Friday, November 10, 2006

எங்கிருந்தாலும் வாழ்க!

நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 30 லட்சம் தலித் மக்கள் ஒரே சமயத்தில் புத்த மதத்திற்கு மாறியுள்ளனர். இவர்களில் நாக்பூரில் மட்டும் 20 லட்சம் பேர் புத்த மதத்திற்கு மாறியுள்ளனர்.

உலகிலேயே இந்தியாவில்தான் மதமாற்றம் அதிக அளவில் நிகழ்ந்து வருகிறது. மதம் விட்டு மதம் மாறுபவர்களில் பெரும்பாலானவர்கள் தலித்துகள்தான். இந்து மதத்திலிருந்து பிற மதங்களுக்கு மாறுபவர்கள்தான் அதிகம் உள்ளனர்.
சமீபத்தில் லட்சக்கணக்கான தலித் மக்கள் பௌத்த மதத்திற்கு மாறிய நிகழ்ச்சி நடந்துள்ளது. மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் மாவட்டத்தில் 20 லட்சம் பேர் புத்த மதத்திற்கு மாறியுள்ளனர்.

இதுதவிர சந்திராபூரில் 6 லட்சம் தலித்துகள் புத்த மதத்திற்கு மாறினர். இதேபோல ஆந்திரா, பஞ்சாப், மத்திய பிரதேசம், உத்தரப் பிரதேசம், சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களிலும் பெருமளவிலான தலித்துகள் புத்த மதத்திற்கு மாறியுள்ளனர்.

கடந்த சில மாதங்களில் மட்டும் லட்சக்கணக்கில் தலித்துகள் மதம் மாறியுள்ளதாக தலித் மற்றும் சிறுபான்மை அமைப்பின் நிர்வாகியான சின்னா ராவ் தெரிவித்துள்ளார். இந்த மதமாற்றம் போகப் போக அதிகரிக்கவே செய்யும் என்றும் அவர் கூறினார்.
============

(1) ஜாதியக் கொடுமைகளிலிருந்து விடுதலைபெற தலித் சகோதர/சகோதரிகள் இஸ்லாத்துக்கு மாறினால் குதியாட்டம் போடும் பரிவாரங்கள், தற்போது எங்கே சென்றார்கள்?

(2)இந்தியாவில் எது நடந்தாலும் பாகிஸ்தானைக் காரணம் சொல்லி அந்நாட்டின்மீது போரெடுத்துச் செல்ல வேண்டுமென்று உளரும் தொக்காடியா கும்பல், சீனா மீதோ அல்லது இலங்கை மீதோ போரெடுத்ததுச் செல்ல தயாரா?

(3)இப்படி இலட்சக்கணக்கில் இந்து மதத்திலிருந்து விடுதலை பெறும் சகோதரர்கள் பற்றி நேசகுமார்,சிவா,ஜடாயு,எழில்,மதிப்பிற்குறிய டோண்டு சார் ஆகியோர் என்ன சப்பைக்கட்டப் போகிறீர்கள் என்பதை தமிழ் கூறும் நல்லுலகம் அறிந்து கொள்ள ஆவலாக இருக்கிறோம்.

15 comments:

  1. /இந்து மதத்திலிருந்து பிற மதங்களுக்கு மாறுபவர்கள்தான் அதிகம் உள்ளனர்/

    உங்களுடைய கட்டுரையை மிகவும் ரசித்துப் படித்தேன். இங்கே கட்டுரைக்கான சுட்டியையும் கொடுங்கள். நேரடியாகப் படிப்பது இன்னும் நன்றாக இருக்கும்.


    அனைவரும் கவனிக்கத்தவறிய ஒரு அம்சம் - இந்து மதம் மாற்றங்களை ஏற்றுக் கொள்ளும் நெகிழ்ச்சியுடையது.

    தலித்துக்களைக் குறை கூறி பிரயோசனமில்லை. ஏனென்றால் பணத்துக்கு ஆசைப்பட்டு மதம் தாவுதல் ஆண்டாண்டுகாலமாக நடந்து வருவதுதான்.

