Thursday, January 19, 2006

காந்திஜியை மறக்கிறோமா நாம்?

மோகன்தாஸ் கொலையும், அதற்கு நாதுராம் நிறுவிய நியாயங்களும் - என்ற தலைப்பில் பெண் கற்பு நிலை புகழ் திருவாளர் டோண்டு அவர்கள், திண்ணையில் மலர் மன்னன் எழுதிய கட்டுரையை பதித்து சில நியாயங்களை எழுப்பியுள்ளார். பொதுவாக நியாய அநியாயங்களைக் குறித்து எழுதும் போது உள்ளது உள்ள படி எடுத்து எழுதி விட்டு பின்னர் நியாயங்களைக் குறித்து பேசுவது தான் சரி. காந்திஜி கொலையைப் பொறுத்தவரை கோட்சே யார் என்றும் அவனுடைய செயலின் பின்னணியில் யார் யார் இயங்கினார்கள் என்பதும் இன்று எல்லோருக்கும் தெளிவாக தெரியும்.

சங்க் பரிவாரத்தின் ஆரம்பமான ஆர்.எஸ்.எஸ் தோற்றுவித்த காலத்திலிருந்து அதன் செயல்களையும் செயல் திட்டங்களையும் கூர்ந்து கவனிப்பவர்களுக்கு அதன் வளர்ச்சியின் பின்னணியில் வந்தேறி பார்ப்பனர்களின் நரி மூளை செயல் படுவதை நன்கு உணர முடியும். சங்க் பரிவாரத்தில் இந்த பார்ப்பனர்களின் முக்கிய பங்கு உடல் ரீதியாக செயல்படுவதை விட மன ரீதியாக, பிரச்சார ரீதியாக, எழுத்து ரீதியாக சுருக்கமாக புத்தி பூர்வமாக செயல் படுவது தான். அதில் வரலாற்றை நேர் எதிராக தங்களுக்கு சாதகமாக மாற்றி அமைக்க முயற்சிக்கும் முக்கிய பணி இவர்களுடையது தான்.

அந்த அடிப்படையில் தான் மலர் மன்னன் வழியாக பெண் கற்பு நிலை புகழ் திருவாளர் டோண்டு அவர்களும் கயவன் கோட்சேயின் செயலை புனிதமாக்கவோ அல்லது அச்செயலுக்கும் சங்க் பரிவாரத்திற்கும் தொடர்பில்லை என்று வலிந்து நிறுவவோ முயற்சிக்கிறார். இதனை செய்வதற்கு "அவாள்கள்" என்ன வழிமுறைகளை வேண்டுமானாலும் கையாள்வார்கள். நோக்கம் சங்க் பரிவாரத்தை சமூக நீதி காவலர்களாக்குவதும், முஸ்லிம்கள் அனைவரையும் கொடூரர்களாகவும், பயங்கரவாதிகளாகவும், தீவிரவாதிகளாகவும் மக்கள் மனதில் வலிந்து நிறுவுவதும் தான். அதனை சரியான ஆதாரங்களுடன் நிரூபித்தால் ஒன்றும் கூறி தப்ப முடியாத நிலை வரும் போது "தனி மனித தாக்குதல்" என்று கூறி விஷயத்திற்கு அதோடு முற்று புள்ளி வைத்து விடுவர்.

இங்கும் அதே கயமைத் தன்மையைத் தான் செயல்படுத்துகின்றனர். மலர் மன்னனின் கட்டுரையை படிக்கும் சிறு பிள்ளையும் தெளிவாக கூறி விடும் மலர் மன்னன் சங்க் பரிவாரத்தின் உறுப்பினர் என்பதை. கோட்சே சங்க் பரிவாரத்தினைக் காக்க எடுத்த அதே முயற்சியை இவரும் எடுத்துள்ளார். இடையிடையே முஸ்லிம்களை மோசமானவர்களாக சித்தரிக்க முயற்சிக்கும் அதே சங்க் பரிவார மனப்பான்மை.

அவரின் கட்டுரை முழுவதும் பொய்களாலும் முன்னுக்கு பின் முரணான தகவல்களாலும் நிறைந்துள்ளன. அக்கட்டுரையின் முக்கிய நோக்கம் காந்தி கொலைக்கும் சங்க் பரிவாரத்திற்கும் சம்பந்தமில்லை என்று காட்டுவதோடு, முஸ்லிம்கள் இந்துக்களை அநியாயமாக கொடுமைப் படுத்தினர் என்று எப்பொழுதும் போல் சேறுவாரி இறைப்பதுமேயாகும். இதனை அவர் கேரள மாப்பிள்ளைமார்களின் கலகத்தினைக் குறித்து எழுதுவதைக் கொண்டே நிரூபிக்க முடியும். தென்னகத்திலேயே முதன் முதலாக பரங்கியர்களை எதிர்த்து போர் குரல் எழுப்பிய வீரர்கள் தான் மாப்பிள்ளைமார். இதனை வரலாற்றுரீதியாகவே எம்மால் நிரூபிக்க முடியும். மலர் மன்னனின் கட்டுரை பொய்களின் கூட்டு அவியல் என்பதை நிரூபிக்க அங்கெல்லாம் போக வேண்டிய அவசியம் கூட இல்லை.

அவர் கட்டுரையில் ஆதாரமாக காட்டியுள்ள காந்தியின் கொலைக்கு நேரடி சாட்சியான அவரின் உதவியாளர் "கல்யாணமே" போதும்.



இவரை மிகவும் அறிந்தவரைப் போல் தன்னைக் காட்டிக் கொள்ளும் மலர் மன்னன் இவர் காந்திஜியுடன் இருந்த நாட்களைக் குறித்துக் கூறும் பொழுது அவருடைய கட்டுரையில், "காந்திஜி மறைவதற்குச் சில நாட்கள் முன்புதான் அவருக்கு உதவியாகத் தட்டச்சு எழுத்தர் ஒருவர் நியமிக்கப் பட்டார். தமிழரான அவர் பெயர் கல்யாணம்." என்று அவரைக் குறித்து அறிமுகப் படுத்தும் விதமாக கூறுகிறார். இந்த ஒரு வரி போதும் வரலாற்று நிகழ்ச்சியை எந்த அளவிற்கு தெரிந்து (அல்லது திரித்துக்) கொண்டு இவர் எழுதுகிறார் என்பதற்கு. 1942 லேயே தனது வேலையினை விட்டு விட்டு காந்திஜியின் ஆசிரமத்தில் எத்திய கல்யாணம் அவர்கள் 1944 - முதல் 60 ரூபாய் சம்பளத்திற்கு காந்திஜிக்கு வரும் கடிதங்களை வகைப்படுத்துவதும் அவற்றிற்கு பதில் எழுதுவதுமான பணிக்கு அமர்த்தப் படுகிறார். அதன் பின் காந்திஜி கொலை செய்யப்படும் 1948 ஜனவரி 30 வரை அவர் அருகிலேயே இருந்துள்ளார். இதனைத் தான் மலர் மன்னன் "காந்திஜி மறைவதற்குச் சில நாட்கள் முன்புதான் அவருக்கு உதவியாகத் தட்டச்சு எழுத்தர் ஒருவர் நியமிக்கப் பட்டார்." என்று எழுதுகிறார். மலர் மன்னனுக்கு மிகவும் தெரிந்த கல்யாணம் அவர்கள் அதுவும் அவர் பக்கத்தில் உயிரோடு இருக்கும் போதே , காந்திஜியுடன் அவர் பணியாற்றிய வருடங்கள் எத்தனை என்ற சிறிய விஷயத்தைக் குறித்து தெரிந்திருக்கும் அவரின் ஆராய்ச்சி அறிவு - பெண் கற்பு புகழ் திருவாளர் டோண்டு அவர்களைப் போல் - எனக்கும் மெய்சிலிர்க்க வைக்கிறது.




