Monday, September 29, 2008

சவார்க்கர் வீரனா? துரோகியா?

மூஞ்சே, ஹெட்கேவர், கோல்வால்கர் தொடங்கி நிறைய பேர் இருக்கும் போது, 'ஆர்.எஸ்.எஸ். & கோ'வினரால் அதிகம் அடையாளம் காட்டப்படுவோர் வீரசிவாஜி, வீரசவார்க்கர், பாலகங்காதர திலக் ஆகியோரே. அதற்குக் காரணமும் இருக்கவே செய்கிறது. முடிசூடுவதற்காக பார்ப்பனர்களிடம் அடி பணிந்த சிவாஜியாக இருந்தாலும், காங்கிரஸ் மாநாட்டில் செருப்பை விட்டெறிந்து ரகளையில் ஈடுபட்ட 'திலக்'காக இருந்தாலும், காந்தியார் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சவார்க்கராக இருந்தாலும் அவற்றை மறைத்து தேசியம் என்ற பொதுத் தலைப்பின்கீழ் இவர்களை அறிமுகப்படுத்தலாம் என்பதுதான் அது. இந்துத்வா என்னும் நஞ்சை புகட்டுவதற்காக சேர்க்கப்படும் தேசபக்தித் தேனாக இருக்கும் சவார்க்கருக்கு ஆபத்து என்றால், அவர்கள் தாண்டிக் குதிக்கத் தகுந்த காரணமில்லையா இது?

விநாயக் தாமோதர் சவார்க்கர், பார்ப்பனர்களிலேயே தூய பிரிவாகக் கருதப்படும் சித்பவன் பார்ப்பனக் குடும்பத்தில் பிறந்தவர். பார்-அட்-லா படிப்பதற்காக இங்கிலாந்துக்குப் போன சவார்க்கர், அங்கே "சுதந்திர இந்தியச் சங்கத்தில்" இணைந்த இந்திய மாணவர்கள் ஆயுதமேந்தக் காரணமாக இருந்ததாக இங்கிலாந்து அரசு கருதியது.வங்காளத்தின் 'குதிராம் போஸ்'க்கு எதிரான வழக்கில் வாதாடிய சர். கர்ஸன் என்பவரை 1909-ஆம் ஆண்டு சுட்டுக் கொன்றதாக 'மதன்லால் திங்கரா' என்ற சுதந்திர இந்தியச் சங்கத்தின் தீவிர உறுப்பினர் கைது செய்யப்பட்டார். அந்தக் கொலையில் வி.டி. சவார்க்கருக்கும் தொடர்பு இருந்ததாக 13.3.1910-ஆம் நாள் அவர் கைது செய்யப்பட்டார். இந்தியாவில் மேலும் விசாரணைக்காக சவார்க்கரை கப்பலில் இந்தியாவுக்குக் கொண்டு வந்தனர். வரும் வழியில் பிரான்சில் 'மார்செய்லீஸ்' என்ற துறைமுகத்தில் 8.7.1910-அன்று சிறுநீர் கழிக்கச் செல்வதாகக் கூறி தப்பித்துச் செல்ல முயன்று, உடனே பிடிபட்டார் சவார்க்கர்.

தண்டனையில் இருந்து தப்பும் எண்ணம் தொடக்கம் முதலே அவருக்கு இருந்து வந்தது. கைது செய்யப்படும் முன்பே பாரீசுக்கு தப்பிச் சென்று, அங்கு தொடர்ந்து இருக்க முடியாமல், எப்படியும் கைது செய்யப்படுவோம் என்று அறிந்து தொடர் வண்டியில் வந்து கொண்டிருக்கையில் விக்டோரியா ஸ்டேஷன் அருகில் பிடிபட்டார்.அதே ஆண்டு டிசம்பர் 24-ஆம் நாள் 50 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டு அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டார். அந்தமான் தீவுக்குக் கப்பலில் கொண்டு செல்லப்பட்டு 1911-ஆம் ஆண்டு ஜூலை 4-ஆம் நாள் சிறையிலடைக்கப்பட்டார். சிறைக்குக் கொண்டு வரப்பட்டவுடன், 6 மாதம் கழித்து ஒரு கருணை மனு எழுதி பிரிட்டிஷ் அரசுக்கு அனுப்பி வைத்தார், கருணை மனு வீரரான சவார்க்கர். அது கண்டுகொள்ளப்படாமல் போகவே மீண்டும் அதை நினைவூட்டி 1913-ஆம் ஆண்டு நவம்பர் 13-இல் 'புகழ்பெற்ற' கருணை மனுவினை அனுப்பிவைத்தார்.கருணை மனுப் போர் தொடுப்பதில் மட்டும், என்றும் சளைக்காத மன்னிப்புக் கடித மாவீரராகவே திகழ்ந்தார் அவர்.

அந்தமானில் அடைக்கப்பட்டபோதும் சரி, காந்தியார் படுகொலையில் சிறையில் இருந்தபோதும் சரி - அவர் எழுதிய கருணை மனுக்கள் மாதிரியாகக் கொள்ளப்பட வேண்டியவை. அதிலும், தடாலடியாகக் காலில் விழுந்து மன்னிப்பு கேட்பது போன்று எழுதுவது சவர்க்கரின் தனிச்சிறப்பு.அந்தமானில் சவர்க்காரின் சிறை வாழ்க்கை நிறைய சுவாரசியமானது. அவருடன் சிறையிலிருந்த 92 வயதான தினேஷ் குப்தா என்பவர் ஆக. 9, 2003 அன்று டில்லியில் அளித்த ஒரு பேட்டியில்,"வி.டி. சவர்க்காரும் நானும் ஒன்றாக சிறையில் இருந்தவர்கள். அவர் ஒன்றும் சிறையிலேயே உயிரைவிட்டு விடவில்லை. சிறையிலேயே உயிரைப் பறிகொடுத்த 8 விடுதலை தியாகிகளுக்கு அவர்களின் நினைவைப் போற்ற போர்ட்ப்ளேயரில் வைக்கப்பட்டிருக்கும் சிலைகளுக்கு மத்தியில் சவர்க்காரின் சிலையையும் வைத்திருப்பது அந்த மற்ற விடுதலை வீரர்களையும் அவமானப்படுத்துவதாகும். மேலும் ஆங்கிலேயர் ஆட்சிக்கு உதவுவதாகக் கூறி மன்னிப்புக் கடிதம் எழுதியனுப்பிய சவர்க்காரை விடுதலைப் போராட்டத் தியாகியாக சித்திரிப்பது மாபெரும் தவறாகும்; தாங்கமுடியாத துன்பமாகும்" என்று குறிப்பிட்டார்.

அவருடன் சிறையிலிருந்த விஸ்வநாத் மாத்தூர் என்பவர், "ஒரு கோழையைப் புரட்சியாளனாக தூக்கி நிறுத்துவது கேலிக் கூத்தாகும்" என்று கடந்த பி.ஜே.பி. ஆட்சியில் சவர்க்கார் படத்தை நாடாளுமன்றத்தில் வைத்தபோது தனது கருத்தை வெளிப்படுத்தியிருந்தார்.தினேஷ் குப்தாவும், மாத்தூரும் மட்டுமல்ல, சவார்க்கருடன் சிறையில் இருந்த வங்காளத்தின் திரிலோகநாத் சக்ரவர்த்தி அவர்கள் தனது சுயசரிதை நூலில் தங்களை சிறை அதிகாரிகளுக்கு எதிராகப் போராடத்தூண்டி விட்டு, தான் மட்டும் (சவார்க்கர்) நல்ல பிள்ளையாக இருந்து உண்ணாவிரதத்தில் கலந்து கொள்ளாமல் விட்டதைக் குறிப்பிட்டிருக்கிறார். இதை சவார்க்கரும் 'அந்தமானில் எனது ஆண்டுகள்' என்ற நூலில் ஒப்புக் கொண்டுள்ளதாக பிரபல வரலாற்றாளர் பிபின் சந்திரா கூறுகிறார்.