    மற்றவர்களும் கருத்துக்களை வைக்கட்டும் பிறகு முத்தாய்ப்பாக என் கருத்தை வைக்கிறேன்.

    ReplyDelete
  2. வேஷகுமாருக்கு ஆப்பு பதிவில் பயங்கர ஆப்பு வைக்கப்பட்டுள்ளது. சென்று படிக்கச் சொல்லவும்.

    ReplyDelete
  3. //அனைவரும் கவனிக்கத்தவறிய ஒரு அம்சம் - இந்து மதம் மாற்றங்களை ஏற்றுக் கொள்ளும் நெகிழ்ச்சியுடையது. //

    இது உண்மையென்றால், அந்த தலித் சகோதரர்கள் எதிர்பார்த்த மாற்றங்களை
    இந்து மதம் ஏற்றுக் கொண்டு அவர்களை இந்துவாகவே வாழ விட்டிருக்கலாமே! அவர்கள் இன்னொரு மதத்தை தேடிச் செல்ல வேண்டிய தேவையே ஏற்பட்டிருக்காதே!


    //தலித்துக்களைக் குறை கூறி பிரயோசனமில்லை. ஏனென்றால் பணத்துக்கு ஆசைப்பட்டு மதம் தாவுதல் ஆண்டாண்டுகாலமாக நடந்து வருவதுதான்.//

    இது, கண்ணை மூடிக் கொண்டு உலகம் இருண்டு விட்டதாக பழி சொல்லும் போக்கு. அந்தத் தலித் சகோதரர்கள் என்ன காரணத்திற்காக மதம் மாறினார்கள்? நம்மிடம் ஏதாவது குறை இருக்கிறதா? அதை நிவர்த்தி செய்ய இயலுமா? இவர்களைப் பின்பற்றி இன்னொரு கூட்டத்தினர் இதேபோல் மதம் மாறாமலிருக்க நாம் என்ன செய்யலாம்? போன்ற கேள்விகளைக் கேட்டுக் கொள்ளாமல், அதன் காரண காரியங்களை அலசி ஆராயாமல், 'அவங்க காசுக்கு ஆசைப்பட்டு மதம் மாறிட்டாங்க' என்று பேசுவதால், மதம் மாறிச் சென்ற அந்த சகோதரர்களுக்கு பாதிப்பு எதுவும் இல்லை. அவர்கள் மதம் மாறியதற்கான அடிப்படைக் காரணம் கண்டறியப் பட்டு தீர்வு காணப்படும் வரை இது போன்ற மதமாற்றங்கள் நிகழந்து கொண்டுதான் இருக்கும். அதற்கு யார் பொறுப்பு? கண்ணை மூடிக் கொண்டிருப்பவர்கள்தான் கண் திறந்து பார்க்க வேண்டும்.

    ReplyDelete
  4. \\தலித்துக்களைக் குறை கூறி பிரயோசனமில்லை. ஏனென்றால் பணத்துக்கு ஆசைப்பட்டு மதம் தாவுதல் ஆண்டாண்டுகாலமாக நடந்து வருவதுதான்.\\

    சுத்தப்பேத்தலாகீது மாமூ, முகம்மது வாளெடுத்து முன்னால இந்தப் பரதேசிங்கள முஸல்மானக்குனாறு. இப்போ பணத்துக்கு ஆசப்பட்ரானுங்களா?. நல்லாகீதுபா உங்க நாயம்.

    ReplyDelete
  5. \\அனைவரும் கவனிக்கத்தவறிய ஒரு அம்சம் - இந்து மதம் மாற்றங்களை ஏற்றுக் கொள்ளும் நெகிழ்ச்சியுடையது.\\

    எல்லோருமே கவனிக்கத்தான் செய்கிறோம், உங்க வேதத்தை மொழி பெயர்த்து எல்லோருக்கும் கொடுங்கள் முஸ்லிம், கிருஸ்துவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்ப்போம்.

