Wednesday, October 5, 2005

யார் பகுத்தறிவுவாதிகள்!

இரு பிரிவினர்...

இன்று உலகில் வாழும் மனித சமுதாயத்தை இரண்டு பெரும் பிரிவினர்களாகப் பிரிக்கலாம் அவர்களில் ஒரு கூட்டம் இறைவனையும் மறுமையையும் மறுக்கும் கூட்டம் வாழ்க்கை வாழ்வதற்கே ஆண்டு அனுபவிப்பதற்கே பிறந்திருக்கிறோம் தம் மனம் சரியென்று கருதுவதையே-காண்பதையே வாழ்க்கையாகக் கருதி. வாழ்ந்து அனுபவித்து மடிய வேண்டியதுதான். மடிந்தபின் மண்ணோடு மண்ணாக ஆகி விடுவோம் அதன் பின் ஒரு வாழ்க்கை இல்லை. என்பதே இக்கூட்டத்தாரின் நம்பிக்கையாகும். இவர்களையே நாஸ்திகர்கள் என்று அழைக்கிறோம்;

இந்த நாஸ்திக நண்பர்கள் என்ன சொல்கிறார்கள்? இவர்களின் வாதத்தில் உண்மையிருக் கிறதா? அவர்கள் வாழ்வில் வெற்றியடையக்கூடியவர்களா? என்பனவற்றை அவர்கள் மதித்துப்போற்றும் பகுத்தறிவு கொண்டே ஆய்வு செய்வோம்.இவர்கள் தங்களைப் பகுத்தறிவுவாதிகள் என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள் அதாவது தங்கள் சிந்தனையில் வராதவற்றை எல்லாம்.புலன்களுக்கு எட்டாதவற்றையெல்லாம். மறுத்து விடுவது என்பதே இவர்களின் பகுத்தறிவு வாதமாகும். அந்த அடிப்படையில் இறைவனை இவர்களின் அறிவுத் திறமையால் ஆராய்ந்தறிய முடியவில்லை. புலன்களாலும் உய்த்துணர முடியவில்லை.மறுமை விஷயத்திலும் இதே நிலைதான்! ஆகவே இறைவனும் இல்லை. மறுமையும் இல்லை என்று துணிந்து கூறிவிடுகிறார்கள்.

பகுத்தறிவின் நிலை...

நாஸ்திக நண்பர்கள் நம்பிக்கை வைத்திருக்கும் பகுத்தறிவும். புலன்களும். எந்த அளவு நம்பிக்கைக்கு உரியன என்பதை முதலில் பார்ப்போம். ஏனென்றால் அளப்பதற்கு முன் அளக்கும் கருவி யையும். நிறுப்பதற்கு முன் நிறுக்கும் கருவியையும். கண்டிப்பாக சரிபார்த்துக் கொள்ள வேண்டும். இல்லை யென்றால் அளவையிலும் நிறுவையிலும் தவறுகள் ஏற்ப்பட்டு விடும் என்பதை நாஸ்திக நண்பர்களும் மறுக்க மாட்டார்கள்!

பகுத்தறிவைக் கொண்டு மிகப் பெரிய விஷயமான இறைவனையும் இன்னொரு பெரிய விஷய மான மறுமையையும் ஆராயப் புகுமுன். அதே பகுத்தறிவைக் கொண்டு மட்டும் சிறிய விஷயமான நமக்கு நெருக்கமான தாயையும். தந்தையையும் முதலில் அறிந்து கொள்ள முயற்சி செய்தால் அதன் முடிவு என்ன? தலை முடியை பிய்த்துக் கொண்டாலும் சுயமாகத் தம் பகுத்தறிவைக் கொண்டு இவர்கள் தம்மைப் பெற்றெடுத்த தாயையும் தந்தையையும் உறுதியாக அறிந்து கொள்ள முடியாது. உடனே இவர்கள் எனக்கு தாயும். தகப்பனும் இல்லை. நான் வானத்திலிருந்து குதித்து விட்டேன் என்று சொல்வார்கள்? இங்கு தன்னைப் பெற்றெடுத்தவர்களை அறிந்து கொள்ள இவர்களின் பகுத்தறிவும் புலன்களும் உதவுவதாக இல்லை. ஊரை நம்பி தாயையும். தாயை நம்பி தந்தையையும் அறிந்து கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறார்கள். தன்னைப் பெற்றெடுத்த தனக்கு மிகவும் நெருக்கமான பெற்றோரைத் தனது பகுத்தறிவு கொண்டு அறிந்து கொள்ள முடியாதவனா அந்த பகுத்தறிவின் துணை கொண்டு தன்னையும் தன் பெற்றோ ரையும் அகிலங்கள் அனைத்தையும் படைத்துப் போஷிக்கக் கூடிய சர்வ வல்லைமைமிக்க இறைவனை அறிந்து கொள்ள முடியுமா? ஒரு போதும் முடியாது! தங்கள் பகுத்தறிவையும் சிந்தனா சக்தியையும் பெரிதாக நம்பும் இந்த நாஸ்திகர்கள் தாங்கள். தங்கள் தாயின் கர்ப்பப்பையில் 10 மாதம்இருந்து வந்ததை தமது சிறு பிராயத்தில் நடந்த சம்பவங்களை சிந்தித்து விளங்கிக் கொள்ள முடிகின்றதா?

கண் முன்னால் பல குழந்தைகள் தாயின் வயிற்றிலிருந்து பிறப்பதைப் பார்த்து விளங்குகிறோம் என்று சொல்வது தவறு! அப்படியொரு வாய்ப்பு தங்களுக்குக் கிடைக்க விட்டால் தாங்கள் கர்ப்பப்பையிலிருந்து வந்ததை மறுப்பார்களா?நடந்த நிகழ்ச்சியைச் சிந்தித்து விளங்கிக் கொள்ள முடியாதவன். நடக்கப் போகும் ஒரு நிகழ்ச்சியை.அதுவும் மரணத்திற்குப் பின் நடக்க இருப்பதைச் சிந்தித்து விளங்கிக் கொள்ள முற்படுவது விவேகமான செயலா? என்று சிந்திப்பார்களாக!

அ...ப்...பா என்று சொல்வதற்கே தாளம் போடுகிறவன் திருக்குறளுக்கு விளக்கம் சொல்ல முடியாது என்பதையும் 2 ம் 2 ம் 4 என்பதைத் தெரியாதவன் 2 ம் 93 ம் எவ்வளவு? என்பதை நிச்சயமாக அறியமாட்டான். என்பதை எவ்வளவு நிச்சயமாக அறிந்து வைத்திருக்கிறோமோ. அதே போல் பெற்றெடுத்த வர்களை பகுத்தறிவால் அறிய முடியாதவரை இறைவனையும். மறுமையையும் நிச்சயமாக அறிந்து கொள்ள முடியாது என்பதையும் உணர வேண்டும் ஒன்றுமே இல்லாமல் இருந்து இன்று மனிதனாக உலா வருகிறோமே. இதை முறையாகச் சிந்தித்தால் நம்மைப் படைத்த இறைவன் இருக்கிறான் என்பதை உணர முடியும்!

உலகில் பார்க்க முடியாதவை பல...

அடுத்து எத்தனையோ காரியங்களை கண்ணால் பார்க்க முடியாமல் அவற்றின் விளைவுகளை வைத்து நாஸ்திகர்கள் ஏற்றுக்கொள்ளத்தான் செய்கிறார்கள். உயிர்.காற்று.வலி.மின்சாரம் இவற்றைக் கண்ணால் பார்க்க முடியாவிட்டாலும் விளைவுகளை வைத்து ஒப்புக்கொள்ளத்தான் செய்கிறார்கள் சிறுநீரில் சர்க்கரை இருக்கிறதா? என்று எந்த டாக்டரும் சுவைத்துப் பார்த்துச் சொல்வதில்லை அப்படி எந்த நாஸ்திக நண்பரும் எதிர் பார்க்கவும் மாட்டார்.சிறு நீரில் சர்க்கரையிருந்தால் அதன் விளைவு என்ன என்பதை வைத்தே ஒப்புக்கொள்கிறார்கள். இதேபோல் உடம்பிலுள்ள எத்தனையோ வியாதிகளைக் கண்ணால் பார்த்தோ. புலன்களால் நேரடியாக உய்த்துணர்ந்தோ வைத்தியம் செய்யப் படுவதில்லை வியாதி களின் விளைவுகளை வைத்தே முடிவு செய்யப்படுகிறது ஆறடி மனிதனுக்குள் இருக்கும் ஒரு வியாதியை நேரடியாகப் பார்க்க முடியவில்லை புலன்களாலும் உய்த்துணர முடியவில்லை.

இவ்வளவுதான் மனிதனின் பகுத்தறிவின் புலன்களின் நிலைகள். இந்த நிலையில் இவற்றை வைத்துக் கொண்டு இறைவனையும் மறுமையையும் அறிய முற்படுவது விவேகமான செயலா? என்று நாஸ்திக சகோதரர்கள் சிந்திக்க வேண்டும் இதுவரை நாம் சொல்லி வந்தது போல் உலகில் எத்தனையோ விஷயங்களை பகுத்தறிவு கொண்டு புலன் கள் கொண்டு நேரடியாக விளங்கிக் கொள்ள முடியாதவற்றை ஒப்புக்கொள்ளும் நாஸ்திக நண்பர்கள் இறைவனையும் மறுமையையும் நேரடியாகப் பார்த்தே புலன்களால் உய்த்துணர்ந்தே ஒப்புக்கொள்வோம் இல்லையென்றால் ஏற்றுக்கொள்;ளமாட்டோம் என்று விவாதிப்பது நாஸ்திகர்கள் ஏதோ ஒரு வகையில் தவறான நிலையில் இருக்கிறார்கள் என்பதையே நமக்கு உணர்த்துகிறது இவர்களின் பகுத்தறிவு வாதத்தின் ஆழத்தை அறிந்து கொள்ள சரித்திரத்தில் இடம் பெற்றுள்ள ஒரு சம்பவத்தை- ஓர்அறஞருக்கும். நாஸ்திகருக்கும் நடந்து முடிந்த போட்டி விபரங்களை அறயத்தருகிறோம்.

அழகிய படிப்பினை...

