Saturday, July 22, 2006

சிறந்த பெண்கள் பாதுகாவலன் - புஷ்!!!!!!



இதற்கு முன் அறிவிசீவி புஷின் தெளிந்த தொலைநோக்கு அறிவினை வெளிச்சம் போட்டு காட்டும் உலகின் மிகச் சிறந்த படங்களை மலர்களில் பார்த்து மெய்சிலிர்த்திருப்பீர்கள்.

மேற்கண்ட படத்திற்கு பெரிய விளக்கம் எதுவும் தேவையில்லை என நினைக்கிறேன்.
உலகின் அதிபயங்கர பயங்கரவாதி புஷின் புழுத்து போன கேவலமான மூளையினை இந்த படங்கள் வெளிச்சம் போட்டு காட்டுகின்றன.

சமீபத்தில் நடந்த ஜி-8 உச்ச கோடி மாநாட்டில் வைத்து தான் எவ்வித நாகரீகமுமின்றி இவ்வாறு ஒரு பெண்ணின் பின்பக்கமாக வந்து கழுத்தை புஷ் தடவும் இந்த கேடுகெட்ட சம்பவம் நடந்தது.
இந்த மாநாட்டை பொறுத்தவரை உலக அளவில் எல்லோராலும் உன்னிப்பாக கவனிக்கப்பட்ட ஒரு மாநாடாகும். ஆக்ரமிப்பின் மூலமாக அந்நிய நாட்டை கையகப்படுத்தி அதில் தனது இருப்பிடத்தை வைத்திருக்கும் உலகின் ஒரே ஆக்ரமிப்பு நாடான இஸ்ரேலின் பலஸ்தீன் மற்றும் லபனான் நாடுகளின் மீதான அட்டூளியம் போன்ற மிக முக்கிய பிரச்சனைகளைக் குறித்து கலந்தாலோசிக்க கூடிய மாநாடாகும் இது.

இவ்வளவு அதிமுக்கியத்துவம் வாய்ந்த மாநாட்டில் கலந்து கொள்ள வந்த உலக சட்டாம்பிள்ளை புஷின் மனம் எதில் கவனம் செலுத்திக் கொண்டிருந்தது என்பதை இப்படம் வெட்டவெளிச்சமாக்குகிறது. ஒரு வேளை அமெரிக்க அதிபர்கள் எல்லோருக்கும் இந்த பெண்களின் பின்புறத்தை தடவிக் கொண்டு நடப்பது தான் முக்கியமாக அமெரிக்க பாராளுமன்றத்திலிருந்து கொடுக்கப்பட்டிருக்கும் பணியோ என்னமோ? இது அமெரிக்க அதிபர் ஆவதற்கான முக்கிய தகுதியாக கூட இருக்கலாம்.

மேலே காணப்படும் படத்தில் புஷின் எதிர்பாராத தடவலால் அதிர்ச்சிக்குள்ளாகும் பெண் இந்த மாநாட்டுக்கு ஜெர்மனியின் சார்பில் கலந்து கொண்ட ஏஞ்சலா மெர்கலின் ஆவார். இவர் இம்மாநாட்டில் கலந்து கொண்ட ஒரே ஒரு பெண் என்பதும் கவனிக்கத்தக்கது.
இத்தாலி பிரதமர் ரொமானோ ப்ரோடியுடன் ஏஞ்சலா மெர்கலின் பேசிக்கொண்டிருக்கும் பொழுது எதிர்பார்க்காத தருணத்தில் புஷ் இவ்வாறு கீழ்த்தரமாக நடந்து கொண்டது ஜெர்மனியில் பெரும் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.

ம். உலக அமைதி(!)க்காகவே அவதாரம் எடுத்த புஷ் வகையறாக்களே பெண்களிடம் இவ்வளவு கீழ்தரமாக நடக்கும் பொழுது, பாதிக்கப்படும் பெண்கள் எங்கு சென்று தான் முறையிடுவார்களோ?

பின் குறிப்பு:

ஆமாம். இதெல்லாம் கீழ்தரமான செயல்பாடுகளா என்ன?

பெண்கள் பாதிக்கப்படாமல் தான் விரும்புபவர்களுடன் உறவு கொள்வது எப்படி? என பல ஆயிரக்கணக்கானவர்கள் முன்னிலையில் தனது முகத்தை எவ்வித வெட்கமுமின்றி காட்டிக் கொண்டு தனது உள்மன வக்கிர எண்ணங்களை கொட்டும் மூதறிஞர்களை பெண்களே "சிறந்த முற்போக்கு பெண்ணியவாதி" எனப் புகழும் போது பெண்களிடம் இது போன்ற சில்மிஷங்களால் பலர் முன்னிலையில் எவ்வித மானரோஷமின்றி(அப்படியெல்லாம் உண்டா என்ன?) நேரடியாக ஈடுபட்டு நல்ல பெண்களை தவறான வழிக்கு வர சிக்னல் கொடுக்கும் இதுபோன்ற ரோமியோக்களுக்கு "சிறந்த பெண்கள் பாதுகாவலன்" பட்டம் கொடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.


2 comments:

  1. அபூ ஸாலிஹாJuly 22, 2006 at 7:53 AM

    உலகமெங்கும் இவர் நடத்திவரும் அநியாய பயங்கரவாத செயல்களால் உயிரழக்கும் குழந்தைகள், பெண்கள், அப்பாவி பொதுமக்கள் ஆகியோரின் ஈனக்குரல் காதில் விழாமல் இருக்கப்பழகிக் கொண்டதாலோ என்னவோ, ஜெர்மனியின் ஏஞ்சலா இவரை Bush என்று கூப்பிட்டது Push என்று காதில் விழுந்திருக்கும் போல...

    நடுநிலையாளர்(!) என்று உலக அரங்கில் பேரெடுக்க வேண்டுமென்றால் இதை எல்லாம் கண்டு கொள்ளாதீர்கள்.

    ReplyDelete
  2. அன்பாலன்July 24, 2006 at 12:41 AM

    சகோதரர் அபூ ஸாலிஹா சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை பெண்களை எப்படி அனுபவிப்பது, பெண்கள் கற்பம் ஆகாமல் இருக்க எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று அட்வைஸ் சொல்லும் மாமா டோண்டு போன்றவர்களுக்கு அவார்டும் பரிசுகளும் கொடுக்கும் இந்தக்காலத்தில் இதெல்லாம் சகசம் தான்
    என்ன செய்ய நம்மதான் கண்ணையும் காதையும் பொத்திக்கணும்

    ReplyDelete