1911-ஆம் ஆண்டு சவார்க்கர் எழுதிய கருணை மனுவில் "1906-07 ஆம் ஆண்டுகளில் இந்தியாவில் நிலவிய நம்பகத் தன்மையற்ற சூழலினால் நாங்கள் பாதை தவறிவிட நேரிட்டது. நாட்டின் நன்மையிலும், மனித நேயத்திலும் அக்கறை கொண்ட யாரும் தவறான பாதையில் செல்ல விரும்பமாட்டார்கள். எனவே பெருந்தன்மை வாய்ந்த அரசு என்னை மன்னித்து விடுதலை செய்தால் நான் விசுவாசமாக இருப்பதோடு, இந்தியா மற்றும் வெளிநாடுகளில் தவறான பாதை செல்வோரையும் என் வழிக்கு மாற்றுவேன்... எனவே பாதை தவறிய இந்த பிள்ளை பெற்றோரிடம் மன்னிப்புக் கோருவதில் தவறில்லை" என்று குறிப்பிடுகிறார்.இப்படியாக, அந்தமானில் சவார்க்கரின் வீர, தீர, தியாகப் பெருவாழ்க்கை நிறைவுற்று 1921-ஆம் ஆண்டு மே 2-ஆம் நாள் அங்கிருந்து மாற்றப்பட்டு, 1921-24 ஆம் ஆண்டுகளில் வங்காளத்தின் அலிப்பூர் சிறையிலும், மகாராஷ்டிராவின் ரத்னகிரியிலும் சிறைவைக்கப்பட்டு, 1924-ஆம் ஆண்டு ஜனவரி 6-ஆம் நாள் இரு நிபந்தனைகளுடன் விடுதலையானார் சவார்க்கர்.

1. ரத்னகிரி மாவட்டத்தை விட்டு அனுமதியின்றி வெளியேறுவதில்லை.

2.நேரடி அரசியலில் பங்கேற்று பிரிட்டிஷ் அரசுக்கெதிராகப் போராடுவதில்லை என்பவை அந்த நிபந்தனைகள்.

சொன்னபடி செய்து பிரிட்டிஷ் அரசுக்கு ஆதரவாக ஆள் திரட்டும் பணியில் விடுதலையான பிறகு அவர் ஈடுபட்டார். அவரது தலைமையில், காந்தியார் கொலை வழக்கில் இரண்டாவது குற்றவாளியான நாராயண ஆப்தே மகாராஷ்டிரத்தில் இந்து மகாசபைக்கும், பிரிட்டிஷ் இராணுவத்திற்கும் ஆள் எடுக்கும் பணியில் ஈ டுபட்டு அதற்காக அரசாங்கத்திடமிருந்து உரிய ஊக்கத் தொகையையும் பெற்று வந்தார்.இந்து மகா சபையையும், ஆர்.எஸ்.எசையும் கொண்டு, இந்துத்வாவைக் கட்டமைக்கப் பணியாற்றினார். சவார்க்கர் தன்னை ஒரு நாத்திகர் என்று குறிப்பிட்டுக் கொண்டாலும் கலாச்சார தேசியமாக இந்துத்துவத்தின் அடித்தளத்தில் இந்து அரசை நிறுவுவதே பணியாகக் கொண்டிருந்தார்.

1924-ஆம் ஆண்டு விடுதலையான சவர்க்கார் 5 ஆண்டுகளுக்கு அரசியல் நடவடிக்கைகளில் ஈ டுபடுவதில்லை என்று தெளிவுபடுத்தியும், மேலும் அரசு அந்தக் காலக் கெடுவை நீட்டிப்பதாக இருந்தாலும், அரசின் முடிவுக்குக் கட்டுப்பட்டு நடக்கப் போவதாகும். 1925-ஆம் ஆண்டு ஒரு கடிதத்தை எழுதி காவல் துறையினருக்கு அனுப்பி வைத்தார்.காந்தியார் கொலை வழக்கு செங்கோட்டையின் தனி விசாரணை அரங்கிற்குள் நடத்தப்பட்டபோது, அதில் வீர(!) சவார்க்கர் மட்டுமே தனக்கும் இதற்கும் சம்பந்தமில்லையென்றும், தன்னால் எந்தத் தீங்கும் நேரவில்லையென்றும் புலம்பியபடியே பேசியவர். சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டபோது காவல் துறையினருக்கு அவர் எழுதிய கடிதத்திலும் அவ்வாறே குறிப்பிட்டிருந்தார் அது நிராகரிக்கப்பட்டது.

பரபரப்பான அந்த கொலை வழக்கில் நீதிபதி ஆத்மசரண் அவர்களால் "குற்றம் நிரூபணமாக போதிய ஆதாரம் இல்லை" என்று விடுவிக்கப் பட்டார் சவார்க்கர். காரணம் மேற்கூறிய திட்டத்தில் சவார்க்கரின் பெயர் இடம் பெறாதபடி நேரடி முக்கியக் குற்றவாளிகளான நாதுராம் கோட்சேவும், நாராயண ஆப்தேவும் அளித்த வாக்குமூலங்கள்.நீதிமன்றத்திலோ சவார்க்கர் வெளியிட்ட கருத்து அவரது தீரத்தை (!) வெளிப்படுத்தியது.

'கோட்சேயும், ஆப்தேயும் தங்களை பூனாவில் உள்ள மகாசபை வீரர்கள் என்று அறிமுகப்படுத்திக் கொண்டதாகக் கூறினார். ஆனால், 1937-ஆம் ஆண்டு முதல் கோட்சேவுக்கும் சவார்க்கருக்கும் இருந்த தொடர்பு வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட ஒன்று. சவார்க்கரின் மேற்பார்வையில் கோட்சே நடத்திய இந்துராஷ்டிரா இதழும், கோபால் கோட்சேயின் வாக்கு மூலங்களும் தனஞ்செய்கீரின் (சவார்க்கரின் வாழ்க்கை வரலாற்று ஆசிரியர்) நூலுமே சாட்சி.

இந்த வழக்கு விசாரணையிலும் ஒரு கூத்து. வழக்கில் இருந்த மற்ற அனைவரிடமிருந்தும் தனித்துக் காணப்பட்டவராகவும், சோகமே வடிவான முகத்தைக் காட்டிக் கொண்டிருந்தவராகவும் சவார்க்கர் காணப்பட்டார். தூக்கு மேடை ஏறும் முன் கோட்சேயின் கடைசித் துயரமே, தனது குருஜி தன்னைக் கண்டு கொள்ளவில்லை என்பதுதான்.எங்கும், எதிலும், எப்போதும் பட்டப்பெயரைத்தவிர வீரத்திற்கும், சவார்க்கருக்கும் நெருக்கம் இருந்ததே இல்லை.

நன்றி: கீற்று

Friday, September 26, 2008

சர்மாவைச் சுட்டது யார்? அவிழும் உண்மைகள்!



ஜாமிஆ நகரில் நடந்த என்கவுண்ட்டரில், என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் மோகன் சந்த் சர்மாவைக் கொன்றது யார்? அவர் சாகக் காரணமான துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர் யார்?

"குர்தா மற்றும் பைஜாமா உடையணிந்து தனியார் நிறுவனத்தின் விற்பனைப் பிரதிநிதி போன்ற வேடத்தில் சென்று தீவிரவாதிகள் வசித்திருந்த வீட்டுக் கதவைத் தட்டிய சர்மாவை, கதவைத் திறந்து நிமிட நேரத்தில் தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தியதாக" காவல்துறை கூறும் வாதத்தைக் காவல்துறையே வெளியிட்ட மேற்காணும் புகைப்படம் அப்பட்டமான பொய் எனச் சான்று பகர்கின்றது.

காவல்துறை வெளியிட்ட இப்புகைபடத்தில், தீவிரவாதிகள் வசித்திருந்த வீட்டிற்குச் சென்று துப்பாக்கிச் சூடு பெற்றுக் காயமடைந்த சர்மாவை, சக அதிகாரிகள் தாங்கிப் பிடித்து வருகின்றனர். ஆனால், சர்மாவின் முன்பக்கம் எங்கும் துப்பாக்கியால் சுடப்பட்ட காயம் இல்லை என்பதை இந்தப் புகைப்படத்திலிருந்தே தெளிவாக அறிந்துக் கொள்ள இயலும். காவல்துறை கூறுவது போன்று கதவைத் திறந்த நிமிடத்திலேயே திவிரவாதிகள் சர்மாவைச் சுட்டிருந்தால், துப்பாக்கிச் சூடு அவரின் முன்பக்கத்தில் எங்காவதுதான் பட்டிருக்க வேன்டும்.