"கேரள சப்தம்" என்ற மலையாள சஞ்சிகையில் டிசம்பர் 25, 2005 அன்று வெளியான "கல்யாணம்" அவர்களின் பேட்டியிலிருந்து ஒரு பகுதியினை மலர் மன்னனின் கட்டுரைக்கு பதிலாக வைக்கிறேன். பின்னர் தீர்மானிப்போம் காந்தியை கொன்றதில் சங்க் பரிவாரத்திற்கு பங்கு உண்டா என்பதை!

அதன் பின்னர் மலர் மன்னனின் எழுத்தைக் குறித்து ஆகா ஓகோ என்று அளந்த பெண் கற்பு புகழ் திருவாளர் டோண்டு அவர்களின் மாப்பிளைமார்கள் குறித்த பின்னூட்டங்களின் உண்மைதன்மை குறித்தும் தீர்மானிப்போம்.



இப்பொழுது கல்யாணம் அவர்களின் பேட்டியிலிருந்து:


1947 ஆகஸ்ட் 15 அன்று நேருவின் தலைமையில் காங்கிரஸ் மந்திரி சபை டெல்லியில் அதிகாரம் ஏற்கும் போது, தனது வாழ்நாளில் ஒரு பஞ்சாயத்து உறுப்பினர் பதவி கூட வகித்திடாத காந்திஜி வங்காளம் - நவகாளியிலுள்ள பாலிகட் என்ற கிராமத்தில் ஒரு சாது முஸ்லிம் பெண்மணியின் குடிலில் உண்ணாவிரதம் இருந்து கொண்டிருந்தார். கண்ணுக்கு கண், பல்லுக்கு பல் என்ற தத்துவ சாஸ்த்திரத்தை அப்படியே நடைமுறைப் படுத்தும் ஓர் அபாக்கியகரமான நிகழ்வு தான், பாரத பிளவின் மூலம் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் கிடைத்த பிரதி பலனாகும். பஞ்சாப் மற்றும் வங்காளத்தின் வறண்ட பூமிகள் மனித இரத்தம் குடித்து தனது தாகத்தை தணித்துக் கொண்டன. இந்துக்களும், முஸ்லிம்களும் ஒரே நாட்டில் வாழ முடியாது என்ற தவறான அபிப்பிராயத்தை, அதிகாரத்தை மட்டுமே கனவு கண்டு கொண்டிருந்த ஜின்னாவும் அவர் துதிபாடிகளும் மனப்பூர்வம் மக்களின் மனதில் விதைத்தனர்.

லால் கிருஷ்ண அத்வானி சமீபத்தில் லாகூரில் ஜின்னாவின் சமாதியில் வைத்து கூறியது போல, ஜின்னா ஒரு முழுமையான மதசார்பற்ற மனிதனாக இருந்தார். இன்னும் சற்று விளக்கமாக கூறினால் மத அனுஷ்டானங்களை கடைபிடித்து வாழ விரும்பாத ஒரு முழு உலகியல்வாதி. விஸ்கியும், பன்றி இறைச்சியும் விரும்பி உண்பவராயிருந்த அவர் ஆங்கில கலாச்சாரத்தின் ஆராதகனாக இருந்தார். ஆரம்பத்தில் பாகிஸ்தான் வாதத்தை புறந்தள்ளிய ஜின்னா, சக தலைவர்களுடன் நடக்கும் கலந்துரையாடல்களில் அது ஒரு நடவாத காரியமென்று ஏளனமாக கூறிக் கொண்டிருந்தார். முகம்மதலி ஜின்னாவிற்கு சுதந்திர இந்தியாவின் பிரதமர் பதவியை வழங்க சம்மதித்திருந்தால் ஒரு வேளை பாகிஸ்தான் என்ற கனவு ராஜ்ஜியம் சில தீவிரவாதிகளின் மனதோடு அடங்கி ஒடுங்கிப் போயிருந்திருக்கும்.

ஆனால் பண்டித நேரு மற்றும் பட்டேலின் சிறிதும் விட்டு கொடுக்காத மனப்பான்மை தான் ஜின்னாவிற்கு தன்னை ஒரு பிரதமர் பதவிக்கு தகுதியுடையவராக உயர்த்திக் காட்டுவதற்கு முடியாமல் போனது. அதன் பலனோ, நம் நாட்டிற்கு தன்னில் ஒரு பெரிய நிலப் பகுதியையும், திறமையான ஒரு மனிதவளத்தையும் என்றென்றைக்குமாக இழக்க வேண்டி வந்தது.

ஜின்னாவை பிரதமராக்குவதில் காந்திக்கு எவ்வித ஆட்சேபணையுமில்லாமல் முழு சம்மதமாக இருந்தது. இந்திய தேசிய காங்கிரசில் ஹிந்துத்துவ வாதம் வலிமையடைந்த போது, ஜின்னா 1937 - ல் உருவான முஸ்லிம் லீக்கிற்கு தாவினார். சில இடங்களிலாவது தங்களின் விகிதாச்சாரப்படி முஸ்லிம் லீக்கிற்கு அரசாங்கத்தில் இடமளிக்க வேண்டும் என்ற முஸ்லிம் லீக்கின் கோரிக்கையை காங்கிரஸ் நிராகரித்துத் தள்ளிய போதே பிரிவினையின் வித்துக்கள் தூவப் பட்டு விட்டன. 1947 ஆகஸ்ட் 15 - ல் சுதந்திரம் கிடைத்திருந்தாலும், அரசு 1948 ஜனவரி 26-ல் தான் பல லட்சங்கள் செலவளித்து டெல்லியில் சுதந்திர தினக் கொண்டாட்டம் நடத்தியது. தன்னுடைய மரணத்திற்கு சில நாட்களுக்கு முன் நடந்த அந்த கொண்டாத்தோடு பாபுஜிக்கு மனதில் சம்மதமில்லாதிருந்தது. பொது கஜானாவில் உள்ள மக்கள் பணத்தை ஆடம்பரங்களுக்கு செலவளிப்பதை அவர் விரும்பவில்லை. இன்னும் கூறினால் இன்றைய ரீதியிலான ஆட்சி முறையே காந்திஜியின் மனதில் இல்லாதிருந்தது.

ஆங்கில அரசாங்கத்தின் காலத்திலிருந்த எல்லா சிறைச்சாலைகளையும் கல்வி ஸ்தாபனங்களாகவோ அல்லது மருத்துவமனைகளாகவோ மாற்றவேண்டும் என்று அவர் விரும்பியிருந்தார். சுதந்திரப் போராட்டத்தின் ஜீவாத்மாவும், பரமாத்மாவுமாக இருந்த காந்திஜி தனக்குப் பின் தன்னுடைய அரசியல் வாரிசாக ஒரு போதும் நேருவை கருதியதில்லை. தன்னுடைய வாழ்நாளிலேயே நாட்டிற்கு சுதந்திரம் கிடைக்கும் என்பதில் நம்பிக்கையற்றிருந்த காந்திஜி, அகிம்சை சித்தாந்தத்தில் உறுதியாக நின்று போராட்டத்தினைத் தொடர ஏற்ற ஓர் ஆள் என்ற ஒரு முக்கியத்துவம் மட்டுமே நேருவிற்கு வழங்கியிருந்தார்.

