உள்ள இரண்டாவது மாடியில் இருக்கும் தனது அலுவலகத்தில், கட்டபஞ்சாயத்தை விசாரிக்கும் ஒரு விசாரணை மன்றமே வைத்துள்ளான். மாதத்திற்கு நிரந்தர வருமானமாக சுமார் ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமாக ஈட்டும் இவன், தன்னை பெரிய அளவில் கட்டிடங்கள் கட்டி கொடுக்கும் வியாபாரியாகக் கூறினாலும், முஸ்லிம்களையும், கிருஸ்துவர்களையும் அடிப்பதுவே இவனது முக்கிய அலுவலாகும்.

"முஸ்லிம்களையும், கிருஸ்தவர்களையும் நான் அப்படி வெறுக்கிறேன்", என அவன் (பஜ்ரங்கி
) கூறுகிறான். அவனுடைய உள்ளத்திற்கு மிக பிடித்தமானது, முஸ்லிம் பையன்களைத் திருமணம் செய்தோ அல்லது காதலித்து ஓடி போகவோ செய்யும் ஹிந்து இளம்வயது பெண்களைக் காப்பாற்றி விடுவிப்பதாகும். அவனை தினந்தோறும் வந்து சந்திப்பவர்களில் பெரும்பாலானோர் இத்தகையப் பெண்களின் பொற்றோர்களே. "இப்பெற்றோர்கள் காவல்துறையிடம் சென்றால், அவர்கள் புகாரைப் பதிவு செய்வதில்லை, என்னிடம் தான் அவர்களை அனுப்பி வைப்பார்கள்" என பஜ்ரங்கி தெரிவித்தான். "957 ஹிந்துச் சிறுமிகளை நான் காப்பாற்றியிருக்கிறேன். முஸ்லிமை திருமணம் செய்த இளம்பெண் சராசரியாக 5 குழந்தைகளைப் பெற்றெடுப்பாள். அப்படி பார்க்கும் போது 5000 முஸ்லிம்களை அவர்கள் பிறக்கும் முன்பே நான் கொன்றிருக்கிறேன்." - பஜ்ரங்கி.

இன்ஷா அல்லாஹ் தொடரும்..

Sunday, January 6, 2008

கொலை வெறிக்கூட்டத்தின் வாக்குமூலம் தமிழில்...15.

பகை உணர்வின் வெறியாட்டம்

2002ல் நரோடா பாடியாவில் நடந்த அதி பயங்கரமான படுகொலைகளின் பின்னனியில் உள்ள உண்மைகள்.

திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலைகளில் அஹ்மதாபாத் காவல்துறையினர் வன்முறை கும்பலுடன் வஞசக நோக்கத்தோடு செய்துக் கொண்ட இரகசிய ஒப்பந்தங்களும் இன்னும் படுகொலைகளை மூடி மறைத்தலும், குல்பர்க் சமூக குடியிருப்பில், இரத்தத்தை உறையவைக்கும் விதத்தில் முன்னாள் காங்கிரஸ் MPயான இஹ்ஸான் ஜாப்ரி கை கால்கள் துண்டம் துண்டமாக வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்ட விபரங்கள், இம்மாபாதக செயல்களை எவர்கள் செய்தார்களோ அவர்களின் வார்த்தைகளிலிருந்து……


முஸ்லிம்கள் - வாழ்ந்திட அவர்களுக்குத் தகுதியில்லை
நரோடா பாட்டியாவில் இனஅழிப்பு கொலைகள் மிக துரிதமாகவும் அதே நேரத்தில் முழுமையாகவும் நடத்தப்பட்டது. குற்றவாளிகள் தணடிக்கப்படாததோடு இன்னும் அவர்களுடைய தவறுகளைப் பற்றி மனவேதனைப் பாடாதவாகளாகவும் இருக்கின்றனர்.

சபர்மதி விரைவு இரயில் துயர் சம்பவம் நடைபெற்றச் சிலமணி நேரங்களிலேயே, பாஜகவும் இன்னும் அதன் சார்பு அமைப்புகளான விஹெச்பி, RSS, பஜ்ரங்தள் ஆகியனவும் இந்திய வரலாற்றிலேயே மிக மோசமான இனஅழிப்பு படுகொலைகளுக்கான முன்னேற்பாடுகளைச் செய்ய ஆரம்பித்தன. சபர்மதி விரைவு இரயில் தீக்கிரையாக்கப்பட்ட மறுநாள், பிப்ரவரி 28, 2002ல் திகிலூட்டும் வகையில் குவியல் குவியலாக நடத்தப்பட்ட படுகொலைகளை அஹ்மதாபாத் கண்டது. ஆயுதங்கள் தாங்கிய காவி வெறியாட்டகாரர்கள் தெருக்களில் வலம் வந்தவர்களாக, அவர்கள் விரும்பியபடி முஸ்லிம்களை எரித்தல், கொள்ளையடித்தல், கற்பழித்தல், கொலை செய்தல் போன்ற வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்டனர். ஹிந்துக்களும் முஸ்லிம்களும் கலந்து வாழக் கூடிய அஹ்மாதாபத்தின் வெளிப்புற பகுதியான நரோடாவில் தான் அதிகமாக இரத்தம் ஓட்டபட்டது.