வெள்ளைச் சட்டை போட்டிருக்கும் சர்மாவின் முன்புறம் எங்குமே துப்பாக்கிச் சூடு பட்ட அடையாளமோ ஒரு சிறு இரத்தக் கறையோ காணப்படவில்லை. அதே சமயம் சர்மாவின் இடது கையைத் தாங்கி அழைத்து வரும் சக அதிகாரியின் சட்டையில் தெரியும் இரத்தக் கறையிலிருந்து, சர்மாவின் பின்பக்கமிருந்து இரத்தம் வெளியாகி இருப்பது தெளிவாகின்றது.
அவ்வாறெனில் சர்மாவின் பின்பக்கமிருந்துதான் யாரோ சுட்டிருக்க வேண்டும். குண்டு, அவரின் சக அதிகாரிகளின் துப்பாக்கிலிருந்து வெளியானதாகவே இருக்க முடியும். ஏனெனில், அவர் கதவைத் தட்டும் பொழுது அவரது பின்னால் அம்மாடியில் அவரின் சக அதிகாரிகள் அல்லாமல் வேறு யாரையும் காவல்துறை அங்கு அனுமதித்திருக்கவில்லை. AIIMS வெளியிட்ட முதல் அறிக்கையும் "சர்மா, பின்பக்கமிருந்து வெகு அருகாமையில் சுடப்பட்டுள்ளார்" எனத் தெரிவிக்கிறது.





மேலும், காவல்துறை கூறுவது போன்று சர்மா குர்தாவும் பைஜாமாவும் அணிந்திருக்கவில்லை என்பதும் புகைப்படத்தில் காணப்படும் சர்மா அணிந்திருக்கும் கடும்நீல நிற பேன்டும் வெள்ளைச் சட்டையும் காவல் துறையின் பொய்யை வெட்ட வெளிச்சமாக்குகிறது. தீவிரவாதிகளால் சுடப்பட்ட சர்மாவை வெளியே கொண்டுவருவதற்கு முன்பு, அவருடைய "குர்தா மற்றும் பைஜாமை வேடத்தைக்" கலைத்து, அவருக்குப் புகைப்படத்தில் தெரியும் உடையை நாங்கள் தான் அணிவித்து வெளியே கொண்டு வந்தோம் என்று ஒரு புதிய கதையைக் காவல்துறை கூறாது என நம்புவோம்.

சர்மா பணி செய்திருந்த காவல்துறையினுள் அவர்களிடையே நிலவி வந்த பகைமையே சர்மா கொலைக்குக் காரணம் என்ற ஒரு கருத்து ஏற்கெனவே வெளியாகியுள்ளது. டெல்லி காவல்துறை சிறப்புப்பிரிவிற்குத் தலைமை வகிக்கும் கர்ணால் சிங்கிற்கும் சர்மாவிற்கும் இடையே சுமூகமான தொடர்புகள் இல்லாமல் இருந்தது எனவும் சில மாஃபியா குழுக்களுடனான தொடர்பின் பெயரில் இவர்களிடையே பிரச்சனைகள் நிலவி வந்ததாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.

நாட்டின் தலைநகரான டில்லி, போலி என்கவுண்ட்டர்களின் தலைநகராகவும் விளங்கியிருந்தது. சர்மா உட்பட பல காவல்துறை அதிகாரிகளுக்கு மறைமுகமாகப் பல அண்டர் வேல்ட் மாஃபியாக்களுடன் தொடர்பும் இதன் மூலம் பல கோடி சொத்துக்கள் அவர்கள் சேகரித்திருந்த விவரங்களும் இத்தகைய பணம் கொடுக்கல் வாங்கல்களில் காவல்துறையினருக்குள்ளேயே பிரச்சனைகள் நிலவி வந்ததும் நாடறிந்த விஷயமாகும்.

இதே ரீதியில், கடந்த 24.03.2008இல் மரணிக்கும் வரை மிகப் பெரிய என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்டாக மதிக்கப்பட்டிருந்த ஸ்பெஷல் ஆபரேஷன் ஸ்க்வாட் துணை ஆணையர் ராஜ்பீர் சிங் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதும் நினைவிருக்கலாம்.

போலி என்கவுண்ட்டர் நிகழ்ந்த இடத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்த பீப்பிள் யூனியன் ஃபார் சிவில் லிபர்ட்டீஸ்(பி.யூ.சி.எல்) தலைமையிலான இந்தியன் முஸ்லிம் கோ-ஆர்டினேசன் கமிட்டியிலுள்ள முஸ்லிம் அமைப்புகள் ஒன்றிணைந்து, "சர்மாவின் உடலில் துளைத்தக் குண்டுகள் யாருடைய துப்பாக்கிக்குச் சொந்தமானவை என்பதை ஆய்வகத்தில் பரிசோதித்து விவரங்களைப் பொதுவில் வெளியிட வேண்டும்" எனவும் "என்கவுண்ட்டரைக் குறித்து நீதிமன்ற விசாரணக்கு உத்தரவிட வேண்டும்" எனவும் மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளன. இந்நிலையில், "சர்மாவில் உடலில் குண்டுகள் எதுவும் இருக்கவில்லை" என அவர் உடலைப் பரிசோதித்த மருத்துவர் கூறியுள்ளார்.

உடலில் நான்கு இடங்களில் காயம் ஏற்பட்டிருந்தாலும் அதில் இரண்டு மட்டுமே குண்டுகள் துளைத்தக் காயமாக இருக்கலாம் எனவும் மிக அண்மையில் இருந்து சுடப்பட்டதால் குண்டுகள் உடலில் தங்கியிராமல் மறுபக்கமாக வெளியேறியிருக்கலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.

சுடப்பட்ட சர்மாவைத் தாங்கிப் பிடித்து வரும் புகைப்படத்தில் அவரது முன்பக்கம் எந்த ஒரு காயத்திற்கான அறிகுறியும் இல்லாத நிலையில், மருத்துவர் கூறியுள்ள தகவலிலும் சந்தேகங்கள் மிகைந்துள்ளன.

நன்றி: சத்தியமார்க்கம்.காம்

Friday, September 19, 2008

அயோத்தி முதல் சங்கரமடம் வரை...!

சங்கர மட முதலாளி ஜெயேந்திரன், அடியாள் கும்பலுக்குப் பணம் கொடுத்து சங்கரராமனைப் போட்டுத்தள்ளிய வரலாற்றுச் சிறப்புமிக்க சம்பவம் யாருக்கும் மறந்திருக்காது. கொலைகாரர்களோடு நெருங்கிப் பழகிய ஜெயேந்திரன் மிச்ச நேரங்களில் சினிமா பக்தைகளுடன் ஆன்மிகத்தை ஆய்வு செய்வதும், அதுவும் போக மேல்மட்டத் தகராறுகளை தீர்க்கும் மேல்கட்டை பஞ்சாயத்தையும் செய்து வந்தார். இந்த ஆன்மீக அவஸ்தைகளைத்தான் ரவுடிகளும் செய்து வருகின்றனர் என்றாலும், அவர்களுக்கு ஜெயேந்திரர் கையில் வைத்திருப்பது போன்ற தண்டமும், லோகக் குரு என்ற புனிதப் பட்டமும் கிடையாது.

இருந்தாலும், அவாள்களைப் பொருத்தவரை, சங்கர மடம் என்பது என்னதான் கிரிமினல் வேலை செய்து வந்தாலும் புனிதத்தை இழக்கக்கூடாது; ஏதாவது செய்து அந்தப் புனிதத்தைக் காப்பாற்றியே ஆகவேண்டும் என்பதில் குறியாயிருக்கிறார்கள்.
இராமன் பிறந்த அயோத்தியில் இந்த ஜோடனைகள் எதுவுமில்லை. அங்கே மடங்களும் மாஃபியாக்களும் வேறுபடுவதில்லை என்றால் உங்களுக்குச் சற்று ஆச்சரியமாயிருக்கலாம். எனினும் உண்மை அதுதான். அயோத்தி நகரில் மட்டும் 8,000த்திற்கும் மேலும், பீகாரில் 7,000த்திற்கு அதிகமாகவும் மடங்கள் உள்ளன. பெட்டிக்கடைகளை விட மடங்கள் அங்கே அதிகமாக இருப்பதன் காரணம், இந்தியா முழுவதிலிருந்தும் வரும் சுற்றுலா பக்தர்களை வைத்து அங்கே விரவியிருக்கும் பக்தித் தொழில்தான். பாபர் மசூதியை இடித்து இராமனுக்கு கோவில் கட்டப்போவதாக சங்க வானரங்கள் ஊர் ஊராக ஓதியிருப்பதால், அயோத்தி '90ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு பிரபலமாகிவிட்டது. அங்கு இருக்கும் மடங்களில் மட்டும் 40,000 மடாதிபதிகள், சாமியார்கள் மற்றும் பூசாரிகள் வேலை வெட்டியில்லாமல், நெய்ச் சோறோ, நெய் சப்பாத்தியோ தின்றுவிட்டுக் காலம் தள்ளுகிறார்கள். இவ்வளவு சாமியார்கள் இருப்பதால் அங்கே எங்கு பார்த்தாலும் ஆன்மீகம் கமழுமென்றுதான் பக்தகோடிகள் எதிர்பார்ப்பார்கள்.