சுசீலா நய்யாருடைய சகோதரரும் தனது அந்தரங்க செயலாளருமாக இருந்த மகாதேவ் தேசாயிக்குப் பிறகு இராஜாஜி தான் காந்திஜியின் உள்மனதை அறிந்தவராக இருந்தார். காரியங்களை விபரமாக அறிந்த, சத்தியங்களை முகத்திற்கு நேரே கூறும் குணம் கொண்ட சி. ராஜ கோபாலச்சாரியை காங்கிரசில் சில முகஸ்துதி செய்யும் கும்பல்களுக்குப் பிடிக்காமல் இருந்தது. எனவே ஒரு வழியும் இல்லாதிருந்ததால் தான் இராஜாஜி சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜனரல் ஆனார். இராஜாஜியின் மகள் லட்சுமி மோகன் தாஸ் கரம்சந்த் காந்தியின் மருமகள் ஆனது பலருக்கும் நம்புவதற்கே இயலாததாக இருந்தது.

புத்தகங்கள் வழியேயும் சில திரைப்படங்கள் வழியேயும் ஒட்டு மொத்த மக்களின் மனதில் இடம் பிடித்த ஒரு காட்சி, காந்திஜி "ஹே ராம்" என்று முனகிக் கொண்டு கடைசி மூச்சு விடும் காட்சி ஆகும். அவரின் இறுதிச்சடங்குகள் நடந்த ராஜ்காட் - ஸ்மிருதி மண்டபத்தின் மார்பிள் பலகைகளில் கூட மிக அழகாக "ஹே ராம்" என்று பொறித்து வைத்திருக்கிறார்கள். காங்கிரசில் உள்ள தீவிர ஹிந்துத்துவ வாதிகளான ஒரு சில தலைவர்களின் கூர்புத்தியில் உதித்த சிந்தனை தான் இந்த "ஹே ராம்" என்ற காந்தியின் கடைசி அழைப்புக்கு பின்னால் உள்ளது. காந்திஜி ஒரு அதி தீவிர ராம பக்தராக இருந்தார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் சங்க்பரிவாரின் ராமனல்ல காந்தியின் சிந்தனையில் இருந்த ராமன். அது போலவே பகவத் கீதையின் வரிகளைச் சிந்தையுள் கொண்டு தான் தன்னுடைய ஒவ்வொரு நாளின் தொடக்கமும் இருக்கும் என்று பலமுறை காந்திஜியே கூறியிருக்கிறார்.

1948 ஜனவரி 30 அன்று பிரார்த்தனை நேரத்தில் நாதுராம் வினாயக் கோட்சேயின் கையிலிருந்த நாட்டுத் துப்பாக்கியிலிருந்து புள்ளி இடைவெளியில் 5 க்கும் மேற்பட்ட குண்டுகளை தனது நெஞ்சில் வாங்கி ஒரு முறை துடிப்பதற்கு கூட நேரம் கிடைக்காமல் அந்த வயோதிகன் கீழே விழுவதை கண்ட சாட்சிகளில் நானும் ஒருவனாக இருந்தேன். ஒரு முறை முனகுவதற்கு முன்பே ஜீவன் அவர் உடம்பிலிருந்து பிரிந்திருந்தது. டில்லி போலீசை பாதுகாப்பு பரிசோதனைகளில் இருந்து விலக்கிய மகாத்மா, ஒரு கணக்கில் மரணத்தை விலை கொடுத்து வாங்கினார் என்று தான் கூற வேண்டும்.

காந்திஜியின் கொலைக்கு யதார்த்த காரணத்தைத் தேடினால், பிரிவினைக்குப் பிறகு பாகிஸ்தானிற்கு இந்தியா கைமாறிய 50 கோடி ரூபாய் பணத்திற்கு ஒரு பெரும் பங்குள்ளதை காணலாம். காலம் காலமாக ஒன்றாக இருந்த ஒரு விசாலமான பூமி இரண்டு நாடுகளாக பிரிந்த போது அதனுடைய ஆஸ்திகளும் பங்கு வைக்க வேண்டி வந்தது. அப்போதைய நிலைமையில் பாகிஸ்தானிற்கு கொடுக்க வேண்டிய 50 கோடி ரூபாயை கொடுப்பதற்கு இந்திய அரசாங்கத்திடம் காந்திஜி கோரினார். அந்த நேரத்தில் தான் காஷ்மீரின் இந்து ராஜாவான ஹரிசிங் ஒருதலைப் பட்சமாக இந்தியாவோடு இணைய தீர்மானம் எடுத்தார். அதனைத் தடை செய்ய பாகிஸ்தான் காலாட்படை வரவும், இந்தியாவின் விமானப் படையின் சமயோஜிதமான செயல் பாடுகளால் ஹரிசிங்கின் ராஜ்ஜியம் இந்திய குடியரசில் இணையவும் செய்தது. பகை மாறாத பாகிஸ்தானிகள் காஷ்மீரில் குழப்பங்கள் உருவாக்கி விட்டுக் கொண்டிருக்கும் சமயத்தில் தான் இந்த 50 கோடி ரூபாயின் விஷயம் மேலே வந்தது.

நாம் கொடுக்கும் 50 கோடி ரூபாய் கொண்டு பாகிஸ்தான் ஆயுதங்கள் வாங்கி நமக்கே எதிராகப் பிரயோகிக்கும் என்று தீர்க்கதரிசியான பட்டேல் ஊகித்தார். அதனால் அவர் 50 கோடி கொடுப்பதைக் கடுமையாக எதிர்த்தார். காந்திஜியின் வேண்டுகோளிற்கு அரசாங்கம் உடன்படாத போது அவர் உண்ணாவிரதமிருந்தார். முடிவில் எப்பொழுதும் போல் காந்திஜி தான் வெற்றி பெற்றார். பட்டேல் ஊகித்தது போல் அப்பணம் ஆயுதங்களாக காஷ்மீர் பள்ளத்தாக்கில் வந்து சேர்ந்தது வேறு விஷயம். இது இந்து மகாசபை தலைவர்களை எரிச்சலடைய செய்தது. அதனால் அவர்கள் புனேயில் ஒன்றுகூடி காந்திஜியை கொலை செய்வதற்குண்டான திட்டங்களை தயாராக்கினர். காந்திஜியின் முஸ்லிம் அனுகூல நிலைபாடுகள் அவர்களுடைய செயலுக்கு ஆக்கம் கூட்டியது. முதல் முயற்சியில் தோல்வியடைந்தாலும் கிடைத்த இரண்டாவது சந்தர்ப்பத்தில், பெயருக்கு மட்டும் இருந்த பாதுகாப்பு வளையத்தினை உடைத்துக் கொண்டு நாதுராம் வினாயக் கோட்சேக்கு அந்த மகாத்மாவினை கொல்வதில் வெற்றிபெற முடிந்தது. காந்திஜியின் கொலையினூடாக, முஸ்லிம்களின் ஒரு பெரிய பலமான பாதுகாப்பு அரணை இல்லாமல் ஆக்கி விட்டோம் என்ற தவறான அகங்காரம் நாட்டின் பல பாகங்களில் பரவியிருந்த இந்து மகாசபை தலைவர்களின் மனதில் நிறைந்திருந்தது.

அதிகப் பெரும்பான்மையுள்ள இந்துக்கள், மிகவும் சிறுபான்மையினரான முஸ்லிம்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்த்தாவது இந்தியாவில் சமாதானம் நிலை நிற்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே அந்த மகாத்மா மனதில் நிறைந்திருந்தது.

