Monday, April 23, 2007

அரசமரம், வாழைமரம், அயோத்தி - முட்டாள்!

@$@#$%&$*@^*$^@*$@^$@^$*@
@%@&%$&^$*@*$^@*$^!$^
!#%!^%#&!%#&!^#&^!]
!#!^%#^!%#^%!^$%^!%$!
!!!!!!!!!!!!!!!!!!!!!!
??????????????????????
!!!!!!!!!!!!!!!!!!!!!!

மும்பை: ஐஸ்வர்யா ராய்க்கு, அபிஷேக் பச்சன் நான்காவது கணவர் தெரியுமா? ரொம்பவும் டென்ஷனாகி விடாதீர்கள்; "டெக்னிக்கலாக' பார்த்தால், இது உண்மை தான்.

உலகமே வியந்து பார்த்த பாலிவுட் சூப்பர் ஜோடி ஐஸ்வர்யா ராய் அபிஷேக் திருமணம், பல தடைகளை தாண்டியே நடந்துள்ளது. "ஐஸ்வர்யாவுக்கு மாங்கல்ய தோஷம் இருக்கிறது; அதனால், அவருக்கு அபிஷேக் பச்சனுடன் திருமணம் செய்து வைக்கும் முன், தோஷம் நீங்க, மரபுப்படி, மூன்று திருமணங்கள் நடக்க வேண்டும்' என்று அமிதாப் பச்சன் குடும்ப ஜோதிடர்கள் கூறினர்.

"மாங்கல்ய தோஷம் உள்ள பெண்கள், அரச மரம், வாழை மரம் மற்றும் கடவுளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட வேண்டும். அப்படி ஒரு சடங்கை செய்த பின்னர், பார்த்து வைத்த மணமகனுடன் திருமணம் நடத்த வேண்டும். அப்படி செய்தால், மாங்கல்ய தோஷம் நீங்கி, தம்பதிகள் எந்த பிரச்னையுமின்றி, வாழ்வர்' என்றும் ஜோதிடர்கள் கூறினர் . இதையடுத்து, வாரணாசியில் அரச மரம், பெங்களூரில் வாழை மரம் மற்றும் அயோத்தியில் கடவுளுடன், ஐஸ்வர்யாவுக்கு திருமணம் நடத்தும் வகையில் சடங்குகளை பச்சன் குடும்பம் நிறைவேற்றியது. அதன் பின்னர், அபிஷேக் பச்சனுடன் திருமணம் செய்து வைக்கப்பட்டார் ஐஸ்.,"இப்படி செய்வதால், ஐஸ்வர்யா ராய்க்கு அபிஷேக், "டெக்னிக்கலாக' பார்த்தால், நான்காவது கணவர்; மாங்கல்ய தோஷம் உள்ள பெண்களுக்கு, இப்படி மூன்று வித திருமண சடங்குகளை செய்து நிவர்த்தி செய்ய முடியும் என்பதற்கு ஐஸ்வர்யா ராய் முன்னுதாரணமாகி விட்டார்' என்று மும்பை ஜோதிடர்கள் கூறினர்.


மக்களின் சிந்தையை பெருக்கும் விதத்தில் பல அதிமுக்கியமான நிகழ்வுகளை விடியும் முன்னே கடைபரப்பும் கேடுகெட்ட தினமலத்தின் மேற்கண்ட செய்திக்காக பதிவின் ஆரம்பத்தில் எழுதிய விமர்சனத்திற்கு விளக்கம் எதுவும் தேவையில்லையே?

ஆமாம், ஒரு சந்தேகம்: இதே மாங்கல்ய தோஷம் ஆண்களுக்கு வராதா? அப்படி வந்தால் இதே போன்று மூன்று திருமணங்கள் முதலிலேயே நடத்த வேண்டுமா? வேண்டாமா? தெரிந்தவர்கள் யாராவது பதில் ஸொல்லுங்கப்பா!

குறிப்பு: இது போன்ற செய்திகள், இந்து மதத்தின் இணைய ஏஜண்ட் நம்ம எழில் அண்ணாச்சியின் கண்ணிலேயே படுவதில்லையே ஏன்? இணைய பாப்புக்கள் தங்களின் "மகா" வியாபார மாடன் மாட்டிக் கொண்டதோடு வரிசையாக "சீ சீ இந்த பழம் புளிக்கும்" என கடையை மூடிக் கொண்டு போவதன் ரகசியம் புரியாமல் தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கும் வேளையில் இந்த சந்தேகம் வேறு இடையில் புகுந்து குழப்பிக் கொண்டிருக்கின்றது.

7 comments:

  1. அட இறை நேசா

    டெக்னிக்கலாப் பாக்காட்டாலும் நாலாவ்து தான்ய்யா...

