Monday, November 19, 2007

கொலை வெறிக்கூட்டத்தின் வாக்குமூலம் தமிழில்...9.

உள்ளூர் பஜ்ரங்தள் தலைவனும், சதித் திட்டங்களைத் தீட்டியச் சூழ்ச்சியாளர்களில் ஒருவனும், இப்பொழுது சிவசேனா உறுப்பினருமான பாபு பஜ்ரங்கி, மோடியைப் பற்றிக் கூறும் போது, “என்னை பெயிலில் வெளியே கொண்டு வருவதற்காக, நரேந்திரபாய் மும்முறை நீதிபதிகளை மாற்றினார்” என்றான்.

மோடிக்கு இம்மனிதன்(?) மேல் ஒரு அனுகிரகம் உண்டு. இவன் தான் பின்னர் பர்ஜானியா என்றத் திரைபடத்தைத் திரையிட விடாமல் தடுத்தவன். ஒருவருக்கொருவர் மரியாதை உண்டு.

பாபு பஜ்ரங்கி தெஹல்காவுடன் மோடி தொடர்புடைய உரையாடலின் போது....

தெஹல்கா: பாட்யா சம்பவத்தின் போது மோடி உங்களை ஆதரிக்கவில்லையா?

பஜ்ரங்கி : அவர் தான் எல்லாவற்றையும் சாதகமாக்கித் தந்தார், இல்லையென்றால் யாருக்கு பலம் இவ்வளவு பலம் உண்டு.....? அவருடைய கைகள் தான் எல்லா இடத்திலும் இருந்தது... அவர் மட்டும் காவல்துறையை வேறு வகையில் செயல்படுமாறு கூறியிருந்தால், அவர்கள் எங்களை ஓ..... ....அவர்களால் அது முடிந்திருக்கும்.... முழுகட்டுபாடும் அவர்கள் கையிலிருந்தது.....

தெஹல்கா: அவர்கள் கட்டுக்குள்ளா?

பஜ்ரங்கி : குஜராத் முழுவதிலும் எல்லா நகரங்களும் அவர்களின் (காவல்துறை) கட்டுபாடுகளும் மிக உறுதியாகவே இருந்தது.. (ஆனால்) இரண்டு நாட்களுக்கு மட்டும் நரேந்திரபாய் தான் தன் கட்டுபாடுக்குள் வைத்திருந்தார்.... மூன்றாவது நாளிலிருந்து அதிகமான அழுத்தங்கள் மேலிடத்திலிருந்து வர ஆரம்பித்தது... சோனியா-வோனியா இன்னும் எல்லோரும் இங்கே வந்தார்கள்....

.• • •

தெஹல்கா: நீங்கள் சிறைச்சாலையில் இருந்த போது நரேந்திரபாய் உங்களைச் சந்திக்க வந்தாரா?

பஜ்ரங்கி : நரேந்திரபாய் என்னைச் சந்திக்க வந்திருப்பாரானால், அவருக்கு மிகப் பெரிய நெருக்கடி வந்திருக்கும்....நான் அவரைப் பார்ப்பதைப் பற்றி எதிர்பார்க்கவில்லை.... இன்று கூட நான் எதிர்பார்க்கவில்லை.

தெஹல்கா: அவர் (மோடி) எப்போதாவது உங்களுடன் தொலைபேசியில் பேசினாரா?

பஜ்ரங்கி : அந்த வழியில் அவருடன் பேசினேன்.... ஆனால் எளிதாக அல்ல.... முழு உலகமே இதைப் பற்றிப் (குஜராத்தில் மோடியின் செயல்பாடுகள்) பேச ஆரம்பித்திருந்தது.

தெஹல்கா: ஆனால் நீங்கள் தலைமறைவாக இருந்த போது, அந்த சமயத்தில் அவர்.......

பஜ்ரங்கி : ம்ம்ம்....நான் இரண்டு அல்லது மூன்று தடவை பேசினேன்.

தெஹல்கா: அவர் (மோடி) எங்களை உற்சாகப்படுத்தினாரா?....

பஜ்ரங்கி : நரேந்திரபாய் நெசமான ஆம்பளை....அவர் (மோடி) எனது உடலில் ஒரு வெடிகுண்டு கட்டிக் கொண்டு என்னைக் குதிக்கச் சொல்லியிருந்தால்....அவ்வாறு நான் செய்வதற்கு நொடிப் பொழுது கூட எனக்கு ஆகாது.....நான் உடனே ஒரு வெடிகுண்டு எனது உடலில் சுற்றிக் கொண்டு எங்கு குதிப்பதற்கு நான் கூறப்பட்டேனோ அங்கே குதித்து விடுவேன்..... ஹிந்துகளுக்காக..