காந்திஜியின் வாழ்க்கை தான் அவரின் உபதேசம். அவரிடம் சவர்ணனோ, அவர்ணனோ, இந்துவோ, முஸ்லிமோ என்ற வேறுபாடுகள் இல்லை. எல்லோரும் ஹரி - அதாவது தெய்வத்தின் பிள்ளைகள். ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், மார்ட்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலா போன்ற மகான்கள் காந்திஜியின் மகத்துவத்தை நெஞ்சில் ஏற்றியவர்களாவர். காந்திஜியை கேவலப் படுத்த நினைப்பவன், தன்னைத் தானே கேவலப் படுத்திக் கொள்கிறானேயன்றி வேறில்லை.

நன்றி : கேரள சப்தம் 25 டிசம்பர் 2005.


இந்நிலை தொடர்ந்தால் காந்திஜியை மறக்கவல்ல இந்தியாவின் இன்றைய பிரச்சனைகள் அனைத்துக்கும் காரணமே காந்தி தான் என்று கூறினாலும் கூறுவார்கள் அயோக்கியர்கள்!

இப்பொழுது பெண் கற்பு நிலை புகழ் திருவாளர் டோண்டு அவர்களிடம் ஒரே ஒரு கேள்வி;

* கோட்சே கையில் "இஸ்மாயில்" என்று பச்சை குத்தியிருந்தான் என்று யாரோ கூறியவுடன் ஏதோ மலர் மன்னன் பெரிய வரலாற்று ஆய்வாளர் போல் அவரிடம் உடனே போன் செய்து கேட்டு இல்லை என்று கூறினீர்களே! இப்பொழுது கூறுங்கள் காந்தி கொலை விஷயத்தில் யார் கூற்றை ஏற்றுக் கொள்கிறீர்கள்?: மலர்மன்னன் கூறுவது போன்று சங்க் பரிவாரத்திற்கு தொடர்பில்லை என்பதையா? அல்லது சம்பவ நடப்பு காலத்தின் சாட்சியான "கல்யாணம்" அவர்களின் கூற்று படி காந்தி கொலைக்கு திட்டம் தீட்டி செயல் படுத்தியதே சங்க் பரிவார் தான் என்பதையா?

12 comments:

  1. தேவையேயில்லாமல் கோட்சே தரப்பு நியாயம் பேசுகிறேன் என்று வந்துவிட்டு................ 'இங்கு கோட்சேவை யாரும் நியாயப்படுத்தவில்லை' என்று 'ஜகா' வாங்குகிறவர்கள் என்ன சொல்லப்போகிறார்கள் பார்ப்போம்.

    ReplyDelete
  2. 1) கல்யாணம் அவர்கள் பேட்டியிலிருந்து:
    "புத்தகங்கள் வழியேயும் சில திரைப்படங்கள் வழியேயும் ஒட்டு மொத்த மக்களின் மனதில் இடம் பிடித்த ஒரு காட்சி, காந்திஜி "ஹே ராம்" என்று முனகிக் கொண்டு கடைசி மூச்சு விடும் காட்சி ஆகும். அவரின் இறுதிச்சடங்குகள் நடந்த ராஜ்காட் - ஸ்மிருதி மண்டபத்தின் மார்பிள் பலகைகளில் கூட மிக அழகாக "ஹே ராம்" என்று பொறித்து வைத்திருக்கிறார்கள். காங்கிரசில் உள்ள தீவிர ஹிந்துத்துவ வாதிகளான ஒரு சில தலைவர்களின் கூர்புத்தியில் உதித்த சிந்தனை தான் இந்த "ஹே ராம்" என்ற காந்தியின் கடைசி அழைப்புக்கு பின்னால் உள்ளது. காந்திஜி ஒரு அதி தீவிர ராம பக்தராக இருந்தார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் சங்க்பரிவாரின் ராமனல்ல காந்தியின் சிந்தனையில் இருந்த ராமன். அது போலவே பகவத் கீதையின் வரிகளைச் சிந்தையுள் கொண்டு தான் தன்னுடைய ஒவ்வொரு நாளின் தொடக்கமும் இருக்கும் என்று பலமுறை காந்திஜியே கூறியிருக்கிறார்."


    2)அப்பேட்டியில் காந்தி அவர்களின் கொலையை கல்யாணம் இவ்வாறு வர்ணித்தார்:

    "1948 ஜனவரி 30 அன்று பிரார்த்தனை நேரத்தில் நாதுராம் வினாயக் கோட்சேயின் கையிலிருந்த நாட்டுத் துப்பாக்கியிலிருந்து புள்ளி இடைவெளியில் 5 க்கும் மேற்பட்ட குண்டுகளை தனது நெஞ்சில் வாங்கி ஒரு முறை துடிப்பதற்கு கூட நேரம் கிடைக்காமல் அந்த வயோதிகன் கீழே விழுவதை கண்ட சாட்சிகளில் நானும் ஒருவனாக இருந்தேன். ஒரு முறை முனகுவதற்கு முன்பே ஜீவன் அவர் உடம்பிலிருந்து பிரிந்திருந்தது. டில்லி போலீசை பாதுகாப்பு பரிசோதனைகளில் இருந்து விலக்கிய மகாத்மா, ஒரு கணக்கில் மரணத்தை விலை கொடுத்து வாங்கினார் என்று தான் கூற வேண்டும்."

    3)மலர்மன்னன் கூறியது:
    "காந்திஜி சுடப்பட்ட போது அவரது அருகில் இருந்தவர்களில் கல்யாணமும் ஒருவர். குண்டு பட்டதும் முதியவரான காந்தி சிறு முனகலுடன் கீழே சாய்ந்தார். அந்த முனகலைத்தான் பிற்பாடு "ஹே ராம்' என்ற அழைப்பாகப் பதிவு செய்துவிட்டார்கள்! காந்திஜி "ஹே ராம்' என்றெல்லாம் சொல்லவில்லை என்பதற்கு கல்யாணம் சாட்சி! மக்கள் மத்தியில் காந்திஜியை ஒரு மஹானாக நிறுவுவதற்காக மேற்கொள்ளப்பட்ட கற்பிதங்களுள் இந்த "ஹே ராம்' சமாசாரமும் ஒன்று!"

    ஆக ஹே ராம் என்று காந்தி அவர்கள் கூறவில்லை என்று இருவருமே கூறிவிட்டார்கள்தானே.

    4) அற்புத மனிதராம் இறை நேசன் அவர்கள் இப்போது 'பெண் கற்பு நிலை புகழ் திருவாளர் டோண்டு' (ரொம்பத்தான் புகழுகிறீங்க சார்-இது நான் இங்கு கூறுவது) அவர்களிடம்
    எழுப்பும் ஒரே ஒரு கேள்வி:
    "* கோட்சே கையில் "இஸ்மாயில்" என்று பச்சை குத்தியிருந்தான் என்று யாரோ கூறியவுடன் ஏதோ மலர் மன்னன் பெரிய வரலாற்று ஆய்வாளர் போல் அவரிடம் உடனே போன் செய்து கேட்டு இல்லை என்று கூறினீர்களே! இப்பொழுது கூறுங்கள் காந்தி கொலை விஷயத்தில் யார் கூற்றை ஏற்றுக் கொள்கிறீர்கள்?"

    உங்கள் ஆசையைக் கெடுப்பானேன் கோட்ஸே கையில் இஸ்மாயில் என்றெல்லாம் பச்சை குத்திக் கொண்டதாக சம்பவ இடத்தில் இல்லாத கே.இ.என் மற்றும் கே.எஸ் ஹரிஹரன் கூறுவதை ஒத்துக்கொள்வதை விட அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை என்று தெளிவாக்கிய கல்யாணத்தைத்தானே நீங்களும் ஒத்துக் கொள்கிறீர்கள் அல்லவா? மிக்க நன்றி.