    சல்மான் கான்
    விவேக் ஒபராய்
    ரித்திக்

    அப்பன்னா அபிஷேக் நாலாவது தானே

    சரி போகட்டும் பாலிவுட்டின் சூப்புர நடிகர் அமிதாப் கடும் மூட நம்பிக்கை கொண்ட பிற்போக்கு ஆசாமி. அந்த ஆள் ஊட்டுக் கல்யாணத்தில பகுத்தறிவா எதிர்பார்க்க முடியும்?

    விடுங்கய்யா.. எழில் இதுக்கும் ஏதாவது வெளக்கம் வச்சிருப்பார். ஆரிய சமாஜத்தில வாக்குற காசுக்கு சரியா உழைக்க வேனாமா?

    ReplyDelete
  2. பாலபாரதி கூட்டிய கூட்டத்துக்கு ஜெயராமனும் டோண்டும் செல்லவே இல்லை. காரணம் என்ன? குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கிறது. அத்தோடு அடிச்சு போட்டுருவாங்கன்னு பயம் இந்த தயிர்சாத மூட்டைகளுக்கு!!!

    ReplyDelete
  3. இறைநேசன்,

    நான்-டெக்னிக்கலாக பார்த்தாலும் அபிஷேக் நான்காவது கணவராகத்தான் வருவார். அப்படிப்பார்த்தால் மேற்கண்ட அநாவசிய திருமணங்கள்(?) தேவையில்லையே?...அச்சச்சோ,லிஸ்ட்டில் உள்ள சல்மான்கான் கேட்டால் அதோகதி தான் எனக்கு.

    மரத்திற்கும், கடவுளுக்கும்(?) கூட மருமகளை திருமணத்தைச் செய்து வைத்து தோஷம் கழிக்க எத்தனிக்கும் அமிதாப் போன்றவர்கள் தான் பிஜேபீ-யின் நம்பிக்கைத்தூண்கள் என்று நினைக்கையில் வாயால் சிரிப்பு வரவில்லை எனக்கு.

    ReplyDelete
  4. //இது போன்ற செய்திகள், இந்து மதத்தின் இணைய ஏஜண்ட் நம்ம எழில் அண்ணாச்சியின் கண்ணிலேயே படுவதில்லையே ஏன்?//

    எழில் அண்ணாச்சி கண்ணுல இதெல்லாம் படாது. அவரோட பதிவு தலைப்பில் இந்து நியூஸ் நெட்வொர்க் என்று பெருமையாக போட்டிருப்பார். ஆனால் அந்தப் பதிவில் அவர் போடுவதெல்லாம், ஆப்கானிஸ்தான், ஈரான், சூடான் இங்கெல்லாம் முஸ்லிம் பெயருடையவர்கள் ஏதாவது பண்ணினால் அதைத்தான் காப்பி பேஸ்ட் பண்ணுவார். அதாவது ஒரு முஸ்லிம் தவறு செய்தால் அதுதான் இவருக்கு 'இந்து நியூஸ்'. ஆரியசமாஜ் ஒரு பணம் பிடுங்கும் கும்பல் என்று பத்திரிக்கைகளில் செய்தி வந்ததே, அதைப்பற்றி இவர் எதாவது சொன்னாரா என்றால் இல்லை. காரணம் அதெல்லாம் இவருக்கு 'இந்து நியூஸ்' இல்லை. மற்ற மதத்தினர் ஜான் சறுக்கினால் தனது மதம் முழம் ஏறும் என்று இவர் கணக்கு போட்டு வைத்திருக்கிறார். இதைவிட கேவலமாக வேறு யாரும் இவர் மதத்தை மட்டம் தட்ட முடியாது. இருட்டறைக்குள் மாட்டிக் கொண்டிருக்கும் குருட்டுப் பூனைகள்! பாவம்.. விட்டுத் தள்ளுங்கள் இறைநேசன்!

    ReplyDelete
  5. யாகவா முனிவர்April 24, 2007 at 3:09 AM

    //@$@#$%&$*@^*$^@*$@^$@^$*@
    @%@&%$&^$*@*$^@*$^!$^
    !#%!^%#&!%#&!^#&^!]
    !#!^%#^!%#^%!^$%^!%$!
    !!!!!!!!!!!!!!!!!!!!!!
    ??????????????????????
    !!!!!!!!!!!!!!!!!!!!!!//

    )(*&&^^%$$###$%^&^*&%%$@$%$##%$%$#$##%^&*^&^^&&

    என்னா முழிக்கிறீங்களா? மேலே போட்டது மந்திரம்னா, நான் போட்டிருக்கிறது மந்திரம்தான். அது சமசுகிரதம் நம்மோடது இனானிய மொழி!

    ReplyDelete
  6. அரச மரம் ஆலமரம் சரி. ராமன் என்னா மரமா? அட ஜெயராமா!!!

    ReplyDelete
  7. தென்னை மரம்April 24, 2007 at 3:12 AM

    ஏன் எங்களைப் பார்த்தா மரமா தெரியலையா?

    ReplyDelete