தெஹல்கா: அவர்(மோடி) மட்டும் இல்லாதிருந்தால், பிறகு நரோடா பாட்டியா, குலடபர்க் இன்னும்......

பஜ்ரங்கி : நடந்திருக்காது, நடந்திருப்பது மிகக் கடினமே....

• • •

தெஹல்கா: நரேந்திரபாய் படுகொலைகள் நடந்த மறுநாள் பாட்டியா வந்தாரா?

பஜ்ரங்கி : நரேந்திரபாய் பாட்டியா வந்தார்... அவர் சம்பவங்கள் நடந்த இடத்துக்கு வரமுடியவில்லை. ஏனென்றால் அவருடன் கமெண்டோ (அதிரடி படையினர்)-பமெண்டோ எல்லோரும் இருந்தார்கள்... ஆனால் பாட்டியா வந்து எங்களுடைய உற்சாகத்தைக் கண்டார். பின்னர் சென்று விட்டார்.... அவர் உண்மையிலேயே நல்ல ஒரு சூழலை விட்டுச் சென்றார்.....

தெஹல்கா: மிக உங்கள் அனைவருக்கும் ஆசீர்வாதங்களைச் சொன்னாரா....

பஜ்ரங்கி : நரேந்திரபாய் அங்கு பார்க்க வந்தவைகள் எதுவும் மறுநாளும் நிறுத்தப்படவில்லை....அவர் அஹ்மதாபாத் முழுவதும், மீயாக்களுடைய (முஸ்லிம்கள்) இடங்கள், ஹிந்துக்களுடையப் பகுதிகளும் என எல்லா இடங்களுக்கும் சென்றார்.... அவர்கள் (காவி பாவிகள்) நல்லபடியாக செய்துள்ளதாக மக்களிடம் (?) சொன்னார். அதோடு இன்னும் அதிகம் செய்ய வேண்டும் என்றும் கூறினார்.....

• • •

பஜ்ரங்கி : (படுகொலைகளுக்குப் பின்) காவல்துறை ஆணையாளர் ஆணைகள் பிறப்பித்து இருந்தார் (எனக்கெதிராக)..... நான் எனது வீட்டிலிருந்து வெளியேறுமாறுச் சொல்லப்பட்டேன்...நான் அங்கிருந்து ஓடினேன்... நரேந்திரபாய் என்னை....மவுண்ட் அபுவிலுள்ள குஜராத் பவனில் நாலரை மாதங்கள் தங்க வைத்திருந்தார்.... அதன் பிறகு நரேந்திரபாய் என்னென்ன செய்ய என்னிடம் சொன்னாரோ (நான் செய்தேன்)..... குஜராத்தில் நரேந்திரபாய் செய்ததை போன்று ஒருவராலும் செய்ய முடியாது... நரேந்திரபாயுடைய உதவிகள் மட்டும் எனக்கு இல்லாது இருந்திருந்தால், எங்களால் பழிதீர்த்து (கோத்ரா சம்பவத்திற்காக) இருக்க முடியாது..... (எல்லாம் முடிவடைந்த பிறகு) நரேந்திரபாய் சந்தோசப்பட்டார், மக்கள் (?) சந்தோசமடைந்தனர், நாங்கள் சந்தோசமடைந்தோம்.... நான் சிறைக்குச் சென்று விட்டுத் திரும்ப வந்துள்ளேன்....முன்பு வாழ்ந்த வாழ்க்கையின் பால் திரும்பி விட்டேன்.
• • •

