Thursday, September 18, 2008

சம்பவம் இரண்டு! நீதியும் இரண்டு!

முஸ்லிம்களின் பாதுகாவலன் நோன்பு கஞ்சி புகழ் கருணாநிதி ஆட்சியில் இருக்கும் வேளையில் கோயம்புத்தூரில் போக்குவரத்து காவலர் திரு. செல்வராஜ் படுகொலை செய்யப்பட்ட பிறகு இரு சம்பவங்கள் நடந்தேறின.

சம்பவம் ஒன்று: காவல்துறையில் இயங்கும் இரத்தவெறி கொண்ட சங்கபரிவார வல்லூறுகள், சங்கபரிவாரத்துடன் இணைந்து காவல்துறையைக் காவிதுறையாக்கி கோவை நகரம் முழுவதும் முஸ்லிம்களை நரவேட்டையாடியது. இதில் 19 அப்பாவி முஸ்லிம்கள் அநியாயமாகப் படுகொலை செய்யப்பட்டனர். கோடிகணக்கான முஸ்லிம் பொருளாதாரம் எரித்து சாம்பலாக்கப்பட்டன. முஸ்லிம் சமுதாயத்தின் மீது அக்கிரமங்கள் எங்கும் தலைவிரித்தாடியது. பாதிக்கப்பட்டவர்களை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றவரை காவல்துறையினர் முன்னிலையிலேயே மருத்துவமனை வளாகத்தினுள் வைத்து சங்கபரிவாரத்தினர் உயிரோடு பெட்ரோல் ஊற்றி எரித்தனர்.

இத்தனை நடந்தப் பின்னரும் அப்பொழுது முதல்வராக இருந்த நோன்பு கஞ்சி கருணாநிதி, முஸ்லிம் சமுதாயத்தின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட அக்கிரமத்தை ஏன் என்று திரும்பி கூடப்பார்க்கவில்லை. அக்கிரமம் இழைத்த காவிபரிவாரத்தினர் ஒய்யாரமாக நகர்வலம் வந்தனர். உடைமை இழந்தவர்களுக்கு நிவாரணமோ உயிரிழந்தவர் குடும்பங்களுக்கு ஆறுதலோ அக்கிரமம் இழைத்தவர்களைக் கைது செய்யவோ எதுவுமே நோன்பு கஞ்சி கருணாநிதி செய்யவில்லை.

சம்பவம் இரண்டு: காவிகளால் கூட்டமாகக் கருவறுக்கப்பட்டப் பின்னரும் கண்டு கொள்ளாத நோன்புக் கஞ்சி கருணாநிதி, வெந்தப்புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் பாதிக்கப்பட்டக் கோவைக்கு இரத்தம் குடித்த சங்கபரிவாரத்தின் தலைவன் அத்வானியை வர அனுமதித்தார். அரசியல் இலாபம் தேடும் எண்ணத்தில் புல்லுருவிகள் எவரோ வைத்தக் குண்டில் அப்பாவிகள் 40க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

அதுவரை செத்துக் கிடந்த கருணாநிதியின் அரசு இயந்திரம் விழித்துக் கொண்டது. 19 முஸ்லிம்கள் அநியாயமாகக் கொல்லப்பட்ட வேளையில் டாய்லெட் சென்றிருந்த நோன்பு கஞ்சி கருணாநிதி, அப்பொழுது தான் விழித்தெழுந்தார் போலும்!. கருணாநிதிக்கு உடனடியாகக் கோவை வர விமானமும் கிடைத்தது. 168 முஸ்லிம்கள் உடனடியாகக் கைது செய்யப்பட்டனர். குண்டுவெடிப்பில் இறந்தவர்களுக்கு லட்சங்கள் நிவாரணத்தொகையாக வழங்கப்பட்டன. ஒருவருக்குக் கூட ஜாமீன் வழங்காத வழக்கில் 9 வருடத்திற்குப் பிறகு, கேரள மக்கள் கட்சி தலைவர் மதானி நிரபராதி என விடுவிக்கப்பட்டார். 9 வருடம் வாழ்வைத் தொலைத்தவருக்கு, வாய்மூடி இருக்க வேண்டும் என அன்புக்கட்டளையும் போட்டு கருணாநிதி வழியனுப்பி வைத்தார். மற்றவர்கள் 10 ஆண்டுகளாக இன்னமும் சிறையில் உள்ளனர்.