ஓர் அறிஞர் இறைவன் இருக்கிறான் என்று சொன்னார்;.நாஸ்திகர் 'உங்களால் அப்படி நிரூபிக்கவே முடியாது பகிரங்கமாக நமது போட்டியை வைத்துக் கொள்வோம் மக்களெல்லாம் பார்வையாளர்களாக இருக்கட்டும்" என்றார். இருவரும் போட்டிக்கு ஒப்புக் கொண்டு நாளும் நேரமும் குறிப்பிடப்பட்டு அறிவிக்கப்பட்டது. குறிப்பிட்ட நாளில் நிர்ணயித்த நேரத்திற்கு சரியாக நாஸ்திகர் போட்டி நடை பெரும் இடத்திற்கு வந்து விட்டார் மக்கள் நிரம்பி வழிகிறார்கள் அறிஞரையோ காணவில்லை நாஸ்திகர் முகத்தில் மகிழ்ச்சி களை கட்டியிருந்தது இறைவன் இருக்கிறான் என்று நிரூபிக்க முடியாது என்று அஞ்சி அறிஞர் வீட்டிலேயே இருந்து விட்டார் என்று அங்கு பேசிக்கொள்ளப்படுகிறது

இந்த நிலையில் தூரத்தில் அந்த அறிஞர் ஓட்டமும் நடையுமாக வருவது தெரிந்தது வேகமாக வந்த அறிஞர் மேடையில் ஏறினார்!முதலில் நான் காலதாமதமாக வந்ததற்கு உங்கள் அனைவரிடமும் மன்னிப்புக் கேட்டு க்கோள்கிறேன். உரிய நேரத்தில் வீட்டை விட்டு கிளம்பி விட்டேன்.இங்கு வந்து சேர நான் ஒரு ஆற்றைக் கடந்து வர வேண்டும். வழக்கமாக தோணிக்காரன் இருப்பான் இன்று தோணிக்காரனும் இல்லை தோணியும் இல்லை. எனக்கு மிகவும் கவலையாகி விட்டது போட்டிக்கு ஒப்புக்கொண்டிருக்கிறோமே உரிய நேரத்தில் போகா விட்டால் அது எவ்வளவு பெரிய இழுக்கு என்று என் மனம் மிகவும் வேதனைப் பட்டது திடீரென்று ஒரு அதிசயம் நடந்துது! அங்கே தானாகவே ஒரு மரம் வந்தது அது தானாகவே தோணியாகத் தயாராகி விட்டது உடnனே மகிழ்ச்சியோடு நான் அதில் ஏறி இக்கரை வந்து ஓடோடிவருகிறேன். என்று சொல்லி முடித்ததுதான் தாமதம்:

நாஸ்திகர் என்ன கதை விடுகிறீரா? தானாக மரம் வருமா? தானாத் தோணி தயாராகுமா? இதை எந்த முட்டாளும் ஏற்றுக் கொள்ள மாட்டான் என்று ஆத்திரத்துடன் கேட்டார் அறிஞர் ஆத்திரப்படாமல் நிதானமாக ' சூரியன் தானாக சுழல்கிறது. ப+மி தானாக சூழல்கிறது ப+மியிலுள்ள அனைத்தும் தானாகவே உற்பத்தியாகி இருக்கின்றன என்று நீர் சொல்வதை நாங்கள் நம்ப வேண்டுமென்றால். இவ்வளவு பெரிய பெரிய காரியங்கள் தானாகவே நடப்பது சாத்தியமென்றால். சின்னஞ் சிறு காரியமான ஒரு மரம் தானாக வந்து தானாக தோணி உணடாவது மட்டும் சாத்தியமில்லாத காரியமோ? அதை நம்பக்கூடாதோ? " என்று கேட்டார. இப்போது நாஸ்திகரின் முகத்தில் அசடு வழிந்தது தனது தவறை உணர்ந்தார் நாஸ்திகப்போக்கை மாற்றிக் கொண்டார்.

நண்பர்கள் இதிலிருந்து படிப்பினைப் பெறுவார்களா!

குற்றவாளி தப்பமுடியுமா...?

பகுத்தறிவால் பெறப்படும் முடிவுகள் சரியாக இருக்குமானால் எந்த உண்மையான குற்றவாளி யையும் நீதிபதி குற்றவாளி இல்லையென்று தீர்ப்புக் கூறக் கூடாது நாட்டில் இவ்வாறு நடப்பதில்லை உண்மையான குற்றவாளிகள் விடுவிக்கப் படுகிறார்கள். நிரபராதிகள் தண்டிக்கப் படுகிறார்கள். இது ஒன்றே போதும் பகுத்தறிவின் நிலையை உணர்ந்து கொள்ள. நாஸ்திக நண்பர்களே! பகுத்தறிவை மட்டும் நம்பினால் மோசம் போய் விடுவோம் சிந்தித்து திருந்த வாருங்கள். அடுத்து இறைவனையும். மறுமையையும் பகுத்தறிவாலும் புலன்களாலும் மட்டும் ஏன் அறிந்து கொள்ள முடியவில்லை என்பதற்கான காரணங்களைப் பார்ப்போம்.

இறைவனைப் பார்க்க முடியுமா...?

நாஸ்திக நண்பர்கள் ' இறைவனைக் காட்டுங்கள் கண்ணால் பார்த்து ஏற்றுக்கொள்கிறோம்" என்று பிடிவாதம் செய்கின்றனர். இந்த வாதமே மிகவும் பலவீனமான வாதமாகும். இந்த வாதத்தின் காரணமாக மக்களில் பலர் அதிசயமானஒரு காட்சியையோ. ஒரு நிகழ்ச்சியையோ கண்ணால் பார்த்தவுடன் அதனையே தெய்வமாகவோ. தெய்வாம்சம் பெற்றதாகவோ. ஏற்றுக் கொள்ளும் மன நிலையைப் பெற்று விடுகின்றனர். ஆனால் உண்மை என்ன தெரியுமா? உண்மையான இறைவன் எந்த மனிதனது பார்வையிலோ. புலன்களின் உய்த்துணர்விலோ வரமுடியாது. அப்படி வரும் ஒன்று நிச்சயாமாக இறைவனாக இருக்கமுடியாது. காரணம் மனிதனது பார்வையிலோ. புலன்களின் உய்த்துணர்விலோ வரக் கூடிய ஒன்று நிச்சயமாக சிலக் கட்டுப்பாட்டிற்குள் இருந்தாக வேண்டும். கடடுபாட்டிற்குள் கட்டுப்படும் ஒன்று எப்படி இறைவனாக இருக்க முடியும்?உதாரணமாக நாம் ஒரு பொருளைப் பார்க்க வேண்டுமென்றால் அதற்கு சில நிபந்தனைகள் நிறைவேறியாக வேண்டும். அப்படியானால் தான் அந்தப் பொருளைப் பார்க்க முடியும்; அந்தப் பொருளுக்கு ஒரு உருவம் இருக்க வேண்டும். அந்தப் பொருளில் வெளிச்சம் பட வேண்டும் அந்தப் பொருளுக்கும் கண்ணுக்கும் இடையில் திரை இருக்கக் கூடாது. இவை பார்ப்பதற்குறிய நிபந்தனைகளாகும். அந்தப் பொருளுக்கு உருவம் இல்லையென்றால் நம்மால் பார்க்க முடியாது. அந்தப் பொருளில் வெளிச்சம் பட வில்லையென்றால்- இருட்டில் இருக்கிறதென்றால் நம்மால் பார்க்க முடியாது.

அந்தப் பொருளுக்கும் கண்ணுக்குமிடையில் சாதாரண ஒரு திரை இருக்கிறதென்றால் நம்மால் பார்க்க முடியாது.ஆக இவையெல்லாம் சரியாக இருந்து. அந்தப் பொருளிலிருந்து வெளிச்சம் வெளியாகி. அது நம் கண்களின் ஒளித் திரையை (சுயவiயெ) அடைந்திருந்தால் மட்டுமே நம்மால் பார்க்க முடிகின்றது. அந்தப் பொருள் நமது கண்களின் கட்டுப்பாட்டில் வந்தால்மட்டுமே நம்மால் பார்க்க முடிகின்றது மிகவும் சிறிய பொருளாக இருந்தால் அதைப் பெரிதாகிக் காட்டும் ஒரு கருவியின் உதவி கொண்டே பார்க்க முடிகின்றது.இப்படிப் பட்ட கட்டுப்பாட்டிற்குள்- நிபந்தனைக்குள் வரும் ஒன்று இறைவனாக இருக்க முடியுமா? இப்போது நன்கு சிந்தனை செய்து சொல்லுங்கள். எனவே இறைவனை ஒரு போதும் மனிதர்கள் கண்களால் பார்க்க முடியாது. இப்போது இறைவனைக்காட்டுங்கள் கண்களால் பார்த்து ஏற்றக்கொள் கிறோம். என்று சொல்வதே அறிவார்த்தமான வாதமல்ல என்பதை புரிந்து கொண்டிருப்பீர்கள் அறிவில் குறைந்தவர்களின் பேச்சாகவே இது இருக்க முடியும்;.இதர புலன்கள் சம்பந்தப்பட்ட நிலைகளும் இதைப்போன்றுதான் இருக்கும். மனிதனுக்குக் கொடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு புலனின் சக்தியும் வரையறைக்குள் உட்பட்டிருப்பதையே பார்க்க முடியும் ஒரு புலனின் செயலை மற்றொரு புலன் செய்ய முடியாது கண்ணால் தான் பார்க்க முடியும் காதால் பார்க்க முடியாது. காதால் ஒலிகளைக் கேட்க முடியும் கண்ணால் கேட்க முடியாது. பார்ப்பதற்கு இருப்பதுபோல் கேட்பதற்கும் சில நிபந்தனைகள் இருக்கின்றன. அந்த நிபந்தனைகள் நிறைவு பெற்றால் மட்டுமே கேட்க முடியும்

ஆக மனிதனுக்குக் கொடுக்கப் பட்டுள்ள புலன்களைக் கொண்டு. ஒரு பொருளை அறிந்து கொள் வதாக இருந்தால் அதற்குறிய நிபந்தனைகள் நிறைவேறியாக வேண்டும் இல்லையென்றால் அறிந்து கொள்ள முடியாது. பெற்ற தாயையும் தந்தையையும் மனிதன் தனது புலன்களைக் கொண்டு அறிந்து முடியாமல் போனதறகுக் காரணம். அந்தச் சம்பவம் இடம்பெறும்போது இவனது புலன்கள் இருக்கவில்லை. இவனே இருக்கவில்லையே. இவனது புலன்கள் எப்படி இருந்திருக்க முடியும்? ஊரை நம்பித் தாயையும் தாயை நம்பித் தந்தையையும் அறிந்து கொள்ளும் நிர்பந்தமான ஒரு நிலைக்கு மனிதன் தள்ளப்படுகிறான். இது மனிதனுடைய பலகீனமான நிலை!இந்த நிலையுடைய மனிதன் ஊரை நம்பித் தாயை ஏற்றுக்கொண்டது போல். தாயை நம்பித் தந்தையை ஏற்றுக்கொண்டது போல். இறைத் தூதர்களை நம்பி இறைவனை ஏன் ஏற்றுக்கொள்ளக் கூடாதா? இதுவே நமது கேள்வி. சம்பவத்தோடு சம்பந்தப் பட்டிருப்பதால் தந்தையைப் பற்றித் தாய்க்குத் தெரிந்திருக்கிறது. இதேபோல் இறைவனுடன் வஹி என்கிற இறைச் செய்தி மூலமாக தொடர்புடைய இறைத் தூதர்கள் இறைவைனைப் பற்றி அறிந்திருப்பதில் நாம் வியப்படைய என்ன இருக்கிறது? சிந்தனையுடையோர் எளிதில் விளங்கிக் கொள்ள முடியும்.