சுற்றுலா பக்தர்கள் கொட்டும் பணம் எனும் லவுகீகம் உப்புச்சப்பற்ற அந்த ஆன்மீகத்தைக் கொள்ளை கொண்டுவிட்டபடியால், அயோத்தி சாமியார்களுக்கிடையே குழாயடிச் சண்டையல்ல, கொலைவெறிச் சண்டையே நடக்கிறது. சாமியார்களில் பீகாரிலிருந்து வந்த பார்ப்பன மற்றும் பூமிகார் மேல்சாதியைச் சேர்ந்த சாமியார்கள் மற்றும் மடாதிபதிகள் 25,000 பேர் இருக்கின்றனர். பீகாரைச் சேர்ந்த ஒடுக்கப்பட்ட சாதி மக்கள் கால் வயிற்றுக் கஞ்சிக்காக இந்தியா முழுவதும் நாடோடிகளாக அலையும் போது, பார்ப்பன மேல்சாதி தொந்திகள் மட்டும் அயோத்தியில் நோகாமல் கல்லா கட்டி காலம் தள்ளுகின்றனர்.


திருவாடுதுறையின் முன்னாள் சின்ன ஆதீனம் தன்னைக் கொல்ல முயன்றதாக தற்போதைய பெரிய ஆதீனம் குற்றம் சாட்டியிருந்த கதையெல்லாம் அயோத்தியைப் பொருத்தவரை ஒன்றுமேயில்லை. அங்கே மடங்களின் சொத்துக்களைக் கைப்பற்றுவதற்கு பீகாரிலிருந்து அடியாள் கும்பல்கள் மடாதிபதிகளால் வரவழைக்கப்படுகின்றன. போலீசின் பதிவுப்படி கடந்த பத்தாண்டுகளில் உ.பி. மற்றும் பீகார் மாநிலத்தில் மட்டும் இந்த சொத்துப் பிரச்சினைகளுக்காக நடந்த மோதலில் 150 மடாதிபதிகள் அல்லது சாமியார்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். இது ஒன்றும் ஐ.எஸ்.ஐ.யோ, லஷ்கர்இதொய்பாவோ செய்த சதியல்ல. காவி உடுத்திய சாதுக்கள் தங்களுக்கிடையே நடத்திய பச்சைக் கொலைகள். அயோத்தியில் மட்டும் கடந்த ஏழு ஆண்டுகளில் 20 சாமியார்கள் சக சாமியார்களால் கொல்லப்பட்டிருக்கின்றனர். இராம ஜென்ம பூமிக்கே இதுதான் கதியெனும்போது, இந்தியா முழுவதும் இராமராஜ்ஜியம் வந்தால் நம் கதி?


அயோத்தி நகரில் மட்டும் எல்லாம் வல்ல இறைவனை நம்ப முற்றும் துறந்திருக்கவேண்டிய இம்முனிவர்களில் 350 பேர் உரிமம் பெற்று துப்பாக்கி வைத்திருக்கிறார்களாம். ஒரு கையில் தண்டம், மறுகையில் துப்பாக்கி! முந்தைய பா.ஜ.க. ஆட்சியில் உ.பி.மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி நடந்த சமயத்தில், பைசலாபாத் மாவட்ட நிர்வாகம் குற்றப் பின்னணி உள்ளோரின் பட்டியலைத் தயாரித்த போது, அதில் இடம்பெற்ற அயோத்தி சாமியார்களின் எண்ணிக்கை 86! குற்றங்களைச் செய்து விட்டு மடங்களில் புகுந்துவிட்டால் போலீசு வரமுடியாது என்ற நிலைமையே இதன் பின்னணி. அப்படி போலீசு புகுந்து சிதம்பரத்தில் தீட்சிதர்களைக் கொத்துக் கொத்தாக தூக்கியது போல செய்தால், விசுவ ஹிந்து பரிஷத் உடனே இந்து மதத்திற்கு வந்த அநீதி என்று களமிறங்கிவிடும். எனவே, சாதா ரவுடிகளை என்கவுண்டர் செய்யும் போலீசு, சாமியார் ரவுடிகளைக் கைது செய்யவே அஞ்சுகிறது!


ஆர்.எஸ்.எஸ்இன் இராம ஜென்ம பூமி இயக்கத்தால் இந்து மதவெறியர்களுக்குக் கிடைத்த அரசியல் ஆதாயத்திற்கு நிகரான செல்வாக்கை, இந்தக் கிரிமினல் சாமியார்களும் பெற்றிருப்பதால் மாவட்ட நிர்வாகம் மடங்களுக்குள் நுழைவதற்குத் தயங்குகிறது. சமீபத்தில் அப்படி ஒரு கிரிமினல் சாமியார் கும்பலைத் தேடி உ.பி.மாநில அதிரடைப்படை நுழைந்த போது இந்து மதவெறியர்கள் எதிர்த்தார்கள். அதிரடிப் படையே தேடுமளவுக்கு அந்தக் கும்பல் என்ன குற்றம் செய்தது? கோண்டா ஊரில் உள்ள ஒரு கிராம வங்கியில் பத்து இலட்சம் ரூபாயை மடாதிபதி அருண் சாது கும்பல் கொள்ளையடித்துவிட்டு மடங்களில் தஞ்சம் அடைந்திருக்கிறது. இதே கும்பல் மிரட்டிப் பணம் பறிப்பதும், முக்கிய நபர்களைப் பிணையக் கைதிகளாகக் கடத்திப் பணம் பறித்து வந்ததும் தற்போது அம்பலமாயிருக்கிறது. கோவில் நிர்வாகங்களைக் கைப்பற்றுவதற்கு பிற மடாதிபதிக் கும்பல்களுடன் இந்த அருண் சாது கும்பல் அயோத்தியில் நடத்திய சண்டைகள் அங்கே பிரபலம்.


இந்தச் சொத்துப் பிரச்சினைகளுக்காக சாமியார் கும்பல்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொள்வதும், குண்டு வீசிக் கொள்வதும் நிறைய நடந்திருக்கின்றன. பல கோவில் பூசாரிகள் கொல்லப்பட்டிருக்கின்றனர். அயோத்தியில் இந்தச் சண்டைகள் முடிவின்றி நடைபெறுகின்றன. அந்த வட்டாரத்தில் நடைபெறும் குற்றங்களின் மையமாக அயோத்தி மடங்கள் இருக்கின்றன. பல மடாதிபதிகள் பீகாரிலிருந்து அடியாட்களை வரவழைத்து மடங்களில் நிரந்தரமாக வைத்துக் கொள்வதும், பின்னர் தொழில்முறைக் குற்றங்களைச் செய்து பணம் சம்பாதிப்பதையும் தொழிலாகச் செய்து வருகின்றனர். சியாம் மஹாராஜ் எனும் மடாதிபதியின் கும்பல் கான்பூர் தொழிலதிபர் ரவீந்தர் கேடியாவை கடத்தி 18 இலட்சம் பெற்றுக் கொண்டே விடுவித்திருக்கிறது.


இவையெல்லாம் போக இராம ஜன்மபூமி ட்ரஸ்ட்டின் தலைவரான இராம் விலாஸ் வேதாந்தியைப் பற்றி புதிய ஜனநாயகத்தில் முன்னர் எழுதியிருந்தோம். சேது சமுத்திரப் பிரச் சினைக்காக கருணாநிதியின் தலையை வெட்டச் சொன்ன இவர்தான், முசுலீம்களுக்கு எதிரான துவேசத்தைப் பிளறுவதில் பிரபலமானதோடு ஹவாலா மோசடிகளுக்கும் பெயர் பெற்றவர். இவர் சில்லறைச் சாமியார் இல்லையென்பதால், மேல்மட்ட அளவில் முதலாளிகளின் கருப்புக் கோடிகளை வெள்ளையாக மாற்றுவது முதலான சேவைகளைப் பக்த கோடிகளுக்கு கச்சிதமாக செய்து வருகிறார்.


அயோத்தியின் கிரிமினல் புராணம் இதுதான். இந்தச் சாமியார்களை வைத்துதான் விஸ்வ இந்து பரிஷத் தர்மசன்சாத் எனும் மடாதிபதிகளின் பேரவையைக் கூட்டி பாபர் மசூதி இடிப்பு முதலான அக்கிரமங்களுக்கு நாள் குறிக்கிறது. காசு பணத்துக்காகத் தங்களுக்குள்ளேயே இரத்தக் கவிச்சியோடு கொலை செய்யும் இவர்கள்தான் இந்து மதவெறியைக் கிளப்புவதையும், முசுலீம் மக்களை வன்மம் கொண்டு மிரட்டுவதையும் செய்கிறார்கள் என்பது முக்கியமானது. வன்முறையும், துவேசமும், வெறியும் இவர்களது தொழிலிலும், இரத்தத்திலும் கலந்திருக்கிறது. இந்த காவிக் கயவர்களைத்தான் இந்து தர்மத்தின் இரட்சகர்களாக ஆர்.எஸ்.எஸ் கும்பல் முன்னிறுத்துகிறது. சாதியக் கொடுங்கோன்மையை ஆன்மாவாக வரித்திருக்கும் இந்து தர்மத்திற்கு இந்த ஆன்மீக அடியாட்கள் பொருத்தமாகத்தான் இருக்கிறார்கள்.