பாஜகவும், விஹெச்பி, மற்றும் பஜ்ரங்தள் ஆகியன மிக நேர்த்தியான முறையில் படுகொலைகளைச் செய்யும் குழுக்களை அமைத்து பிப்ரவரி 28 காலை 10 மணியிலிருந்து நன்கு இருட்டும் (இரவு) வரை திட்டமிட்டுப் படுகொலைகளை நடத்தினார்கள். துப்பாக்கிகள், சூலாயுதங்கள், வாள்கள் போக இன்னும் எவை எல்லாம் தாக்குவதற்கு பயன்படுத்தலாம் என்று உணரப்பட்டு குறைந்த நேரத்தில் கிடைக்கப் பெற்றனவோ, செங்கல் முதல் வாயு உருளைகள், எரிபொருள் நிரப்பப்பட்ட டாங்கிகள் வரை எவ்விதக் கட்டுபாடுகளும் இன்றி மிக எளிதாக முஸ்லிம்கள் வாழும் பகுதிகளுக்கு அவை கொண்டுச் செல்லப்பட்டன. அதிக எண்ணிகையிலான மக்கள் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டார்கள். அவ்வாறு எரிக்கப்படுவதற்கு முன், அதிகமானோர் குத்தப்பட்டும், பெண்கள் கற்பழிக்கப்பட்டும் இன்னும் துணடம் துண்டமாக வெட்டப்பட்டும், பிறகு எரித்தும் கொல்லப்பட்டார்கள்.

படுகொலைகள் நடைபெறும் போது வன்முறை வெறியாளர்களின் கைத்தொலைபேசி தொடர்ந்து ஒலித்துக் கொண்டேயிருக்க, ஒவ்வொரு குறிப்பிட்ட இடைவெளியிலும் இறந்தவர்களின் எண்ணிக்கைகள் தொடராக பகிர்ந்து கொள்ளப்பட்டன. சூரியன் அஸ்தமித்திருக்க, முஸ்லிம்கள் வாழும் பகுதியான நரோடா பாட்டியா, நரோடா காவ்ன் ஆகியன சடலங்களால் நிரப்பப்பட்ட மிகப் பெரிய வெறுமையான நிலமாக மாறியது. சிலமணி நேரத்திற்கு சற்று முன்னர் தான் மனிதர்கள் வாழும் வசிப்பிடமாக இருந்த இடம், காய்கறிகளைப் போல் நறுக்கப்பட்டதாகவும், கரிகளைப் போல எரிக்கப்பட்டதாகவும் படுகொலைகளுடைய கொடூரத்தின் உச்சத்தைச் சாட்சியாகக் காட்டும் விதத்தில் பிணங்கள் எங்கும் சிதறிக் கிடந்த கோர இடமாக காட்சியளித்தது.

நரோடா ஒரு பிரபல்யமான இடமல்ல, மாறாக ஓர் ஒதுக்குப்புறமான இடமாகும். இது உள்ளூர் காவல்துறை கட்டுப்பாட்டு அறையிலிருந்து 5 கிமீ தொலைவிலும், அஹ்மதாபாத் காவல்துறை தலைமையகமான சாஹிப் பவுகிலிருந்து 4 கிமீக்கும் குறைவான தொலைவிலும் தான் அமைந்திருக்கிறது. உயிரை பறிக்கக் கூடிய பங்கர அபாயகரமான ஆயுதங்களைத் தாங்கிய வெறிபிடித்த வன்முறை கும்பல்கள், 10 மணி நேரத்திற்கும் மேலாகவே வெகு ஜாலியாய் படுகொலைகள் செய்திருந்தும், ஆட்சி நிர்வாகம் ஒரு நடவடிக்கையிலும் இறங்கவில்லை; சட்டஒழுங்கைப் பலப்படுத்த படைகள் துரிதமாக அனுப்பப்படவில்லை; வன்முறை கும்பலை கலைப்பதற்கு ஒரு முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை.

நரேந்திர மோடி தான் இந்த இனஅழிப்பு படுகொலைகளுக்கு குற்றம்சாட்டப்பட வேண்டியவன் எனபதில் பொது மக்களுக்கு எவ்வித சந்தேகமுமில்லை. காவல் துறையினர் வன்முறை வெறியர்களுக்குச் சார்பாக நடந்து கொண்டதாக இக்கொடியவர்களின் வன்முறை வெறியாட்டத்திலிருந்து உயிர் தப்பித்த அப்பாவிகள் மக்கள் உறுதிபட தெரிவித்தார்கள். அது இன கலவரமாதலால், வன்முறையாளர்கள் பெரும் எண்ணிக்கையிலிருந்தார்கள் என தந்திரமாக பதிலளித்தனர். அரசு தனது தரப்பில் எதையும் செய்யத் தவறியதையோ அல்லது தேவையான உத்தரவுகளை பிறபிக்கத் தவறியதையோ மறுத்தது. ஆண்டுகள் 5 ஆகியும், நரோடா பாட்டியா, நரோடா காவ்ன் ஆகியவற்றில் நடந்த மனித இனப் படுகொலைகள் சம்பந்தமான வழக்கு விசாரணைகள் இன்னும் துவங்க வேண்டியதிருக்கிறது.

இன்ஷா அல்லாஹ் தொடரும்..