னன்றி: அபூ பாத்திமா

42 comments:

  1. /மனிதன் ஊரை நம்பித் தாயை ஏற்றுக்கொண்டது போல். /

    எந்த மனிதனையா ஊரை நம்பித் தாயை ஏற்றுக்கொள்கிறான் ?

    ReplyDelete
  2. this is immature article really...by DNA Tests one can prove the maternity or paternity of a child...

    ReplyDelete
  3. //எந்த மனிதனையா ஊரை நம்பித் தாயை ஏற்றுக்கொள்கிறான்//

    தம்பி இனொமெனொ,

    இன்னார்தான் தாய்/தந்தை என்று சொல்லா விட்டால் உங்கள் தாயோ அல்லது தந்தையோ தாய்/தந்தை அல்ல. இந்த சாதாரண உண்மையைக் கூட புரிந்து கொள்ள முடியாதா?

    ReplyDelete
  4. //inomeno said...

    எந்த மனிதனையா ஊரை நம்பித் தாயை ஏற்றுக்கொள்கிறான் ?



    muthu said...
    this is immature article really...by DNA Tests one can prove the maternity or paternity of a child... //

    I am just curious to know..How many of you did the DNA test to identify your mother or your child?

    ReplyDelete
  5. 'தஞ்சை' கண்ணன் ந்னா,
    ஊரை நம்பித்தான் எல்லோரும் தாயை ஏற்றுக்கொள்கிறாங்களா? அப்போ யாரை நம்பி ஊராரை எத்துக்குனாங்கோன்னு என்னால்ல புரிந்து கொள்ள முடியலனா.

    ReplyDelete
  6. ஹ்ம்....தாயை யாரு தந்தை யாருன்னுதான் அவசியம் தெரிஞ்சுக்கோனும்.வசதிப்படி ஊரை மாத்திக்கலாம். தாய் தந்தையை மாத்த முடியுமா ராசா?

    கொஞ்சமாவது 310 கிராம் அயிட்டத்தை பயன்படுத்துங்க.

    ReplyDelete
  7. ஆசுபத்திரில குழந்தைகள் மாறி வேறு வீட்டில் வளந்து
    அப்புறம் பல வருசம் கழிச்சு கூட அப்பன் யாரு அம்மா யாருன்னு
    டி. என்.ஏ வெச்சு கண்டுபுடிக்கறாங்கோ.

    சுனாமில காணாம போன குழந்தையின் அம்மாவ DNA சோதனை
    செஞ்சு கண்டுபிடிச்சாங்க. சிரீலங்கன் அம்மா. காலைல cnnலெ
    கூட வந்தாங்க.

    ReplyDelete
  8. பொழுது சொல்றாப்புல: "எல்லா மக்களும் அவங்கவங்க தாய் தந்தையை DNA டெஸ்ட் பண்ணி தெரிஞ்சிக்கிடோனும்"

    இனொமெனொ சொல்றாபுல: "அப்போ யாரை நம்பி ஊராரை எத்துக்குனாங்கோன்னு என்னால்ல புரிந்து கொள்ள முடியலனா."

    அடப்பாவிங்களா!
    அப்பன் யாருன்னு அம்மா சொல்றத நம்புங்கடான்னா அம்மாவை எப்படி நம்பறதுன்னு கேக்கறீங்களேடா?

    பகுத்தறிவு DNA டெஸ்ட்லதான்னு சொல்றாங்கப்போல. ஹ்ம்ம்ம்ம்...கலி முத்திடுச்சு

    ReplyDelete
  9. நாட்டாமைOctober 6, 2005 at 9:02 AM

    அ...ப்...பா என்று சொல்வதற்கே தாளம் போடுகிறவன் திருக்குறளுக்கு விளக்கம் சொல்ல முடியாது என்பதையும் 2 ம் 2 ம் 4 என்பதைத் தெரியாதவன் 2 ம் 93 ம் எவ்வளவு? என்பதை நிச்சயமாக அறியமாட்டான். என்பதை எவ்வளவு நிச்சயமாக அறிந்து வைத்திருக்கிறோமோ. அதே போல் பெற்றெடுத்த வர்களை பகுத்தறிவால் அறிய முடியாதவரை இறைவனையும். மறுமையையும் நிச்சயமாக அறிந்து கொள்ள முடியாது என்பதையும் உணர வேண்டும் //

    அய்யா , தாய் யார் என்று தெரியவிட்டாலும் தாய் என ஒருவர் கன்டிப்பாக இருப்பார் என்பது தெரியும்.இறைவன் என்று அதுபோல ஒருவர் உள்ளார் என்பது நிருபிக்கபடவில்லை.

    ///ஆறடி மனிதனுக்குள் இருக்கும் ஒரு வியாதியை நேரடியாகப் பார்க்க முடியவில்லை புலன்களாலும் உய்த்துணர முடியவில்லை.//

    அறிவியல் முலமகா நோயை பார்த்தால் போதும்.நேரடியாக பார்க்க வென்டும் என்பது இல்லை.கடவுளை அறிவியல் முலம் பாஅர்க முடிவதில்லயல்லவா?

    ///இந்த நிலையில் இவற்றை வைத்துக் கொண்டு இறைவனையும் மறுமையையும் அறிய முற்படுவது விவேகமான செயலா? என்று நாஸ்திக சகோதரர்கள் சிந்திக்க வேண்டும்//

    இறைவன் உள்ளான் என்பதை நிருபிக்கிறன் என்று சொல்லிவிட்டு இறைவனை அறிய முயல்வது விவேகமற்ற செயல் என்கிறிர்.இது எப்படி அய்யா நிருபனாமகும்?

    ////இதுவரை நாம் சொல்லி வந்தது போல் உலகில் எத்தனையோ விஷயங்களை பகுத்தறிவு கொண்டு புலன் கள் கொண்டு நேரடியாக விளங்கிக் கொள்ள முடியாதவற்றை ஒப்புக்கொள்ளும் நாஸ்திக நண்பர்கள் இறைவனையும் மறுமையையும் நேரடியாகப் பார்த்தே புலன்களால் உய்த்துணர்ந்தே ஒப்புக்கொள்வோம் இல்லையென்றால் ஏற்றுக்கொள்;ளமாட்டோம் என்று விவாதிப்பது நாஸ்திகர்கள் ஏதோ ஒரு வகையில் தவறான நிலையில் இருக்கிறார்கள் என்பதையே நமக்கு உணர்த்துகிறது////

    அய்யா புலன் முலம் அறியாததை அறிவியல் முலம் அறிகிறொம்.கடவுளை அறிவியல் முலம் அறிய முடியவில்லயே?உடனே அறிவியலை திட்ட வேன்டாம்.

    ///' சூரியன் தானாக சுழல்கிறது. ப+மி தானாக சூழல்கிறது ப+மியிலுள்ள அனைத்தும் தானாகவே உற்பத்தியாகி இருக்கின்றன என்று நீர் சொல்வதை நாங்கள் நம்ப வேண்டுமென்றால். இவ்வளவு பெரிய பெரிய காரியங்கள் தானாகவே நடப்பது சாத்தியமென்றால். சின்னஞ் சிறு காரியமான ஒரு மரம் தானாக வந்து தானாக தோணி உணடாவது மட்டும் சாத்தியமில்லாத காரியமோ? அதை நம்பக்கூடாதோ? " என்று கேட்டார. இப்போது நாஸ்திகரின் முகத்தில் அசடு வழிந்தது தனது தவறை உணர்ந்தார் நாஸ்திகப்போக்கை மாற்றிக் கொண்டார். ////

    அய்யா பூமி ,சூரியன் இவை இயங்குவதை அறிவியல் படி நிறிபிக்க முடியும்.மரம் தானாக தோணி ஆகும் என்று நிருபிக்க முடியாது.நாஸ்திகர் அசடு வழிந்திருக்க வேன்டியதில்லை

    ///உண்மையான குற்றவாளிகள் விடுவிக்கப் படுகிறார்கள். நிரபராதிகள் தண்டிக்கப் படுகிறார்கள். இது ஒன்றே போதும் பகுத்தறிவின் நிலையை உணர்ந்து கொள்ள///

    பகுத்தறிவு எல்லாம் தெரிந்த எகாம்பரம் என்று சொல்லவில்லை.

    ///உண்மையான இறைவன் எந்த மனிதனது பார்வையிலோ. புலன்களின் உய்த்துணர்விலோ வரமுடியாது. அப்படி வரும் ஒன்று நிச்சயாமாக இறைவனாக இருக்கமுடியாது. காரணம் மனிதனது பார்வையிலோ. புலன்களின் உய்த்துணர்விலோ வரக் கூடிய ஒன்று நிச்சயமாக சிலக் கட்டுப்பாட்டிற்குள் இருந்தாக வேண்டும். கடடுபாட்டிற்குள் கட்டுப்படும் ஒன்று எப்படி இறைவனாக இருக்க முடியும்?///

    பார்வையில் ஒன்று வரவே முடியாது என்றால் அதுவும் சில கட்டுபாட்டீற்குல் இருக்க வேன்டும்.உதாரனமாக ஒளியை ப்ரதிபலிகாமல் இருக்க வேன்டும்.இப்படி கடடுபாட்டிற்குள் கட்டுப்படும் ஒன்று எப்படி இறைவனாக இருக்க முடியும்

    ///இப்போது இறைவனைக்காட்டுங்கள் கண்களால் பார்த்து ஏற்றக்கொள் கிறோம். என்று சொல்வதே அறிவார்த்தமான வாதமல்ல என்பதை புரிந்து கொண்டிருப்பீர்கள்///

    அய்யா "இறைவனைக்காட்டுங்கள் கண்களால் பார்த்து ஏற்றக்கொள் கிறோம்" என்று யாரும் சொல்லவில்லை.அறிவியல் படி நிறுபிக்க முடியுமா என்று தான் கேட்கிறொம்.இதற்கு அறிவியலை திட்டுவது பதில் இல்லை.

    ///மனிதன் ஊரை நம்பித் தாயை ஏற்றுக்கொண்டது போல். தாயை நம்பித் தந்தையை ஏற்றுக்கொண்டது போல். இறைத் தூதர்களை நம்பி இறைவனை ஏன் ஏற்றுக்கொள்ளக் கூடாதா? இதுவே நமது கேள்வி. //

    இரன்டு உதாரனதுக்கும் சம்பந்தமே இல்லயே.ஒருவர் இறைதூதர் என்று நம்ப இறைவன் இருப்பது நிறுபிக்க பட வேன்டும்.