    ReplyDelete
  6. \\அனைவரும் கவனிக்கத்தவறிய ஒரு அம்சம் - இந்து மதம் மாற்றங்களை ஏற்றுக் கொள்ளும் நெகிழ்ச்சியுடையது.\\

    இந்து (அறீய) மட தூதரு சொன்னாருபா, நாமெல்லாம் நல்லவங்களா இருந்தா செத்தப்புறம் கடவுளோட கடவுளா ஆயிரலாமா. அனனை தெரசாவ குறிச்சு செய ராமன் முஸ்லிமாண்ட கேக்குறாரு அவருக்கு சொர்க்கமா? நரகமான்னு. இப்போ சொல்லுங்கப்பா? அன்னை தெரசாவுக்கு உங்க கோவிலுல செலை எங்கப்பா?, படையல் பூசல்லாம் எங்கப்பா?. உங்க சாமியோட சரிக்கு சமம பூச பண்ணிலியாப்பா?.

    ReplyDelete
  7. \\தலித்துக்களைக் குறை கூறி பிரயோசனமில்லை. ஏனென்றால் பணத்துக்கு ஆசைப்பட்டு மதம் தாவுதல் ஆண்டாண்டுகாலமாக நடந்து வருவதுதான்.\\

    இது இல்ல நெசமான காரணம், கீழே உள்ளத படிச்சா நாங்கல்லாம் நாண்டுக்கு சாகணும்.

    http://aalamaram.blogspot.com/2006/11/blog-post_11.html

    ReplyDelete
  8. \\எல்லோருமே கவனிக்கத்தான் செய்கிறோம், உங்க வேதத்தை மொழி பெயர்த்து எல்லோருக்கும் கொடுங்கள் முஸ்லிம், கிருஸ்துவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்ப்போம்.\\

    ரெம்பதான் நப்பாசை உங்களுக்கு அப்போ இந்தியாவுல "பீ அள்ள நீங்க ரெடியா?". இல்ல இந்த இந்தியாவின் பூர்விக குடிகள் ஆறியர்கள்தான் ரெடியா?. நாமெல்லாம் இந்த நாட்டின் வந்தேரிகள் அதுனாலதான் நாம பிறவிக்கடனுக்காக இதைச் செய்யனும். இந்த வம்பே வேண்டானுதான் நம்ம முன்னோர்கள் சுய மரியாதையோட வாழ இப்படியெல்லாம் மதம் மாறுனாங்க. வாளுக்கு பயந்தோ இல்ல காசுக்கோ மாறுனா இந்நேரம் இந்த இஸ்லாம், கிரிஸ்துவெல்லாம் எப்பவோ செத்திருக்கும்.

    ReplyDelete
  9. \\இது, கண்ணை மூடிக் கொண்டு உலகம் இருண்டு விட்டதாக பழி சொல்லும் போக்கு. அந்தத் தலித் சகோதரர்கள் என்ன காரணத்திற்காக மதம் மாறினார்கள்? நம்மிடம் ஏதாவது குறை இருக்கிறதா? அதை நிவர்த்தி செய்ய இயலுமா? இவர்களைப் பின்பற்றி இன்னொரு கூட்டத்தினர் இதேபோல் மதம் மாறாமலிருக்க நாம் என்ன செய்யலாம்? போன்ற கேள்விகளைக் கேட்டுக் கொள்ளாமல், அதன் காரண காரியங்களை அலசி ஆராயாமல், 'அவங்க காசுக்கு ஆசைப்பட்டு மதம் மாறிட்டாங்க' என்று பேசுவதால், மதம் மாறிச் சென்ற அந்த சகோதரர்களுக்கு பாதிப்பு எதுவும் இல்லை. அவர்கள் மதம் மாறியதற்கான அடிப்படைக் காரணம் கண்டறியப் பட்டு தீர்வு காணப்படும் வரை இது போன்ற மதமாற்றங்கள் நிகழந்து கொண்டுதான் இருக்கும். அதற்கு யார் பொறுப்பு? கண்ணை மூடிக் கொண்டிருப்பவர்கள்தான் கண் திறந்து பார்க்க வேண்டும்.\\

    என்ன மரைக்காரு புதுசு புதுசா என்னமோ விளங்காத பாசையில் பேசிக்கிட்டு, நாங்க முகமதுவையே ஆரியருங்குறோம். நீங்க வேற இங்கே இருக்குற தலித் ஆளுங்களை எல்லாம் மதம் மாற்றி உட்ருவிங்க போலிருக்கு. அப்புறம் யாரு எங்களுக்கு சேவை செய்வா?.

