Tuesday, September 19, 2006

இது (குள்ள) நரிகளுக்கான அழைப்பிதழ்!

சகோதரர் ஜோ அவர்களின் போப்பாண்டவரும் இஸ்லாமும் -சர்ச்சை என்ற பதிவில் சில கருத்துக்களை கூறியிருந்தேன். எப்பொழுதும் போல் சந்தில் சிந்து பாடும் சிலர் அங்கும் வந்து என்னுடைய கருத்துக்களை திசை திருப்பி தங்களது மனவக்கிரத்தை தீர்த்துக் கொண்டிருக்கின்றனர்.

அங்கு அவர்களுக்கு கொடுத்த பதிலை இங்கு வைக்கிறேன். அவர்களுக்கான திறந்த அழைப்பிதழே இப்பதிவு. தொடர்ந்து அங்கு இதனைக் குறித்து விவாதித்தால் பதிவின் நோக்கம் திசைதிரும்பும் வாய்ப்பிருப்பதால் அவர்களுக்காக மலர்களில் ஒரு களம் ஒதுக்கும் ஏற்பாடே இது.


எதிர்பார்த்தது போல் திசைதிருப்பல் அருமையாக நடந்துள்ளது.

ஒரு உதாரணம்:

//போர் நடக்கப்போவது இஸ்லாமியர்களுக்கும் இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கும்(அமெரிக்கர்,அய்ரோப்பியர் எல்லாம் வேறு யாராம்)//

அமெரிக்கர் ஐரோப்பியர் எல்லாம் முஸ்லிம் அல்லாதவர்களாம்.
நான் ஏற்கெனவே போட்ட பின்னூட்ட வாசகத்தை திரும்பவும் ஒருமுறை படித்துக் கொள்ளுங்கள்.

//இரு சகோதரர்களுக்கிடையில் மூட்டிவிட்டு குளிர்காய நினைத்து ஏமாந்த குள்ளநரிகள்//

மூட்டி விட்டு குளிர்காய நினைக்கும் இரத்த வெறிபிடித்த அசோக் சிங்கால், தொகாடியா, மோடி கூட்டங்களுக்கு ஒரு வேண்டுகோள். உங்களின் கோணபுத்தியையும், வக்கிர எண்ணங்களையும் இங்கு வந்து கொட்ட வேண்டாம்.

நல்ல எண்ணத்தில் கருத்து வேறுபாடு கொண்ட இரு சமூகங்களின் செயல்பாடுகளை குறிப்பிட்டு மனங்களுக்கிடையில் இணக்கத்தை ஏற்படுத்தும் முகமாக சகோதரர் ஜோ அவர்கள் போட்ட இப்பதிவிலும் வந்து உங்களின் கயமைத்தனத்தை காட்டுவது சரிதானா என யோசித்துப் பாருங்கள்.

//நேர்மையாக பதில் சொல்வார் யாருமிலர்...//

உங்களின் நேர்மையான கேள்வி என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது.
எனினும் பதிலளிக்க நான் தயாரே. ஆனால் இவ்விடம் அதற்கு உகந்ததாக படவில்லை. உங்களின் "நேர்மையான" கேள்விகளுக்கு பதிலளிக்கவும் விவாதிக்கவும் "மலர்கள்" எப்பொழுதும் தயாராகவே உள்ளது. உங்கள் கேள்வியில் நேர்மையிருப்பின் வாருங்கள். விவாதிப்போம்.

அன்பு சகோதரர் ஜோ அவர்களுக்கு,

நான் இவ்வாறு கூறுவதற்காக என்னை நீங்கள் தவறாக எடுத்துக் கொள்ள மாட்டீர்கள் என நினைக்கிறேன். நீங்கள் தயவு செய்து இப்பதிவுக்கு தொடர்புள்ள பின்னூட்டங்களை மட்டும் அனுமதிக்க கோருகிறேன். தேவையற்ற திசைதிருப்பல்கள், முடிந்த அளவு மூட்டி விட்டு குளிர்காய நினைப்பவர்களின் பின்னூட்டங்களை தவிருங்கள். அது தான் இப்பதிவினை எழுத தூண்டிய உங்கள் நோக்கத்திற்கு நல்லது.