    ReplyDelete
  10. நாட்டாமைOctober 6, 2005 at 10:10 AM

    குப்புசாமி:பச்ச கலர்ல ஒரு பூதம் இருக்கு.

    சுப்ப்சாமி:என்ன ஆதாரம் இருக்கு இதை நிருபிக்க?பகுத்தறிவுகு சரியா படலியெ

    குப்புசாமி:பகுத்தறிவைக் கொண்டு மிகப் பெரிய விஷயமான பூதத்தை ஆராயப் புகுமுன். அதே பகுத்தறிவைக் கொண்டு மட்டும் சிறிய விஷயமான நமக்கு நெருக்கமான தாயையும். தந்தையையும் முதலில் அறிந்து கொள்ள முயற்சி செய்தால் அதன் முடிவு என்ன?

    அ...ப்...பா என்று சொல்வதற்கே தாளம் போடுகிறவன் திருக்குறளுக்கு விளக்கம் சொல்ல முடியாது என்பதையும் 2 ம் 2 ம் 4 என்பதைத் தெரியாதவன் 2 ம் 93 ம் எவ்வளவு? என்பதை நிச்சயமாக அறியமாட்டான். என்பதை எவ்வளவு நிச்சயமாக அறிந்து வைத்திருக்கிறோமோ. அதே போல் பெற்றெடுத்த வர்களை பகுத்தறிவால் அறிய முடியாதவரை பச்ச கலர் பூதத்தையும் நிச்சயமாக அறிந்து கொள்ள முடியாது என்பதையும் உணர வேண்டும்

    இந்த நிலையுடைய மனிதன் ஊரை நம்பித் தாயை ஏற்றுக்கொண்டது போல். தாயை நம்பித் தந்தையை ஏற்றுக்கொண்டது போல் நம்ம குப்புசாமி சொல்வதை நம்பி பச்ச கலர் பூதத்தை ஏன் ஏற்றுக்கொள்ளக் கூடாது? இதுவே குப்புசாமியின் கேள்வி.

    ReplyDelete
  11. //இறைவன் என்று அதுபோல ஒருவர் உள்ளார் என்பது நிருபிக்கபடவில்லை.//

    1) உயிர் என்பது உடலில் எங்குள்ளது?

    2) சிறிய நம்பர் = 1, பெரிய நம்பர் எது? அறிவியல் ரீதியான பதில் ப்ளீஸ்

    3) புத்தியை எந்த அறிவியல் உபகரணம் கொண்டு நோக்குவது?

    4) பெரியார் ஈ.வெ.ராமசாமி ஒரு முட்டாளுன்னு நான் சொன்னா, அறிவியல் துணை கொண்டு நிரூபிக்க முடியுமா?

    5) ஒன்பது அல்லது பத்து கோள்கள். சொல்வது அறிவியல். எத்தனை பேர் கண்ணால் பார்த்தீர்கள்?

    6) கடவுள் நேரில் வந்துதான் நம்புவேன் என்பது அறிவுடமையா? டைனோசாரை எத்தனை பேர் பார்த்து நம்பினோம்?

    7) மூளைக்கு வேலைதராத எந்த மதமும் தேவையில்லை. எத்தனை மதங்கள் மூளைக்கு வேலை கொடுக்கின்றன?

    8) பாம்பு, தேள் இவற்றால் மனிதனுக்கு எந்த பயனும் இல்லை. பிறகு ஏன அவை மனிதர்கள் வாழுமிடத்தில் புழங்குகின்றன?

    9) மனித மூளையும், ஆட்டின் மூளையும் கிட்டதட்ட ஒரே அளவுதான். ஒன்றையொன்று இடம் மாற்றினால் ஆடு பேசுமா?

    10) இதுவரை சொன்னதெல்லாம் புரிஞ்சுதா? புரியவில்லை என்றால் உமக்கு எத்தனை அறிவு?

    ReplyDelete
  12. //எந்த மனிதனையா ஊரை நம்பித் தாயை ஏற்றுக்கொள்கிறான்-இனொமெனொ

    இன்னார்தான் தாய்/தந்தை என்று சொல்லா விட்டால் உங்கள் தாயோ அல்லது தந்தையோ தாய்/தந்தை அல்ல.-கண்ணன்

    ஊரை நம்பித்தான் எல்லோரும் தாயை ஏற்றுக்கொள்கிறாங்களா? அப்போ யாரை நம்பி ஊராரை எத்துக்குனாங்கோன்னு என்னால்ல புரிந்து கொள்ள முடியலனா.-இனொமெனொ

    ஹ்ம்....தாயை யாரு தந்தை யாருன்னுதான் அவசியம் தெரிஞ்சுக்கோனும்.வசதிப்படி ஊரை மாத்திக்கலாம். தாய் தந்தையை மாத்த முடியுமா ராசா?-கண்ணன்
    //

    ''ஊராரை நம்பித் தாயை ஏற்றுக்கொள்கிறான்'' - என்றால்
    ஊரார் மீது ஒரு குழந்தைக்கு எப்படி நம்பிக்கை வந்தது என்பதே என் கேள்வி.
    ஒரு குழந்தைக்கு தாய் தானே உலகம்?
    தாய் தானே ஒரு குழந்தைக்கு ஊராரை அறிமுகம் செய்துவைக்கிறார்கள் ?

    ReplyDelete
  13. நாட்டாமைOctober 6, 2005 at 1:13 PM

    1) உயிர் என்பது உடலில் எங்குள்ளது? //

    இதுக்கு பதில் தெரியலைனா கடவுள் இருக்காரு அப்படினு ஒத்துக்கனுமா?

    2) சிறிய நம்பர் = 1, பெரிய நம்பர் எது? அறிவியல் ரீதியான பதில் ப்ளீஸ்//

    1 அப்படின்னா என்ன அப்படினு மொதல்ல சொல்லுங்க. கணிதம் என்றால் முழு எண் 2+ எல்லாம் 1 விட பெரியது.

    3) புத்தியை எந்த அறிவியல் உபகரணம் கொண்டு நோக்குவது?//

    படிப்பு, போன்றவை மூலம் அளக்கலாம்

    4) பெரியார் ஈ.வெ.ராமசாமி ஒரு முட்டாளுன்னு நான் சொன்னா, அறிவியல் துணை கொண்டு நிரூபிக்க முடியுமா?//
    அவரு செத்து போயிட்டாரே.இனி ஒன்னும் பண்ண முடியாது

    5) ஒன்பது அல்லது பத்து கோள்கள். சொல்வது அறிவியல். எத்தனை பேர் கண்ணால் பார்த்தீர்கள்?//
    கண்ணால் பார்ப்பது மட்டும் அறிவியல் இல்லை.10 கோள்கள் உள்ளதை அறிவியல் படி நிருபிக்கமுடியும்.

    6) கடவுள் நேரில் வந்துதான் நம்புவேன் என்பது அறிவுடமையா? டைனோசாரை எத்தனை பேர் பார்த்து நம்பினோம்?//
    டைனோசார் எலும்புகூடு இருக்கு.கடவுள் எலும்புகூடு எஙக இருக்கு?

    7) மூளைக்கு வேலைதராத எந்த மதமும் தேவையில்லை. எத்தனை மதங்கள் மூளைக்கு வேலை கொடுக்கின்றன?//

    எந்த மதமும் மூளைக்கு வேலை தரவில்லை.

    8) பாம்பு, தேள் இவற்றால் மனிதனுக்கு எந்த பயனும் இல்லை. பிறகு ஏன அவை மனிதர்கள் வாழுமிடத்தில் புழங்குகின்றன?//

    மனுசனால பாம்பு தேளுக்கும் எந்த ப்ரயொஜனமும் இல்லை.னாம ஏன் அவை இருக்குமிடதில் புழங்கறோம்?

    9) மனித மூளையும், ஆட்டின் மூளையும் கிட்டதட்ட ஒரே அளவுதான். ஒன்றையொன்று இடம் மாற்றினால் ஆடு பேசுமா//

    அப்படினு நாங்க யாரவது சொன்னொமா?

    10) இதுவரை சொன்னதெல்லாம் புரிஞ்சுதா? புரியவில்லை என்றால் உமக்கு எத்தனை அறிவு?//

    உம்மை விட கம்மி தான் ஐயா.

    ReplyDelete
  14. ஈன்னோமென்னோ (என்ன எழவோ?)

    சொல்றமாதிரி கேணத்தனமா சொல்லிட்டா போதுமா கண்ணு?

    //1) இதுக்கு பதில் தெரியலைனா கடவுள் இருக்காரு அப்படினு ஒத்துக்கனுமா?//

    அறிவியலால எல்லாத்தையும் காட்ட முடியாதுன்னு பெரிய மனசு பண்ணி ஒத்துக்குங்களேன்.

    //2) 1 அப்படின்னா என்ன அப்படினு மொதல்ல சொல்லுங்க. கணிதம் என்றால் முழு எண் 2+ எல்லாம் 1 விட பெரியது.//

    உமக்கு ஒண்ணும் தெரியலே ஒரு மண்ணும் தெரியலே!

    3) //படிப்பு, போன்றவை மூலம் அளக்கலாம்///

    வெரிகுட். அப்படீன்னா முதல், இரண்டாவது கேள்விக்கும் பதில் சொல்லய்யா.

    4) //அவரு செத்து போயிட்டாரே.இனி ஒன்னும் பண்ண முடியாது//

    ஆறரை கோடி வருசத்துக்கு முந்தின டைனோசாரோடு எலும்புக் கூடு இருக்கும்போது பெரியாரின் எலும்பு கூடும் இருக்குமில்ல?

    5) //கண்ணால் பார்ப்பது மட்டும் அறிவியல் இல்லை.10 கோள்கள் உள்ளதை அறிவியல் படி நிருபிக்கமுடியும்.//

    இதைத்தான் மதமும் சொல்லுது. ஆராய்ச்சி செய்யி. முடிவு கிடைக்கும் வரை நல்லா ஆராய்ச்சி செய்யி.

    6)// டைனோசார் எலும்புகூடு இருக்கு.கடவுள் எலும்புகூடு எஙக இருக்கு?//

    அது டைனோசார் எலும்புன்னு எப்படி உறுதியாச்சு? முன்ன பின்ன டைனோசார பாத்திருக்கீரா?

    7) //எந்த மதமும் மூளைக்கு வேலை தரவில்லை.//

    எத்தனை மதத்தைப் பற்றி ஆராய்ச்சி செஞ்சிருக்கிறீங்க?

    8) //மனுசனால பாம்பு தேளுக்கும் எந்த ப்ரயொஜனமும் இல்லை.னாம ஏன் அவை இருக்குமிடதில் புழங்கறோம்?//

    நான் மனுசனப்பத்தி கேக்குறேன் நீரு பாம்பை பத்தி கேக்குறீரு. ஒரு வேளை நீயும் ஒரு பாம்போ?