இன்று மீண்டும் ஆட்சியில் இருக்கும் கருணாநிதி, அண்ணா பிறந்தநாளையொட்டி 7 ஆண்டுகளுக்கு மேளாக சிறையில் இருக்கும் 1405 ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்கிறார். 10, 7 ஐ விடக் குறைவு போலும். கோவை வழக்கில் கைது செய்யப்படு 10 ஆண்டுகளாக சிறையில் வாடும் ஒரு முஸ்லிமைக் கூட துரோகி கருணாநிதி விடுதலை செய்யவில்லை.

அதே சமயம், மதுரை கம்யூனிஸ்ட் கவுன்சிலர் லீலாவதி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருபவர்களும், உயர்நீதிமன்றத்தால் "சமூகத்துடன் இணைந்து வாழவே தகுதியற்றவர்கள்" என்ற புகழ்மாலை சூட்டப்பட்டவர்களுமான மகன் அழகிரியின் குண்டர்களை விடுதலை செய்துள்ளார்.

இந்நிமிடம் சிந்திக்க: கோவை குண்டு வெடிப்பிற்குக் காரணமான 19 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட கோவை அட்டூழியம் தொடர்பான வழக்கு இன்னும் ஒரு அடி கூட நகரவில்லை. அதில் சம்பந்தப்பட்ட கொலையாளிகள் உல்லாசமாக கோவையை இன்றும் வலம் வருகின்றனர்.

நீதி என்றால் இதுவல்லவோ நீதி!

துரோகி கருணாநிதி வாழ்க!

முஸ்லிம்களின் பாதுகாவலன் என்றப் பெயரை அவனுக்கு வழங்கிய நோன்பு கஞ்சி வாழ்க!

கிழட்டு நரிக்கு இன்னமும் உடனிருந்து வெண்சாமரம் வீசும் சமுதாய இயக்கங்கள் வாழ்க!

ஜனநாயகம் வாழ்க!

ஜெய் ஹிந்த்!

5 comments:

  1. Shame Mr.Irainesan, you are not talking about how the Coimbatore people affected in the BOMB BLAST and how many were died, but still you are supporting this terrorist.

    The govt should take right decision to punish them and people should not vote for DMK and congress again.

    ReplyDelete
  2. //இந்நிமிடம் சிந்திக்க: கோவை குண்டு வெடிப்பிற்குக் காரணமான 19 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட கோவை அட்டூழியம் தொடர்பான வழக்கு இன்னும் ஒரு அடி கூட நகரவில்லை. //

    So you also confessed that 19 muslims are the convits for Kovai bomb blast. They why we need to worry about their death (Alla-ve thandanai koduthutaru ooooo).

    ReplyDelete
  3. //புல்லுருவிகள் எவரோ வைத்தக் குண்டில் அப்பாவிகள் 40க்கும்//

    என்ன உங்களுக்கு மனசாட்சியே கிடையாதா? முஸ்லிகள் வசிக்கும் கோட்டைமேடு பகுதியில் வசிக்கும் எல்லோருக்கும் தெரியுமாமே ஏதோ அசம்பாவிதம் நடக்கப் போகிறது என்று.
    இஸ்லாம் தீவிரவாதி என்றால் உடனே இஸ்லாம் அமைதி மார்க்கம் குண்டு வைக்குறவன் முஸ்லிமே அல்ல எனக் கூப்பாடு போடுறிங்க.அவனைக் ஜெயில்ல போட்ட உடனே அவனே அப்பாவி முஸ்லிமா மாறீடுரான். என்ன கொடுமை இது!

    ReplyDelete
  4. //முஸ்லிகள் வசிக்கும் கோட்டைமேடு பகுதியில் வசிக்கும் எல்லோருக்கும் தெரியுமாமே ஏதோ அசம்பாவிதம் நடக்கப் போகிறது என்று.//

    ada appadiyaa? waanum kotaimeduvaasingthaangna. enakku appadi onnum theriyaathe?

    ReplyDelete
  5. Nice and a highly interesting post to stumble at on this awesome blog. Never post some input only now just could not resist .
    Great and an very facinating post to check on this awesome blog! Almost never write any replies only now i just did not resist
    To the point and written well, thanks for the info
    pm 0.1 filter
    hydrogen water machine amazon
    ionic air purifier reviews consumer reports

    ReplyDelete