மோடி, அசோக் சிங்கால் கூட்டத்தினரின் மொள்ளமாரித்தனத்தை தோலுரிக்கும் ஒரு சுட்டியை இதற்கு முன்னே நான் தந்திருக்கிறேன். அதனை ஒரு முறை கூட இங்கு தருகிறேன். அப்பதிவினை நன்றாக படிக்கவும். அசோக் சிங்கால் நரிக் கூட்டத்தின் செயல்பாட்டின் தொடர்ச்சியை தான் இங்கும் நீங்கள் காண்கிறீர்கள்.

அவர்களுக்குத் தேவை எப்படியாவது மற்றவர்கள் அடித்துக் கொண்டு சாக வேண்டும். அதற்கு நீங்களும் ஒரு தளத்தினை தயவு செய்து அமைத்துக் கொடுக்க வேண்டாம்.

//உலகப்போர் எல்லாம் வந்தால் ஒரு நாளைக்கு மேல் போர் நடக்காது.//

இது எப்படி சாத்தியம் என்பதை மட்டும் நன்றாக புரிந்து கொண்டால் இந்த மோடி, தொகாடியா கூட்டங்களின் திசைதிருப்பல்கள் அர்த்தமற்று போகும்.

அமெரிக்க அண்ணனின் கையில் இருக்கும் அணுகுண்டுகளில் ஒன்று போதும் இது நடைபெறுவதற்கு. அமெரிக்க அண்ணன் இன்று யாரை நோக்கி தீவிரவாதி என கைநீட்டுகிறானோ அவனுக்கு எதிராக ஒன்றும் யோசிக்காமல் களமிறங்க வளர்ப்பு நாய்கள் இன்று ஆலாய் பறப்பதைப் பார்த்தால் அது நடப்பது வெகு தொலைவில் இல்லை எனத் தெரிகிறது.

இதனைக் குறித்து நான் கூறியதை தான் அழகாக திசைதிருப்பியுள்ளனர்.

எப்படியாவது இறை நேசன்களை தீவிரவாதிகளாக்கி விடவேண்டும் "அவாள்"களுக்கு. இறை நேசன்கள் மீது "அவாள்"களுக்கு அவ்வளவு அன்பு.

இன்றைய தீவிரவாதத்திற்கு ஊற்று கோலாக இருக்கும் இந்த அமெரிக்க அராஜக போக்கிற்கு எதிராக உண்மை, நீதியின் பக்கம் நிற்கும் ஒரு கூட்டம் இங்கு தயாராகி இருக்கிறது பாருங்கள். இதனைக் குறித்து தொகாடியா கூட்டங்கள் என்ன நினைக்கின்றன. நீதியின் பக்கம் நிற்பதால் இவர்கள் எல்லாம் முஸ்லிம்கள் என்றா?

நிச்சயம் இக்கூட்டம் வளரும். இதன் செயல்பாடுகள் எல்லாவகையிலான மக்கள் விரோத தீவிரவாதங்களுக்கு சாவு மணி அடிக்கும். இச்செயல்பாட்டிற்கு எதிராக அமெரிக்க தீவிரவாதம் வலுக்கும் எனில் அது கடைசியில் ஒரு யுத்தத்தில் தான் போய் நிற்கும். அந்த யுத்தம் நீதிக்கும் அநீதிக்கும் இடையிலான யுத்தமாக இருக்கும். அப்பொழுதும் அமெரிக்கா தாங்கள் தீவிரவாதிகளுக்கு ஆதரவு தெரிவிப்பவர்களுக்கு எதிராக நிற்பதாக கூவிக் கொள்ளும். அந்த யுத்தத்தில் அமெரிக்க, இஸ்ரேலிய அராஜகங்களுக்கு எதிரான இந்திய அரசின் நிலைபாட்டிற்கு எதிராக இந்தியாவிலிருந்து ஒரு பெருங் கூட்டம் அமெரிக்காவிற்கு வாலாட்டும். அது நிச்சயமாக இந்திய சுதந்திரத்திற்காக தங்கள் விகிதாச்சாரத்தை விட அதிகமாக தங்கள் இரத்தத்தால் வீரகாவியம் எழுதிய முஸ்லிம்களாக இருக்க மாட்டார்கள் என என்னால் உத்தரவாதம் தர இயலும். அப்படியெனில் "அவாள்"கள் யாராக இருக்கும்?