    9) //அப்படினு நாங்க யாரவது சொன்னொமா?//

    நாங்க மீன்ஸ்? பொழுது+இன்னோமினொ+நேசகுமார்?

    10) //உம்மை விட கம்மி தான் ஐயா.//

    இதையாவது ஒழுங்க சொன்னவரைக்கும் ஒரு கும்பிடு.

    ReplyDelete
  15. நாட்டாமைOctober 6, 2005 at 3:53 PM

    ஈன்னோமென்னோ (என்ன எழவோ?)///

    ஆரம்பிசுட்டாங்கயயா ஆரம்பிசுட்டாங்க

    அறிவியலால எல்லாத்தையும் காட்ட முடியாதுன்னு பெரிய மனசு பண்ணி ஒத்துக்குங்களேன்.//

    அறிவியல் எல்லாத்தயும் காட்டும்னு நாம் சொன்னதே இல்லை.ஆனா அறிவியல் காட்டாத விசயங்களை நாம பெருசா எடுத்துக்கறதில்லை

    உமக்கு ஒண்ணும் தெரியலே ஒரு மண்ணும் தெரியலே///

    ஆமா அண்ணாச்சி. கேள்வி கேட்டே நான் வீணா போய்ட்டேன்.ஆனா நெரய பய புள்ளைக கேய்வி கேக்காம வீணா பொயிட்டானுவ.அதனால கேய்வி கேட்டு வீணா போரதுன்னு முடிவு பண்ணிபுட்டேன்.

    ///வெரிகுட். அப்படீன்னா முதல், இரண்டாவது கேள்விக்கும் பதில் சொல்லய்யா//

    நான் தென் மன்டூகம்னு ஒத்துகிட்டென்ல.பெரிய மனசு பண்ணீ நீஙக விளக்குஙக அய்யா.

    ///ஆறரை கோடி வருசத்துக்கு முந்தின டைனோசாரோடு எலும்புக் கூடு இருக்கும்போது பெரியாரின் எலும்பு கூடும் இருக்குமில்ல?//

    அதுபாட்டுக்கு செவனேன்னு மூலைல கெடக்கும்.அதை நோண்டி எடுத்து என்ன பண்ண சொல்றீக?


    ///இதைத்தான் மதமும் சொல்லுது. ஆராய்ச்சி செய்யி. முடிவு கிடைக்கும் வரை நல்லா ஆராய்ச்சி செய்யி.///

    அதை ஆராய்ச்சி பண்ணி நெரய பய புள்ளைக வீணால்ல புட்டானுஙக.

    ///அது டைனோசார் எலும்புன்னு எப்படி உறுதியாச்சு? முன்ன பின்ன டைனோசார பாத்திருக்கீரா?///

    பாத்தாத்தென் விங்ஙானம்னு இல்லை அண்ணாச்சி.எலும்புக்கூடை வெச்சு தேன் அப்படி ஒன்னு சுத்திகிட்டிருந்திருக்குனு முடிவு பண்ணி அதுக்கு டினோசர்னு பேர் வெச்சானுவ.அதை வேற எப்பிடி என்ன முடிவு பண்ணலேம்னு பய புள்ளைகளூக்கு தெரியலை.

    //////எத்தனை மதத்தைப் பற்றி ஆராய்ச்சி செஞ்சிருக்கிறீங்க///

    3 அண்ணாச்சி.இந்து,முசுலிம்,க்ரிஸ்தவம்னு முணு மதம் அண்ணாச்சி.

    ///நான் மனுசனப்பத்தி கேக்குறேன் நீரு பாம்பை பத்தி கேக்குறீரு. ஒரு வேளை நீயும் ஒரு பாம்போ?///

    அண்ணாச்சி தென் மொதமொதல்ல பாம்பு பத்தி கேட்டீக.பதில் சொன்னதுக்கு என்னை பாம்புஙகரிஙக.ஒரெ குசும்பு தென் உஙக கூட.

    /// நாங்க மீன்ஸ்? பொழுது+இன்னோமினொ+நேசகுமார்?///

    மூணாவது போஸ்ட்லய நமமை கட்டம் கட்டிபுட்டீரே?னம்ம ப்லாக் வந்து அடிக்கடி பாருஙக.அந்த பய புள்ளகலயும் நக்கல் அடிப்பெனுல்ல.

    ///இதையாவது ஒழுங்க சொன்னவரைக்கும் ஒரு கும்பிடு.///

    உமக்கும் ஒரு கும்பிடய்யா.

    ReplyDelete
  16. muthu said...
    this is immature article really...by DNA Tests one can prove the maternity or paternity of a child... //

    ??I am just curious to know..How many of you did the DNA test to identify your mother or your child???


    those who are having doubt can check..i said that is not a thing which depend on mother's word alone
    12:10 PM

    ReplyDelete
  17. இறை நேசன்,
    நானும் ஒரு கடவுள் நம்பிக்கையாளன் தான் .ஆனால் இந்த கட்டுரையில் பல கருத்துக்கள் same side goal போட்ட மாதிரி இருக்கு.

    ReplyDelete
  18. //பாம்பு, தேள் இவற்றால் மனிதனுக்கு எந்த பயனும் இல்லை. பிறகு ஏன அவை மனிதர்கள் வாழுமிடத்தில் புழங்குகின்றன?//
    //மனித மூளையும், ஆட்டின் மூளையும் கிட்டதட்ட ஒரே அளவுதான். ஒன்றையொன்று இடம் மாற்றினால் ஆடு பேசுமா//

    பாம்பு, தேள் இவற்றால் மனிதனுக்கு எந்த பயனும் இல்லை. பிறகு ஏன அவை மனிதர்கள் வாழுமிடத்தில் புழங்குகின்றன?//
    மனித மூளையும், ஆட்டின் மூளையும் கிட்டதட்ட ஒரே அளவுதான். ஒன்றையொன்று இடம் மாற்றினால் ஆடு பேசுமா//

    பலே பலே!
    மூளை மீதான மதங்களின் செல்வாக்கு எவ்வளவு உயர்ந்ததென்று "ஆத்திகர்களின்" (எல்லா ஆத்திகருமல்லர். இந்தக் கேள்வியைக் கேட்டவர்கள்) இந்தக் கேள்விகளே சான்று.

    நானும் ஏதோ சீரியசான பதிவாக்கும் எண்டு நினைச்சு வந்தா கணேஸ் போட்ட கோயிஞ்சாமி கேள்வி பதிலைத் தோற்கடித்துவிட்டீர்களே?
    ;-)

    ReplyDelete
  19. ஜோ அவர்களே,

    "Sama side Goal" எவை எவை என்று ஒரு பட்டியல் இட்டால் அக்கருத்துக்களை குறித்து நானும் நன்றாக ஆலொசிக்க வசதியாக இருக்கும்.

    ReplyDelete
  20. இறை நேசன்,

    //நடந்த நிகழ்ச்சியைச் சிந்தித்து விளங்கிக் கொள்ள முடியாதவன். நடக்கப் போகும் ஒரு நிகழ்ச்சியை.அதுவும் மரணத்திற்குப் பின் நடக்க இருப்பதைச் சிந்தித்து விளங்கிக் கொள்ள முற்படுவது விவேகமான செயலா? என்று சிந்திப்பார்களாக//

    நாத்திகர்கள் அதை அறிய முற்படுவதில்லை .ஆத்திகர்கள் தான் அதைப்பற்றி சிந்தித்து கொண்டிருக்கிறார்கள் .இது same side goal இல்லயா?

    //உண்மையான குற்றவாளிகள் விடுவிக்கப் படுகிறார்கள். நிரபராதிகள் தண்டிக்கப் படுகிறார்கள். இது ஒன்றே போதும் பகுத்தறிவின் நிலையை உணர்ந்து கொள்ள. //

    இது நாத்திகர்கள் ஆத்திகர்களைப் பார்த்து கேட்கும் கேள்வி .அனைத்தும் இறைவன் செயல் என்றால் ,உண்மையான குற்றவாளிகள் விடுவிக்கப்படுவதும் ,நிரபராதிகள் தண்டிக்கப்படுவதும் எந்த வகையில் நியாயம் .இதை தடுக்க கடவுளுக்கு சக்தி இல்லையா? என்று அவர்கள் கேட்கிறார்கள்.

    இது Same side Goal இல்லையா?

    இன்னும் நிறைய இருக்கிறது .நேரமில்லை!

    நான் ஒன்றும் நாத்திகன் அல்ல .ஆனால் இந்த கட்டுரையில் உள்ள நாத்திக எதிர்ப்பு விளக்கம் தெளிவாக இல்லை என்பது மட்டுமல்ல,எதிர்மறையாகவும் இருக்கிறது என்பது என் தாழ்மையான கருத்து.

    ReplyDelete
  21. //நாத்திகர்கள் அதை அறிய முற்படுவதில்லை .ஆத்திகர்கள் தான் அதைப்பற்றி சிந்தித்து கொண்டிருக்கிறார்கள் .இது same side goal இல்லயா?//

    கடவுள் நம்பிக்கைதான் உண்மையில் பகுத்தறிவாகும்! எப்படி என்றால் ஒருவன் கடவுளை நம்புவதால் உண்மையில் கடவுள் இல்லாவிட்டாலும் எந்த நஷ்டமும் இல்லை.மாறாக இருந்து விட்டால் நஷ்டம் கடவுள நம்பிக்கை இல்லாதவருக்கே.

    //அனைத்தும் இறைவன் செயல் என்றால் ,உண்மையான குற்றவாளிகள் விடுவிக்கப்படுவதும் ,நிரபராதிகள் தண்டிக்கப்படுவதும் எந்த வகையில் நியாயம் //

    மனிதத்தண்டனைகளையும் இறைத் தண்டனைகளையும் குழப்பிக் கொள்கிறீர்கள் என நினைக்கிறேன். இறைவன் புறத்தில் நிரபராதிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவதில்லை.