    இப்பின்னூட்டத்தை என் தனிப்பதிவில் போடுவதை விட காந்தியும் கோட்ஸேயும் என்ற என் பதிவிலேயே நகலிட்டு விடுகிறேன். பார்க்க: http://dondu.blogspot.com/2006/01/blog-post_15.html

    என் நண்பர்கள் பார்த்தால் சந்தோஷப்படுவார்கள்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  3. அழகப்பன்January 19, 2006 at 7:45 AM

    என்னது? மறக்கிறோமா? அவரால்தான் தேசமே முன்னேற முடியாமல் இருக்கிறது என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது மறப்பதா? அதெல்லாம் எங்களுக்குத் தெரியாதே! என்று சிலர் முணுமுணுப்பது உங்களுக்கு கேட்கவில்லையா?

    ReplyDelete
  4. வெங்காயம்January 19, 2006 at 4:29 PM

    அன்புள்ள இறைநேசன்,

    நான் பிறப்பால் ஒரு இந்து. இந்து என்பதற்காக நான் ஒருபோதும் பெருமையொ சிறுமையோ பட்டதில்லை. நான் ஒரு மனிதன் என்பதில்தான் பெருமை அடைகிறேன்.

    டோண்டு எப்போது எதை எழுதினாலும் அவனின் பதிவு ஒரு இனம், ஜாதி சார்ந்ததாகவே இருக்கும். எண்ணம், செயல் எல்லாமே பார்ப்பணீயத்தைச் சுற்றியே இருக்கும். எனவே ஒரு இந்துவான எனக்கே அவனை பிடிக்கவில்லை.

    தயவு செய்து அவனை விட்டுவிட்டு வேறு நல்ல பதிவுகள் இருந்தால் போடுங்களேன்.

    பி.கு;- எனக்கு இந்து, இஸ்லாமிய, கிறிஸ்துவ ஆன்மீக விஷயங்கள் அனைத்தும் அத்துப்படி.

    ReplyDelete
  5. "இப்பொழுது கூறுங்கள் காந்தி கொலை விஷயத்தில் யார் கூற்றை ஏற்றுக் கொள்கிறீர்கள்?: மலர்மன்னன் கூறுவது போன்று சங்க் பரிவாரத்திற்கு தொடர்பில்லை என்பதையா? அல்லது சம்பவ நடப்பு காலத்தின் சாட்சியான "கல்யாணம்" அவர்களின் கூற்று படி காந்தி கொலைக்கு திட்டம் தீட்டி செயல் படுத்தியதே சங்க் பரிவார் தான் என்பதையா? "

    Mr. Dondu,முதலில் இதற்கு பதில் சொல்லுங்கள்

    ReplyDelete
  6. //BABU said...
    "இப்பொழுது கூறுங்கள் காந்தி கொலை விஷயத்தில் யார் கூற்றை ஏற்றுக் கொள்கிறீர்கள்?: மலர்மன்னன் கூறுவது போன்று சங்க் பரிவாரத்திற்கு தொடர்பில்லை என்பதையா? அல்லது சம்பவ நடப்பு காலத்தின் சாட்சியான "கல்யாணம்" அவர்களின் கூற்று படி காந்தி கொலைக்கு திட்டம் தீட்டி செயல் படுத்தியதே சங்க் பரிவார் தான் என்பதையா? "

    Mr. Dondu,முதலில் இதற்கு பதில் சொல்லுங்கள் //

    பாபு, நீங்கள் ரொம்பத்தான் பேராசைப்படுகிறீர்கள்!

    ;-)))

    ReplyDelete
  7. "அவாள்களின்" திரிபு நடவடிக்கைகளுக்கு மீண்டுமொரு உதாரணம் மேலே சகோதரர்(அவாள்களின் வர்ணாசிரம கொள்கைகளில் "மற்றவர்கள்", "அவாள்களை" இவ்வாறு அழைப்பதனால் ஏதாவது தீட்டு படுமோ என்னமோ?) டோண்டு அவர்கள் நான் வைத்த கேள்விக்கு பதில் கூறிய விதம்.

    நான் வைத்த கேள்வி:

    * கோட்சே கையில் "இஸ்மாயில்" என்று பச்சை குத்தியிருந்தான் என்று யாரோ கூறியவுடன் ஏதோ மலர் மன்னன் பெரிய வரலாற்று ஆய்வாளர் போல் அவரிடம் உடனே போன் செய்து கேட்டு இல்லை என்று கூறினீர்களே! இப்பொழுது கூறுங்கள் காந்தி கொலை விஷயத்தில் யார் கூற்றை ஏற்றுக் கொள்கிறீர்கள்?: மலர்மன்னன் கூறுவது போன்று சங்க் பரிவாரத்திற்கு தொடர்பில்லை என்பதையா? அல்லது சம்பவ நடப்பு காலத்தின் சாட்சியான "கல்யாணம்" அவர்களின் கூற்று படி காந்தி கொலைக்கு திட்டம் தீட்டி செயல் படுத்தியதே சங்க் பரிவார் தான் என்பதையா?

    என் கேள்வியை அவர் மாற்றிய விதம்:

    அற்புத மனிதராம் இறை நேசன் அவர்கள் இப்போது 'பெண் கற்பு நிலை புகழ் திருவாளர் டோண்டு' (ரொம்பத்தான் புகழுகிறீங்க சார்-இது நான் இங்கு கூறுவது) அவர்களிடம்
    எழுப்பும் ஒரே ஒரு கேள்வி:

    "* கோட்சே கையில் "இஸ்மாயில்" என்று பச்சை குத்தியிருந்தான் என்று யாரோ கூறியவுடன் ஏதோ மலர் மன்னன் பெரிய வரலாற்று ஆய்வாளர் போல் அவரிடம் உடனே போன் செய்து கேட்டு இல்லை என்று கூறினீர்களே! இப்பொழுது கூறுங்கள் காந்தி கொலை விஷயத்தில் யார் கூற்றை ஏற்றுக் கொள்கிறீர்கள்?"

    உங்கள் ஆசையைக் கெடுப்பானேன் கோட்ஸே கையில் இஸ்மாயில் என்றெல்லாம் பச்சை குத்திக் கொண்டதாக சம்பவ இடத்தில் இல்லாத கே.இ.என் மற்றும் கே.எஸ் ஹரிஹரன் கூறுவதை ஒத்துக்கொள்வதை விட அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை என்று தெளிவாக்கிய கல்யாணத்தைத்தானே நீங்களும் ஒத்துக் கொள்கிறீர்கள் அல்லவா? மிக்க நன்றி.

    இப்பின்னூட்டத்தை என் தனிப்பதிவில் போடுவதை விட காந்தியும் கோட்ஸேயும் என்ற என் பதிவிலேயே நகலிட்டு விடுகிறேன். பார்க்க:

    க்ட்ட்ப்://டொன்டு.ப்லொக்ச்பொட்.cஒம்/2006/01/ப்லொக்-பொச்ட்_15.க்ட்ம்ல்

    என் நண்பர்கள் பார்த்தால் சந்தோஷப்படுவார்கள்.



    நான் வைத்த கேள்வியை தனக்கு சாதகமாக மாற்றி பதிலிட்டது மட்டுமன்றி அதனையே தன்னுடைய பதிவிலும் வைப்பாராம் ஆதாரமாக!

    "இவாள்களின்" ஆதாரங்கள் எப்படி உருவாக்கப் படுகின்றன என்பதனையும், இவாள்கள் வைக்கும் வாதங்கள் எவ்வளவு நம்பகத்தன்மையுடையன என்பதனையும் இதிலிருந்து நாம் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.

