Tuesday, November 13, 2007

கொலை வெறிக்கூட்டத்தின் வாக்குமூலம் தமிழில்...4.

முன்னுரை, பாகம் 1, பாகம் 2, பாகம் 3

வெடிகுண்டு தயாரிப்பாளர்கள்

வி.ஹெச்.பி மற்றும் பஜ்ரங்தள் அமைப்புகள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடிய ஆயுதங்களைப், பெரும்பாலும் போலீஸின் உடந்தையோடு மாநிலம் பரவலாக தாயாரித்து விநியோகமும் செய்தார்கள்.

மேலோட்டம்:

2002-ல் பஜ்ரங்தள் ராஷ்டிரீய ஸசன்யோக்கில் இருந்தவனும், தற்போது கோத்ரா சட்டமன்ற தொகுதியின் (கலவரத்துக்கு முன்பு வரை காங்கிரஸின் கோட்டை) பாஜக MLA ஆகவும் இருக்கும் ஹரேஷ் பட் என்பவன், தனதுச் சொந்தப் பட்டாசு தொழிற்சாலையில் வைத்து குண்டுகள் தாயாரிக்கப்பட்டதாக இதுவரை எவராலும் அறியப்படாத ஒரு தகவலைக் கூறினான். ராக்கெட் லாஞ்சர்கள் உள்பட நாட்டு வெடிகுண்டுகள் எல்லாம் எவ்வாறு உருவாக்கப்பட்டது என்றத் தகவலையும் அவன் விளக்கினான். இவ்வாறு தாயாரிக்கப்பட்ட ஆயுதங்கள், பின்னர் அஹ்மதாபாத்திலுள்ள கொலைகார வன்முறை கும்பல்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.

2002-ல் அஹ்மதாபாத்தில் ஊரங்குச் சட்டம் அமுலில் இருந்த போதும், வாள்கள் பஞ்சாப்பிலிருந்தும், நாட்டுத் துப்பாக்கிகள் உ.பி, பீகார் மற்றும் மத்தியப் பிரதேசம் போன்றப் பகுதிகளிலிருந்து கொண்டு வரப்பட்டன. இவ்வாறு ஆயுதங்கள் வரவழைக்கப்பட்ட எந்த மாநிலங்களிலும் அப்போது பாஜக ஆட்சியில் இல்லாதிருந்தும் கூடக் கொண்டு வர முடிந்தது என பட் பெருமையாகக் கூறி கொண்டான். பிற மாநில எல்லைகளைக் கடந்துக் கொண்டு வரப்பட்ட ஆயுத குவியல்கள் ஒரு முறையல்ல, பலத் தடவைகள் கொண்டு வரப்பட்டன; "குவியல் குவியலாக அவைகள் இருந்தன" என்றத் தகவலையும் பட் வெளிப்படுத்தினான்.

குஜராத் கலவரத்துக்குச் சம்பந்தமில்லாததாக இருந்தாலும் கூட, "அவனால் பயிற்றுவிக்கப்பட்ட 40 இளைஞர்கள் டிசம்பர் 1992 பாபரி மசூதி இடித்த சம்பவத்தில் பங்கெடுத்ததாக", அதி முக்கியம் வாய்ந்த மற்றொரு இரகசியத்தையும் பட் வெளிப்படுத்தினான். இராணுவத்தில் தரப்படும் பயிற்சியை ப் போல, தடை ஓட்டப் பயிற்சி, 30 அடி கயிற்றில் எவ்வாறு ஏறுவது போன்றப் பயிற்சிகளை அவன் அந்த இளைஞர்களுக்குக் கொடுத்தானாம். அந்தப் பயிற்சி முகாம் இன்றும் அஹ்மதாபாத்தில் உள்ளது.