11 comments:

  1. சகோதரர் இறைநேசன்,
    உங்கள் கருத்துக்கு நன்றி .பல பின்னூட்டங்கள் பதிவின் நோக்கத்திலிருந்து விலகும் கருத்துக்களை கொண்டிருப்பதை நான் அறிவேன் .ஆனால் இம்முறை தனிமனித தாக்குதல் தவிர அனைத்து கருத்துக்களையும் வெளியிடலாம் என எண்ணினேன் .ஏனென்றால் இவ்விடயத்தில் பலரும் கொண்டிருக்கும் கருத்தை நான் மட்டுமல்ல மற்றவரும் அறிய வேண்டும் என நினைக்கிறேன் .மாறுபட்ட அல்லது அறியாமையின் விளைவாக வரும் கருத்துக்கள் கூட ..இப்படியும் கருத்துக்கள் இருக்கின்றன என்பதை அறிந்து கொள்ள உதவும் தானே!

    எவ்வாறாயினும் இந்த விடயத்தில் இஸ்லாமியர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் மோதலை தூண்டிவிட்டு குளிர் காய்வது என்பது குறைந்த பட்சம் தமிழ் வலைப்பதிவுகள் தளத்தில் நடைபெறாது என திடமாக நம்புகிறேன் .நான் உட்பட அனைத்து கிறிஸ்தவ வலைப்பதிவர்களும் போப்பாண்டவரின் செயலை கண்டித்திருக்கிறார்கள் என்பதை நீங்கள் பார்க்கிறீர்கள் . இந்து ,முஸ்லிம் ,கிறிஸ்தவர் எந்த மதமாய் இருந்தாலும் நல்லிணக்கத்தை குலைக்க நினைக்கும் ஒரு சிலரின் எண்ணங்கள் நிறைவேறாதிருக்க இறைவன் அருளட்டும் ...இன்ஷா அல்லா!

    ReplyDelete
  2. எது மொள்ளமாறித்தனம் என பண்ணுகிறவர்களுக்கு அல்லவா தெரியும் இறை நேசன்...வலையுலகில் சில ஹிந்துத்வா ஆதரவாளர்கள் பார்ப்பனர்கள் என்பதால் ஒட்டுமொத்த பார்பனர்களும் ஹிந்துத்வா ஆதரவாளர்கள் போல் "அவாள்" "இவாள்" என்று எகதாளம் பேசும் நீங்களெல்லாம் நடுநிலையாளர்கள் போல் பேசாதீர்கள்...எல்லா முஸ்லீம்களும் தீவிரவாதிகள் என்று சொல்வதில் எவ்வளவு கோபம் வருகிறதோ...அதேபோல்தான் அனைத்து பார்ப்பனர்களும் ஹிந்துத்வாவை ஆதரிப்பவர்கள் என்பது போல் எழுதுவதும் ...மற்ற நடுநிலையாளர் மனதைப் புண்படுத்தும் என அறிந்து கொள்க....

    ReplyDelete
  3. //அப்படியெனில் "அவாள்"கள் யாராக இருக்கும்?//

    அதான் கேள்வியிலே பதிலிருக்கின்றதே.

    ஆனாலும் உங்களுக்கு குஸும்பு கொஞ்சம் ஸாஸ்தி தான்.

    ReplyDelete
  4. சகோதரர் விசித்திரக் குப்தன் அவர்களே,

    இப்பதிவு நடுநிலையாளர்களை புண்படுத்துவதற்காக எழுதியது அல்ல. என் நோக்கமும் அதுவல்ல. என் நோக்கம் முழுமையாக வெளிப்படவில்லை எனில் அது வெளிப்படுத்தும் விதத்தில் உள்ள தவறு. அவ்வாறு நடுநிலையாளர்களை புண்படுத்தியிருப்பின் மன்னித்துக் கொள்ளுங்கள்.

    எல்லா இடத்தும் எல்லாரும் இருக்கின்றார்கள் என்பதை ஒப்புக்கொள்ள அனைவரும் தயாராக வேண்டும்.