    அவருடைய நண்பர்கள் பார்த்தால் சந்தோசப் படுவார்களாம். எதைப் பார்த்து? அவருடைய "திரிக்கும்" மதியூகத்தைப்(!) பார்த்தா?

    அன்புடன் இறைநேசன்.

    ReplyDelete
  8. //"இப்பொழுது கூறுங்கள் காந்தி கொலை விஷயத்தில் யார் கூற்றை ஏற்றுக் கொள்கிறீர்கள்?: மலர்மன்னன் கூறுவது போன்று சங்க் பரிவாரத்திற்கு தொடர்பில்லை என்பதையா? அல்லது சம்பவ நடப்பு காலத்தின் சாட்சியான "கல்யாணம்" அவர்களின் கூற்று படி காந்தி கொலைக்கு திட்டம் தீட்டி செயல் படுத்தியதே சங்க் பரிவார் தான் என்பதையா? "

    Mr. Dondu,முதலில் இதற்கு பதில் சொல்லுங்கள்
    //

    பாபு அவர்களே!

    பெண் கற்பு புகழ் (இப்பட்டம் அவருக்கு புகழ் சேர்க்கிறதாம்!!!!??!!. பாவம், மா-- என்று சொல்வதை தான் அவர் வார்த்தையில் "பெண் கற்பு புகழ்" என்று கூறுகிறேன் என்பதைக் கூட அறிந்து கொள்ள முடியாத அளவிற்கு வெகுளியாக இருக்கிறாரே!) டோண்டு அவர்கள் என் கேள்வியை நீங்கள் புரிந்து கொண்ட அளவிற்கு அவர் புரிந்து கொள்ளவில்லை போலிருக்கிறது. அதனால் தான் அப்படி பதிலளித்திருக்கிறார்.

    அதன் பின் கேள்வியை நீங்கள் தெளிவாக குறிப்பிட்ட பிறகு அவர் படித்திருக்க மாட்டார்(??!). அவர் இன்னும் பதிலளிக்காமல் இருப்பதற்கு காரணம் அது தான் என நினைக்கிறேன்(!). பொறுத்திருங்கள் விரைவில் படித்துவிட்டு பதிலளிப்பார்(!!!).

    அன்புடன்
    இறைநேசன்.

    ReplyDelete
  9. "* கோட்சே கையில் "இஸ்மாயில்" என்று பச்சை குத்தியிருந்தான் என்று யாரோ கூறியவுடன் ஏதோ மலர் மன்னன் பெரிய வரலாற்று ஆய்வாளர் போல் அவரிடம் உடனே போன் செய்து கேட்டு இல்லை என்று கூறினீர்களே! இப்பொழுது கூறுங்கள் காந்தி கொலை விஷயத்தில் யார் கூற்றை ஏற்றுக் கொள்கிறீர்கள்?: மலர்மன்னன் கூறுவது போன்று சங்க் பரிவாரத்திற்கு தொடர்பில்லை என்பதையா? அல்லது சம்பவ நடப்பு காலத்தின் சாட்சியான "கல்யாணம்" அவர்களின் கூற்று படி காந்தி கொலைக்கு திட்டம் தீட்டி செயல் படுத்தியதே சங்க் பரிவார் தான் என்பதையா?"

    இதற்கான பதிலை என்னுடைய காந்தி கோட்ஸே பற்றிய இரண்டாம் பதிவில் பின்னூட்டமாக கொடுத்திருக்கிறேன்.

    "பெண் கற்பு புகழ் (இப்பட்டம் அவருக்கு புகழ் சேர்க்கிறதாம்!!!!??!!. பாவம், மா-- என்று சொல்வதை தான் அவர் வார்த்தையில் "பெண் கற்பு புகழ்" என்று கூறுகிறேன் என்பதைக் கூட அறிந்து கொள்ள முடியாத அளவிற்கு வெகுளியாக இருக்கிறாரே!) டோண்டு அவர்கள் என் கேள்வியை நீங்கள் புரிந்து கொண்ட அளவிற்கு அவர் புரிந்து கொள்ளவில்லை போலிருக்கிறது. அதனால் தான் அப்படி பதிலளித்திருக்கிறார்."
    நீங்கள் கூறியது புரியாமல் போக நான் என்ன மடையனா? இவ்வளவு தரக்குறைவாக ஒருவரை நீங்கள் தனிப்பட்ட முறையில் தாக்குகிறீர்கள். அதை அக்னாலட்ஜ் செய்வது என் தகுதிக்கு ஏற்றதில்லை, ஆகவே அதை தமாஷாக மாற்றினேன்.இல்லை நான் தரக்குறைவாகத்தான் இருப்பேன் என நீங்கள் பிடிவாதம் பிடிக்கிறீர்கள்.

    என் புதுக் கல்லூரியில் நீங்கள் படிக்கவில்லை என நம்புகிறேன். God spare my alma mater such old students.

    (வில்) அம்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  10. ஒரு புது முயற்சி. நான் மற்றவர்களின் பதிவில் இடும் பின்னூட்டத்தை எனது பதிவிலும் இடுகிறேன். நன்றாக வந்தால் தொடரலாம் என எண்ணம்.

    முதல் முறையாக நிலவு நண்பனின் பதிவில் நான் இட்ட பின்னூட்டம் இதோ!
    ********************************

    சகோதரர் நிலவு நண்பனுக்கு,

    உங்களுடைய ஆதங்கம் புரிகிறது. எனினும் நீங்கள் ஓர் ஆண் மகனின் பார்வையில் இதனைப் பார்ப்பதால் உங்களுக்கு இது தவறாகப் படுகிறது என நினைக்கிறேன்.

    உடல் இச்சையை அபாயமின்றி எவ்வாறு பெண்கள் பூர்த்தி செய்து கொள்வது? என்பதற்கு ஒருவர் ஆலோசனை வழங்குவதாகவே இதனை நான் காண்கிறேன். இதில் என்ன தவறு இருக்கிறது?

    உடல் இச்சை என்பது இருபாலருக்கும் பொதுதான். தற்சமயம் பெண்கள் தங்கள் இச்சைகளை வெளிப்படுத்துவதில் அதிகம் தயங்குவதில்லை. அவ்வாறு ஒரு பெண் தனது உடல் இச்சையை தணித்துக் கொள்ள,

    * இப்படி அப்படி என்று இருந்தாலும் மற்றவர்களுக்கு தெரியாமல் எச்சரிக்கையுடன் நட்ந்து கொண்டால் பின்விளைவுகளிலிருந்து தப்பிக்கலாம்.

    * குஷ்பு சொன்னதையே நானும் பின்மொழிகிறேன். பெண்கள் தங்கள் உடல் இச்சையை தணித்துக்கொள்ளட்டும். ஆனால் மிகுந்த தற்பாதுகாப்புடன் செயல்படவேண்டும்.. கருவுறக் கூடாது. கருகலைப்பு உடலுக்கு கெடுதல். பால்வினை நோய்கள் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆணுறை உபயோகத்தை வலியுறுத்த வேண்டும். ரொம்ப முக்கியம், பரம ரகசியமாகச் செயல்படவேண்டும். மாட்டிக் கொள்ளக் கூடாது. என்னதான் இருந்தாலும் இப்போது இருக்கும் சமூகக் கட்டுப்பாடுகள் கடுமையானவை. ஆகவே மாட்டிக் கொள்ளக் கூடாது.

    * ஒரு மாதவிடாய் வந்தால் அதற்கு முன் எவ்வளவு உடலுறவு கொண்டாலும் கணக்கில் வராது. ஆகவே தேவையில்லாது குற்ற உணர்ச்சி கொள்ள வேண்டாம்.