    ReplyDelete
  22. நாட்டாமைOctober 8, 2005 at 7:57 AM

    கடவுள் நம்பிக்கைதான் உண்மையில் பகுத்தறிவாகும்! எப்படி என்றால் ஒருவன் கடவுளை நம்புவதால் உண்மையில் கடவுள் இல்லாவிட்டாலும் எந்த நஷ்டமும் இல்லை.மாறாக இருந்து விட்டால் நஷ்டம் கடவுள நம்பிக்கை இல்லாதவருக்கே.//

    கடவுள் இல்லாமல் இருந்தால் ஆத்திகன் கடவுளை வணஙக செலவழித்த நேரம்,அதற்காக செலவு செய்த தொகை,அத்தனயும் நஷ்டம் தானே?மற்றபடி மதக்கலவரம்,மதத்தின் பெயரால் நடக்கும் யுத்தம் இவை அத்தனயும் நடந்திருக்காது தானே?ஆக உண்மை நஷ்டம் ஆத்திகனுக்கும் அவனால் உலகத்துக்கும் தான்

    க்றிஸ்தவ மதம் உண்மை என்றால் நான்,நீங்கள்,இந்துக்கள்,பவுத்தர்கள் அனைவரும் நரகத்துக்கு தான் போவோம்.இஸ்லாம் உண்மை என்றால் மேரி மாதவை வணங்கும் க்ரிஸ்தவனும்,இந்துவும்,நாத்திகனும் நரகத்துக்கு போவார்கள்.ஆக கடவுளை கும்பிட்டவன் சொர்கத்துக்கு போவான் என்று உறுதி இல்லை...எதோ ஒரு மதத்தை சேர்ந்தவன் மட்டும் தான் தப்பிப்பான்

    ///மனிதத்தண்டனைகளையும் இறைத் தண்டனைகளையும் குழப்பிக் கொள்கிறீர்கள் என நினைக்கிறேன். இறைவன் புறத்தில் நிரபராதிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவதில்லை///

    நிரபராதிகள் என்று ஒருவரும் இல்லை.அனைவரும் பாவிகள்,க்ரிஸ்தவரை தவிர அனைவரும் நரகத்துக்கு தான் போவார்கள் என்று அவர்கள் சொல்கிறார்கள்.அனைவரும் பாம்பாக,பல்லியாக மறுபிறவி எடுப்போம் என்று இந்துக்கள் சொல்கிறார்கள்.இஸ்லாமை நிராகரித்தவன் நரகத்துக்கு போவான் என்றும் சொல்கிறார்கள்.ஆக ஆஸ்திகர்களிலேயே அனைவரும் தப்பிப்பது என்பது இல்லை.எதோ ஒரு மதத்தை சேர்ந்தவன் மட்டும் தான் தப்பிக்கிறான்.க்றிஸ்தவர்கள் சொல்வது சரியாக இருந்தால் நான் நீங்கள் மற்ற அனைவரும் நரகத்துக்கு தான் போவோம்

    ReplyDelete
  23. ஆத்திகத்தின் பெயரால் நடக்கும் தவறுகளுக்கு ஆத்திகர்கள் குற்றவாளியாகமாட்டார்கள். ஆக்கக் கூடாது. அரைகுறை புரிதல் தான் அதற்கு காரணம்.
    மதங்களைப் பொறுத்தவரை எது சிறந்த, அறிவுபூர்வமானது என்று தேர்ந்தெடுக்கும் உரிமை/அறிவு மனிதனுக்கு இருக்கிறது.

    மனிதனின் செயல்களுக்கு (நல்லதோ, கெட்டதோ) மனிதன் தான் காரணம். கடவுள் மேல் பழி போடக்கூடாது. (அப்புறம், மனிதனுக்கு அறிவு -என்ன பிரயோசனமாம்?). வேண்டுமானால், நன்மையின் பக்கம் கடவுளின் வழிகாட்டுதல்களைக் காணலாம். அதையும் மீறி மனிதன் தவறாக செயற்படுவது அவனுடைய சுய இச்சையும் ஒரு காரணம்.

    "நிச்சயமாக, விசுவாசங்கொண்டார்களே அவர்களும், யூதர்களாக இருந்தார்களே அவர்களும், கிறிஸ்தவர்களும், ஸாபியீன்களும் (அவர்களில்)-எவர்கள் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் விசுவாசித்து, நற்கருமத்தையும் செய்தார்களோ அத்தகையவர்கள்- அவர்களுக்கு அவர்களுடைய கூலி அவர்களுடைய இரட்சகனிடத்தில் உண்டு. மேலும், அவர்களுக்கு (மறுமையைப்பற்றி) எவ்விதப் பயமுமில்லை; (இன்னும் உலகில் எதை விட்டுச் செல்கிறார்களோ அது பற்றி) அவர்கள் கவலையும் அடைய மாட்டார்கள்" (புனித குர்ஆன் 2:62)

    ReplyDelete
  24. //கடவுள் இல்லாமல் இருந்தால் ஆத்திகன் கடவுளை வணஙக செலவழித்த நேரம்,அதற்காக செலவு செய்த தொகை,அத்தனயும் நஷ்டம் தானே?//

    நாத்திகர்கள் எல்லோரும் தங்கள் நேரம்,பணம் ஆகியவற்றை வீணடிப்பதில்லை என்பது போல் உள்ளது உங்கள் கருத்து.

    மற்ற மதங்களைப் பற்றி கருத்துச் சொல்ல விரும்பவில்லை. இஸ்லாத்தில் வழிபாடுகளின் பெயரால் பண/நேர விரயம் இல்லை. ஹஜ் என்ற வழிபாடு கூட வசதி உள்ளவர்/செல்வந்தர் என்ற நிலையில் மட்டுமே.

    ஜகாத் என்ற கட்டாய தர்மம் பணநஷ்டம் எனச்சொல்ல முடியுமா?

    தொழுகைநில் நாம் சாதாரணமாக செய்ய முடிந்த செயல்களே இருப்பதால் ஒருவகை உடற்பயிற்சி என்று கூட எடுத்துக் கொள்ளுங்கள். யோகாவில் கூட மனதை ஒருநிலைப்படுத்தும் மந்திரங்கள் உண்டு. அதுப்போல்தான் முஸ்லிம்கள் குர்ஆனை ஓதுவது.

    நோன்பு - நம்மில் சாதாரண மக்களும் கூட இருக்கும் உண்ணாவிரதம் போல்தான். இதனால் உடலுக்கு நஷ்டம் என்பதை விட நலன்களே உள்ளன.

    //மற்றபடி மதக்கலவரம்,மதத்தின் பெயரால் நடக்கும் யுத்தம் இவை அத்தனயும் நடந்திருக்காது தானே?ஆக உண்மை நஷ்டம் ஆத்திகனுக்கும் அவனால் உலகத்துக்கும் தான்//

    இதுவரை நடந்த யுத்தங்களும் கலவரங்களும் வெவ்வேறு காரணங்களுக்காக நடந்துள்ளன. ஈராக் ஆப்கான் யுத்தங்கள் பொருளாதாரக் காரணம், உலக யுத்தங்கள் அரசியல் காரணம். ஆக மனிதன் மனிதனைக் கொல்வதற்கும் மத நம்பிக்கைக்கும் சம்பந்தமில்லை.

    //இஸ்லாம் உண்மை என்றால் மேரி மாதவை வணங்கும் க்ரிஸ்தவனும், இந்துவும்,நாத்திகனும் நரகத்துக்கு போவார்கள்.//

    ஒவ்வொரு மதங்களும் இப்படிச் சொல்வது உண்மைதான். ஆனால் எது சொல்வது உண்மையானது எனக் காண்பதுதான் அறிவுடைமை.

    ReplyDelete
  25. நாட்டாமைOctober 9, 2005 at 2:23 PM

    நாத்திகர்கள் எல்லோரும் தங்கள் நேரம்,பணம் ஆகியவற்றை வீணடிப்பதில்லை என்பது போல் உள்ளது உங்கள் கருத்து.மற்ற மதங்களைப் பற்றி கருத்துச் சொல்ல விரும்பவில்லை. இஸ்லாத்தில் வழிபாடுகளின் பெயரால் பண/நேர விரயம் இல்லை. ஹஜ் என்ற வழிபாடு கூட வசதி உள்ளவர்/செல்வந்தர் என்ற நிலையில் மட்டுமே///

    கிட்டதட்ட பலரின் வாழ்க்கையே கடவுளை மய்யப்படுதி தான் உள்ளது.கடவுளுக்காக திருமணம் செய்யாமல் வாழும் நிறயபேர் உள்ள்னர். கடவுள் இல்லயென்றால் அது எல்லாம் வீண் தானே?இஸ்லாம் என்று நான் தனிபடுத்தி விவாதம் செய்ய விரும்பவில்லை.ஏன் எனில் இந்த கட்டுரை அப்படி இஸ்லாமை முன்னிறுதவில்லை.என்னை பொருத்தவரை இஸ்லாம்,இந்து,க்ரிஸ்தவம் எல்லாம் ஒன்று தான்.சில வித்யாசம் தான் உள்ளதெ தவிர அடிப்படயில் மூன்றும் பழய கொள்கைகள் தான்.

    ///இதுவரை நடந்த யுத்தங்களும் கலவரங்களும் வெவ்வேறு காரணங்களுக்காக நடந்துள்ளன. ஈராக் ஆப்கான் யுத்தங்கள் பொருளாதாரக் காரணம், உலக யுத்தங்கள் அரசியல் காரணம். ஆக மனிதன் மனிதனைக் கொல்வதற்கும் மத நம்பிக்கைக்கும் சம்பந்தமில்லை////

    இராக்,ஆப்கன் இரன்டுக்கும் அடிப்படை காரணம் ஜெருசலெமும் அதில் உள்ள அல்-அஸ்கா மசூதி இடம் பற்றிய பிரச்சன்யும் தான்.பாலஸ்தீன் இஸ்ரைல் ப்ரச்னை வெறும் அரசியல் பிரச்னையா?மதம் இல்லயா?

    ///ஒவ்வொரு மதங்களும் இப்படிச் சொல்வது உண்மைதான். ஆனால் எது சொல்வது உண்மையானது எனக் காண்பதுதான் அறிவுடைமை.///

    இது ஒன்றே போதும் எல்லா மதமும் பொய் என்று சொல்ல.நான் நாத்திகன் என்பதற்காக கடவுள் என்னை நரகத்தில் எரிப்பார் என்றால் அவருக்கும் குஜராத்தில் முஸ்லிம் என்பதற்காக மக்களை எரித்த மதவெறி கும்பலுக்கும் என்ன வித்யாசம்?நான் ஒரு குறிப்பிட்ட மதத்தில் இல்லை என்பதற்காக கடவுள் என்னை கொடுமை படுத்துவாரா?

