Tuesday, February 28, 2006

உலகை அச்சுறுத்தும் தள்ளு வண்டி!


மேலே காணும் இந்த தள்ளு வண்டி வெறும் பாரம் ஏற்றும் வண்டி மட்டுமல்ல. தனக்கு தேவையான பாரத்தினை தானே தயார் செய்யும் ஓர் வித்தியாசமான வண்டி. தனது தடையில்லா ஓட்டத்திற்கு எதிர்காலத்தில் பிரச்சினையாக வரும் என யாரையெல்லாம் நினைக்கிறதோ அவர்களை, குழந்தைகள், வயோதிகர்கள், அப்பாவிகள், பெண்கள் அடக்கம் அத்தனை பேரையும் ஈவிரக்கமில்லாமல் கொன்று அதில் கிடைக்கும் இரத்தத்தை தனது வண்டிக்கு எரிபொருளாக உபயோகித்துக் கொண்டு தனது அடுத்த இலக்கை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கும் அதி பயங்கர இரத்த வெறி பிடித்த கொலைகார கொடூர வண்டி.

இவ்வண்டி கடந்து வந்த கோர பாதைகளை இரண்டாம் உலகப் போரிலிருந்து கணக்கு கூட்ட ஆரம்பிக்கலாம். ஹிரோஷிமா, நாகசாகியிலிருந்து வியட்னாம், ஆப்கான், ஈராக் என கடந்த வெறும் 65௭0 வருட காலத்தில் கோடி கணக்கான விலைமதிப்பற்ற மனித உயிர்களையும், சொத்துக்களையும் சூறையாடிக் கொண்டு இரத்த வெறி பிடித்து அலைந்து கொண்டிருக்கிறது. இதோ இப்பொழுது அடுத்த இலக்காக ஈரானையும், சிரியாவையும் குறி வைத்தாயிற்று. இனி அங்கே நுழைய வேண்டியது தான் பாக்கி. அதற்குண்டான அனைத்து தகிடுதத்தங்களையும் இனி செய்யும். எங்கிருந்தெல்லாம் முனகல் ஒலி கேட்கும் என நினைக்கிறதோ அப்பக்கமெல்லாம் தனக்கு வாலாட்ட எலும்புத் துண்டுகளையும் வீசி எறிய ஆரம்பித்தாகி விட்டது.

இந்த கொடூரமான வண்டியின் பாதையை கண்காணித்து செம்மைப் படுத்த வேண்டியவர்களோ, இவ்வண்டி கடந்து வரும் பாதையில் ஏற்படுத்தும் கோடூர செயல்களினால் விளையும் இரத்த எச்சங்களை சுவைக்க நாக்கைத் தொங்க விட்டு காத்துக் கொண்டிருக்கின்றனர். சரி வேறு யாராவது வந்து இதன் பாதையை செம்மைப் படுத்த முயல்வார்கள் என நினைத்தால் வருபவர்கள் ஆத்திர அவசரப் பட்டு இவ்வண்டியை முடமாக்குகின்றோம் எனக் கூறிக் கொண்டு இவ்வண்டி செய்யும் அதே காரியத்தை செய்கின்றனர். பாதிப்பு அனைத்தும் அப்பாவி மக்களுக்கே! இதற்கு விடிவு காலம் எப்பொழுதோ!

No comments:

Post a Comment