    * ஆனால் ஒன்று. எந்த செயலுக்கும் எதிர்வினை வரும். ஆகவே அதற்கெல்லாம் துணிந்தவர்கள்தான் இதையெல்லாம் செய்ய வேண்டும். மற்றவர்களுக்கு? fire-தான்.

    இது போன்ற பிரயோஜனமான ஆலோசனைகளை ஒருவர் கொடுக்கும் போது அப்பெண் அந்த ஆலோசனையின் படி கவனமாக தனது உடல் இச்சையை தீர்த்துக் கொள்ள ஏற்ற (ஆணுறை பயன்படுத்த சம்மதிக்கும்) ஆட்களை தேடி பிடிக்கும் மகத்துவமான பணியைத் தானே இவரும் செய்கிறார். இதில் என்ன தவறை நீங்கள் கண்டீர்கள் என்று எனக்குப் புரியவில்லை.

    ஒரு விதத்தில் இந்த நபர்கள் உடல் இச்சையுள்ள பெண்களுக்கு அவர்களின் இச்சையை தீர்க்க வழி ஏற்படுத்திக் கொடுப்பதோடு, "சும்மா போவதை" வைத்து ஒரு வருமானமும் உண்டாக்கி கொடுத்து அவர்களுடைய "செழிப்பான!" வாழ்விற்கு துணை புரிகிறார்கள் என்று தான் கூற வேண்டும்.

    இதற்காக ஒரு பதிவு வேறு போட்டு உங்கள் பழமைவாத சிந்தனையை இங்கு திணிக்க முயல்கிறீர்களே!. இது நியாயமா? இதில் வேலை மெனக்கெட்டு அந்த மகத்தான சேவை (கூட்டி கொடுக்கும்) செய்யும் நபரை புகைப்படம் வேறு எடுக்க முயன்றுள்ளீர்கள். அதற்கு அந்த நபர் முகத்தை மறைப்பது போன்ற ஓர் புகைப் படத்தையும் இட்டுள்ளீர்கள். நீங்கள் எந்த காலத்தில் இருக்கிறீர்கள் எனத் தெரியவில்லை!

    பெண்கள் தங்களுடைய உடல் இச்சையை எப்படி தீர்த்துக் கொள்வது என ஆலோசனை கூறுபவர்கள் தற்போதெல்லாம் தனது முகத்தை மறைக்க விரும்புவதில்லை என்பதை நீங்கள் அறியவில்லையா?

    சாதாரணமாக இவர்களுக்கெல்லாம் வெட்கம் என்பதெல்லாம் இருப்பதில்லை என்பது என் யூகம். அந்த நபரை இனி காணும் பாக்கியம்(!) கிடைத்தால் அவருடைய தொழில்(!) விருத்தியடையும் விதத்தில் தக்க ஆலோசனைகளை பெண்களுக்கு வழங்கும் நபர்களெல்லாம் தற்போது இப்படி முகத்தை மறைத்து ஓடி ஒழிவதில்லை என்பதை தெரிய படுத்துங்கள்.

    நீங்களும் வேறு ஏதாவது இது போன்ற "சொந்த சகோதரியோ, தாயோ, மகளோ படிக்க நேர்ந்தால் உங்கள் முகத்தில் காறி உமிழும் படியான" சிறந்த, பெண்களின் இச்சையை பாதுகாப்பாக தீர்ப்பது எப்படி? என்பது பற்றிய பதிவுகளை போடுங்கள்.

    "அந்த" நபர்களுக்கு மிகவும் பிரயோஜனமாக இருக்கும்.

    கடைசியாக நிலவு நண்பனிடம் ஒரு கேள்வி!

    இந்த தொழிலுக்கு கூட்டி கொடுப்பவர்களுக்கு நீங்கள் "மாமா" பெயரை வழங்குகிறீர்கள் எனில், மேலே கண்டது போன்ற இந்த தொழிலுக்கு பிரயோஜனமான, "அவ்வாறு போகும்" பெண்கள் எப்படி தங்களை பாதுகாப்பது என்ற அபூர்வமான(!), சிறந்த(!) ஆலோசனைகளை கூறும் நபரை எப்படி அழைப்பீர்கள்?

    "மாமா" என்று தானே!

    *********************************

    அன்புடன்

    இறைநேசன்.

    ReplyDelete
  11. //இல்லை நான் தரக்குறைவாகத்தான் இருப்பேன் என நீங்கள் பிடிவாதம் பிடிக்கிறீர்கள்.//

    * இப்படி அப்படி என்று இருந்தாலும் மற்றவர்களுக்கு தெரியாமல் எச்சரிக்கையுடன் நட்ந்து கொண்டால் பின்விளைவுகளிலிருந்து தப்பிக்கலாம்.

    * குஷ்பு சொன்னதையே நானும் பின்மொழிகிறேன். பெண்கள் தங்கள் உடல் இச்சையை தணித்துக்கொள்ளட்டும். ஆனால் மிகுந்த தற்பாதுகாப்புடன் செயல்படவேண்டும்.. கருவுறக் கூடாது. கருகலைப்பு உடலுக்கு கெடுதல். பால்வினை நோய்கள் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆணுறை உபயோகத்தை வலியுறுத்த வேண்டும். ரொம்ப முக்கியம், பரம ரகசியமாகச் செயல்படவேண்டும். மாட்டிக் கொள்ளக் கூடாது. என்னதான் இருந்தாலும் இப்போது இருக்கும் சமூகக் கட்டுப்பாடுகள் கடுமையானவை. ஆகவே மாட்டிக் கொள்ளக் கூடாது.

    * ஒரு மாதவிடாய் வந்தால் அதற்கு முன் எவ்வளவு உடலுறவு கொண்டாலும் கணக்கில் வராது. ஆகவே தேவையில்லாது குற்ற உணர்ச்சி கொள்ள வேண்டாம்.

    * ஆனால் ஒன்று. எந்த செயலுக்கும் எதிர்வினை வரும். ஆகவே அதற்கெல்லாம் துணிந்தவர்கள்தான் இதையெல்லாம் செய்ய வேண்டும். மற்றவர்களுக்கு? fire-தான்.
    //


    இதற்கெல்லாம் அர்த்தம் என்ன? இவற்றை என்ன நானா கூறினேன். பிடிவாதம் பிடிப்பது நானா? நீங்களா? "அந்த" அறிவுரைகளை கொடுப்பதன் மூலம் தன்னை தானே தரம் கெட்டவனாக தாழ்த்திக் கொள்வது யார்? ஒரு "தரம்கெட்டவன்" கூட இப்படிப்பட்ட ஆலோசனைகளை தனது மகளுக்கு வழங்க மாட்டான்!

    இந்த பதிவுக்கு சம்பந்தமில்லாதது எனினும் நான் உங்களை "தரக் குறைவாக" தாக்குவதாக குற்றம் சுமத்தியுள்ளதால் அதைக் குறித்து ஒரு சந்தேகம்.

    நீங்கள் பெண்களுக்கு கூறியிருக்கும் அறிவுரைகளை உங்களை சார்ந்த பெண்களுக்கு நீங்கள் நேரடியாக கூறுவீர்களா. அதாவது உங்கள் தாய்க்கு, மனைவிக்கு, மகளுக்கு, சகோதரிக்கு....

    இப்படிப்பட்ட கேடுகெட்ட சிந்தனை கொண்ட ஒருவர் மாணாக்கர்களுக்கு பாடம் போதிக்கும் இடத்தில் இருந்தால் அந்த பிள்ளைகளின் எதிர் காலம் எப்படி இருக்கும் என நினைத்துப் பார்க்கிறேன்.