வட இந்திய சாமியார்கள் என்றால் ஏதோ கஞ்சாவைப் புகைத்துக் கொண்டு, அரைமுக்கால் நிர்வாணத்தில் ஜடா முடியோடு அலைபவர்கள் என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கிறோம். சாதா ரவுடிகளையாவது சட்டென்று அடையாளம் கண்டு கொள்ளலாம். ஆனால் காவி ரவுடிகள், மடத்துப் பெருச்சாளிகளாக ஊர் சொத்தைக் கொள்ளையடிப்பதை அவ்வளவு சுலபத்தில் அடையாளம் காண முடியாது. எனினும் அயோத்தி புராணம் காவித் திரையை விலக்கி, மடாதிபதிகள் என்று அழைக்கப்படும் ரவுடிகளைத் தெளிவான விசுவரூப தரிசனமாகக் காட்டுகிறது. பக்த கோடிகள் முட்டாள்தனமாக கன்னத்தில் போட்டுக்கொள்ளாமல் கம்பை எடுத்தால் அயோத்தி முதல் காஞ்சி வரை அலப்பரை செய்யும் ஆன்மீக ரவுடிகளை ஒழித்துக் கட்டலாம்.

நன்றி: பச்சையப்பன்

Thursday, September 18, 2008

சம்பவம் இரண்டு! நீதியும் இரண்டு!

முஸ்லிம்களின் பாதுகாவலன் நோன்பு கஞ்சி புகழ் கருணாநிதி ஆட்சியில் இருக்கும் வேளையில் கோயம்புத்தூரில் போக்குவரத்து காவலர் திரு. செல்வராஜ் படுகொலை செய்யப்பட்ட பிறகு இரு சம்பவங்கள் நடந்தேறின.

சம்பவம் ஒன்று: காவல்துறையில் இயங்கும் இரத்தவெறி கொண்ட சங்கபரிவார வல்லூறுகள், சங்கபரிவாரத்துடன் இணைந்து காவல்துறையைக் காவிதுறையாக்கி கோவை நகரம் முழுவதும் முஸ்லிம்களை நரவேட்டையாடியது. இதில் 19 அப்பாவி முஸ்லிம்கள் அநியாயமாகப் படுகொலை செய்யப்பட்டனர். கோடிகணக்கான முஸ்லிம் பொருளாதாரம் எரித்து சாம்பலாக்கப்பட்டன. முஸ்லிம் சமுதாயத்தின் மீது அக்கிரமங்கள் எங்கும் தலைவிரித்தாடியது. பாதிக்கப்பட்டவர்களை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றவரை காவல்துறையினர் முன்னிலையிலேயே மருத்துவமனை வளாகத்தினுள் வைத்து சங்கபரிவாரத்தினர் உயிரோடு பெட்ரோல் ஊற்றி எரித்தனர்.

இத்தனை நடந்தப் பின்னரும் அப்பொழுது முதல்வராக இருந்த நோன்பு கஞ்சி கருணாநிதி, முஸ்லிம் சமுதாயத்தின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட அக்கிரமத்தை ஏன் என்று திரும்பி கூடப்பார்க்கவில்லை. அக்கிரமம் இழைத்த காவிபரிவாரத்தினர் ஒய்யாரமாக நகர்வலம் வந்தனர். உடைமை இழந்தவர்களுக்கு நிவாரணமோ உயிரிழந்தவர் குடும்பங்களுக்கு ஆறுதலோ அக்கிரமம் இழைத்தவர்களைக் கைது செய்யவோ எதுவுமே நோன்பு கஞ்சி கருணாநிதி செய்யவில்லை.

சம்பவம் இரண்டு: காவிகளால் கூட்டமாகக் கருவறுக்கப்பட்டப் பின்னரும் கண்டு கொள்ளாத நோன்புக் கஞ்சி கருணாநிதி, வெந்தப்புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் பாதிக்கப்பட்டக் கோவைக்கு இரத்தம் குடித்த சங்கபரிவாரத்தின் தலைவன் அத்வானியை வர அனுமதித்தார். அரசியல் இலாபம் தேடும் எண்ணத்தில் புல்லுருவிகள் எவரோ வைத்தக் குண்டில் அப்பாவிகள் 40க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

அதுவரை செத்துக் கிடந்த கருணாநிதியின் அரசு இயந்திரம் விழித்துக் கொண்டது. 19 முஸ்லிம்கள் அநியாயமாகக் கொல்லப்பட்ட வேளையில் டாய்லெட் சென்றிருந்த நோன்பு கஞ்சி கருணாநிதி, அப்பொழுது தான் விழித்தெழுந்தார் போலும்!. கருணாநிதிக்கு உடனடியாகக் கோவை வர விமானமும் கிடைத்தது. 168 முஸ்லிம்கள் உடனடியாகக் கைது செய்யப்பட்டனர். குண்டுவெடிப்பில் இறந்தவர்களுக்கு லட்சங்கள் நிவாரணத்தொகையாக வழங்கப்பட்டன. ஒருவருக்குக் கூட ஜாமீன் வழங்காத வழக்கில் 9 வருடத்திற்குப் பிறகு, கேரள மக்கள் கட்சி தலைவர் மதானி நிரபராதி என விடுவிக்கப்பட்டார். 9 வருடம் வாழ்வைத் தொலைத்தவருக்கு, வாய்மூடி இருக்க வேண்டும் என அன்புக்கட்டளையும் போட்டு கருணாநிதி வழியனுப்பி வைத்தார். மற்றவர்கள் 10 ஆண்டுகளாக இன்னமும் சிறையில் உள்ளனர்.

இன்று மீண்டும் ஆட்சியில் இருக்கும் கருணாநிதி, அண்ணா பிறந்தநாளையொட்டி 7 ஆண்டுகளுக்கு மேளாக சிறையில் இருக்கும் 1405 ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்கிறார். 10, 7 ஐ விடக் குறைவு போலும். கோவை வழக்கில் கைது செய்யப்படு 10 ஆண்டுகளாக சிறையில் வாடும் ஒரு முஸ்லிமைக் கூட துரோகி கருணாநிதி விடுதலை செய்யவில்லை.

அதே சமயம், மதுரை கம்யூனிஸ்ட் கவுன்சிலர் லீலாவதி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருபவர்களும், உயர்நீதிமன்றத்தால் "சமூகத்துடன் இணைந்து வாழவே தகுதியற்றவர்கள்" என்ற புகழ்மாலை சூட்டப்பட்டவர்களுமான மகன் அழகிரியின் குண்டர்களை விடுதலை செய்துள்ளார்.

இந்நிமிடம் சிந்திக்க: கோவை குண்டு வெடிப்பிற்குக் காரணமான 19 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட கோவை அட்டூழியம் தொடர்பான வழக்கு இன்னும் ஒரு அடி கூட நகரவில்லை. அதில் சம்பந்தப்பட்ட கொலையாளிகள் உல்லாசமாக கோவையை இன்றும் வலம் வருகின்றனர்.

நீதி என்றால் இதுவல்லவோ நீதி!

துரோகி கருணாநிதி வாழ்க!

முஸ்லிம்களின் பாதுகாவலன் என்றப் பெயரை அவனுக்கு வழங்கிய நோன்பு கஞ்சி வாழ்க!

கிழட்டு நரிக்கு இன்னமும் உடனிருந்து வெண்சாமரம் வீசும் சமுதாய இயக்கங்கள் வாழ்க!

ஜனநாயகம் வாழ்க!

ஜெய் ஹிந்த்!

Tuesday, September 16, 2008

அமெரிக்க மோகத்தில் தத்தளிக்கும் காங்கிரஸ்!

இந்தியாவின் தனித்தன்மையை அமெரிக்காவிடம் அடகு வைக்கும் விதத்தில் "பஞ்சசீல கொள்கை வகுத்து", அயல்நாட்டு உறவில் நடுநிலைமை பேணி வந்த நேருவின் காங்கிரஸ், திடீரென எழுந்த அமெரிக்க மோகத்தில் தத்தளிக்கின்றது.