    ReplyDelete
  26. நாட்டாமைOctober 9, 2005 at 2:46 PM

    ///"நிச்சயமாக, விசுவாசங்கொண்டார்களே அவர்களும், யூதர்களாக இருந்தார்களே அவர்களும், கிறிஸ்தவர்களும், ஸாபியீன்களும் (அவர்களில்)-எவர்கள் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் விசுவாசித்து, நற்கருமத்தையும் செய்தார்களோ அத்தகையவர்கள்- அவர்களுக்கு அவர்களுடைய கூலி அவர்களுடைய இரட்சகனிடத்தில் உண்டு. மேலும், அவர்களுக்கு (மறுமையைப்பற்றி) எவ்விதப் பயமுமில்லை; (இன்னும் உலகில் எதை விட்டுச் செல்கிறார்களோ அது பற்றி) அவர்கள் கவலையும் அடைய மாட்டார்கள்" (புனித குர்ஆன் 2:62)////

    க்ரிஸ்தவன் எப்படி அல்லாவை விசுவாசிப்பான்?மேரி மாதாவை தானே விசுவாசிப்பான்?சிலை வழிபாடு செய்யும் இந்துக்கள் நிலை என்ன?இவர்கள் அனைவரும் சொர்க்கதுக்கு போவார்கள் என்று இஸ்லாம் சொல்கிறதா?அல்லாவை வணங்கும் க்ரிஸ்தவன் என்று உலகில் யாராவது இருகிறார்களா?யேசுவையும் அன்னை மேரியையும் கடவுளாக ஏற்பவன் தான் க்ரிஸ்தவன்.அல்லாவை ஏற்றால் அவன் முஸ்லிம்."அல்லாவை வணங்கும் க்ரிஸ்தவன்" என்று ஜோக் அடித்தால் என்ன செய்வது?

    ReplyDelete
  27. நாட்டாமை,
    உங்களுக்கு எதிராக அல்ல.ஆனால் ஒரு சின்ன விளக்கம்.
    ////க்ரிஸ்தவன் எப்படி அல்லாவை விசுவாசிப்பான்?//

    கிறிஸ்தவனும் அல்லவைத்தான் விசுவசிக்கிறான் .முஸ்லிம்கள் விசுவசிக்கும் ஆபிரகாமின் கடவுள் ,மோசசின் கடவுள் ,யேசுவின் கடவுள் (கிறிஸ்தவர்களுக்கு யேசுவின் தந்தை) தான் முகமதுவின் கடவுளும் .'அல்லா' என்பது அதன் அரபு வார்த்தை அவ்வளவே.

    //மேரி மாதாவை தானே விசுவாசிப்பான்?//
    முஸ்லிம்கள் மேரிமாதாவை ,அவரது கன்னித்தன்மை உட்பட விசுவசிக்கின்றனர்.

    ReplyDelete
  28. அல்லாஹ் என்றால் ஒப்பற்ற ஓருயர் சக்தி.
    அந்த ஒரே இறையை விசுவாசிப்பது பற்றி சொல்லப்பட்டது. எந்த சூழலில், வாய்ப்பில் பிறந்தாலும் -தர்க்க ரீதியாகவும் (அறிவு ரீதியாகவும்) நம்பிக்கை ரீதியாகவும் ஒரே இறையை விசுவாசிப்பவர்கள் இல்லை என்று சொல்ல முடியாது.

    நாம் இறைவனுக்கு கற்பிக்கும் உருவங்களிலிருந்து நகர இயலாத மனது விளக்கம் கேட்பதற்கு வெட்கப்பட்டுக்கொண்டு 'ஜோக்' என்று சொன்னால் அது தான் சுவையற்ற ஒரு நகை ஆகிவிடுகிறது.

    ReplyDelete
  29. //யேசுவையும் அன்னை மேரியையும் கடவுளாக ஏற்பவன் தான் க்ரிஸ்தவன்.//

    ஐயா நாட்டாமை,
    எந்த கிறிஸ்தவனும் அன்னை மேரியை கடவுளாக ஏற்கவில்லை(கத்தோலிக்கர் உட்பட) .அன்னை மேரி ஒரு புனிதர் அவ்வளவே! இறைமகனைப் பெற்றதால் புனிதர்களில் முதன்மையானவர் .அப்படி கத்தோலிக்கர் யாராவது உம்மிடம் அன்னையை கடவுள் என்று சொல்லியிருந்தால் ,அவர்கள் தங்கள் திருச்சபையப் பற்றியே அறியாத அறிவிலிகள் என்று கொள்க!

    ReplyDelete
  30. //முஸ்லிம்கள் மேரிமாதாவை ,அவரது கன்னித்தன்மை உட்பட விசுவாசிக்கின்றனர்.//

    ஜோ, சரியாகச் சொன்னீர்கள்.

    மத நம்பிக்கை வேண்டாம் என்பவர்களும் ஒரு நம்பிக்கையில்தான் திளைத்திருக்கிறார்கள். அவர்களின் நம்பிக்கை மதங்கள் எல்லாம் வீண் என்பதே.

    இறை நம்பிக்கையாளனும் நம்பிக்கையில்லாதவனும் பேசி விவாதித்து ஒரு முடிவுக்கு வர முடியாது.

    ReplyDelete
  31. நாட்டாமைOctober 10, 2005 at 2:44 AM

    ///கிறிஸ்தவனும் அல்லவைத்தான் விசுவசிக்கிறான் .முஸ்லிம்கள் விசுவசிக்கும் ஆபிரகாமின் கடவுள் ,மோசசின் கடவுள் ,யேசுவின் கடவுள் (கிறிஸ்தவர்களுக்கு யேசுவின் தந்தை) தான் முகமதுவின் கடவுளும் .'அல்லா' என்பது அதன் அரபு வார்த்தை அவ்வளவே///
    அவ்வளவே என்று ரொம்ப சாதாரணமாக சொல்லி விட்டீரே?க்ரிஸ்தவ கடவுள் 3 பேர் கலந்த ஒருவர்.அல்லா அப்படி இல்லை.. .இஸ்லாமியர்கள் யேசுவயும்,பரிசுத்த ஆவியயும் கடவுளாக ஒப்புக்கொள்வதில்லை.ஒன்றே தேவன் என்பது இஸ்லாம்.க்ரிஸ்தவர்களை பொருத்தவரை கடவுள் 3 பங்கான ஒருவர்.ட்ரினிடி தான் கடவுள்.

    ///ஐயா நாட்டாமை,
    எந்த கிறிஸ்தவனும் அன்னை மேரியை கடவுளாக ஏற்கவில்லை(கத்தோலிக்கர் உட்பட) .அன்னை மேரி ஒரு புனிதர் அவ்வளவே! இறைமகனைப் பெற்றதால் புனிதர்களில் முதன்மையானவர் .அப்படி கத்தோலிக்கர் யாராவது உம்மிடம் அன்னையை கடவுள் என்று சொல்லியிருந்தால் ,அவர்கள் தங்கள் திருச்சபையப் பற்றியே அறியாத அறிவிலிகள் என்று கொள்க!////

    வேளாங்கண்ணியில் ஆயிரகணக்கான மக்கள் மாதா,மாதா என்றும் லூர்தில் லட்ச்கனக்கான மக்களும் குவிகிறார்கள்.ஆனால் நீங்கள் சொல்வது ஒரு விதத்தில் சரி தான்.மரியன்னையை கடவுளாக எற்பதில்லை ஆனால் வழிபடுகிறார்கள் என்று நான் சொல்லி இருக்க வேண்டும்.

    ReplyDelete
  32. //மரியன்னையை கடவுளாக எற்பதில்லை ஆனால் வழிபடுகிறார்கள் //

    கடவுளின் படைப்பொன்றுக்கு (அது எத்தனை புனிதமான படைப்பாகவே இருந்தாலும்) அவனுடைய பண்பும்; குணநலங்களும் இருப்பதாக கருதுவது கடவுளை ஏற்றதாகுமா? அவமதித்ததாகுமா?

    ReplyDelete
  33. //.இஸ்லாமியர்கள் யேசுவயும்,பரிசுத்த ஆவியயும் கடவுளாக ஒப்புக்கொள்வதில்லை.//

    நான் மறுக்கவில்லை.ஆனால் நீர் கேட்ட கேள்வி - "க்ரிஸ்தவன் எப்படி அல்லாவை விசுவாசிப்பான்?" .உமக்கு ட்ரினிடி பற்றி விளக்கம் சொல்ல இப்போது நேரமில்லையெனினும் ,அதில் ஒன்றான 'தந்தை' தான் 'அல்லா' என்பதை ஒப்புக்கொள்ளுகிறீரா? ..இப்போது ""க்ரிஸ்தவன் எப்படி அல்லாவை விசுவாசிப்பான்?" என்ற கேள்வியிலுள்ள அபத்தம் புரிகிறதா?

    ReplyDelete
  34. //கடவுளின் படைப்பொன்றுக்கு (அது எத்தனை புனிதமான படைப்பாகவே இருந்தாலும்) அவனுடைய பண்பும்; குணநலங்களும் இருப்பதாக கருதுவது கடவுளை ஏற்றதாகுமா? அவமதித்ததாகுமா?//

    ராஜா,
    நாட்டாமை தான் தெரியாமல் சொல்கிறாரென்றால் ,நீரும் சந்துல சிந்து பாட வேண்டாம் .கத்தோலிக்க முறைப்படி ,புனிதர்களை வழிபடக்கூடாது .ஆராதனையும் ,மகிமையும் இறைவன் ஒருவனுக்கே .."மாதாவே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!" என்று தான் பிராத்திக்க முடியும் .மாதா இறைவனிடம் நமக்காக பிராத்திக்கத்தான் வேண்டுகிறோம் (உம்மிடம் நான் 'Pray for me'-ன்னு கேட்டுக்க்கொள்ளுவது போல)

    ReplyDelete
  35. சாரி ஜோ,
    இந்த இடத்தில் தான் இஸ்லாம் வேறுபடுகிறது.
    மனிதனுக்கும் இறைவனுக்கும் இடையில் வேறு யாரும் எதுவும்-எத்தனை புனிதமானதாக இருந்தாலும்-இடைத்தரகராக வர வேண்டாம்- தேவையில்லை- என்று இஸ்லாம் சொல்கிறது.
    "மனிதனின் பிடரி நரம்பை விட இறைவன் அவனுக்கு நெருக்கமானவன்"

    முஸ்லிம்களால் மிகப் புனிதராக; தம்முயிரினும் மேலாக கருதப்பட்டாலும் முஹம்மது நபி அவர்களின் மறைவுக்குப்பின் அவர்களின் அடக்கஸ்தலத்தில் சென்றும் PRAY FOR ME என்று கேட்க வேண்டாம் என்று இஸ்லாம் சொல்கிறது. முஹம்மது நபியே இதை அழுத்தமாக சொல்லிச்சென்றுள்ளார்கள். அவர்கள் உயிரோடு இருந்தபோது PRAY FOR ME என்று கேட்டிருந்தால் அது தவறாகாது.

    உயிருள்ளவரிடம் PRAY FOR ME என்று கேட்பதும், மறைந்துவிட்ட புனிதரிடம் கேட்பதும் சமமா? என்ன லாஜிக்?