    வேதனை என்பது அனைவருக்கும் பொதுவானதே.

    அன்புடன்
    இறை நேசன்

    ReplyDelete
  5. //ஆனாலும் உங்களுக்கு குஸும்பு கொஞ்சம் ஸாஸ்தி தான்.//

    அனானிமஸ் சகோதரரே,

    இந்தக் குசும்பை விடவா என் குசும்பு அதிகமாகி விட்டது?

    அன்புடன்
    இறை நேசன்

    ReplyDelete
  6. BISMILLAHIRRAHUMANIRRAHEEM

    POPE WORDS A HAPPIEST ONE FOR HINDUTVA ACTIVITIES.THEY EXPECT A CLASH BETWEEN MUSLIM AND CHRISTIAN WORLD WIDE.THIS IS NOT A SURPRISE ONE

    ReplyDelete
  7. பிரிட்டீஷ் ஆட்சி காலத்திலும், பிரிட்டீஷ் காலத்து முன்பு இந்தியாவை ஆண்ட முகலாய ஆட்சி
    காலத்திலும், அதன் முன்பு நடந்த ஆட்சி காலத்திலும் பொறாமை துவேஷர்கள்
    இருக்கத்தான் செய்தார்கள். அவர்கள் நடத்திய் அராஜகம்கள் ஒன்றும் மக்களுக்கு
    மறக்காது. அதுதான் மறைந்த பெரியவர் ஒரு மொழி சொல்லி விட்டு போனார்.
    பாம்பை விட விஷம் என்று. முதலில் அவர்களை அடித்து விட்டு, பின்னர் பாம்பை
    அடிக்க சொன்னார். அதனால் இதற்கு எல்லாம் தாங்கள் வருத்தம் கொள்ளாமல்
    அறிஞர் அண்ணா சொன்னதுப்போல் "பனம்காட்டு நறி இந்த சல சலப்புக்கு ஒன்றும்
    அஞ்சாது" என்று நீங்கள் உங்கள் எழுத்துப்பணி வீறு நடைப்போட எல்லாம் வல்ல
    இறைவனிடம் வேண்டுகிறேன்.

    Asalamone

    ReplyDelete
  8. இளவெண்ணிலாSeptember 20, 2006 at 5:38 AM

    இறைநேசன் அவர்கள் என்னை இங்கு விவாதிக்க அழைக்க விரும்புவதாக இருந்தால்,

    ஆரோக்கியம் கெட்டு சீரழிஞ்சு,சிக்கி சின்னாபின்னமாகிப் போனவர்கள் மத்தியிலும், அவர்களின் அநாகரீகப் பின்னுட்டங்களை அனுமதித்துவிட்டு ஒன்றும் தெரியாததுபோல இருக்கும் குள்ளநரிகளின் பதிவுகளிலும் நான் எதுவும் எழுதமாட்டேன் என்று இறைநேசன் அவர்களுக்கு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்..

    ReplyDelete
  9. புரிதலுக்கு நன்றி...

    மன்னிப்பெதற்கு....இது உங்கள் பதிவு...

    ReplyDelete
  10. ஆரோக்கியம் kettavanSeptember 22, 2006 at 5:38 AM

    இறைநேஸன்,

    ஸம்பந்தம் இல்லாத இடத்தில் நின்னு கூவாமல் இங்கேயே வந்து நேர்மையாக விவாதத்தில் பங்கு பெற புலிப்பாண்டி அவர்கள் விருப்பம் தெரிவித்திருப்பதால் என் முந்தைய பின்னூட்டத்தை அழித்து விடுகிறேன்.

    தங்களின் விவாதத்தை நல்ல முறையில் நடத்த நான் தடைக்கல்லாக இருக்க விரும்பவில்லை

    இனி வருகிறாரா எனப் பார்ப்போம். அவரது நேர்மையும் இனித் தெரியுமே!

    ReplyDelete
  11. இளவெண்ணிலாSeptember 25, 2006 at 11:15 PM

    vanththeen saami...

    //நேர்மையாக பதில் சொல்வார் யாருமிலர்...//

    ippa sollungka pathil..keettukkiReen..

    ReplyDelete