அணு சக்தி ஒப்பந்தம் என்ற பெயரில் அண்ணனோடு கைகோர்க்க முயற்சிக்கும் காங்கிரஸ் அரசு, அதற்காக என்ன விலை கொடுக்கவும் தயார் என்பதைக் கடந்த தினங்கள் நாட்டு மக்களுக்குத் தெரிவித்தன.

கொலைகாரன் என நீதிமன்றம் தீர்ப்பளித்த சிபுசோரனிலிருந்து பாஜக அமைச்சர்கள் வரை பதவி, பணம் மூலம் விலைக்கெடுத்துத் தனது அரசைக் காப்பாற்றிக் கொன்டு புஷின் செல்லநாயாக வலம் வர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

காங்கிரஸின் பாரம்பரியத்தையே குழிதோண்டி புதைத்துக் கொன்டிருக்கும் இன்றைய காங்கிரஸ் அரசு, அமெரிக்காவோடு ஒட்டி நிற்க புஷ் என்ன கூறினாலும் அதற்குச் சப்பைக் கட்டுகட்டி விளக்கங்கள் கொடுத்து வருகிறது.

தனது வளர்ப்பு நாய்க்கு "இந்தியா" எனப் பெயரிட்ட புஷோடு மானம், சூடு, சுரணை உள்ள எந்த இந்தியனும் தொடர்பு வைத்துக் கொள்ள முன்வர மாட்டான். ஆனால், சூடு சுரணையற்றத் தலைவர்களை இன்று தன்னகத்தே கொண்டுள்ள காங்கிரஸ், அதனைக் குறித்து எவ்வித சலனமும் இன்றி புஷின் வாயிலிருந்து விழுவது அனைத்தையுமே பஞ்சாமிர்தம் என்ற ரீதியில் விளக்கங்கள் கொடுத்து வருவது வெட்கக்கேடு!

அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் மூலம் அமெரிக்காவிற்கு அடிதாங்க முயன்று வரும் காங்கிரஸ், அதற்காக கூறிய முக்கிய காரணங்களில் ஒன்று, இந்தியாவிற்குத் தேவையான அணு எரிபொருளை அமெரிக்கா வழங்கும் என்பதாகும்.

ஆனால், தனது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எழுதிய கடிதத்தில் புஷ், "இந்தியா - அமெரிக்கா இடையிலான அணு ஒப்பந்தம் அமெரிக்காவின் 123 சட்டப்படி செயல்படுத்தப்படும் என்றும் இந்தியாவுக்கு அணு எரிபொருள் சப்ளை செய்வது தொடர்பாக அமெரிக்கா அளித்துள்ள வாக்குறுதிக்கு எந்த சட்ட வடிவமும் இல்லை" என்று தெரிவித்துள்ளார்.

இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தின் அடிப்படையே இந்தியாவுக்கு நிரந்தரமாக அணு எரிபொருளை அமெரிக்கா வழங்கும் என்பது தான். ஆனால், அதற்கே எந்த உத்தரவாதமும் இல்லை என்று புஷ் கூறியுருக்கும் நிலையில், "இணைந்திருப்பவர்களுக்குத் துரோகத்தை மட்டுமே என்றும் பரிசாக அளித்துள்ள அமெரிக்கா"வுடனான இந்த ஒப்பந்தத்தைக் காற்றில் வீசி எறிவது மட்டுமே தன்மானமுள்ள எந்த அரசும் செய்யும்.

ஆனால், தன்மானத்தை புஷின் வெள்ளை மாளிகையில் ஏற்கெனவே விலைபேசி விற்றுவிட்ட காங்கிரஸ் அரசு இதற்கும், "அணு ஒப்பந்தம் அமெரிக்காவின் 123 சட்டத்தின் வழிகாட்டுதலின்படி கொண்டு வரப்பட்டாலும், அது நடை முறைக்கு வந்து விட்டால், சர்வதேச சட்டங்கள் மற்றும் இரு நாடுகளுக்கு இடையிலான ஒப்பந்தங்களுக்கான சட்டங்களின் அடிப்படையில் செயல்படுத்தப்படும். இதனால் 123 சட்டத்தைப் பற்றி கவலைப்பட தேவையில்லை" என வெட்கமில்லாமல் உளறியுள்ளது.

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மணிஷ் திவாரியும், "ஒரு நாட்டின் மிக உயர்ந்த பதவியில் இருப்பவர் அளிக்கும் உறுதிமொழிக்கு மற்ற எல்லாவற்றையும் விட சக்தி அதிகம். இந்தியாவுக்கு அணு எரிபொருளை வழங்குவதாக அமெரிக்க அதிபர் புஷ் உறுதி அளித்துள்ளார். அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எழுதப்பட்டுள்ள கடிதம் குறித்து கவலையில்லை" என்று நாட்டு மக்களின் காதில் பூச்சுற்ற முயன்றுள்ளார்.

புஷைப் பொறுத்தவரை "21 ஆம் நூற்றாண்டின் அதிபயங்கர திருடன்" என்பதும் அவரின் உறுதி மொழிகள், செயல்பாடுகள் அனைத்துமே நம்பகத்தகுந்தவை அல்ல என்பதை இன்று உலகம் முழுவதும் உள்ள சாமானியர்கள் கூட உணர்ந்துள்ள நிலையில், "புஷ் நமக்கு உறுதியளித்துள்ளார். அதனால் அவர் தனது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எழுதியதைக் குறித்து நாம் கவலைப்பட தேவையில்லை" என்று காங்கிரஸ் கூறியிருப்பது, தனது மூளையையும் சிந்திக்கும் திறனையும் அமெரிக்க விஷயத்தில் காங்கிரஸ் கழட்டி கீழே வைத்து விட்டது என்பதைத் தெள்ளத் தெளிவாக காட்டுகின்றது.

"அவன் என்ன கூறினாலும் நாம் கவலைக் கொள்ளத் தேவையில்லை. அவன் நமக்கு வாக்குறுதி தந்துள்ளான்" என திருடனின் மீதும் அயோக்கியனின் மீதும் நம்பிக்கை வைக்க, மறை கழண்டு விட்ட காங்கிரஸுக்கு வேண்டுமெனில் இயலக்கூடிய காரியமாக இருக்கலாம். ஆனால் நாட்டு மக்கள் இவ்விஷயத்தில் மிகத் தெளிவுடனே இருக்கின்றனர்.
காங்கிரஸ் தனது கண்மூடித்தனமான அமெரிக்க மோகத்தால் தன்னைத் தானே அழித்துக் கொள்ளத் துவங்கி விட்டது என்று தீர்க்கமாக கூறலாம்.

அய்யோ பாவம் காந்தியும் நேருவும்!

Sunday, September 14, 2008

பிஜேபி நடத்தும் தொடர் குண்டு வெடிப்புகள்!

பிஜேபி நடத்தும் தொடர் குண்டு வெடிப்புகள்!
[Bombs Made by Narendra Modi]
அல்லாஹ்வின் திருப்பெயரால்...

கடந்த 2006 ஆண்டு உத்திரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் 3 இடங்களில் குண்டுவெடிப்பு, 2006ல் மும்பை இரயில்களில் 7 குண்டு வெடிப்புகள், 2006 மஹாராஷ்ட்ரா மாநில மாலேகானில் மசூதியில் நடந்த குண்டுவெடிப்புகள், 2007 ஹைதராபாத் பூங்காவில் இரட்டை குண்டு வெடிப்புகள், 2008 ஜெய்ப்பூரில் சைக்கிள் குண்டு வெடிப்புகள், 2008 பெங்களுர் குண்டு வெடிப்புகள். இன்று 2008 செப்டம்பர் மாதம் தலைநகர் டெல்லியிலோ 6 இடங்களில்....இப்படி நாசகார செயல்களினால் பலியெடுக்கப்பட்ட மனித உயிர்கள் பல நூறுகளைத் தாண்டும்.

இக்குண்டுவெடிப்புகள் அனைத்தும் ஒரே ஒரு தகவலைத்தான் சொல்லும். அது குண்டு வெடிப்புகள் நிகழ்ந்த மறுகணமே பயங்கரவாதி அத்வானி சின்னத்திரைகளில் தோன்றுவார். குண்டு வெடிப்புக்கு பாகிஸ்தானில் லஷ்கரே தைய்யியா அல்லது இல்லாத சிமி அமைப்பே காரணம் என்பார். அப்படியே ஆளும் காங்கிரஸ் அரசை ஒரு பிடிபிடிப்பார். வழக்கம் போல அப்பாவி முஸ்லிம்கள் நாடு முழுவதும் சிறைவைக்கப் படுவார்கள். வெடிகுண்டு சோதனை என்ற பெயரால் முஸ்லிம்கள் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு, நாடே அமளிதுமளியாகும். இதுதான் நம் சுதந்திர இந்தியாவின் இன்றைய நிலை.