    ReplyDelete
  36. //ஆராதனையும் ,மகிமையும் இறைவன் ஒருவனுக்கே//

    YES! THAT's WHAT ISLAM SAYS:
    எல்லாப் புகழும் இறைவனுக்கே. (ALHAMDHULILLAH)

    ReplyDelete
  37. நாட்டாமைOctober 10, 2005 at 6:48 AM

    பெயர் ஒன்றாக இருந்தால் கடவுள் ஒன்றாகுமா?க்ரிஸ்தவ கடவுளுக்கு உருவம் உண்டு.நோவாவுக்கும் ஆதமுக்கும் காட்சி அளித்திருக்கிறார்.வெண் தாடி வைத்துகொன்டு வெள்ளை கலரில் இருக்கும் கடவுளின் ஓவியம் வாடிகனில் மைக்கேலங்செலோ வரைந்து,(போப் அங்கிகரித்தது) இருக்கிறது.எந்த முஸ்லிமும் அது தான் அல்லா என்று ஓத்துகொள்ள மாட்டார்.எந்த க்ரிஸ்தவனும் குரானில் வரும் கடவுளை,பிதா என்று ஒத்துகொள்ள மாட்டார்கள்.அவர் யேசுவின் தந்தை இல்லை என்றால் பிறகு க்ரிஸ்தவ மதம் என்பதே கேள்விகுறியாகிவிடும்."ஆரம்பத்தில் கடவுளோடு இருந்தது வார்த்தை" என்று பைபிள் சொல்லும் ட்ரினிடி பிதா,மகன்,ஆவி மூன்றும் சேர்ந்தது தான்.மூவருக்கும் உருவம் உண்டு.இந்த மூன்றும் சேர்ந்தது தான் க்ரிஸ்தவ கடவுள்.குரான் சொல்வது அல்லாவுக்கு உருவம் இல்லை,பங்காளிகள் இல்லை,அல்லாவுக்கு இனை வைப்பவன் நரகத்துக்கு போவான் என்று தெளிவாக பல இடத்தில் சொல்லி இருக்கிறது.குரானில் வரும் அல்லாவை வழிபடும் க்ரிஸ்தவர் என்று யாரும் கிடையாது.

    http://brainstorm-services.com/wcu-2004/art/genesis-michaelangelo.jpg

    ReplyDelete
  38. வசந்தன்(Vasanthan)October 10, 2005 at 7:11 AM

    //கிறிஸ்தவனும் அல்லவைத்தான் விசுவசிக்கிறான் .முஸ்லிம்கள் விசுவசிக்கும் ஆபிரகாமின் கடவுள் ,மோசசின் கடவுள் ,யேசுவின் கடவுள் (கிறிஸ்தவர்களுக்கு யேசுவின் தந்தை) தான் முகமதுவின் கடவுளும் .'அல்லா' என்பது அதன் அரபு வார்த்தை அவ்வளவே.//



    ஜோ,
    என்ன இது?
    ஒற்றை வசனத்தில் இப்படிச் சொல்லிவிட்டீர்களே?
    வணங்குவது என்பதில் தனியே பெயர் விசயம் மட்டுந்தான் தங்கியுள்ளதா?
    இதன் அரபுப் பெயர் தான் அது என்றுவிட்டு இதுவும் அதுவும் ஒன்றுதான் என்று எப்படிச் சொல்ல முடியும்?
    நீங்கள் சொல்வது யூத மதத்துக்கும் இஸ்லாமுக்கும் வேண்டுமானால் ஓரளவு பொருந்தக்கூடும்.
    கிறிஸ்தவத்துக்கும் (கத்தோலிக்கம் உட்பட) இஸ்லாமுக்கும் எப்படிப் பொருந்தும்? இஸ்லாமியர்கள் சொல்வதுபோல் நபிகள் தான் இயேசு என்பதை ஏற்றுக்கொள்ள யாராவது தயாரா? (இன்னும் சிலர் சொல்வதைப்போல, "இயேசு சாகடிக்கப்படவில்லை. காப்பாற்றப்பட்டார். அவரின் உயிர்ப்பு பொய்" என்பதையும்) அப்பிடியானால் திருமணம் உதைக்கிறதே?
    அதைவிட உதைக்கும் ஏராளமான விசயங்கள் உண்டு. தனியே பெயர்களின் பொருள் ஒன்று என்றுவிட்டு கிறிஸ்தவனும் அல்லாவைத்தான் வணங்குகிறான் என்று சொல்லிவிட்டீர்களே? பரவாயில்லை. உங்கள் பெருந்தன்மை யாருக்கும் வராது. எனக்கும், இப்படியொரு புரிதல் எல்லாருக்கும் வந்துவிட வேண்டுமென்ற அவாவுண்டு.
    -------------------------------------------------
    மரியாளை வணங்கக்கூடாதென்று தான் திருச்சபை சொல்கிறது. அவர் வணக்கத்துக்குரியர் அல்லர் என்று சிறுவயதில் சொல்லித்தரப்படுகிறது. ஆனால் எந்தக் கத்தோலிக்கருக்கும் அந்த வித்தியாசம் தெரியவில்லை.
    இயேசுவைப் பார்த்து என்ன கேட்கிறார்களோ அதைத்தான் மரியாளிடமும் கேட்கிறார்கள். நன்றி சொன்னாலும் எந்த வித்தியாசமுமின்றித்தான் சொல்லப்படுகிறது.
    சித்தாந்த ரீதியில் மரியாளை வணங்குவது பொய் அல்லது தவறு என்று நீங்கள் சொல்லலாம். அது நாட்டாமையை மடக்கவே உங்களுக்கு உதவும். நடைமுறையில் உங்களாற்கூட வணக்கத்துக்குரிய வேறுபாட்டைச் சொல்ல முடியாது. வெளியிலிருந்து பார்க்கும் யாருக்குமே மரியாளையும் கடவுள்களுள் ஒருவராகவே (கத்தோலிக்கம் ஏக சருவேசுவரனை மட்டுமே கொண்டிருந்தாலும்) பார்க்கத் தூண்டும்.
    அதுதான் உண்மை. சொல்லப்போனால் இயேசுவை வணங்குவதைவிடவும் மரியாளைத்தான் கத்தோலிக்கர் வணங்குகின்றனர். (இதைத் திருச்சபையின் வணக்கம் பற்றின தெளிவுடன்தான் சொல்கிறேன்) இறைவனிடம் இறைஞ்சுவதைவிட மரியாளிடம்தான் அதிகமான இறைஞ்சல்கள். மரியாளிடம்தான் அதிகமான 'பக்தி'.
    திருச்சபைச் சித்தாந்தம் படிக்காத எந்தப் பாமரக் கத்தோலிக்கனைக் கேட்டாலும் மரியாள் கடவுள் நிலையில்தான் அவர்களுக்கு உள்ளார். அவர்களுக்கு அவர் வணக்கத்துக்குரியவர்தான்.
    ------------------------------------------------
    எல்லாக் கடவுளையும் வணங்கும் பக்தர்கள் ஏராளமுண்டு. அதுபோலவே தனியே ஒரு கடவுளை மட்டும் வணங்குபவர்களும் அதைவிட ஏராளமானோர் உண்டு.
    நான் நினைக்கிறேன், ஏதாவது ஒரு கடவுள் தன்னை மோட்சத்துக்கு அனுப்புவார் என்ற காரணத்தினால்தான் என்று. எல்லோரையும் வணங்கிவிட்டால் உண்மையாயிருக்கும் கடவுளும் கட்டாயம் அதற்குள் அடங்கிவிடுவாரென்ற புரிதல் தான் அதற்குக் காரணமாயிருக்கலாம். என்னைப் பொறுத்தவரை புத்திசாலிகள் அவர்கள்தாம்.

    ReplyDelete
  39. வசந்தன்(Vasanthan)October 10, 2005 at 7:14 AM

    //மாதாவே எமக்காக வேண்டிக்கொள்ளும்//

    இது மனனம் செய்யப்பட்ட செபங்களில்தானே?

    ReplyDelete
  40. வசந்தன்,
    நான் எழுதியதை முழுவதுமாக படித்து விட்டுத்தான் கேள்வி கேட்கிறீர்களா தெரியவில்லை.முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் உள்ள வித்தியாசமே ,முஸ்லிம்கள் இயேசுவை வெறும் இறைதூதர் என்கின்றனர் ,கிறிஸ்தவர்கள் அவரை ,வாக்களிக்கப்பட்ட மெசியா ,இறைமகன் என்று நம்புகின்றனர் .யூதர்கள் இரண்டையும் நம்பாமல் ,மெசியா இன்னும் தான் வருவார் என நம்புகின்றனர்.வெறும் அரபுச்சொல் என்பதற்காக சொல்லவில்லை ..யூதர்களின் கடவுளைத்தான் ,இயேசுவும் ,முஹமதும் வணங்கினர் .இவர்களைப் பின்பற்றுகிறவர்கள் சில நம்பிக்கைகளில் வேறு படுகிறார்கள் என்றாலும் மையப்புள்ளி ஒன்று தான்.

    //சொல்லப்போனால் இயேசுவை வணங்குவதைவிடவும் மரியாளைத்தான் கத்தோலிக்கர் வணங்குகின்றனர்.//

    தயவு செய்து பொதுமைப்படுத்த வேண்டாம் .சிலர் அவ்வாறு செய்வது உண்மை.

    //அப்படி கத்தோலிக்கர் யாராவது உம்மிடம் அன்னையை கடவுள் என்று சொல்லியிருந்தால் ,அவர்கள் தங்கள் திருச்சபையப் பற்றியே அறியாத அறிவிலிகள் என்று கொள்க!//-இது ஏற்கனவே நான் சொன்னது .என்னளவில் நான் அவ்வாறு செய்வதில்லை என்பதை தான் நான் சொல்ல முடியும்.

    ReplyDelete
  41. //நடந்த நிகழ்ச்சியைச் சிந்தித்து விளங்கிக் கொள்ள முடியாதவன். நடக்கப் போகும் ஒரு நிகழ்ச்சியை.அதுவும் மரணத்திற்குப் பின் நடக்க இருப்பதைச் சிந்தித்து விளங்கிக் கொள்ள முற்படுவது விவேகமான செயலா?//
    இதே வாக்கியங்களை ஒரு நாத்திகன் சொன்னதாக பதில் சொல்லுங்களேஎன்.

    ReplyDelete
  42. //ஒவ்வொரு மதங்களும் இப்படிச் சொல்வது உண்மைதான். ஆனால் எது சொல்வது உண்மையானது எனக் காண்பதுதான் அறிவுடைமை.//
    சரி! நான் என் மதம் சொல்வது தான் உண்மை என்கிறேன். தாங்கள் ஒப்புக் கொள்வீர்களா? அல்லது நீங்கள் சொல்வது தான் சரி என்று என்னைக் கொல்லவருவீர்களா? காரணம், நம்பிக்கை என்பது ஒவ்வொருக்கும் மாறுபடும். பிரச்சினை, ஒருவர் மற்றொருவரின் நம்பிக்கையில் தலையிடுவதால் (தவறு என்றால் திருத்தவும்).

    ReplyDelete