பஜ்ரங்கி : நரேந்திரபாய் என்னைச் சிறையிலிருந்து வெளியே எடுத்தார்.... அவர் நீதிபதிகளை மாற்றிக் கொண்டே இருந்தார்... என்னுடைய விடுதலையை உறுதி செய்வதற்காகவே இதைச் செய்தார். இல்லையெனில் இது வரை என்னால் வெளியே வந்திருக்க முடியாது.... முதல் நீதிபதி ஒரு தோலாகியாஜி... அவர் பாபு பஜ்ரங்கி உறுதியாக தூக்கிலிடப்பட வேண்டும் என்று சொன்னார். ஒரு தடவையல்ல நாலைந்து முறை சொன்னார். இன்னும் அவர் வழக்கு சம்பந்தப்பட்டக் கோப்பை ஒரு ஓரத்தில் வீசினார்.... அதன் பிறகு இன்னொருவர் வந்தார். நான் தூக்கிலிடப்பட வேண்டும் என்று சொல்ல வருவதற்கு சற்று முன்பாக அவர் நிறுத்தப்பட்டார்.... இதன் பிறகு மூன்றாவது ஒருவர்... இப்படியாக நாலரை மாதங்கள் சிறையில் கழிந்தது. பிறகு நரேந்திரபாய் ஒரு செய்தியை அனுப்பினார்...அவர் (மோடி) ஒரு வழியைக் கண்டுபிடிப்பதாக அந்தச் செய்தியில் கூறியிருந்தார்... அதன் பிறகு அக்ஸை மேத்தா என்ற பெயருடைய ஒருவரை நீதிபதியாக நியமித்தார்... அவர் வழக்கு சம்பந்தப்பட்ட கோப்புகளை கூடப் பார்க்கவில்லை... (பெயில்) வழங்கப்படுகிறது என்று மிகச் சதாரணமாக அவர் சொல்லி விட்டார்... அதன் பிறகு நாங்கள் அனைவரும் வெளியே வந்தோம்... நாங்கள் அனைவரும் விடுதலையானோம்.... இதனால் நான் கடவுள் (?) மீது நம்பிக்கை வைத்துள்ளேன்... நாங்கள் ஹிந்துத்வாவுக்காகச் சாவதற்கும் தாயாராக இருக்கிறோம்.......

விஹெச்பியின் குறிப்பிடத் தகுந்த முக்கிய நபரும், கலுப்பூர் மற்றும் தரியாபூர் ஆகிய இடங்களில் முஸ்லிம்கள் மீது தாக்குதல்கள் நடத்த திட்டமிட்ட சதிகாரனான ரமேஷ் தேவ் என்பவன் மோடியைப் பற்றிக் கூறும் போது, “அவருடைய கடுங் கோபம் மிக அதிகமாக இருந்தது” என்றான்.

உணர்ச்சி கொந்தளிப்பில் இருந்த மோடி கோத்ரா சம்பவத்தின் போது தனது உணர்வை உண்மைபடுத்தி காட்டியது, சங்பரிவாரத்திற்காக இறுதி வரை உழைக்கும் ஒரு சகத் தொண்டனால் புரிந்து கொள்ள முடிந்தது.

ரமேஷ் தேவ் தெஹல்காவுடன் மோடி தொடர்புடைய உரையாடலின் போது....

ரமேஷ் தேவ்: அன்றிரவு நாங்கள் (விஹெச்பி) அலுவலகத்திற்குப் போயிருந்தோம்... அங்குச் சூழ்நிலை மனதை மிகவும் பாதிக்கக் கூடியதாக இருந்தது... பல ஆண்டுகளாக (நாம் வாங்கிக் கொண்டிருந்தோம்) என ஒவ்வொருவரும் உணர்ந்தார்கள். நரேந்திரபாய் எங்களுக்கு மிகச் சிறப்பாக உதவி செய்தார்....

தெஹல்கா: கோத்ரா வந்ததும் அவருடைய உணர்வு என்னவாக இருந்தது?

தேவ்: கோத்ராவில் அவர் மிகக் கடுமையான தகவலைச் சொன்னார்... அவர் கடுங் கோபத்திலிருந்தார்.... அவர் சங்பரிவாரத்தில் தனது குழந்தை பருவத்திலிருந்தே இருக்கிறார்.... அவரது கோபம் அப்படி இருந்தது..... அப்போது அவர்(மோடி) வெளிப்படையாக வரவில்லையே தவிர, தனது காவல்துறையின் செயல்பாட்டை முற்றிலுமாக முடக்கிச் செயலிழக்கச் செய்தார்.........

இன்ஷா அல்லாஹ் தொடரும்..

1 comment:

  1. நாம் எதையும் இறைவனுக்கெதிராக / மக்களுக்கெதிராக செய்யக்கூடாது. ஆனால் நமக்கெதிராக இனி இது போல நடந்தால், அதைத் தடுப்பதற்குரிய வழிமுறைகளை கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும். அதற்கான முயற்சிகளில் நாமிறங்கியே ஆக வேண்டும் என்ற நிலைமையை தெளிவாக உணர முடிகிறது.

    ReplyDelete