    ReplyDelete
  10. யோவ் வேசகுமார் சொக்கன்,
    தலித்துகள் பணத்துக்காக மதம் மாறுறாங்கன்னு எழுத உனக்கு வெக்கமா இல்ல... நீயெல்லாம் ஒரு மனுஷன்....

    இந்த மதம்ங்கற குப்பைய தூக்கி சாக்கடைல போடுங்கைய்யா... மனுசனா வழ்றதுக்கு முதல்ல வழிய பாருங்க...

    ReplyDelete
  11. //தலித்துகள் பணத்துக்காக மதம் மாறுறாங்கன்னு எழுத உனக்கு வெக்கமா இல்ல... நீயெல்லாம் ஒரு மனுஷன்....//

    //யோவ் வேசகுமார் சொக்கன்//

    அன்பின் அணாணி,

    முதலில் தனிமனித தாக்குதலை நிறுத்துங்கள். இந்து மதத்தில் என்ன குறை உள்ளது? ஆப்ராகாமிய மதங்களை விட ஆயிரம் மடங்கு சகிப்புத் தனைமையை தன்னகத்தே கொண்டு எத்தனை ஓடுகாலிகள் போனாலும் கங்கையைப் போல் அமைதியாக இருந்து வருகிறது. அதுதான் இந்து ஞானமரபுத்தத்துவம்.

    புத்தமதத்தில் சேர்ந்து ஒன்றும் ஆகப்போவதில்லை. முழுநீல காவித்துண்டை போர்த்திக் கொள்ள கொடுத்து நிர்வாண நிலை அடையக் கற்றுக் கொள்வது மட்டுமே மிஞ்சும். பர்மாவில் தோன்றிய புத்த மதம் காலாவதியாகி விட்டதை பாவம் அந்த ஓடுகாலிகள் அறியவில்லை.

    ஜெயமோகன் அவர்கள் சொன்னதுபோல் இந்து ஞானமரபு சிறுசிறு மடங்கள் முதல் சிருங்கேரி பீடங்கள்வரை தழைத்து ஓங்கிக் கொண்டுதான் இருக்கிறது.

    ReplyDelete
  12. Cabn you please give the link for the news item which says that lakhs of dalits have converted to
    other religions from Hinduism.

    ReplyDelete
  13. We hindus do not kill those who want to convert to other religion.

    ReplyDelete
  14. //We hindus do not kill those who want to convert to other religion.//

    But we will kill a fellow hindu if he skin a dead animal, because that animal is more sacred for us than a human being!

    ReplyDelete
  15. ரெத்தினம்November 16, 2006 at 3:34 AM

    இறைநேசன் சார்.

    நீங்கள் கேட்டிருக்கும் கேள்விகள் செருப்பால் அடித்த மாதிரி இருந்திருக்கும் போல. நேசகுமாரிடம் பதிலை எதிர் பார்க்கிறீர்களா? எப்படி வரும்? இதுகாரும் எப்படியாவது ஒருசிலரை உங்கள் மதத்தை விட்டு இழுத்து வந்துவிடலாம் என்று நெனச்சு எழுதி வந்தார். ஆனாக்கா உள்ளதும் போச்சுடா நொள்ளைக் கண்ணான்னு சுளையாக 30 இலட்சம் பேர் விட்டாப் போதும்டா சாமிங்களான்னு ஓடிட்டாங்க. கொடுத்து வச்சவங்க.

    (எங்கள் ஊரான திண்டுக்கல்லில் 10 குடும்பங்கள் இசுலாம் மதம் அல்லது புத்தமதம் மாற இருக்கோம். யாரை அனுகுவதுன்னு தெரியலே. அட்ரஸ் கிட்ரஸ் இருந்தா தயவு செய்து எனக்கு மெயில்போடுங்க.)

    mrrethinam@yahoo.co.in

    ReplyDelete