    //என் புதுக் கல்லூரியில் நீங்கள் படிக்கவில்லை என நம்புகிறேன்.//

    புதுக் கல்லூரியைக் குறித்து எனக்கு மிகுந்த நல்ல அபிப்பிராயம் உண்டு. நீண்ட காலம் இல்லையெனினும் அங்கு வகுப்பெடுத்த காலங்களில் அக்கல்லூரியின் ஒழுங்கும், அப்போதைய மாணவர்களின் நன்னடத்தையும் என்னை வெகுவாக கவர்ந்திருக்கின்றன. அப்படிப்பட்ட ஓர் சிறந்த கல்லூரியிலிருந்து வந்த உங்களிடம் இப்படிபட்ட "தரம் கெட்ட" சிந்தனைகள் வளர்ந்தது எப்படி? என நினைத்து ஆச்சரியப் படுகிறேன்.

    இப்படிப்பட்ட "தரம் கெட்ட" சிந்தனையுள்ளவருக்கு இடம் கொடுத்ததை நினைத்து புதுக் கல்லூரி வெட்கப் படுகிறது. தயவு செய்து அடிக்கடி புதுக் கல்லூரியின் பெயரைக் கூறி அதனை அவமானப் படுத்த வேண்டாம்.

    //God spare my alma mater such old students.//

    நல்லவேளை, இப்படிபட்ட "தரங்கெட்ட" சிந்தனையுடையவரை புதுக் கல்லூரியில் வைத்து நான் சந்தித்து அக்கல்லூரியினைக் குறித்து ஓர் தவறான அபிப்பிராயம் தோன்றுவதிலிருந்து புதுக் கல்லூரியினை இறைவன் காப்பாற்றினான்.

    ஆமாம் எனக்கு ஒரு சந்தேகம் - அடிக்கடி குறிப்பாக பதில் கூற முடியாத சூழ்நிலை வரும் பொழுது புதுக் கல்லூரியின் பெயரை இடையில் நீங்கள் இழுப்பதேன். அக்கல்லூரியைக் குறித்து சமூகத்தில் இருக்கும் நல்ல பெயருக்கு இடையில் உங்களுடைய "தரங்கெட்ட" சிந்தனையை மறைத்து நீங்கள் "அப்படிப்பட்டவரல்ல" என்று காட்டிக் கொள்வதற்கு தானே!

    பின் குறிப்பு:

    உங்களை "தரம்கெட்டவர்" என நினைக்க உங்களுக்கும் எனக்கும் இடையில் எந்த பகையும் இல்லை. உங்களுடைய "அந்த" கருத்துக்கள் தான் உங்களை அவ்வாறு நினைக்க வைக்கிறது. "கூட்டி கொடுப்பதற்கு" சமமான அந்த கருத்துக்களை நீங்கள் மாற்றிக் கொள்ளும் வரை உங்களைக் குறித்த என்னுடைய எண்ணத்தையும் மாற்றிக் கொள்வதாக இல்லை.

    //(வில்) அம்புடன்,
    டோண்டு ராகவன்
    //

    ரொம்ப சந்தோசம்! இப்பவாவது உங்களுடைய உண்மையான முகத்தை காண்பித்ததற்கு! நீங்கள் என்ன முகத்தில் வந்தாலும்,

    "என்றும் அன்புடன்"
    இறைநேசன்.

    ReplyDelete
  12. நிலவு நண்பன் அவர்களின் பதிவில் இட்ட ஒரு பின்னூட்டம்:

    //சகவலைப்பதிவரை மாமா என்று கூறும் அளவுக்கு சென்றும் அதனை தவறென்றும் உணராத நீயெல்லாம் இறைநேசன் .. //

    அனானிமஸ் சகோதரரே!

    தவறு செய்பவரை, தவறு செய்பவர் என்று கூறுவதில் என்ன தவறு இருக்கிறது.அதற்கு உங்களுக்கு இவ்வளவு கோபம் வர வேண்டிய அவசியம் என்ன?

    என் பக்கத்து வீட்டுக்காரர், கொலை செய்வதை எப்படி யாருக்கும் தெரியாமல் செய்வது என்று ஆலோசனை வழங்கிக் கொண்டு இருக்கிறார் என வைத்துக் கொள்ளுங்கள். அதனை தவறு என பலர் எடுத்துக் கூறியும் அவர் அதனை தவறு என இது வரை ஒத்துக் கொள்ளவில்லை என்றும் வைத்துக் கொள்ளுங்கள். மட்டுமல்ல அது தான் சரி என வாதிட்டுக் கொண்டும் அவர் இருந்தால் நான், அவர் என்னுடைய பக்கத்து வீட்டுக் காரர் என்பதற்காக "உத்தம புருஷர்" என அழைக்க வேண்டுமோ?

    சில கேள்விகளை அவர் தனக்கு விருப்பம் உள்ளது போல் வெட்டி மாற்றுவது போல் நீங்களும் ஏன் செய்கிறீர்கள் எனத் தெரியவில்லை.

    சுய அறிவுள்ள யாராவது //ஆலோசனைகளை கூறும் நபரை எப்படி அழைப்பீர்கள்?

    "மாமா" என்று தானே!
    // என்று கேள்வி கேட்பார்களா?

    என் கேள்வியை வெட்டி எழுதியிருக்கிறீர்களே! ஒரு வேளை நீங்கள் என் கேள்வியை சரியாக படிக்காததால் தான் இப்படி என் மேல் கோபப் படுகிறீர்கள் என நினைக்கிறேன். என் கேள்வியை ஒரு முறை கூட படியுங்கள்!

    //கடைசியாக நிலவு நண்பனிடம் ஒரு கேள்வி!

    இந்த தொழிலுக்கு கூட்டி கொடுப்பவர்களுக்கு நீங்கள் "மாமா" பெயரை வழங்குகிறீர்கள் எனில், மேலே கண்டது போன்ற இந்த தொழிலுக்கு பிரயோஜனமான, "அவ்வாறு போகும்" பெண்கள் எப்படி தங்களை பாதுகாப்பது என்ற அபூர்வமான(!), சிறந்த(!) ஆலோசனைகளை கூறும் நபரை எப்படி அழைப்பீர்கள்?

    "மாமா" என்று தானே!
    //

    இனி உங்களைப் போன்று "ஆதங்கப் பட்டிருந்த" டோண்டு அவர்களுக்கு என் பதிவில் பதிலளித்திருந்தேன். அதையும் கொஞ்சம் படித்து விடுங்கள்!

    //வெட்கமாயில்லை//

    சகோதரரே! "அந்த" வேலை பார்ப்பவர்கள், "அதனை எப்படி பாதுகாப்பாக செய்யலாம்" என ஆலோசனை வழங்குபவர்கள் தங்களது நிலையைக் குறித்து ஒரு சிறிதும் வெட்கப் படாத போது, அவர்களை அதற்குண்டான பெயரைச் சொல்லி அழைப்பதில் நான் ஏன் வெட்கப் பட வேண்டும்.

    என் பக்கத்து வீட்டுக் காரரை "கொலைகாரனுக்கு கூட்டு நிற்பவர்" என்று கூறுவது
    தவறு தான். ஆனால் என்ன செய்ய? அது தானே உண்மை - அவர் நிலையை அவர் மாற்றிக் கொள்ளும் வரை.

    என் தவறை திருத்திக் கொள்ள எனக்கு சம்மதமே! ஒரே ஒரு நிபந்தனை - அவர் அவருடைய "அந்த" கருத்தை மாற்றிக் கொள்ள வேண்டும்.

    சகோதரர் அனானிமஸ் கொஞ்சம் அதற்கும் முயற்சித்துப் பாருங்களேன்.

    அன்புடன்

    இறைநேசன்

    ReplyDelete