(தெஹல்கா அறிக்கை வெளிப்படுத்தும் ஹிந்துத்துவ வெறிநாய்கள் முஸ்லிம்களை அழிக்க எடுத்துக் கொள்ளும் அனைத்து முன்னேற்பாடுகளும், வருங்காலத்தில் முஸ்லிம் சமுதாயம் இந்தியாவில் நிம்மதியாக வாழ வேண்டுமெனில், அதற்காக எடுக்க வேண்டிய தற்காப்பு நடவடிக்கைகளின் முக்கியதுவத்தைக் குறித்தும், அந்தத் தற்காப்பு நடவடிக்கைகள் எவ்வகையிலெல்லாம் எடுக்கப்பட வேண்டும் என்பதனையும் விரிவாக எடுத்துரைக்கும். முஸ்லிம் சமுதாயம் இவற்றை வைத்து இனிமேலாவதுத் தன்னைத் தற்காத்துக் கொள்வதற்கான முன்னேற்பாடுகளில் கவனம் செலுத்தும் என நம்புவோமாக! - இறை நேசன்.)

வி.ஹெச்.பியைச் சார்ந்தத் தாவல் ஜெயந் பட்டேல் என்பவன் அவனுடைய குவாரிகளிலுள்ள அபாயகரமான வெடிகளை சபர்கந்தாவில் பயன்படுத்தி உள்ளான். வெடிமருந்துப் பொருள்களைக் கையாளுவதில் தேர்ச்சி பெற்ற பழம்பெரும் RSS காரனாகிய அம்ருத் பட்டேல் என்பவனுடைய உதவியால், குவாரியிலேயே வெடிமருந்துகள், RDX ஆகியவற்றைக் கொண்டு வெடிகுண்டுகள் தயாரிக்கப்பட்டன.

வி.ஹெச்.பியின் விபாக் பெர்முக்வாகிய அனில் பட்டேல் என்பவன், எவ்வாறு வெடிகுண்டுகள் சபர்கந்தாவில் உருவாக்கப்பட்டு பின்னர் அஹ்மதாபாத்திற்கு விநியோகம் செய்யப்பட்டது என்றத் தகவலை வெளியிட்டான்.

பகுதி 2 முடிவுற்றது. இறைவன் நாடினால், பகுதி 3 விரைவில். பாகம் 5

குறிப்பு: இதே தலையங்கத்தின் கீழ் வரும் உபதலைப்பான “தீவிரவாத நடவடிக்கையில் பெருமைபடும் வாணிபர்கள்” என்பதில் உள்ள தகவல்கள் தெஹல்கா வலைபதிவில் காணப்படவில்லை. கிடைக்கும் பொழுது இரண்டாம் பாகத்தின் அப்பகுதியும் இன்ஷா அல்லாஹ் தமிழாக்கி வெளியிடப்படும்.

1 comment:

  1. அண்மையில் நான் பார்த்த பதிவில் ஒரு சகோதரர் இதே தெகல்கா தலைப்பில் ஒரு கட்டுரையை வரைந்து விட்டு முடிவில் இவ்வாறு குறிப்பிட்டிரிந்தார்.

    "இதற்கு மேல் மறுமையின் மீது நம்பிக்கை உள்ள முஸ்லீம்கள் மோடியை இறைவன் மறு உலகில் பிடித்து தண்டிப்பான் என்ற நம்பிக்கை கொண்டு இன்னும் பொறுமையுடன் தொடர்ந்து இறைவனிடம் பிரார்த்தித்து வருவோம்."

    இதை படித்து மனம் வேதனை அடைந்தது. நீங்கள் இப்பதிவில் கூறியுள்ள தீர்வு உண்மையிலயே இறை திருப்திக்கும் மற்றும் நாட்டில் முஸ்லிம்கள் மட்டுமல்ல அனைத்து தரப்பாரும்(மொத்த நாடுமே இந்த பாசிசத்தின் பிடியில் தானே இருக்கிறது) நிம்மதியுடன் வாழ்வதற்கும் வழி வகுக்கும்

    ReplyDelete