தேசபிதா காத்தியடிகளைக் கொலைசெய்த, சங்பரிவார வெறியனும் தேசதுரோகியுமான கோட்சே தனது கைகளில் இஸ்மாயில் என்ற முஸ்லிம் பெயரை பச்சைகுத்திக் கொண்டும் முஸ்லிம்களைப் போல கத்னாவும் செய்திருந்தான் என்பது நிரூபிக்கப்பட்ட வரலாற்று உண்மை. காரணம் காந்தியடிகளைக் கொலைசெய்தது ஒரு முஸ்லிம் என்று வாதந்தியைப் பரப்பி முஸ்லிம்கள் மீது பழியைப் போட்டு, ஒட்டு மொத்த தேசத்தையே முஸ்லிம்களுக்கு எதிராகத் திருப்பலாம் என்று திட்டமிட்டனர் அன்றைய சங்பரிவார கொலை வெறியர்கள். ஆனால் குள்ளநரிகளின் சாயம் மிக விரைவிலேயே வெளுத்து, சங்பரிவாரத்தின் கோரக் கொலைவெறி முகத்தை நாடே கண்டு அதிர்ந்தது.

தேசத்துரோகி கோட்சேயின் அதே ஃபார்முலாவை கையாண்டு, அவனது வாரிசுகளான இன்றைய சங்பரிவார பிஜேபியினர் முஸ்லிம்களுக்கெதிராக தொடர்ந்து சூழ்ச்சிகளைச் செய்து வருகின்றனர். அத்தகைய சூழ்ச்சிகளில் ஒன்றுதான் இவர்கள் நடத்தும் தொடர் குண்டு வெடிப்புகள். இதற்கோர் சிறந்த உதாரணம் கடந்த 2006ல் நடந்த மாலேகான் குண்டுவெடிப்புகள். மாலேகான் மசூதியில் முஸ்லிம்கள் வெள்ளிக்கிழமை சிறப்புத் தொழுகை நடத்திக் கொண்டிருக்கும் தருணத்தில் பிஜேபியினர் குண்டுகளை வெடிக்கச் செய்தனர். மசூதிக்குள் குண்டுகளை வைத்தது முஸ்லிம்கள்தான் என்று ஊடகங்கள் திரிபுவாதம் பண்ணுவதற்கு வசதியாக தொப்பிகளையும் ஒட்டுதாடிகளையும் அவ்விடத்தில் விட்டுச்சென்றனர்.

இதைப் போலத்தான் குஜராத்திலும். ஓடிய ரயிலை தாங்களாகவே கொளுத்திவிட்டு பழியை முஸ்லிம்கள் மீது போட்டு, பல்லாயிரக் கணக்கான முஸ்லிம்களின் உயிரை நரவேட்டையதும் பெண்களை கற்பழித்ததும் அவைகளைத் தொடர்ந்து டெகல்கா பத்திரிக்கை இவர்களது கோரமுகத்தை கிழித்ததும் நாடே அறியும்.

கடந்த 4 வருடங்களின் காங்கிரஸ் தலைமையிலான மத்திய ஆட்சி (முஸ்லிம்களுக்கு தனிஇடஒதுக்கீடு அளிக்காமை, அமெரிக்காவுடன் அணு ஒப்பந்தம் ஆகியவைகளைத் தவிர்த்து) பெரிய அளவில் குறைசொல்ல முடியாத அளவிற்கு நல்லதொரு ஆட்சியாக உள்ளது. நாட்டின் வளர்ச்சிப்பணிகளுக்கு திட்டங்கள் பல தீட்டி அதில் வெற்றி நடைபோடும் இக்காங்கிரஸ் ஆட்சி இனியும் நீடித்தால், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பிஜேபியினர் எதிர்க்கட்சி இருக்கையில்கூட அமர இயலாத சூழ்நிலை வந்துவிடும். சங்பரிவார பிஜேபியினர் இவைகளை புரிந்துகொண்டதின் கோரவிளைவுதான் - தேர்தல் நெருங்கும் வேளையில் நாடெங்கும் தொடரும் இக்குண்டுவெடிப்புகள்.

பெங்களூரில் பிஜேபியினரின் தேசிய செயற்குழு கூடியிருந்த தருணத்தில், தலைநகர் டெல்லியில் குண்டு வெடிப்புகள் நிகழ்த்தப்பட்டு, அதன்பின்னர் தொலைக்காட்சிகளுக்கு முன்னின்று பேட்டி என்ற பெயரில் மெகா சீரியல் நடத்திய பிஜேபி தலைவர்களின் பேட்டிகளைக் கண்ட எவரும் இக்குண்டுவெடிப்பின் பின்னணியிலுள்ள இரகசியங்களைத் தெளிவாக விளங்கிக் கொள்வர்.

பிரதமர் பதவி வெறியில் உறக்கமில்லாமல் சுற்றித்திரியும் ரத்தயாத்திரை புகழ் ரத்தக்காட்டேரி அத்வானி, குண்டு வெடித்த சில மணித்துளிகளிலேயே நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் பொடா சட்டம் கொண்டு வருவோம் என்று சூளுரைத்தார்.

நரமாமிச உண்ணி நரேந்திரமோடியோ இதற்கு ஒருபடி மேலேபோய் 'நாங்கள் 10 நாட்களுக்கு முன்னரே பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு இக்குண்டுவெடிப்புத் தகவல்களை அளித்துவிட்டோம்' என்று படீர் என உண்மையை போட்டு உடைத்தார். உண்மைதான்! குண்டு வைக்க இருப்பவனுக்குத் தானே எப்படி, எங்கே, எத்தனை குண்டுகள் வெடிக்க இருக்கின்றது? என்பது தெரியும். பின்னர் நரேந்திரமோடி தான் வாய் உளறி விட்டதை சுதாரித்துக் கொண்டு 'தேசநலன், தீவிரவாதிகள்' என்று ஏதேதோ சொல்லி நிலைமையை சமாளித்தார்.(இவ்விடம் நாட்டை உலுக்கிய பாராளுமன்ற கட்டிடத் தாக்குதலிச் சற்றுக் கூர்ந்து கவனிப்பது அவசியம். அந்நேரத்திலும் பாராளுமன்றத் தாக்குதலுக்கு 10 தினங்களுக்கு முன்னர், "பாராளுமன்றத்தின் மீது தீவிரவாதிகள் இன்னும் 10 தினங்களில் தாக்குதல் நடத்த உள்ளனர்" என்று ரத்தவெறி மன்னன் அத்வானி கூறினார். மிகச் சரியாக அடுத்த பத்து தினங்களில் பாராளுமன்றத் தாக்குதல் நடந்தது. இதில் அதிசயம் என்னவெனில், இவ்வாறு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த உள்ளனர் என்றத் தகவலை உளவுதுறையால் கூட முன்னரே கண்டறிய இயலவில்லை. எப்படி என்பது அத்வானிக்கே வெளிச்சம்!)

குஜ்ராத்தில் முஸ்லிம் இனப்படுகொலைகளை நடத்திய நரேந்திர மோடி, அவன் நடத்த இருந்த டெல்லி குண்டு வெடிப்புகளை பற்றி பிரதமருக்கே அளித்த எச்சரிக்கையை உளவுத்துறைகள் கண்டுகொள்ளாமல் கோட்டைவிட்டது ஏனோ? அவ்வாறு அலட்சியம் செய்ததின் விளைவுதான் எமது சகோதரர்கள் 30 பேர்கள் பலியாக்கப்பட்டும் 100க்கும் அதிகமானோர் மருத்துவமனைகளில் உயிருக்குப் போராடும் துக்கநிலை ஏற்பட்டுள்ளது.
கோப்புகளை மூடுவதற்காக, குண்டுவெடிப்புகளுக்குக் காரணம் லஷ்ககரே தைய்யியா, அல்லது சிமி என்று கூறி நாட்டு மக்களை இனியும் சமாதானப்படுத்திட இயலாது என்ற முடிவிற்கு வந்த உளவுத்துறையினர், தற்போது இந்தியன் முஜாஹிதீன் என்று ஒரு புதிய திரைக்கதையை இயற்றுகின்றனர். பெங்களூரில் சங்பரிவார தலைவர்கள் கூடியிருந்த அரங்கத்திற்குள் குண்டுகள் வெடித்து, பயங்கரவாதிகள் அனைவரும் உடல் சிதறி செத்திருந்தால், இந்தியன் முஜாஹிதீன் அமைப்பினர் குண்டு வைத்தனர் என்று உளவுத்துறையினர் கற்பனை செய்வதில் ஒரளவு அர்த்தமிருக்கும். நம் இந்தியத் திருநாடு வல்லரசாக ஆகுவதற்கு பெரும் தடையாக இருக்கும் இச்சங்பரிவார குண்டர்கள் தொலையட்டும் என்று இந்தியன் முஜாஹிதீன் பெயரில் யாரோ சிலர்கள் குண்டுகள் வைத்திருக்கின்றனர் என்று நாட்டுமக்களும் நம்பலாம்.

ஆனால் அநியாயமாக ஒர் உயிரைக் கொல்வது ஒரு சமுதாயத்தையே கொலைசெய்வதற்குச் சமம் என்று போதிக்கும் இஸ்லாமிய மார்க்கத்தையும் முஸ்லிம்களையும் உளவுத்துறையினர் இக்குண்டுவெடிப்புகளுக்கு பலிகிடாவாக்குவது என்ன நியாயம்? இதனால் உண்மைக் குற்றவாளிகள் அதிர்ஷ்டவசமாக தப்பிக்கொண்டே வருகின்றனர் என்பதே உண்மை.
இக்குண்டுகள் அமோனியம் நைட்ரேட் வேதிப் பொருட்கள் மூலம் தயார் செய்யப்பட்டதாக அனைத்து தொலைக்காட்சிகளும் செய்தி வெளியிட்டன. நாட்டில் நடக்கும் அனைத்து குண்டு வெடிப்புகளுக்கும் பின்னணியில் இருப்பது இத்தேசதுரோக சங்பரிவார பிஜேபி குண்டர்களே என்பதில் மத்திய அரசுக்கு இனியும் சந்தேகம் இருந்தால், நாக்பூரிலும் மத்திய பிரசேத்திலுள்ள போபாலிலும் செயல்படுகின்ற சங்பரிவார வெறியர்களின் துப்பாக்கித் தொழிற்சாலைகள் மற்றும் ஆயுதக் கிடங்குகளை மத்திய அரசு உடனடியாகக் கைப்பற்றவேண்டும். அப்போது தெரியும் தலைநகரில் வெடிக்கப்பட்ட குண்டுகளுக்கும் இதற்கு முன்னர் நடந்த அனைத்து குண்டு வெடிப்புகளுக்கும் அமோனிம் நைட்ரேட் போன்ற வேதிப்பொருட்கள் எங்கிருந்து வந்தது என்று?.

மேலும் சாஹா பயற்சி என்ற பெயரில் ஆண்களுக்கும் துர்காவாகினி என்ற பெயரில் மகளிர் அமைப்புகளையும் உருவாக்கி ஆயுதப்பயிற்சி அளிக்கும் ஆர்.எஸ்.எஸ் குண்டர்களை கைது செய்து, நாடு முழுவதுமுள்ள இவர்களின் அலுவலகங்களை ஒரேநேரத்தில் சோதனை நடத்தினால் இந்தியன் முஜாஹிதீன் என்ற பெயரில் செயல்படுபவர்கள் யார்? என்பதும் வெட்டவெளிச்சமாகும்.

இதில் முக்கியமான ஒன்றையும் தமிழக அரசு கவனத்தில் கொள்ளவேண்டும். குண்டுவெடிப்புகள் நிகழ்ந்த பின்னர் வழக்கமாக ஒரு ஈமெயில் உலாவரும். இன்று டெல்லியில் நடந்த குண்டுவெடிப்பிற்குப் பின்னரும் வெளியான முகவரியில்லாத அந்த ஈமெயிலில், டெல்லியைத் தொடர்ந்து சென்னையிலும் பெங்களூரிலும் குண்டுவெடிப்புகள் நடத்தப்படும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. சென்னையையும் தாக்க இருப்பதாக வெளியான இச்செய்தி உண்மையா? அல்லது மிரட்டலா? என்பது நரேந்திர மோடிக்கும் பிஜேபியினருக்குமே வெளிச்சம். இருப்பினும் அமைதிப் பூங்காவாம் நம் தமிழக மண்ணில் பிஜேபியினரின் இந்துத்துவ தீவிரவாதத்திற்கு எவரும் பலியாகி விடக்கூடாது. இத்தீவிரவாதிகளின் கோரப்பிடியிலிருந்து மக்களைக் காக்கும் கடமை தமிழக முதல்வர் டாக்டர் கலைஞரையும் தமிழக காவல்த்துறையையுமே சாரும்.

தொடரும் குண்டு வெடிப்புகளுக்கு லஷ்கரே தைய்யியா, சிமி, இந்தியன் முஜாஹிதீன் என்று இனியும் உளறிக் கொண்டிராமல் உண்மை தீவிரவாதிகளான சங்பரிவார குண்டர்களை மத்திய, மாநில அரசுகள் கைது செய்யுமா? நாட்டில் அமைதி நிலவ வழிவகுக்குமா?

பொறுத்திருந்து பார்ப்போம்.

நன்றி:இஸ்லாமிய இனையப் பேரவை

Sunday, September 7, 2008

பார்ப்பனக் கைக்கூலியின் அயோக்கியத்தனம்!


தமிழகத்தின் வந்தேறி பார்ப்பனீயத்தின் கைக்கூலியாகவும் இரத்தவெறி கொண்ட சங்கபரிவாரத்தின் ஊதுகுழலாகவும் செயல்படும் தினமலம் மீண்டுமொரு முறை இஸ்லாமிய சமூகத்தைச் சீண்டிப்பார்த்துள்ளது.

உலக அளவில் பலத்த எதிர்ப்புகளைக் கண்ட டென்மார்க் ஏட்டின் அயோக்கியத்தனத்தைச் சம்பந்தமே இல்லாத தனது கணினி மலரில் வாந்தி எடுத்துத் தனது அரிப்பைத் தீர்த்துக் கொண்டுள்ளது தினமலம்.

கடந்த வருடமும் முஸ்லிம்களின் புனித மாதமான ரமலானில் இத்தகைய அயோக்கியத்தனத்தை இந்தப் பார்ப்பன ஏடு செய்தது நினைவிருக்கலாம். யாருடைய கவனத்திற்கும் அவ்வளவாக வராமலே அவ்விஷயம் சென்றுவிட்டதால் தினமலம் அப்பொழுது தப்பித்துக் கொண்டது.

ஆனால் இம்முறை சரியாக மாட்டிக் கொண்டது.

"உருவப்படம் வரைதலுக்கான தடையை" மார்க்கச்சட்டமாகவே கொண்டு இறை விஷயத்தில் தூயதன்மையைப் பேணி வரும் இஸ்லாத்தினைத் தகர்க்க வேண்டும் என்பது உலகில் சியோனிஸத்திற்கு அடுத்தப்படியாக இந்தியாவில் பார்ப்பனீயத்தைத் தலைமையாக் கொண்ட சங்க ஃபாஸிஸத்தின் நீண்டகால திட்டம் என்பதை முஸ்லிம்கள் மிகத் தெளிவாக புரிந்து வைத்துள்ளனர்.

தொட்டதெற்கெல்லாம் சீண்டிப்பார்க்கும் கிள்ளுகீரையாகவே இஸ்லாமிய சமுதாயத்தைக் கண்டு வந்திருந்த தினமலம், தனது தற்போதைய வக்கிரச் செயல்பாட்டின் மூலம் சரியான பாடம் படிக்க இருக்கின்றது.

இனிமேலும் மலத்தைத் தினசரி அள்ளிக்கொட்டிவரும் தினமலத்தின் அயோக்கியத்தனத்தினை முஸ்லிம்கள் பொறுத்துக் கொள்ள தயாராக இல்லை என்பதைத் தமிழகத்தில் பரவலாகத் தற்பொழுது நடந்து வரும் போராட்டங்கள் தெளிவிக்கின்றன.

இது துவக்கம் மட்டுமே.

வினை விதைத்தவன் என்றாவது ஒரு நாள் வினை அறுத்தே ஆகவேண்டும்.

சமூகத்தில் குழப்பங்களைப் பரப்பி, தீய எண்ணத்தைப் பரப்பி வந்தத் தினமலத்திற்குத் தற்பொழுது அதற்கான வினை அறுப்புக் காலம். அறுத்துத் தான் ஆக வேண்டும்.

வந்தேறி பார்ப்பன இரத்தவெறிக் கூட்டத்திற்கு காவடி தூக்கும் ஒவ்வொருவரும் தினமலத்தின் வழியில், தங்கள் மனிதவிரோதச் செயல்பாட்டிற்கான விளைவை அனுபவித்தே தீருவர்.